-
#தங்கத்திலே_வைரம்
இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் ஜெமினி கணேசன் சரோஜாதேவி நடித்து வெளிவந்த பணமா பாசமா திரைப்படம் வெளியாகி தமிழகமெங்கும் வசூல் மழை கொட்டியது
பட்டி தொட்டி எங்கும் அன்று பிரபலமாகி அனைத்து ரசிகர்களால் முனுமுனுக்க பட்ட இலந்த பழம் பாடல் இந்தப் படத்தில்தான் இடம்பெற்றது.
மதுரை தங்கம் திரையரங்கில் பணமா பாசமா படத்தின் வெற்றி விழா நடந்தது.
இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அந்தப் படத்தின் இயக்குனர் என்ற முறையில் சமீபத்தில்தான் புதிதாக வாங்கிய காரில் சென்னையிலிருந்து மதுரை வந்தார்.
விழாவில் பேசிய கே எஸ் கோபாலகிருஷ்ணன் ,
"என் படத்திற்கு நிகர் என் படம் தான்... வசூல் மன்னர்களை எல்லாம் ஓவர்டேக் பண்ணி விட்டது இந்தப் படம் "
என்று பெருமிதமாக பேசினார் .விழா முடிந்து வெளியே வந்த கோபாலகிருஷ்ணன் காரை காணவில்லை.
தியேட்டர் மேனேஜரிடம் கேட்க அவர் சேதம் அடைந்த ஒரு காரை கொண்டு வந்து இதோ இதுதான் உங்கள் கார் என்று சொல்ல அதிர்ந்து போனார் கோபாலகிருஷ்ணன் .
"என்னாச்சு ?" என்று கேட்டார் ....
வசூல் மன்னன் என்று எம்ஜிஆரை தான் அவரது ரசிகர்கள் சொல்வார்கள்.. வினியோகஸ்தர்களும் சொல்வார்கள்...
ஆனால் நீங்கள் வசூல் மன்னர்களை எல்லாம் படம் ஓவர்டேக் பண்ணிடுச்சு என்று பேசினீர்கள் அல்லவா ....
அதான் தங்களுடைய தலைவரை ஓவர்டேக் செய்ததாக நீங்கள் பேசியதால் ஆவேசப்பட்ட எம்ஜிஆர் ரசிகர்கள் உங்க காரை நொறுக்கி விட்டார்கள் "
என்று சொல்ல அதிர்ச்சி அடைந்தார் கோபாலகிருஷ்ணன் .
"இனி ஒரு நிமிடம் கூட நீங்க மதுரையில் இருக்கக்கூடாது உங்களை எங்களால் பாதுகாக்க முடியாது "
என்று தியேட்டர் நிர்வாகம் வேறு ஒரு கார் ஏற்பாடு செய்து அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தது .
சென்னை வந்து சேர்ந்த கோபாலகிருஷ்ணன் முதல் வேலையாக அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களை சந்தித்து முறையிட்டார் .
"நான் எதார்த்தமாக தான் பேசினேன்... எம்ஜிஆரை குறிப்பிட்டு பேசவில்ல என்ற விஷயத்தை நீங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் '
என்று அண்ணாவிடம் கோரிக்கை வைத்தார் கோபாலகிருஷ்ணன். மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார் அண்ணா .ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.
சில நிமிட மௌனம் நீடிக்கவே அண்ணாவிடம் "சரி கிளம்புகிறேன் "என்று சொல்ல அண்ணாவும் "சரி" என்று தலையாட்டினார். கிளம்பிவிட்டார் கோபாலகிருஷ்ணன்.
"நாமோ காங்கிரஸ்காரன்.....எம்ஜிஆர் அவர் கட்சிக்காரர் ....அதனால் எம்ஜிஆரை விட்டுக்கொடுப்பாரா. விட்டுக்கொடுக்க மாட்டார் .நடப்பது நடக்கட்டும்"
என்று நொந்து கொண்டு கிளம்பி போய்விட்டார் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.
இது நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு குற்றாலத்திற்கு தன் உதவியாளர் ஒருவரோடு ஓய்வெடுக்கச் என்றார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்.
ஐந்தருவியில் அவர் எண்ணை தேய்த்துக் குளித்து கொண்டிருந்த போது மேலே இரண்டு வாட்டசாட்டமான முரட்டு ஆசாமிகள் இவரை உற்றுப் பார்த்தபடி இருக்க
"ஐயையோ மதுரைகாரர்கள் இங்கேயும் வந்து விட்டார்களே "
என்று பதறி அவர் தன் உதவியாளரை அழைத்து
"என்னை அட்டாக் பண்ண வந்து இருக்காங்க ....நீ போய் பார்க்கிங்கில் இருக்கிற என் காரை எடுத்துக் கொண்டு வா "
என்று சொல்ல அதன்படி காரை எடுத்துக்கொண்டு குளித்தும் குளிக்காமலும் காரில் ஏறி ஹோட்டல் அறைக்கு சென்று விட்டார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்.
ஹோட்டல் சென்று ஜன்னல் வழியே வெளியே பார்த்தபோது அங்கேயும் அந்த இரண்டு முரட்டு ஆசாமிகள் அவர்களை நோட்டம் விட்டபடியே இருந்தனர்.
கோபாலகிருஷ்ணனுக்கு உடல் நடுங்க தன் உதவியாளரை அழைத்து ,
"பிரச்சனை அன்றே முடிந்துவிட்டதே இன்னும் ஏன் என்னை பின் தொடர்ந்து வருகிறார்கள்"
என்று கேட்டு வர சொல்லி அனுப்பியிருக்கிறார்.
உதவியாளரும் அவர்களை அணுகி , "ஏன் எங்களைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வருகிறீர்கள் "என்று கேட்க அந்த இருவரில் ஒருவர்
"அந்தப் பிரச்சினை நடந்ததில் இருந்து எங்க டிபார்ட்மென்ட் ஆட்கள் உங்கள் பாதுகாப்பிற்காக பின் தொடர்ந்து வருகிறோம் .இது தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு .நாங்கள் ரகசிய போலீஸ் "
என அந்த இருவரும் சொல்ல நெகிழ்ந்து கண்கலங்கி விட்டார் கோபாலகிருஷ்ணன்...
"அறிஞர் அறிஞர்தான் .....
நான்தான் அண்ணாவை தப்பாக நடை போட்டு விட்டேன் .....
உடனே சென்னை கிளம்பி அண்ணா அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்...
என்று சென்னை கிளம்பினார். அண்ணாவை சந்தித்து நீங்கள் செய்த உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று கண்ணீர் மல்க சொன்னார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்.
அதற்கு அண்ணா அவர்கள் ,
"கே எஸ் ஜி நீங்க ஒன்னு செய்யுங்க... நாளைக்கு எம்ஜிஆரை வைத்து நீங்க படம் எடுக்கப் போறதா ஒரு விளம்பரம் கொடுங்க ....
அவர் உங்கள் படத்தை நடிக்கிறாரோ இல்லையோ அது முக்கியமில்லை ....
அப்படி ஒரு விளம்பரம் வந்தால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு ஏற்படும் ...
என அண்ணா அவர்கள் சொல்லி அனுப்பினார் ...
அண்ணாவின் பேச்சுக்கு மறுப்பு சொல்ல மாட்டார் எம்ஜிஆர் .
இதனால் எம்ஜிஆரிடம் கேட்காமலே விளம்பரம் தயார் செய்தார் மறுநாள் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் வந்தது .
புரட்சி நடிகர் எம் ஜி ஆர் நடிக்கும் #தங்கத்திலே_வைரம் என்ற விளம்பரம் வெளிவந்தது.(இந்த பெயரில் பின்னால் சிவகுமார் ஜெயசித்ரா நடிக்க திரைப்படமாக வெளிவந்தது)
விளம்பரம் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே கோபாலகிருஷ்ணனின் கற்பகம் ஸ்டூடியோவில் எம்ஜிஆர் ரசிகர்கள் திரண்டு வந்து டைரக்டருக்கு எங்க வாழ்த்துக்களை சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு போனார்கள்.
இந்த சம்பவம் நிகழ்ந்த ஒரு வாரத்திற்கு பின் ரஷ்யா சென்றுவிட்டார் கோபாலகிருஷ்ணன் .பணமா பாசமா திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார் .
விழா முடிந்து 10 நாட்களுக்கு பின் வீட்டிற்கு வந்த கோபாலகிருஷ்ணன் அவருடைய மகன்களில் ஒருவரை காணாமல் திகைத்து கேட்க இரண்டாவது மாடியிலிருந்து கீழேவிழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இரவு நேரம் இந்த விஷயம் எம்ஜிஆருக்கு தெரிய கால நேரம் பார்க்காமல் மருத்துவமனைக்கு விரைந்தார் எம்ஜிஆர்.
மருத்துவமனையில் இருந்த அனைவரும் இவரைப் பார்க்க கூடி விட்டனர் .
எம்ஜிஆர் வந்ததும் அவரை பார்க்க வந்தவர்களிடம்
"எலும்பு நரம்பு இப்படி எந்த பிரிவு இருக்கும் அந்தந்த ஸ்பெஷலிஸ்ட் களை வைத்து ட்ரீட்மெண்ட் குடுங்க....
தேவைப்பட்டால் வெளியூரில் இருந்தும் ஸ்பெஷலிஸ்ட் களை வரவழைங்க... எவ்வளவு செலவானாலும் நான் பார்த்துக்கிறேன் ...என்ன செய்வீங்களோ தெரியாது சீக்கிரமே குழந்தை எழுந்து நடக்கனும் ....பேசணும் ...பழைய மாதிரி அவனை கொண்டு வந்துவிடனும்"
என்று எம்ஜிஆர் கேட்டுக்கொண்டார் குழந்தையின் அப்பா ரஷ்யாவில் இருப்பதை தெரிந்து கொண்ட எம்ஜிஆர் ஒரு அப்பாவின் ஸ்தானத்தில் இருந்து தினமும் மருத்துவமனைக்கு வந்து பார்த்து நலம் விசாரித்து விட்டு செல்வதை கண்ணுங்கருத்துமாக செய்தார் .
அவர் மகனும் ஓரளவு உடல்நலம் தேறி விட்டான் இன்று நாம் நம் மகன் உயிரோடு இருக்க காரணம் எம்ஜிஆர்தான் என்று திருமதி கோபாலகிருஷ்ணன் சொல்ல கண்களில் நீர் பொங்கி இருக்கிறது கோபாலகிருஷ்ணனுக்கு.
"தெய்வம் என்பது எங்கேயும் இல்லை... மனித உருவில் இருக்கும் என்பதை எம்ஜிஆர் உருவத்தில் தெரிந்துகொண்டேன் "
என்று குறத்தி மகன் படப்பிடிப்பில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்..........vr...
-
இன்று
(31.10.1975. - 31.10.2020)
மக்கள் திலகம் அவர்கள்
வெள்ளித்திரைக்கு வழங்கிய...
சமுதாய சீர்திருத்த
கொள்கை காவியம்....
மக்கள் உள்ளம் கவர்ந்த
உன்னத காவியம்....
சரித்திரம் படைத்த
மாபெரும் காவியம்.....
புரட்சித்தலைவரின்
புரட்சிக்காவியம்.....
பல்லாண்டு வாழ்க
திரைக்காவியம்
வெளியான திருநாள்....
+++++++++++++++++++++++++++
1975 ல் வெளியான...
இதயக்கனி வெளியாகிய பின்
31,10,1975.... தீபாவளி திருநாளில்
வெளியாகி வெற்றிகளை குவித்த
வசூல் புரட்சியை கண்டு..
வெற்றிக்கொடி நாட்டிய காவியம்.
+++++++++++++++++++++++++++++
1974 ல் தீபாவளி திருநாளில்
வெளியான உரிமைக்குரல் காவியத்துடன் வெளியான
கணேசனின் ... அன்பைதேடி...
இன்று வரை விலாசம் தெரியாது
போனது....
1975 ல் தீபாவளி திருநாளில்...
வெளியான பல்லாண்டு வாழ்க காவியத்துடன் .... மூக்குடைபட்டு
ஆஸ்பத்திரியில் அனுமதி ஆகிய
டாக்டர் சிவா...வே இன்று வரை
அட்ரஸ் இல்லாது முடங்கினாரு..
+++++++++++++++++++++++++++++++
சாதனை நாயகன் எம்.ஜி. ஆர் அவர்களின் திரைப்படங்கள் சாதாரண நாளில் வந்தாலே....
தாக்குபிடிக்க முடியாத கணேசன் படங்கள்....
பண்டிகை காலங்களில் வந்தால்
என்னாகும்....
சேறும்....சகதியுமாகி... சின்னபின்னாமாகி விடும்.....
++++++++++++++++++++++++++++++++
சி... சென்டர் என அழைக்கப்படும்
வேலூர் மாவட்ட ஆம்பூர் ராமு அரங்கில்
பல்லாண்டு வாழ்க திரையிடப்பட்டு
5 காட்சியில் சக்கைபோட்டது.........ukr...
+++++++++++++++++++++++++++++
-
எங்கும் வெற்றிநடை போட்ட
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
"பல்லாண்டு வாழ்க"...
திரைப்பட வெற்றிகள்....
++++++++++++++++++++
சென்னை தேவிபாரடைஸ்
104 நாள் வசூல் : 7,93,428.80
சென்னை அகஸ்தியா
104 நாள் வசூல் : 4,28,967.19
சென்னை சரவணா
70 நாள் வசூல் : 2,30,891.37
++++++++++++++++++++++++
278 நாள் வசூல் : 14,53,287.36
+++++++++++++++++++++++++
எந்த நடிகனுக்கும் சென்னையில் இந்த குறைந்த நாளில் இவ்வசூல் கொடுத்ததில்லை...
++++++++++++++++++++++
மதுரை அலங்கார் 105 நாள்
மதுரை சினிப்பிரியா 28 நாள்
வசூல் : 4,17,355.35
+++++++++++++++++++++++++
திருச்சி சென்ட்ரல் 100 நாள்
வசூல் : 3,19,730.85
நெல்லை பூர்ணகலா 100 நாள்
வசூல் : 2,60,534.80
சேலம் அப்சரா 105 நாள்
வசூல் : 3, 35,116.40
கோவை ராஜா / முருகன்
ஒடிய நாள் 104 நாள்
வசூல் : 4,01,570.65
++++++++++++++++++++++
குடந்தை செல்வம் 71 நாள் : 2,05,985.35
தஞ்சை ராஜா 70 நாள் : 2,01,243.60
பரங்கிமலை ஜோதி 76 நாள் : 2,76,156.00
+++++++++++++++++++++++++++++
தமிழ்நாடு, இலங்கை,பெங்களுர்
மொத்தம் 38 திரையில் 50 நாட்கள்..
15 திரையில் 10 வாரங்கள்...
முதல் வெளியீட்டில் மட்டும்
85 லட்சம் வசூல் மொத்த வசூல் ஒரு கோடி ரூபாய் கடந்த காவியம்............ukr...
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*28/10/20 அன்று அளித்த தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாய மச்சீந்திரா என்ற படத்திற்காக கொல்காத்தா பயணமானார் அவருடன் 15,16 வயது நிரம்பிய இளம் கதாநாயகியர்*உடன் சென்றனர் .* *கொல்கத்தாவில் சாலையின் ஓரமுள்ள கால்வாய்கள், சாக்கடைகள் ஆகியவற்றை பல இடங்களில் தாண்டித்தான் செல்ல வேண்டும் .எம்.ஜி.ஆர். அந்த வயதில் துள்ளி குதித்துதான் அந்த அகலமான சாலையில் உள்ள சாக்கடைகளை ஒரே பாய்ச்சலில் மறுபுறம் செல்ல தாண்டுவார் . அப்படி ஒருநாள் செய்யும்போது அவரது காலணியில் ஒன்று அறுந்து பழுதாகிவிடுகிறது .* உடனே தங்கும் இடத்திற்கு திரும்பிவிடுகிறார் .* நாளை காலை ஸ்டுடியோவிற்கு படப்பிடிப்பிற்கு செல்வதற்கு காலணி வேண்டும் என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை கடைக்கு செல்வதற்கு துணைக்கு அழைக்கிறார் . இரவு நேரமாகிவிட்டது கடையை அடைந்திருப்பார்கள் .* நாளை காலையில் நான் வாங்கி தருகிறேன். இப்போது வேண்டாம் என்கிறார் . நாளை காலையில் 7 மணிக்கெல்லாம் புறப்பட வேண்டும் என்று சொன்னதற்கு ,கவலை வேண்டாம் பதற்றம் அடையாதே .காலையில் சீக்கிரம் கடை திறக்கப்படும் . நாம் வாங்கி கொண்டு புறப்படலாம் என்று என்.எஸ்.கிருஷ்ணன் ஆறுதல் சொல்கிறார் .* காலையில் எழுந்ததும் எம்.ஜி.ஆர். தயாராகிவிட்டு ,என்.எஸ்.கிருஷ்ணனை*கடைக்கு புறப்பட அழைக்கிறார் .* என்.எஸ்.கிருஷ்ணன் கொஞ்சம் பொறு என்று சொல்லிவிட்டு பழைய பேப்பரில் சுற்றப்பட்டுள்ள ஒரு பண்டலை பிரிக்கிறார் .அதில் எம்.ஜி.ஆரின் பழைய காலணி பழுது பார்க்கப்பட்டு, பாலிஷ் போடப்பட்டு பளபள என்று மின்னுகிறது .அதை பார்த்த எம்.ஜி.ஆர். மிரண்டு போகிறார் .கலைவாணர் தன்னைவிட வயதில் மூத்தவர் . திரைப்பட குழுவினருக்கு குரு* போன்றவர் . அனுபவஸ்தர் அவர் தன்னுடைய காலணி அறுந்து போனதை எடுத்து பொறுப்புடன் கடையில் கொடுத்து தைத்து, பாலிஷ் போட்டு இரவோடு இரவாக அதை வாங்கி பாதுகாப்பாக வைத்திருந்து கொடுத்ததை எண்ணி வியந்தார் .அப்போது கலைவாணர் ,ராமச்சந்திரா, உனக்கு இளம் வயது .உன்னுடன்* வருபவர்கள் இளம் நடிகைகள் .நீ இருக்கும் சூழ்நிலையில் அப்படிதான் நடந்து கொள்ள மனம் இடம் கொடுக்கும் .அறுந்து போனது ஒரு காலணி தானே என்று அலட்சியம் காட்ட கூடாது . வாழ்க்கையில் நீ கற்றுக்கொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கிறது .* வாழ்க்கையில் நீ கடந்து செல்லும் தூரமும் மிக அதிகம் .இப்போதுதான் திரையுல பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறாய் ஆகவே பொறுப்புடன் எளிமையாக நடந்து கொண்டால் எதையும் சாதிக்கலாம் என்று அறிவுரை கூறினாராம் .* அதனால்தான் அந்த கலைவாணரை தன் குருவாக, ஆசானாக வாழ்நாள் முழுவதும் எம்.ஜி.ஆர். மதித்து ,மரியாதை செய்து போற்றி வந்தார் .* அது மட்டுமல்ல அவருடைய நடவடிக்கைகளிலும் கலைவாணரின் பாதிப்பு இருப்பது போல நடந்து கொண்டார் .**
பறவைகளை வேட்டையாடுவதில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அலாதி பிரியம்*அவர் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம்,கோவை போன்ற நகரங்களுக்கு காரில் செல்லும்போது இடதுபுறம் அமர்ந்திருப்பார் .* கார் செல்லும்போது சாலையில் ஓரத்திலுள்ள மரங்களில் உள்ள பறவைகளை துப்பாக்கியால்* சுட்டு வீழ்த்துவது வழக்கம் .* சுட்டு வீழ்த்தப்பட்ட பறவைகளை* அவர் எங்கு தங்குகிறாரோ, அங்கே தன்னுடன் வந்திருக்கும் உதவியாளர்கள், படப்பிடிப்பு குழுவினருடன் சமைத்து சாப்பிடுவது வழக்கம் .* ஒரு முறை மதுராந்தகம் அருகில் வந்தபோது* சுடப்பட்ட பறவைகளை ஒரு மூட்டையில் சேகரிக்கும் போது, கார் ஒரு இடத்தில நிற்கும்போது எம்.ஜி.ஆர். தன காலுக்கு கீழே துப்பாக்கியை வைத்துவிட்டு சற்று அயர்ந்து தூங்கிவிட்டார் .* திடீரென்று சிறிது நேரம் கழித்து அவர் கால் பட்டு துப்பாக்கி வெடித்து குண்டு கார்* கதவில்**பாய்ந்தது .*.அந்த டபுள் பேரல் துப்பாக்கி**வெடித்தபோது தலைக்கு மேலே தூக்கி எறியப்பட்டது .* இந்த சம்பவத்தினால் எம்.ஜி.ஆரின் தர்மம்தான் அவர் தலையை காத்தது என்று* சொன்னார்களாம் .* அவர் வேட்டையாடுவதில் எவ்வளவு நுட்பமாக இருந்தாரோ , அப்படி ஒவ்வொரு தடவையும் இந்த துப்பாக்கி, தோட்டா, குண்டு ஆகியவற்றை அடிக்கடி சந்தித்தே வாடிக்கையாகி விட்டது என்பார்கள் .**
பிரபல இசை அமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன்* தமிழகத்தில் இருந்து சுமார் 25 நபர்களை தேர்ந்தெடுத்து மைலாப்பூரில் ஒரு இடத்தில அவர்களுக்கு* வயலின் பயிற்சி அளித்து கொண்டிருந்தார் .* மாணவர்கள் தங்களால் இயன்ற அளவில் ஒரு சொற்ப பணத்தை தங்கள் குருவிற்கு பயிற்சி கட்டணமாக அளிக்கிறார்கள் . அந்த பணத்தில் உரிய முறையில் பயிற்சி அளிக்க மிகவும் கடினமாக இருப்பதாக வருத்தத்துடன்* குன்னக்குடி வைத்தியநாதன் தெரிவிக்கிறார் . இந்த செய்தி எம்.ஜி.ஆர். அவர்களின் காதுகளை எட்டுகிறது .**.*உடனே எம்.ஜி.ஆர். தனியார் நடத்தி வந்த அந்த பயிற்சி பள்ளிக்கு ரூ.5 லட்சம் நிதியளித்து அதை அரசு சார்பில் நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்தார்*இப்படி இயல், இசை, நாடகம், நடனம் என்று எல்லா இடத்திலும் தன்னை வைத்து பார்த்தார் .* தன்னைத்தான் எல்லார் மத்தியிலும் பார்த்தார் .* அப்படிப்பட்ட மகோன்னதமான மாமனிதர் பல்வேறு விஷயங்களில் அள்ளி அள்ளி தந்துகொண்டே இருக்கிறார்.* ஆனாலும் அவர் எப்படி உடை அணிந்தார் . எப்படி தலையை சீவி இருந்தார்* எப்படி நடந்தார், பாடினார், ஆடினார் என்று அவரது ரசிகர்கள் பலர் ரசித்து,நினைத்து கொண்டு இருக்கலாம் .* ஆனால் இதையெல்லாம் தாண்டி அந்த ஆத்மா, ஒரு மோர் விற்றுக்கொண்டிருந்த மூதாட்டியை அழைத்து அவருக்கு உதவிகள் செய்ய வேண்டும். அவருக்கு உற்றார் உறவினர் இல்லை,அவர் யாராக இருந்தாலும் சரி ,* எப்படியாவது அவருக்கு உதவ வேண்டும் என்று நினைத்ததே அந்த ஆன்மா தான் பல்வேறு மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக, ஒளிவிளக்காக ,அந்த மன்னாதி மன்னனின் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது .**
திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* *குணத்தில் உயர்ந்த, பண்பில் மிகுந்த* காவியமாம் நம்முடைய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புதுமை தலைவர புத்துயிர் ஊட்டக்கூடிய தலைவர் , புது தாக்கம் தரக்கூடிய தலைவர். ஏழை எளியோர் துயர் துடைப்பதற்காக வாழ்ந்த தலைவர்* ஏழை எளியோருக்காகவே வாழ்ந்து* தன்னுடைய துயர் பற்றி கவலைப்படாமல் வாழ்நாளில் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று தி.மு.க.வில் இருந்த காலகட்டத்தில் முயன்று அது முடியாமல் போன கட்ட த்தில்* எல்லோரும் தவறான வழியில் பணம் சேர்க்கிறார்கள் என்கிற நிலையை மாற்றியாக வேண்டும் ,ஏழை எளியோருக்கு நல்வாழ்வு கிடைக்க நாம் பாடுபடவேண்டும் என்ற உத்வேகத்தில் தன்னுடைய உள்ள கிடக்கை உரியவர்களிடத்தில் எடுத்து சொல்லும்போது அது தட்டி கழிக்கப்பட்டது . கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் கோரிக்கைகள் மறுக்கப்பட்ட நேரத்திலேதான் இனி ஏழை எளியவர்க்கு வாழ்க்கை கிடைக்க வேண்டுமானால் நாம் முயன்றுதான் ஆக வேண்டும் . நாம் சவாலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்கின்ற நிலையில் தி.மு.க.வில் இருக்கின்ற 184 எம்.எல்.ஏக்களை எதிர்த்து நாம் குரல் கொடுத்தால் நாம் காணாமல் போய்விடுவோம் என்கிற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருக்கழுக்குன்றம், ராயப்பேட்டை ஆகிய இடங்களில் குரல் கொடுத்தார் என்றால் அது ஒரு சாதாரண விஷயமல்ல. அருமை தோழர்களே, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை என்பது அன்றைய* கால கட்டத்தில், திரைப்பட நடிகராக ,மின்னி கொண்டிருந்த நேரத்தில் ஒரு மாநில முதல்வர்* என்கிற அந்தஸ்திலேதான் அவருடைய வாழ்க்கை நடைபெற்று கொண்டிருந்தது .அந்த அளவிற்கு சொந்த வாழ்விலே முன்னேற்றத்தை கண்டிருந்த அந்த தலைவர் எதற்காக இந்த மாநில மக்களுக்காக கோரிக்கைகள் வைத்து போராட வேண்டும் . நான் நன்றாகத்தானே இருக்கிறேன் நான் வசதியோடு தானே இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் என்ன குறை கண்டுவிட்டேன் என்று நினைத்திருப்பாரேயானால் அந்த கேள்விக்கணைகளையே தொடுத்திருக்க மாட்டார் .* இந்த கேள்விக்கணைகளை தொடுத்தால் எதிர்காலம் நமக்கா அல்லது நமக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடுமா என்ற சிந்தனையே இல்லாமல் , ஏழை எளியவர்களுக்கு நம் வாழ்நாளிலே ஏதாவது நல்லது செய்தே ஆகவேண்டும் என்ற முயற்சிக்குயார்**முட்டுக்கட்டை போட்டாலும் சரி, திரைப்படத்தில் நான் பேசுகின்ற* வசனம் போல ஒன்றுமில்லாமல் போய்விடக்கூடாது .அது* உள்ளபடியே* வெட்ட வெளிச்சமாக மக்களுக்காக நான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற உறுதியோடு திருக்கழுக்குன்றத்திலும் ராயப்பேட்டையிலும்* குரல் எழுப்பிய நேரத்தில்தான் 184 எம்.எல்.ஏக்கள் வைத்திருந்த தி.மு.க.வால்*புரட்சி தலைவர் எழுப்பிய குரல் அப்படியே நசுக்கப்பட்டது .அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தூக்கி எறியப்பட்டார்* .அப்படி தூக்கி எறியப்படுவதற்கு முன்னால் வேறு யாராவதாக இருந்தால், சிந்தித்து இருப்பார்களேயானால்*நிச்சயமாக அந்த கேள்விக்கணைகளை தொடுத்திருக்க மாட்டார்கள் .
இன்றைக்கு கட்சியில் இல்லாமல் , வேறு பொறுப்புக்களில் இல்லாமல்*இருக்கின்ற பல நடிகர்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆசைப்படுகிறார்கள்*முதல்வர் பதவிக்கு வரவேண்டுமென்று. ஆனால் வசதி, வாய்ப்புகள்* எதையுமே விட்டு கொடுக்க தயாராக உள்ள நடிகர்களைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்*எத்தனையோ நடிகர்களை சொல்கிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப்போல எந்த துயரத்திற்கும்* எந்த போராட்டத்திற்கும் நான் தயார் என்று சொல்லி வரக்கூடிய தலைவர்கள் இன்று வரை யாரும் பட்டியலில் இல்லை அருமை தோழர்களே .அந்த வகையில் அமெரிக்காவில் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகிய ரீகனுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் நம்முடைய தானை தலைவர் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் .என்பதை நினைத்து பார்க்கும்போது நமக்கெல்லாம் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .* 1972 அக்டொபர்* மாதம் 10ம் தேதி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஆதரவாக* முதன் முதலில் உடுமலை பேட்டையில் குரல் கொடுத்த ஒப்பற்ற இளைஞர்* உடுமலை இஸ்மாயில் என்பவர் .* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை* தி.மு.க.வில் இருந்து நீக்கியது தவறு. அதற்காக நான் விஷம் அருந்தி உயிரை மாய்த்து கொள்கிறேன்*என்று உடுமலையில் முக்கிய சாலைகளில் முழக்கம் இட்டு ,விஷத்தை பருகிய*உடுமலை இஸ்மாயில் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக விஷம் அருந்தினார் என்ற செய்தி பத்திரிகைகளில் பிரசுரம் ஆகாமல் இருக்க அன்றைக்கு இருந்த ஆளும் கட்சியான தி.மு.க மறைக்க முயன்று*. அராஜக வேளைகளில் ஈடுபட்டது . போயும் போயும் எம்.ஜி.ஆருக்காக* உயிர் நீப்பதா**அது வரலாறாக மாறிவிடும் என்று தடுத்து முற்பட்ட நேரத்திலே நாங்களெல்லாம் ஒன்று திரண்டு, பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று உடுமலை இஸ்மாயில் எம்.ஜி.ஆர். அவர்களுக்காகத்தான் உயிர் நீத்தான்* எம்.ஜி.ஆர். மீது அவர் பற்று கொண்டவர். எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி நடனம் ஆடக்கூடியவர் தொடர்ந்து பத்து நாட்கள் சைக்கிளில் சுற்றியபடியே எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி வந்தவர் எம்.ஜி.ஆருக்காகதான் உயிர் நீத்தார் என்பது அன்றைய தினமலர் நாளிதழில் செய்தியாக புகைப்படத்துடன் வெளியாகி மிக பிரபலமானது .இந்த செய்தியை தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் கவனத்திற்கு நாங்கள் எல்லாம்* கொண்டு செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அந்த கால கட்டத்தில் அக்டொபர் 15ம் தேதி, என்னுடைய தலைமையிலே, நான் ஏற்கனவே* *குறிப்பிட்டது போல*நான் கல்லூரி மாணவர் தலைவராக இருந்தேன் .* அந்த பதவியில் இருந்தபோது எனக்கு மிக பெரிய நெருக்கடி எல்லாம் இருந்ததை தூக்கி எறிந்துவிட்டு எனது நண்பர்களோடு சேர்ந்து நான் அச்சகத்திற்கு சென்று, எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்துவதற்காக கோரிக்கை வைத்தபோது எந்த அச்சகத்திலும்* ஆளும் கட்சியின் எதிர்ப்பை சந்திக்க பயந்து எங்களுக்கு நோட்டீஸ் அச்சடித்து தரமுன்வரவில்லை .* எனவே நாங்கள் நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அன்றைக்கு ஒரு பேப்பரில் எங்களது செய்தியை எழுதினோம். பின்பு எம்.ஜி.ஆர். பக்தர் பாபு என்கிற எனது நண்பர் மூலம்* ஒரு கட்டான பேப்பர்களை வாங்கி வந்து கார்பன் வைத்து, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்காக 1972ல் அக்டொபர் 15ம் தேதி* காலை 9 மணிக்கு உடுமலை கல்பனா அரங்கு அருகில் இருந்து* ஊர்வலம் துவங்கும் என்று குறிப்பிட்டபோது எங்களை தேடிவந்து தி.மு.க.வினர் மிரட்டிய காலகட்டத்தை எல்லாம் எண்ணி பார்க்கின்றேன் .* அங்கே எல்லோரும் பயந்து கொண்டு, வருவதற்கே பயந்து இருந்த அந்த சூழலிலே வெறும் 30 நபர்களுடன் புறப்பட்ட ஊர்வலமானது*கல்பனா அரங்கில் இருந்து பல்வேறு சாலைகளின் வழியே சென்று மீண்டும் கல்பனா அரங்கிற்கே வந்து சேர்ந்தது . 30 நபர்களுடன் புறப்பட்ட ஊர்வலம் நிறைவடையும் போது 3000நபர்களுடன் முடிவுற்றது .* அந்த நிறைவு கூட்டத்தில் என்னை உடுமலை எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக தேர்ந்தெடுத்த அந்த வரலாறுகளை* எல்லாம் எண்ணி பார்க்கின்றபோது இன்றைக்கு பல்வேறு தலைவர்களை பார்க்கின்றோம் . திரட்டப்பட்ட கூட்டத்தைத்தான் அந்த தலைவர்கள் பார்க்கிறார்களே தவிர திரண்ட கூட்டத்தை யாருமே பார்க்கவில்லை .**
அருமை தோழர்களே, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வருகிறார் என்று சொன்னால் அப்போதெல்லாம் கூட்டம் லட்சக்கணக்கில்* தானாக சேர்ந்துவிடும் .இந்தக்கால இளைஞர்களுக்கு அந்த காட்சியை எல்லாம் காண கொடுத்துவைக்கவில்லை என்றே சொல்லவேண்டும் .* ஆனால்* எனக்கும், எனக்கு சமமான நண்பர்கள், தோழர்களுக்கு அந்த காட்சிகள் பசுமையாக நினைவில் நிற்கும் . நின்றாள் மாநாடு, நடந்தால் ஊர்வலம் ,பார்த்தால் பொதுக்கூட்டம் என்ற அளவில்தான் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கை முறை அன்றைக்கு இருந்தது .* அவர் நிற்கின்ற இடத்திலே குறைந்த பட்சம் ஆயிரம் பேர் எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது. அப்படி திரண்டு வந்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு தலைவரை இன்றைக்கு என் வாழ்நாளிலே தேடி தேடி பார்த்தாலும் கிடைப்பது அரிதாக உள்ளது .* அந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக அவர் திகழ்ந்தார் .* மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ* வேண்டும்* என்கிற பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர். உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்கிற போராட்ட களத்திற்கு*அடித்தளம் அமைத்து கொடுத்தவர் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.அப்படி போராட்ட களத்திலே புரட்சி தலைவர் இறங்கிய நேரத்திலே எங்களை போன்றவர்கள் ஆங்காங்கே ஊர்வலங்கள்* நடத்தியபோது அங்கே நமது நண்பர் சைதை துரைசாமி ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை குறிப்பிட்டு கழகத்தின் முதல் தியாகி என்று சைதை துரைசாமியை* சொன்னார் என்றால் அன்றைக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ,கருணாநிதிக்கு*எலுமிச்சம் பழம் மாலை போட்டு, அந்த தி.மு.க. மேடையிலேயே கருணாநிதியை விமர்சனம் செய்து பேசுவது என்பது சாதாரண விஷயமல்ல.*அத்தகைய எந்த உயிருக்கும் ஏதாவது பாதிப்பு வரலாம் என்கிற அந்த நிலையை கூட எண்ணி பார்க்காமல்**எதிர்ப்பு குரல் கொடுத்த அந்த நண்பர்களையெல்லாம் நினைத்து பார்க்கின்றபோது நாம் உள்ளபடியே, அன்றைக்கு கழகத்தில் தலைவர் எம்.ஜி.ஆருக்காக உயிர் கொடுக்க துணிந்த எத்தனையோ பேர் இருக்கின்றார்கள் .ஏன் நண்பர் சைதை துரைசாமியை நான் குறிப்பிட்டு சொன்னேன் என்றால்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவரை ஆறுமாத காலம் தன் அலுவலகத்திலேயும்*ராமாவரம் தோட்டத்து இல்லத்திலேயும்* வைத்து**பாதுகாத்தார் . அப்படி பாதுகாக்கப்பட்ட* *அதுபோன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள்**அண்ணா தி.மு.க. வின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள் .* என்பதை எண்ணி பார்க்கும்போது அப்போதெல்லாம் ஒரு கூட்டம் போடுவது என்று சொன்னால் மிக கடினமான வேலையாக இருக்கும் காரணம்*கையில் காசு இருக்காது .*
காசில்லாதவர்கள் கூட்டம் போடமுடியாத நிலையில் நானும் அண்ணன் குழந்தைவேலுவும், உடுமலைபேட்டையில் கூட்டம் போட்டு , கொள்கை முழக்கத்தை உருவாக்கி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக பாடுபட்டோம் அருமை தோழர்களே.* இன்றைக்கு* குறைந்த பட்சம்**ரூ.20,000/- இல்லையென்றால் ஒரு கூட்டம் போட* முடியாது .* ஆனால் 1972ல் உடுமலையில் ஒரு கூட்டம் போடுவதற்கு நான் செலவழித்த பணம் வெறும் ரூ.93/-தான் .உடுமலையில் நண்பர் விஸ்வநாத நாடார் என்பவர் மரக்கடை வைத்து நடத்தி வந்தார் .* அவர் எங்களுக்கு மரபலகைகள் எல்லாம் இலவசமாக தந்து மேடையும் அமைத்து தந்துவிடுவார் . அப்போது அதற்கு கட்டணம் ரூ.50/- தான் . துண்டு பிரசுரத்திற்கு ரூ.15/- துண்டு சுவரொட்டிக்கு ரூ.25/- உடுமலை கூட்டங்களில் நான் துண்டு ஏந்தி கூட்டம் நிறைவடைவதற்கு முன்பு வசூல் செய்து அடுத்த கூட்டத்திற்கு நிதி சேர்த்துவிடுவேன் .* அன்றைக்கு வேறு யாருடைய உதவியும் இல்லாமல், கட்டாய வசூல் செய்யாமல், பொதுமக்கள்* இடையே துண்டு ஏந்தித்தான் கூட்ட செலவுகளை சமாளித்தோம் .அப்படி ஒரு ஏழ்மையான நிலை அன்று இருந்தது .* அப்போது கூட்ட செலவுகளுக்கு உதவி செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ,நான், அண்ணன் குழந்தைவேலு ,நகரத்தில் பொறுப்பாளராக இருந்த அழகிரிசாமி, வேலுச்சாமி, நாராயணசாமி மேலும் சில நண்பர்கள் இணைந்து பொது கூட்டங்களை நடத்தி வந்தோம் கிராமப்புறத்தில் எடுத்து கொண்டால் அன்றைக்கு எதிர்க்கட்சி என்று சொல்லப்படாத வகையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மீது கொண்டிருந்த அபரி மிதமான அன்பு, பாசம், பற்று காரணமாக தாங்களாகவே கிராமத்தினர் முன்வந்து செலவு செய்து, பொதுக்கூட்டங்கள் அமைத்து , கட்சியை வளர்த்து , அண்ணா தி.மு.க.வை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்காக எங்களை போன்றவர்கள் பாடுபட்டார்கள் என்றால் தலைமை பதவியில் உள்ள புரட்சி தலைவர்*எம்.ஜி.ஆர். அவர்கள் அனுதினமும் சோதனைகளை சந்தித்து வந்தார் .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் - ஆயிரத்தில் ஒருவன்*
2.புதிய வானம், புதிய பூமி - அன்பே வா*
3.நான் செத்து பொழைச்சவன்டா - எங்கள் தங்கம்*
4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
*
*
-
1964 இல் நம் இதயதெய்வம் நடித்த படகோட்டி இறுதி கட்ட காட்சிகள் கேரளாவில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நேரம்.
13 நாட்கள் மொத்தம்.
10 வது நாள் காலை நல்ல வெளிச்சத்தில் பட பிடிப்பு நடந்து கொண்டு இருந்து இடைவேளை நேரம்.
தலைவருடன் இருந்த ஐயா கே.பி.ஆர். அவர்கள் தோளை தட்டி ஒருவர் அங்கே பாருங்கள் என்று சொல்ல....அங்கே ஒரு முதியவர் ஏதோ சைகை செய்ய அவர் அருகில் செல்கிறார் அவர்...
அப்போது அந்த முதியவர் ஐயா நான் எம்ஜிஆர் அவர்களை சந்திக்க வேண்டும்.....
நான் அவரின் தந்தை உடன் பணி புரிந்தவன்.
பாலக்காடு என் சொந்த ஊர்....என்று தொடர நான் சிறுக சிறுக சேமித்து வைத்து இருந்த தொகை என் மகள் திருமணம் வேண்டி....அவளின் திருமணம் முடிவாகி அடுத்த கட்டம் நோக்கி நான் நகர...
நெடுங்காடு வங்கியில் இருந்து நான் சேமித்த வைத்து இருந்த பணம் ரூபாய் 20000 அதை எடுத்து கொண்டு வரும் வழியில் தலை சுற்றி நான் மயக்கம் அடைந்து சாலை ஓரம் வீழ்ந்து விட்டேன்....
மயக்கம் தெளிந்து அடுத்தவர் உதவியில் நான் கண் திறக்கும் போது....பேரிடி எனக்கு என் பண பையை காணவில்லை...இடிந்து போய் என் வீடு போய் சேர்ந்தேன்...
மொத்த குடும்பமும் செயல் இழந்து போக என் மகள் சொன்னாள்.
அப்பா நீங்கள் எம்ஜிஆர் அவர்களின் தந்தை கோபாலன் அவர்கள் உடன் பணி புரிந்தவர் தானே...அவர் கூட நீங்கள் இருந்த நினைவுகள் சொல்லி அவர் பெற்ற மகன் இப்போது நம் ஊருக்கு பக்கத்தில் வந்து இருக்கிறார்...
நீங்கள் போய் நடந்ததை சொல்லி அவரிடம் உதவி கேளுங்கள்...அவரை பற்றி நான் நிறைய படித்து உள்ளேன் என்று மகள் விருப்பம் சொல்லி வந்த விவரம் சொல்ல...
கே.பி.ஆர்...கண்களில் கண்ணீர் முட்ட ஐயா பொறுங்கள் என்று சொல்லி சற்று நேரத்தில் தலைவர் இடம் விவரங்கள் சொல்ல...துடித்து போன தலைவர் அவரை வர வைத்து...
ஐயா உங்கள் விவரங்களை இவரிடம் சொல்லுங்க....ஒரு வாரம் கழித்து சென்னைக்கு வாருங்கள் என்று சொல்ல அதன் படி பெரியவர்...
சென்னை வந்து இறங்கி ஐயா கே.பி.ஆர். அவர்களை அந்த பெரியவர் சந்திக்க...அவர் தலைவர் இல்லம் அந்த பெரியவரை அழைத்து போக....
பெரியவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து அவரை சிறப்பிக்க நல்ல உணவு கொடுத்து வரவேற்று.
ஒரு சிறப்பு உடை பணம் வைக்க ஒரு ஜிப் வைத்து உடனே தயார் ஆகி அதற்கு மேல் ஒரு பெல்ட் வாங்கி கொடுத்து அதில் மொத்த பணம் 20000 ரூபாயை பத்திரம் ஆக வைத்து தைத்து.. மீண்டும் பணத்தை அவர் தவற விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில்...
அந்த பெல்ட்டை தயார் செய்து கொண்டு வந்தவர் அண்ணன் திருப்பதிசாமி அவர்கள்.
கே.பி.ஆர்....அவர்களை சென்னை ரயில் நிலையம் வரை அந்த பெரியவருக்கு துணை ஆக அனுப்பி பாலக்காடு ரயிலில் அவரை பத்திரம் ஆக ஏற்றி விட்டு அவர் ஊர் சென்று பணத்துடன் பத்திரம் ஆக போய் சேர்ந்த விவரத்தை எனக்கு தெரிவியுங்கள் என்கிறார்..... கொடை வள்ளல் எம்ஜிஆர்..
பெற்ற தாய் தந்தைக்கே சோறு போடாத இந்த பொல்லாத உலகத்தில் தன் தந்தைக்கு தெரிந்தவர் என்றவுடன் அவர் சொன்னவை உண்மையா என்று கூட ஆராயாமல் அள்ளி கொடுக்கும் வள்ளல் இவர் போல யார் உண்டு..
பெரியவரை சுமந்து சென்ற அந்த விரைவு வண்டி பாலக்காடு போய் சேர்ந்து அவர் பணத்துடன் வீடு போய் நடந்தவை பற்றி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு பணத்தை இடுப்பில் இருந்து எடுத்து கொடுக்க..
அவர் மகள் அப்பாடா திருமணம் இருக்கட்டும் நான் எம்ஜிஆர் மீது வைத்து இருந்த என் நம்பிக்கை வீண் போக வில்லை என்று மனதுக்குள் மகிழ.
அவர்தான் தலைவர்.
அன்னை சத்தியா அவர்களின் புதல்வர்.
அன்று 20000 என்பது இன்றைய பணமதிப்பில் 20 லட்சம் பெறுமா. தாண்டுமா...இறைவா நன்றி.. நன்றி..
தொடரும்...நன்றி...
உங்களில் ஒருவன் நெல்லை மணி............
-
1973 ல் வெளியான ....
புரட்சித்தலைவரின்
உலகம் சுற்றும் வாலிபன்
மாபெரும் வரலாற்று காவியத்தை தொடர்ந்து....
ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியான
"பட்டிக்காட்டுப் பொன்னையா"
திரைக்காவியத்தில்...
மக்கள் திலகம்
இருவேட கதாபாத்திரத்தில்
(பொன்னையா.... முத்தையா)
சிறப்பான முறையில் வலம் வந்தனர்...
+++++++++++++++++++++++++++++++++
இக்காவியம் சென்னையில்...
குளோப் 50 நாட்களும்
மகாராணி 36 நாட்களும்
சரவணா 35 நாட்களும்
பழனியப்பா 28 நாட்களும்
ஒடியது....
ஆனால் மற்ற ஊர்களில் மகத்தான
சாதனை படைத்தது...
+++++++++++++++++++++++++
மதுரை அலங்கார் 70 நாள்
வசூல் : 2,11,711.50
சேலம் 84 நாள் ஒடியது....
திருச்சி 77 நாள்
நெல்லை 62 நாட்கள் ஒடியது..
நாகர்கோவில் தங்கம் 50 நாள்
திண்டுக்கல் சோலைஹால் 55 நாள்
ஈரோடு 68 நாள், பாண்டி 58 நாள்
வேலூர் 50, குடந்தை 55 நாள்
தஞ்சை 50, ப.கோட்டை 50 நாள்
கரூர் 50 நாள்.....
++++++++++++++++++++++++++++
கோவையில் ஒரே நேரத்தில்
3 திரையரங்குகளில் திரையிடப்பட்டது
நாஸ் 56 நாள், அருள் 18 நாள்,
டிலைட் 10 நாள் (84 நாள்)
15 திரையில் 50 நாட்கள் ஒடியது...
++++++++++++++++++++++++++++
40 திரையில் வெளியாகி
35 திரையில் 5 வாரங்களும்...
20 திரையில் 6 வாரங்களும்
15 திரையில் 50 நாட்களை கடந்தும் சாதனையாகும்.
++++++++++++++++++++++++++++++
1973 ல் எங்க தகர ராஜா
12 திரையில் தான் 50 ஒட்டபட்டது...
மதுரையில் ஏரியாவில் 9 பிரிண்ட் போட்டு வெளியான இப்படம்
மதுரை மட்டுமே 50 நாள்...100 நாள்
சென்னை 3,வேலூர்,திருச்சி
கோவை, சேலம், நெல்லை, நா.கோவில்
தஞ்சை,குடந்தை...
இதில் 9 தியேட்டர் 100 நாள் ஒட்டபட்டது.
+++++++++++++++++++++++++++++++
1973 ல்
விலாசமில்லாத பாரத விலாஸையும்....
எங்க தகர ராஜாவையும்...
சோளதட்டை ராஜராஜசோழனையும்...
நாடக ராஜபார்ட்டையும்...
ஆணவ கெளரவத்தையும்...
அறுந்த பொன்னுஞ்சலையும்...
மனிதரில் (இருள்) மாணிக்கத்தையும்..
+++++++++++++++++++++++
இப்படி இப்படங்களை
விட அதிக இடங்களில்
அதிக வசூலை தந்த காவியம்
பட்டிக்காட்டுப்பொன்னையா ஆகும்.
++++++++++++++++++++++++
விழுப்புரம்... நாமக்கல்..தர்மபுரி
திருப்பூர்.... பொள்ளாச்சி...உடுமலை
விருதுநகர்... ஊட்டி... பவானி....
ஆத்தூர்.... ராம்நாட்.... கோவில்பட்டி
காரைக்குடி... புதுக்கோட்டை..
காஞ்சிபுரம்.. சிதம்பரம்... தி.மலை
கடலூர்.... தூத்துக்குடி.... தேனி..
தின்டிவனம்.... குடியாத்தம்... மே.பாளையம்....பாண்டிச்சேரி....
இப்படி அத்தனை சென்டரிலும்
உலகம் சுற்றும் வாலிபன்
காவியத்திற்குப் பின் இரண்டாவதாக
அதிக வசூல் பெற்றக்காவியம்...
பட்டிக்காட்டுப்பொன்னயா திரைப்படமாகும்....
++++++++++++++++++++++++++
மற்றும் பி....சி...சென்டர்களிலும்
சாதனை ஏற்படுத்தியது...
++++++++++++++++++++++++++++
1973 ல் இந்தியா திரையுலகில்
உலகம் சுற்றும் வாலிபன்
இமாலயச்சாதனையாகும்...
அந்த வசூல் ஒட்டம் வெற்றி மகத்தானது..
அக்காவியத்தை வெல்ல 1978 வரை எந்த திரைப்படத்தை வெல்ல எந்த படமும் இல்லை..
++++++++++++++++++++++++++++++
ஆனால் பட்டிக்காட்டுப் பொன்னையா பெற்ற வெற்றியையே சந்திக்க முடியாமல் போன பல படங்கள்
பல நடிகரின் படங்களால் தாக்கு பிடிக்காது போனது...
+++++++++++++++++++++++++++
குறிப்பிட்ட சென்னை மதுரை
திருச்சி நெல்லை, நாகர்கோவில்
தவிர ஏனைய ஊர்களில்....
பட்டிக்காட்டுப்பொன்னையா
85 சதவீகிதம் சாதனையில்....
வசூலில்...... முதலிடமாகும்!
+++++++++++++++++++++++++++++
பட்டிக்காட்டுப்பொன்னையா
கோவையில் மட்டும்
2010 முதல் 2019 வரை
12 முறை வெளிவந்துள்ளது...
(நாஸ், டிலைட், சண்முகா).........ukr.........
+++++++++++++++++++++++++++++++
-
1972 ல் வெளியானா
நடிகப்பேரரசின் "நான் ஏன்பிறந்தேன் " காவியம்
வெளியாகி மகத்தான வெற்றியை படைத்தது...
சென்னையில் 9 வாரத்தில்
ஒடி முடிய 8 லட்சத்தை கடந்தது...
சென்னையில் 4 அரங்கில் வெளியாகி அனைத்திலும் 50 நாட்களை கடந்தது.
சென்னை பழனியப்பா அரங்கில் 50 நாள் ஒடிய முதல் காவியம்.
சென்னை அரங்குகள்
குளோப் 67 நாள் : 2,77,185.00
கிருஷ்ணா 66 நாள் : 2, 65,229.50
சரவணா 50 நாள் : 185,755.54
பழனியப்பா 50 நாள் : 1,55,990.35
++++++++++++++++++++++++++
மொத்த வசூல் : 8,84,160.39
++++++++++++++++++++++++++++
வடசென்னையில்
சங்கே முழங்கு கிருஷ்ணா
69 நாள் வசூல் : 2,33,071.50
நல்லநேரம் மகாராணி
105 நாள் வசூல் : 3,45,615.85
ராமன் தேடிய சீதை கிருஷ்ணா
64 நாள் வசூல் : 2, 21,953.60
நான் ஏன் பிறந்தேன் கிருஷ்ணா
66 நாள் வசூல் : 2,65,229.50
அன்னமிட்டகை பிரபாத்
50 நாள் வசூல் : 1,95,250.38
இதயவீணை கிருஷ்ணா
86 நாள் : 3,23,505.40
வடசென்னையில் மட்டும்
மக்கள் திலகத்தின் 6 திரைப்படங்கள்
16 லட்சத்தை வசூலில் கடந்தது...
+++++++++++++++++++++++++
மதுரை தங்கம் 10 வாரத்தில்
3 லட்சத்தை தொட்டது...
ஒரு வார வசூல் ;.62,094.00 ஆகும்.
இரண்டு வார வசூல் : 1,11,,300.50 ஆகும்.
4 வார வசூல் : 1,78,984.55 ஆகும்.
50 நாள் வசூல்! : 2,64,689.40 ஆகும்.
+++++++++++++++++++++++++++++++
கோவை இருதயா / அருள் 99 நாள்
வசூல் : 3,26,119.30 ஆகும்.
+++++++++++++++++++++
44 அரங்கில் வெளியாகி...
28 தியேட்டரில் 50 நாள்..
++++++++++++++++++++++
திருச்சி 84, தஞ்சை 63 , குடந்தை 63
மாயூரம் 53, ப.கோட்டை 53, கரூர் 53
திண்டுக்கல், பழனி, கடலூர் 53
காரைக்குடி, விருதுநகர்....
ஈரோடு 70 நாள், திருப்பூர் 53 நாள்
சேலம் 83 நாள், பாண்டி 68 நாள்
ஆத்தூர் 53, தர்மபுரி 53, வேலூர் 66
காஞ்சிபுரம் 50 நாள், நெல்லை 58
நாகர்கோவில் 50 நாள்...
+++++++++++++++++++++++++
இலங்கையில்....
நகரில் ஒரே நாளில் 8 காட்சி
நடைபெற்ற முதல் காவியம் ...
நடு இரவு 12 மணிக்கு காட்சி ஆரம்பிக்கபட்டு சாதனை....
ஜெசிமா 77 நாள்
ராணி 75 நாள்
கல்பனா 52 நாள்
அனைத்து ஏரியாக்களிலும் சாதனை.
+++++++++++++++++++++++++++
பெங்களுர்...
அபேரா 6,நடராஜ் 6,சிவாஜி 6,
18 வாரங்கள் ஒடியது....
+++++++++++++++++++++++
குறுகிய நாட்களில் அதிக வசூல் பெற்றக்காவியம்..........ukr...
-
மதுரை மக்கள் திலகத்தின் கோட்டையாக திரையுலகத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் விளங்கியது. அரசியலில் யாரும் நெருங்க முடியாத வெற்றியை தலைவருக்கு பெற்று தந்தது தென் மாவட்டங்கள்தான்.தெற்கில் வெற்றிக்கொடியை பறக்க விட்ட அதிமுக திமுக வசம் இருந்த மெஜாரிட்டி தொகுதிகளை
அதிமுக வசம் சேர்த்தது தலைவரின் அளப்பரிய ஆற்றலால்.
அதில் முக்கியமானதுதான் மதுரை.
அப்பேர்ப்பட்ட எம்ஜிஆர் ஆளுமை நிறைந்த மாநகர் எம்ஜிஆர் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய காலத்தில் அவர் படைத்த சாதனைகள் எண்ணிலடங்கா.
அவருடைய எந்தப்படமும் இயற்கையாகவே மதுரையில் சாதனை செய்யும். அந்தந்த காலகட்டங்களில் அவருடைய படங்கள் செய்யும் சாதனையை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது.
அதை முறியடிக்க ஒரு சிலர் வடக்கயிறோடும், ஸ்டெச்சரோடும்
மதுரையில் ஒரு சில திரையரங்குகளில் அலைவதை பார்த்தால் பாவமாக இருக்கும். சங்கம் வளர்த்த மதுரை புரட்சி நடிகரின் திரைப்படங்களை வரவேற்பதில் மற்றவர் படங்களை விட முன்னிலை பெறுவது ஒன்றும்
ஆச்சர்யமானதல்ல. 1973 ல் அப்பேர்ப்பட்ட மகத்தான சாதனையை செய்தது மக்கள் திலகத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்".
சுமார் 20 ஆண்டுகள் கழித்து வந்த கமல் நடித்த "தேவர் மகன்" படத்தால் கூட கமலின் பின்னால் ஒளிந்து நின்ற சிவாஜியால் முறியடிக்க முடியவில்லை என்பது ஆச்சர்யமான ஒன்று என்றால் மிகையில்லை.
"தேவர் மகன்" படத்தின் விளம்பரத்தை கவனியுங்கள், அதில் எங்கள் திரையரங்கில் "உலகம் சுற்றும் வாலிபனு"க்கு பிறகு "தேவர் மகனு"க்குதான் இவ்வளவு வரவேற்பு இருந்தது என்கிறார்கள்.
4 வார வசூல் சுமார் ரூ 602000 என்று போட்டிருக்கிறார்கள். "உலகம் சுற்றும் வாலிபன்" 31 வாரங்களில் பெற்ற வசூல் ரூ685000. ஆனால் இது 1973 நிலவரம். அதனால் படத்தை பார்த்தவர்களை வைத்து வசூலை மதிப்பிடலாம்."தேவர் மகனை" 4 வாரத்தில் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 166000
பேர். ஆனால் "உலகம் சுற்றும் வாலிபன்" 31 வாரங்களில் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 725000.
ஒரு சின்ன கணக்கு. 166000
பார்த்து வந்த வசூல் ரூ 602000 என்றால் 725000 பேர் பார்த்தால் வசூலாகும் தொகை சுமார் ரூ 26,30,000 வருகிறது. அதாவது 26 லட்சத்துக்கும் மேல். "தேவர் மகன்" மதுரையில் வெள்ளி விழா மீனாட்சி பேரடைஸில் கொண்டாடியது. ஆனால் தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" மீனாட்சியிலேயே வெள்ளி விழா தாண்டி 217 நாட்கள் வரை ஓடி சாதனை செய்தது. மீனாட்சி பாரடைஸ் மிகவும் சிறிய தியேட்டர் என்பதால் பார்வையாளர்கள் நிச்சயம் "உலகம் சுற்றும் வாலிபன்" அளவுக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.
முதல் 4 வார பார்வையாளர்களை எடுத்துக்கொண்டால் தொடர்ந்து hf
ஆகியிருக்க வாய்ப்பில்லை. மேலும் "தேவர் மகன்" வந்த காலத்தில் தினசரி 4 காட்சிகளுக்கும் குறைவில்லாமல் திரையிடப்பட்டது.
ஆனால் "உலகம் சுற்றும் வாலிபன்" காலத்தில் தினசரி 3 காட்சிகளும் சனி ஞாயிறு 4 காட்சிகளும் திரையிடப்பட்டது என்பது நினைவு கூறத்தக்கது. எனவே காட்சிகள் அதிகம் திரையிடப்பட்டும் "உலகம் சுற்றும் வாலிபனி"ன் பார்வையாளர்களை நெருங்க முடியவில்லை என்பதே யதார்த்தம்.
காலம் கடந்தும் அவருடைய சாதனை நிலைத்து நிற்கும் ஆற்றல் படைத்தது. மேலும் 20 வருடங்களில் மக்கள் பெருக்கம் பல மடங்கு அதிகரித்ததையும் கணக்கில் எடுத்தால் மதுரையில் மட்டும் கிட்டத்தட்ட சுமார் 75 லட்சத்துக்கும் அதிகமாக வசூலாகியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. எத்தனை சூலங்கள் வந்தாலுமே தலைவரின் வசூல் வியூகத்தில் சிக்கி சின்னாபின்னமாகிப் போவார்கள்
என்பது திண்ணம்.
இன்று வரை எந்தப் படமும் இவ்வளவு பார்வையாளர்களை பெற்றதில்லை என்பது திண்ணம். மதுரையில் 1991 ல் மக்கள் தொகை சுமார் 20 லட்சம் இருக்கலாம். ஆனால் 1971 ல் சுமார் 7 லட்சம்தான் மக்கள் தொகை. உலகம் சுற்றும் வாலிபனை பார்த்தவர்களோ சுமார் 725000 பேர்.
1992 என்றால் சுமார் 20 லட்சம் பேர் பார்த்திருக்க கூடும்.
நாம் நடிகப்பேரரசரில் பதிவாகும் அத்தனைக்கும் ஆதாரங்கள் இல்லாமல் தருவது கிடையாது. தகுந்த ஆதாரங்களை வைத்து மதிப்பீடு செய்கிறோம். யாரையும் இழிவு படுத்தும் நோக்கம் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
மாற்று கருத்து இருந்தால் தகுந்த(போலி அல்ல) ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்..........ksr.........
-
ஒரு முறை படப்பிடிப்பு இடை வேலையில் ஆழ்வார் குப்புசாமி என்ற நாடக நடிகர் தலைரை தேடி வந்து திருமண உதவி தன் மகளுக்கு கேட்க அன்றே ஒரு கணிசமான தொகையை அவரிடம் தருகிறார் பொன்மனம்.
அத்துடன் நில்லாமல் அதே படத்தில் ஒரு வேஷம் கொடுக்க ஸ்ரீனிவாசன் அவர்கள் இடம் பரிந்துரை செய்கிறார்.
ஆண்டவன் சொல்லக்கு மறுப்பு ஏது.... உடனே படத்தில் நடிக்க ஒரு பட்லர் வேடத்தில் அவர் நடிக்கட்டும் என்று அவர் சொல்ல...உடன் முன் பணம் 500 கொடுக்க படுகிறது.
தலைவர் சிரித்து கொண்டே குப்புசாமி இது முன் பணம் தான் காட்சிகள் முடிந்த உடன் அதுக்கு தனி சம்பளம் உண்டு என்று சொல்ல.
இரட்டை மகிழ்ச்சி அவருக்கு...தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு எந்த எல்லையும் இல்லாமல் உதவி செய்யும் ஒரே மாமனிதர் புரட்சிதலைவர் மட்டுமே.
இது ஸ்ரீனிவாசன் சொல்லும் கருத்து தலைவர் பற்றி.
யார் இந்த சீனிவாசன் என்றால் நடன இயக்குனர் புலியூர் சரோஜா அவர்களின் கணவரே இவர் ஆவார்.
வாழ்க தலைவர் புகழ்.
தொடரும்...உங்களில் ஒருவன்.....
நெல்லை மணி..நன்றி.... Dr
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி 29/10/20 அன்று அளித்த தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
சாமான்ய மக்களின் தெய்வம் என்று* அழைக்கப்படுகிற* எம்.ஜி.ஆர். என்பவரது வரலாறு நமக்கெல்லாம் பாடம், படிப்பினை, ஒரு புதிய பாதை .
ஒரு விழாவில் பேசிய ஸ்டண்ட்* நடிகர் மற்றும் பயிற்சியாளர்* ஜாக்குவார் தங்கம் என்பவர் ஒரு கருத்தை சொன்னார் . எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருக்கிறார் . அவரைத்தேடி ஒரு மாமியாரும், மருமகளும் வருகிறார்கள் .* மருமகளோ இளம்பெண் . மாமியார் கொஞ்சம் வயதானவர் .இருவரும் சேர்ந்து அழுது* கொண்டு இருக்கிறார்கள் .* உதவியாளர் கேட்கிறார் .என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் என்று . இல்லை. முதல்வர் ஐயாவை பார்க்க வேண்டும் ஒரு விஷயமாக என்கிறார்கள் .சிறிது நேரம் கழித்து முதல்வர் எம்.ஜி.ஆர். வருகிறார் .என்ன விஷயமாக வந்துள்ளீர்கள். ஏன் இருவரும் அழுகுகிறீர்கள் என்று கேட்கிறார் .என் மகன் இறந்துவிட்டான். என்னுடைய மருமகள் இவர். எங்களுக்குள் பிரச்னை இல்லை . என் கணவரும் இறந்துவிட்டார் . எங்களுக்கு ஒரு சிறிய வீடும் ,வீட்டுக்கு பின்னால் ஒரு சிறிய* நிலம் இருக்கிறது .* அந்த நிலத்தை உங்கள் கட்சியை சார்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததோடு* வீட்டையும்* அபகரிக்க* முயற்சி செய்கிறார் .எங்களுக்கு சொந்தம் கொண்டாட உறவினர் யாருமில்லை .* எங்களுக்கு என்று யாரும் இல்லாதபோது, பாதுகாப்பு, அதற்கான வழிமுறைகள் எல்லாம் நீங்கள்தான் என்று எண்ணி இருந்த உங்கள் கட்சிக்காரரிடம் இருந்து எங்களுக்கு ஆபத்து வந்திருக்கிறது .* என்ன செய்வதென்று தெரியவில்லை .என்கிறார்கள்.* எம்.ஜி.ஆர்.*ஜாக்குவார் தங்கத்திடம் தொடர்பு கொண்டு, இன்று ஒருநாள் மட்டும் இருவரையும் உங்கள் இல்லத்தில் தங்க வையுங்கள் . நாளை மதியம் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வாருங்கள் என்கிறார் .* மறுநாள் மதியம் அனைவரும் ராமாவரம் தோட்டம் செல்கிறார்கள் .* எம்.ஜி.ஆர். ஒரு அறைக்கு அந்த இரு பெண்களையும் அழைத்து செல்கிறார்* நீங்கள் இருவரும் இங்குள்ளவர்களில் யாரையாவது பார்த்த ஞாபகம் இருக்கிறதா என்கிறார் .* அவர்கள் பதிலளிக்கவில்லை .அங்கிருந்த கட்சிக்காரர் ஒருவரை இந்த பெண்களை உங்களுக்கு தெரியுமா என்று கேட்கிறார் .* அதில் ஒருவர் மழுப்பலாக பேசுகிறார் . நிச்சயமாக உங்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது . தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள் என்றவர் வேகமாக நாற்காலியில் இருந்து எழுந்து வந்து ,அந்த கட்சிக்காரரை பளார் என்று கன்னத்தில் பலமாக அறைந்தாராம் எம்.ஜி.ஆர் .*அதை கண்ட ஜாக்குவார் தங்கம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம் .நீங்கள் எனது கட்சிக்காரராக இருக்கலாம். அதற்காக இப்படியா அத்து மீறுவது*அவர்களுடைய நிலத்தையும், வீட்டையும் உடனடியாக திருப்பி கொடுங்கள். திருப்பி கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா என்று மிரட்டியது மட்டுமல்லாமல் இதுவெல்லாம் நாளைக்கே நடந்தாக வேண்டும் என்று சொல்லி அனுப்பினாராம் எம்.ஜி.ஆர். அந்த பெண்களிடம் நீங்கள் இவர்களுக்காக பயப்பட வேண்டிய அவசியமில்லை .நான் உங்கள் மாவட்ட ஆட்சியருக்கும் , காவல்துறை கண்காணிப்பாளருக்கும் தொடர்பு கொண்டு சொல்லிவிட்டேன் .அவர்கள் எப்போதும் உங்கள் தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பார்கள் .உங்களுக்கு ஏதாவது பிரச்னை நேர்ந்தால் உடனே அவர்களை தொடர்பு கொள்ளலாம் நீங்கள் எதற்கும், யாருக்காகவும் பயப்பட வேண்டாம். இந்த வீடு*யாருடையது என்று கேட்டால் எம்.ஜி.ஆர். வீடு என்று சொல்லுங்கள் . நான் எப்போதும் உங்களுடைய அழைப்புக்காக காத்திருப்பேன் .* உங்களுக்கு காவல்காரனாக இருந்து பணியாற்றுவேன் என்று சொன்னாராம் எம்.ஜி.ஆர்.**
எம்.ஜி.ஆரும் ,நடிகர் காக்கா ராதாகிருஷ்ணனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து தாய்க்கு பின் தாரம் படத்தில் நடித்துள்ளார்கள்*காக்கா ராதாகிருஷ்ணன் வைத்திருந்த நவீன துப்பாக்கியைத்தான் படப்பிடிப்புக்கு, வேட்டைக்கு* போகும்போதெல்லாம் எம்.ஜி.ஆர். வாங்கி செல்வாராம் .* அந்த அளவிற்கு நெருக்கமானவர்கள் .* தாய்க்கு பின் தாரம் படத்தில் அந்த கிராமத்தினர் ஒருவரை ஏளனமாக பேசியதால் காக்கா ராதா கிருஷ்ணனை தாக்குவது போல ஒரு காட்சி .* எம்.ஜி.ஆர். அந்த காட்சியை அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து பார்த்து கொண்டிருக்கிறார் .* ஆனால் அந்த துணை நடிகர் காக்கா ராதாகிருஷ்ணனை வெளுத்து வாங்குகிறார் . ஒரு கட்டத்தில் நிஜமாகவே அடிக்கும்போது படத்தின் இயக்குனர், மற்றவர்கள் யாரும் தடுக்க முயலவில்லை .எம்.ஜி.ஆர். கட் கட் என்று சொல்லியபடியே இடைமறித்து நீங்கள் எதற்காக இப்படி அடிக்கிறீர்கள் என்று கேட்கிறார் .அருகில் இருந்தவரை அழைத்து, காக்கா ராதாகிருஷ்ணனை அருகிலுள்ள மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்காக அழைத்து செல்லுங்கள் என்றாராம் .அப்படி தனது படப்பிடிப்பில், பிறர் பாதிக்கப்பட்டாலும், துன்பப்பட்டாலும் ,அவர்மீது அக்கறை கொண்டு உரிய பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை செய்வதில் முனைப்பாக இருப்பவர் எம்.ஜி.ஆர். என்று தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் காக்கா ராதாகிருஷ்ணன் .* அதுபோல தன்னுடைய சக தொழிலாளிகள் யார் யாருக்கெல்லாம் சம்பளம், கூலி குறைவாக இருக்கின்றதோ,அவர்களை தேடி பிடித்து , அவர்களுக்கு தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கணிசமாக தொகை கொடுத்து உதவும்* பண்பு அவரிடம் இருந்ததாம் .*
திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும்,*நாஞ்சில் மனோகரன், கல்யாணசுந்தரம் போன்றவர்கள் ஆவடிக்கு செல்லுகின்ற நேரத்தில் தி.மு.க.வினர் திரண்டு வந்து எம்.ஜி.ஆர். அவர்கள் செல்லுகின்ற வேன்* இதுதானே என்று சொல்லி*நொறுக்கிய நேரத்தில்,முன்கூட்டியே எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தெரியப்படுத்தி*அவர் மாற்று காரில் சென்ற காரணத்தால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உயிர் தப்பினார். அந்த அளவிற்கு* அன்றைக்கு ஆளும்*தி.மு.க.வினர் மிரட்டல்கள் தொடுத்த நேரத்தில், தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பயப்படாமல் களம் கண்டு தன்னுடைய எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்கு அண்ணாவின் கொள்கைகளை இந்த நாட்டிலே*பரப்புவதற்கு தன்னை*ஈடுபடுத்தி கொண்டார் என்று சொன்னால்* நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும் தோழர்களே, ஒன்றே ஒன்று . நான் முன்பே* சொன்னது போல வாழ்விலே*அவருக்கு என்ன குறை இருக்கிறது என்று* பார்த்தால்*ஒன்றுமே கிடையாது . பயணப்படுவதற்கு**மூன்றுக்கு மேற்பட்ட கார்கள் இருக்கின்றன. ஒரு பெரிய தோட்டம் இருக்கிறது .* அனைத்து வசதிகளும் நிறைந்த வீடு இருக்கிறது . பாதுகாப்பிற்கு உதவியாளர்கள்* இருக்கிறார்கள் பணம் உதவி செய்வதற்கு உகந்த முதலாளிகள் இருக்கின்றார்கள் .* இந்த சூழலில் ஒரு ரிஸ்க்கை*எடுத்து கொண்டு*,ரிஸ்க் என்றால் சாதாரண* ரிஸ்க் அல்ல தோழர்களே, அன்றைக்கு 184 எம்.எல்.ஏக்களை எதிர்த்து குரல் எழுப்பினார், களம் கண்டார்* என்று சொன்னால்*, நாம் நினைத்து பார்க்க கடமை* பட்டிருக்கிறோம் இன்றைக்கு நாம் எண்ணி பார்க்கின்றோமே* ஒவ்வொரு கால கட்டத்திலும் நாம் நம்முடைய பாதுகாப்பை மட்டுமே கருத்திலே கொண்டு*என்ன தவறுகள்*நடந்தாலும் சரி, அதை பற்றி* நமக்கு அக்கறை இல்லை என்கிற*அளவிற்கு இருக்கின்ற தலைவர்களையும், பிரபலங்களையும் தான் நாம் பார்க்கின்றோம்.* ஆனால் தனக்கு வரப்போகின்ற பாதிப்புகள், ஆபத்துகளை உணர்ந்தும்கூட அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. இந்த நாட்டு மக்களுக்கு*ஏதாவது நல்லது நான் செய்தாக வேண்டும் அண்ணாவின் கொள்கைகள், லட்சியங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று சொல்லி*அவர் அன்றைக்கு ஆரம்பித்த இயக்கமானது அவருடைய உயிருக்கே,பல்வேறு வகைகளில்*சிக்கல்களை* தந்தபோது*அவற்றையெல்லாம் அவர் முறியடித்தார் .* திண்டுக்கல்*இடை தேர்தலில் அவர் சென்றபோது , பலபேர்* சொல்கிறார்கள் எம்.ஜி.ஆர். அவர்கள் லட்சக்கணக்கான பணங்களை* வைத்து கொண்டுதான்* தேர்தலை சந்தித்தார் என்று .* ஆனால் உண்மை அதுவல்ல. அவரிடம்*போதிய பணம் கிடையாது .* தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு வாகனங்களுக்கு டீசல்*போடுவதற்கு*போதிய பணம் இல்லாமல் அவருடைய வாகனங்கள் சாலையில் ஸ்தம்பித்து நின்ற நேரத்தில் சென்னையில் பிரபல*பட தயாரிப்பாளர்* ஆர்.எம்.வீரப்பனை*தொடர்பு கொண்டு எப்படியாவது சத்யா ஸ்டுடியோவை அடகு வைத்தாவது*எனக்கு*உடனடியாக தேர்தல் செலவுகளுக்கு பணம் அனுப்புங்கள் என்று சொல்லி* அந்த பணம் வந்தபிறகு வாகனங்களுக்கு டீசல்*போட்ட விவரங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியும்.**
திண்டுக்கல் தேர்தலில் அவர் அப்படி பணியாற்றி கொண்டிருந்த நேரத்தில் யாராவது ஒருவர் ரூ.5,000/-* தருகிறேன் ,எங்கள் ஊருக்கு , கிராமத்திற்கு வாருங்கள்*என்று அழைத்தால்*அது 50,100 கி.மீ. தூரம் இருந்தாலும் கவலைப்படாமல் பகலில் சென்று*அந்த கூட்டங்களில் கலந்து கொண்டு, அங்கு* கழக தோழர்கள்* திரட்டிய* *நிதியை*வாங்கி வந்து ,திண்டுக்கல்லில் மாயத்தேவர்*போட்டியிட்ட*நேரத்தில்,அவருக்கு உதவி செய்துதான்*இந்த கட்சியை வளர்த்தார் . மே*1ம் தேதி அன்று உடுமலைப்பேட்டைக்கு எம்.ஜி.ஆர். அவர்களை நானும், அண்ணன் குழந்தைவேலு அவர்களும்*அழைத்து வந்து உடுப்பி*திடல்*என்ற இடத்தில பொதுக்கூட்டம் நடத்தி ,தேர்தல் நிதி* ரூ.10,000/- வசூலித்து அண்ணன் குழந்தைவேலு மூலம் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கொடுத்து, தலைவரை*அண்ணன் குழந்தைவேலு வீட்டிற்கு*அழைத்து சென்று*அங்கு எங்களோடு அமர்ந்து*தலைவர் எம்.ஜி.ஆர். உணவருந்திய வாய்ப்பை*எண்ணி மகிழ்ந்தோம்*ஒரு மாபெரும் தலைவர், மக்கள் தலைவர், நாடு போற்றும் தலைவர் , நல்லவர் தமிழகம் மட்டுமல்ல ,இந்தியா முழுவதும்*நன்கு அறிமுகமான தலைவர்* அவர் சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய கூடிய தொண்டர்கள் கொண்ட*அந்த மாபெரும் தலைவரோடு*,ஒரு சாமான்ய*தொண்டன்*லியாகத் அலிகான் போன்றவர்கள் எல்லாம் அவருடன் அமர்ந்து*உணவருந்தும் வாய்ப்பு கிடைத்தது என்று சொன்னால் , தியாகத்தை, தியாகியை என்றைக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கைவிட்டது கிடையாது அவர் தான தருமங்கள் செய்வதைக்கூட பார்ப்பீர்களேயானால் இங்கே ஒருபுறம் வசூலாகும். அதே தொகையை மறுபுறம் தானமாக கொடுத்துவிடுவார் .பணமில்லை என்று சொன்னால்*தன்னுடைய நண்பர்களிடம் கடனாக வாங்கி*அங்கே தான தருமங்கள் செய்தவர்தான் நமது*தலைவர் .* அவரது*ஆரம்ப கால எதிர்க்கட்சி வாழக்கையை எடுத்துக்கொண்டால் எத்தனையோ இன்னல்களை சந்தித்துதான் முன்னேற்றம் கண்டு வெற்றிகளை அடைந்தார் .* அ.தி.மு.க.வின் முதல் தியாகி இஸ்மாயில் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது*இல்லத்திற்கு விஜயம் செய்தபோது ஒரு திட்டத்துடன்தான் வந்தார்*.* மே .தின* கூட்டத்தில் நாங்கள் கொடுத்த ரூ.10,000/ பணத்துடன்* அவர் சொந்த*தொகையான ரூ.15,000/- போட்டு மொத்தம் ரூ.25,000/- பணத்தை*மறைந்த*தொண்டர் இஸ்மாயிலின் தாயாரிடம் எங்கள் கைகளின்**மூலமாக*அந்த பணத்தை கொடுக்க செய்தார் .* இஸ்மாயிலின் தாயாரிடம் இந்த நிகழ்வு மிகவும் சோகமானது. இப்படி* நடந்திருக்கக்கூடாது .அதற்காக*நான் மிகவும் மனம் வருந்துகிறேன் .* எதற்கும் கவலைப்படாதீர்கள்*உங்கள் குடும்பத்திற்கு அ.தி.மு.க. கடமைப்பட்டுள்ளது என்று கூறி அரைமணி நேரத்திற்கு மேலாக அவர்கள் இல்லத்தில் இருந்து ஆறுதல் கூறினார் .**
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு, உடுமலை*இஸ்மாயீலின் தந்தைக்கு*புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானபோது, கோட்டையில் தலைவரை*1978ல் சந்தித்து*இஸ்மாயீலின் தந்தைக்கு*புற்றுநோய் என்று சொல்கிறார்கள் தலைவரே என்றபோது , அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தவர்தான்*. தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்..புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில் இந்த இயக்கத்தில் சேர்ந்ததால்தான்* நான் ஒரு மதிப்புக்கு உரியவனானேன் .* நான் ஒரு விஷயத்தை பற்றி தலைவரிடம் சொன்னால் ,அதற்கு மதிப்பளித்து அதற்குரிய உதவிகளை*செய்ய முற்பட்டு,25 வயதுள்ள ஒரு இளைஞன்தானே என்று நினைக்காமல், அவன்* எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அளவிற்கு*,சிந்தித்து, முடிவுகள் எடுத்து, தியாகத்தை போற்றுகின்ற*தலைவர்தான்*நமது புரட்சி தலைவர் . அந்த மாபெரும் தலைவரின், உழைப்பு, சிந்தனை, எளிய, சாமான்ய*தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பண்பு, தியாகத்தை போற்றும் தன்மை ஆகியவற்றை* நினைத்து பார்க்கின்றபோது என் இதயம் கனத்து*போகிறது . அந்த அளவிற்கு*தன்னுடைய*வாழ்க்கை முறைகளை நடத்தி வந்த*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி, 1980ல் சதி திட்டத்தால், கலைக்கப்பட்டது . கவிழ்க்கப்பட்டது . அந்த நேரத்தில் எத்தனையோ எதிர்ப்புகள் அவர்மீது*தொடுக்கப்பட்டன .* எத்தனையோ தோழர்கள் கட்சியில் இருந்து இழுக்கப்பட்டார்கள் .* நாஞ்சில் மனோகரன், சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்றவர்களும் தி.மு.க.விற்கு சென்றார்கள் .* எதுபற்றியும் கவலைப்படாமல்*தன்னுடைய கடமை ஆற்றிக்கொண்டிருந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*வங்கி கணக்கில் அன்றைக்கு இருந்த*இருப்பு வெறும் ரூ,30,000/-தான் இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**
திருவல்லிக்கேணி சிங்காரவேலு அவர்கள் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார் .பலரை*உண்ணவைத்து அந்த அழகை* ரசிப்பவர்கள்தான் யோகி என்று திருவருட்பாவில் வள்ளலார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் .* பிறர் உண்பதை, தான் உண்டு பசியாறுவது போல ஒரு நிம்மதி பெருமூச்சு விடுகிற பெருமகனார் எம்.ஜி.ஆர். அவர்கள்.* வாழும்போதெல்லாம் யார் யாருக்கெல்லாம் என்னென்ன நேரங்களில் பசி என்கிற கொடுமை*யின்*உச்சத்தைசந்தித்தார்களோ, அதை* எம்.ஜி.ஆர்.அவர்கள் தன் சிறு வயதிலேயே சந்தித்தார் தன்னை சந்திக்க வருகின்ற அனைவரையுமே*பசியாற்ற வேண்டும் என்கிற*வாழும் வள்ளலாக*எம்.ஜி.ஆர். திகழ்ந்தார் என்று சொன்னால் மிகையாகாது .**
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்*- நான் ஆணையிட்டால்*
2.நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு பிள்ளை*
3. அன்று வந்ததும் அதே நிலா - பெரிய இடத்து பெண்*
4. திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*.**.**
**
-
# அகிலத்தை உய்விக்கும் ஆதவனும்
ஊளையிடும் குள்ள நரிகளும் #
எங்கு பார்த்தாலும் தலைவர் பெயர் புகழ்க் கொடி வீசி பறப்பதை பார்க்கும் போது தலைவரின் பக்தர்கள் நமக்கெல்லாம் ஆனந்தத்தில் கூத்தாட வேண்டும் போல் இருக்கிறது,
ஆனால் இங்கே ஒரு சில குள்ள நரிகள் எங்கிருந்து கொண்டோ ஊளையிட்டுக் கொண்டு வயிறு எரிந்து
வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறதுகள்
இப்போது கூட ஒரு கட்சியினர் நடத்தப் போகும் யாத்திரை ஒன்றில் தலைவரை மட்டும் உருவகப் படுத்தி
ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார்கள், அதை பார்க்கும் போது என்னே தலைவரின் மகிமை என்று எண்ணத் தோன்றுகிறது,
நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லுவது இல்லை
ஆனால் எதையாவது ஒன்றை தினசரி புலம்பிக் கொண்டே இருப்பது,
நாம் இலங்கையில் சாதனை சரித்திரத்தை ஏற்படுத்திய தலைவரின் " உலகம் சுற்றும் வாலிபன் " பட சரித்திரத்தை கொடுத்த வுடன் உடனே இங்கே ஈயம், பித்தளை ரேஞ்சில் கூட சீந்த ஆளில்லாத " போலட் பெரம்பு நாத் " படம் இலங்கையில் 50 லட்சம்
வசூல் செய்தது என்று ஒரு பிட்டப் போட்டு நிம்மதி அடைந்திருக்கிறார் நம்ம மன்னாரன் கம்பெனி டுபாக்கூர் தங்கவேல் ( சாமியோவ் போட்டதுதான் போட்டீங்க ஒரு கோடியா போட்டிருக்கக் கூடாதா? )
இந்த பெரம்பு நாத் படம் ஒரு இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பு,
இங்கே சட்டி கமந்ததும்
இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன நிறுவனமே போட்டு மரண இழு இழுத்ததில்
படம் ஓடிய தியேட்டர்களே இருந்த ஒன்றிரண்டு பேர்களை தாலாட்டி தூங்க வைத்ததைத் தவிர வேறு ஒன்றையும் சாதிக்கவில்லை,
ஆனால் இவ்வளவு காலம் கழிந்து நம் டுபாக்கூர் எப்படி அளந்திருக்கிறது பார்த்தீங்களா இதுதான் நம்ம தங்கவேலின் ஸ்பெஷாலிட்டி,
அடுத்தது தலைவரும் 1980 பாராளுமன்ற தேர்தலில் தோற்றவராம், அதனால் அவரை தோற்கடிக்கவே முடியாது என்பது பொய்யாம், இன்னும் இத்யாதி, இத்யாதி கதைகள்,
ஆனால் இந்த கதைகளை சொல்லுவது யார் என்றால் கணேசனை ஒரு வார்டு மெம்பர் கூட ஆக்க முடியாத சல்லிப்
பயலுக சொல்லுவதை பார்க்கும் போதுதான் நமக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது,
எம்ஜிஆர் எப்படி ஜெயித்தார் என்று ஆராய்ச்சி வேறு,
ஏண்டா துப்புக் கெட்ட பயலுவளா இதை சொல்லுவதற்குதான் ஒரு அருகதை வேண்டாமா?
எம்ஜிஆர் ஒரு கல்யாண வரவேற்பில் கலந்து கொண்டு வெளியில் வந்தாராம் அப்போது ஒரு நாலைந்து பெண்கள் ஒரு கடையில் சோடா குடித்துக் கொண்டிருந்தார்களாம்
உடனே தலைவர் அவர்களைப் பார்த்து இரட்டை விரல்களை காட்டினாராம்,
ஆனால் அவர்கள் ஐந்து
விரல்களை விரித்து காட்டியவுடன் தலைவர் வெல வெலத்துப் போய் விட்டாராம்
இந்த செய்தி அன்றைய ஒரு பத்திரிகையிலும் வெளி வந்ததாம்
சரி இதை உண்மை என்றே வைத்துக்கொள்வோம்
இவர்கள் குறிப்பிட்ட அந்த பத்திரிகையின் லட்சணத்தையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்,
1980 இல் தலைவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று வந்த பிறகு இவர்கள் ஒரு புலனாய்வு இதழ் ஒன்றை ஆரம்பித்தார்கள்,
பொதுவாக புலனாய்வு இதழ்கள் என்றாலே ஒரு
Anti writing method முறையை வைத்திருப்பார்கள்,
அதாவது நல்ல செய்திகள் எவ்வளவு போட்டாலும் அதற்கு எதிர்மாறாக அரசை எதிர்த்து ஏதாவது போட்டால் அதைத்தான் அதிகம் பேர் விரும்பி படிப்பார்கள்
இந்த ஒரு தந்திரத்தைதான் அந்த புலனாய்வு இதழும் கையாண்டது
தொடர்ந்து மழை இல்லாமல் தமிழ்நாடே தத்தளித்துக் கொண்டிருந்தபோது தலைவர் அரிசி விலையை கட்டுக்குள் வைத்திருந்ததை அவர்கள் எழுதவில்லை, யாரும் சிந்திக்காத தெலுங்கு கங்கை திட்டத்தை கொண்டு வந்ததை அவர்கள் எழுதவில்லை மாறாக
திண்டுக்கல் பக்கத்தில் ஒரு கிராமம் தண்ணீருக்கு கஷ்டப்படுவதையும் அதற்கான தீர்வை அரசு எடுக்கவில்லை என்றும் குறை சொல்லி எழுதியது,
இந்த செய்தி வெளிவந்தவுடன் தலைவரின் கவனத்திற்கு சென்றது,
தலைவர் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கடுமையாக கண்டித்ததோடு உடனே அந்த கிராமத்தில் தண்ணீர் வசதிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடுக்கி விட்டார்,
ஆனால் இதை எதையும் அந்த ஏடு எழுத வில்லை
உடனே கலையுலக பேரறிவாளி பாலச் சந்தரும் அதை " தண்ணீர் தண்ணீர் " என்று அரசை விமர்சித்து படமாக எடுத்தார்,
தலைவர் அதற்காக கோபப்படவில்லை மாறாக தமிழக அரசின் விருதுக்கு அந்த படத்தை தேர்ந்தெடுத்தார்,
ஒரு மனிதன் எப்படிப்பட்ட நல்ல மனிதனாக இருந்தாலும் 100 சதம் நல்லாட்சியை கொடுப்பது கடினம்,
பகவான் ராமச்சந்திர மூர்த்தி கூட என்னை ஏன் பின்னால் இருந்து அம்பு எய்து வீழ்த்தினாய் என்ற வாலியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை
அது போல் ஒரு அரசாங்கம் என்றால் அதிகாரிகளின் கவனக்குறைவால் சில தவறுகள் நடக்கத்தான் செய்யும்,
ஆனால் அப்போதெல்லாம் இந்த மாதிரியான புலனாய்வு இதழ்கள் ஒரு பரபரப்பை உண்டு பண்ணுமே தவிர அதற்கு மேல் நடக்கும் ஆக்கப் பணிகளை கண்டு கொள்ளாது
ஆனால் இதே பத்திரிக்கை அதிபரின் மகன் அப்போது ஓரிரு படங்களில் தலை காட்டிய ஒரு நடிகையுடன் ( தற்போது அந்த நடிகை பிரபலங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ) உள்ள தொடர்புகளைப் பற்றி போட்டிக்கு இருந்த மற்றொரு புலனாய்வு இதழ் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து செய்திகள் வெளியிட்ட போது இந்த புண்ணிய புருஷர்கள் வாலை சுருட்டிக் கொண்டு ஒன்றும் தெரியாதது போல் அமைதி காத்தார் கள்,
அதாவது தனக்கு வந்தா
ரத்தம், அதே அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி இதுதான் அந்த இவர்கள் குறிப்பிட்ட பத்திரிகை லட்சணம்,
சோ ராம சாமி தன் துக்ளக் இதழ் ஒன்றில் ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு எப்படி பதில் அளித்தார் தெரியுமா?
" இப்போது நடக்கும் ஆட்சி அதிகாரங்களின் அலங்கோலத்தை பார்க்கும் போது எம்ஜிஆரின் ஆட்சி ஒன்றைத்தான் பொற்கால ஆட்சி என்று அடித்துச் சொல்வேன் என்று அறுதியிட்டு, உறுதியிட்டு சொன்னார்
காலம் கடந்த பிறகு அவருக்கு வந்த ஞானமுதிர்ச்சி அது,
அதே போல்தான் முன்பு
நெகமம் கந்தசாமியுடன் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக தலைவரை எதிர்த்த டி. ராஜேந்தர் இன்று எந்த மன்றத்திலும் தலைவர் புகழை ஓங்கி ஒலிக்கச் செய்கிறார்
ஆனால் இவர்கள் குறிப்பிடும் கணேசன் பெயர் எங்காவது தென்படுகிறதா என்று கேட்டால் " இல்லை " என்ற பதிலைத் தவிர வேறு எதுவும் இல்லை
அடுத்ததாக தலைவர் கடைசி காலத்தில் வாய் பேச முடியாமல் கஷ்டப்பட்டு இறந்தாராம், ஆனால் கணேசன் கடைசி காலத்தில் சிறு சிறு உபாதைகளுடன் நிம்மதியாக போய் சேர்ந்தாராம்,
நீங்கள் சொன்னது எல்லாம் சரிதான்
கணேசனின் பேத்தி சத்தியலட்சுமியை வளர்ப்புமகன் சுதாகரனுக்கு பெண் கேட்டு வந்தபோது கணேசன் அதை எதிர்த்ததாக அப்போது செய்தி வந்தது, அப்போது சாந்தியின் கணவர் நாராயணசாமி
" எல்லாம் எங்களுக்கும் தெரியும், இதில் யாரும் தலையிட வேண்டாம்" என்று கணேசன் மூஞ்சி யில் அடித்தது மாதிரி பதில் சொன்னதெல்லாம் பத்திரிக்கையில் வந்ததே அதை எல்லாம் எடுத்து போட வேண்டியதுதானே?
இதனால் கணேசன் மனம் வெதும்பி அந்த கல்யாணத்தில் ஒரு ஓரமாக நின்றதும் நடந்த சம்பவம்தானே,
" என் ஆசை ராசாவே " படப்பிடிப்பில் உடல் நலம் சரியில்லாத நிலையிலும் கலந்து கொண்ட சிவாஜியிடம் ஒரு நிருபர் கேட்கிறார்
" சார் இந்த நிலையிலும் கட்டாயம் நடித்துத் தான் ஆக வேண்டுமா?
அதற்கு சிவாஜி சொல்கிறார் ஒரு வேதனை சிரிப்புடன் வேடிக்கையாக
" இல்லன்னா தன் மகன் பெயரைச் சொல்லி எனக்கு சோறு போட மாட்டான் "
இதுவும் பத்திரிக்கையில் வந்த செய்திதான், இந்த சம்பவம் எல்லாம் எந்த மரியாதையின் வெளிப்பாடோ தெரியவில்லை ,
கணேசன் மருத்துவ மனையில் இருந்த போது உணவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது
அந்த நேரத்தில் ரொம்பவும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒரு வாழைப் பழம் சாப்பிட முயற்சித்த போது ஒரு நர்ஸ் வந்து அதை தடுத்து விட்டார்
அப்போது சிவாஜி சொன்ன வார்த்தை
" ஒரு வாழைப்பழம் கூட சாப்பிட முடியாது என்றால் நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கதறி அழுதார்,
எனவே எல்லா மனிதனும் தன் முதுமைக் காலத்தில் கஷ்டப்பட்டு, வேதனைப் படத்தான் செய்வான், எனவே ஏதோ எம்ஜிஆர் மட்டும் கஷ்டப்பட்டு இறந்த மாதிரி மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதை இந்த
ஊளைகள் நிறுத்துவார்கள் என்று நம்புவோம்,
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் திரு. கன்ஷிராம் அவர்கள் கூட நோய்வாய்ப் பட்டு மருத்துவ மனையில் இருந்த போது அவரின் சொந்த மனைவி பிள்ளைகள் கூட அவரை பார்க்க அனுமதிக்கப் பட வில்லை, அதற்கு ஏதேதோ காரணங்கள்,
எனவே மனிதனின் கடைசி கால அவஸ்தையைக் கூட
எழுத்தில் கொண்டு வருகிறீர்கள் என்றால் உங்களின் தரம் நன்றாகவே தெரிகிறது
ஆனால் ஒன்று இந்த மாதிரி தனிப்பட்ட விவரங்களை எழுதுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்
இல்லை என்றால் இதற்கு மேற்பட்ட சமாச் சாரங்களும் வெளி வரும் என்பதை எச்சரிக்கை கலந்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
தலைவரின் பக்தன்
ஜே.ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)
-
...ஒரே நாளில் வெளியான சுமதி என் சுந்தரி மற்றும் பிராப்தம் ரெண்டுமே மாபெரும் தோல்வி தான் பிராப்தம் பல தியேட்டர்களில் பத்து நாள்கள் கூட தாண்ட வில்லை......குடந்தை ஜூபிடரில் பிராப்தம் ஒன்பது நாள்களே ஓடினது சு.எ. சுந்தரி இருபது நாள்கள் போல ஓடினது இப்படித்தான் எல்லாம் ஊர்களிலும் நடந்தது ... ஓரே நாளில் வெளியான நவராத்திரி முரடன் முத்து ............ஊட்டி வரை உறவு .....இரு மலர்கள்.........................சொர்க்கம்........எ ங்கிருந்தோ வந்தாள்............டாக்டர் சிவா..........வைர நெஞ்சம் எல்லா படங்களும் இதே கதைதான்... Apn...
-
ulagamsutrumvaliban maruvelittabathu suntheatere7weeks Hf srinivasa kamathenu Pylot eachandevry theatre5weeks6weeksHF inruvarai Ulagam sutrumvaliban padatthai EnthaPadamum muriyadikkavillai allways MGR SupperStar MGREverGreenSupper Star Magatthana MakkalSakthi MakkalThilagam...........
-
1968 இல் தேர்த்திருவிழா படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் நகரை சுற்றி நடந்து கொண்டு இருந்தது.
டி.எஸ்.ஆர் .என்பவர் வீட்டில் தங்கி இருந்து படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் காட்சிகளை எடுக்க சென்று கொண்டு இருந்தனர்.
10 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்து வந்தது.... தலைவர் மற்றும் குழுவினர் அந்த வீட்டில் தங்கி இருக்கும் விவரம் தெரிந்து நாளுக்கு நாள் டி.எஸ்.ஆர்..அவர்கள் வீட்டின் முன்னால் வெள்ளம் போல ரசிகர்கள் கூட துவங்கினர்.
கண்ணாடி ஏற்ற பட்ட காருக்குள் அனைவரும் வெளியே படப்பிடிப்புக்கு செல்ல துவங்க வந்து குவிந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அதிகம் ஆகி கொண்டே போனது.
அனைத்தும் அறிந்த தலைவர் பணம் போட்டு படம் எடுக்கும் அவருக்கு ஒரு பங்கம் வந்து விட கூடாது என்று தெளிவாக இருந்து...
படப்பிடிப்பின் இறுதி நாள் அன்று யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு ஏற்பாடு செய்து இருந்தார்...தன்னுடன் இருந்த அனைத்து நடிகர்களையும் அம்மையார் ஜெ. உட்பட
படப்பிடிப்புக்கு உதவிய ஒரு வேனில் கூரையில் நிற்க வைத்து பகுதி பகுதியாக சுழற்சி முறையில் அனைவரையும் ரசிகர்கள் முன்னால் அணிவகுத்து நிற்க செய்து...
இறுதியில் தானும் அந்த வேனில் மேல் ஏறி நின்று மொத்த ரசிகர்கள் பொது மக்கள் பார்த்து கை அசைக்க...
அப்போது எழுந்த கரவொலி... கும்பகோணம் நகரை சுற்றி எதிர் ஒலித்ததை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கும் சம்பவம் அது...
மொத்த கூட்டத்தையும் தாண்டி முண்டி அடித்து கொண்டு வந்த ஒரு ரசிகரை தலைவரின் உதவியாளர்கள் தடுக்க தலைவர் அவரை பார்த்து விட்டு விடுங்கள் அவரை என்று அழைக்க.
சாண்டோ தேவர் அவர்கள் அசால்ட்டாக அந்த ரசிகரை மேலே தூக்கி தலைவர் கிட்டே விட....அவரும் தலைவரை தொட்டு தொட்டு மகிழ.
அவர் கொடுத்த கடலை பொட்டலத்தை பிரித்து எடுத்து சாப்பிட்டு கொண்டே பொது மக்களுக்கு எந்த சிரமம் கொடுக்காமல் நீங்கள் அனைவரும் கலைந்து செல்வதே நீங்கள் எனக்கு செய்யும் மிக பெரிய உதவி என்று சொல்கிறார் தலைவர்.
மகுடிக்கு நாகம் கட்டு படுமோ என்னவோ நம் மன்னவன் சொல்லுக்கு கட்டு பட்டு மொத்த கூட்டமும் அமைதியான முறையில் கலைந்து சென்றது இன்னமும் ஒரு வரலாறு.
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன் ஆக நன்றி...தொடரும்..
படத்தில் உள்ள இந்த தலைவரின் சிலை போல ஒரு அருமையான கம்பீரம் ஆன சிலையை இது வரை இன்னும் பார்க்க முடியவில்லை...
இந்த சிலை எங்கள் நெல்லை மாநகரில் முக்கிய சந்திப்பில் அமைந்துள்ளது என்பது எங்களுக்கு பெருமை...நன்றி.
அடுத்தவர் பாட்டு என்றாலும் இவருக்கு பொருந்தும்...அந்த வானைத்தை போல மனம் படைத்த மன்னவன் இவர் அல்லவா....
கட்டி தங்கம் வெட்டி எடுத்து பாசம் என்னும் சாறு பிழிந்து தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவம் அடா...அவர் தள தள வென்று மின்னுவதில் பெருமையடா....
The one and only boss....ever never again in the universe............
-
"கட்டோடு குழல் ஆட" காலத்தை வென்ற அழகான பாடல்..!
எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை !
அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள்.
எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார்.
'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது.
இயற்கை எழில் கொஞ்சும் ஆற்றங்கரையில், இரு இளம் பெண்களோடு இணைந்து ஆடிப்பாடி வருகிறார் எம்ஜிஆர்.
இதுதான் காட்சியமைப்பு.
கண்ணதாசன் கண்களை மூடியபடி சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அவர் கண்களுக்குள்
தேவாரம், திருவாசகம்,
சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், திருக்குறள்... அத்தனையும் ஓடி வந்து அழகாக நடனம் ஆடின.
எதை எடுப்பது, எதை விடுப்பது ? எதுவும் புரியவில்லை கண்ணதாசனுக்கு.
கண் திறந்து பார்த்தார் கண்ணதாசன். அந்த அறைக்குள் அமர்ந்திருந்து,
தன்னையே இடைவிடாமல் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் தமிழன்னையின் தரிசனத்தை கண்டு கொண்டார்.
கண் மூடி, கை கூப்பி வணங்கினார் தமிழன்னையை !
"தாயே, தமிழே ! நான் படித்த ஆயிரக்கணக்கான இலக்கியங்களில், இந்த இடத்துக்கு பொருத்தமான வரிகள் எவை தாயே ?
எடுத்துச் சொல் அன்னையே,
வேண்டிக் கொள்கிறேன் உன்னையே !"
புன்னகைத்தாள் தமிழன்னை!
பொருத்தமான வரிகளை பொங்கி வரச் செய்தாள் கண்ணதாசன் உள்ளத்தில் !
மாணிக்க வாசகர் எழுதிய வரிகள், கண்ணதாசன் மனதுக்குள் வந்து ஆடின.
மாணிக்கவாசகர் மதுரை வீதியில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார். அங்கங்கே பெண்கள் மர நிழல்களில், முற்றங்களில், ஊஞ்சல்களில், அமர்ந்த வாறும், நின்றவாறும் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அங்கே சில மங்கையர் வண்ணக் கோலப் பொடி இடிக்கிறார்கள். அப்படி தாள லயத்தோடு உலக்கையை
இடிக்கும்போது அவர்கள் பாடும் பாடல் இது :
"முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணை யொ டாட ஆட
ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"
ஆஹா, ஆஹா !
தேனினும் இனிய இந்த தித்திக்கும் தமிழை தேடி எடுத்து தனக்குத் தந்த தமிழன்னையை நோக்கி மகிழ்வுடன் புன்னகை செய்தார், கரம் கூப்பி வணங்கினார் கண்ணதாசன்.
அப்புறம் என்ன ?
எம்.எஸ்.விஸ்வநாதனை நோக்கி சொன்னார் கண்ணதாசன். "விச்சு, இது சரியா இருக்குமா பாரு."
"சொல்லுங்க கவிஞரே!"
"கட்டோடு குழலாட ஆட ஆட
கண்ணென்ற மீனாட ஆட ஆட
கொத்தோடு நகையாட ஆட ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு!"
"ஆஹா" என்றார் எம்.எஸ்.வி.
கண்ணதாசன் தொடர்ந்தார் :
"பாவாடை காற்றோடு ஆட ஆட
பருவங்கள் பந்தாட ஆட ஆட
காலோடு கால்பின்னி ஆட ஆட
கள்ளுண்ட வண்டாக நீ ஆடு!"
பொங்கி வரும் பூரிப்பில் கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டார் எம்.எஸ்.வி.
காலத்தை வெல்லப் போகும் ஒரு பாடல் அந்த அறைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்க,
வந்த தன் வேலை முடிந்ததென எவருக்கும் தெரியாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள் தமிழன்னை.
அவள் சென்ற திசை நோக்கி கை கூப்பி தொழுதார் கண்ணதாசன் :
“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி!
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே
உன்னைத் தவிர
உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”
நானும் வணங்குகின்றேன்
கண்ணதாசனை !
தமிழ்த்தாயின் தனிப் பெரும் தவப் புதல்வனை !
இணையத்தில் படித்த அருமையான பதிவு!
"பெரிய இடத்து பெண்" படத்தில் எம். எஸ்.வி. அவர்கள் இசையில், சுசீலா அம்மாவும், ஈஸ்வரி அம்மாவும், டி. எம். எஸ் அவர்களும் மிக இனிமையாக பாடியிருக்கும் இந்த பாடல், பாடலின் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல் இசையுடன் ஆஹா! அருமை!...vr.........
-
இன்று நவ 3ம் தேதி. "படகோட்டி" "நவராத்திரி" "முரடன் முத்து" மூன்றும் ஒரே நாளில் 3.11.1964. தீபாவளி அன்று திரைக்கு வந்த படங்கள். "முரடன் முத்து" ஒன்றிரண்டு திரையரங்கில் கூட 50 நாட்கள் ஓடியதா என்று தெரியவில்லை. இதில் "நவராத்திரி" சிவாஜியின் 100 வது படம் என்பதால்
முன்னரே 100 நாட்கள் ஓட்டுவதற்கு திட்டமிட்டு வடக்கயிறு தயார் செய்து விட்டார்கள். சென்னையில் 4 தியேட்டரிலும் 100 நாட்கள் ஓட்டினார்கள். இது தவிர மதுரை திருச்சி போன்ற ஊர்களிலும் 100 நாட்கள் ஓட்டி அவர்கள் சாதனை பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள்.
ஆனால் இவ்வளவு நாட்களாக வசூலை வெளியிடவில்லை. சமீபத்தில் நிறைய சிவாஜி படங்களுக்கு அவர்கள் பட்டறையில் வசூல் ரெடி பண்ணி போட்டார்கள்.
மதுரை ஸ்ரீதேவி யில் 108 நாட்கள் ஓட்டி அவர்கள் காட்டிய பட்டறை வசூல் ரூ 187738.13 . இந்த அளவு வசூல் செய்திருக்க வாய்ப்பில்லை.
இருந்தாலும் அதை அப்படியே எடுத்துக் கொள்வாம்.
"படகோட்டி" 100
நாட்கள் ஓடாமலே நியூசினிமாவில் 93 நாட்களில் பெற்ற வசூல்
ரூ 195320.85 . படகோட்டியை விட 15 நாட்கள் அதிகம் ஓட்டியும் அவர்கள் காண்பித்த பட்டறை வசூல் "படகோட்டி"யை விட சுமார் ரூ 8000 குறைவுதான். இப்படித்தான் ஒரு ஊரில் கணேசன் படங்கள் 50 நாட்கள் ஆனவுடனே கைபுள்ளைங்க அந்த தியேட்டரில் டேரா போட்டு விடுவார்கள். 100 நாட்கள் ஓட்டி முடியும் வரை தியேட்டர் ஊழியர்களுக்கு நல்ல கவனிப்பு இருக்கும்.
மேலும் "படகோட்டி" மொத்தம் 44 அரங்குகளில் வெளியாகி 10 ஊர்களில் 12 வாரங்கள் ஓடியது.
சென்னை பிளாசாவில் 100, புவனேஸ்வரியில் 84, கிரவுனில் 70 நாட்களும் ஓடியது. சீனிவாசாவில் 6 வாரமும் திருச்சி பேலஸ் 93, கோவை 84, இது தவிர மொத்தம் 30 அரங்குகளில் 50 நாட்களும் அதை தாண்டியும் ஓடியது. ஆனால் "நவராத்திரி" மொத்தமே 13 அரங்குகளில்தான் 50 நாட்களை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
முதல் வெளியீட்டில் படகோட்டி 44 திரையரங்குகளின் ஓட்டத்தை கணக்கிட்டால் 2000 நாட்களை தாண்டும். ஆனால் நவராத்திரி முதல் வெளியீட்டில் சுமார் 35 அரங்குகளில் வெளியாகி 1200 நாட்களுடன் பகல் வந்து விட்டது. மறுவெளியீட்டில் "படகோட்டி" ஓடிய நாட்களை கணக்கில் சேர்த்தால் இந்த பதிவு போதாது. திரையிட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து ஓடியதை கணக்கில் வைக்க நவீன ஆடிட்டர் வந்தாலும் முடியாது. ஆனால் நவராத்திரி முதல் வெளியீட்டிலேயே 9 மிகை நடிப்பை சகிக்க முடியாததால் மறுவெளியீடு
என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது நகைப்புக்குரியது.
ஒருவரது மோனோ ஆக்டிங்கை 9 வேடத்தில் பொறுமையுடன் பார்க்க நாடக மேடைதான் சிறந்தது. அதை சினிமாவாக எடுத்து வெற்றியை விலை கொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. சென்னையில் 4 தியேட்டரில் 100
நாட்கள் ஓட்டிய பெருமை பேசும் கைபுள்ளைங்க வசூலை வெளியிட வேண்டியதுதானே. "கைகொடுத்ந தெய்வம்" படத்தையும் 4 தியேட்டரில் ஓட்டி வசூலை வெளியிடவில்லை.
மதுரையில் "நவராத்திரி" படத்துக்கு ரூ50000 வரை பட்டறை
மூலம் அதிக வசூலை கூட காண்பித்தும் "படகோட்டி"யின் உண்மை வசூலை நெருங்க முடியவில்லை.
சென்னையில் "காவல்காரன்" 4 திரையரங்குகளில் வெளியாகி அதில் 3 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடினாலும் மொத்தம் 372 நாட்களில் ரூ 9,67,241.98 வசூல் செய்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் கணேசனின் இந்த இரண்டு
4 தியேட்டர் 100 நாட்கள் படங்களும் சென்னையில் ரூ 6 லட்சத்தை கூட தொட முடியாத அவலத்தை வெளியில் சொல்ல முடியாமல் கைபிள்ளைங்க கலக்கத்தில் உள்ளது வெட்கக்கேடான விஷயம்..........ksr.........
-
#தாயாகி #நின்றாய்
பெரியார் நூற்றாண்டு விழா...
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நடைபெற்றது...
அந்த விழா ஆரம்பிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னால் ஒரு பெண்மணி தன் குழந்தைக்குப் பெயர் வைக்க எம்ஜிஆர் அருகில் வர அந்த நேரம் பார்த்து தேசியகீதம் ஒலித்தது...குழந்தை 'வீல்' என்று அழ ஆரம்பித்து விட்டது...
உடனே எம்ஜிஆர் சமயோசிதமாக அந்தப் பெண்ணிடமிருந்து அவசரமாக குழந்தையை வாங்கி அந்தம்மாவிடமிருந்த பால்புட்டியை குழந்தையின் வாயில் வைத்து தன் கைகளில் ஏந்தியவாறு தேசியகீதம் முடியும் வரை நின்றார்...
அதுவரை குழந்தையும் அழாமல்
சமத்தாக இருந்தது...
அந்தக் குழந்தையாக நான் இருந்திருக்கக் கூடாதா ...! ...
-
இன்று எல்லா கட்சிகளுக்கும்
எல்லா தலைவர்களுக்கும் எம் ஜி ஆர் தேவை
எம் ஜி ஆரை சுற்றியே தமிழகம் சுழல்கிறது
ஏன்
எம் ஜி ஆரை போல் சகலகலாவல்லமை பொருந்திய தலைவரை கண்டதில்லை உலகம் அப்படிபட்ட ஒரு சக்தி கொண்ட எம் ஜி ஆர் தமிழகத்தில் உதித்ததால் தமிழகம் கொணடாடுகிறது
வறுமையை உணர்ந்தவர் அதனால் வறுமையை ஒழித்தவர் எம் ஜிஆர்
கருணை மனம் கொண்டவர் அதனால் எல்லோரிடம் கருணை கொண்டார் எம் ஜி ஆர்
வெற்றி எதிலும் பெற்றதால் அதிகம் பணம் சம்பாதித்தார் அதை மக்களுக்கு கொடுத்தார் எம் ஜி ஆர்
வீரம் கொண்டவர் அதனால் வன்முறை கொண்டவர்களிடம் இருந்து நல்லவரை காத்தார் எம் ஜி ஆர்
திறமை மிக்கவர் அதனால் ஒரு பொற்க்கால ஆட்சி தந்தார் எம் ஜி ஆர்
அன்பானவர் அந்த அன்பால் கிருஷ்ணா நதியை தமிழகத்தில் பாயவைத்தார் எம் ஜி ஆர்
எம் ஜி ஆர் பெயரை சொன்னாலே உற்சாகம் வீரம் கொடை வெற்றி தன்மை வருவதால் எல்லோருக்கும் எம் ஜி ஆர் வேண்டும்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*30/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
நூற்றாண்டு விழா கண்ட*நாயகர், மன்னாதிமன்னன், நாடோடி மன்னன், நம்ம வீட்டு*பிள்ளை, உங்க*வீட்டு*பிள்ளை, எங்க வீட்டு பிள்ளை என்று இந்த தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிற* அந்த மகோன்னத*தலைவரின்*சகாப்தம்*நிகழ்ச்சி 150 வது* நாளாக வெற்றி நடை போட்டு தொடர்கிறது . மக்கள் தலைவரின்*ஆன்மாவிற்கு நம்முடைய மனம் நிறைந்த*வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு*இப்போது தொடருவோம்*.
ஆண்டிபட்டி வசந்தா*:* முதலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆன்மாவிற்கும்,*சகாப்தம் நிகழ்ச்சிக்கும் என் மனம் நிறைந்த வணக்கங்கள் .* இந்த தொடரில், மக்கள் திலகம் எம்.ஜி*ஆர். அவர்களின்*திரையுலக*வாழ்க்கை, மற்றும் மக்கள் தலைவரின் அரசியல் வாழ்க்கை பற்றியும்* மிகவும் சிறப்பாக திரு.துரை பாரதி*தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார் .* எம்.ஜி.ஆர். என்கிற மாமேதை பற்றி விவரங்கள் அறிந்து கொள்ள இந்த* நிகழ்ச்சி நல்ல வாய்ப்பை அளித்துள்ளது .* இந்த நிகழ்ச்சியை*பார்ப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது .* மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த*பின்னாலும்*பேச்சிருக்கும் என்று தொடங்கும்*போது மிகவும் அருமையாக உள்ளது .* எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இந்த ஜென்மம் போதாது*.அந்த அளவிற்கு*செய்திகள்* நிறைந்துள்ளன .* *வின்*டிவியில்.இந்த கொரோனா காலத்தில் இந்த நிகழ்ச்சி மக்கள் சிந்திக்கும் வகையிலும்*,மக்களுக்கு*தைரியம் கொடுக்கும் வகையிலும்*நிறைய செய்திகள் வெளியாகி வருகின்றன .* சகாப்தம்*நிகழ்ச்சி தொடர்ந்து பல வாரங்கள், மாதங்கள்*தொடர வேண்டும் என்பது என் அவா .**வாழ்க எம்.ஜி.ஆரின் நாமம் .
குறிப்பாக பார்த்தால்*எவ்வளவோ பேர்கள்*தொடர்பில்*இருக்கிறார்கள். பெங்களுருவில் இருந்து திரு.ராமச்சந்திரன் தனது*71வது* வயதில்*அவ்வளவு அக்கறை எடுத்து கொண்டு* புரட்சி தலைவர் ஆண்டது*11 ஆண்டுகள்தான் என்கிற*ஒரு திருத்தத்தை*சொல்கிறார் . அதே*போல அந்த காலத்தில் அவரை ராமாவரம் தோட்டத்தில் சந்தித்த*காட்சிகளை விவரித்து நெகிழ்ந்து போகிறார் .* பொழிச்சலூரில் இருந்து மகாலட்சுமி என்பவர் எப்படியோ*தொலைபேசி எண்ணை* கண்டுபிடித்து*இரவு 11 மணிக்கு*எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி அவ்வளவு நெகிழ்வாக*பேசுகிறார்* திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனையில் இருந்து மக்களை சந்திப்பது மட்டுமல்ல, மக்களின் குறைகளை*கேட்டு எப்படி நிறைவேற செய்வாரோ*அப்படி 1984ம் ஆண்டில்*ஒருநாள்*திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனையில் காட்சி*அளிப்பது* போல* *அமர்க்களமாக* ராமாவரம்* வீட்டில்*இருந்து வெளிப்படுகிறார் .* காலை*7 மணிக்கெல்லாம் உதயமாகும் கதிரவன் போல, புதிய சூரியனாக தென்படுகிறார் .* அவரை*பார்க்க, தரிசிக்க*கிட்டத்தட்ட 500 பேர் திரண்டு இருக்கிறார்கள் .* ஒவ்வொருவரையும் அருகில் அழைத்து*நலம் விசாரிக்கிறார் .* அவர் வருகின்ற வழியெல்லாம் ஏழெட்டு*தட்டுகளில் குவியல் குவியலாக பணம் வைக்கப்பட்டிருக்கிறது .**ஒருவர் தான் சம்பாதித்த பணத்தை*அவ்வளவு**மக்கள் பார்க்கின்ற வகையில்*தட்டுகளில் வைக்கின்றார்கள்* என்றால்**அது நேர்மையான வழியில்*ஈட்டிய பணமாகத்தான் இருக்க முடியும் .* ஒவ்வொருவரையும் பார்க்கிறார். கேட்கிறார் .மூன்றாவது வரிசையில்*,ஒரு கைக்குழந்தையுடன் நின்றிருக்கும் ஒரு பெண்ணை அழைத்து*நீங்கள் எந்த ஊர், என்ன விஷயமாக*வந்துள்ளீர்கள் என்று கேட்கிறார் .* அருகில் உள்ள உதவியாளர் உங்கள் பிரச்னை என்ன என்று கேட்கிறார் .* இப்படி அவர் தன்* வாழ்நாள் முழுக்க திரைப்பட துறையில்*கொடிகட்டி*பறந்த*காலத்தில் கூட, நாடோடி மன்னனின் பிரம்மாண்ட*வெற்றிக்கு பிறகும் கூட* மக்களை சந்திப்பதில் மிக பெரிய மகிழ்ச்சியை*அடைந்தார் . மக்களை சந்திப்பது , பேசுவது ,உரையாடுவது , அவர்களுடைய குறைகளை*தீர்ப்பது*என்பதை* உயிர் மூச்சாக*கருதினார் .**
திரு.புலவர் ராமச்சந்திரன், தாராவி, மும்பை*:* சகாப்தம் நிகழ்ச்சியின் 150 வது*நாள் தொடர் நிகழ்ச்சிக்கு* *என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் .**சென்னை*சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பெயர் வைத்த மத்திய அரசிற்கும், மாநில*அரசிற்கும், அதை முன்மொழிந்த*திரு.சைதை*துரைசாமி அவர்க ளுக்கும் எனது நெஞ்சார்ந்த* நல்வாழ்த்துக்கள் .* நாம் மும்பையில் வசித்து வந்தாலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடி வருகிறேன் .மராட்டிய மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி..ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியாவது குறித்து*நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .*
1984ம் ஆண்டில் ஒரு சட்டம் வருகிறது .* 400 நாட்களுக்கு மேல்* கட்டாய*பணியாளர்களாக இருந்தவர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டும் . அனைவரையும்*வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்யப்பட்டு , முறையான நேர்முக தேர்வு மூலம்தான்*பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று* சட்டம் கொண்டு வருகிறார்.எம்.ஜி.ஆர்.* .* கட்டாய*பணியாளர்கள் என்று யாரும் தற்காலிக பணிகளில் இருக்க கூடாது . ஒன்று அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்* அல்லது பணிநீக்கம் செய்ய வேண்டும் என்கிறார்* *பொழிச்சலூர் மகாலட்சுமி என்பவர் சொல்கிறார். அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் பிரசித்தி பெற்ற அங்காடியாக வானவில் பட்டு, கைத்தறி*அங்காடி திகழ்ந்தது . அப்போது அமைச்சர்கள்* வருவார்கள் .* அரசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் எல்லாம் வருகை*தருவார்கள் .* பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு மாநில ஆளுநர்களின் மனைவிகளுக்கும் இங்கிருந்துதான் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் .எம்.ஜி.ஆர். அவர்கள்தான்*அரசு விழாக்களில், சில முக்கிய விருந்தினர்களுக்கு*காஞ்சிபுரம் பட்டு புடவைகள்,போன்றவற்றை பரிசாக வழங்கிய காலமும் உண்டு என்று மகாலட்சுமி விவரிக்கிறார் .***
திரு.அப்துல் மஜீத், திருச்சி : சகாப்தம் நிகழ்ச்சி 150 வது* நாளாக தொடர்வது குறித்து உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி புரிந்த காலத்தில் ஏழை எளியோர்க்கெல்லாம் வாரி வழங்கி,*பல நல திட்டங்கள் செயல்படுத்தி நல்லாட்சி புரிந்தார் .* மலைக்கள்ளன் படம் பார்த்துதான் நான் அவரது ரசிகரானேன். அவரால் ஈர்க்கப்பட்டேன் . அந்த படத்தில் என் பெயரை சொல்லி, அரே* மஜீத் தோ* சாய் லாவோ என்பார் .* அவர்மீது, மிகுந்த ஈடுபாடு, மதிப்பு, மரியாதை வைத்துள்ளேன் .* இன்றைக்கும் அவரது தொண்டனாக வாழ்ந்து காலம் கடத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
1984ல் எப்படியும்* ஆண்டிற்கு* மூன்று முறையாவது எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்து* இல்லத்திற்கு வானவில் பட்டு, கைத்தறி அங்காடியில் இருந்து* சில பட்டு புடவைகள் அனுப்பி வைக்கப்படும் அந்த புடவைகளுக்கான ரசீது தயாரானவுடன்,அனகாபுத்தூர் ராமலிங்கம் மூலம் பணம் அனுப்பப்படும். அதற்கு முன்பாக ராமலிங்கத்திடம் பணம் வைக்கப்பட்டுள்ள பீரோவின் சாவியை கொடுத்து பட்டு புடவைகளுக்கான போதிய பணத்தை நீங்களே எடுத்து கொள்ளுங்கள் என்று கூறுவாராம். அந்த அளவிற்கு தனது தொண்டர்கள் மீது, நம்பிக்கை, மதிப்பு, மரியாதை,கொடுத்து, சுதந்திரம் அளித்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். திருவிதாங்கூர் மகாராஜா விஷூ நாளன்று பணத்தை அள்ளி அள்ளி கொடுப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .* எம்.ஜி.ஆரும் ,அதே விஷூ நாளன்று கட்டு காட்டாக பணத்தை வைத்து கொண்டு மக்களுக்கு வாரி இறைத்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று பொழிச்சலூர் மகாலட்சுமி கூறுகிறார் .* 1984ல் அதே விஷூ நாளில் நான் எம்.ஜி.ஆர். அவர்களை பார்த்து கேட்டேன். எங்களுக்கெல்லாம் வேலை பறிபோய்விட்டது . நீங்கள்தான் உத்தரவு போட்டு பணிநீக்கம் செய்ததாக சொல்கிறார்கள் என்றவுடன், நீங்கள் எவ்வளவு பேர் இருக்கிறீர்கள் என்று கேட்டார் எம்.ஜி.ஆர். நாங்கள் தமிழகம் முழுவதும் 2,000 பேர் இருக்கிறோம் என்று சொன்னதும் அப்படியா ,இந்த விவரங்கள் எனக்கு முன்கூட்டியே தெரியாது .இருப்பினும் நீங்கள் ஒரு மனு கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கொண்டார் .* 1984ல் ஏப்ரல் 13ந்தேதி மனுக்களை வாங்கினார் .**மே மாதம் 13ன் தேதி எம்.ஜி.ஆரின் உத்தரவால் அந்த 2000 பேருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தது* இப்படி, கேட்ட வர்க்கெல்லாம், தன்னிடம் வந்தவர்க்கெல்லாம் அது வானவில்லே ஆனாலும் வளைத்து கொடுக்கிற வள்ளல் தன்மை எம்.ஜி.ஆரிடம் இருந்தது .**
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.காலத்தை வென்றவன் நீ - அடிமைப்பெண்*
.2.என்றும் பதினாறு, வயதும்* பதினாறு - கன்னித்தாய்*
3.தட்டுங்கள் திறக்கப்படும்* - எல்லை காவலன் (வெளிவராத படம்)
4.நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் - நான் ஏன் பிறந்தேன்*
**
*
-
#இனிய_நினைவுகளில்
#ஆசைமுகம்
#மக்கள்_திலகம்...
இந்தப்படத்தின் விசேட அம்சங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...!!!
கதை என்னவோ வழக்கமான ஒன்றுதான்...பெரும் செல்வந்தரான சிவசங்கரன் பிள்ளை (சந்தானம்)யின் ஒரே மகன் , மனோகர் ((மக்கள் திலகம்))..அவரது காதலி செல்வி ((சரோஜா தேவி))...சிவசங்கரன் பிள்ளையால் வேலையை விட்டு துரத்தப்பட்ட அவரது முன்னாள் மேனேஜர் வர்தா (எம்.என்.நம்பியார்), சிவசங்கரன் பிள்ளையின் அத்தனை சொத்தையும் கொள்ளையடிக்க நினைக்கிறார்...பின்னர் மக்கள் திலகத்தால் தடுக்கப்பட்டு சிறை செல்கிறார்....
இந்த வழக்கமான கதையை வித்தியாசப்படுத்துவது நம்பியார் கையாளும் வழிதான் ...தன் நம்பிக்கைக்குறிய அடியாள் வஜ்ரவேலு (எஸ்.வி.ராம்தாஸை) முகத்தை அப்படியே மக்கள் திலகத்தைபோல பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, இவர்தான் உண்மையான மனோகர் என சிவசங்கரன் பிள்ளை வீட்டில் Crop பண்ணுகிறார் வர்தா....மனோகராக நடிக்கும் வஜ்ரவேலுவின் கைக்கு சொத்து வந்ததும், அதை வர்தாவிடம் கொடுத்து, தனக்குறிய பங்கை பெற்றுக்கொள்ள வேணண்டும் இதுவே மாஸ்டர் பிளான்.இதனால், யார் உண்மையான மனோகரன் என்ற குழப்பம், மக்கள் திலகத்தின் தந்தையிலிருந்து, காதலியிலிருந்து அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது...கடைசியில் உண்மை தெரியவருகிறது.
மக்கள் திலகத்தின் ப்ளாக்பஸ்டர்களில் இதுவும் ஒன்று...பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி அதிகம் கேள்விப்படாத அந்த நாட்களிலேயே இதைப்பற்றி படமெடுத்து வெற்றி பெற செய்ய மிகுந்த துணிச்சல் வேண்டும்...அதை திறம்பட செய்திருககிறார் இயக்குநர் புல்லையா....
மக்கள் திலகம்....கேட்க வேண்டுமா??? மனோகர்,வஜ்ரவேலு ஆகிய இரு வேடங்களில் அசத்தி இருக்கிறார். அதுவும் யார் மனோகர், யார் வஜ்ரவேலு என்பது படம் பார்ப்பவர்களுக்கு புரியும் படி நடித்திருக்கிறார்...அதோடு இளமை துள்ளும் நடனங்கள், Energetic ஆக ...அதே சமயம் overact செய்யாமல் கலக்கியுள்ளார்...
சரோஜா தேவி, நம்பியார்,வசந்தா நாகேஷ், ராமதாஸ் அனைவரும் கலக்கியிருக்கிறார்கள்...அதுவும் "எத்தனை பெரிய மனிதருக்கு" பாடலில் நாகேஷ் மக்கள் திலகத்தோடு நடனத்தில் கலக்குகிறார்.
இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு...பாடல்கள் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணை புரிகின்றன..."எத்தனை பெரிய மனதனுக்கு" ..."நீயா இல்லை நானே" இரண்டும் இன்று வரையிலும் விரும்பபடுகின்றன..."என்னை காதலித்தால் மட்டும் போதுமா?".."நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு " ஆகிய பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
"தனக்கொரு கொள்கை,அதற்கொரு தலைவன்; தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்; உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பீ...உழைத்திட வேண்டும் கைகளை நம்பி" என்ற வரிகளை மக்கள் திலகம் பாடும் போது, எழுந்த கைதட்டலும்- ஆரவாரமும் இன்று வரை மறக்கமுடியாதது.
ஆசை முகம் ...வெற்றி படம் மட்டுமல்ல...மக்கள் திலகத்தின் மிக வித்தியாசமான படமும் கூட.
Source :https://en.m.wikipedia.org/wiki/Aasai_Mugam......... Sridhar Babu...
-
இன்றைய நாளில் நவம்பர் 4அன்று: எம்.ஆர். ராதாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட நாள்
அன்றைய ஆண்டில் இதே நாளில் தான், நடிகர் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கில் நடிகர் எம்.ஆர். ராதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டது.
அன்றைய ஆண்டில் இதே நாளில் தான், நடிகர் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கில் நடிகர் எம்.ஆர். ராதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டது.
கடந்த 1967-ஆம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதியன்று மாலை 5 மணி வாக்கில் எம்.ஆர். ராதாவும், திரைப்படத் தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் போய் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் போது என்ன நடந்ததென்று இன்று வரை தெரியவில்லை.
எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். ராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து, ராதா, எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முதலில் சைதாப்பேட்டை முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில், ராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பிறகு, செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், ராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினார்கள்.
ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர், இதே நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், ராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் ராதா குற்றவாளியென முடிவு செய்ததாக கூறப்பட்டது.
இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ராதாவின் வயது (அப்போது 57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
ராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பளித்தது.
This day that year: On today's day-M.R.Radha's verdict on MGR shot case.........
-
#மக்கள்_திலகத்தின்_திரையுலக_வாழ்வில்
#அடிமைப்பெண்...
கே.சங்கர் இயக்கத்தில் மக்கள் திலகம்-ஜெயலலிதா நாயகன்,நாயகியாக நடித்து 1969ம் ஆண்டு வெளிவந்த அடிமைப்பெண் படத்தை பற்றி, அதன் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பற்றி, மக்கள் திலகம் வேங்கையன் பாத்திரத்தில் காட்டு மனிதனாகவும், அழகிய இளவரசராகவும் தூள் கிளப்பியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
ஆனால் 1965 ம் ஆண்டிலேயே மக்கள் திலகம், தன் இயக்கத்தில் "அடிமைப்பெண்ணை" உருவாக்க திட்டமிட்டிருந்தார். சரோஜாதேவி, ஜெயலலிதா,கே.ஆர்.விஜயா ரத்னா, நம்பியார், அசோகன் என்ற பெரும் நட்சத்திர பட்டாளத்தோடு துவங்கியது படம்.
நாம் பார்த்த // பார்த்துக்கொண்டிருக்கிற அடிமைப்பெண்ணில் "பண்டரிபாய்" மட்டுமல்ல அவரது நாட்டில் உள்ள பெண்கள் அனைவருமே அடிமை படுத்தப்படுவார்கள். ஆனால் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண்ணில், ஜெயலலிதா எதிரி நாட்டு மன்னனில் கைப்பற்றப்பட்ட தன் சொந்த நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டுக்கு அடிமையாக விற்கப்படுவார்.அவரை மீட்க மக்கள் திலகம் செல்வார். இப்படி திட்டமிடப்பட்ட இந்த பிரம்மாண்ட திரைப்படம் அப்போது கைவிடப்பட்டு, பின் முற்றிலும் புதிய கதைக்களத்தில் 1969 ம் ஆண்டு வெளிவந்தது.
வெளிவராத முதல் அடிமைப்பெண் படத்தின் செய்தித்தாள் விளம்பரம் நீங்கள் காண்பது.
தகவல் & புகைப்பட உதவி:http://mgrperannews.blogspot.com/2011/08/1_23.html?m=1... Sridhar Babu.........
-
1972 ல் இமாலய சாதனை படைத்த
மாபெரும் வெற்றிக்காவியம்.
மக்கள்திலகத்தின்" நல்லநேரம்" ஆகும்.
++++++++++++++++++++++++++++++++
சென்னையில் 4 அரங்கில் 100 நாட்கள்.
சித்ரா, மகாராணி,மேகலா,ராம்
சென்னை சித்ரா...மகாராணி
திருச்சி, சேலம் 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து சாதனை.
மதுரையில் 2 அரங்கு வெளியீட்டு
100 நாட்கள். அலங்கார்,மூவிலேண்ட்
திருச்சி ஜூபிடர் 126 நாள்....
பத்மாமணி 38 நாள்...ஒடி சாதனை.
சேலத்தில் தொடார்ச்சியாக
3 அரங்கில் 165 நாட்கள்.
ஒரியாண்டல், பிரபாத், ராம்
கோவையில் 2 அரங்கில் வெளி வந்து
116 நாட்கள்..
ராயல், சிவசக்தி
நெல்லையில் 2 அரங்கில் வெளியீட்டூ
105 நாட்கள்.
சென்ட்ரல், அசோக்...தஞ்சையில் 2 அரங்குகள் யாகப்பா & ஞானம்...
மற்றும்
கடலூர்... வேலூர்...பாண்டி..
காஞ்சிபுரம்.... தி.மலை...
2 அரங்கில் வெளியீட்டு சாதனை..
பெங்களுரில் 3 அரங்கில் 8 வாரங்கள்.
இலங்கையில் 6 அரங்கில் 50 நாள்
செல்லமஹால் 105, வின்ஷர் 84
62 அரங்கில் 50 நாள்...
முதல் சுற்றில் 6 மாதத்தில் 1 கோடியை வசூலில் கடந்தது....
ஈரோடு 85 நாள்
குடந்தை 77 நாள்
தஞ்சாவூர் 77 நாள்
கரூர் 77 நாள்
பட்டுக்கோட்டை 77 நாள்
திண்டுக்கல் 77 நாள்
வேலூர் 80 நாள்
பாண்டி 78 நாள்
காஞ்சிபுரம் 70 நாள்
மாயூரம் 70 நாள்
விருதுநகர் 70 நாள்
சிதம்பரம் 70 நாள்
கடலூர் 70 நாள்
ஆத்தூர் 68 நாள்
திருப்பூர் 66 நாள்
+++++++++++++++++++
சாதனை... சரித்திரம் ...சகாப்தம்...
நல்லநேரமாகும்........ukr...
-
# நியூ மன்னாரன் கம்பெனி டுபாக்கூர் தங்கவேலுவும், 23ஆம் புலிகேசி வடிவேலுவும் #...
என்னடா நம்ம கனடா டுபாக்கூர் தங்கவேலுவோட எப்படி வடிவேலு வந்தார் அப்படீன்னு யாரும் குழம்ப வேண்டாம், கதைய சொல்றேன் சரியா !
நம்ம பக்கத்தில் இருந்து இரண்டு நாளைக்கு முன்புதான் " போலட் பெரம்பு நாத் " படம் இங்கேயும், இலங்கையிலும் காத்து வாங்கிய கதையை எழுதியிருந் தோம், அதுவும் நம்ம டுபாக்கூர் தங்கவேலு இலங்கையில் 50 லட்சம் வசூல் செய்தது என்று பதிவு போட்டதனால் நாம் பதிலுக்கு கேழ்வரகில் நெய் வடி ந்த கதையை விளக்கியிருந்தோம்,
உடனே தங்கவேலு குதித்துக் கொண்டு சத்தியமாக இலங்கையில் இந்த இந்த இடங்களில் எல்லாம் தாறுமாறா ஓடுச்சப்பா என்று யாழ்ப்பாணம் தொடங்கி கொழும்பு வரையிலும் ஒரு பதினைந்து இருபது ஊர்களை குறிப்பிட்டு வழக்கம் போலவே அங்கே 200நாள் இங்கே 300 நாள் என்று தரையில் சசிகலா ஓங்கி அடித்து சத்தியம் செய்தது மாதிரி செய்து 50 லட்சம் வசூல் ஆனதாக கதறியிருக்கிறார் ( கடைசியா நன்றி சிவாஜி குரூப் என்று நன்றி நவிலல் படலம் வேறு )
சரி இதெல்லாம் யாரு
தங்கவேலுவிடம் கேட்டது? அப்படியே பொங்கி கொட்டுறாக,
நீ அப்பவே பெரிய " நடிகன் " சத்யராஜ் மாதிரி பயங்கரமா பொய்க் கதை அளந்து கொண்டு வலம் வரும் அல்லக்கை என்று உன் சம்பந்தப்பட்ட ஆள்களே சர்டிபிக்கேட் கொடுக்கும் போது இப்போதும் அந்த அளக்கும் குணம் கொஞ்சம் கூட மாறவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது,
இப்படித்தான் இருக்க வேண்டும், புடிச்ச புடிய கடைசி வரைக்கும் விட்டு விடக்கூடாது சரியா !
இப்போ இதெல்லாம் பெரிய விஷயம் இல்ல,
பதிவையும் போட்டு விட்டு கடைசியா நம்ம வடிவேலு சொல்வாரே " ம் கிளப்புங்கள் " என்று
அதே போல் சிவாஜிக்கு ஒரு பட்டம் கொடுத்திருக்கிறார் பாருங்கள்
உண்மையிலேயே எனக்கு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது,
வேலை செய்யும் போதும் கூட நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், எப்படிப் பட்ட காமெடி
நீங்களும் கண்டிப்பாக சிரிப்பீர்கள் என்று நம்புகிறேன்,
வேற ஒண்ணும் இல்லீங்க சிவாஜி ( எழுதும் போது கூட சிரிப்பை அடக்க முடியவில்லை ) " அகில உலக வசூல் சக்கரவர்த்தி " யாம்,
அடப்பாவிங்களா உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா இல்லையா?
அஞ்சு விரலுலயே அள்ளித் திங்க சோத்தக் காணோமே இதுல ஆறு விரல் வேறயா?
இந்த மாதிரி ஒரு பட்டம் சிவாஜிக்கு தங்கவேலு கொடுப்பார் என்று தெரிந்துதான் ஹாலிவுட்டின் முதல் ஜேம்ஸ்பாண்ட் சீன் கானரி கூட அக்டோபர் 31ந் தேதியுடன் விடு ஜுட் என்று போய் சேர்ந்துட்டார் போல,
சீன் கானரி கூட ஒரு டிரைவரின் மகனாகப் பிறந்து சாதாரண ஒரு பால்காரராக வாழ்க்கையைத் தொடங்கியதை என்றும் மறைத்தவர் கிடையாது, ஆனால் இங்கே நாலு காசு கையில் வந்தவுடன் தண்டவாளத் துண்டு பார்ட்டிகள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குடும்பம் ஆனதை நாம் எல்லோரும் பார்த்தோம்,
ஏண்டா உள்ளூரிலேயே சவத்து மூதிய நாத்த
ஆளில்ல இதுல அகில உலக வசூல்சக்கரவர்த்தி !
"மிர்ச்சி " சிவா "தமிழ் படம் " என்ற ஒரு படத்துக்கு பிறகு " அகில உலக சூப்பர் ஸ்டார் " என்னும் பட்டத்தை வைத்திருக்கிறார்
தயவு செய்து அதையும் பறித்து கணேசருக்கு கொடுத்துராதீங்கப்பா பயம்மா இருக்கு,
ஏற்கனவே "நவராத்திரி " படத்தையும், " கை கொடுத்த தெய்வம் " படத்தையும் சல்லி சல்லியா பிரித்து சங்கர் சார் பதிவு போட்டிருக்கிறார்,
நான்கு அரங்கில் 100 நாள் ஓட்டி விட்டு அதுல வேற பெருமை பீத்தல்,
படம் வந்த நேரத்தில் எந்த சிவாசியின் நடிப்பு சிறந்தது என்று பரிசுப்போட்டி எல்லாம் வைத்து அப்படியும் வேலைக்காகாமல் டிக்கெட் கிழித்து படம் ஓட்டியதை அப்போதைய " கல்கண்டு " இதழில் நார் நாராய் கிழித்து எழுதியது மறந்து விட்டதா? அது மட்டுமல்ல தெருக்கூத்து நாடகத்தில் சாவித்திரியை மறைக்கும் அளவுக்கு அய்யா கர்ண கடூரமா க கத்தி நடித்ததை அன்றைய ஏடுகள் சுட்டிக்காட்டியதும் எவ்வளவு பெரிய கேவலம்?
பட்டறையில் தயார் பண்ணிய வசூலைக் கூட போட துப்பில்லை, வந்துட்டார் பதிவு போட,
நவராத்திரி படம் மட்டுமல்ல இவர்கள் பெரிய லாடு லபக்கு போல பில்டப் கொடுக்கும் பட்டணமா, தகரப்பதக்கம், இடிந்த மாளிகை, ராசா இப்படிப்பட்ட படங்கள் எத்தனை மறு வெளியீடுகள் கண்டது என்பதை நிரூபிக்க முடியுமா?
இத்தனை வருடங்களில் ராசாவும், இடிந்த மாளிகையும் ஒரு ஐந்தாறு தடவை வெளியாகியிருக்குமா?
மற்ற தகரம் உட்பட எல்லா படங்களுமே நிரந்தர தூக்கமாய் கும்பகர்ணன் தூக்கம் தூங்குவதை நாங்கள் சொல்லவில்லை சந்தேகம் இருந்தால் மீரான் சாகிப் தெருவில் போய் கேளுங்கடா குப்பைகளா,
" கோலி சோடா " படத்தில் அந்த நான்கு
பசங்களைப் பார்த்து மதுசூதன ராவ் சொல்லுவார் பசங்களா போய் அந்த பக்கம் விளையாடுங்க என்று
அதேபோல் தலைவர் எத்தனை முறை கணேசனை மூக்கு முகரய எல்லாம் பேத்து மரண அடி கொடுத்திருக்கிறார் என்பதை உங்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டாம் உங்களுக்கே நன்றாக தெரியும்,
இந்த டிஜிட்டல் காலத்திலேயே இடிந்த மாளிகை படத்தை ஆல்பர்ட் அரங்கில் 2 வாரம் ஆளில்லாமல் பக்கத்தில் இருந்த டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிக் கொடுத்து ஒரு நாலைந்து பேரை வைத்து பணம் கொடுத்து ஓட்டி விட்டு, மதுரையில் படம் வெளியான 2 வது வாரத்தில் இருந்து வாங்கம்மா வாங்க கோரா பட்டுப்புடவை தர்றோம் வாங்க வாங்க என்று தூக்கு தூக்கி படத்தில் கணேசன் புடவை விக்கிறது மாதிரி விளம்பரப் படுத்தியும்
25 நாளை கடந்ததாக விழா எடுத்தாலும் போட்ட காசு கைக்கு வந்ததா என்று கேட்டால்???????
இந்த லட்சணத்துல ஒரு நாலைந்து ஊரில் இவர்களே ஒரு வாரம் இரண்டு வாரம் என்று ஓட்டிவிட்டு கடைசியில் இணைந்த 100 வது நாள் என்று கொடுத்தார்கள் பாருங்கள் ஒரு விளம்பரம்,
எப்பேர்ப்பட்ட அயோக்கியத் தனம்
இப்போதே இப்படி என்றால் அந்தக்காலத்தில்?
மேற்கு மாம்பலம் சீனிவாசாவில் " சிக்காமியோட செல்லையா " படம் ஓட்டுன கதையை சொன்னால் நாறி விடும்,
எங்கள் குமரியில்
" ரோசப்பாட்டு லூசுதுரை " யை மனத் துணிவோடு இழுத்த வரலாறு பெரிய கண்ணீர் வரலாறு,
இப்படி எல்லாம் சதுரங்க வேட்டை பட மோடிமஸ்தான் வேலையெல்லாம் பார்த்து விட்டு அதையும் சாதனை பட்டியலில் வெட்கமில்லாமல் சேர்த்துக்கொள்வது
ஏண்டா நீங்கல்லாம்
எப்படி இந்த மாதிரி?
ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ப்
ஹிட்லர் தோற்றுக் கொண்டிருக்கும் போது கூட இன்னொரு பக்கம் எந்த தயக்கமும் இல்லாமல் பொய்யன் கோயபல்ஸ் ஹிட்லர்
வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தான்
அதை விட மோசமான
கூட்டம்
அப்படிப் பார்த்தால் இப்போது தலைவரின் டிஜிட்டல் செய்யப்பட்ட படங்கள் அனைத்தும் வெளியிட்ட நாளிலிருந்து இந்த கொரோனா நோய் வரும் வரைக்கும் இடை வெளி இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்தது,
இதுவே கணேசன் படங்கள் என்றால் இவர்கள் இதற்கு முன் வெற்றிகரமான 100, 200, 300 வது இணைந்த வாரம் என்று விளம்பரம் கொடுத்திருப்பார்கள்
1990 களில் துக்ளக் பத்திரிகையில் திரு. முக்தா சீனிவாசன் அவர்கள் ஒரு தொடர் எழுதினார்,
அந்த தொடரில் தலைவர் எப்படிப்பட்ட
கரிஷ்மா வெற்றியின்
சொந்தக்காரர் என்பதை விலாவாரியாக சொல்லியிருப்பார்
அதில் ஒரு வார்த்தை
குறிப்பிட்டிருப்பார்
"எம்ஜிஆர் அவர்களை வைத்து மற்றவர்கள் மிகப்பெரிய லாபகரமான படங்களை எடுத்துக் கொண்டிருந்தாலும் நானும் பாலாஜியும் கடைசி வரை அசையாமல் நின்று கொண்டிருந்தோம்
அது எதனால் என்பது
எங்களுக்குள்ளே முடிந்து போனதாக இருக்கட்டும் "
இதை அவர் எதனால் சொன்னார் என்பது அவருக்குத்தான் தெரியும், சந்தேகம் உள்ளவர்கள் துக்ளக் இதழ் இப்போதும் குருமூர்த்தி தலைமையில் வெளி வந்து கொண்டிருக்கிறது
அங்கு சென்று பார்த்து மெய்ப்பித்துக் கொள்ளலாம்
அவர் இதற்கு முன்னும் ஒரு தலைவர் படம் மற்ற நடிகர்களின் 25 படங்களுக்கு சமம் என்று பகிரங்கமாக அறிவித்தவர்...
தலைவரை வைத்து படம் பண்ணாத ஏக்கம் அவர் ஆழ் மனதில் எப்படி இருந்தது என்பது மட்டுமல்ல தலைவரின் பவர் என்ன என்பதையும் தெளிவாக உலகுக்கு
உணர்த்தியவர்,
கமல்ஹாசன் நடித்த
" அபூர்வ சகோதரர்கள் " படத்தின் வெற்றி விழாவுக்கு ஆந்திராவின் திரு. என். டி. ஆர், கேரளாவின் திரு. மது , கர்நாடகா வின் திரு. ராஜ்குமார்
மூவரும் கலந்து கொண்டனர்
அப்போது மேடையில்
கன்னட எம்ஜிஆர் ராஜ் குமார் அவர்களே என்று கமல் விளித்தார்,
விழா முடிந்ததும் நிருபர்கள் அந்த பட்டத்தைக் குறித்து
கேட்ட போது ராஜ் குமார் சொன்னது
" இது எனக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒரு விஷயம் காரணம் அண்ணன் எம்ஜிஆர் அவர்கள் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி, அவர் படங்கள் இங்கு மட்டுமல்ல எங்கள் மாநிலத்திலும் மிகப்பெரிய வசூலை குவித்தது, குவித்துக் கொண்டிருக்கிறது
எனவே எனக்கு இந்த பட்டம் கேட்பதற்கு கூச்சமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பெருமையாகவும் இருக்கிறது"
இதை விட வேறு என்ன வேண்டும் நமக்கு,
ஆந்திராவில் தலைவரின் பெயர் எப்படி தெரியுமா?
"MONEY GUARANTEE
RAMACHANTHIRAN "
ஏதாவது ஒரு படம் ஏதாவது ஒரு இடத்தில் தலைவர் படத்தை விட கொஞ்சம் வசூல் கூட வந்து விட்டால் போதும், கணேசன் குஞ்சுகள் உடனே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது
ஆனால் ஏபிசி மூன்று
சென்டர் வசூல் கேட்டால் வாயை பெவிக்கால் போட்டு ஒட்டி பெரிய போர்வையாகப் போர்த்தி பதுங்குவது,
இதெல்லாம் ஒரு பொழப்பு?
உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல you tube இல் திரு.பழ. கருப்பையா, அமீர், உதயகுமார், ஜாக்குவார் தங்கம் போன்றவர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் போய் உங்கள் வசூல் கணக்கை சொல்லுங்கள்
பழைய செருப்பு பரிசாக கிடைக்கும் சரியா?
தலைவரின் பக்தன்
ஜே.ஜேம்ஸ் வாட்..........(J.JamesWatt) ............
-
எம்.ஜி.ஆர். நடித்து வெளிவரவிருந்த “இணைந்த கைகள்” படத்தை பற்றி குறிப்பு ...
நித்தின் போஸ் இயக்கத்தில் “நியு தியேட்டர்ஸ்” நிறுவனம் 1934-ஆம் ஆண்டு “டாக்கு மன்சூர்” (கொள்ளைக்காரன் மன்சூர்) என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வெளியிட்டது. அதில் ராஜ்கபூரின் தந்தை பிரித்திவிராஜ் கபூர், கே.எல்.சைகல் உட்பட திரையுலக ஜாம்பவான்கள் பலரும் நடித்திருந்தனர்.
“வார்த்தைகள் சொல்லமுடியாதவற்றை காமிராக் கண்கள் படம்பிடித்துக் காட்டிய படம்“ என்று இப்படத்திற்கு புகழாரம் சூட்டப்பட்டது.
“இது ஒளிப்பதிவாளர்களின் படம்” என அமர்க்களமாக விமர்சிக்கப்பட்டது.
இப்படத்தின் கதையைப் பற்றி யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லப்போக அவருக்கு அது மிகவும் பிடித்துப்போனது. இதையே மையமாக வைத்து ரவீந்தரை கதை எழுத வைத்து வடிவமைக்கப்பட்ட படம்தான் “இணைந்த கைகள்”.
1969- ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் “இணைந்த கைகள்” கதையை பிரமாண்டமான திரைப்படமாக எடுக்க நினைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அதற்காக இரவு பகல் பாராது கண்முழித்து பாடுபட்டார் ரவீந்தர். “ ‘
மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்போடு அணை வெள்ளம் உடைத்து கொண்டு வருவது போல் 3 டி பாடம் போல் திட்டமிட்டார் தலைவர்
ரானில் வாழ்ந்த மன்சூர் என்ற குடித்தலைவனின் வாழ்வில் நடந்த நிஜமான சம்பவங்களை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. பன்மொழிகளில் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் தெலுங்கு தயாரிப்பில் என்,டி,ராமராவ் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
கதை-ரவீந்தர், வசனம்–சொர்ணம், இசை-எம்.எஸ்.விஸ்வநாதன், பாடல்கள்-வாலி, புலவர் வேதா, ஒளிப்பதிவு-வி,ராமமூர்த்தி, , எடிட்டிங்-ஜம்பு, சண்டைப் பயிற்சி-ஷியாம் சுந்தர், கலை-அங்கமுத்து, இயக்கம்-சாணக்யா என விளம்பரப்படுத்தப்பட்டு “இணைந்த கைகள்” படம் பெரும் பரபரப்பையும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆவலையும் உண்டு பண்ணியிருந்தது.
டாக்கு மன்சூர்” இந்திப் படத்தில் கதாநாயகன் மன்சூர் ஒரு கொள்ளைக்காரன்.
கதையின்படி (“யாதோன் கீ பாராத்” பாணியில்) தாயும், மகனும் தனித்தனியே பிரிகின்றனர். கதாநாயகன் மன்சூர், மூசா என்ற ஏழையினால் காப்பாற்றப்பட்டு வளர்க்கப்படுகிறான். ஏழை எளியவர்களுக்கு உதவுகிறான். மக்களின் ஆதரவை பெறுகிறான், மன்சூர், அரசனை எதிர்த்து போராட்டம் புரிகிறான்.
இளவரசியுடன் அவனுக்கு காதல் மலர்கிறது. மன்சூருக்கு பலவிதத்திலும் உதவி புரிகிறாள். அவ்வூரில் பயங்கரமான தண்ணீர்ப் பற்றாக் குறை நிலவுகிறது. இளவரசி மன்சூருக்கு துணை நிற்கின்றாள். ஒரு மலையை உடைத்து அவ்வூரில் தண்ணீர் பஞ்சம் தீருவதற்கு வழிவகுக்கிறார். மன்சூருக்கு தன் தாயைப் பற்றிய இரகசியம் பின்னர் தெரிய வருகிறது. இளவரசியின் தந்தை ஹாரூன் ரஷீதுக்கும் மன்சூரின் பிறப்பைப் பற்றிய ரகசியம் பின்னர் தெரிய வருகிறது. இறுதியில் மன்சூர் அரசாட்சியைப் பிடிக்கிறான், இதுதான் கதை.
இப்படம் முழுக்க முழுக்க ஈரானில் எடுப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இந்திப் படமாக வெளிவந்த “டாக்கு மன்சூர்” படக்கதையிலிருந்து சற்று மாறுபட்டு எழுத வேண்டி ரவீந்தரை எம்.ஜி.ஆர். பணித்தார். அதன் பிறகு கொள்ளைக்காரன் பாத்திரத்தை ஒரு குடித்தலைவனாக மாற்றி கதையமைக்கப்பட்டது.
ஆனால் ஈரான் அரசாங்கம் இதற்கான அனுமதி தரவில்லை. எப்படி அனுமதி தரும்? வம்சாவழியாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்த ஒரு தேசத்தில் ஒரு கொள்ளைக்காரன் புரட்சி செய்தி முடியாட்சியை கைப்படுத்துவதாக அமைந்த கதைக்கு படப்பிடிப்பு நடத்த அந்த நாடு அனுமதி வழங்குமா?
ஈரானில் பஹ்லவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும். அந்நாட்டின் கடைசி அரசருமான முஹம்மது ரிசா ஷா பஹ்லவியின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயம் அது. ஷாவின் ஆட்சியில் அரசரைக் கிண்டல் செய்தால் நேராக மரணதண்டனைதான்.
சித்ரா கிருஷ்ணசாமியை வைத்து ஈரான் நாட்டு அரசாங்கத்திற்கு படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதினார்கள். உலகப் புகழ்ப் பெற்ற ஈரானிய நடிகை பர்தீன் மூலமாக இதற்கு அனுமதி கோரி எடுத்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
அதன் பிறகு இந்தியாவில் நடப்பது போன்று கதையை மாற்றியமைத்து உயர்மட்ட சிபாரிசு வைத்து அனுமதி கோரினார்கள். எதிர்பார்த்ததுபோல் எந்த முயற்சியும் பலிக்கவில்லை.
நடிகை கீதாஞ்சலி எம்.ஜி.ஆர். இருவரும் இணைந்து நடித்த படக்காட்சிகள் படமாக்கப்பட்டன. சத்யா ஸ்டூடியோவிலேயே பிரமாண்டமான காடு, குகை போன்ற ஒரு செட் நிர்மாணிக்கப்பட்டது, நான்கு பெண்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது போன்றும், அனாதைக் குழந்தைகளுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையே உரையாடல்கள் நடப்பது போன்றும்,காட்சிகள் படமாக்கப்பட்டன.
வெறும் இரண்டே இரண்டு நாட்கள் நடந்த படப்பிடிப்போடு இப்படம் தடைபட்டு போனது, படத்தயாரிப்பும் கைவிடப்பட்டது. இதனால் மிகவும் துவண்டு போனது ரவீந்தர் மட்டும் தான். எம்.ஜி.ஆர். வழக்கம்போல் இதைப்பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தயாரிப்புக்கான ஆயத்த வேலைகளை தொடங்கச் சொல்லி ரவீந்தருக்கு உத்தரவு போட்டு விட்டார்.
இப்படத்திற்கு ஈரானிய நாட்டு கதாநாயகியை அறிமுகம் செய்ய எம்.ஜி.ஆர். நினைத்திருந்தார். திட்டமிட்டதுபோல் இப்பட்டம் மட்டும் வெளிவந்திருந்தால் இது மற்றொரு தங்க வாள் பரிசு பெறும் “நாடோடி மன்ன”னாக இருந்திருக்கக்கூடும்.
இப்படத்திற்காக எழுதப்பட்ட அத்தனை பாடல்களும் “சூப்பர் டூப்பர் – ஹிட்” பாடல்கள்.
“உலகம் சுற்றும் வாலிபன்” படத்தில் “நிலவு ஒரு பெண்ணாகி” என்ற பாடல் – [எம்.ஜி.ஆர். – மஞ்சுளா]
அதே படத்தில் இடம்பெற்ற “அவளொரு நவரச நாடகம்” என்ற பாடல் [எம்.ஜி.ஆர். – லதா]
“சிரித்து வாழ வேண்டும்” படத்தில் “கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்” என்ற பாடல் [ எம்.ஜி.ஆர். – லதா]
மேலும் ஒரு நீண்ட கவ்வாலி பாடல்
மேற்கண்ட இந்த நான்கு பாடல்களும் “இணைந்த கைகள்” படத்திற்காக எழுதப்பட்ட பாடல்கள். இப்படத் தயாரிப்பு கைவிடப்பட்டபின் இப்பாடல்கள் வேறு சில படங்களில் பயன்படுத்தப்பட்டு மகத்தான வரவேற்பைப் பெற்றன.
இந்த பட பிடிப்பு சம்பந்தமாக கலைமாமணி ரவீந்தர் அவர்கள் ஈரான் வரை சென்று பேசினார்கள்
அப்பொழுது தலைவரின் அன்பேவா ஸ்டில்களை கைவசம் எடுத்து சென்று இருந்தார் அதை பார்த்த ஈரான் நடிகர் ஜார்ஜ் மன்னர் படத்தை எடுத்து வந்து இருக்கிரீகள் என்று வியந்தனர் ...
தலைவர் முயற்ச்சி பலிக்க வில்லை என்றவுடன் எக்ஸ்போ கிளம்பி விட்டார்
நன்றி அப்துல் கையூம்
கலைமாமணி ரவீந்தர்.... Elangovan Raja...
-
ஆரம்ப காலங்களில், எம்.ஜி.ஆர் படங்களுக்கு கண்ணதாசன் பாடல்கள்தான். இடையில் இருவருக்கும் பனிப்போர். அதையொட்டி, எம்.ஜி.ஆர் படங்களுக்கு கண்ணதாசன் எழுதுவது குறைந்து போயிற்று
ஆனாலும், எம்.ஜி.ஆருக்கு, கண்ணதாசன் மீது ஒரு அபரிமிதமான ஈர்ப்பு உண்டு. ஆகவே தான், அவர் முதல்வர் ஆன பிறகு கண்ணதாசனை அரசவைக் கவிஞராக்கினார்.
கண்ணதாசன் எல்லா இடங்களிலும் புகுந்து புறப்பட்டவர். மகாபாரதத்தில் கண்ணன் தேவகிக்கு சிறையில் பிறந்தான், ஆனால், ஒரே இரவில் வேறு இடம் பெயர்ந்து யசோதையால் வளர்க்கப்பட்டான்.
`ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவன்’ கண்ணன் அதை, அப்படியே, தாய் சொல்லைத் தட்டாதே படத்தில், கதாநாயகி, கதாநாயகன் எம்.ஜி.ஆரைப் பற்றி பாடுவதாக எடுத்துக்கொண்டார்.
`ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய் கலந்தவனாம்
சாத்திரம் சரித்திரம் படித்தவனாம்
தவறு செய்பவரை பிடிப்பவனாம்
ராத்திரி பகலாய் அலைவானாம்
ரகசியப் போலீஸ் சேவகனாம்.
இந்த வரிகளில், எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் திருப்தி., அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயத்திற்கும் பொருத்தமான விளக்கம்.
பட்டுக்கோட்டைக்கு பிறகு, எம்.ஜி.ஆருக்காக தத்துவ பாட்டை இயற்றியவர் கண்ணதாசன். இதே படத்தில், இன்னொரு பாட்டு,
”போயும் போயும் மனிதனிக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே – இறைவன்
புத்தியை கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே – மனிதன் பூமியை கெடுத்தானே”.
இதை, எம்.ஜி.ஆர் பாடும்போது, தலையில் தூக்கி வைத்து மக்கள் கொண்டாடினார்கள்.........sbb...
-
1964 ல்
பணக்காரகுடும்பம்
7 திரையில் 100 நாள்
15 திரையில் 77 நாள்
35 திரையில் 50 நாள்
அடுத்து...
படகோட்டி
26 ஊரில் 50 நாள்
15 திரையில் 10 வாரங்கள்
சென்னை பிளாசா 101
மதுரை
நீயூசினிமா 93
திருச்சி
சேலம்
கோவை 12 வாரங்கள்.
வேட்டைக்காரன்
சென்னை சித்ரா
மேகலா, பிராட்வே
சேலம் நீயுசினிமா
மற்றும் 22 ஊரில்
50 நாள்.
அடுத்து...
தெய்வத்தாய்
சென்னை பிளாசா கிரவுன், புவனேஸ்வரி
100 நாள்....மற்றும்
திருச்சி,சேலம், மதுரை
12 வாரங்கள்...
26 அரங்கில் 50 நாள்.
தொழிலாளி...
18 அரங்கில் 50 நாள்..
சேலம் திருச்சி, மதுரை
75 நாள்
சென்னையில்...
சித்ரா 70 நாள்
பிராட்வே 70 நாள்
மேகலா 70 நாள்
++++++++++++++++
தாயின் மடியில்
என்கடமை 10 வாரங்கள்
கடந்து ஒடியது..........ukr...
-
1964 ல் ஆண்டின் முதல் காவியம் வேட்டைக்காரன்
கும்பகர்ணனை நிரந்தரமாக தூங்க வைத்தது....
அடுத்து புகழுடன் வந்த வெற்றிக்காவியமான என்கடமை காவியத்தை சில போலிகள் வதந்தி பரப்பியது...
அதையும் மீறி என்கடமை பல ஊர்களில் வெற்றிநடைப்போட்டது.
அடுத்ததடுத்து வெளியீடுகளில் என்கடமை வெற்றி மகத்தானது...
கைகொடுத்த தெய்வம் பகல் போடும் பொழுது
என்கடமை 3 காட்சி பல திரையில் திரையிடப்பட்ட சாதனைகள் ஏராளம்.
அடுத்து...
பணக்கார குடும்பம்
1964 ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் ...அதிக ஒட்டம்..
அதிக 100 நாள் யாவும்
பணக்கார குடும்பம் திரைப்படமாகும்...
அடுத்து..
தெய்வத்தாய் வெளியாகி சாதனை படைத்தது.
சென்னையில் பிளாசா
கிரவுன், புவனேஸ்வரி
100 நாட்கள் ஒடி சாதனை.
தொழிலாளி
வேட்டைக்காரன் திரைப்படத்திற்கு பின் குறுகிய நாட்களில் சாதனை....
அடுத்து சரவணா பிலிம்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் படகோட்டி
அலிபாபாவுக்கு பின்
தலைவர் வண்ணத்தில் ஜொலித்த ஈஸ்ட்மென்கலர் திரைப்படமாகும்.
சென்னை பிளாசாவில் 101 நாட்கள் ஒடியது.
சில திரையில் 71 நாளில் எடுக்கபட்டது.
14.01.1965 ல் எங்கவீட்டுப்பிள்ளை வெளியாகியதால் பொங்கல் முதல் நாள்...
சென்னை கிரவுன்
நெல்லை, தஞ்சை
திண்டுக்கல், பாண்டி கரூர், ஈரோடு
வரை ஒடியது....
படகோட்டி படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான
பரிசு வழங்கபட்டது.
தாயின்மடியில்
18.12.1964 அன்று வெளியானது.
இத்திரைப்படமும் பல திரையில் வெற்றிகள் கண்டது.
மொத்தத்தில்...
1964 ல் வெளியான மக்கள்திலகத்தின்
7 திரைப்படங்களும் வெற்றியை பதித்தது..பல வெளியீடுகளில் இன்று வரை வெளியாகி சாதனை படைக்கிறது.
கணேசனின்...
கலர்படங்களான
புராண கும்பகர்ணன் சாந்தியிலும்...
சிறகொடிந்த(புதிய) பறவை பாரகனில்
ஒட்டப்பட்டது...
எஸ்.எஸ்.ஆர் கணேசன் காம்பினேஷனில்
கைகொடுத்த தெய்வம்
பச்சை விளக்கு
அடுத்து
சாவித்திரி கணேசன்
காம்பினேஷனில் நவராத்திரி
100 நாள் படு மட்டமான வசூலில் தலா 5 லட்சம் கூட வசூல் இல்லாது ஒட்டபட்டது...
ஆண்டவன் கட்டளை
முரடன் முத்து
தோல்வியை தழுவியது......ukr...
-
சுய விளக்கமளிக்கும் விமர்சனம்.
புரட்சித் தலைவர் மந்திரி குமாரி மற்றும் சர்வாதிகாரி நடித்துவிட்டார்.
அடுத்தது கணேசமூர்த்திய டி.ஆர் சுந்தரம் தயாரிப்பில் நடிக்க செல்லும்போது தலைவர் டி.ஆர் சுந்தரத்தை பற்றி சொல்லி தனது காரை கொடுத்து அனுப்பினார். திரும்பிப்பார் தோல்வி, இல்லறஜோதி இதுவும் தோல்வி. மூன்றாவது படத்துக்கு கால் சீட் கொடுக்காமல் கணேசமூர்த்தி எஸ்கேப். மீண்டும் தலைவரை வைத்து அளிப்பாபாவும் நாற்பது திருடர்களும் எடுக்கப்பட்டது.
இப்படி தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படப்பிடிப்பின் பொது திரு. டி.ஆர்.சுந்தரம் நடவடிக்கை!!!!
கணேசமூர்த்தி பிள்ளைகள் இதை பற்றி பேசமாட்டார்கள்!!!...sb...
-
கணேசமூர்த்தி "பிள்ளைகளிடம்" தனுஷ்கோடி ஆதித்தன் என்று சொல்லி பாருங்கள் பாப்போம். குப்பென்று கோபம் வரும். காரணம்:
நான் கேளிவிப்பட்டது....பை எலேச்டின் ஆம் ஆண்டு நடந்தது திரு. தனுஷ்கோடி ஆதித்தன் போக ரோடு வெற்றிபெற்றதற்கான சுவரொட்டி "தேர்தல் நேரத்தில் தொகுதி பக்கம் வராததற்கு நன்றி" நான் வெற்றி பெற்றுவிட்டேன்!!!!!......sb...
-
'இது ராஜபாட்டை அல்ல' சிவகுமார் எழுதிய சுய சரிதை அன்றைய வாரப்பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அதில் சிவகுமார் தன்னுடைய சினிமா அனுபவங்களை மட்டுமல்லாமல் தன்னை பாதித்த சம்பவங்கள் பலரின் நற்குணங்களையும் தீய செயல்களையும் தனது மனதில் பட்டதை அப்படியே எழுதினார். அந்த காலங்களில் அதை அநேகம் பேர் படித்தது மட்டுமல்லாமல் அதைப்பற்றி சிலாகித்து பேசியதும் உண்டு.
சிவகுமார் ராஜபாட்டையில்
"திருவருட்செல்வரி"ல் அப்பராக நடித்த நடிகர் காஞ்சி பெரியவரை இமிடேட் பண்ணி நடித்தார். இமிடேஷன் பண்ணுவது அவருக்கு ஓசி அல்வா சாப்பிடுகிற மாதிரி. அப்படியே காஞ்சி பெரியவர் மாதிரி தோற்றமளிக்க அந்த செட்டுக்கு வந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் அந்தக் காட்சியை பார்த்து மெய்மறந்து கையெடுத்து கும்பிட
நினைத்த அவர் சற்று நேரத்திலேயே அந்த நடிகர் செய்த காரியத்தை பார்த்து திடுக்கிட்டு போனார்.
கீழே அமர்ந்த அந்த நடிகர் திடீரென்று பாக்கெட்டிலிருந்து 555 சிகரெட்டை எடுத்து பத்த வைத்ததை பார்த்தவுடன் அவர் அதிர்ந்து போய் செட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த காலகட்டங்களில் காஸ்ட்லி சிகரெட்டான 555 புகைப்பதில் ஒரு பெருமை. அந்த தற்பெருமையை
பலர் முன்னாடி செய்து காட்டுவதில் கர்வம் கொள்ளுபவர் கணேசன். செட்டில் என்ன அன்னை இல்லம்
வீட்டிலேயே தாயின் முன் கையில் சிகரெட்டுடன் கொடுக்கும் போஸை பார்த்து அவரின் மரியாதையை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆனால் சிவகுமார் அந்த மாதிரி பக்தி படங்களில் நடிக்கும் போது உண்மையான கடவுள் பக்தியுடன் நடந்து கொள்வார். நடிகை k r விஜயா கூட பக்தி படங்களில் நடிப்பதற்கு பலநாள் விரதமிருந்து நடிப்பேன் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனால் கணேசனுக்கு அதெல்லாம் கிடையாது காசு கொடுத்தால் போதும் குடியுடன் சிகரெட்டையும் சேர்த்து நமக்கு நடித்து கொடுத்து விடுவார்.
அப்படி பக்தியில்லாமல் நடித்த அந்த "திருவருட்செல்வர்" படம் படுதோல்வி அடைந்நதுடன் a p நாகராஜனை கடன் என்னும் துன்பச் சேற்றுக்குள்
அமிழ்த்தி ஆறா துயரத்தை உண்டு பண்ணி விட்டது. யாருக்காகவும் தன் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார்.
ஆனால் ஒரே ஒருவருக்காக மட்டும் லாகிரி வஸ்துக்களை பயன்படுத்தாமல் நடித்திருக்கிறார்.
அவர் யார் என்று தெரிகிறதா?
அவர் வேறு யாருமல்ல அஷ்டாவதனி நடிகை பானுமதிதான்.
பானுமதிக்கு தண்ணி, பீடி, புகையிலை போன்ற கெட்ட வாடை பிடிக்காது. ஒருமுறை
p u சின்னப்பாவுடன் நடிக்கும் போது அவருடைய கெட்ட லாகிரி வஸ்துக்களின் வாடை பிடிக்காமல் படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.
அதனால் அவருடன் நடிக்க வரும் நடிகர்கள் பயந்து போய் ஒழுக்கத்துடன் நடிப்பார்கள். சிவாஜியும் "அம்பிகாபதி"யில் நடிக்கும் போது பயபக்தியுடன் நடித்ததாக சொல்வார்கள். மேலும் சிவாஜியை விட வயதில் மூத்தவர் பானுமதி.
ஆனால் எந்தவித பக்தி படத்திலும் நடிக்காத ஒருவர் எந்த தீயபழக்கங்களும் இல்லாமல் போதை இல்லாமலே இயல்பாக
தெளிவாக நடித்துக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல நம் புரட்சி நடிகர்தான்.
செய்யும் தொழிலே தெய்வமாக நினைத்தவர். ஏழை எளியவர்க்கு உதவி செய்யவே நடித்துக் கொண்டிருந்தவர்.
அவர் நல்ல பழக்க வழக்கங்களிலும் சிறந்து விளங்கினார். ஒருமுறை k r விஜயாவின் பெட்காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்தச் சொன்ள எம்ஜிஆர் அவருக்கு பல் துலக்கி விட்டு காபி குடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சொன்னார். "விவசாயி" படத்தில் நடிக்கும்போது இந்த சம்பவம் குறித்து விஜயா சொன்னதாக ஒரு செய்தி வந்தது நினைவிருக்கலாம். வாயை சுத்தம் செய்யாமல் குடித்தால் பருகும் காபியும் விஷமாகி விடும் என்று சொன்னவுடன் விஜயாவும் அதன்பிறகு எம்ஜிஆர் சொன்னபடி நல்ல வழக்கத்தை கைகொள்ள ஆரம்பித்தார்.
இப்படி தன்னைப் போல் மற்றவர்களும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்த எம்ஜிஆர் எங்கே? லாகிரி வஸ்துக்களை பயன்படுத்தி தன்னையும் தன்னை நம்பியவர்களையும் தீய வழிக்கு அழைத்து செல்லும் சிவாஜி எங்கே?
இதே ராஜபாட்டையில் எம்ஜிஆர் தாயின் மீது கொண்ட அன்பையும் மரியாதையையும் விளக்கி சொல்லியிருக்கிறார் சிவகுமார்.
தகவல் உதவி: திரு சைலேஷ் பாசு.........ksr...
-
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*02/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் சாமான்யர்களின் தெய்வம் என்று அழைக்கப்படுகிற எம்.ஜி.ஆர்.அவர்களின் வரலாறு என்பது நமக்கெல்லாம் ஒரு பாடம், படிப்பினை,*ஒரு புதிய பாதை .அரசியல் காரணங்களுக்காக அவரது தாய்மொழியோடு சம்பந்தப்பட்டு பேசப்பட்டதெல்லாம் உண்டு . அதனால் அந்த மொழியை சார்ந்தவர்கள் டீக்கடை கூட நடத்த முடியாமல் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு ஆனால் எம்.ஜி.ஆர். ஒருபோதும் தன்னை அப்படி கருதியதே இல்லை .
அண்ணா தி.மு.க. ஆரம்பித்த புதிதில் புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த மாஹி*என்ற தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு எம்.ஜி.ஆர். செல்கிறார் .* அந்த தொகுதியில் பெரும்பாலானவர்கள் மலையாளிகள் என்பதால், உங்களுக்குத்தான் மலையாள மொழி தெரியுமே. மலையாளத்தில் பேசலாமே என்றனர் .* இரவு 11 மணி ஆகிவிட்டது . கட்சி நிர்வாகிகள் நீங்கள் மலையாளத்தில் பேசுங்கள் பரவாயில்லை என்கிறார்கள் .* ஆனால் எம்.ஜி.ஆர். நான் ஒருபோதும் மலையாளத்தில் பேசமாட்டேன் .* ஏனென்றால் நான் தமிழ் நாட்டில் வளர்ந்து, தமிழ் மொழி பேசி, தமிழ் மண்ணில், தமிழர்கள்* அளித்த வருமானத்தில் என் வாழ்க்கையை அமைத்து , சாப்பிட்டு வளர்ந்த நான், தமிழில்தான் பேசுவேன் .தமிழில் நான் பேசுவதை விரும்பாதவர்கள் இங்கிருந்து கலைந்து* செல்லலாம் . என்றவர் தமிழில் 15 நிமிடங்கள் உரையாற்றி வாக்குகள் சேகரித்தார் .என்பது வரலாறு .
.**.*திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி : கோவையில் உள்ள கட்சி தலைவர்கள், கோவைத்தம்பி, திருப்பூர் மணிமாறன், அரங்கநாயகம், குழந்தைவேலு, என்னை போன்றவர்கள் எல்லாம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.* அவர்களை கோவை மாவட்டத்தில் கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சி பணியாற்ற வாருங்கள் என்று வேண்டுகோள் வைத்தபோது, அதை பரிசீலித்து ,தலைவர் கோவை புறப்பட்டு வருகிறார் .* வங்கியில் இருப்பு வைத்திருந்த ரூ.30,000/-த்தில்* ரூ.2,000/- போக* மீதி ரூ.28,000/- எடுத்துக்கொன்று கோவைக்கு வந்த தலைவர் ,விமான செலவு போக, மினிமேக்ஸ் என்கிற ஓட்டலில் சில நாட்கள் தங்குகிறார் .**அந்த பணம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், அவரது உதவியாளர்களுக்கும் சேர்த்து*3 நாட்களுக்குத்தான் போதுமானதாக இருந்தது .* 4ம் நாள் ஓட்டல் உரிமையாளர்*எம்.ஜி.ஆர். அவர்களிடம் மேற்கொண்டு பணம் அட்வான்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டபோது ,தலைவரிடம் பணமில்லை. திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர், ஒரு மாநிலத்தின் முதல்வராக வர இருப்பவர் கைகளில் பணம் இருப்பு இல்லை என்று சொன்னால் இன்றைக்கு யாராவது நம்புவார்களா என்றால் இல்லை. ஆனால் அதுதான் உண்மை .* அப்போது வந்த*கோவைத்தம்பியிடம் பணம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, என்னிடம் ரூ.90,000/- இருக்கிறது என்றதும்.நீ சென்று உடனே கொண்டுவா என்றார் .பணம் கொண்டுவரும்போது வழியில் அரங்கநாயகத்தை சந்தித்த போது ,அவர் என்னிடம் ரூ.1,10,000/-* உள்ளது என்றதும், அதையும் சேர்த்து ரூ.2 லட்சம்*கொடுக்கிறபோதுதான், அரங்கநாயகம் குறிப்பிடுகிறார்* ,தலைவர் ஏதோ பண சிக்கலில் இருக்கிறார் போலும் .* இது போதாது .என்று கருதி, பி.எஸ்.ஜி.கல்லூரி*உரிமையாளரிடம் சென்று ரூ.1 லட்சம் வாங்கி ரூ.3 லட்சமாக கொடுக்க தீர்மானிக்கிறார் .* அவர் பணம் நான் தருகிறேன் .ஆனால் ஒரு நிபந்தனை, எம்.ஜி.ஆர். அவர்கள்* நாளை காலை சிற்றுண்டி எங்கள் இல்லத்தில் வந்து அருந்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் .* அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது .தலைவர் எங்கள் இல்லத்திற்கு வருகை தரும்போது அவரிடமே பணத்தை தருகிறேன் என்றார்.கல்லூரி உரிமையாளர் .நாங்கள் தலைவரிடம் நீங்கள் நாளை விமானத்தில் சென்னைக்கு புறப்படுவதற்கு முன்பாக பி.எஸ்.ஜி.கல்லூரி உரிமையாளர் இல்லத்தில் நாம் காலை சிற்றுண்டி அருந்த உள்ளோம் அதற்கு உங்கள் அனுமதி தேவை என்று கேட்டு பெற்று* அதன்படி*திரு.வரதராஜ் என்பவர் இல்லத்திற்கு சென்றோம் . பொதுவாக பணத்திற்காக தலைவர் யார் வீட்டிலும் சென்று உணவருந்த மாட்டார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் .* அப்படி சிற்றுண்டி அருந்திவிட்டு புறப்பட தயாரானபோது*கோவைத்தம்பியும், அரங்கநாயகமும், வரதராஜ் அவர்களிடம் பணம் சீக்கிரம் கொடுங்கள் என்று கேட்டபோது அப்போது 500 ரூபாய் நோட்டுகள் இல்லை.,அவர்* 100 ரூபாய் நோட்டுகளாக* ஒரு பெரிய சூட்கேஸில் ரூ.9 லட்சத்தை கொண்டுவந்து தலைவரிடம் அளிக்கிறார் .இதை எதிர்பாராத தலைவர் எம்.ஜி.ஆர். வரதராஜிடம் என்ன இது, எதற்கு இவ்வளவு பெரிய சூட்கேஸ் நிறைய பணம் என்று கேட்டதற்கு, இதை நீங்கள் தேர்தல் நிதியாக வைத்து கொள்ளுங்கள் என்று சொன்னார் .* *சரி, இதற்கான ரசீதை நான் சென்னை சென்றடைந்ததும்**அனுப்புகிறேன் என்று புதிய புத்துணர்ச்சியோடு*சொல்லி,தன் மனதிற்குள் இனி எதிரிகளை தேர்தல் களத்தில் சந்திக்க இந்த நிதி இப்போதைக்கு போதுமானதாக இருக்கும் என்று எண்ணி எங்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் .**
சென்னை சென்றதும், தேர்தல் முகாமிட்டு எதிரிகளை தேர்தல் களத்தில் சந்தித்து, வெற்றிவாகை சூடி, 136 எம்.எல்.ஏக்களுடன்* சென்னை பிரெசிடென்சி ஓட்டலில் கூட்டம் நடைபெற்ற போது வெற்றிவீரராக வந்த கோவைத்தம்பியை அழைத்து, கோவையில் நமக்கு நிதி உதவி செய்த திரு.வரதராஜ்* அவர்களுக்கு இந்த ரசீதை கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி,இந்த நபர் கட்சியில் இருக்கிறாரா என்று கேட்டபோது, இல்லை அவர் நமது கட்சியின் அபிமானி என்றதும் .உடனடியாக கட்சியில் சேர்த்துவிட்டு ,தகவல் சொல்லுங்கள் என்றார் .அவர் அ.தி.மு.க.வின் உறுப்பினராகி விட்டார் என்பதை கோவைத்தம்பி மூலம் உறுதி செய்துகொண்டு அந்த கூட்டத்திலேயே சொல்கிறார் .,நமது கட்சிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோது தக்க சமயத்தில் நிதி* உதவி செய்த இந்த வரதராஜ் அவர்களை எதிர்காலத்தில் மாநிலங்கள் அவை உறுப்பினராக நியமனம் செய்கிறேன்* என்று உறுதி அளித்து** அதன்படிசெய்த உதவிக்கு நன்றி பாராட்டி* நியமனம்* செய்தவர்தான் நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .*தலைவர் அவர்கள் தான் வாங்கிய பணத்திற்கு ரசீது கொடுத்துவிட்டு, நிதி உதவி*செய்தவருக்கு எம்.எல் ஏக்கள் கூட்டத்தில் உரிய பதவியும் அளிப்பதாக உறுதியும் கொடுத்தார் . மேலும் அவரை நான் எதிர்காலத்தில்* எம்..பி.யாக* தேர்வு* செய்வதற்கு கூட* ஆவன* செய்வேன் என்றும் குறிப்பிட்டார் .நன்றி என்ற வார்த்தைக்கு மறு* உதாரணம் சொல்லவேண்டும் என்றால் எனக்கு தெரிந்து தலைவர் எம்.ஜி.ஆரை தவிர, நான் பழகிய தலைவர்களில், உடனுக்கு உடன் நன்றியை காணிக்கை ஆக்க கூடிய தலைவர்* வேறு எவரையும் குறிப்பிட முடியாது* திருவள்ளுவரின் குறளான நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்ல*அன்றே மறப்பது நன்றி, எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் . உய்வில்லை.செய்நன்றி கொண்ட மகர்க்கு** *என்கிற வரிகளின்படி, நாம் நமது தலைவரின் செய்கைகளை தெரிந்துகொள்ள வேண்டும் .* தனக்கு உதவி செய்தவர்களை உயிருள்ள வரை நினைத்து பார்த்த ஒப்பற்ற தலைவரின் வழியில் நாமெல்லாம் பின்பற்றவேண்டிய நடைமுறை என்னவென்றால், ஒரு சின்ன உதவியை ஒருவர் செய்திருந்தாலும் கூட , அதற்கு பிரதி உபகாரம் செய்துவிடுங்கள் அல்லது அதற்கு நன்றியாவது சொல்லிக்கொண்டு இருங்கள் என்பது நபிகள் எம்பெருமானார் நாயகம் அவர்களின் வாசகம் ஆகும் .* அப்படி செய்தால்தான் உனக்கு நன்மை பயக்கும். நன்றியை செய்தவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று சொன்னத்திற்கேற்ப, வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய தலைவனாக புரட்சி தலைவரையும்,அவருடைய நன்றி பாராட்டும் செய்கைகளையும் எண்ணி பார்த்து மகிழ்கின்றோம் .**
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனக்காக உழைத்தவர்களை, உதவி செய்தவர்களை எண்ணி, நன்றி பாராட்டாமல் இருந்ததில்லை . பல்வேறு நூல்கள் மூலமாக ,அவருடைய வாழ்க்கையில் பின்னி பிணைந்தவர்கள் மூலமாக நாங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம் .* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து பேசியவர்களுக்கு அவர் பதவிகள் கொடுத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ முடியாது .* தான் பதவியில், பலத்தோடு இருந்தாலும், நம்மை எதிர்ப்பவன் மீது தாக்குதல் தொடுக்க வேண்டுமென்றோ ,அவனுக்கு இடையூறு செய்யவேண்டுமென்ற எண்ணமோ , கொஞ்சமும் இல்லாத ஒரு மாபெரும் ,மகத்தான சிந்தனை உடைய தலைவன் இருந்தார் என்றால் அது புரட்சி தலைவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் .பேரறிஞர் அண்ணாவிற்கு பின்னால், புரட்சி தலைவர் தனக்கே விரோதமாக போனவர்களை பற்றி தவறுதலாக எண்ணாமல், நாம் ஒருவேளை அவர்களுக்கு தவறுகள் ஏதாவது இழைத்துவிட்டோமோ என்று சிந்திக்கிற, அந்த சிந்தனையின் வெளிப்பாடு சரியாக இருக்குமேயானால் அவர்களுக்கு உரிய இடத்தை தருவதில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்போதும், யாருக்கும் சளைத்தவர் அல்ல .* அந்த வகையில் அண்ணாவிடத்தில் இருந்து விலகி சென்ற ஒருவர் ஒரு கால கட்டத்தில் மேடைகளில் பேசும்போது* அண்ணாவிற்கு என்ன தெரியும் , அண்ணாவின் தலையில் வெறும் மண் தான் இருக்கிறது அவருடைய தலையில் களிமண் தான் உள்ளது என்று பேசிய தலைவர்களும் உண்டு . அவர்களுடைய பெயரை சொல்ல நான் விரும்பவில்லை. அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் மேடையில் பேசுகின்றபோது*அவருடைய பெயரை குறிப்பிட்டு அண்ணா சொன்னார். ஆமாம் தம்பி, என் தலையில் வெறும் மண் தான் இருக்கிறது . அந்த மண்ணை தோண்டி பார்த்தாயேயானால் அங்கே நிலக்கரி கிடைக்கும் .அதே மண்ணை கொஞ்சம் ஆழமாக தோண்டி பார்த்தால் அங்கே தங்கம் கிடைக்கும் . இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்டி பார்த்தால் அங்கே வைரங்கள் கூட கிடைக்கலாம் .* இந்த மண்ணை நீ பயன்படுத்தாமல் விட்டுவிட்டாயே* என்று நான் வேதனை படுகிறேன் என் அருமை தம்பியே என்று அண்ணா அவர்கள் சொன்னதை*போல* தன்* மனதிலே இருத்தி கொண்டு தனது பகைவர்களாக இருந்து யாராவது பேசினால், அவர்களை துன்புறுத்தாமல், தண்டிக்காமல் இருந்தவர்தான் நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள்*
எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்த நேரத்தில் அவரை எதிர்த்து, அன்றைக்கு கவியரசு என்று அழைக்கப்பட்ட கவிஞர்* முத்துராமலிங்கம் அவர்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மீது ஏதோ ஒரு கோபம் கொண்டு*அண்ணா*தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்து கொண்டு ,ஒலிபெருக்கி மூலம் தனக்கு பக்கபலமாக ஆளே இல்லாமல் காலை*9 மணியில் இருந்து இல்லாததை, பொல்லாததை எம்.ஜி.ஆர். அவர்கள் பற்றி பேசுகிறார் .*அவருக்கு மனதில் பட்ட கருத்துக்களை*தலைவருக்கு*எதிராக*பேசுகிறார் .* அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் அவரை*அடிக்க முற்படும் செய்தியறிந்து காவல்துறையை தொடர்பு கொண்டு, அந்த கவிஞருக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுங்கள் ,அவரை தொடர்ந்து பேச அனுமதியுங்கள்* என்று சொல்லிவிட்டு ,அவருடன் பக்கபலமாக*வந்த ஒரு* சிலர்*தலைவரை விமர்சித்த நேரத்தில் ,எதை பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் பேசுவதை*ஒலிபெருக்கி மூலம் கேட்டறிந்து எல்லாவற்றையும் அனுமதித்தார் என்று சொன்னால் , அத்தகைய*ஜனநாயக*பண்புமிக்க ஒரு தலைவரை*நீங்கள் உலகத்தில் இன்றைக்கு* எந்த பகுதியில் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் பதவியில் இருக்கும்போது, தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கு முன்பு ஒருவர் அமர்ந்து*வசைபாடுகிறார் என்று சொன்னால்*அவரை தண்டிக்காமல், துன்புறுத்தாமல் ,போதிய பாதுகாப்பு கொடுத்த*தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை தவிர வேறு யார் இருக்க முடியும் .* பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக இந்த சம்பவத்தை வைத்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை*கருதலாம்**அறிஞர் அண்ணாவை பற்றி ஒரு காலத்தில் காங்கிரஸ்காரர்கள் மிக கேவலமாக சித்தரித்து ஒரு சுவரொட்டியை ஒட்டி வைத்திருந்த நேரத்தில், ஒரு தி.மு.க. தொண்டர் மேடையிலே பேசுகிறார் .* அதாவது அண்ணா அவர்களே, உங்களை பற்றி மிக கேவலமாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னபோது , அண்ணா அவர்கள் அந்த சுவரொட்டிகள் இருட்டான இடத்திலே இருப்பதாக கேள்விப்பட்டேன் .நீங்கள் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை*எரிய வைத்து அனைவரும் அதை எளிதாக*படிக்கும்படி செய்யுங்கள் ,பார்ப்பவர்கள் எல்லாம் படித்துவிட்டு போகட்டும். நியாயத்தை புரிந்து கொள்வார்கள் என்று சொன்னது போல அண்ணாவின் தம்பியாக வாழ்ந்து மறைந்த*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், அவரை பற்றி, அவருடைய கட்சி அலுவலகத்திற்கு அருகில் அமர்ந்து*ஒரு கட்சி தொண்டர் எதிர்த்து பேசியதையெல்லாம் சகித்துக் கொண்டு*வாக்கி டாக்கி மூலம் அவற்றை*கேட்டு* சிரித்து கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல்*அவரை அழைத்து, என்மீது*உனக்கு என்ன இவ்வளவு கோபம் என்று கேள்வி கேட்டு உப்பு வாரியத்தின் தலைவராக*அவரை நியமித்தவர்தான் நமது தானை தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*. இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.மஞ்சள் முகமே வருக* - வேட்டைக்காரன்*
2..எம்.ஜி.ஆர். - தங்கவேலு உரையாடல் - உழைக்கும் கரங்கள்*
3.சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம்*
4. திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி****
-
"இன்று போல் என்றும் வாழ்க" என்ற படத்தில் நான் ஒரு பாடலை எழுதினேன். "இது - நாட்டைக் காக்கும் கை உன் - வீட்டைக் காக்கும் கை இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இது - எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை" இதுதான் அந்தப் பாடல். இது - எதிர்காலப் பாரதத்தின் வாழ்க்கை என்றுதான் எழுதினேன். பாரதத்தின் என்ற வார்த்தையை நீக்கிவிட்டுத் தாயகத்தின் என்று மாற்றியவர் எம்.ஜி.ஆர்.தான்.
"அன்புக்கை இது ஆக்கும் கை - இது அழிக்கும் கையல்ல சின்னக்கை ஏர் தூக்கும்கை - இது திருடும் கையல்ல நேர்மை காக்கும்கை - நல்ல நெஞ்சை வாழ்த்தும்கை - இது ஊழல் நீக்கித் தாழ்வைப் போக்கிப் பேரெடுக்கும்கை" இப்படி எல்லா சரணங்களிலும் 'கை' 'கை' என்றுதான் வரும். நான் எம்.ஜி.ஆர் கையைப் பற்றித்தான் எழுதினேன். ஆனால் இன்று வேறொரு கைக்குப் (காங்கிரஸ்) பிரச்சாரப் பாட்டாக ஆகிவிட்டது. என்றாலும், அன்புக்கு நானடிமை, இது நாட்டைக் காக்கும் கை என்ற இரண்டு பாடலையும்தான் எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.
கல்கத்தாவுக்கு அனுப்பி ஒரே வாரத்தில் இசைத்தட்டாக வெளிவரச் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார். அப்போது அமெரிக்காவிலிருந்து வெளிவந்த 'வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை நான் எழுதிய இந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு என் பெயரையும் குறிப்பிட்டு இதைப் போன்ற கவிஞர்கள் எழுதிய கருத்துள்ள பாடல்களைப் பாடி மக்களைக் கவர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார் என்று எழுதியிருந்தது. டைரக்டர் சங்கர்தான் அந்தப் பத்திரிகையை என்னிடம் காட்டினார். படிப்பதற்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அவர் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு அவர் செய்த நன்மைகள், ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள், மக்களிடம் அவருக்கிருந்த அணுகுமுறை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை இதெல்லாம் சேர்ந்துதான் அவரை ஆட்சிக்குக் கொண்டுவந்ததே தவிர இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அல்ல.
ஏன்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களில் இதைப்போல் நல்ல பாடல்கள் இல்லையா? எத்தனையோ கவிஞர்கள் இதைவிடச் சிறந்த கருத்துள்ள பாடல்களை சிவாஜி படங்களில் எழுதியிருக்கிறார்களே. நான் கூட சிவாஜி படங்களுக்கு எழுதியிருக்கிறேனே. சிவாஜி ஒரு கட்சி கூட ஆரம்பித்தாரே. ஒரு தொகுதியில் கூட அவராலே ஜெயிக்க முடியவில்லையே. அதற்கு என்ன காரணம்? சினிமா பிரபலம் என்பது வேறு. அரசியலில் வெற்றி பெறுவது என்பது வேறு. எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. கதர்ச்சட்டை அணிந்தவர்கள் எல்லாம் காமராஜர் ஆகிவிட முடியுமா?
சினிமா என்பது பிரபலத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுமே தவிர அதை வைத்து எல்லாரும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து அவை நூறு நாட்கள் ஓடிவிட்டால் எல்லா நடிகர்களும் முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்தக் கனவு மாயக் கனவு என்பதை நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்ற தேர்தல் பல நடிகர்களுக்கு உணர்த்திவிட்டது. வானத்தில் ஒரு நிலவுதான் இருக்கமுடியும். இன்னொரு நிலவு இருக்காது. அதுபோல் எம்.ஜி.ஆர் ஒருவர்தான் இருக்க முடியும். இன்னொரு எம்.ஜி.ஆர் இருக்க முடியாது.
ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார். அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும் பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர். எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!.........da.........
-
ரீல் வாழ்க்கையையும் ரியல் வாழ்க்கையையும் ஒன்றாக பாவித்த ஒரே நடிகர் எம்ஜிஆர் அவர்கள்..தான் திரைத்துறையில் சம்பாதித்த பணம் முழுவதையும் தமிழக மக்களுக்காகவும் கலைஞர்களுக்காகவும் செலவிட்டவர்..அவரால் பயன் பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கை இதுவரை கிடைக்கவில்லை..அவரை எதிர்த்தவர்களுக்கு கூட அவர் உதவி செய்தது ஏராளம்..அதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன்..இந்த உதாரணம் பண உதவி பெற்றவர் நடிகர் திரு. மயில்சாமி எம்ஜிஆர் திரைப்பட துறையில் இருக்கும்போது சக நடிகர் ஒருவரிடம் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குமேல் உதவியாளராய் இருந்தவர். திருமண உதவிக்காக அவருடைய முதலாளியிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த முதலாளியும் அவருடைய மனைவியை அழைத்து ஒரு 2000 ருபாய் கொடு என்று சொல்லியிருக்கிறார்..அவர் மகிழ்ச்சியுடன் பத்திரிகையை கொடுத்துவிட்டு வந்தார்..அப்போது அந்த உதவியாளருடன் கூட வந்தவர் ஏன் நீங்கள் எம்ஜிஆரை பார்க்க கூடாது என்றார்..அதற்கு அந்த உதவியாளர் எம்ஜிஆர் அந்த முகாமில் உள்ளார்..மேலும் அவரை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என்றார்..ஆனால் கூட வந்தவர் அவரை விடவில்லை..வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார்..வந்தவர்களை வழக்கம்போல சாப்பாடு போட்டு உபசரித்த எம்ஜிஆர்..வந்த உதவியாளரின் பெயரை சொல்லி எப்படி இருக்கிறீர்கள்..நன்றாக இருக்கிறேன் என்று கூறி திருமண பத்திரிகையை அளித்திருக்கிறார்..அவர் கேட்ட முதல் கேள்வி..கல்யாணத்திற்கு எவ்வளவு செலவு? இதை ஏன் இவர் கேட்கிறார் என வியந்து..அப்போதைய செலவு ஒரு 50,000 என்று சொல்லியிருக்கிறார்.செலவுக்கு என்ன செய்ய போறீங்க என்று கேட்கிறார் நம் தலைவர்..அதற்கு உதவியாளர் கல்யாணத்திற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது பார்த்துக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்..சரி நாங்கள் கிளம்பறோம் என்று சொன்னவர்களை..கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு தனது உதவியாளரை அழைத்து அவரிடம் 50,000 கொடுங்கள் என்று சொல்லி..கல்யாணத்தை நல்லபடியாக நடத்துங்கள்..நான் கண்டிப்பாக வருவேன் என்றார்.வந்தவருக்கு பேச வார்த்தை வராமல் கண்ணீருடன் நின்றிருக்கிறார்.காலம் முழுவதும் யாருக்காக உழைக்கிறோமோ அவர் கொடுத்தது 2000 ஆனால் யாரை நாம் எதிரி என்று நினைத்திருந்தோமோ அவர் கல்யாண செலவு முழுமையும் கொடுத்துவிட்டார்..அதனால்தான் இவரை வள்ளல் என்கின்றனரா என்று வியந்தார்..வந்தவர் யார் என்று நினைக்கவில்லை நம் வள்ளல்..அவரது தேவைதான் அவருக்கு தெரிந்தது..அதனால்தான் அவர் எட்டாவது வள்ளலாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்...இது போன்ற தெரிந்த உதாரணங்கள் கோடி உண்டு..தெரியாதவை கோடான கோடி...ஏன் என்றால் வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியகூடாது என்று நினைப்பவர் நம் தெய்வம்...இப்படிப்பட்ட மனித நேய புனிதரின் பக்தரை நாம் இருப்பதில் பெருமை கொள்வோமாக..
உள்ளத்தால் வள்ளல் தான்!
ஏழைகளின தலைவன்.........sbb...
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*03/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் .* விமான நிலையத்தில் சந்தித்த உன்னால் முடியும் தம்பி கதை எழுதிய திரு.எம்.எஸ்.உதயமூர்த்தியிடம் பேசியபின் விடை பெறுகிறார் .* அப்போது ஒரு அமெரிக்க பெண்மணி கண்ணீரும் கம்பலையுமாக நிற்கிறார். எம்.ஜி.ஆர். தன்*உதவியாளர் மூலம் என்னவென்று விசாரிக்க சொல்கிறார் .* அவருடைய கைப்பை ,அதிலுள்ள பணம்,சில பொருட்கள் எல்லாம் காணாமல் போய்விட்டது என்று அழுகிறார் .* நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். எனக்கு வேண்டியவர்களுக்கு தகவல் சொல்லி தேவையான ஏற்பாடுகள் செய்கிறேன்.* நீங்கள் தைரியமாக வீடுபோய்* பாதுகாப்பாக**சேருங்கள் உங்களுடைய கைப்பை, பணம், பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்று நம்பிக்கை வார்த்தைகள்தனக்கு சம்பந்தமில்லாத இடத்தில* அங்கேயே சொல்லி,அந்த பெண்மணியின் கண்ணீரை துடைத்தது* மட்டுமல்லாமல், அங்கிருந்த தன்னுடன் வந்திருந்த முக்கிய நபரிடம், இந்த பெண்மணியின் உடைமைகள் மீட்டு கொடுக்க வேண்டிய ஏற்பாடுகளை நீங்கள் செய்துதர வேண்டும் என்று ஆணையிட்டு அதை கிடைக்க செய்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .**
மும்பை தாராவியில் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர் புலவர் ராமச்சந்திரன் என்பவர் எம்.ஜி.ஆர். மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர் .* சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அனைவரும் அறிந்ததே . ஆனால் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்படும் ரயில்கள் பற்றி அறிவிப்பு வெளியிடும்போது எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று குறிப்பிடுகிறார்கள் .* அப்படி சொல்ல கூடாது புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி..ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று அறிவிக்க வேண்டும் என்று ஒரு மனுவை மும்பையில் உள்ள ரயில் நிலைய அதிகாரிக்கு*அளித்துள்ளார் .* அந்த மனுவை மும்பை அதிகாரிகள் பரிசீலித்து,அதன்படி சில நாட்களுக்கு முன்பில் இருந்து முறையாக, அவரது வேண்டுகோளின்படி அறிவிப்பு வெளியிடப்படுவதை உறுதி செய்து கொண்டு நமக்கு தகவல் அளித்துள்ளார் .* இன்றைக்கும் அந்த மகானுடைய பெயரை உச்சரிப்பது ,பலரை உச்சரிக்க செய்வது எம்.ஜி.ஆர். என்கிற மகோன்னதமான மாமனிதரின் பெயரை புகழ்ந்து ,தங்களுடைய நெஞ்சிலே போற்றி புகழ்கின்ற எத்தனையோ பேர்கள் அந்த மும்பை தாராவி ராமச்சந்திரன் போன்றவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலும் இருக்கிறார்கள் என்பது இந்த தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் .*
ஒரு மனிதன் அவர் வாழும் காலத்தில் புகழ்வார்கள். அவரால் பலனடைவார்கள் அவர் மறைந்த பிறகு, இன்றைக்கும், தமிழகம்* மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழர்களின் இதயங்களில் அவர் வாழ்கின்றார் என்றால் , அவரது ஆன்மா எந்த அளவிற்கு மேன்மை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் .இந்த சகாப்தம் நிகழ்ச்சி மூலம் எம்.ஜி.ஆர். என்கிற ஒரு மாமனிதரின் தொடர் லட்சக்கணக்கான இதயங்களை ஈர்த்திருக்கிறதை அறிந்து*நாம் பெருமைப்படுகிறோம் .* இந்த சகாப்தம் இன்னும் பல அரிய தகவல்கள், செய்திகளுடன் தொடரும் .
திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி ;: மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்* முதல்வரானபின் பேசிய கூட்டத்தில் ,பேசிய இடத்தில ஒருவர் கேட்கிறார் ,நீங்கள் முதல்வராவதற்கு முக்கிய காரணம் என்ன என்று கேட்டபோது* நான் அமர்ந்துள்ள நாற்காலியின் நான்கு கால்களில் ஒரு கால் பிரபல கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகள், பாடல்களால் உருவானது .**என் சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்தில் இருந்து பல படங்களில் பாடல்கள்* எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன் போன்றவர்கள் தான் என்னுடைய வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணம் என்று சொன்ன எம்.ஜி.ஆர். அவர்கள் ,ப.கோ.கல்யாணசுந்தரம் அவர்கள் மிக இளம் வயதிலேயே நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்ற காரணத்தால் அவரை அந்த காலத்தில் கவனிக்க முடியாமல் போய்விட்டது .* ஆனால் கவியரசு கண்ணதாசன் அவர்களை எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருக்கும்போது அழைக்கிறார் .* அந்த கால கட்டத்தில் தலைவரை ,கண்ணதாசன் வசைபாடி கொண்டிருந்தார் .* எம்.ஜி.ஆர். அவர்களை கிண்டல் ,கேலி செய்தும், துன்புறுத்தும் வார்த்தைகள் மூலம் எழுதிக்கொண்டுதான் இருந்தார் .* ஆனால் இவற்றை பற்றி எதுவும் கவலைப்படாமல் எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ணதாசனை அழைத்து ,நான் உங்களை அரசவை கவிஞர் ஆக்குவதாக முடிவு செய்துள்ளேன். சம்மதம் என்கிற வார்தையைத்தவிர வேறு எதுவும் நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றார் .அப்போது கண்ணதாசன் நாணி, குறுகி, வெட்கத்தால் பதில் பேச முடியாமல் தவித்துள்ளார் .* நான் எவ்வளவு முறை, தூரம் பரிகாசம், கிண்டல், கேலி, துன்புறுத்துதல்,விமர்சனங்கள்* இவையெல்லாம் செய்தும் , அதையும் மீறி,எதை பற்றியும் கவலைப்படாமல் ,அதை ஒரு பொருட்டாக கொள்ளாமல்* என்னை அழைத்து மதிப்பளித்து, மரியாதை செய்ய முடிவு செய்து, அரசவை கவிஞர்*ஆக்குவதாக அறிவிப்பு செய்கிறாரே, என வியந்து கவிதை* மழையால் எம்.ஜி.ஆர். அவர்களை புகழ்ந்து பாராட்டினாராம் . எனக்கு இனி எந்த கவலையில்லை . என்னுடைய சேவையை கருதி, நான் இறந்தால், எனக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் , என் உடலமீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு ,உடல் அடக்கம் செய்யப்படும். அந்த வகையில் வேண்டிய ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். அவர்கள் செய்வார் என்ற நம்பிக்கையுடன் நான் உயிர் துறப்பேன். அதுவே என் வாழ்வின் பாக்கியம். என்று கண்ணதாசன் அறிக்கை வெளியிட்டார் .கண்ணதாசன் அவர்கள் மறைந்த பிறகு* அமெரிக்காவில் இருந்து அவரது பூத உடலை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவர செய்து ,இறுதி ஊர்வலம் புறப்படும் நாளன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது .அப்போது வந்த எம்.ஜி.ஆர். அவர்கள்.வாகனத்தின் மீது தானே ஏறி, அவரது முகம் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் தனது உதவியாளரை* வைத்து சரிசெய்ய வைத்தார் .* இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செய்தார் எம்.ஜி.ஆர். அவர்கள் .* யாரையும் பழிவாங்கும் சிந்தனை துளியும் இல்லாதவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .**
முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா அவர்கள் குறிப்பிட்ட சொன்ன விஷயம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது .* அவர் சொன்னபடி பெயரை குறிப்பிட்ட விரும்பவில்லை. ஒருதலைவர்* எம்.ஜி.ஆர். அவர்களின் அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்தவர் .* அவர் 1980 சட்டமன்ற* பொது தேர்தலில் போட்டியிடும் போது* எம்.ஜி.ஆர். அவர்கள் , நீங்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதியில் உங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்று கேள்விப்பட்டதால் ,வேறு தொகுதியில் போட்டியிடுங்கள் என்றார் .* அண்ணே எனக்கு பழைய தொகுதியை கொடுங்கள். கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன் என்கிறார் . பதிலுக்கு தலைவர் நான் விசாரித்ததில் உங்களுக்கு வெற்றி கிடைப்பது சந்தேகம் என்று சொன்னபோது* ,அவர் மறுத்து, இல்லை.நான் கண்டிப்பாக ஜெயித்து காட்டுகிறேன் .எனக்கு பழைய தொகுதியையே கொடுங்கள் என்று பிடிவாதம் காட்டுகிறார் .* எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்த நேரத்தில் கட்சியில் சேர்ந்தவர்,பக்கபலமாக இருந்தவர்* என்பதால் தலைவருக்கு அவர்மீது மதிப்பும், மரியாதையும் உண்டு .,அதனால், எம்.ஜி.ஆர். அவர்கள் ,அவர் பேச்சுக்கு மதிப்பளித்து,,அதே சமயம் ஒன்றை குறிப்பிட்டு சொல்கிறார் . நீ பழைய தொகுதியில் வெற்றி பெற்றால்* உனக்கு மந்திரி பதவி கிடைக்கும்.* ஒரு வேளை*தோல்வியுற்றால் உனக்கு எந்த பதவியும் தர முடியாது ,சம்மதமா என்று கேட்டார் .* ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் அவர் ஒத்து கொள்கிறார். தலைவர் அவர்கள் மீண்டும் தான் சொன்னதை நினைவுபடுத்தி அனுப்புகிறார் . தேர்தலுக்காக அவர் முனைப்பாக பிரச்சாரம் செய்து உழைக்கிறார் . எம்.ஜி.ஆர். அவர்களும் பிரச்சாரத்தில் கலந்துகொள்கிறார் .* ஆனால் தேர்தல் முடிவு அவருக்கு சாதகமாக அமையவில்லை. தலைவர் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டது போல அவர் தோல்வியுற்று,மிகவும் வேதனை அடைகிறார். வீட்டில் முடங்கி கிடக்கிறார் .* 15 நாட்கள் கழித்து, எம்.ஜி.ஆர். அவர்கள் மந்திரிசபை அமைத்த பிறகு ,பார்க்க வந்தபோது ,தலைவர் அவரை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று விடுகிறார் .* 4 நாட்கள் கழித்து மீண்டும் அவர் வந்து தலைவரை சந்திக்கிறார் .தலைவர் அவரிடம், நான்தான் முன்பே சொன்னேனே,என் பேச்சை கேட்காமல், தோல்வியுற்று, எல்லாம் முடிந்தபின் நான் என்ன செய்ய முடியும் ,இப்போதைக்கு உனக்கு எந்த பதவியும் இல்லை. நீ போகலாம் என்று கோபத்துடன் சொல்லிவிட்டார். இதை அவர் தன் மனைவியிடம் சொல்லியுள்ளார் .சில நாட்கள் கழித்து, அவரது மனைவி எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க ராமாவரம் தோட்டம் வருகிறார் . இப்போதெல்லாம் முதல்வர், அமைச்சர்களை சந்திப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. காரணம் பாதுகாப்பு* மற்றும் பல்வேறு பிரச்னைகள் . அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சி காலத்தில் முதல்வரை அவரது இல்லத்தில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். எப்படியும் தினசரி குறைந்தது 300 பேர் அவரை சந்திக்க வருவார்கள் அத்தனை பேரையும் சந்தித்து, அவர்களின் குறைகளை தீர்த்துவிட்டு தான் தினசரி எம்.ஜி.ஆர். அவர்கள் கோட்டைக்கு புறப்படுவார் என்பது யாவரும் அறியாத அதிசயம். அது மட்டுமல்ல. வந்திருந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டி, காபியுடன்* இலவசமாக வழங்கப்படும் .என்பது என்னை போன்ற அறிந்தவர்களுக்கு தெரியும். அந்த வி.ஐ.பி.யின் மனைவி எம்.ஜி.ஆர் அவர்களை சந்திக்கிறார். முதல்வர் அவர்கள், அவரிடம்,நான் முன்பே,உங்கள் கணவரிடம் உறுதிமொழி வாங்கியபின்தான் தொகுதியை ஒதுக்கினேன். என் பேச்சை கேட்கவில்லை, மதிக்கவுமில்லை தொகுதியில் தோற்றும் விட்டார் ..மீண்டும் என்னை அவர் சந்திக்க வந்தபோது இப்போதைக்கு எந்த பதவியும் நான் அறிவித்தபடி தரமுடியாது என்று சொன்னேன் என்று பேசியபின் ,நண்பர்களை சந்தித்துவிட்டு, அன்னை சத்யபாமா சமாதிக்கு முன்பு சில நிமிடங்கள் மௌன வணக்கம் செலுத்திவிட்டு, பிரார்த்திவிட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் காரில் புறப்படுவது வழக்கம் . எம்.ஜி.ஆர். காரில் அமர்ந்து புறப்படும் சமயம்,அந்த வி.ஐ.பி.யின் மனைவி, காரின் முன்பு வந்து கீழே உள்ள மண்ணை எடுத்துதூற்றி* ,எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி கேவலமாக சில வார்த்தைகளை உரக்கமாக* பேசி புலம்புகிறார் .* உடனே அருகில் உள்ள காவலர்கள், பாதுகாவலர்கள் அவரை அடிக்க முனைகிறார்கள், எம்.ஜி.ஆர். அவர்கள் கார் கண்ணாடியை கீழே இறக்கி, யாரும் அந்த அம்மையாரை எதுவும் செய்ய கூடாது. அவரது கணவர் நமக்கு வேண்டப்பட்டவர். ஏதோ கோபத்தில், உணர்ச்சிவசப்பட்டு இப்படி நடந்து கொள்கிறார்கள். அவரை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறார் .*
முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் கோட்டைக்கு செல்லும் வழியில் , காரில் பயணித்தபடியே ,அதிகாரிகளுக்கு ,தோல்வியுற்ற அந்த வி.ஐ.பி.யின் பெயரை சொல்லி,என்ன செய்வீர்களோ* தெரியாது, இன்னும் ஒரு மணி நேரத்தில்* அவருக்கு மந்திரி பதவியின் தகுதியோடு, ஏதாவது ஒரு வாரியத்தின் தலைவராக இன்றே உத்தரவு கண்டிப்பாக பிறப்பிக்க வேண்டும் என்கிறார் .**அப்போதெல்லாம் செல் போன் கிடையாது . காவல்துறையின் வாக்கி டாக்கி மூலம்தான் தகவல் பரிமாற்றம் .* எம்.ஜி.ஆர். அவர்கள் கோட்டைக்கு சென்றடைவதற்குள் அவருக்கு உரிய பதவி தயார் செய்யப்படுகிறது . எம்.ஜி.ஆர்*அவர்கள் கோட்டையில் இருந்து வி.ஐ.பி.யின் இல்லத்திற்கு தொலைபேசியில்*அவருக்கு அளிக்கப்பட்ட வாரியத்தின் தலைவர் பதவி குறித்து* தகவல் தெரிவிக்கிறார் .* எம்.ஜி.ஆர்.அவர்கள் பேசும்போது, போனை எடுத்த வி.ஐ.பியின் மனைவி வணக்கம் சொல்லிவிட்டு*, பதறியடித்து பேசுகிறார். அம்மா வருத்தப்படாதீர்கள் .* நீங்கள் ஏதோ கோபத்தில், உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டீர்கள். எனக்கு எவ்வளவு பிரச்னைகள்,சிக்கல்கள் என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .* நான் உண்மையில் உங்கள் கணவரை மந்திரியாக்கத்தான் முற்பட்டேன். ஆனால் என் பேச்சை அவர் கேட்கவில்லை. அதனால்தான் தண்டனை அளிக்க வேண்டியதாயிற்று . அதனால்தான் நீங்கள் என் இல்லத்தில் அனைவரின் முன்பாக மண்ணை வாரி தூற்றினீர்கள். அனால்*அதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை .* வருந்தாதீர்கள் என்று சொன்னதும் போனிலேயே அந்த அம்மையார் கத்தி கதறுகிறார்கள். ஐயா மன்னித்துவிடுங்கள், நான் இப்படி செய்திருக்க கூடாது* என்கிறார் .ஏதோ நடக்க கூடாதது நடந்துவிட்டது என்று ஆறுதல் கூறுகிறார் .* அவரது கணவருக்கு வாரிய தலைவர் பதவி அளித்ததோடு, பதவியில் இல்லாத 10 முக்கியஸ்தர்களை அதில் உறுப்பினர்கள் பதவி அளித்து ,அனைவரையும் திருப்தி அடைய செய்தார் . நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்,வேறு யாராவது தலைவர் இடத்தில இருந்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.* இப்படிப்பட்ட ஒரு செய்கையை செய்ததை , கண்டாலே தாங்க முடியாததை* உடனடியாக அதை பொறுத்துக் கொண்டு அதற்குரிய பரிகாரத்தை செய்யக்கூடிய தலைவராகதான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தார் .* அதனால்தான் அவர் மறைந்து 33 ஆண்டுகள் ஆனபின்பும் கூட ஒவ்வொருவர் இல்லத்திலேயும் புகைப்படமாக, ஒவ்வொருவர் உள்ளத்திலேயும், தம்பியாக, அண்ணனாக, சகோதரனாக, தோழனாக, தனயனாக, பிள்ளையாக, இப்படி பல்வேறு உருவங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து இருக்கக்கூடிய குடும்பங்கள் தமிழகம் மட்டுமல்ல*உலகெங்கிலும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் தமிழர்கள் இதயங்களில் எல்லாம் குடியிருக்க கூடிய நமது தங்க தலைவர் ,வாரி கொடுத்த வள்ளல், வற்றாத ஜீவநதி , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை பற்றி வாழ்நாளெல்லாம் பேசி கொண்டே இருக்கலாம் .* இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .******
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் :
---------------------------------------------------------------------------------
1.. பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த* - நினைத்ததை முடிப்பவன்*
2. அன்பே வா படத்தில் எம்.ஜி.ஆர்.*
3. நீயா இல்லை நானா* - ஆசைமுகம்*
4. திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
*
-
கோவை சண்முகாவில் 10/11/20 முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் தாய்க்கு*தலை மகன் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தீபாவளி* விருந்தாக*ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க*14/11/20 முதல்*மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்*காவல்காரன் தினசரி 4 காட்சிகள் வெள்ளித்திரைக்கு வருகிறது*.
தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை .*
-
மதுரை*சென்ட்ரல் சினிமாவில் 10/11/20 முதல் தீபாவளி விருந்தாக*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் தர்மம் தலை காக்கும்*தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .
தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை .
-
நம் தலைவர் நெஞ்சங்களுக்கு இன்னும் ஒரு மகிழ்ச்சி செய்தி...
பச்சைகிளி ரூங்கிதா தாய்லாந்தின் புகழ் பெற்ற நடிகை அவர்கள் தன் ட்விட்டர் வலைதள பக்கத்தில் கடந்த சில நாட்கள் முன்பு தனக்கு மிகவும் பிடித்த படம் இது என்று இந்த படத்தை பதிவு செய்து உள்ளார்.
அந்த நாட்டில் பல நெஞ்சங்கள் இன்று யார் இவர் என்று மீண்டும் நம் தலைவரை தேட துவங்கி உள்ளனர்.
எங்கேயும் எப்போதும் நம்ம தலைவரே ட்ரெண்டில் உள்ளார்.
நன்றி தாய் நாட்டின் தவ புதல்வரின் உடன் நடித்து கொஞ்சு தமிழ் பேசி கூட வந்த பச்சைக்கிளியே என்றும் மறவா எம் தலைவர்.
எம்ஜிஆர் நெஞ்சங்கள் சார்பாக..ஆயிரம் கோடி நன்றிகள் உங்களுக்கு. . உங்களில் ஒருவன்...நன்றி.
யாருக்கு வயது கம்மி.
யாருக்கு அதிகம்.
ஒரே குழப்பம்..
இருக்காதா பின்னே. நாகேஷ் சொன்னது போல...என்ன..........
-
"உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் ஏற்படுத்திய இணையில்லா பிரம்மாண்டமான சரித்திரம், சகாப்தம், உச்ச சாதனை சிகரத்தை வென்ற விபரங்களின் அணிவகுப்பு.........தமிழகம் 20 திரையரங்கு 100 நாள்...
பெங்களுர் 3 திரையரங்கு 100 நாள்...
இலங்கை 3 ஏரியாவில் 100 நாள்...
30 அரங்கில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
6 மாதத்தில் 2 கோடி வசூல் பெற்ற தென்னிந்தியாவின் முதல் காவியம்...
முதல் வண்ணக்காவியம்
25 அரங்கில் 100 நாள்..ஒடீ சாதனை.
இன்று வரை தமிழகத்தில் அதிக குளிர்சாதன அரங்கில் திரையிட்ட ஒரே காவியம்.
சென்னை
தேவிபாரடைஸ் 182 நாள்
அகஸ்தியா 176 நாள்
மதுரை 217 நாள்
திருச்சி 203 நாள்
இலங்கை 203 நாள்
கோவை 166 நாள்...
இப்படி பல்வேறு பற்பல சாதனைகள்..............ukr...
-
காலத்தை வென்ற எம்ஜிஆர்
ஆளும் அதிகார வார்க்கத்தின்
வக்கிர புத்தி படைத்த கருணாவின் கைத்தடிகள்
அன்று எம்ஜிஆருக்கு எதிராக கொலை வெறியுடன் செயல்பட்டார்கள்
பொரும் பொருட் செலவில் உருவான உலகம் சுற்றும் வாலிபன் திரைப் படத்தை வெளியிட முடியாமல் பல்வேறு தடைகள் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொலை மிரட்டல் என பல்வேறு அச்சுருத்தல்கள்.
இதையல்லாம் தாண்டி
ஒருவர் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானால் சேலை கட்டி கொள்வதாக அறிவித்தார்.
நாம் யாரால் இந்த நிலையை அடைந்தோம் என்பதை
பதவி வெறியில் பதவி மோகத்தால் தன்னை மறந்து
நடந்து கொண்டார்
கருணாநிதி.
எம்ஜிஆரை பற்றி கீழ் தரமான வார்த்தைகளால் வசைமாறிப் பொழிந்து தன்னைத்தானே இழிவு படுத்தி கொண்டார்.
எதைக் கண்டும் அச்சப் படாத
எம்ஜிஆர் கருணாநிதியின் கபட நாடகத்தை உடைத்தெறிந்தார்
அண்ணாவின் பெயரில் எம்ஜிஆர் கண்ட கழகம் நாளுக்கு நாள் அசூர வேகத்தோடு வளர்ந்து கொண்டு இருந்தது
கண்டு பதற்றம் அடைந்தார் கருணாநிதி
பல லட்சம் தொண்டர்கள்
புரட்சித் தலைவருக்காக
உயிரையும் கொடுக்கத் துனிந்தார்கள்.
எம்ஜிஆரின் உழைப்பால் வளர்ந்த திமுக
எம்ஜிஆரின் உழைப்பால் எம்ஜிஆர் தயவால் வளர்ந்த கருணாநிதி
எம்ஜிஆரை திமுகாவில் இருந்து தூக்கி எரிந்தது கண்டு எத்தனை தொண்டர்கள் இரத்தம் சிந்தினார்கள்
எத்தனை தொண்டர்கள் உயிர் தியாகம் செய்தார்கள்.
எம்ஜிஆருக்காக தன் உயிரைக் கொடுத்த முதல் தியாகத் தொண்டன் உடுமலை இஸ்மாயில் என்கிற இஸ்லாமிய சகோதரன்.
எம்ஜிஆர் தொண்டர்கள் சாதி
மதங்களுக்கு அப்பார் பட்டவர்கள்.
எம்ஜிஆரை மலையாளி என்றும்
தமிழன் அல்ல என்றும்
நடிகனுக்கு நாடாள தெரியுமா?
என்று எல்லாம் பேசி பிரிவினையை உருவாக்க நினைத்த
கருணாநிதிக்கு
பல அதிர்ச்சிகளை பரிசாக தந்தார்
மக்கள் திலகம் பொன்மனச் செம்மல்
எங்கள் சாதியும் mgr
மதமும் mgr
எங்கள் வாழ்வே mgr...
அதிர்ச்சிகள் வரும்
நாளை1972- நவம்பர் 5 நடந்தது என்ன?
*எம்ஜிஆர்நேசன்*............