Audio is at
http://www.muzigle.com/track/amma-nee-vazhga
http://www.raaga.com/play/?id=23286
Cheers,
Sathish
Printable View
Audio is at
http://www.muzigle.com/track/amma-nee-vazhga
http://www.raaga.com/play/?id=23286
Cheers,
Sathish
Ananda kanneer movie at http://www.tamilflix.net/tag/aanandh...-watch-online/.
Cheers,
Sathish
thank you
My Dear Beloved N.T. Fans,
I extend my sincere thanks for all your good wishes; I was really overwhelmed for all your hearty wishes.
Thanking you all again.
JAIHIND
M. Gnanaguruswamy
From Ithayakkani website....
எம்.ஜி.ஆர்., சிவாஜியின் நட்பு எத்தகையது?
Mahesh,
Our NT is a very good friend of all actors and Politicians.
திரு. கோபால் அவர்களுக்கு,
முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நல்ல கவிதை alignment சரியில்லாததால் படிப்போர் கவனத்தை திசை திருப்பிவிடுமோ என்ற அச்சத்திலேயே அதை alignment செய்து அதன் தனித்தன்மை குன்றாமல் புத்தம் புதிய வடிவில் இங்கே பதிவிட்டிருக்கிறேன். தங்கள் அனுமதி கோராமல் அதை செய்ததற்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.
நட்புடன்
அன்பு நண்பரே,
உங்கள் உதவியால் என் கவிதை எனக்கே பிடிக்கிறது.மிக்க நன்றி.என் குறையே தட்டச்சுவதும் ,சீரமைப்பதும்தான் .இதற்கு ஏன் என் அனுமதி.
நண்பன்
கோபால்
திரு. கோபால் அவர்களுக்கு,
மெய் வாழ்வில் வேடந்தரிக்கா உலக நடிகன் நீ!
மீன் கொடுத்து ஆள் சேர்க்காமல் பலர்க்கு
தூண்டிலளித்து வாழ்வித்தவன் நீ!
என்னை கவர்ந்த வார்த்தைகள்! இந்த வரிகள் எனக்கு ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்தியது. நடிகர் திலகம் அவர்களின் நாடக மன்றத்தில் கதாநாயகியாக வேடமேற்று நடித்த திருமதி. ஜி. சகுந்தலா அவர்கள் பின்னாளில் வறுமை காரணமாக உதவி கேட்டு திரு. எம்.ஜி.ஆர் அவர்களிடம் போயிருக்கிறார். அவரும் ஒரு பத்தாயிரம் ரூபாயை அவரிடம் தந்திருக்கிறார். நன்றிப் பெருக்கோடு வெளியில் வந்தவர் அடுத்தது நடிகர் திலகம் அவர்களிடம் போயிருக்கிறார். அவர் திருமதி. ஜி. சகுந்தலா அவர்களை அமர வைத்து அவருடைய பிரச்சனைகளை தெளிவாக கேட்டவர், உடனே சிவாஜி நாடக மன்றம் சார்பாக எந்தெந்த ஊரில் நாடகம் நடத்த படவில்லை என்ற பட்டியலை தயார் செய்து அந்தந்த ஊரில் நாடகம் நடத்தி ஒரு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள வழிவகை செய்திருக்கிறார். இந்த நிகழ்சிய நான் நிறைய பேரிடம் பகிர்ந்திருக்கிறேன். அதாவது உதவிக் கேட்டு வந்தவருக்கு ஒரு தொகையை கொடுத்து அதோடு அனுப்பியிருந்தால் அவருடைய வேலை முடிந்திருக்கும். அந்தம்மாவும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு போயிருப்பார். ஆனால் அந்த சந்தோஷமெல்லாம் கையிலிருக்கும் பணம் தீரும் வரை தான். அதன் பிறகு மறுபடியும் யாரிடம் போய் பணம் கேட்பார். மீண்டும் வறுமையை தழுவ வேண்டியதுதான். ஆனால் நடிகர் திலகம் அவர்கள் செய்த காரியமோ, அந்த அம்மாவிற்கு நிரந்தரமான, கௌரவமான ஒரு வாழ்க்கை வாழ உதவியிருக்கும்.
ஆனால் உழைத்து பிழைக்க விரும்பாத கூட்டம் முன்னவரை வள்ளல் என்றும், நடிகர் திலகம் அவர்களிடம் காசு வாங்குவது கஷ்டமென்றும் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
நட்புடன்