Quote:
திரைப்படம் என்பது வெறும் மேம்போக்கான பொழுதுபோக்கு மட்டுமன்றி வாழ்வியல் உணர்ச்சிக் குவியல்களின் பிரதிபலிப்பும்தான் என்பதை நடிகர்திலகம் தனது வாழ்நாள் புரிதலாகவும் ரசிகர்களின் கலை ஆர்வத்திற்கு தனது பலபரிமாண நடிப்பின் சமர்ப்பணமாகவும் கொண்டிருந்தார்!
நாடக மேடை அனுபவம் மட்டுமே அடிப்படை ஆதாரமாகக் கொண்டு சுயம்புலிங்கமாக மனித மன உணர்வுகளை உன்னதமாக உள் வாங்கி மகோன்னதமான நடிப்பால் உலகையே கட்டிப் போட்டார் ! உலகின் வேறு எந்தவொரு நடிகருக்கும் அமைந்திராத பாத்திரப் படைப்புகள், குணாதிசய வேறுபாடுகள் மற்றும் நடிப்புப் பின்பற்றுதலுக்கான இலக்கண வரையறுப்பு எல்லாமே நிகழ்ந்தது நடிகர் திலகத்தின் பொற்கால திரை வரலாற்றிலேயே !
அவரது திரைக்காவியங்களில் அமைந்த உச்சகட்ட உணர்வுக் கலவைகளின் சங்கமத்தை இத்தலைமுரையும் இனிவரும் சந்ததியினரும் போற்றிப் பாதுகாத்திட வேண்டும் என்ற உந்துதலில் இக்குறுந்தொடர் அமையும் என்று நம்புகிறேன் !