http://oi66.tinypic.com/332pf5x.jpg
Printable View
நடிகர் திலகம் உண்மையிலேயே ஒரு சிறந்த மாபெரும் நடிகர்தான்...
இல்லையென்று சொல்லவில்லை. அவரை எங்களுக்கும் பிடிக்கும்.
ஆனால், அதற்காக அவர் மீது பைத்தியம் பிடித்தவரைப் போல வெறி பிடித்த ஒரு பாசம் வைத்திருக்க வேண்டுமா...
பொதுவாகப் பார்த்தால், மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தானே என ஒரு சில அறிவு ஜீவிகள் என்னிடம் சொல்வதுண்டு...
அதைக் கூட, ஏதோ நம்மீது உள்ள பாசத்தில்தான்...
நமது தலைவரின் அருமை தெரியாமல் சொல்கிறார்கள் என விட்டு விடலாம்.
ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய்...
உன் தலைவரா உனக்கு சோறு போடுகிறார். உனது பொழப்பை நீ பார்த்தால்தான் உனக்கு சாப்பாடு என்று ஏதோ பெரிய அட்வைஸ் செய்தது போல சொன்னவர்களும் உண்டு...
அவர்களுக்கெல்லாம் ஆங்காங்கே அப்போதே நான் பதில் சொல்லி இருந்தாலும்...
இப்பதிவின் மூலம், நான் ஏன் நடிகர்திலகத்தின் உண்மையான தொண்டனாக இருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்...
உன் தலைவரா உனக்கு சோறு போடுகிறார் எனக் கேட்கும் அறிவு ஜீவிகளே...
நீங்கள் ஒன்றை மட்டும் நன்றாக யோசித்துப் பாருங்கள்...
நமது நாட்டில் எவ்வளவோ பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள், அனைவருக்குமே உண்மையான தொண்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
அவர்கள் அனைவரிடமும் சென்று நீங்கள் ஏன் இந்த தலைவரின் தொண்டராக இருக்கிறீர்கள் என்று கேட்டால்...
அவர்கள் அனைவரிடமிருந்தும் ஒரே ஒரு பதில்தான் வரும்...
உண்மையான தலைவர்...
நேர்மையான தலைவர்...
அன்பும், பாசமும் நிறைந்த
அற்புதமான தலைவர்...
இந்த வார்த்தைகளின் வலிமை என்னவென்று உண்மையான தொண்டர்களுக்கு மட்டும்தான் தெரியும். (மற்றும்) அந்த உணர்வின் உண்மையான சந்தோஷம் புரியும்...
ஆனால், ஒரு சிலரோ அரசியலில் தொண்டர்கள் என்ற பெயரில் பணம் சம்பாதிப்பதற்கு வசதியாக பதவியில் இருப்பவனாகவும்...
சினிமாவில் ரசிகர் மன்றம் என்ற பெயரில் தற்போது வசூலில் முதலிடத்தில் இருக்கும் நடிகராக பார்த்து தனது தலைவனாகவும் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள்...
அதன் பிறகு, அந்த தலைவனால் புண்ணியம் இல்லை என்று தெரிந்து கொண்ட உடனே, தோலிலுள்ள துண்டை மாற்றுவது போல தலைவனையும் உடனடியாக மாற்றியும் விடுகிறார்கள்...
ஆனால், அதுபோல காசுக்காகவும், பணத்திற்காகவும் தலைவனை மாற்றிக் கொள்ளும் கூட்டம் எங்கள் கூட்டம் அல்ல...
கூட்டத்தினர் சற்று குறைவாக இருந்தாலும் (அல்லது) நிறைவாகவே இருந்தாலும் காசு பணம் கொடுக்காமல் உண்மையான தலைவருக்காக கூடும் ஒரே கூட்டம்...
சுயநலம் அறியாத கூட்டம்...
உண்மையான கூட்டம்...
பொதுமக்களிடம், கட்சி நிதி (மற்றும்) வளர்ச்சி நிதி என்கிற பெயரில் காசு பணம் வாங்கி பேனர் வைத்து, போஸ்டர் அடித்து விழா கொண்டாடும் கூட்டம் எங்கள் கூட்டம் அல்ல....
எமது உத்தம தலைவர் விண்ணுலகம் சென்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த பின்பும்...
அவர் மீது கொண்ட உண்மையான பக்தியாலும்... பாசத்தாலும்...
நாங்கள் உண்மையாக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் பேனர் வைத்து, போஸ்டர் அடித்து, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்து தலைவரின் விழாக்களை கொண்டாடும் கூட்டம் தான் எங்கள் கூட்டம்...
மொத்தத்தில், அரசியல் என்று பார்த்தால் பெருந்தலைவர் காமராஜரை போன்ற ஒரு உத்தமர் இதுவரை பிறக்கவும் இல்லை...
இனி பிறக்கப் போவதும் இல்லை...
அதே போல, கலையுலகம் என்று பார்த்தால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை போன்ற ஒரு உத்தமர் இதுவரை பிறக்கவும் இல்லை...
இனி பிறக்கப் போவதும் இல்லை...
அப்பேற்பட்ட, பெருந்தலைவருக்கும் உத்தம தலைவருக்கும் தொண்டனாய் இருப்பதை விட வாழ்வில் வேறு என்ன பாக்கியம் கிடைத்து விடப்போகிறது...
பெருந்தலைவரும், உத்தம தலைவரும் எங்களின் இரு விழிகளாக இருந்து எங்களுக்கு காட்டிய பாதையில் பயணித்து...
பிறரை ஏமாற்றி பிழைக்காமல்...
உண்மையாக அனு தினமும் உழைத்து...
எங்களுக்கு மட்டுமல்ல...
எங்களையே நம்பி இருக்கும் எங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல...
அருகாமையில் இருக்கும் கஷ்டப்படும் ஏழை எளியோர்களுக்கும்...
ஆண்டவனின் பேரருளால்...
ஏதோ, எங்களால் இயன்ற வரை உணவளித்து கொண்டு தான் இருக்கிறோம்.
ஆதலால், இன்று நாங்கள் நல்லபடியாக உழைத்து சாப்பிடுகிறோம் என்றால்...
அது, எங்கள் உத்தம தலைவர்கள் எங்களின் இரு விழி போல இருந்து வழி காட்டியதால் தான் என்பதை முதலில் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்...
ஒருவேளை, நாங்களும் நீங்கள் சொல்வதைப் போல பணத்தின் பின்னே தலைவர்களை தேடிக்கொண்டு சென்றிருந்தால்...
இன்று, மானங்கெட்டு...
மரியாதை கெட்டு வாழும்...
ஒரு சிலரைப்போல சிறையில் உள்ள வார்டன் போடும் சோறை தான் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்...
ஆதலால், உண்மையான தலைவர்களை நேசிக்கும் தொண்டர்களை உடனிருந்து பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை...
அவர்களை, பிழைக்கத் தெரியாதவன் என்கிற பெயரில் குறைத்து பேச வேண்டாம்...
தங்களால் முடிந்தால், எங்களைப் போன்ற உண்மையான தொண்டர்களுக்கு அவர்களின் பாதையில் செல்ல மென்மேலும் ஊக்கமளித்திடுங்கள்...
அது ஒன்றே போதுமானது. தங்களிடம் இருந்து வேறு எதையும் நாங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை...
அதை விட்டு விட்டு, உங்கள் தலைவர்களா உங்களுக்குச் சோறு போடுகிறார்கள் என்று கேனத்தனமாக இனி ஒருபோதும் கேள்வி கேட்காதீர்கள்...
அதெல்லாம் வேறு கூட்டம்...
அதை அழுத்தமாக சொல்வதற்காகத்தான் இப்பதிவு...
நன்றி... நன்றி... நன்றி...
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...3b&oe=5BD755F9
courtesy m v ramkumar fb