www.biscoot.com சைட்டுக்கு போனால் கண்டு பிடிக்கலாம்
Printable View
www.biscoot.com சைட்டுக்கு போனால் கண்டு பிடிக்கலாம்
இருக்கறதுக்குள்ளே ,நல்லதா stock இருந்தது இது ஒண்ணுதான். பின்னே காலையிலிருந்து அலைக்கழித்து விட்டு அவர் தெலுங்கு நடிகர் என்று establish பண்ண பார்த்தால் .........(அவ்வளவு மாநில பற்று) போங்கப்பா........
நல்ல வேளை ..."பறவைகள் "என் கோபத்திலிருந்து உன்னை காத்து விட்டது.
Unfinished NT movie
'ஸ்கூல் மாஸ்டர்' மலையாளப் படத்தில்தான் அந்த போஸ். (எந்தா..மனசிலாயோ) இதோ இன்னொரு அமர்க்களம்.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/s-1.jpg
வாசு சார்,
தெரியாத படத்தின் ஸ்டில்லைப் போட்டு கிட்டத்தட்ட இருபத்தைந்து பதிவுகள் ஏத்தி விட்டுட்டீங்க. அவர்களும் நடிகர்திலகம் நடித்த கால்வாசி படத்தின் பெயர்களை சொல்லி முடிச்சுட்டாங்க. கடைசியில் வேறு மொழிப் படமென்றால் கோபால் சார் வெறுத்துதானே போவார்.
நான் எந்தப்படத்தையும் யோசிக்காமல் மத்தவங்க கண்டுபிடிச்சு சொல்லட்டும்னு இருக்கேன்.
ஸ்கூல் மாஸ்டர் படத்தைப் போட்டு ஸ்டில் மாஸ்டர் நம்மையெல்லாம் ஒரு வழி பண்ணிட்டார் போல... வாசு சார் ... இது போல இன்னும் எங்களையெல்லாம் படுத்துங்க... நல்லாத்தான் இருக்கு... இந்த விளையாட்டு....
பாலா சார்,
ஸ்வர்ண சாமரம் [தமிழில் தங்க சாமரம்] unfinished movie என்பதை விட dropped movie என்பதே சரி. மோகன்லால் நடித்த சித்ரம் வந்தனம் போன்ற படங்களை தயாரித்த வி.பி.கே மேனன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிகர் திலகத்தையும் மோகன்லாலையும் இணைத்து இந்த ஸ்வர்ண சாமரம் படத்தை ஆரம்பித்தார் ராஜீவ்நாத் என்ற திறமையான இயக்குனர் படத்தின் டைரக்டர். நடிகர் திலகம் தந்தையாகவும் மோகன்லால் மகனாகவும் நடிக்கும் கதை.
தந்தை மீதி உயிரை வைத்திருக்கும் மகன், மகன் மீது பாசத்தை பொழியும் தந்தை. ஒருகட்டத்தில் தந்தை நோய்வாய்ப்பட எத்தனயோ மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் குணமாகாத சூழலில் தந்தையின் வேதனை தாளாமல் மகன் கருணை கொலையை தேர்ந்தெடுக்கும் சூழல் என வார்க்கப்பட்டிருந்தது கதை.மகன் தந்தைக்கு செய்யும் பணிவிடையை கருத்தில் கொண்டு சூட்டப்பட்ட தலைப்புதான் ஸ்வர்ண சாமரம்.சிறிது நாட்கள் திருவனந்தபுரத்தில் படபிடிப்பும் நடைப்பெற்றது இது நடப்பது 1995 காலகட்டத்தில்.
ஆனால் அன்றைய நாட்களில்தான் இயல்பான ஆற்றொழுக்கு போன்ற தங்கள் பாணியை விட்டுவிட்டு larger than life என்று சொல்வார்களே அது போன்ற ஒரு இமேஜ் வளையத்திற்குள் மலையாளசினிமாவும் மோகன்லால் போன்றவர்களும் மெதுவாக இழுக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம். சுற்றி இருந்த சில "நல விரும்பிகள்" இந்த மாதிரி படங்கள் எல்லாம் இந்த காலகட்டத்தில் எடுபடாது என்று தூபம் போடவே இந்த படம் நிறுத்தப்பட்டது.
இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டது தயாரிப்பாளர் மேனன்தான். அவருக்கு உதவி செய்வதற்காக சித்ரம், வந்தனம் படங்களின் இயக்குனரும், லாலின் நெருங்கிய நண்பருமான பிரியதர்ஷனை அணுக அவர் கொடுத்த கதைதான் ஒரு யாத்ரா மொழி. இந்த மாதிரி படத்திற்கு ராஜீவ்நாத் சரிப்பட்டு வரமாட்டார் என்பதால் பிரதாப் போத்தன் இயக்குனராக பொறுப்பு ஏற்றார்.
ஸ்வர்ண சாமரம் படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த நடிகர் திலகம் அது நின்று போனாலும் தன் "மாப்பிளையின்" வேண்டுகோளை ஏற்று இந்த படத்திற்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். 1996 ஜனவரியில் படபிடிப்பு நடைப்பெற்றது.
நடிகர் திலகத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், அன்றைய நாளில் காலா பானி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதூர் போன்ற சுற்று வட்டாரங்களிலேயே யாத்ரா மொழி படப்பிடிப்பும் நடைபெற்றது. படம் 1996-லேயே முடிந்து விட்ட போதிலும் தயாரிப்பாளரின் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ஒரு யாத்ரா மொழி திரைப்படம் 1997 ஜூலை மாதம் வெளியானது.
நடிகர் திலகத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாள் 1997 ஜூலை 3. அதற்கு அடுத்த நாள் ஜூலை 4 அன்று once more வெளியானது. அது வெளியாகி அடுத்த ஒரு 15-20 நாட்களில் ஒரு யாத்ரா மொழி வெளியானது.
ஸ்வர்ண சாமரம் பற்றியும் ஒரு யாத்ரா மொழி பற்றியும் ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என்ற போதிலும் மீண்டும் அதை அசை போட வாய்ப்பளித்த பாலாவிற்கு நன்றி.
அன்புடன்
ஒரு விஷயம் தெரியுமா? ஒரு யாத்ரா மொழி படத்தில் நடிகர் திலகம் நடிக்கும் contractor என்ற கேரக்டர் வேலைக்கு கொண்டு வரும் ஆட்களை வேலை செய்ய விடாமல் தடுக்கும் union leader வேடத்தில் வந்து தகராறு செய்து நடிகர் திலகத்திடம் கன்னத்தில் அறை வாங்கி கொண்டு போகும் மனிதன்தான் தயாரிப்பாளர் வி.பி.கே.மேனன்.