தூர்தர்ஷன் நடிகர் திலகத்தை அவதார புருஷராக சித்தரித்திருந்த அற்புத நிழற்படம்.
http://i812.photobucket.com/albums/z...psc39d57e5.jpg
Printable View
தூர்தர்ஷன் நடிகர் திலகத்தை அவதார புருஷராக சித்தரித்திருந்த அற்புத நிழற்படம்.
http://i812.photobucket.com/albums/z...psc39d57e5.jpg
Nice photoes and info, vasudevan sir. சில மாதங்களுக்கு முன் என நினைக்கிறேன்..ஆனால் சென்ற வருடமா என நினைவிலில்லை.. பக்த துகாராம் என்ற திரைப்படம் தெலுங்கு டப்பிங் ஸீ தமிழ் டிவியில் சேனல் மாற்றும் போது பார்த்தேன்..அதில் ஸர்ப்ரைஸாக சிவாஜியாக வந்தவர் நடிகர் திலகம்..டப்பிங்க் அவர் குரலில்லை என நினைவு.. பின் அவருக்காகவே அந்தப் படத்தை முழுதாக (வெள்ளி மதியம்..நன்றாகக் கண் செருகும் நேரம்) ப் பார்த்தேன்..
On the sets of Chatrapati Sivaji. (Thanks 'The Hindu')
http://www.thehindu.com/multimedia/d...n2_807305g.jpg
On the sets of Chatrapati Sivaji. Second on Sivaji Ganesan's left is S.A. Kannan, the first being DD producer Narayanaswamy. Others are director Thanjaivanan, DD director Andiyappan and cinematographer Durai Rajendran. Photo: Special Arrangement
டியர் வாசுதேவன் சார்,
'சத்ரபதி சிவாஜி' டெலி-பிலிம் பற்றிய தங்களுடைய புகைப்படங்களுடன் கூடிய அரிய தகவல்கள் மிகவும் சிறப்பு. மிகவும் சிரமப்பட்டு எல்லாவற்றையும் அளித்துள்ள தங்களுக்கு பாராட்டுக்கள்.
நான் மும்பை சென்றிருந்தபோது மராட்டிய மன்னன் சிவாஜி சிலையைப் பார்த்தேன். ஏறக்குறைய அது நம் நடிகர்திலகத்தின் வீரசிவாஜி வேடத்தோடு தாடி முதல் தாடை வரை கன கச்சிதமாக பொருந்தியிருப்பதாகவே தோன்றியது. அதுதான் - நடிக்கும் பாத்திரத்தில் மட்டுமல்ல, வடிக்கும் சிலையிலும் தன்னைப் பொருத்திக்கொள்ளும் நம் நடிகர்திலகத்தின் மகிமை.
Mr Vasu Sir,
Thanks for the rare information of Sivaji Teleserial. It shows your painstaking efforts
in sharing the details with all the hubbers. But we are all not fortunate enough to
watch that serial. Atleaset the photos you have shared must be preserved.
ஏதேது, "நான் விழித்துக்கொண்டு பார்த்த படங்கள்" என்ற தலைப்பில் நீங்கள் ஒரு தொடர் எழுதலாம் போலிருக்கே, சின்னக்கண்ணன்!!
எனக்கு கூட, "நான் முழித்துக்கொண்டு பார்த்த படங்கள்" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத ஆசைதான்! ஆனால் t ராஜேந்தர், ராமராஜன் ஆகியோருக்கு தனி திரி இல்லையே!
Vasu Sir - excellent - it was not only rare collection but your unique efforts of posting the same for all of us ::):smokesmile:
நெஞ்சிருக்கும் வரை
இந்த பதிவு அருமையாகவும் வேகமாகவும் சென்றுகொண்டிருக்கும் நமது திரியின் வேகத்தை தடை போடுவதற்காக அல்ல . நானும் எழுதலாமே “என் கண்ணோட்டத்தில் “ என்ற ஒரு பேராசை தான்.
இந்த படத்தை பற்றி பல மேதைகள் இந்த திரியில் விலாவரியாக எழுதயுள்ளனர் - என்ன புதியதாக எழுதிவிட முடியும் ? இந்த படம் அட்டகாசமான வெற்றியை அடைத்திருக்க வேண்டிய படம் . எல்லா விதத்திலும் பண்பாடான முறையில் எடுத்த படம் . பாடல்கள் தேனில் ஊறிய பலா சுளைகள் - வசனங்கள் நெய்யில் வறுத்து எடுத்த முந்தரிபருப்புகள் . நடிப்பு இனிமேல் யாருமே நடிக்கமுடியாத நடிப்பு
நட்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா - பாருங்கள் இந்த படத்தை ;
தியாகத்தின் அளவுகோலை தெரிந்து கொள்ள வேண்டுமா - பாருங்கள் இந்த படத்தை ;
ஒரு பக்க காதலை தெய்வீக மாக்க வேண்டுமா பாருங்கள் இந்த படத்தை ;
தவறு செய்தவர்களை மன்னிக்க தெரிய வேண்டுமா பாருங்கள் இந்த படத்தை ;
ஒரு ஏழையின் பசியை புரிந்துகொள்ள வேண்டுமா பாருங்கள் இந்த படத்தை ;
ஒரு நல்ல இதயம் எப்படி வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமா - ரகுராமனை சந்தியுங்கள் - தசரத ராமனை சந்தித்தவர்கள் ரகு ராமனை யும் சந்திப்பது அவசியம்
தான் காதலித்தவளை பழிவாங்கும் ஹீரோக்களை பார்த்து இருக்கிறோம் ஆனால் அவளை அவள் விரும்பியவனையே மணக்க வைத்து அவர்கள் சந்தோஷத்தில் தன் இளமையை , வாழ்கையை கர்ணனாக தானம் செய்தவனை நாம் பார்த்ததுண்டா? - ரகுவை பாருங்கள்
பாசிடிவ் vibrations , தன்னம்பிக்கை ரகு விடம் தான் கத்துகொள்ளமுடியும்
நெஞ்சிருக்கும் வரை ரகுவை மறக்க முடியுமா இல்லை மறுக்க முடியுமா - எத்தனை படங்கள் வந்தாலும் இந்த ஒரு படம் வசீகரித்த அளவு பண்ண முடியுமா - ஒரு கர்ணன் தான் மஹா பாரதத்தில் - ஒரு ரகு தான் நெஞ்சிருக்கும் வரை
ஒரு கல்யாணத்தை ஒரே பாட்டில் ரகு பாட இன்னும் அந்த பாடல் தேனை பொழிகிறதே!!
“மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க
மாப்பிள்ளை முன்வந்து மனவரயில் காத்திருக்க
காதலால் மெல்ல கால் பார்த்து நடந்து வர
காலை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க
ஆனந்தம் பாடு என்று ஆங்கோர்
குரல் பிறக்க கொட்டியது மேளம்
குவிந்தது கோடி மலர்
கட்டினான் மாங்கல்யம்”
ஒரு மனைவி எப்படி அன்பை தன் கணவரிடம் கட்டவேண்டும் என்று ராஜி யின் பாடல் நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியுமா ?
காலம் வரும்.. என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்...
காத்திருப்பேன்.. என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்.
கருணை என்றால் தாயாவேன்.. கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன்
:smokesmile::)
Full movie - Vouch for acting , dialogues , songs and this is a testimony for how a good movie should be ! :smokesmile::-D
http://youtu.be/BWRv6d47Yl8
Ravi
:smokesmile::)