இன்னிக்கு என்ன.. நான் பார்க்காத ஜெய் பாடல்களா ச் சிக்குதே..
ஏழு முறை தான் பிறவி வரும்
அந்த ஏழிலும் நமக்குள் காதல் வரும் (போரடிக்காதோ)
மனசாட்சி – ஜெய் வாணிஸ்ரீ
https://www.youtube.com/watch?featur...&v=N308U9Vewvs
Printable View
இன்னிக்கு என்ன.. நான் பார்க்காத ஜெய் பாடல்களா ச் சிக்குதே..
ஏழு முறை தான் பிறவி வரும்
அந்த ஏழிலும் நமக்குள் காதல் வரும் (போரடிக்காதோ)
மனசாட்சி – ஜெய் வாணிஸ்ரீ
https://www.youtube.com/watch?featur...&v=N308U9Vewvs
**
ஃபார் எ சேஞ்ச் நடிப்புச் சுடரோட பாட்டு ஒண்ணு!
*
இன்னொரு நாள் தருவதெல்லாம் இன்று தந்தால் ஆகாதா (என்னா தெகிரியம்)
அன்று வரை பொறுத்திருந்தால் அந்த மனம் கேளாதா ( நைஸா ஏன் கிட்டக்க வர்றாங்க)
ஒருவருமே பார்க்காமல் ஒன்று தந்தால் ஆகாதா (பாவம் பசி போல இருக்கு ஹீரோயினோட அம்மா பண்ணீயிருக்கற பொரிஉருண்டை கேக்கறான்.. இந்தம்மா என்ன சொல்லுது)
தனிமையிலே தவறு செய்தால் தன்மனமே பார்க்காதா ( அவங்க அம்மா எண்ணி வெச்சுருக்காங்களாம் தரமுடியாதுன்னு நாசூக்கா சொல்லுது பொண்ணு)
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் –எங்கவீட்டுப் பெண்- ஏவி.எம் ராஜன் அப்புறம் ஹீரோயின் புஷ்பலதா ஜாடை யார்னு தெரியலை
https://www.youtube.com/watch?featur...&v=-EcDiwC5zbU
தாங்க்ஸ் ராஜேஷ்..வேற எந்தப் பாடலாசிரியர் பத்தி எழுதியிருக்கீங்க..?
இந்த முகநூலை படிக்காமலிருப்பது நல்லது. பிழைகள் மலிந்த ,சுவாரசியம் அற்ற விவரணை. (ஒரு துளி --ஸ்ரீதர் அமர தீபம் படத்தில் அறிமுகம் அல்ல. அதற்கு முன்பே ரத்த பாசம்,எதிர்பாராதது எல்லாம் பண்ணியாயிற்று.)
தயவு செய்து நல்ல முறையில் எழுத பட்ட வாமனன் புத்தகத்தின் 5 பகுதிகளை வாங்கி பாடலாசிரியர் ,திரை இசையமைப்பாளர்கள்,பாடகர்கள்,தமிழ் இசை வரலாறு இவற்றை ஒழுங்காக ,சுவாரஸ்யமாக தெரிந்து கொள்ளவும்.என்னுடைய பிரத்யேக சிபாரிசு.
Thirai isai alaigal- Vol 1-5.The book has been published by Manivachagar Pathippagam….They can be contacted at 044-2356 1039 The main office is on Stringers street, opposite HC and Kuralagam. They have a retail outlet on Sivagnanam Street near T.Nagar head post office. The book is in Tamil.
கோபால்,
இதை சொல்வதற்கு மன்னிக்கவும். நீங்கள் வந்தால் இந்த மாதிரி கலாட்டாக்களையும் உடன் கொண்டு வந்து விடுகிறீர்கள். அந்த முகநூல் பதிவுகளில் பிழை இருக்கலாம். அதை படித்து அதில் எங்கே பிழை என்று சொன்னால் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பளிப்பீர்கள். இல்லை. நீங்கள் திருத்தி எழுதலாம். அதுவும் இல்லையா, அதை பாங்காக எழுதியவர் மனம் நோகாமல் சொல்லலாமே. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று இப்படி ஓரிரு வாக்கியங்களில் முடிவு எடுத்து கணித மதிப்பெண் பூஜியம் இல்லை நூறு என்பது போல் சொல்வது சரியா?
இதை நான் சொல்வது தகுமா என்றும் பார்த்தேன். நான் அப்படி எழுதுவதில்லையா என்றும் எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். தொடர்ந்து தவறான தகவல்கள் தந்து பிறர் மனம் நோக செய்தால் நீங்கள் சொல்வது போல் சொல்வது சரியாகலாம். அப்படிப்பட்ட சூழ்நிழைகளில்தான் நான் நகைச்சுவையாக சிலர் நாணும்படி எழுதி இருப்பேன் என்று நினைக்கிறேன். மேற்குறிப்பிட்ட இந்த பதிவிகளினால் நீங்கள் மனம் நொந்திருந்தால் சொல்லுங்கள். கேட்கலாம்.
நன்றாக எழுதக் கூடிய விஷய ஞானம் உள்ள நீங்கள் இப்படி எழுதலாமா? சிந்தியுங்கள்.
ஸ்ரீதரின் முதல் படமான அமரதீபம் (இது தான் அவரது முதல் படம் இயக்குனராக அல்ல) படத்தில் ஒலித்த ஜாலிலோ ஜிம்கானா பாடல் ஜிக்கியின் குரலில்
இன்றும் பிரபலமே. ஆம் புரியாத வார்த்தைகளை அறிமுக படுத்தியது இவரே . குறவன் குறத்தி பாடுவதாக அமைந்ததால் இப்படி அமைத்தார் அந்த பாடலை.
Rajesh-This is from your writing. You didn't have consistency which has angered me. Certain movies you mentioned with lead actor and certain movies you didnt.
readers can easily decipher it. If you suffix certain movie with lead actor name ,Amara deepam is sivaji Film. Mind it. your writing is very uninteresting. I appreciate your enthusiasm.
கல்நாயக்,
நான் பிழைகளை சுட்ட ஆரம்பித்தால் மைனஸ் மார்க்தான். பூஜ்யத்துக்காக சந்தோஷ படுங்கள். இந்த பிரகஸ்பதி ,வாக்கியத்துக்கு வாக்கியம் பொருட்குற்றம், சொற்குற்றம் எல்லாம் உள்ளது.
அத்துடன் இயக்குனர் பெயரை சொல்லி படத்தை சுட்டலாம். அல்லது முக்கிய நடிகரின் பெயரில். இந்த அரைகுறை மலைக் கள்ளனை பட்சி ராஜா படமென்றோ, குலேபகவலியை ராமண்ணா படம் என்றோ சொல்லவில்லை .ஆனால் அமர தீபம் ஸ்ரீதர் படமாம்!!! அதுவும் அறிமுகமாம்!!!! என்ன திமிர். சிவாஜியின் அமரதீபம் என்று எழுதாமல் ,இப்படி ஒருதலையாக எழுதும் இவர், சுவாரஸ்யமாகவும் எழுதாமல்,படு போர் அடிக்கிறார்.
இப்படி ஆர்வகோளாறு அரைகுறை எழுத்தை விட ,சும்மா இருப்பதே சுகம்.
ராஜேஷ்.. நான் கேட்ட லிங்க்ஸ் கொடுத்து விட்டு பின் எப்படி அவற்றை நீங்கள் டெலீட் செய்யலாம்.. கோபால் எதிர்வினை புரிவதற்கு வந்திருக்காவிடில் அது பற்றிஎனக்குத் தெரிந்திருக்காது..நான் முழுக்கப் படிக்கவில்லை..படித்த சில பதிவுகளும் எனக்குப் பிடித்திருந்தது..(முயன்று, நேரம் செலவழித்து விஷயங்களைத்தொகுத்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்) மற்றவையும் அப்படியே தான் இருக்கும்..முழுக்க இன்று படிக்க நினைத்திருக்கிறேன்..
கோபால், வாமனன் புத்தகம் வாங்க வேண்டும்.. ஜூனில் ஊருக்குப் போகும் போது தான் முடியும்..தகவலுக்கு நன்றி