-
கோபால்.. வாங்க.. நலமா
உங்களிடம் எனக்குப் பிடித்த விஷயம் ஒன்று உண்டு .அது நீங்கள் அறிந்து செய்வதில்லை..( நற நற).. முரளி வீ.பா.க.பொ பற்றி எழுதியவுடன் அந்தப் படத்தைப் பற்றி எழுத வேண்டும் என டிவிடி போட்டால் (நேற்று) ஏனோ அது வொர்க் ஆகவில்லை.. சரி..இன்று யூட்யூபில் பார்த்து ரிஃப்ரெஷ் பண்ணிவிட்டு எழுதலாம் என நினைத்திருந்தேன்..
வந்து பார்த்தால் மறுபடியும் அதை அலசி அழகாக கொத்துமல்லி மற்றும் இன்னபிற போட்டு அலங்காரங்கள் செய்து ஒரு ஐந்து நட்ச்த்திர ஹோட்டல் விருந்தாகப் படைத்து விட்டீர்கள்.. பாரட்டுக்கள்..
(இதற்கு முன் நீலவானம் பற்றி எழுத நினைத்திருந்த போதும் இதே போல் நிகழ்ந்த நினைவு)
நீங்கள் சொன்ன கவலை ரேகை - கபொ ந.தி முகத்தில் தெரிவதை அந்தக்காலத்திலேயே உணர்ந்திருக்கிறேன்..ரசித்தும் இருக்கிறேன்..
ம்ம் மறுபடி இன்று பார்க்கப் பார்க்கிறேன்..
இன்னும் ஒரு விஷயத்தில் இருந்து மாறு படுகிறேன்.. ரத்னா கஃபே பழைய தரத்தில் இல்லை என்று சொன்னது.. பழைய தரம் என்னவென்று எனக்குத் தெரியாது..ஆனால் 2000 2005,2011,2014 என்று அருந்தியிருக்கிறேன்.. மாறுதல் எனக்குத் தெரியவில்லை ( அதுவும் சாம்பாரிலிருந்து முழித்துமுழித்துப் பார்க்கும் குட்டி வெங்காயம்).. மதுராவில் அப்படி இருக்குமா..எந்த ஏரியா.. நான் உண்டா..
இதை ந.தி இழையிலேயே பதிந்திருக்கலாம்..பட் கொஞ்சம் உருப்படியாய் (?!) எழுதி இடும்போது வரலாம் என இருக்கிறேன்..
அந்த சிறுகதைத் தொகுப்பின் பெயர் என்ன..அவரும் நவீன இலக்கியந்தானா..
-
அம்மன் கோவில் கிழக்காலே – படம் வந்த புதிதில் இந்தப் பாடல் ஒருமுறை கேட்டிருக்கிறேன்.. நல்ல பாட்டு தான் ஆனால் அவ்வளவாகப் பதியவில்லை..
அதையே பலவருடங்கள் கழித்துக் கல்லூரி என்றபடத்தில் உபயோகப் படுத்தியிருந்தார்கள்..ரீமிக்ஸெல்லாம் பண்ணாமல் கதானாயகி கல்யாணத்தில் பாடுவதாக.. அகோ கி சிச்சுவேஷனை விட இந்தப் படத்தில் சிச்சுவேஷனுக்கு இந்தப்பாட்டு சரியாகப் பொருந்தியதாகப் பட்டது எனக்கு..
வரிகளும் அழகு..எனில் அவற்றை முழுமையாக கட்பேஸ்ட் செய்திருக்கிறேன்..
ம்ம் இந்தக் காதல் படுத்தற பாடு இருக்கே..கஷ்டம் தான்..
**
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ
(
அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
கல்லூரியில் தமன்னா
https://www.youtube.com/watch?v=s3PE...yer_detailpage
அ கோ கி யில் ராதா விஜயகாந்த்
https://www.youtube.com/watch?featur...&v=eeBMLA3q3RQ
ஒரு ஆண் பாடும் பாடல் (படத்தில் இருப்பது டிவி சீரியல் நடிகையா?)
https://www.youtube.com/watch?featur...&v=LpFmN4u8RYo
-
பாடினார் கவிஞர் பாடினார் – 2
**
ஹாய் ஆல் செளக்கியமா…
ஓ..ரொம்ப இடைவெளி கொடுத்துட்டேனா ஸாரி ( அதனால பரவாயில்லைங்கறீங்களா.. தாங்க்யூ)
போன தடவை ஒரு யூனிக் கவிஞர் பத்தி –பார்க்கலாம்னு சொல்லியிருந்தேன்..ஆனாக்க அப்படிச் சொன்னதும் தப்பு தான்.. ஏனெனில் கவிஞராய் இருந்து பாடலாசிரியராக மாறிய ஒவ்வொருவருமே அவங்க அவங்க எழுத்துல யூனிக் தான்..
**
முதலில் இந்தக் கவிஞர் சில பல பாடல்கள் திரையில் எழுதி பிரபலமாகியிருந்த காலம்..
சினிமா என்பதே தொழில் தானே.. தயாரிப்பாளர் இன்னொரு கவிஞர் உடுமலை நாராயணகவியிடம்.. “ நாராயணரே..எனக்கு இந்தப் பாட்டு (அந்தப் பாட்டைச் சொல்லி) அதே போல் எனக்கு இன்னொரு பாட்டு வேண்டுமே..
உடுமலைக்\கோ கொஞ்சம் கோபம் ப்ளஸ் வருத்தம்.. சரி போ இதான் லைஃப் இதான் வேர்ல்ட் என க் கொஞ்சம் மனதிற்குள் குமுறி “ஒன் மீட் ஓய் ப்ரொட்யூசர்..இதோ வந்துட்டேன்” என்று வெளிச் சென்று விட்டார்..
பின் திரும்பி வந்த போது ப்ரொட்யூஸர் கேட்ட – இது போன்ற பாட்டை எழுதிய கவிஞரையே முன்னிறுத்தி “இந்தாங்க.. இவர் கவிஞர் சுரதா.. நீங்கள் எழுதிய அமுதும் தேனும் எதற்கு எழுதியவர் இவர் தான்..இவரையே வைத்து அதே டைப்பில் பாட்டு எழுதிக் கொள்ளுங்கள்”
“ நாராயணர்வாள் ஷமிக்கணும்”
“”கோபம்லாம் இல்லைங்காணும்.. “
சரி என்று கவிஞர் சுரதாவை இசையமைப்பாளர் கேவி மகாதேவனிடம் கொண்டு விட..கனஜோராய்ப் பாடலின் முதல்வரிகள் எழும்பின..
பின்
முதல் மூன்று வரிகள் வந்துவிட அதற்கப்புறம் தான் நானகைந்து வரிகளைக் கவிஞர் சொன்னாலும் இசையமைப்பாளர் கே.வி.எம்க்கிற்கு ஏனோ பிடிக்கவில்லை.. இன்னொண்ணு சொல்லுமேன்.. எனக் கேட்க சுரதாவிற்கோ முணுக் கென்று கோபம் வந்து எழுந்து சென்றுவிட்டார்..
மறுபடியும் தயாரிப்பாளர் உடுமலை நாராயண கவியைப் பிடிக்க, அவர் சரி நோப்ராப்ளம் பேலன்ஸ் நான் எழுதறேன்..ஆனா டைட்ட்டில்ல மறக்காம சுரதா பேரையும் போடணும்.. ஓகே சொல்லி எழுதப்பட்ட பாடல் தான் கீழே இருப்பது..
ஒரு கவிதை இருகவிஞர்கள் எழுதும் போது எப்படி வித்தியாசப் படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்..
வெண்ணிலா குடைபிடிக்க
வெள்ளீ மீன் தலையசைக்க
விழிவாசல் வழி வந்து இதயம் பேசுது
இனி நீ என் வசமே
இனி நான் உன் வசமே
இணையாய் நாம் காணும் ஆனந்தம் நேசமே
கொல்லாமல் கொல்லுகிறாய் கோமளமே விழியாலே
சொல்லாமல் சொல்லுகிறாய் சுத்தத் தமிழ் மொழியாலே
ஒண்ணுமே புரியலையே எண்ணமே சரியிலையே
சரியாக இது வேளை தனிமை வேண்டுமே
: பழமும் பழுத்திருக்க பருவம் அமைந்திருக்க
பசி நோய் தீராமல் பார்த்தாலே போதுமா..
எழிலிற்கிருப்பிடமே எனக்கில்லை மனத்திடமே
எளியேன் மேலிந்த ஏனிந்த கோபமே
http://tamilmp3songs.mobi/mp3/load/3...ilanda.com.mp3
இந்தக் கவிஞர் சுரதா இருக்காரே..அவருக்கு இன்னொரு கவிஞர் மேல ரொம்ப மரியாதைகுருபக்தி, ரொம்பப் பிடிக்கும்.. அந்தக் கவிஞருக்கு இன்னொரு மகாகவி மேல பக்தி ..ஸோ அந்த மகாகவிக்கே தாஸனா தன் பெயரை மாற்றிக் கொண்டுவிட்டார்..
அவர் பாரதி தாசன் தன்னுடைய இயற்பெயரான சுப்பு ரத்தினத்தை பாரதி தாசன் என மாற்றிக் கொண்டு விட்டார்.. இந்த கவிஞருக்கு என்ன பண்றது.. பாரதி தாசன் ரொம்பப்பிடிக்கும்..ஆனா பெயர் எப்படி மாத்திக்கறது..பாரதி தாச தாசனா.. எங்கயோகொஞ்ச்ம் இடிக்குதே.. சரி என்று தனது சொந்தப் பெயரான ராஜகோபாலனை விடுத்து சுப்பு ரத்தின தாசன் சுரதா என்று மாற்றிக்கொண்டு விட்டார்..
இவர் எழுதிய ..திரைப்பாடல்கள் என்று பார்த்தால் 22 வருடங்களில் சுமார் 30 தான் இருக்கும்.. ஆனால் கலந்துகொண்ட கவியரங்கங்கள் அளவிடற்கரியவை..1990இல் த்மிழக அரசு வழங்கிய பாவேந்தர் விருது பெற்ற முதல் கவிஞர் இவர் தான்..பிறந்தது 1921 மறைந்தது 2006
சில்பாடல்கள்
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
விண்ணுக்கு மேலாடை..
அமுதும் தேனும் எதற்கு நீஅருகினில் இருக்கையிலே
புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
நெருங்கி நெருங்கிப் பழகும் போது..
*
எனக்குப் பிடித்த பாடல் விண்ணுக்கு மேலாடை..
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
மண்ணுக்கு மேலாடை
ம் ம் ம் ..மண்ணுக்கு மேலாடை ரா ரா ரா
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
ஹையே
மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு
மனதிற்கு மேலாடை
வளர்ந்து வரும் நினைவு
பத்துக்கு மேலாடை
பத்துக்கு மேலாடை..ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஹா
ஆ ஆ ஆ ஆ
நிறுத்து..ராகம் பாடாதே..பதிலைச் சொல்லு
பத்துக்கு மேலாடை
தெரியலையா? ம் சொல்லட்டுமா?
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
காலத்தின் அடையாளம் பருவங்களேயாகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
இது வரையில் புது உலகம் நாம் கண்டதுமில்லை
எது வரையில் சென்றாலும் எல்லை இதற்கில்லை
*
https://www.youtube.com/watch?featur...&v=1lyf-YEM2_8
வெகு அழகிய பாடல்..
**
நிலவு நம்மை எட்டிப் பார்க்கும்
நேரமல்லவா
நீயும் நானும் கொண்ட காதல்
அமுதமல்லவா
தலையை நீட்டும் இந்த நிலவு
தலைமை தாங்கட்டும்
தழுவும் போது வீசும் தென்றல்
விலகி ஓடட்டும்
https://www.youtube.com/watch?v=ot60...yer_detailpage
அடுத்த கவிஞர் எழுதிய ஒரு அடிமைப் பாடலுக்கு அடிமையாகாதார் யார்..
பின்ன வாரேன்..
-
ஹாய் ஆல் ஹாப்பி விமன்ஸ் டே..
எண்ணத்தில் நின்று ஏற்றங்கள் செய்வதெலாம்
என்றென்றும் பெண் தானே ஆம்..
**
இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?
கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ? பெண்
இயற்கையின் சீதனப் பரிசல்லவோ?
பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்
செல்வம் சிரிததபடி அமுதிடுமா? எந்த
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?
*
https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM
-
மதிபோல் முகமென்றாய் மங்கையெனைப் பின்னர்
..மானென்றாய் மீன்சுற்றும் விழியென்றாய் மேலும்
சுதிசேர்ந்த கானமெனச் சூழுகிறாய் என்றாய்
..சொக்கவைக்கும் பார்வையினால் கொல்கின்றாய் என்றாய்
சதியாக நானுன்னை இணைந்தபின்பு அழகாய்
..சார்ந்திருப்பேன் என்றென்றும் எனையென்றாய் மெய்யாய்
புதிதாக வாழ்வென்னும் புதுமலரை இன்று
..பூத்தூவி வரவேற்போம் வாராய்நீ கண்ணா
*
மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ண தேராட்டம்
தாலாட்டும் மங்கை சதிராட்டம்… கண்டு
தேனோடும் எங்கும் நதியாட்டம்
**
https://www.youtube.com/watch?v=dUTn9N0OgfQ
-
யாரையும் காணோமே.. சரி ஒரு மலையாளப்பாட்டு போடலாம்
படம் ஆசீர்வாதம் யங்க் கமல் குட்டி ஸ்ரீதேவி.. ஜேசுதாஸ்
https://www.youtube.com/watch?v=aoUI...CHgB5p_SLUXFAR
-
குட் மார்னிங் சி.க. நான் வந்துட்டேன். யாருமில்லைன்னா மலையாளப் பாட்டு கேட்பீங்களா? நல்லாவே இருக்கு.
-
உவமைக் கவிஞர் சுராதாவைப் பற்றிய பதிவு நல்ல அறிமுகம் என்னைப் போன்றவர்களுக்கு. சுராதாவைப் பற்றி படித்திருந்தாலும் அவர் இவ்வளவு நல்ல திரைப்பாடல்கள் கொடுத்திருக்கிறார் என்பது எனக்கு புதிது.
இருவர் எழுதிய பாடல் நன்றாகவே இருக்கிறது. விண்ணுக்கு மேலாடை பாடல் அடிக்கடி கேட்கும் பாடல் தான். இதையும் நெருங்கி நெருங்கி பாடலையும் இப்படி நீங்கள் கவிஞர் சுரதா எழுதியது என்று சொல்லாவிட்டால் நான் எப்போதாவது சொல்லும்போது அவர் எழுதியது, இவர் எழுதியது என்று எங்கேயாவது பார்த்து விட்டு தவறாய் சொல்லுவேன். நல்லவேளை.
-
நிலாப் பாடல் 34: "ஆனந்த யாழை மீட்டுகிறாய்"
------------------------------------------------------------------
மிகப் பழைய பாடல்களை கேட்டுவிட்டோம். சற்றே பழதான புதுப் பாடலை கேட்கலாமா? அட இந்தப் பாடல் முதல் வரியில் நிலா என்று வரவில்லையே என்று சிலர் கேட்டாலும் அதன் ஒளிக் காட்சியை பார்த்தவர்கள் தந்தையும் மகளும் வெண்ணிலாவை கையில் எடுத்து பந்து போல விளையாடியதை மறந்திருக்க மாட்டார்கள். பாட்டு வரிகளில் என்னமோ அந்த சின்ன வெண்ணிலா மேகத்தின் பின்புறம் மறைந்து அக்குழந்தையிடம் வெளிச்சம் கேட்பதாகவும் அதனால் அதை கையில் பிடித்து ஆறுதல் சொல்லி அதன் வீட்டிற்கு அனுப்புமாறு தந்தை கூறுவதாகவும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். பல விருதுகளை இந்த பாடல் பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரலில் இந்த பாடல் நாவில் தேன் போல் காதில் இனிக்கிறது.
பாடல் வரிகள்:
----------------------------
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்
தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
---------------------------------------------------------------
பாட்டின் காட்சிகள்:
https://www.youtube.com/watch?v=E7y9H-Rit6o
தங்க மீன்கள் பாடினால் இப்படித்த்தான் இனிமையாய் இருக்குமோ?
-
hi kalnayak vaanga good morning
வந்ததும் அழகான பாட்டு ஒண்ணு போட்டிருக்கீங்க.. தாங்க்ஸ்..
சுட்டியென சுந்தரியின் புன்னகையில் வட்டமுகம்
குட்டிநில வென்றுதான் கூறு.. :)
மெல்லச் சிரிக்குமகள் மென்விழியில் பூமலரும்
அள்ளக் குறையா அமுது.