http://i59.tinypic.com/2poxqoi.jpg
Printable View
சிகரங்களை நாம் தொட்டாலும் நம்மை ஏற்றி விட்ட ஏணிகளாம் ஆசிரியப்பெருமக்களை மறக்க முடியுமா? மாதா, பிதாவுக்கு அடுத்து இறைவனடியில் வீற்றிருக்கும் ஆசிரியப்பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
https://www.youtube.com/watch?v=xrkpCqTpwhg
Happy Diwali Greetings to all fellow hubbers and visitors to this thread on the South Indian James Bond Jai Shankar who carved a niche for himself in the history of Tamil Cinema.
SSR : Unforgettable 2nd Generation actor! May his soul rest in peace
On behalf of the 3rd Generation hero Jaishankar's thread, we express our heartfelt condolences for the sudden demise of the veteran actor SSR.
பொண்ணு மாப்பிள்ளை
ரமேஷ் (ஜெய் ) புவனா (காஞ்சனா ) புதிதாக கல்யாணமான தம்பதிகள் . அனந்த பவன் என்ற பிளட் ல் குடி இருக்கிறார்கள் , அதே flat ல் மாது , சேது (நாகேஷ் & அவர் நண்பரும் ) VKR , மனோரமா , டைபிஸ்ட் கோபு மற்றும் பலர் வசிகிறார்கள்
ஒரு புலி படம் போட்ட guitar தவறுதலாக ஜெய் காரில் வந்து விட , அதை தேடி வரும் நபர் கஞ்சனாவால் கொலை செய்ய படுகிறார் , ஜெய் , காஞ்சனா இருவரும் அந்த பிணத்தை மறைக்க முற்படும் பொது காஞ்சனா காணாமல் போய் விடுகிறார் , மனைவியை தேடி வீட்டுக்கு வரும் ரமேஷ் வீட்டின் தரையில் ரத்தம் இருப்பதை பார்த்து அலறுகிறார் , அனைவரும் வந்து விசாரிக்க கனவு என்று சொல்லி சமாளித்து விடுகிறார் , தன் வீட்டில் ஒரு cigarette pipe ல் கார் நம்பர் இருக்க அதை வைத்து தன் மனைவியை தேடுகிறார் .
அப்போது தான் அவருக்கு அந்த கிடாரில் வைரம் மறைத்து வைக்க பட்டு இருப்பது தெரிய வர , அவர் மனைவியை சித்ரவதை செய்வதை பொறுக்க முடியமால் தவிக்க , அங்கே வரும் PSV அந்த கும்பலை மிரட்டி , காஞ்சனாவை தன் மகள் வத்சலா என்று சொல்லி அழைத்து போய் விடுகிறார்
காஞ்சனா கொலை செய்தாரா , அந்த கும்பலிடம் இருந்து ஜெய் & காஞ்சனா எப்படி தப்பி வருகிறார்கள் என்பதே கதை
PSV மீண்டும் ஜெய் அவர்களை வைத்து ஒரு நல்ல thriller படத்தை கொடுத்து உள்ளார்
கொலை நடந்த வீட்டில் நாகேஷ் மற்றும் அவர் நண்பர் இருவரும் சாப்பிடும் காட்சி சிரிப்புக்கு உத்தரவாதம் , MIME , dumb charades போன்ற நல்ல concept அதுவும் காலையில் அவர்கள் கையில் கரையுடன் போலீஸ் வசம் சிக்கி கொள்ளுவதும் , போலீஸ் ஸ்டேஷன் ல் அழுவதும் , வாக்குமூலம் கொடுப்பதும், VKR சாப்பிடும் பொது இவர்கள் tongue cleaner வைத்து வாந்தி எடுப்பதை போல் சத்தம் போட்டு சாப்பிட விடாமல் செய்வதும் சிரிப்பு மழை
ஜெய் முதல் பாதியில் romance + அமைதி , இரண்டாம் பாதியில் வழக்கம் போல் துப்பறியும் வேலை + சுறுசுறுப்பு
காஞ்சனா அழகாக இருக்கிறார் , கொலை செய்து விட்டு அவர் புலம்பும் காட்சி நடிப்பில் முத்திரை , கதை வசனம்: சோலைமலை ,
இயக்கம் : ராமநாதன்
இசை வேதா
பாடல் அனைத்தும் நன்றாக இருக்கிறது
எல்லோரும் கை தட்டுங்கள் - நல்ல beats உள்ள பாடல் - வேதா ஸ்டைல்
சிரித்த முகம் பாடல் நல்ல மெலடி
மொத்தத்தில் engaging thriller + காமெடி
ஒரு சிறு உதவி.. ஜெய் நடித்த ஒரு படத்தின் பெயர் தெரியவேண்டும்..
ஜெய், அவர் மனைவியாக வாணிஸ்ரீ, வில்லனாக அசோகன். ஒரு சிறுவன்கூட நடித்திருப்பான். அசோகனின் கையாளாக வரும் ஜெய், ஒரு வைரக்கிரீடத்தைத் திருடும் காட்சி செம த்ரில்லாக இருக்கும். ஒரு காட்சியில் வாணிஸ்ரீயை அசோகன் கடத்தி வைத்திருப்பார். மீட்கப்போகும் ஜெய்க்கும், அசோகனுக்குமான சண்டைக்காட்சி வித்தியாசமாக வைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் வில்லன் அசோகன், ஜெய்சங்கரை துவைத்து எடுப்பார். அடிதாங்கமுடியாமல் கதாநாயகன் துடிதுடிப்பான். இனி ஒரு அடி வாங்கினாலும் கதாநாயகன் காலி என்ற நிலையில், அசோகன் விடும் ஒரு குத்து தவறி, ரேடியோவுக்குள் விழுந்துவிடும். மின் அதிர்ச்சியால் துடிக்கும் வில்லனை, ஜெய் காப்பாற்றி, பின் தான் கொஞ்சம் தண்ணீர் அருந்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டு, வில்லனைத் தாக்குவார்.
சிறுவயதில் நானும் நண்பனும் இப்படம் பார்க்கச் சென்றிருந்தோம். ஜெய் அடிவாங்குவது தாளாமல், அவரது ரசிகனான நண்பன், அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடியதும், முழுப்படத்தையும் பார்த்துவிட்டுவந்த என்னிடம், மறுநாள் கதை கேட்டுவிட்டு மீண்டும் படம் பார்க்கச் சென்றதும் ஒரு சுவையான நிகழ்வு.
சரி.. அந்தப்படத்தின் பெயர் யாருக்கேனும் தெரியுமா..?
சுனந்தினி.
பாவம். தற்கொலைக்கு பலியான இன்னொரு நடிகை அவர்.
ப்ருந்தாவனம்.. யமுனா நதி.. விளையாடினானே.. என்ற பாடலும், அதன் நிறைவில் ஒரு குழந்தை சொல்லும் `உடையப்பனைப் பழிவாங்குவோம்` என்ற சொற்களும் பிரபலம்..
இயக்குநர் டி என் பாலு என்பதாக நினைவு..