மூச்சே தானே ஆனதின்று
அருமையான இணையம்
உடல் இயக்கம் குறைத்து
உயிர் ஊக்கம் பெருக்குதே
Printable View
மூச்சே தானே ஆனதின்று
அருமையான இணையம்
உடல் இயக்கம் குறைத்து
உயிர் ஊக்கம் பெருக்குதே
பெருக்குதே என நினைத்துப்
போட்ட வைப்பு நிதியின்
வட்டி சதவிகிதம்
குறைந்து விட்டது..
எதற்கும் இருக்கட்டும் என்று
பலவருடங்கள் முன்
வாங்கிய
புதராய்க் கிடந்த நிலத்தின் மதிப்போ
வெகு உயரத்தில்..
முதலீடுகளின் மதிப்பு
முன்னோக்கி ஊகிப்பது
என்றும்
எப்போதும்
எக்காலத்திலும் கஷ்டம் தான்..
அது பணமானாலும் சரி
அன்பானாலும்....
அன்பானாலும் அளந்துதான் கொட்டவோ
அமுதும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சோ
அழகாய் அன்றே சொன்ன பழமொழியே
அனுபவிக்கத் திகட்டாத நல்ல வழியே
வழியே இல்லை எனக்
கைவிடப் பட்டவை
சமயத்தில் சரியாகி விடும்
சரியான வழி தான்
என நினைத்தால் மாறுகின்றன..
காரணம் தான் புரியாமல்
சொல்கிறோம்
காரணம் விதி..
விதி ஒன்று சமைக்கிறாள்
புதிய உலகின் நம் கிழவி
வேலையில்லா மாமியா
வேலிக்காட்டுக்கு நீர் இறைக்க
விரிந்து கிடக்கு பண்ணைகள்
கணிணித் திரையினிலே
திரையினிலே கண்டுவந்த காட்சியினைக் கண்டே
..சிறுவனவன் நடிப்பதையும் ரசித்திருந்து பார்த்தே
வரைமுறைகள் ஏதுமின்றி வாய்விட்டே சிரித்தே
..வாகாக வாழ்த்திவிட்டு இருக்கின்ற பெரியீர்
கரைகடந்து அலையெழும்பித் தரையினிலே வந்தால்
..காணாமல் போய்விடுமே சிறுகுடிசை எல்லாம்
வரைகடந்து அச்சிறுவர் வீட்டினிலே பேச
..வகையாக அறிவுரையும் சொல்லத்தான் வேண்டும்..
சொல்லத்தான் வேண்டும்
சொக்கிப்போன விதத்தை
தேனாய் பேச ஒரு தத்தை
தினமும் காலை மாலை
கொல்லை மரக்கிளையில்
தவறாது வந்தமர்கிறதே
வந்தமர்கிறதே
நினைவுக் குயில்
அவ்வப்போது..
மாறுபடும்
சோகம், சந்தோஷம் என
ராகங்கள்..
ராகங்கள் காதுக்கு குளிர்ச்சி
வண்ணங்கள் கண்ணுக்கு விருந்து
வாசங்கள் நாசிக்கு மருந்து
போவோமா காட்டுக்குள்ளே
காட்டுக் குள்ளே கட்டெடுக்க
…காலையிலே போற புள்ள
கூட்டிவர யாரு மில்ல
..கூட வாரேன் ஒம்மாமன்
நோட்ட மிட்டுப் பாக்காதீர்
...நோவு தய்யா என்னுசுரு
ஆட்ட பாட்டம் போட்டுப்புட்டு
..அந்தி வந்தா போய்விடுவீர்..
இப்ப என்ன வேணுமின்னு
..சொல்லுபுள்ள செஞ்சுடலாம்
தப்பு ஒண்ணும் இல்லபுள்ள
..தாலி ஒண்ணு கட்டிடவா
கப்புன்னு கண்ணுக் குள்ற
…காந்தம் வச்சு ஈர்க்காதே
சொப்புவாய் திறந்து கொஞ்சம்
…சிரிச்சுபுடு என்றபுள்ள..
என்றபுள்ள அறிவுக் கொழுந்தல்லவா
அவ அறியாத சங்கதியுமுண்டா
அச்சமில்லாம நடக்குறா நேரா
போகாத இடமெல்லாம் போறா
வானத்த வில்லா வளைக்குறா
மாறாத பழைய பயபுள்ளதான
மாபாதகமெல்லாம் செய்யுறான்
போகப்பொருளாத்தான் பாக்குறான்
பாக்குறான் கொட்டக் கொட்ட
..பூவிழி சிமிட்டா மல்தான்
காக்கவும் நீதான் அம்மா
..கொஞ்சவும் நீதான் என்றே
நோக்கிடும் அவனைத் தரையில்
.. நீஞ்சுடா என்றே விட்டால்
பேக்குபோல் கோணி கண்ணில்
..பேய்மழை கொண்டு விட்டான்..
கொண்டு விட்டான் சாலையின் மறுபுறம்
சாரணன் செய்தது பேருதவி மூதாட்டிக்கு
ஆண்டவன் எடுப்பானிங்கு பல அவதாரம்
என்பதற்கு இது போல் எண்ணற்ற ஆதாரம்
ஆதாரம் வேண்டுமென்றால் இந்தா ருங்கள்
..அழகான அட்டையிலே குறிப்பும் உண்டு
சேதாரம் என்னவென்றால் ஒன்றும் இல்லை.
...சிலாக்கியமாய் இன்றுவிலை ஆமாம் ஐயா..
தாத்தாவும் பேரனுமே வந்த கடைதான்..
...தங்கத்தை இன்றுவாங்க பெருகும் எனவும்
வேதாளம் மரத்தினிலே ஏறும் வண்ணம்
..வீழ்கின்றார் மக்கள்நகைக் கடையில் தானே
கடையில் தானே வியாபாரம் கொழிக்குது
இணையத்தில் விரித்த சந்தையிலே
கத்திரிக்காயும் வீட்டு வாசல் வருமோ
படி தாண்டி போகவும் வேண்டாமோ
ஆச்சர்யங்கள் இன்னும் என்னென்னவோ
மனித தொடர்பை தொலைக்கும் விதியோ
முகம் பார்த்து பேசாமல் வர்த்தகமோ
யந்திரங்களுடன் மட்டும் வாழ்க்கையோ
வாழ்க்கையோ என்ன வென்று
...வஞ்சிநான் அறிகி லேனே
ஊழ்வினை என்னை உந்தன்
,..உளத்திலே நெருங்க வைத்து
பாழ்பல செய்த பின்னர்
..பாவையை நீவிர் விட்டு
ஆழ்கடல் மேவிச் செல்ல
..அணங்குநான் தவிக்கி றேனே
தவிக்கிறேனே தாகத்தில்
தீராத ஒரு புது மோகத்தில்
இணையத்தின் தாக்கத்தில்
எண்ணற்ற விளையாட்டிருக்க
நேரம்தான் போதவில்லையே
கவலை சிறிதும் இல்லையே
இல்லையே என்றே சொல்லாமல்
..இரந்தவர் தமக்கு எப்பொழுதும்
அள்ளியே தந்தான் கர்ணணவன்
..அழகிய அங்க மன்னனவன்
மல்லிகை நிறத்தில் நெஞ்சமது
...மணமுடன் பரந்தே விளைந்ததது..
கள்வனாம் கண்ணன் காய்நகர்த்த
..காலனும் கொய்தே போய்விட்டான்....
போய்விட்டான் கதிரவன் ஓய்வெடுக்க
உயிர்த்தது இரவின் இனிய இயக்கம்
வெள்ளைப் பூக்கள் மலர்ந்து மணக்க
இள மனங்கள் கொஞ்சம் கிறுகிறுக்க
முழு விழிப்பில் ஒரு தனி உலகம்
மீண்டும் கதிரவன் உதிக்கும் வரை
உதிக்கும்வரை உழைக்கும்மனம் உழன்றேகனன் றிடும்பின்
துதித்தேயிறை செயலேவெனத் தெளிவாய்மலர் திடும்பின்
பதித்தேயிழை இழையாய்க்கவி புனைந்தாலது அழகாய்
மதித்தேபலர் நினைவில்கொளும் மணத்தைப்பரப் பிடுமே..
மணத்தைப் பரப்பிடுமே நால்வகை புகை
மாநகர் மதுரையிலே இளங்கோவின் கதை
காவியத் தம்பதிக்கு சொன்ன அறிமுக உரை
மணங்கள் குறையவில்லை காரணிகள் வேறு
வேறுவேண்டும் எனக்கேட்டால் பதிலெதுவும் சொல்லாய்
...விஷமக்கண் பார்வையினால் மெளனத்தால் கொல்வாய்
மேருபோல நிமிர்ந்திருந்த முகத்தினையே சற்றே
..மேவித்தான் இதழமுதம் பருகிடவே அழைத்தால்
சேறுபட்ட சீலையினைப் பார்த்தாற்போல் பதறி
..செவ்விதழைத் தான்மடித்துத் தள்ளலாமோ பெண்ணே
தேருநிலை மாறியதே தங்கநிறப் பெண்ணே
..தெனாவட்டாய் நிலைகொள்ளச் செய்திடுவாய் கண்ணே..
கண்ணே நீ மூட நேரும் வழி எதுவோ
பறந்த விமானம் மாயமாய் மறையுமோ
தடதடக்கும் ரயில் பெட்டி தடம் புரளுமோ
ஆபத்தில்லா ஓர் வழி சாலையில் விபத்தோ
அக்கறையில்லா மருத்துவ சேவையிலா
வெறியில் அடித்து நொறுக்கும் கொலையிலா
கலாச்சார மாற்றம் தரும் பகீர் அதிர்ச்சியிலா
விதியே இத்தனை கொடூரம் ஏன் கற்றாய்
கற்றாய் அனைத்தையும்”
குரு மகிழ்ந்து நற்சான்றிதழ் கொடுக்க
வாங்கிய சீடன் சொன்னான்
“நன்றி குருவே
இனிமேல் தான்
நான் கற்பது நிறைய இருக்கிறது
வாழ்க்கையின் பாடங்கள்”
பாடங்கள் பள்ளியறையில்
எந்தப் பள்ளியறையில்
வயதை பொறுத்தது அது
அறிவும் அனுபவமும் வரும்
வருமென்றே காத்திருக்கும் வஞ்சியவள் கண்களிலே
..வாகாகத் தெரிகிறது வருங்காலம் நலமெல்லாம்
தருமென்றே நம்பிக்கை ஊட்டியவன் வண்ணமுகம்
..தயங்காமல் தினம்தினமும் பார்த்தவனின் தண்ணுருவம்
மறுபடியும் வருகின்றேன் மெல்லியலே மயங்காதே
..மாதங்கள் பலவாகும் மருகாதே கட்டாயம்
வருவேன்நான் எனச்சொன்ன வார்த்தையையும் தான்நினைந்து
..வாடித்தான் நிற்கின்றாள் உயிருருகி அவனுக்காய்.
அவனுக்காய் உருகியே
சமைத்து சிங்காரித்து
சிந்தித்து சிரித்து என
தன்னை தொலைத்தவள்
தேடிப் பிடித்த சுயமின்று
முன்னே நிற்கிறது காண்
காண்கின்ற காட்சிகளில் தெரிகின்றாய் கண்ணாநீ
...கண்டுவக்க நேரினிலே வரவில்லை கண்ணாநீ
பூண்கின்ற அணிகலன்கள் சூடுகின்ற பூச்சரங்கள்
..புடவையதன் வண்ணங்கள் உனக்காக த் தான்கண்ணா
நோன்புதனை நான்கொண்டு நேர்விழிகள் பார்த்தபடி
..நெகிழ்ந்திருப்ப தெதற்காக உனக்காகத் தான்கண்ணா
வேண்டுவன நாந்தருவேன் விரைவினிலே வந்திந்த
..வஞ்சியெந்தன் தாபமதைத் தீர்ப்பாயா கண்ணாநீ
நீ சொல்வது தவறென்று
நக்கீரனாய் உரைத்தாள்
மறுத்த மாதொருத்தி
மாதராய் பிறந்திடவே
மாதவம் செய்திருக்கும்
கவிமணியின் ரசிகை என்
கருத்தை இப்பெண் பிறவி
சாபமில்லை வரமே என்று
வக்கணையாய் நான் வடித்த
இணையக் கட்டுரைக்கு
கடுப்பாய் பதிலிட்டாள்
வாதங்கள் பல வைத்தாள்
எதுவும் எனக்கு ஏற்பில்லை
நகைப்பே வந்தது படித்து
ஆணுக்குக் கொடுத்தது
பலகோடி விந்தணுக்கள்
பெண்ணுக்கு வழங்கப்பட்டதோ
ஒரேயொரு சினை முட்டை
மாதத்திற்கு ஒரு முறை
புரியவில்லையா இதிலேயே
பாரபட்சமான நிலையை
படைக்கும் வித்தைக்கு
போதும் ஒரு முட்டை
பலசாலி பெண்ணுக்கு
பாவம் ஆணுக்குத்தான்
பலகோடி வேணுமடி
பதில் சொன்னேன் நானும்
பைத்தியக்காரி ஒருத்திக்கு
ஒருத்திக்கு நடனம்
ஒருத்தியுடன் பாடல்
ஒருத்தியுடன் ஊடல்
ஒருத்தியுடன் கண்ணா மூச்சி
ஒருத்தியுடன் அழுகை
மற்றும் பல கோபியரிடம் பலவிதமாய்..
எல்லாம்
அந்த மாயக் கண்ணனின் லீலை
இருந்தும்
ஒருத்தியின் அருகில் கண்ணன் காணோம்..
மயக்கத்தில் இருந்த பக்கத்து கோபிகை
எங்கே எனக் கண்ணால் வினவ
அவள்
ஷ்..கண்ணன் என்னுள்..
மனதிற்குள்..
செய்யாதே தொந்தரவு என..
மாயக்கண்ணன் முகத்தில் புன்னகை..
புன்னகை முகத்தின் வளைகோடு
நேராக்கும் பல புரிதல் சிக்கல்
எங்கும் வளம் வரும் குறியீடு
எளிதாய் இலகுவாகும் சவால்
சவாலாய்த் தானிருக்கிறது..
வெந்தயம் நீர்மோர் வெறும் வயிற்றில் குடித்தல்
நன்னா வெங்காயத்தை
உப்புப் போட்டுபிசிறி தயிர் விட்டுடு
பின் அரை மணி நேரம் கழிச்சு சாப்பிடு சரியாகும்..
இள நீர் குடிக்கலாம்..
அடிக்கடி வாட்டர் குடி..ஐஸ் வாட்டர் இல்லை..
அப்ப தான் வேர்வைல போனது நேராகும்..
அப்புற்ம்
நல்லக்ரீம் முகத்துக்குப் போட்டுக்கோ
வீகோ ஓகே ஏன்னா அது ஹெர்பல்..
ரொம்ப முக்கியம்
குளிர்ந்த நீரில் அதாவது கோல்ட் வாட்டர்ல
முகத்த ரின்ஸ் பண்ணு.. அடிக்கடி
ம்ம் நிறைய அட்வைஸ்
அம்மா பாட்டி சொன்னது
உபயோகப் படுத்தினாலும்
உடல் எரியத்தான் செய்கிறது..
ஒரே ஒரு கேள்வி..
எப்போ ஓ நீ போவாய் வெயிலே!
வெயிலே நிழலின் அருமை கண்டேன்
இருளே ஒளியின் பெருமை அறிந்தேன்
வலியே சுகத்தின் பொருள் உணர்ந்தேன்
ஒன்றால் ஒன்றின் மகிமை கூடியதே
கூடியதே சந்தோஷம் கொஞ்ச மில்லை
...குட்டியிதழ்ச் சிரிப்பினிலே கொள்ளை கொண்டு
தேடியதே சில்வண்டுக் கண்கள் எல்லாம்
..திகைத்தபடி அன்னையினை எங்கே என்று
மூடியதே வாயங்கு சிரிப்பை விட்டு
..முணுக்கென்றே கண்ணீரும் எட்டிப் பார்க்க
நாடிவந்தாள் மருமகளும் பேரன் வாங்கி
..நல்லமுது தான் தரவும் சிரிப்பு அங்கே..
அங்கே எதுவும் தப்புவதில்லை
ஆண்டவன் தீர்ப்பில் ஈரமில்லை
தப்புக்கள் எலாம் தண்டிக்கப்படும்
தலைமுறை தாண்டியும் மறவாது
முற்பகல் செய்திட்ட பாவங்கள்
பொழுது சாயுமுன் கழிக்கப்படும்
நின்று கொல்வதில்லை என்பதை
நிச்சயமாய் காணலாம் இக்காலத்தில்
இக்காலத்தில் எல்லாமே
சுலபம்
அதனாலேயே சிறிசுகளுக்கு
பெரியவர்களின் மதிப்பு தெரிவதில்லை
என பாட்டியிடம் இருந்து
எனக்கு வந்தது இ-மெயில்
இ-மெயில் பரிமாற்றம்
தொடர்பு நுட்ப மாற்றம்
மனித வாழ்வில் ஏற்றம்
பழகாதிருப்பது குற்றம்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
அந்தக்காலம்..
இன்று
குற்றம் பார்த்தாலும்
பார்க்காவிட்டாலும்
சுற்றம் இருக்கிறது
சற்றுத் தள்ளி
தனித் தனித் தீவுகளில்
தீவுகளில் தனிக்காட்டு ராணிகள்
மழலை சிந்தும் முத்துக்கள்
அள்ளுவதோ பல தாதிகள்
தாம்பத்யத்தில் இடைவெளிகள்
இதிலென்ன திறமைகள்
இவைதானா சாதனைகள்
பதித்ததெங்கே தடங்கள்
வாழாத பாலைவனங்கள்
பாலை வனங்கள் வறண்டுவிட
..பாழும் வெயிலில் சுருண்டுவிட
சோலை வனமாய் நீருற்றாய்
,..சொர்க்கம் போலே வந்தாய்நீ
காலைக் கதிரோன் வந்ததிலே
..களிப்புக் கொண்ட மலர்கள்போல்
வேலை செய்யும் நெஞ்சமும்தான்..
..விம்மும் மகிழ்வில் நித்தமும்தான்..