-
நம்நாடு உருவான வரலாறு பாகம் 1
பொன்மனச்செம்மல் ஸ்ரீதர் இயக்கத்தில் அன்று சிந்திய ரத்தம் என்ற படத்தில் சில தவறான கருத்துக்களால் நடிப்பதை நிறுத்தி விட்டார் அவருடைய. கொள்கை படத்தில் சரியான முறையில் அமைய வில்லை என்பதும் ஒர் காரணமாகும் ...
எம் ஜி ஆர் மீது உள்ள கோபத்தில் சிவாஜியை வைத்து சிவந்த மண் என்ற படத்தை வெளிநாட்டில் எடுத்து வெளியிட முடிவு செய்தார் ..
அதே நேரத்தில் நமது பொன்மனச்செம்மல் ஸ்ரீதர் படத்தில் என்ன கருத்தை கூற. விரும்பினோமோ அதே கருத்தை வேறு படத்தில் கூறி அவருக்கும் மற்றவர்களுக்கும் பதிலாக உணர்த்தவே உருவாண படம்தான் நம்நாடு
படத்தின் கதைப்படி குடிசைவாழ்பகுதியில் வாழும் மக்களின் அறியாமை போக்கி அவர்கள் பக்கம் உள்ள நியாத்தை எடுத்துக்கூறி அவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு திட்டங்கள் அவர்களுக்கு போய் சேர வேண்டும். அதற்காக பாடுபடும் இளைஞராக புரட்சித்தலைவர் நடித்தார்..இதுதான் நம்நாடு படத்தின் கதை
அதே நேரத்தில் ஸ்ரீதர் அவர்கள் எம் ஜி ஆர் நடித்த நம்நாடு படம் வெளீயிடும் அதே நாளில் சிவந்த மண் வெளியீட்டு மாபெரும் வெற்றியை காட்ட வேண்டும். எம் ஜி ஆர் க்கு தோல்வியே பரிசாக தரவேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணமாக இருந்தது ஸ்ரீதரின் எண்ணத்துக்கு ஏற்ற போல் சிவாஜியும் ஒத்துழைப்பு கொடுத்தார் ..
...அதற்கு காரணம் எம் ஜி ஆர் படத்துடன் போட்டி போட்டு சிவாஜி படம் எதுவும் வசூலில் முந்தியது இல்லை. அதனால் இந்தப்படம் எம் ஜி ஆர் படம் மிஞ்சி வசூலில் ஹிட் படமாக அமையவேண்டும் என்பது சிவாஜியின் நோக்கமாக இருந்தது.....
ஆனால் புரட்சித்தலைவர் நாம் சொல்ல போகும் கருத்துக்கள் மக்கள் மனதில் ஆழமாக. பதிய வேண்டும். என்பதில் குறிக்கோள் கொண்டிருந்தார் ....அதற்க்கான கதைதான் நம்நாடு .
நம்நாடு படம் பெரும்பகுதி 100/.க்கு 75/. சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது ...பட.த்தைப் போட்டு பார்த்த புரட்சித்தலைவர் சமூக கருத்து இருந்தாலும் திரைக்கதையில் திருப்தி இல்லை. படத்தின் கதையை மாற்றியமைக்க சொன்னார்
தொடரும்....தொடரும்......தொடரும்..... Thanks...
-
நம்நாடு உருவான வரலாறு பாகம் 2
திரைக்கதையில் திருப்தி இல்லாத புரட்சித்தலைவர் விஜயாபுரொடக்ஷன் தயாரிப்பாளர் B.நாகிரெட்டி அப்போது படத்தை இயக்கிக்கொண்டிருந்த ப.நீலகண்டன் எங்க வீட்டு பிள்ளை படத்தின் இயக்குனர் சாணக்யா அவர்கள் அழைத்து கதையே மாற்றியமைக்க. சொன்னார் திரைக்கதை பற்றியும் ஆலோசனை செய்தார் ...எம் ஜி ஆர் எதை செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் ..நமக்கு தேவை படத்தின் வெற்றி வசூல் என்பது நாகிரெட்டியின் கருத்தாகும். காரணம் எங்க வீட்டு பிள்ளை படமும் எம் ஜி ஆரின் ஆலோசனையாதால் முமு வெற்றி பெற்றது.என்பது நாகிரெட்டி மட்டுமே அறிந்தார்..
துணை இயக்குனர் ஜம்பு லிங்கம் கதையில் சில மாற்றங்கள் அமைத்து திரைக்கதை வடியமைத்து எம் ஜி ஆரிடம் நாகிரெட்டியிடம் விளக்கி கூறினார்
திரைக்கதை கதை இரண்டும் எம் ஜி ஆர்க்கு பிடித்து விட்டது. மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படம் எடுத்தால்தான் ஜம்புலிங்கம் சொன்ன கதை திரைக்கதை சரியாக அமையும். ஆனால் 100/.க்கு 75/. சதவீதம் படம் முடிந்த நிலையில் எப்படி மாற்றுவது என தயங்கினார் நாகிரெட்டி.....
உடனே புரட்சித்தலைவர் சில ஆலோசனை வழங்கினார் இடைவேளை வரைக்கும் ஏற்கனவே உள்ள கதையே இருக்கட்டும் இடைவேளைக்கு பிறகு ஜம்பு லிங்கம் சொன்ன திரைக்கதையேஇனைத்து அமைத்துக்கொள்ளுங்கள் படத்தை ஜம்புலிங்கத்தையே இயக்க சொல்லுங்க அப்படி செய்தால் படத்தின் செலவும் குறையும் வெற்றியும் உறுதி என்றார் .....உடனே நாகிரெட்டி இப்போது இயக்கும் பா. நீலகண்டன். க்கு என்ன பதில் கூறுவது என்றார். அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி புரட்சித்தலைவர் பா.நீலகண்டன் அழைத்து தற்போது உள்ள நிலவரம் கூறி எனது அடுத்து இரண்டு படங்களுக்கும் நீங்கள்தான் இயக்குனர் என்று வாக்குறுதி கொடுத்தார்.பிறகு ஜம்புலிங்கம் இயக்கத்தில் நம்நாடு உருவானது ...நாகிரெட்டியும் செலவைப்பற்றி யோசிக்காமல் நம்நாடு பிரமாண்டமான முறையில் வளர தொடங்கியது ...
தொடரும் .....தொடரும்....தொடரும்....... Thanks...
-
நம்நாடு உருவான வரலாறு பாகம் 3
எங்கவீட்டுபிள்ளை படத்தில் வரும் முதல் சண்டைக் காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. புரட்சித்தலைவர் நீண்ட நாள் ஆசை அப்படத்தில் மூலம் நிறைவேற்றது...அதேப்போல் நம்நாடு படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி சிறிது லித்தியாசமாக எடுக்க நினைத்தார். தர்மலிங்கம் அழகிரி சாமிநாதன் ஷ்யாம்சுந்தர் போன்ற ஸ்டண்டு நடிகர்கள் அழைத்து ஆலோசித்தார் .இது அரசியல் படம் என்பதால் இதில் ஆக்ரோஷம் இருக்க கூடாது. அதனால் நகைச்சுவையாக அமைத்து விடுங்கள் என்றார் ..படத்தில் பெரிய மனிதர் களாக நடித்தவர்களை நான் ஆக்ரோஷமாக தாக்கினால் உண்மையாண பலசாலிகள் திறமைசாலித்தனம் அடிப்பட்டடு போய்விடும். புரட்சித்தலைவர் ஆலோசனைப்படி சண்டைக்காட்சி நகைச்சுவையாக எடுக்கப்பட்டது இப்படி கதையே மாற்றி கிளைமாக்ஸ் காட்சி மாற்றி 1969 நவம்பர் 7 ந் தேதி வெளிவந்தது.
.
நம்நாடு மாபெரும் வசூல் சாதனை படைத்தது மக்களின் ஏகோபித்த பாராட்டு மழையில் நனைந்தது 150 நாட்கள் மேல் ஒடி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.இதனுடன் போட்டி போட்டு வந்த சிவந்த மண் நம்நாடுக்கு நிகராகமல் தோல்வியடைந்தது . போட்ட காசு எடுக்க.முடியால் ஸ்ரீதர் கடன்காரனாக மாறினார். புரட்சித்தலைவர் பா.நீலகண்டன் கொடுத்த வாக்குபடி மாட்டுக்கார வேலன் என்அண்ணன் தொடர்ந்து இரண்டு படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்தார் .இவ்விரண்டும் மாபெரும் வெற்றி வசூலில் ஒன்றரை மிஞ்சி ஒன்று ஒடியது. நம்நாடு வசூல் மாட்டுக்கார வேலன் மிஞ்சியது மாட்டுக்காரவேலன் வசூல் நிகராக என்அண்ணன் வந்தார் ..நம்நாடு படம் பார்த்தால் தெரியும் இடைவேளை வரை ஒரு கதையும் இடைவேளைக்கு பிறகு கதைமாற்றுருக்கும்.
இவையெல்லாம் புரட்சித்தலைவர் கை வண்ணத்தில் உருவானது .நாகிரெட்டி நம்நாடு படத்தின் வசூலில் திக்கு முக்காடி போனார் ..
இப்படி வாத்தியார் நடிக்கிற ஒவ்வொரு திரைப்படமும் தனது சொந்த படம் போல் நினைத்துத்தான் அவருடைய கலை ஆர்வம் ஒவ்வொரு ரசிகர்களிடமும் போய் சேர்ந்தது ......... Thanks...........
-
தமிழகத்தின் ஒளிவிளக்கு நமது தெய்வம் புரட்சித்தலைவர் M .G .R .
அதேப்போல் ஆந்திராவின் விடிவிளக்கு N .T .R
அரசியல் சினிமா இரண்டுக்கும் N. T. .ராமராவ் குரு நம்ம. வாத்தியார் .
வாத்தியார் நடித்த பல படங்கள் டப்பிங்கில் ஆந்திராவில் N. T .ராமராவ் நடித்தார் ...
ராமராவ் அரசியல் ஆசான் குரு வழிகாட்டி எல்லாம் நம்ம தலைவர் எம். ஜி. ஆர்.
கட்சி தொடங்குவதற்கு முன் நம்ம வாத்தியார் பார்த்து ஆசிர்வாதம் வாங்கி கட்சி பெயர் முடிவு செய்து. பிறகு ஆந்திராவில் ஆட்சி பிடித்தது. இவையெல்லாம் ஊர் உலகம் அறிந்த உண்மையாகும் ...
முதல் முதலாக ஆந்திராவில் கட்சி தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்றதும் .
N .T. ராமராவ் அவர்கள் நம்ம வாத்தியார் கண்டு தரிசனம் பெற்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பிறகு முதல்வர் பதவி ஏற்கவேண்டும் .என்பது ராமராவின் விசுவாசம் உள்ள விருப்பம் ஆகும் அதனால் வெற்றி பெற்ற செய்தி அறிந்தவுடன் நம்ம தலைவரை காண இரவு 2.00 மணிளவில் ராமபுரம் தோட்டத்துக்கு வந்தார்
ராமராவ் ..பாதுகாப்பு நலன் கருதியே இரவு வந்தார்) ..
ராமபுரம் தோட்டத்துக்கு வந்ததும் சில அதிசியம் கண்டு ஆச்சரியம் அடைந்தார் ராமராவ் அந்த நேரத்திலும் சுமார் 30. பேர் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் எங்கு சென்றாலும் உணவு கிடைக்காது நம்ம வீட்டீலே கூட இந்த நேரத்தில் சாப்பாடு இருக்காது அப்படியே இருந்தாலும். எது இருக்கிறதோ அதைத்தான் சாப்பிடனும் இதுதான் வழக்கம் நடைமுறையாகும் ...ஆனால் இங்கே சுட சுட அறுச்சுவை உணவு சாப்பபிடுகிறார்கள். இது எப்படி சாத்தியம் ஆகும் அதுவும் இந்த நேரத்தில் என எண்ணி ஆச்சரியம் அடைந்தார் .
தன்மனதில் பட்டதை அப்படியே புரட்சித்தலைரைக் கண்டதும் கேட்டார் .அதற்கு புரட்சித்தலைவர் தந்த விளக்கம் ...இந்த நேரம் மட்டும் அல்ல எந்த நேரத்தில் வந்தாலும் என்னால் உடனே செய்யக்கூடிய ஒரே உதவி சாப்பாடு மட்டுமே
வேறு எந்த உதவியும் காலம் தாமதமாகத்தான் செய்ய முடியும் ..மனிதன் பிறவி எடுத்ததும் வாழ்வதும் தன் வயிற்றுக்காகத்தான் ..இதைக்கூட நம்மால் செய்ய. முடியல என்றால் நாம் பிறவி எடுத்து என்ன பயன். பசித்தவனுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் உன் தாய் உன்னை பெற்றுடுத்த பலன் அடைவார் காலமெல்லாம் உணவு கொடுத்தால். நீ உன் தாயின் வயிற்றில் பிறந்த பலன் அடைவாய் ..இதுதான் மனிதன் பிறவிக்கு அர்த்தம் ஆகும் .
இதைக் கேட்டதும் N. T. ராமராவ் தன்னையறியாமல் கண்கலங்கினார் ..இப்படியும்
ஒரு மனிதரா தாய் செய்த புண்ணித்தால் இவர் பிறந்தாரா அல்லது இவர் பிறந்தனால் தாய் புண்ணியம் அடைந்தாரா..என எண்ணி நெகிழ்ச்சியடைந்தார் .
இன்னும் முடியல ...தொடரும் ...தொடரும் ...தொடரும்....... Thanks...
-
M. G. R. ..N. T. R. தொடர்ச்சி பாகம் 2
ராமபுரம் தோட்டம் இல்லத்தில் எந்த நேரமும் அனையா விளக்கு போல் அடுப்பு எரியும் எப்போது யார் சென்றாலும் உணவு உண்ணாமல் திரும்புவதில்லை ....
யாராவது வரும் போது சாப்பிட்டு வந்திருந்தாலும் பால் பாயசம் அல்லது பழம் ஜூஸ் எதாவது ஒன்று சாப்பிட்டுத்தான் வர வேண்டும் ..இதுதான் வாத்தியார் கொள்கை லட்சியம்..ஆகும் ...புரட்சித்தலைவர் காண வந்த N. T. ராமராவ் அவர்கள் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுடன். தானும் அமர்ந்து சாப்பிடுவதாக கூறினார் ..அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் .புரட்சித்தலைவரே.அவர்க்கு உணவு பறிமாறினார். அறுச்சுவை உணவு என்றால் என்ன என்று புரட்சித்தலைவர் வீட்டில் சாப்பிட்டாத்தான் தெரியும் ..வாத்தியார் வீட்டில் சாப்பிட்டவர்கள். வேறு இடத்தில் சாப்பிட்டா அந்த உணவு நன்றாக இல்லை என்றுத்தான் நினைப்பார்கள்.
அதனால்தான் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் எம். ஜி. ஆர் எத்தனையோ முறை சாப்பிட கூப்பிட்டும் போகவில்லை ..அதற்கு காரணம் ஒரு முறை எம். ஜி. ஆர் வீட்டில் சாப்பிட்டா மீண்டும் மீண்டும் அவர் வீட்டு சாப்பாடு சாப்பிட தோண்றும். என்பதால் நாவின் சுவை அடக்கி வைத்திருந்தார் ..இப்போது அதே நிலைத்தான் புரட்சித்தலைவர் விருந்து உண்டவுடன். விருந்தோம்பல் என்றால் என்ன என்று..
எம். ஜி. ஆரிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார் .N. T. ராமராவ் அவர்கள் ...
புரட்சித்தலைவர் ஆசிர்வாதத்துடன் ஆந்திராவின் முதல்வர் ஆனார் ...N. T. ராமராவ் அவர்கள்.
ஆந்திராவில் முதல் முதலாக சட்டசபையில் அறிவித்த திட்டங்களில் அறிவித்த ஒர் அறிவிப்பு இனி திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் வழங்கப்படும்..என்றார் ...இது எப்படி சாத்தியம் ஆகும் .என்று கேள்வி எமுப்பினார்கள் எதிர் கட்சி காரர்கள் ..அதற்கு N. T. ராமராவ் தந்த விளக்கம் ..
தமிழகம் முதல்வர் திரு..எம் ஜி. ராமச்சந்திரன் அவர்கள் வீட்டில் எந்த நேரம் சென்றாலும் உணவு கிடைக்கும். எப்போதும் அவர்வீட்டு அடுப்பு எரிந்துக்கொண்டே இருக்கும். தனி ஒரு மனிதர் வீட்டில் இது சாத்தியம் ஆகும் போது..
ஊர் உலகத்துக்கே படி அளக்கர திருப்பதி திருமலை ஏமுமலையான் ஆலயத்தில் ஏன் சாத்தியம் ஆகாது. என்று விளக்கம் தந்து திட்டத்தை நிறைவேற்றினார்..
பின் குறிப்பு .....N. T. ராமராவ் அவர்கள் முதல்வர் ஆவதற்கு முன் திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் கிடையாது. விஷேச நாட்கள் திருவிழா நாட்கள் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்து..மற்ற நாட்களில் பிரசாதம் வழங்கப்பட்டது..N. T. ராமராவ் அவர்கள் வந்த பிறகு தான் சாமி தரிசனம் பார்த்து விட்டு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த. சந்திர பாபு நாயுடு அவர்கள் திருப்பதி திருமலைக்கு வரும் அனைவோருக்கும் எப்போதும் உணவு.உண்டு திட்டம் நிறைவேற்றினார் .....
ஆக திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் உருவாதுக்கு காரணம்
நமது தெய்வம் பொன்மனச்செம்மல்..... Thanks...
-
"நாடோடிமன்னன்" படம் குறித்த சில அறியாத தகவல்கள் உங்கள் பார்வைக்கு.
ஆரம்பத்தில் மதனா பானுமதிக்கு கழை கூத்தாடி வேடம் என்று முடிவாகியது.
முத்துகூத்தன் பாடல் எழுத ஆண்டவன் எங்கே அரசாண்டவன் எங்கே என்ற ஒரு பாடல் படமாக்க பட்டு பின் படத்தில் வரவில்லை.
பாடல் ஒத்திகையில் வாத்தியார் வழக்கம் போல திருத்தங்கள் சொல்ல பானுமதிஅதை ஏற்க மறுக்க பாடல் கைவிடப்பட்டது.
வாத்தியார் கோவம் அடைந்து வெளியே செல்ல சக்கிரபாணி அண்ணன் பதட்டம் அடைந்து படம் தொடருமா என்று பதற.
ஒரு காட்சியை வாத்தியார் மீண்டும் மீண்டும் படமாக்க கோவம் கொண்ட பானுமதி ஏ. கே. சுப்ரமணியம் மாதிரி ஒரு நல்ல இயக்குனரை வைத்து எடுக்காமல் ஏன் இப்படி என்னை படுத்துகிறீர்கள் என்று கத்த.... தளத்தில் இருந்த அனைவருக்கும் தெரிந்து விட்டது . இனி பானுமதி படத்தில் நீடிப்பது கடினம் என்று.
காடு விளைந்தென்ன பாடல் ஏவிஎம் தளத்தில் படமாக்க இருக்க நான் அங்கு வரமாட்டேன் எனக்கும் ஏ வி.எம்.க்கும் ஆகாது என்று மறுக்க பாட்டையே தூக்கி விடலாமா என்று தலைவன் யோசிக்க பின் சமாதானம் ஆகி வாஹினி படத்தளத்தில் படம் ஆக்க பட்டது. நல்ல வேளை நல்ல பாடல் தப்பியது.
பொன்மனம் தன் மனதை கல்மனம் ஆக்கி கொண்டு ஏன்பா ரவீந்தர் கதாநாயகி இல்லாமல் கதையை மாற்ற முடியாதா என்று கேட்க அது நடந்து பின் படம் தொடர்ந்தது.
கன்னித்தீவில் தங்கை புஷ்பலதாவை தேடி போவது போல முதலில் கதை...ஆம் ஏ. வி.எம்..ராஜன் மனைவி அவரே..
பானுமதி பாத்திரம் பாதியில் முடிய கதை மாற்றப்பட்டு பின் சரோ படத்தில் இணைய பின் பகுதி கலராக வர.
தினம் தினம் பல்வேறு சிக்கல்களில் சிக்கிய நாடோடிமன்னன் வெளி வந்து வெள்ளி வெற்றி விழா மலரில் எழுதிய நம் மன்னாதி மன்னன்
பானுமதி கூட எழுந்த மோதல்கள் பற்றி ஏதும் சொல்லாமல் படத்தில் மதனா பாத்திரமே மிகவும் சிறப்பு...அந்த பாத்திரத்தை பானுமதி தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது என்று சொல்ல.
அவர் சொல்லவந்த செய்தி இதுதான் கருத்து வேறுபாடுகளை யாரும் மறக்க வேண்டும் என்பதே..
என்ன சரிதானே எம்ஜியார் நெஞ்சங்களே...மறு வெளியீட்டில் ஒரே திரை அரங்கில் 3 காட்சிகள் தினமும் ஓடி 100 நாட்கள் கண்ட திருவண்ணாமலையில் சாதித்த நிகழ்வு நம் தலைவனுக்கு மட்டுமே இந்த தமிழகத்தில் சொந்தம்.
வாழ்க எம்ஜியார் புகழ்.. தொடரும்...கருத்துக்கள் வரவேற்க படுகின்றன. ஒரு ஊக்கத்துக்குத்தான் நன்றி........ Thanks.........
-
தமிழ் மக்கள் எம் ஜி ஆருக்கு கொடுத்த ஆதரவு உலக சரித்திரத்தில் பொறிக்க வேண்டியது
எம் ஜி ஆர் பணத்தை விட மனிதநேயத்தை நேசித்தார் மக்கள் தங்களை விட எம் ஜி ஆரை அதிகம் நேசித்தார்கள்
தன்பசியை விட மற்றவர் பசி ஆறி பார்பதில் சுகம் கண்டார் எம் ஜி ஆர் மக்கள் எம் ஜி ஆர் புகழ் வளர்ச்சி கண்டு சுகம் பெற்றார்கள்
அனாதையாக வந்த தன்னை ஆளாக்கி நாட்டை ஆளவைத்த மக்களுக்கு அரணாக இருந்து காத்தார் எம் ஜி ஆர் மக்கள் தங்களை காத்த எம் ஜி ஆரை காவல்தெய்வமாக கொண்டாடுகிறார்கள்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...... Thanks...
-
உண்மை தான் எங்கள் புரட்சித் தலைவா
இப்போது நீதி நியாயம் தர்மம் என்பது
காணல் நீர் போல் ஆகிவிட்டது
தர்மம் நீதி நியாயம் இவைகளை எல்லாம்
தேடிப்பார்த்தேன்
தென்படவில்லை
புரட்சித் தலைவரே நீங்கள் இல்லாத இந்த உலகில்
நீதியும் இல்லை
நியாயமும் இல்லை
தர்மமும் இல்லை
நேர்மையும் இல்லை
உண்மையும் இல்லை
எல்லாம் வெற்றிடமாக உள்ளது
மக்கள் திலகமே நாங்கள் அனைவரும்
உங்களின் அருமை பெருமைகளை
நன்கு உணர்ந்து கொண்டோம்
மீண்டும் நீங்கள் எங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறோம்
வாழ்க வளர்க வள்ளல் பெருமான் புரட்சித் தலைவரின் புகழ்
✌️ நன்றி ....... Thanks...
-
அன்பு நண்பர்களே
இந்த புகைப்படம் தலைவர்
எஸ் என் லட்சுமி அம்மா அவர்களுக்கு
நம் மக்கள் திலகம் பரிசாக வழங்கினார்
தொழிலாளி திரைப்படத்தின் போது
லட்சுமி அம்மா அவர்கள் பெற்றுக்கொண்டு தன் வீட்டின் வாசல் முன்பு அலங்கரித்து வைத்துக் கொண்டார் தலைவரின் தாய்
எஸ் என் லட்சுமி அம்மா அவர்கள்
காலம் உருண்டோடுகிறது தொழிலாளியாக நாடோடியாக விவசாயியாக இருந்த நம்
புரட்சித் தலைவர்
மன்னாதி மன்னனாக
காவல்காரறாக இந்நாட்டு
முதல்வர் ஆகிறார் ஆம் தமிழ் நாட்டுக்கே
முதல் அமைச்சர் ஆகிறார்
நம் தலைவரின் தாய் எஸ் என் லட்சுமி அம்மா அவர்கள் நம் தலைவர் வழங்கிய
புகைப்படத்தை தன் வீட்டின் முன்பு அலங்கரித்த புகைப்படத்தை அகற்றி விடுகிறார்
தமிழ் நாட்டின் முதல்வர்
என் கால் பிடித்திருக்க கூடாது என்று
நல் எண்ணத்தில்
இந்த செய்தி நம் தலைவருக்கு எப்படியோ செல்கிறது
நம் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம்
அன்பு கட்டளை இடுகிறார்
அந்த புகைப்படம் இருந்த இடத்திலே இருக்க வேண்டும் என்று
நம் அன்பு தலைவரின் சொல்லை மீற முடியுமா
அந்த புகைப்படம் இருந்த இடத்துக்கே வந்தது
இது தான்
நம் மக்கள் திலகத்தின் மகிமை...... Thanks...
-
MGR வாழ்க
நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மூன்று முறை முதலமைச்சராகி நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை
உருவாக்கித் தந்தார்
ஆந்திர முதலமைச்சர் எம் டி ராமாராவ் அவர்களுடன் கலந்து பேசி
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க ஒரு திட்டம் தீட்டினார்
அதுதான் தெலுங்கு கங்கை திட்டம்
கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு குடி நீர் வந்தது
அடுத்து காவிரி நீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக
காவிரிப் பாசன விவசாயிகள் உடன் சேர்ந்து
தமிழ்நாடு அரசின் சார்பில்
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்
அதன் காரணமாக. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு வாங்கியது
ஷண்முக நதியின் குறுக்கே ஒரு அணை கட்டப்பட்டது
நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டப் பட்டது
இன்னும் பல திட்டங்களை நாட்டு மக்களுக்காக எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் உருவாக்கினார்
இந்தத் திட்டத்தினால் தனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் எவ்வளவு லஞ்சப் பணம் கிடைக்கும் என்று திட்டம் போடாமல் நாட்டு மக்களுக்காக லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தினார்
ஆகவேதான் இவரைப் பார்த்து யாரும் ஊழல் பெருச்சாளி என்று சொல்ல முடியாது
.....
எம்ஜிஆரின் ஆட்சி பொற்கால ஆட்சி...... Thanks...