http://i57.tinypic.com/2ng9dlz.jpg
Printable View
MGR’s influence and the changes he brought to Tamil cinema and politics are still being felt directly and indirectly today. He certainly was one of a kind and one doubts whether we will actually see another person like him with his sway over the Tamil people all over the world. He was a genius who controlled his image and his message to the people via a visual medium long before others in India realized how powerful cinema could be (nowadays its either TV or internet). His enemies can call him whatever they want but for his fans (and I am one) he will always be the Vadhiyar who taught us right and wrong and told people that they can stand up for their rights.
courtesy-net
Menaka Baskaran
http://s13.postimg.org/zey57pdqv/283..._7190539_n.jpg
SMT.P.SUSILA WITH MAKKAL THILAGAM
GULEBAGAVALLI 60 YEARS SOME IMAGES:
http://i160.photobucket.com/albums/t...psuux0h3md.jpg
கலங்கரை விளக்கம்’ என்ற இந்த கறுப்பு வெள்ளை திரைப்படம் 1965-ல் வெளிவந்து அமோக வெற்றி பெற்றிருக்கிறது. சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு. இயக்கம் கே. சங்கர். கதை மா. லட்சுமணன். இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்.
. இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடமா என்றால் ‘ஆம்’, ‘இல்லை’ என்று சொல்ல முடியவில்லை, கதாசிரியரும் இயக்குநரும் ரொம்பவும் சாமர்த்தியசாலிகள்!
1965-ல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படங்களில் எங்க வீட்டுப் பிள்ளையும், ஆயிரத்தில் ஒருவனும் பிளாக் பஸ்டர்கள் ஆயின. என்றாலும் அதே ஆண்டில் பணம் படைத்தவன், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களோடு இந்தக் கலங்கரை விளக்கம் படத்திலும் நடித்திருந்தார்.
எம்.ஜி.ஆர். படம் என்றாலும் அவரது ஹீரோயிஸத்துக்கு அதிக இடம் தராத படம். என்றாலும் சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. தனக்கேற்ற வேடம் என்று பார்க்காமல் பாத்திரத்தை உள்வாங்கி அதற்கேற்ற நடிப்பை எம்.ஜி.ஆர். தந்திருக்கிறார். அவருடைய முத்திரை களும் ஆங்காங்கே படத்தில் உண்டு.
நகைச்சுவைக்கு நாகேஷ், வீரப்பன், மனோரமா. மகாபலிபுர டூரிஸ்ட் கைடுகளாக வரும் நாகேஷும், வீரப்பனும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள். எம்.ஜி.ஆருடன் இந்தத் திரைப்படத்தில் சரோஜா தேவிக்கு அடுத்தபடியாக அதிக ‘நெருக்கமாக’ நடித்திருப்பது கோபாலகிருஷ்ணன்தான்!
பாடல்களும் இசையும் ஜீவனுள்ளவை. இப்போது கேட்டாலும் இனிமையாகத்தான் இருக்கின்றன.
‘நான் காற்று வாங்கப்போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..’ பாடல் எளிய கவித்துவம் மிக்க வரிகளாக பாமர ரசிகனை பண்டித ரசிகனையும் ஒருசேர ஈர்த்தது. இந்தப் பாடலை எழுதியவர் அன்று நிஜமாகவே வாலிபராக இருந்த வாலி. பாரதி தாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலை சீர்காழி கோவிந்த ராஜனின் மணிக்குரலில் இன்று கேட்டாலும் உடல் சிலிர்க்கிறது.
உணர்ச்சி மிக்க அந்தப் பாடலுக்கு நன்கு இசையமைத்திருந்தாலும், கதாநாயகனே அடிக்கடி ‘நீலா’, ‘நீலா’ என்று அரற்றுவதால் ரசிகர்களும் நிச்சயம் சரோஜா தேவியின் ரியாக்*ஷன் என்னவென்று அந்தக் காலத்தில் கவனித்துக்கொண்டிருந்திருப்பார்கள். ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ ஆகிய பாடல்கள் மெட்டுக்காகவும் பாடல் வரிகளுக்காகவும் மறக்க முடியாதவை. பின்னாளில் தமிழ் சினிமாவில் சாதனைகள் படைத்த வி.சி. குகநாதன் இந்தப் படத்தின் உதவி வசன கர்த்தாவாகப் பணியாற்றியிருக்கிறார். இந்தப் படத்தின் வசனகர்த்தா ஜி.பாலசுப்பிரமணியம்.
50 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது குறைகள் தெரிந்தாலும் படத்தின் ஆதாரமான தொனியில் இருக்கும் நேர்மையும் எளிமையும் இன்றும் கவர்கின்றன. சாகாவரம் பெற்ற பாடல்கள் படத்தின் சிறப்பு முத்திரை.
பின் குறிப்பு: சங்கே முழங்கு பாடலை வானொலியில் கேட்கும்போதெல்லாம் ஒரு வருத்தம் உண்டு எனக்கு. ‘தமிழ் எங்கள் மூச்சாம்’ என்ற கடைசி வரிதான் நம்மை உணர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்வது. இசைத் தட்டில் இசைக் கோர்ப்புக்கேற்ப, ‘தமிழ் எங்கள் மூச்சா……..ம்’ என்று நீட்டித்திருப்பார்கள். ஆகாஷ்வாணியில் அந்த நாளில் இந்தப் பாடலை நான் கேட்கும்போதெல்லாம் ‘மூச்சா….’ என்றே முடித்துவிடுவார்கள். ஒலிபரப்பியவர்களுக்கு என்ன ஆச்சோ...!?
- தி இந்து .
அய்யா இம்முட்டு தூரம் வந்துருக்கீங்க ...
ஒரு காபி தண்ணீயாவது குடிச்சிட்டு போங்க ...
.
#
அம்மா நான் டீ, காபி குடிப்பதிலையம்மா ...
.
அப்ப சரி ஒரு சோடாகலர் சாப்பிடுப்பா....
.
#
சரி தாங்கம்மா ...... அம்மா உனக்கு எத்தனை பிள்ளைங்க?
.
எனக்கு ரெண்டு பிள்ளைங்க... ஒருத்தன் விவசாயம் பார்க்குறான்..
.
#
அம்மா இன்னொரு பையன் என்ன செய்யுறான்...?
.
அவன் மெட்ராஸீல சினிமா கம்பெனியில இருக்கான்...??
.
#
யாரும்மா அவரு? பேர் என்ன? எந்த கம்பெனியில இருக்காரு....??
.
அட நீதான்பா என் ரெண்டாவது மகன் .....
.
#
"அம்மா தாயே....!!!
எனக்கு இப்படி ஒரு தாய்"...!!
என் அப்படியே அன்பின் மிகுதியால் அந்த மூதாட்டியை
புரட்சித்தலைவர் கட்டியணைக்கும் புகைப்படம் இது ......
Was MGR starrer Kalai Arasi the first Indian film to feature an alien?
https://youtu.be/HWXD0i0kF-4
1.Making of the movie must have commenced in the late 50s. The reasons for the inordinate delay in proceeding with making the movie are not known. Legend has it that towards the end, MGR had become so busy with his schedules that the producers of ‘kalaiarasi’ had to resort to a hunger strike at the gate of MGR’s office to persuade him to spare some dates to complete ‘kalaiarasi’.
2. The alien space ship makes its appearance 2.30 minutes into the film!! It’s a typically 50s style space ship with 2 aliens inside and uses sound effects and shaky video effects to convey alien-ness. Fascinating!
3. MGR’s nemesis, M N Nambiar, is one of the aliens!! They speak in Tamil and wear tight shorts! They look like slightly better dressed humans.
4. The word used to describe planets is ‘Mandalam’ and this is interesting, since later, Tamil popular literature used the word, ‘Graham’…as in ‘Vetru graha vaasigal’ (strange planet’s inhabitants – if transliterated), to denote aliens. Mandalam is used in conjunction with moon – as in, Chandra Mandalam. There is also the usage ‘Chola mandalam (Chola Kingdom) and Murugappa Group has a company by name Cholamandalam too! It’s quite amazing that this was the word used to denote planets… or did they denote some other form of celestial body, I wonder!
5. Nambiar’s sidekick asks him where they are heading. Nambiar says, ‘Poo Mandalam’ (or ‘Boo Mandalam’, denoting Boologam or Poovulagam – Earth in Tamil). His reason for the visit? It seems their planet hasn’t seen any progress in the field of arts, as much as they have progressed in science!! So, the plan is to kidnap Banumathi… who is the Kalai Arasi (Queen of Arts) and let her teach arts (namely, singing) to their planet’s inhabitants. In this picture, Nambiar is seen threatening Banumathi with dire consequences (dump you off the ship?).
6. The aliens are not introduced formally – their alien planet’s name remains a mystery!
7. The aliens have something like a television where they watch parts of Earth where arts flourish. Part of this television watching included a Hindi song and dance sequence they see through the screen!
8. There is absolutely no mention of oxygen and related issues… something that is paramount in most other alien flicks involving another planet. So, the aliens here walk into Earth and humans walk into alien land with no problems with breathing whatsoever.
9. MGR has a fantastic hand combat-style fight scene with this alien who is left behind! MGR may be the first Indian film hero to fight an alien, that too with bare hands! This happens just after MGR discovers the alien transceiver! Also, here, that alien is seen wearing some kind of mask – may answer some parts of the question in earlier point about oxygen/atmosphere.
10. There is a scene of alien space craft sighting too! Villagers notice a space craft flying and ask MGR what it is. He very casually responds, ‘It’s a flying saucer’. The way he responds makes it seem like he’s talking about a nice, healthy cow crossing the road! MGR’s sister asks him where they are from. He (knowledgeably, at that) says that they are from a different ‘Mandalam’ (Planet?).
11. MGR hitches a ride in an alien space ship to rescue his lady love, Banumathi, who has been abducted by aliens! He takes on the garb of a court jester (who looks exactly like MGR, by the way, and conveniently dies, for MGR to take on his garb!) to stay on in the alien land. And, he even manages to have fencing duel with Nambiar, the evil minister of alien land!
It is then I realized that if you substitute the alien angle with, say a neighboring kingdom, the story remains exactly same. Yes, replace aliens with people from a neighboring kingdom and change the space ship to a chariot from that kingdom…the story works perfectly. It looks like the film’s script writer, T E Gnanamoorthi and director A Kasilingam were looking for a change of routine from the usual kingdom-raja-rani type stories and cooked up this incredible plot back in the late 50s! It’s amazing that they conceived all this back then when the first human to travel in space (Yuri Gagarin) was in 1961! In fact, in the film’s climax, as MGR and Nambiar are engaged in their usual combat in the space ship, it is Banumati, the film’s heroine, who steers the space ship back to planet Earth…in the first photo below she seems to be struggling, but if you notice the next picture, she has mastered the art mighty fast!! And to think the first woman on space was Valentina Tereshkova… in the same year as the film released… 1963!!
This is a gem of a film that needs to be archived with a lot more care, in whatever form it is in. Is this the first Indian film ever to feature an alien and alien space ship? Even if it is not, hats off to the people who made this film back when sophisticated special effects were unheard of. The effects no doubt look tacky for our present-day eyes fed on Avatar,
COURTESY - KARTHIK
வினோத்
கலை அரசி படத்தை பற்றி இணைய தளத்தில் மேனகா பாஸ்கரன் எழதிய கட்டுரையை திரியில் பதிவிட்டமைக்கு நன்றி . கலை அரசி மிகவும் அருமையான படம் . 1950 பிற்பகுதியில் தொடங்கிய படம் பல் வேறு காரணங்களுக்கு பின்னர் 1963ல் வெளிவந்த விஞ்ஞான படம் . அருமையான முயற்சி . 1963ல் பணத்தோட்டம் - தர்மம் தலைகாக்கும் - கொடுத்து வைத்தவள் என மூன்று முத்தான காவியங்களை கண்டு களித்த ரசிகர்கள் அடுத்து நான்காவதாக வந்த கலை அரசி படத்தை ரசித்த நேரத்தில் ''பெரிய இடத்து பெண் '' சூப்பர் ஹிட் ஆனது .
http://i61.tinypic.com/2whqk3m.jpghttp://i58.tinypic.com/2vkaz6f.jpghttp://i59.tinypic.com/3151xci.jpghttp://i60.tinypic.com/35lavmc.jpg
28.8.1965 ....... 28.8.2015
கலங்கரை விளக்கம் 50 ஆண்டுகள்
‘கலங்கரை விளக்கம்’ என்ற இந்த கறுப்பு வெள்ளை திரைப்படம் 1965-ல் வெளிவந்து அமோக வெற்றி பெற்றிருக்கிறது. சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு. இயக்கம் கே. சங்கர். கதை மா. லட்சுமணன். இசை விஸ்வநாதன், பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்.
கல்லூரியில் வரலாறு படிக்கும் நீலா (சரோஜா தேவி) சிறு விபத்தில் சித்தம் கலங்குகிறாள். தன்னை ஆடலரசி சிவகாமியாகக் கற்பனை செய்துகொண்டு நரசிம்ம பல்லவ சக்ரவர்த்தியைத் தேடி அடிக்கடி கலங்கரை விளக்கு இருக்குமிடத்துக்கு நள்ளிரவில் செல்கிறார். பெரிய பணக்காரரான அவளுடைய தந்தை, டாக்டர் கோபால் (வி. கோபாலகிருஷ்ணன்) மூலம் சிகிச்சை அளிக்கிறார்.
கோபாலுக்கு உதவியாக அவருடைய சென்னை வழக்கறிஞர் நண்பர் ரவி (எம்.ஜி.ஆர்.) மகாபலிபுரத்துக்குக் காரில் வருகிறார். (நம்பியாரின் உச்சரிப்பில் றெவி) நள்ளிரவில் கலங்கரை விளக்கை நோக்கி ஓடும் நீலாவை, தான்தான் நரசிம்ம பல்லவன் என்று சொல்லி காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார்.
நீலா இறந்த பிறகு அண்ணனின் சொத்து முழுவதையும் கைப்பற்ற தம்பி நாகராஜன் (நம்பியார்) திட்டமிடுகிறார். அவருக்கு ஒரு காதலி, அந்தக் காதலிக்கு ஒரு தங்கை மல்லிகா (இன்னொரு சரோஜா தேவி). இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடமா என்றால் ‘ஆம்’, ‘இல்லை’ என்று சொல்ல முடியவில்லை, கதாசிரியரும் இயக்குநரும் ரொம்பவும் சாமர்த்தியசாலிகள்!
உருவ ஒற்றுமை உள்ள மல்லிகாவை நீலாவாக நடிக்க வைத்து, நீலாவைக் கொன்றுவிட்டு சொத்தை அடையச் செயல்படுகிறார் நம்பியார். இரட்டை வேடப் படங்களில் ஒரு கதாபாத்திரத்தை இரக்கமில்லாமல் கொல்லக் கதாசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் கோணமே இதுதான்!
மல்லிகா சாதாரணத் தங்கை அல்ல. சென்னை, பெங்களூர் என்று நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திக் கலைக்காகச் சேவை செய்கிறார். நீலா கொல்லப்பட்ட பிறகு மல்லிகாவைத் திருமணம் செய்துகொள்ளும் எம்.ஜி.ஆர். அவர் மூலம் உண்மையை வரவழைத்து நம்பியாரைச் சிறைக்கு அனுப்புகிறார். தவறுக்கு உடந்தையாக இருந்ததற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை பெற்ற மனைவியை சிறைக்கு அனுப்பி வைக்கிறார்.
கதை முடிச்சு சுவாரஸ்யமாக இருந்தாலும் படத்தின் பிற்பகுதி சவ்வாக இழுக்கிறது. உருவ ஒற்றுமையையும் மனப் பிறழ்வையும் வைத்துக்கொண்டு இன்னும் விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘இத்திரைக்கதையில் வலு இல்லை’, ‘வசனங்கள் சுமார்’ என்றெல்லாம் எழுதுவது தர்மமில்லை.
ஒரு பெரிய திருப்பம் வரும் என்று கடைசிவரை எதிர்பார்த்தால், ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் முடிவு மாதிரி தொடக்கத்திலிருந்தே கணித்துவிடும்படியாக இருக்கிறது.
1965-ல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படங்களில் எங்க வீட்டுப் பிள்ளையும், ஆயிரத்தில் ஒருவனும் பிளாக் பஸ்டர்கள் ஆயின. என்றாலும் அதே ஆண்டில் பணம் படைத்தவன், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களோடு இந்தக் கலங்கரை விளக்கம் படத்திலும் நடித்திருந்தார்.
எம்.ஜி.ஆர். படம் என்றாலும் அவரது ஹீரோயிஸத்துக்கு அதிக இடம் தராத படம். என்றாலும் சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. தனக்கேற்ற வேடம் என்று பார்க்காமல் பாத்திரத்தை உள்வாங்கி அதற்கேற்ற நடிப்பை எம்.ஜி.ஆர். தந்திருக்கிறார். அவருடைய முத்திரை களும் ஆங்காங்கே படத்தில் உண்டு.
நகைச்சுவைக்கு நாகேஷ், வீரப்பன், மனோரமா. மகாபலிபுர டூரிஸ்ட் கைடுகளாக வரும் நாகேஷும், வீரப்பனும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள். எம்.ஜி.ஆருடன் இந்தத் திரைப்படத்தில் சரோஜா தேவிக்கு அடுத்தபடியாக அதிக ‘நெருக்கமாக’ நடித்திருப்பது கோபாலகிருஷ்ணன்தான்!
பாடல்களும் இசையும் ஜீவனுள்ளவை. இப்போது கேட்டாலும் இனிமையாகத்தான் இருக்கின்றன.
‘நான் காற்று வாங்கப்போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..’ பாடல் எளிய கவித்துவம் மிக்க வரிகளாக பாமர ரசிகனை பண்டித ரசிகனையும் ஒருசேர ஈர்த்தது. இந்தப் பாடலை எழுதியவர் அன்று நிஜமாகவே வாலிபராக இருந்த வாலி. பாரதி தாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலை சீர்காழி கோவிந்த ராஜனின் மணிக்குரலில் இன்று கேட்டாலும் உடல் சிலிர்க்கிறது.
உணர்ச்சி மிக்க அந்தப் பாடலுக்கு நன்கு இசையமைத்திருந்தாலும், கதாநாயகனே அடிக்கடி ‘நீலா’, ‘நீலா’ என்று அரற்றுவதால் ரசிகர்களும் நிச்சயம் சரோஜா தேவியின் ரியாக்*ஷன் என்னவென்று அந்தக் காலத்தில் கவனித்துக்கொண்டிருந்திருப்பார்கள். ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ ஆகிய பாடல்கள் மெட்டுக்காகவும் பாடல் வரிகளுக்காகவும் மறக்க முடியாதவை. பின்னாளில் தமிழ் சினிமாவில் சாதனைகள் படைத்த வி.சி. குகநாதன் இந்தப் படத்தின் உதவி வசன கர்த்தாவாகப் பணியாற்றியிருக்கிறார். இந்தப் படத்தின் வசனகர்த்தா ஜி.பாலசுப்பிரமணியம்.
50 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது குறைகள் தெரிந்தாலும் படத்தின் ஆதாரமான தொனியில் இருக்கும் நேர்மையும் எளிமையும் இன்றும் கவர்கின்றன. சாகாவரம் பெற்ற பாடல்கள் படத்தின் சிறப்பு முத்திரை.
COURTESY - THE HINDU TAMIL
உச்சத்திலே விளையாடுகிறான் உதை வாங்க போகிறான்
https://www.youtube.com/watch?v=NO1I65ixAN0
உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி:
வெளிநாடுகளில் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் லதா வெளியிட்ட சுவையான தகவல்கள்
பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜூலை 22, 10:21 pm ist
எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.
"உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்புக்காக சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்ற லதா, அங்கே பள்ளி மாணவிக்கே உரிய மனநிலையில் அந்த இயற்கை சூழ்நிலையை அனுபவித்தார். ஒருமுறை, இஷ்டத்துக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆரிடம் மாட்டிக்கொண்டார்.
அந்த அனுபவம் பற்றி லதா கூறியதாவது:-
"ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து வந்ததும் ரூமில் நானும், மஞ்சுளாவும் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அப்போது 'ஐஸ்கிரீம்' சாப்பிடலாமா என்று கேட்டார், மஞ்சுளா. எனக்கும் ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை ஆசை. எனவே, "சாப்பிடலாமே" என்றேன். உடனே ரூமில் இருந்த இன்டர்காமில் ஐஸ்கிரீம் ஆர்டர் கொடுத்தேன். நான் கேட்ட 'வெண்ணிலா' ஐஸ்கிரீம் கிடைத்தது. நானும், மஞ்சுளாவும் சேர்ந்து இஷ்டத்துக்கு ஐஸ்கிரீமை வெட்டினோம்.
இரண்டாவது நாளும் படப்பிடிப்பு முடிந்து வந்ததும், இதே கதைதான். இப்போது ஆர்டர் கொடுத்த ஐஸ்கிரீம், அறைக்கு வந்து சேர்ந்ததும், ஆர்வத்துடன் சாப்பிடத் தொடங்கினோம். அப்போது பார்த்து கதவு 'தட் தட்' என தட்டப்பட்டது. திறந்து யாரென்று பார்த்தால், வெளியே எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார்! எனக்கு அதிர்ச்சி. எம்.ஜி.ஆரை பார்த்ததும் பயந்துபோன மஞ்சுளா, அந்த பதட்டத்திலும் ஐஸ்கிரீமை மறைத்து வைத்து விட்டார்.
உள்ளே வந்த எம்.ஜி.ஆர், "ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறதே" என்று சொல்லி எங்கள் இருவர் முகத்தையும் பார்த்தார். நாங்கள் எதுவுமே நடக்காததுபோல் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் ஆர்டர் கொடுத்து, ஐஸ்கிரீம் வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை தெரிந்து கொண்டுதான் அவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார்.
அருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டு உட்கார்ந்தார், எம்.ஜி.ஆர். என்னை அருகில் அழைத்தார். "என்ன லூசு! நீங்க ரூம்ல இருந்து ஏதாவது வேணும்னு ஆர்டர் கொடுத்தால், அதுக்கான பில் எங்ககிட்ட தானே வரும். எனக்கும் ஐஸ்கிரீம் அதுவும் வெண்ணிலா ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். சரி சரி! ஒளிச்சு வெச்சிருக்கிறதை எடுங்க! சேர்ந்து சாப்பிடலாம்" என்றபோது எங்கள் முகத்தில் ஈயாடவில்லை. இப்படி ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் எங்கள் குழந்தை மனதை தெரிந்து கொண்டவர், அவரும் குழந்தை மாதிரி எங்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதை இப்போது நினைத்தாலும் மனசுக்குள் 'ஜில்'லென்ற அனுபவமாக இருக்கிறது."
இவ்வாறு லதா கூறினார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக வெளிநாட்டில் முதலில் எடுத்தது 'சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' பாட்டுதான். இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர், நாகேஷ், வெளிநாட்டு குழந்தைகளுடன் லதாவும் ஆடிப்பாடி நடித்தார்.
இந்தப் பாடல் காட்சியின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-
"நடிகர் நாகேஷ் திறமையான நடிகர். ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்பது தெரியும். ஆனால், நகைச்சுவை என்பது எப்போதும் அவரிடம் குடிகொண்டிருக்கிறது என்பதை அவருடன் பங்குகொண்ட அந்த படப்பிடிப்பின்போதுதான் அனுபவரீதியாக உணர்ந்து கொண்டேன். திடீர் திடீரென அவர் அடிக்கிற கமெண்டுகளுக்கு எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.
எம்.ஜி.ஆர் - நான் - நாகேஷ் இருக்கிற நேரங்களில் இப்படி நாகேஷ் அடிக்கிற ஜோக்குகளுக்கு நான் சத்தம் போட்டு சிரித்து விடுவேன். இரண்டொரு முறை இதை கண்டு கொள்ளாமல் விட்ட எம்.ஜி.ஆர், அடுத்த முறை நான் சிரித்தபோது, "என்ன நீ! வயசுப்பொண்ணு இப்படியா சத்தமா 'கெக்கேபிக்கே'ன்னு சிரிக்கிறது?" என்று கேட்டார். கேள்வியில் கொஞ்சம் கோபம் இருந்தது. அப்புறம் நான் ஏன் வாயை திறக்கப்போகிறேன்?
"உலகம் சுற்றும் வாலிபன்" படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் அந்தப்படம் வெளிநாடுகளிலும் ரிலீசாகி வெற்றி பெற்றதை அறிந்தேன்.
ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் "வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க வேண்டும். எனவே தயாராக இரு" என்றார். வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் வெற்றிக்காக மறுபடியும் வெளிநாடு போகும் வாய்ப்பு என்பது எனக்கு எதிர்பாராதவிதமாக கிடைத்தது. பாரீஸ், லண்டன், சுவிட்சர்லாந்து, ரஷியா என இந்த வெற்றிப்பயணம் தொடர்ந்தது. ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர். எத்தனை அன்பு கொண்டவர் என்பதை இந்தப் பயணத்தில் கண்கூடாக உணர முடிந்தது.
இந்தப் பயணத்தில் நான் பட்ட ஒரே சிரமம், சாப்பாட்டு கஷ்டம்தான். அதுவும் ரஷியாவில் சாப்பாடு காரமோ காரம். இங்குள்ள 'ஆந்திர உணவு'தான் நமக்கு காரமாக தெரியும். ஆனால் ரஷிய உணவை சாப்பிட்டுப் பார்த்தவர்கள் ஆந்திர உணவை 'காரம்' என்று சொல்லவேமாட்டார்கள். அந்த அளவுக்கு காரமானது ரஷிய உணவு. இந்த சாப்பாட்டு விஷயத்தில் 2 நாள் சமாளித்துப் பார்த்தேன். பிறகு முடியவில்லை.
ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் சண்டைக்கே போய்விட்டேன். "போதும்! இனியும் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. என்னை ஊருக்கு அனுப்பி வெச்சிருங்க" என்று அழாத குறையாக முறையிட்டேன். என் உணர்வுகளை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், "நீ வெளியே சொல்கிறாய். என்னால் இந்த கஷ்டத்தை வெளியே சொல்ல முடியவில்லை. எனக்காக கொஞ்சம் பொறுமையாக இரு" என்று என்னை ஆறுதல்படுத்தினார்.
ஒரு வழியாக லண்டனுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த இந்திய உணவகத்துக்கு அழைத்துப்போன எம்.ஜி.ஆர், "இப்போது உன் சாப்பாட்டுக் கவலை தீர்ந்தது. உன் இஷ்டத்துக்கு எது வேண்டுமானாலும் சாப்பிடு" என்றார். அவரும் இந்திய உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டார்.
சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணத்தின் போதுதான் 'தாய்மை'க் குணம் கொண்ட எம்.ஜி.ஆரை பார்த்தேன். அங்கிருந்த பனிமலையை சுற்றிப் பார்க்க எம்.ஜி.ஆருடன் செருப்பு அணிந்தபடி கிளம்பினேன். போன பிறகுதான் 'ஷூ' இல்லாமல் நடக்க முடியாது என்று தெரிந்தது. பனிமலை பயணத்தில் குளிர் தாக்கி நடுங்கவும் ஆரம்பித்து விட்டேன். உடனே அவர் போட்டிருந்த கோட்டை கழற்றி என்னை போட்டுக்கொள்ளச் சொன்னார்.
இப்படி பாதி தூரம் கடந்த நிலையில், 'இனி என்னால் நடக்க முடியாது' என்றேன். என் நிலையை புரிந்து கொண்டவர், என்னை அலாக்காக தூக்கியபடி நடந்து, பாதுகாப்பான இடம் வந்ததும் இறக்கி விட்டார். அவர் மட்டும் அன்றைக்கு இப்படி செய்திராவிட்டால், அந்த குளிரிலேயே விரைத்துப் போயிருப்பேன்."
இவ்வாறு லதா கூறினார்.
நடிப்பு, நடனம் லதா பயிற்சி பெற எம்.ஜி.ஆர். ஏற்பாடு
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 20, 11:15 pm ist
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் லதா நடிப்பது என்று முடிவானதும், அவருக்கு நடிப்பதற்கும், நடனம் ஆடுவதற்கும் வேண்டிய பயிற்சிகளை அளிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார். நடிகர் மனோகர், லதாவின் வீடு தேடி வந்து அவரை நடிக்க அழைத்தார் அல்லவா?
அதன்பின் நடந்தது பற்றி லதா கூறியதாவது:-
"மனோகரின் அழைப்பு என் அம்மாவுக்கு திகைப்பையும், வியப்பையும் மட்டும் அல்ல, அதிர்ச்சியையும் அளித்தது. மவுனமாக இருந்தார். அப்போது மனோகர் கூறினார்:-
"என் நாடக நிகழ்ச்சிகளை படம் பிடிப்பவர்தான், உங்கள் மகள் நாட்டிய நிகழ்ச்சியையும் படம் எடுத்திருக்கிறார். எங்கள் நிகழ்ச்சி படங்களை பிரிண்ட் போட்டு எடுத்து வந்தபோது, அவர் கையில் உங்கள் மகளின் நடன போட்டோவும் இருந்தது. அதை வாங்கிப் பார்த்தேன். உங்கள் மகள் அழகாக இருந்தார்.
சமீபத்தில் எம்.ஜி.ஆர். என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அடுத்து தான் எடுக்க இருக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில், கதாநாயகிகளில் ஒருவராகப் புதுமுகத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், தெரிந்த அழகான பெண் யாராவது இருந்தால் சொல்லும்படியும் கூறியிருந்தார். அது நினைவுக்கு வந்ததும், உங்கள் மகள் படத்தைக் கொண்டு போய் அவரிடம் காட்டினேன்.
'நான் எடுக்கப்போகும் படத்துக்கு இந்தப் பெண் பொருத்தமாக இருப்பாள். எனவே, விவரத்தை சொல்லி அழைத்து வாருங்கள்' என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதன் பேரில்தான் இங்கு வந்திருக்கிறேன்.'' இவ்வாறு கூறிவிட்டு, என் தாயாரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார், மனோகர். "என் பெண்ணை நடிக்க வைப்பதாக இல்லை'' என்றார் அம்மா, பிடிவாதமாக.
மனோகரும் விடவில்லை. "உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், எம்.ஜி.ஆரிடம் நேரடியாக போய் சொல்லி விடுங்கள்'' என்றார். அம்மாவுக்கும் அது சரியெனப்பட்டது. மறுப்பை, நேரில் சென்று நாகரீகமாக சொல்லி விடலாம் என்று முடிவு செய்தார்.
இந்த இரண்டு நாட்களில் எனக்குள் ஒரு மாற்றம். 'எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க எத்தனையோ பேர் விரும்பினாலும், அவர்களுக்கெல்லாம் அத்தனை சுலபத்தில் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. நமக்கோ வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இதை ஏன் விடவேண்டும்' என்று எனக்குள்ளாக கேட்டுக்கொண்டேன்.
அம்மாவிடம் இதுபற்றி மூச்சு விடவில்லையே தவிர, பெரியம்மாவிடம் சொன்னேன். அவர் நடிகையாக இருந்தவர் என்பதால் எம்.ஜி.ஆர். பட வாய்ப்பு அத்தனை சுலபத்தில் யாருக்கும் தேடி வந்து விடாது என்பதை சட்டென புரிந்து கொண்டார். என்னை எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க வைக்க அம்மாவிடம் பக்குவமாக பேசுவதாக சொன்னார்.
மறுநாள் மதியம் மனோகர் வந்தார். 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்' பட நிறுவனத்துக்கு காரில் அம்மாவையும், என்னையும் அழைத்துப் போனார். அங்கே போனபோது படப்பிடிப்பு முடிந்து ஆற்காடு சாலையில் உள்ள ஆபீசில் சாப்பிடப்போயிருக்கிறார் என்றார்கள். அங்கே போனால் டைரக்டர் ப.நீலகண்டன், அசோகன் ஆகியோருடன் தரையில் உட்கார்ந்தபடி எம்.ஜி.ஆர். சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மனோகர் சார் அவரிடம், எங்களை அறிமுகப்படுத்தினார். உடனே எம்.ஜி.ஆர், "முதலில் எல்லோரும் சாப்பிடுங்க'' என்றார்.
நாங்கள் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டே போயிருந்தோம். அதைச் சொன்னதும், "அப்ப பாயசமாவது சாப்பிடுங்க'' என்று சொன்னவர், எங்களுக்கு பாயசம் தருவித்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து வந்ததும், ஏற்கனவே சந்தித்துப் பேசியதுபோல சகஜமாக பேசத்தொடங்கினார் எம்.ஜி.ஆர். அவர் என் அம்மாவிடம், "உங்க ராஜபரம்பரை பற்றி எனக்குத் தெரியும். நான் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் உங்கள் கணவர் என் பக்கத்து பெட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். உங்க பரம்பரைக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு. எங்கள் யூனிட்டில் உங்கள் பெண்ணை கண்ணியத்துடன் நடத்துவார்கள்'' என்றார்.
அம்மா யோசிப்பது தெரிந்தது. அந்த நேரத்தில் என் பக்கம் திரும்பிய எம்.ஜி.ஆர், "உன் விருப்பம் பற்றி எதுவும் சொல்லவில்லையே? வெளிப்படையாக சொல்லலாம்'' என்றார். "எனக்கு விருப்பம்தான். ஆனால், நடிப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாதே'' என்றேன்.
"ஒரு நடிகைக்கு தேவை, சரியான முகபாவனைகள். ஏற்கனவே நடனம் கற்ற அனுபவம் இருப்பதால், உன்னால் கேரக்டருக்கேற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்'' என்றார், எம்.ஜி.ஆர். எனக்கு ஆண்டுப் பரீட்சை நடக்கவிருந்த நேரம் அது. படிக்கத் தயாராக வேண்டும். எனவே, நான், "பரீட்சையை முடித்துவிட்டு நடிக்க வரலாம் இல்லையா?'' என்று கேட்டேன்.
"படப்பிடிப்புக்கு போய் வந்த பிறகு பரீட்சையை பிரைவேட்டாக எழுதிக்கொள்ளலாம்'' என்றார், எம்.ஜி.ஆர். அதுவரை என் பெயர் "நளினி''தான். சினிமாவுக்காக "லதா'' என்று பெயர் சூட்டினார், எம்.ஜி.ஆர்.''
இவ்வாறு லதா கூறினார்.
எம்.ஜி.ஆர். படத்தின் கதாநாயகி லதா என்று முடிவானதும், மறுநாளே படப்பிடிப்பு தளத்துக்கு அவரை வரச்சொன்னார்கள். நடிப்பு பற்றி தெரிந்து கொள்வதற்காக இது எம்.ஜி.ஆரின் ஏற்பாடு. எம்.ஜி.ஆர். நடித்த "ரிக்ஷாக்காரன்'' படம், அப்போது தயாரிப்பில் இருந்தது. தினமும் மஞ்சுளா நடிப்பதை சற்றுத் தொலைவில் நின்றபடி கவனிக்கலானார், லதா.
இதற்கிடையே படப்பிடிப்பை மட்டும் பார்த்துவிட்டு போகிற மாதிரி இல்லாமல், சினிமா நடனங்களிலும் லதாவுக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர். பிரபல டான்ஸ் மாஸ்டர்கள் சோப்ரா, புலியூர் சரோஜா, ரகுராம் ஆகியோர் லதாவுக்கு நடனப்பயிற்சி கொடுத்தார்கள். சினிமா நடனத்திலும் லதா தேறிவிட்டார் என்று எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டதும், லதாவின் ஆட்டம் பார்க்க ஒரு நாள் செட்டுக்கு வந்தார். ஆனால் எம்.ஜி.ஆர். வந்த அன்று அவரைப் பார்த்ததும் லதாவால் இயல்பாக நடனமாட இயலவில்லை.
அதுபற்றி லதா கூறுகிறார்:- "எம்.ஜி.ஆர். வந்து என் நடனம் பார்க்க விரும்பியதும் எனக்குள் உதறல். கால்களை கட்டி வைத்துக் கொண்டதுபோல் உணர்ந்தேன். நடனம் பார்த்து என்ன சொல்வாரோ என்ற பயம்தான். நான் அவரிடம், "உங்களை பார்த்ததும் எனக்கு ஆடவரலை'' என்றேன். அவரோ, "அப்படியானால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ஹீரோவை மாற்றி விடலாமா?'' என்று வேடிக்கையாக கேட்டார். பிறகு அவரே சகஜமாக பேசி, பயம் தெளிவித்து இயல்பாக நடனமாட வைத்தார்.''
உலகம் சுற்றும் வாலிபனில் லதா அறிமுகம்
பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 19, 10:38 pm ist
எம்.ஜி.ஆர். தயாரித்து டைரக்ட் செய்த "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் அறிமுகமானவர் லதா. எம்.ஜி.ஆருடன் 16 படங்களில் இணைந்து நடித்தார்.
"உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் 3 கதாநாயகிகள். மஞ்சுளா, சந்திரகலா, லதா ஆகிய மூவரில் மஞ்சுளா எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரனில் அறிமுகம் ஆனவர். சந்திரகலா, சிவாஜி நடித்த "பிராப்தம்'' படத்தின் மூலம் பட உலகில் காலடி எடுத்து வைத்தார்.
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த லதா, "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்தது எப்படி? லதாவே கூறுகிறார்:-
"என் தாயார் லீலாராணி, சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் கான்வென்டில் படித்தவர். என் தந்தை ராமநாதபுரம் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் சுதேச சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு, ஆட்சிப்பொறுப்பை மத்திய அரசே ஏற்றது. அந்தக் காலக்கட்டத்தில், ராஜாஜி மந்திரிசபையிலும், காமராஜர் மந்திரிசபையிலும் என் தந்தை அமைச்சர் பதவி வகித்தார்.
என் பெரியம்மா கமலா கோட்னீஸ், இந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
எனக்கு ஒரு அக்கா; 3 தம்பிகள்; ஒரு தங்கை. என் அக்காவும், நானும் சென்னை ஹோலிகிராஸ் கான்வென்டில் படித்தோம்.
நான்கு வயதிலேயே, எனக்கு நடனம் மீது ஆர்வம் வந்துவிட்டது. வீட்டில் ரேடியோவில் கேட்கும் பாட்டுக்கு நானாக ஆடுவேன். பெரியம்மா நடிகையாக இருந்ததால், நான் நடனம் ஆடுவதை அவர் உற்சாகப்படுத்தனார்.
பெரியம்மா அதோடு நின்று விடாமல், பிரபல நடனக் கலைஞர் வழுவூர் ராமையா பிள்ளையிடம் முறைப்படி நான் நடனம் கற்க ஏற்பாடு செய்தார். பெரியம்மா வீடு, அப்போது தி.நகரில் இருந்தது. அங்குதான் மாஸ்டர் வந்து எனக்கு நடனம் கற்றுத் தருவார்.
சினிமாவில் எனக்கு அப்போது பிடித்த ஒரே நடிகை பத்மினி. அவர் நடனம் என்றால் எனக்கு உயிர். பத்மினி நடித்த படம் பார்த்தால், அன்று முழுக்க படத்தில் அவர் ஆடியபடியே ஆட வீட்டில் முயன்று கொண்டிருப்பேன்.
என் அக்காவுக்கு நடனம் என்றால் ஆகாது. மாஸ்டரை பார்த்ததும் ஓட்டம் பிடித்து விடுவாள்! நடனத்தில் தேர்ந்ததும், பள்ளி விழாக்களில் நடனம் ஆடத் தொடங்கினேன். நடனத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதல் பரிசை பெறும் மாணவியாக இருந்ததால், பள்ளியிலும் எனக்கு நல்ல பெயர். அந்த அளவுக்கு எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக இருப்பேன்.
அக்கா எனக்கு நேர் எதிர். எந்த நேரமும் அரட்டைதான். இதனால் படிப்பில் பின்தங்கிப்போன அக்கா, தேர்வில் பெயிலாகி என் வகுப்பிலேயே வந்து சேர்ந்து கொண்டார். நான் முன் பெஞ்சில் அமைதியின் வடிவாகவும், அக்கா பின்பெஞ்சில் அரட்டைத் திலகமாகவும் அம்மா எங்களிடம் பாசம் காட்டிய அளவுக்கு கண்டிப்பாகவும் இருந்தார். பள்ளியில் எங்காவது சுற்றுலா அழைத்துச் சென்றால்கூட பாதுகாப்பு கருதி அம்மாவும் எங்களுடன் வந்திருக்கிறார்.
ஒருமுறை பள்ளியில் `ஹெர்குலிஸ்' என்ற ஆங்கிலப்படம் பார்க்க அழைத்துச் சென்றார்கள். படம்தானே என்று அம்மாவிடம் சொல்லவில்லை. எங்களைக் காணாமல் தேடித் தவித்த அம்மாவுக்கு, அப்புறம்தான் நாங்கள் பள்ளியில் இருந்து படம் பார்க்கப்போன விஷயம் தெரிந்திருக்கிறது. வீட்டுக்குப் போனதும் அம்மா அடி பின்னிவிட்டார். அம்மாவுக்கு தகவல் தெரிவிக்காமல் படம் பார்க்கப் போனதால் ஏற்பட்ட கோபம், அம்மாவை ஆத்திரத்தின் உச்சிக்குக் கொண்டுபோய் விட்டது.
எங்களை எப்படி கண்டிப்பாக வளர்த்திருக்கிறார்கள் என்பதற்காக இதைச் சொல்ல வந்தேன். பத்தாவது படிக்கும்போது `கதக்' நடனமும் கற்றுக்கொண்டேன். கிருஷ்ணகுமார் மாஸ்டர்தான் கற்றுக்கொடுத்தார். நடனப் பள்ளியில் தேறியபோது, ராமராவ் கல்யாண மண்டபத்தில் நடனமாடினேன்.
பரதம், கதக் ஆடியதோடு வெரைட்டியாக சில நடன வகைகளையும் ஆடிக்காட்டினேன். நடனம் சிறப்பாக நடந்து முடிந்தது. அத்தோடு அதை மறந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன்.
ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்தது. நான்தான் எடுத்துப் பேசினேன். எதிர் முனையில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் பேசினார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், "சினிமாவில் நடிப்பாயா?'' என்று கேட்டார்.
நான், `நடிப்பதாக இல்லை' என்று சொல்லி, போனை வைத்து விட்டேன். அப்போது எங்கள் வீடு அடையாறு போட் கிளப்பில் இருந்தது.
மறுநாள் மாலை நான் பள்ளிக்கு போய்விட்டு வீடு திரும்பியபோது, பிளைமவுத் காரில் வந்து இறங்கினார், மனோகர். வந்தவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். அம்மாவிடம் "எம்.ஜி.ஆர். தனது படத்தில் உங்கள் மகளை அறிமுகப்படுத்த விரும்புகிறார்'' என்று சொன்னார். அம்மா முகத்தில் அதிர்ச்சி.
குமுதம் -சுனிலிடம் கேளுங்கள் - கேள்வி /பதில்
http://i61.tinypic.com/28sldt0.jpg
DR. A.P.J. ABDUL KALAM PASSED AWAY. SAD DAY:
https://www.youtube.com/watch?v=bcjQWCL-A80
சென்னை சத்யா ஸ்டுடியோவில் நேற்று (26/07/2015) நடைபெற்ற நிகழ்ச்சியில்
இதயக்கனி ஆசிரியர் திரு. எஸ். விஜயன் வெளியிட்ட " எம்.ஜி.ஆர். கதை "
என்கிற நூலின் முன்புற, பின்புற மற்றும் உட்பக்க தோற்றங்கள் நமது நண்பர்களின்
பார்வைக்கு .
http://i58.tinypic.com/2096b68.jpg
http://i58.tinypic.com/14kk66h.jpg
http://i58.tinypic.com/2mqti5i.jpg
http://i59.tinypic.com/rveh76.jpg
சென்னை நிருபர்கள் சங்கம் , சேப்பாக்கத்தில் , உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர்
திரு. பி.எஸ். ராஜு ஏற்பாடு செய்த, நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த " குலேபகாவலி "
திரைப்படத்தின் வைர விழா , நேற்று (26/07/2015) விமரிசையாக கொண்டாடப்பட்டது .விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக , குலேபகாவலி திரைப்பட வெற்றியை பறைசாற்றும்
வகையில் ,சாதனை மலர் வெளியிடப்பட்டது. அதன் பதிவுகள் நண்பர்களின்
பார்வைக்கு.
http://i57.tinypic.com/2wnz447.jpg
http://i58.tinypic.com/213lxyx.jpg
http://i61.tinypic.com/2s1ndjo.jpg
நண்பர் திரு.ரவிகிரன் சூர்யா அவர்களின் நடிகை லதா பேட்டி பற்றிய செய்திகள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானவையாக இருப்பினும் சுவை குன்றாமல் இருந்தது . பதிவுகளுக்கு நன்றி.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் நடிகை லதா , உலகம் சுற்றும் வாலிபன் முதல்
அவசர போலிஸ் 100 வரை 13 படங்களில் நடித்திருந்தார் . 16 படங்கள் என்பது தவறு.என்பது நண்பரின் கவனத்திற்கு .
ஆர். லோகநாதன்.