http://i1028.photobucket.com/albums/...psohdxnh4c.jpg
படகு.
ஒரு சின்னப் பழுதுமின்றி பல கோடி உள்ளங்களை வெகுகாலமாய் சுமந்து செல்லும் படகு.
இசைப் படகு.
ரசனை சமுத்திரம் தாண்டி நம்மை இன்பக் கரையேற்றும்
படகு.
பத்து தினங்களுக்கு முன் மதுரையின் திரையரங்கொன்றில் மக்களின்
உற்சாக வெள்ளத்தில் ஆர்ப்பாட்டமாய் நீந்தி வந்த
ஆனந்தப் படகு.
----------
நடந்து செல்லும் பொருட்டு இறைவன் கொடுத்த கால்களின் கீழ் சக்கரம் கட்டிக்
கொண்டு விரைந்து வரும்
நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன், வருஷத்துக்குப் பத்துப்படம் நடித்து, காலில்
சக்கரம் கட்டிக்கொண்டு
வெற்றிப் பாதையில் விரைந்தோடியவர்தானே இவர்
என்று மனதில் தோன்றுகிறது.
கண்கள் இடுக்கிச் சிரித்து வரும்
அந்தச் சிரிப்பு..
"படகு..படகு" என்று சொல்லச்
சொல்ல முகத்தில் காட்டும்
அந்தச் சிலிர்ப்பு..
இருக்கையை மறந்து எழுந்து
ஆட்டம் போட்டு, உடலில் உள்ளே காற்றையெல்லாம்
சீழ்க்கையடித்துச் செலவழிக்கும் ரசிகனுக்கு இது
போதாதா?
---------
போதாது என்கிற முடிவெடுத்து
மஜ்னுவாக மாறுகிறார் அடுத்த
நிமிஷமே.
பாலைக் காற்றில் முடி பறக்க,
பல்லக்கில் அழுது செல்லும்
பிரியமானவளை நினைந்துருகிப் பாடுகையில்
அந்த காதல் பித்தனை கண்முன் நிறுத்துகிறார்.
காதலென்றால் இதுதான் என
நம் உள்ளம் உற்சாகமாய்
நிச்சயிக்கிறது.
---------
"இது மட்டுந்தானா காதல்..
இன்னும் பார் " என்று மெத்தை யிட்ட கட்டிலில் அமர்ந்து
கொண்டு மேன்மைக்குரிய காதல் இதுதானெனக் காட்டுகிறார்..சலீமாக மாறி.
"அனார் என்றால் மாதுளம்"
எனப் பாடுகையில், வலக்கையை ஒயிலாய் உயர்த்தி, தலையை ஒருபுறமாய் அசைத்து, வலது
தொடை மெல்ல உயர்த்தி,அதில் அழகாய்த் தாளமிட்டு
அவர் செய்யும் பாவனையைப்
பார்த்து பாடத் தோன்றுகிறது..
"உங்கள் அழகுக்கு சலாமு
அய்யா!"
---------
"அனார்.."
அடித்தொண்டையிலிருந்து
சலீமுக்காக எஸ்.பி.பி.
சொல்வதை, ஒலி வடிவமாய்க் கேட்டாலும் மனக்கண்ணில்
ஒரு நொடி நடிகர் திலகம் வந்து போவார்.
--------
படகு...
நம்மைச் சுமந்து கொண்டு
ஆனந்தமாய் மிதந்து கொண்டே
இருக்கும்..
ஆயுசுக்கும்.
https://youtu.be/ruUSzvl1TME
Sent from my GT-S6312 using Tapatalk