KARNAN
40th day
Super hit
Printable View
KARNAN
40th day
Super hit
கவிஞர் தென்காசி தெ. கணேசன் அவர்களின் கவிதை அருமை. அந்த கவிதையை இயற்றியதற்காக அவருக்கும், அதை செவ்வனே பதிவிட்டமைக்காக திரு. இராகவேந்திரர் அவர்களுக்கும் என் நன்றி!
தென்காசி கணேசன் கவிதை அனைத்து ரசிகர்களின் எண்ண ஓட்டத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது என்றால் அது மிகையில்லை. அவருக்கு நமது பாராட்டுக்கள்.
கர்ணன் திரைப்படம் வெளியாகி 5 வாரங்கள் முடிந்து 6வது வாரம் நடக்கும் நிலையில் இது வரை நடந்த கொண்டாட்டங்கள் சில காணொளியாக பதியப் பட்டு நெடுந்தகடாக வந்துள்ளன. அதன் நிழற்படம் இதோ. மேலும் விவரம் வேண்டுவோர் திரு விஜயகுமார் அவர்களை 7299215188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
http://i872.photobucket.com/albums/a...LEBCD22412.jpg
நெடுந்தகட்டினை திரு வேணுகோபால் அவர்கள் வெளியிட திரு சிவநேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்
http://i872.photobucket.com/albums/a...D22412FW05.jpg
பேனருக்கு ரசிகர்கள் மரியாதை செய்யும் காட்சி
http://i872.photobucket.com/albums/a...D22412FW07.jpg
ராஜ ராஜ ராஜ ராஜ நடை
வால்மீகி ராமாயணத்தில் ராமனின் நடையை விளக்கும் பொது நாலு வகை நடையை சிறப்பாக குறிப்பிடுவார். சிங்க நடை,புலி நடை,யானை நடை,எருது நடை என்று.
நடிப்பின் கடவுள் ஒருவர்தான் ராமனுக்கு பிறகு இந்த நான்கு வித ராஜ நடைகளையும் வித்யாசம் காட்டி நடந்தார்.பொத்தாம் பொதுவாக ராஜ நடை என்று ஒரே வகையாக நடக்காமல்(ப்ரித்வி ராஜ் கபூர் போல்) சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடிப்பின் உச்சத்தை காட்டினார்.
சிங்க நடை-தலைமை மாண்பை கம்பீரத்துடன் குறியிடும் நடை.உத்தம புத்திரன் பார்த்திபன் கடைசி காட்சியில் நடப்பது,ஹரிச்சந்த்ராவில் நடப்பது,
கர்ணன் படத்தில் ராஜாவாக பதவியேற்கும் பொது நடப்பது.
புலி நடை-அதிக பட்ச கோபத்தில்,சீற்றத்தில் நடப்பது. உத்தம புத்திரன் விக்ரமன் ,பார்த்திபனை பிடிப்பதில் கோட்டை விட்ட கோபத்தில், திருவிளையாடலில் தன பாடலில் பிழை சொன்ன கோபத்தில்.
யானை நடை-பெருமித நடை.திருவருட்செல்வர் நடை,கந்தன் கருணை நடை,ராமன் எத்தனை ராமனடி சிவாஜி நடை-சாதித்த பெருமிதம்.
எருது நடை-அகந்தையை,அலட்சியத்தை குறிப்பது. உத்தம புத்திரன் விக்ரமனின் பதவியேற்பு விழா நடை,வீரபாண்டிய கட்டபொம்மன் உச்ச காட்சி நடை.
ராகவேந்தர்,நெய்வேலி நண்பருக்கு நிஜ அர்ப்பணம்-நான் மிக ரசித்த எழுபத்தி ஆருக்கு பிறகு வந்த நடிப்பு கடவுள் கட்சிகள்-
---தீபம் படத்தில் சுஜாதா ,தன் தங்கையுடன் வீட்டுக்கு வரும் காட்சியில் அவரை கவர பேச்சு கொடுக்கும் காட்சி. அதே படத்தில் சத்யப்ரியாவை பீஸ் பீஸ் ஆக்கும் காட்சி.
---ஹிட்லர் உமாநாத்தில் தன் மனையிடம் அவள் superiority காம்ப்ளெக்ஸ் கொண்டிருப்பதை சுட்டி காட்டி பொருமும் காட்சி.
---நான் வாழ வைப்பேன் படத்தில் ,டிராவல் ஏஜென்சிக்கு விசாரணைக்கு வந்து போலீஸ் கேட்கும் கேள்விகளின் பொது,மறந்த விஷயங்களை நினைவு படுத்தி கொள்ள முயல்வது.
----வாழ்க்கை படத்தில் தனிமையில் இருக்கும் உச்ச காட்சி ,அம்பிகாவுடன் விரக்தியில் பேசும் காட்சி.
---ராஜரிஷியில் திரிசங்குவிடம் வசிட்டரை தாக்கி குத்தலாக பேசும் காட்சி.
---ஜல்லி கட்டு படத்தில் சத்யா ராஜ் இடம் சதாய்க்கும் இடங்களும் ,பிறகு தன் மனதை திறப்பதும்.
---ரிஷி மூலத்தில் மனைவியுடன் தன் பழைய வாழ்க்கையை குறிப்பிட்டு மன்னிக்க மன்றாடும் காட்சி.
---அண்ணன் ஒரு கோவிலில் தங்கையின் நிலை குறித்து புலம்பும் காட்சி.
---தியாகம் குடித்து விட்டு அறிமுகம் ஆகும் காட்சி,ஜஸ்டின் சண்டை.
---வெற்றிக்கு ஒருவன் ஆடல் பாடலில் காட்சி.
---என்னை போல் ஒருவனில் நண்பன் சுற்றத்தாரை பற்றி அறியாமல் நண்பனை போல் நடிக்கும் நயமான நகைச்சுவை காட்சி.
Mudhal mariadhai,தேவர் மகன் காட்சிகள்-நான் சொல்லியா புரிய வேண்டும்?
dear raghevndra Sir
amma ne vazhga from ananda kanner movie
regards
kumareshanprabhu