http://i1087.photobucket.com/albums/..._002066044.jpg
தவப்புதல்வன் (தியேட்டரில் கே.ஆர்.விஜயா நடிகர் திலகத்தை எதிர் பார்த்திருக்கும் காட்சி)
http://i1087.photobucket.com/albums/..._002076491.jpg
http://i1087.photobucket.com/albums/..._002078693.jpg
Printable View
http://i1087.photobucket.com/albums/..._002066044.jpg
தவப்புதல்வன் (தியேட்டரில் கே.ஆர்.விஜயா நடிகர் திலகத்தை எதிர் பார்த்திருக்கும் காட்சி)
http://i1087.photobucket.com/albums/..._002076491.jpg
http://i1087.photobucket.com/albums/..._002078693.jpg
அஞ்சல் பெட்டி 520 (சாந்தியில் தங்க சுரங்கம் ஓடிய சமயம்)
http://i1087.photobucket.com/albums/...1355087/12.jpg
http://i1087.photobucket.com/albums/...1355087/11.jpg
'தங்கச் சுரங்கம்' படத்தின் கட் -அவுட்டில் தலைவருக்கு மாலை அணிவித்திருப்பதைக் காணுங்கள்.
http://i1087.photobucket.com/albums/...1355088/13.jpg
எமனுக்கு எமன் (எமனாக நடிகர்திலகத்தின் அலம்பல் காட்சி)
http://i1087.photobucket.com/albums/...1355089/18.jpg
http://i1087.photobucket.com/albums/...1355089/17.jpg
http://i1087.photobucket.com/albums/...1355089/16.jpg
நெஞ்சைப் பிளக்கும் செய்தி வாசு சார்..
ராஜேஷ், உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. தாங்கும் துயரமா அது.. சில சமயம் இறைவனை மனம் வெறுக்கிறது என்கிறோமே.. அதற்கு இது ஒரு காரணம். அதுவும் அவ்வளவு இளைய வயதில் ... கொடுமை...
ராஜேஷ், இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை இறைவன் உங்களுக்கு அளிக்க வேண்டும். இதிலிருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். தங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மரணம் கொடியது.
ஒத்துக் கொள்ளவே முடியாத
அந்தக் கொடுமையை மிக
அருகே சந்தித்துத் துன்புறுவது,
மரணத்தைக் காட்டிலும்
கொடியது.
திரு.ராஜேஷ்குமார் அவர்களின்
கண்ணீரைத் தடுக்க இயலாத
நம்மால் ,துடைக்க முடியும் என்பதொரு ஆறுதல்.
துடைப்போம்.
சிவகாமியின் செல்வனின் வெற்றியை தடுக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும், நமது மக்கள்தலைவரின் ஆசியோடும், ரசிகர்களின் பேராதரவோடும் 100வது நாளை நோக்கி மாபெரும் வெற்றிநடைபோடும் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் 9வது வாரத்தையொட்டி ஒட்டப்பட உள்ள சுவரொட்டி...
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...2e&oe=579B19D1
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
சரித்திரம் படைக்கும் சரித்திர நாயகனின் சிவகாமியின் செல்வன் 60வது நாளையொட்டி நாளிதழில் வெளியாகும் விளம்பரம். மதுரை சிவா மூவீஸாருக்கும், வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...02&oe=57E7A112
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
நமது மக்கள்தலைவரின் புகழை தனது கவிதை நடையில் உலகெங்கும் உள்ளவர்கள் உணரும் வகையிலும், படிப்பவர்கள் உணர்ச்சிவசப்படும் வகையிலும் எழுதி வரும் திரு.ஆதவன் ரவி அவர்களின் புதல்வி செல்வி.ஹரிதா அவர்கள் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 481 மதிப்பெண் பெற்றுள்ளார் என்பதை தெரிவித்துக் கொண்டு செல்வி ஹரிதா அவர்களுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள்தலைவர் சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
http://www.sivajiganesan.in/Images/260516_4.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
27.05.2016 அன்று பிறந்தநாள் காணும் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை தலைவரும்,அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரும், டெம்பிள்சிட்டி இளையதிலகம் பிரபு குரூப்ஸ் செயலாளருமான திரு.நா.ரமேஷ்பாபு அவர்கள் எல்லா வளமும் பெற்று தனது சுற்றம் சூழ நீடூழி வாழ உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துகிறோம்.
http://www.sivajiganesan.in/Images/260516_6.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் இளையதிலகம் பிரபு அவர்கள் கதாநாயகனாக நடித்து, நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பேரன் துஷ்யந்த் அவர்கள் தனது பெயரில் தயாரிக்கும் முதல் படமான மீன்குழம்பும் மண்பானையும் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா 28.05.2016 சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால் இது இளையதிலகத்தின் 200வது படம் என்று கூறப்படுகிறது. மேலும், நமது மக்கள்தலைவரின் பேரன் துஷ்யந்த் அவர்களின் மகன் கலையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.
http://www.sivajiganesan.in/Images/260516_5.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
சாந்தி வெறும் திரை அரங்கம் அல்ல --சிவாஜி ரசிகர்களின் சிந்தனையின் பிறப்பிடம்
சாந்தி திரைஅரங்கம் சிவாஜி ரசிகர்களின் கோவில் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை நான் அலுவல் விஷயமாக சென்னை வரும்போதெல்லாம் அங்கு வராமல் இருந்ததில்லை - நான் கடந்த 1988ம் வருடம் முதல் சாந்தி திரை அரங்கத்திற்கு வருகை புரிந்திருக்கிறேன் -எனக்கு மாதத்தில் 2 நாட்கள் கண்டிப்பாக சென்னையில் தான் வேலை ஆதலால் அலுவல் முடிந்து மாலை சரியாக 6 -7 மணிக்கு ஆஜராகி விடுவேன் - இதற்காகவே மவுண்ட் ரோடு ஹோடெல்லில் தான் ரூம் போடுவேன் - சாந்தி திரைஅரங்க நண்பர்கள் எழில்(தற்போது இவர் இல்லை), பாபு , மோகன் ,துவரகேஷ், ராமஜெயம், நாகராஜ், இதயவேந்தன் நாராயண், எஸ்கே விஜயன் முதலானோர் என்னுடைய நீண்ட நாள் நண்பர்கள் - நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு கல்யாண விசேஷத்திற்கு சென்னை வந்தபோது 1983ம் வருடம் சந்திப்பு வெளிவந்த நேரம் அசந்து விட்டேன் அலங்காரத்தை பார்த்து - தயவுசெய்து யாரிடமாவது அந்த போட்டோ இருந்தால் பதிவிடவும்
அதற்கு பிறகு நான் அசந்து போனது ராஜகுமாரன் படத்திற்கு வைக்கப்பட்ட ஸ்டார் அலங்காரம் என்னை மிகவும் கவர்ந்தது - இதுவும் யாரிடமாவது போட்டோ இருந்தால் பதிவிடவும் -
சாந்தி அரங்கத்திற்கு 6 மணிக்கு வந்து பேசிவிட்டு சரியாக 8.30 மணி அளவில் அனைவரும் அருகில் அண்ணா திரைஅரங்க வாசலில் உள்ள டீ கடையில் காபி குடித்து விட்டு கிளம்பிவிடுவோம் - போன மாதம் வரை இது கடை பிடிக்க பட்டது
நான் மிகவும் ஆசையாக இருந்தது அரங்கம் மூடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாவது தலைவரின் முக்கியமான 4 படங்களை வாரம் ஒன்றாக திரையிட்டு ஆசைதீர அனுபவித்து பார்க்க வேண்டும் என்றிருந்தேன் -அது நிறைவேறாமல் போனதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது - கடைசி ஒரு வாரமாவது தலைவர் படத்தை போட்டு விட்டு பின்பு மூடியிருக்கலாம்
ஆல்பர்ட் தியேட்டரில் ராஜா படம் ஓடியபோது நாள் முழுதும் சாந்தியில் பொழுதை கழித்து பின்பு மாலையில் படம் பார்க்க சென்றது - தேவி பாரடைசில் தங்கபதக்கம் படம் பார்ப்பதற்காக ஞாயிறு சென்னை வந்து பகல் முழுதும் சாந்தியில் இருந்து விட்டு மாலை படம் பார்க்க போனது -சின்னத்தம்பி 105 வது நாளன்று கண்ட மக்கள் கூட்டம் --பிள்ளைக்காக படம் ஓடிக்கொண்டிருந்தபோது நம் ரசிகர்கள் பொது மக்களிடம் படம் எப்படி என்று கேட்டது --வாழ்க்கை படம் அலங்காரில் பொசுக்கென்று எடுக்கப்பட்டதை எதிர்த்து நம் ரசிகர்கள் ஒட்டிய கண்டன போஸ்டரை சாந்தியில் பார்த்தது - வெற்றிவிழா படத்திற்கு பிரபு கடவுட்டிற்கு ரசிகர்கள் மாலையிட்டதை பார்த்தது --டூயெட் படத்திற்கு லேசர் லைட்டில் போர்டு வைத்தது -அறுவடை நாள் படத்திற்கு அப்போதைய பிரபு மன்ற தென்சென்னை தலைவர் திரு.காதர் அவர்கள் சாந்தியிலிருந்து ரசிகர்களுடன் அண்ணாசாலை சந்திப்பில் வைக்கப்பட்ட கட்டவுட்டிற்கு மாலை அணிவித்தது
இப்படி என் மனதை விட்டு நீங்காத சாந்தி திரைஅரங்க அனுபவங்கள் நிறைய உள்ளது - கண்டிப்பாக சாந்தி அரங்கம் என்னதான் புதுபிக்கபட்டாலும் பழமையின் பெருமையை யாராலும் திருப்பி கொடுக்க முடியாது
பல ஆயிரம் சிவாஜி ரசிகர்களின் உணர்ச்சிக்குமுறல் அடங்க நாளாகும்
சுந்தரராஜன் சார்...
எனது அன்பு மகளின் கல்விச்
சிறப்பை, சிறப்பு மிக்க நம்
www.sivajiganesan.in இணையத்திலும், நமது
திரியிலும் வெளியிட்டு உலகறியச் செய்த தங்களின்
உன்னத செயலுக்கென்
உள்ளம் சொல்லும் நன்றிகள்
கோடி.
ராஜேஷ் அவர்களின் துயருக்கு வருந்துகிறோம். காலம்தான் அவரை தேற்றி ,துயரிலிருந்து மீட்க வேண்டும்.
உத்தம புத்திரன்.-1958
எதிர்மறையான கதாபாத்திரங்கள், திரையுலகம் தோன்றிய போதே கூடவே தோன்றி விட்டது. எக்க சக்க வில்லன் பாத்திரங்கள். (ஒரு ஹீரோவிற்கே நான்கைந்து உண்டு). ஆனால் எவ்வளவு பாத்திரங்கள் மனதில் நிலைத்து வென்றுள்ளன? பிறக்கும் போதே (திரையுலகில்) கதாநாயகனாகவே பிறந்த ஒரு நாயகன், எதிர்மறை (கெட்டவன் ) கதாபாத்திரத்தை ஏற்று இன்றளவும் அதை ஒரு cult status என்று சொல்லும் அளவில் வைத்திருப்பது (நடிகர்திலகம், கமல்,ரஜினி உள்ளிட்டு இந்த பாத்திரத்தை சிலாகிக்காத திரையுலக பிரபலங்களே இல்லை), அந்த மேதையின் நடிப்பு திறன் என்று ஒரே வார்த்தையில் அடக்க, கங்கையை கமண்டலத்தில் அடைத்த அகத்தியனே உயிரோடு வந்தாலும் முடியாது. அந்த மகா பாத்திரத்தின் இமாலய வெற்றிக்கு ஒரே காரணம் அது உளவியல் பூர்வமாக படைப்பு பெற்று (நன்றி ஸ்ரீதர்), chekhov பாணியில் உளவியல் பூர்வமாக நடிகர்திலகத்தால் அணுக பட்டு, ஒவ்வொரு அணுவிலும் அதனை உள்வாங்கி அந்த மேதை புரிந்த விந்தையே அந்த விக்ரமன் என்னும் பாத்திரம்.(உத்தம புத்திரன்.)
முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?
சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான் ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .
இதை உள்வாங்கிய நடிகர்திலகத்தின் நடிப்பை நன்றாக விவரமாக chekhov பள்ளியின் துணை கொண்டு ஆராய்வோம்.
முதல் முழு தேவை not to imitate but to interpret . சும்மா பொத்தாம் பொதுவான வில்லன் தன்மையில் நடிக்காமல்,கதாபாத்திரத்தின் பின்னணி,தேவை, மனநிலை,வெளியீட்டு தன்மை, சமய சந்தர்ப்பந்திற்கு தகுந்த உள் -வெளி ,அக-புற வெளியீடுகள் என்று நுண்ணியமாக ஆராய்ந்து,தன் வய படுத்தி, தன் திறமையால் perfect execution என்று சொல்லத்தக்க சாதனையை நிகழ்த்தினார் அந்த ஒப்புயர்வில்லா ஒரே மேதை.
இனி இந்த பாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை நடிகர்திலகம் தேர்ந்தெடுத்திருக்கும் அதிசயத்தை பார்ப்போம். அதிக மனோதத்துவ கவனிப்பு,அவதானம் கொண்ட,கற்பனை வளம் மிகுந்த , அந்த பாத்திரத்தின் தேவை என்ன,ஆசை என்ன, முதல் நோக்கம் என்ன,அதற்கு தேவையான sensitivity ,atmosphere ,quality ,sensation எல்லாம் கொண்டு,strong but not tense , hand and arm movement radiated into the entire body movement with definite &Archetypal என்னும் அம்சங்களை விவரிக்க போகிறேன்.
நடை- விக்ரமன் ஒரு வளர்ச்சி பெற்ற அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை(impulsive ).இன்றே,இப்போவே ரகம். அந்த நடையில் ஒரு ராஜாவின் திமிர் மட்டுமல்ல, உதைத்து உதைத்து நடப்பதில், ஒரு அடம்,எதிரில் வருவதை உதைத்து தள்ளும் பிடிவாதம்,நடையில் ஒரு definite அழுத்தம் வேறு கொடுப்பார்.மிக மிக வேகமான ஒரு குழந்தையின் energy level கொடுப்பார்.
கை அசைவுகள்- மிக மிக restless ஆன ஒரு jerky வேகம். நடையோடு ஒத்திசைவு கொண்டு தன் நோக்கம்,ஆசை இவைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கும்.ஆசை ,காமம் இவற்றில் அடைய வேண்டியவற்றில் ஒரு பரபரப்பு, இரையை அடையும் ஒரு புலியின் பசி கொண்ட ஒரு வேகம், தனக்கு பிடிக்காதவற்றை உடனே நிறுத்த விரும்பும் braking sudden stop movement , கால்கள் மிதிக்க கைகள் முன்னுக்கு சுழன்று வரும் ஒரு impulsive அவசரம், எதுவுமே பொருட்டில்லை விடு என்ற விரல்களின் அலட்சிய உதாசீனம்,டென்ஷன் மிகுந்த தருணங்களில் இலக்கில்லாமல் சுழலும் வேகம் ,முடிவெடுக்க முடியாத போது தவிக்கும் உதவி தேடும் விழைவு என்று கை அசைவுகளில் இந்த பாத்திரத்திற்கே ஒரு புது பரிமாணம் கிடைக்க செய்வார்.
கண்கள்- விக்ரமனின் இலக்கில்லாமல் அலை பாயும் கண்கள், காம வேட்கை,அகந்தை, அலட்சியம்,யாருக்காவது கெடுதல் நினைக்கும் போது ஒரு sadism நிறைந்த spark ,ஆபத்து வரும் போது நிலையாத தவிப்பு, முடிவெடுக்க நேரும் தருணங்களில் ஒரு குழப்பம் ,கிடைத்தது நிறைவேறும் போது ஒரு குழந்தைத்தனமான சந்தோஷ மின்னல், கிடைக்காத போது temper tantrum பாய்ச்சும் கண்கள்.
உடல் மொழி- ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.
குரல்- நடிகர்திலகத்தின் குரல் வளம், அது புரியும் மாயம் ,tonal difference , modulation ஊரறிந்த உலகறிந்த ஒன்று. ஆனால் இந்த படத்தில், ஸ்ரீதரின் மிக குறைந்த sharp வசனங்களை அவர் கையாண்டது ,அதற்கு பிறகு அவரே செய்யாதது. ஒரு mid -pitch tonal modulation கொண்டு, எள்ளல், அகந்தை, குழப்பம்,impulsive braking conclusion ,ஒரு குழந்தை தனமான குதூகலம்,energy என்று உடல் மொழியுடன் இணைந்த அற்புதமான ரசவாதம்.
இதை வைத்து, அவர் அந்த கதாபாத்திரத்தை வார்த்த அழகு ..........
விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.
அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.
தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.
தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.
ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.
ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.
மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.
இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.
விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.
விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.
இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.
கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.
இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).
குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.
அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.
ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...
ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...
பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..
சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....
இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?
OUR sicere condolences to RAJESH and family for the lossof your dearest.
may god give you enough strength to comeover fom the loss;
My Heartfelt condolences to Mr Rajesh. May god give enough power to overcome this unbearable
loss.
துணைவியாரை இழந்து வாடும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இரங்கல்கள்
இந்தியா சென்றிருந்த காரணத்தினால்
10 நாட்களாக நான் திரியை பார்வையிடமுடியவில்லை
துணைவியை இழந்த திரு ராஜேஸ் அவர்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்
நண்பர் செந்தில்வேல் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
திரமண நாள் கண்ட நண்பர் முரளி அவர்களுக்ககு
இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்
சிவாஜி ரசிகர்களுக்கு இன்னும் 10 மணி நேர
அவகாசத்தில் ஓர்
இனிய அதிர்ச்சிப் பதிவு
காத்திருக்கிறது.
காத்திருங்கள்
:idontgetit::confused2:
துணைவியை இழந்த திரு ராஜேஸ் அவர்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்
துணைவியை இழந்த திரு ராஜேஸ் அவர்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...2d&oe=579A1932
Congratulations to Prabhu Ganesan for completing 200 films in 34 years on an average of 6 films ..
A very impressive performance.
So many new directors, co-stars, technicians he had worked with.
So many producers have wished him for the complete co-operation he has rendered all these years!
Well done Prabhu
அன்பின் கோபால்Quote:
சிவாஜி ரசிகர்களுக்கு இன்னும் 10 மணி நேர
அவகாசத்தில் ஓர்
இனிய அதிர்ச்சிப் பதிவு
காத்திருக்கிறது.
காத்திருங்கள்
எனது மேற்படி பதிவை பதிவிடுவதற்கு 2 மணித்தியாலங்கள்
முன்னதாகத்தான் இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தேன்
பிரயாண அலைச்சல் உடல் அலுப்பு எல்லாம் சேர்ந்து
என்னால் விபரமாக எழுதமுடியாமல் போய்விட்டது
பல வருடங்களாககளாக நான் தேடிக்கொண்டிருந்த
விளம்பரம் ஒன்று நான் இந்தியா சென்றிருந்தபொழுது
என் கைக்கு கிடைத்தது.அதனை பதிவிடுவது பற்றித்தான்
குறிப்பிட்டிருந்தேன்,அதனை விபரமாக எழுதமுடியாமல் போய்விட்டது
மன்னிக்கவும்
பலரும் பார்த்திராத
பலருக்கு ஆச்சரியம்கலந்த
இன்ப அதிர்ச்சி தரும்
விளம்பரம்
(மறுபக்கம் ஒருவருக்கு மூச்சுத் திணறும் அதிர்ச்சி)
இலங்கையில் பராசக்தி 38 வது வார விளம்பரம்
http://i67.tinypic.com/1mbsl.jpg
http://i67.tinypic.com/2aahkiv.jpg
நாளை பாடல் வெளியீட்டு விழா காணும் மீன்குழம்பும் மண்பானையும் திரைப்படம் இளையதிலகத்தின் 200வது படமாகும். பாடல் வெளியீட்டு விழா சிறக்க அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.
படத்தின் சிறப்பு
1.இளையதிலகத்தின் 200வது படம்.
2. தளபதி ராம்குமாரின் புதல்வன் நமது மக்கள்தலைவரின் பேரன் துஷ்யந்த் தயாரிக்கும் முதல் படம்.
3. நமது மக்கள்தலைவரின் பேரனின் மகன் (துஷ்யந்த் அவர்களின் மகன்) நடிக்கும் முதல் படம்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...5e&oe=57CFBDC7
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மறு மறு வெளியீட்டிலும் மாபெரும் சாதனை
கர்ணன் 50 வது நாள்
http://i67.tinypic.com/2yl5r0l.jpg
Wish you many more happy returns of the day Mr Raghavendra Sir
Regards
From Dinamani,
சிவாஜி கணேசனும் கே. சங்கரும் நீண்ட கால சிநேகிதர்கள். பி.எஸ். வீரப்பாவின் சூப்பர் ஹிட் படைப்பு ’ஆலயமணி’. கலைத் தொழிலிலும் அவர்களை ஒன்று சேர்த்தது.
அதே நேரம் எம்.ஜி.ஆர், ஜி.என்.வேலுமணியை அனுப்பிக் கையோடு சங்கரை வரவழைத்தார்.
‘ஏன் எதுக்கு எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிடறார்... சிவாஜியோட புது ப்ராஜெக்ட் ஆரம்பமாயிடுச்சே, அப்புறம் வரேன்னு சொல்லுங்களேன்.’ என்றார் அப்பாவியாக.
‘அதை நீங்களும் எம்.ஜி.ஆரும் நேர்ல பேசித் தீர்த்துக்குங்க.’
வேலுமணி விடமாட்டார் போலிருந்தது.
1962ல் உச்சக்கட்ட யுத்தம் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் நிலவியது. தினந்தோறும் விசிறிகளின் விஸ்வரூபம்! ரசிகர்களின் மண்டைகள் உடைந்த கதை பத்திரிகைகளில் வராத நாளே கிடையாது.
சங்கருக்கு சங்கடம்.
பயமும் குழப்பமும் போட்டியிட்டன. அது ஒரு காலை நேரம். வீட்டிலேயே சிற்றுண்டி அருந்தி விட்டு சங்கர் கிளம்பினார்.
ராமாவரம் ராமச்சந்திரன் சங்கரை மறுபடியும் டிபன் சாப்பிட வற்புறுத்தினார்.
ஏற்கனவே ஆயிற்று என்றாலும் ஆளை விடவில்லை. உண்ட பிறகே பேச்சு வார்த்தை என்றார். அஜீரணம் ஆனாலும் பரவாயில்லை என்று சங்கர் இலை முன்பு அமர்ந்தார்.
‘சார் ஆலயமணில முன்னாலேயே கமிட் ஆயிட்டேன். இப்ப உங்க படத்தையும் எப்படி ஒத்துக்கறது...?’
சங்கரின் வாய்க்குள் வார்த்தைகள் சடுகுடு ஆடின.
பார்க்க மிக எளிமையாகக் காட்சி தரும், சபைகளில் இனிமையாகப் பழகும் எம்.ஜி.ஆர். உள்ளுக்குள் சமர்த்தர்.
எம்.ஜி.ஆரின் சொல்லை மீறுவதும், காலை இடறுவதும் வெளியே தெரியாத விளைவுகளை சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கச் செய்யும்.
சங்கர் தன் பதில் எம்.ஜி.ஆருக்குப் போதுமானது என்று புறப்பட ஆயத்தமானார். சங்கரின் பணிவையும் பவ்யத்தையும் எம்.ஜி.ஆர். கிண்டலடித்தார்.
‘இந்த ஆக்டிங்லாம் இங்க வெச்சுக்காதீங்க. நீங்கதான் பணத்தோட்டம் டைரக்ட் பண்றீங்க...!’
எம்.ஜி.ஆர். அடித்துப் பேசினார். சங்கருக்கு சம்மதிப்பதைத் தவிர வேறு யோசனை எப்படி வரும்?
ஓர் படைப்பாளியைக் கைது செய்து சிறைப்படுத்தாத குறையாக சங்கரை பணத்தோட்டத்தில் சிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.
ஆலய மணி, பணத்தோட்டம் இரண்டிலும் ஒரே நாளில் வேலை செய்ய வேண்டி சங்கரும், நாயகி சரோவும் வாஹினியில் மாறி மாறி காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரையில் கஷ்டப்பட்டார்கள்.
நவம்பர் 23 - மாலை. கே. சங்கரை தொலைபேசி கூவிக் கூவி அழைத்தது. மறுமுனையில் எம்.ஜி.ஆர்.
‘சங்கர் நீங்கள் பெரிய வெற்றியைப் பெற்று விட்டீர்கள். சூப்பர் ஹிட் படத்தைக்கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!’
அன்று ஆலயமணி ரிலீஸ். நடிகர் திலகத்தின் படம் நூறு நாள்களைக் கடந்து வசூலில் சாதனை புரியப் போகிறது... என்கிற ஆசீர்வாதம் முதன் முதலில் பொன்மனச் செம்மலின் வாயிலிருந்து!
எம்.ஜி.ஆரின் வாக்குப் பலித்தது.
சென்னையில் பாரகன், ஸ்ரீகிருஷ்ணா, உமா, நூர்ஜஹான் என நான்கு தியேட்டர்களில் 100 நாள்கள் கண்ட முதல் படம் என்கிற அழியாப் பெருமையை அடைந்தது ஆலயமணி!
பாரகன் டாக்கீஸில் நிறைவாக 20 வாரங்களைக் கடந்தது.
ஆலயமணி தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறுபட்ட ஆங்கில பாணி படம். மன வக்கிரம் நிறைந்த தியாகராஜன் என்ற புதுமையான வேடம் சிவாஜிக்கு மட்டும் அல்ல. கோலிவுட்டுக்கும் புதுசோ புதுசு!
பி. எஸ். வீரப்பாவின் புகழ் பாடிய ஒரே சாதனைத் தயாரிப்பு!
‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா’ எஸ்.எஸ். ஆரும் - சரோவும் எடுத்த எடுப்பில் ஆடிப்பாடும் லவ் டூயட் சஸ்பென்ஸை ஏற்படுத்தும்.
சந்தர்ப்பவசத்தால் சரோ சிவாஜி கணேசனின் காதலி ஆவார். ஜாவர் சீதாராமனின் வெகு நுட்பமான திரைக்கதை.
‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’ சரோ ஆடிப்பாடி நடிக்கும் சூப்பர் ஹிட் பாடல். அக்காட்சி முடிந்ததும், சிவாஜியை சந்திக்க நேரும் சரோ, அவர் தனது எஸ்டேட் முதலாளி என்பதை அறியாமல் கேலி செய்வார்.
நிஜம் தெரிந்ததும் சரோ எப்படிக் கிண்டல் அடித்தாரோ..., அதை அப்படியே சிவாஜி அபிநயித்துக் காட்டுவது அரங்கை அமர்க்களப்படுத்தும் சுவாரஸ்யம்.
பின்னணி குரலில் பேக்ரவுண்ட் வாய்ஸில் ’ஹம்மிங்’குக்கு பிள்ளையார் சுழி போட்ட முதல் படம் ஆலயமணி.
‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’ டூயட்டில் எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் ஒலிக்கும். சரோவுக்கு ஈஸ்வரி பாடி சூப்பர்ஹிட் ஆன முதல் பாடலும் அதுவே.
சிவாஜி கணேசனின் தூரிகையில் சகுந்தலையாக சரோ சில விநாடிகள் தோன்றுவார்.
ஆலயமணியில் திருப்பம் ஏற்படுத்தும் மரணப்பாறை காட்சிகளை ‘வர்க்கலை’ என்கிற ஊரில் படமாக்கினார்கள்.
க்ளைமாக்சில் சிவாஜி - சரோ இருவரும் இறந்து விடுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. நல்ல வேளையாக ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் ஆலயமணி சுபமாக முடிந்தது.
1962ல் சிவாஜி - சரோ இருவரது புகழையும் தக்க வைத்துக்கொண்ட ஒரே படமாக ‘ஆலயமணி’ அமைந்தது.
‘ஆலயமணியில் ‘மீனாவாக’ சரோஜாதேவி வருகிறார். அவரது சொந்த மாடல் குறும்புத்தனங்களைக் காதல் கட்டங்களில் காண்கிறோம். அப்புறம் குறும்புகளுக்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது.
அக்காவின் வாழ்க்கையைக் கடைத்தேற்றப் போக, அதற்காகத் தன் காதலைத் தியாகம் செய்ய நேரும் இடத்தில் அதிர்ச்சியைப் பொருத்தமாகக் காட்டியிருக்கிறார்’ என்று குமுதம் குறிப்பிட்டது.
நீ படிப்பில் மேதையாக இருக்கலாம். பணத்தில் குபேரனாக இருக்கலாம். அழகில் மன்மதனாக இருக்கலாம். ஆனால் கண்ணியம் இல்லையே உன்னிடம்...‘
சரோ தட்டுத் தடுமாறி ஒத்திகையில் கஷ்டப்பட்டு பேசிப் பார்த்தும், டைரக்டர் எல். வி. பிரசாத் மவுனமாக நின்றார். ஓகே சொல்லவில்லை.
எல்.வி. பிரசாத்தின் ‘சுக்ரால்’ (இந்தி) மூலம் வடக்கேயும் சரோ வாகை சூடிய சமயம். 40 வாரங்களை வெகு சுலபமாகக் கடந்த ’சுக்ராலின்’ நாயகி உளறிக் கொட்டுவது சரோவுக்கே அவமானமாகத் தோன்றியது.
அது ‘இருவர் உள்ளம்’ சினிமா ஷூட்டிங்.
சரோவை அச்சுறுத்திய சமாசாரங்கள் அதில் அதிகம். தமிழகத்தின் மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர் லட்சுமி எழுதிய புதினம் ‘பெண் மனம்’. அதுவே இருவர் உள்ளம் என்ற பெயரில் படமாகியது. அதனைத் தயாரித்து இயக்கியவர் எல். வி. பிரசாத்.
சரோ ஹாயாக வந்து போகும் வழக்கமானப் பொழுது போக்குச் சித்திரமில்லை.
ஆண் இனத்தின் வாலிபத் தவறுகளுக்கு சாட்டையடி கொடுக்கும், வலிமை மிக்க வீராங்கனை – ‘சாந்தா’ வாக, சரோ விஸ்வரூபம் எடுக்க வேண்டிய வேடம்!
அதுவரையிலோ அதற்குப் பிறகோ அத்தனை உணர்ச்சிப் போராட்டமான, இறுக்கமானத் திரைக்கதையில் சரோ நடித்ததில்லை.
இருவர் உள்ளம் படத்துக்கு வசனம் மு. கருணாநிதி.
‘மனோகரா’ வின் செந்தமிழ்ச் சோலையிலிருந்து விடுபட்டு, சரோ சுலபமாகப் பேசும் வகையில் கலைஞர் உரையாடல் எழுதியிருந்தார்.
அதைப் பேசவும் சரோ சிரமப்பட்டார். அதற்குக் காரணம் நடிகர் திலகம்!
சிவாஜி கணேசனுடன் நடிக்கும் போது டயலாகை கோட்டை விடுவது சரோவின் வாடிக்கை.
ஃபிலிமைத் தின்னும் தமிழர்களின் ட்ரீம் கே(ர்)ளை யூனிட் ஆள்கள் துச்சமாகக் காண்பது போல் தோன்றியது.
விளைவு சுய பச்சாதாபம் மேலிட க்ளிசரின் இன்றிக் கண்ணீர் விடத் தொடங்கினார்.
சதா புன்னகை தவழும் சரோவின் சந்தோஷக் கன்னங்களில், முதன் முதலாகச் சோகத்தின் தூரிகைகள்! அதைக் கண்டதும், கணேசனுக்கும் பதற்றம் பற்றிக் கொண்டது.
டைரக்டர் பொறுமையிழந்து கோபத்தில் சரோவை ஏதாவது ஏசி விடுவாரோ என்கிறத் தவிப்பு. சரோ மூட் அவுட் ஆனால் தமிழ் சினிமாவின் கல்லாவே காலி என்று அர்த்தம்.
புதிய பறவைக்கான கால்ஷீட்டும் கோவிந்தா ஆகிவிடும்.
ஹீரோயினைக் காப்பாற்ற கணேசன் துரிதமாகக் களத்தில் இறங்கினார்.
‘அன்று இப்படியே விட்டிருந்தால் என் டென்ஷன் ஜாஸ்தியாகி மேலும் சில டேக்குகள் வீணாகி இருக்கும். டைரக்டர் பிரசாத் என்னையே பார்க்கிறார். அப்போ சிவாஜி ஒரு காரியம் செய்தார்.
‘யாருப்பா அது லைட் சரியில்லை. சரி பண்ணு... சரி பண்ணு... என்றார்.
‘சரோஜா சரியாகத்தான் பேசறா...’,
‘சரோஜா... இந்த சீனை மறுபடியும் எடுக்கறதுக்கு நீ காரணமில்லை. டெக்னிகல் மிஸ்டேக். இந்த வாட்டி அழகா பண்ணிடு.’ என எனக்கு உற்சாகமூட்டுவது போல் கூற, நான் சுதாரித்துக் கொண்டேன்.
அடுத்த டேக்கில் என் நடிப்பு உடனடியாக ஓகே ஆனது.
அக்காட்சி திருப்தியாக எடுக்கப்பட்டதும்,
‘தப்பு என் மேலே. எதுக்கு லைட் சரியில்லன்னு பழி போட்டீங்க...?’ என்று கேட்டேன்.
அண்ணன் அதற்கு,
‘நீ தான் அழுமூஞ்சின்னு எனக்குத் தெரியுமே..! நானும் சேர்ந்து உன்னைத் திட்டினா அப்புறம் அந்த சீனை என்னைக்கு எடுக்கறது... ? என்றாரே பார்க்கலாம்.’ - சரோஜாதேவி.
சரோ நடித்து முடித்ததும் சிவாஜி ரீ ஆக்ஷன் தர வேண்டும். சரோவை மிஞ்சும் போட்டி மனப்பான்மை உசுப்ப கணேசன், ‘ஹீரோ செல்வம்’ உயிர் பெற்று உலவும் படியாக நடிப்பின் எல்லைக்கே சென்றார்.
கலைச் சிற்பி பிரசாத் முன்பு சிவாஜியும் சிறு துரும்பு.
’கட் கட் என்ற எல்.வி. பிரசாத், கணேசனை மெல்ல செட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றார்.
‘சிவாஜி நீ சிறந்த நடிகன் எனக்குத் தெரியும். நீ நடித்தால் காட்சியும் நன்றாக இருக்கும். ஆனால், இந்த சீனில் நீ பிரமாதமாகப் பண்ணினால் எல்லாமே வீணாகி விடும்.
இந்தக் கட்டத்தில் சரோஜாதேவிதான் உன்னை டாமினேட் பண்ணி நடிக்க வேண்டும்.
நீ பதில் பேசாமல் அமைதியாக இரு. இல்லையென்றால், இந்தக் காட்சி எடுபடாது. படமே ஓடாமல் போய் விடும்.’
பிரசாத் சொல்லே மந்திரம்! கணேசன் செயலற்று நின்றார்.
இருவர் உள்ளம் படத்தில்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
பி. சரோஜாதேவி
என்று இருவரது பெயரையும் இணைத்து டைட்டில் காட்டினார் எல்.வி. பிரசாத். கணேசனுக்கு இணையான நட்சத்திர அந்தஸ்தில் சரோஜாதேவிக்கும் கவுரவம் தேடித் தந்தார்.
ராகவேந்திரா சார்
என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் http://i1065.photobucket.com/albums/...psl3eo9x6l.jpg