கோபால்,
நீங்கள் நிறைய உணர்ச்சி வசப்படுகிறீர்கள். இப்போது பாருங்கள் தான் இங்கே இட்ட பதிவை அவரே அழித்துவிட்டார். இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நன்றி.
Printable View
cika , i deleted because i dont want any controversies here.
also i didnt write anything he said also i didnt write to get any marks from anyone.
it's what i know and what i read and what is available .. that's all .
people do correct if it's wrong and that's fine
anyways i've sent you the links in messenger.
ராஜேஷ்,
இங்கிருக்கும் யாரின் மீதும் எனக்கு தனி பட்ட விரோதமோ,வெறுப்போ கிடையாது. எனக்கு பட்டதை எழுதுவேன். பிடித்தால் பிடித்தது. இல்லையென்றால் இல்லை.
நான் சொல்ல வருவது என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்.
சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் சொல்லுவார்.
சில சமயம் 10 மாத ஆண் குழந்தைக்கு கூட விறைப்பு ஏற்படலாம். ஆனால் அது கல்யாணத்திற்கு தயார் என்று அர்த்தமல்ல.
எழுத வேண்டும் ,அறிய படாத பாடலாசிரியர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணத்திற்கு என் வாழ்த்துக்கள்.
ஆனால் பொது பார்வைக்கு வைக்க படும் போது எழுத்திற்கு பொறுப்புணர்வு,புரிதல்,உண்மை தன்மை, இவை கலக்க வேண்டும்.
காமாட்சி எழுதிய தனிமையிலே பாடல் குறிக்கவே படவில்லையென்றால் அவரை பற்றி எழுதி என்ன பிரயோசனம்?
அதே மாதிரி முழு பாடலையும் எழுதி பிரதிஎடுக்காமல், அந்த பாடலாசிரியரின் பிரத்யேக திறமை,குணநலன்கள், பாடலின் முக்கிய பகுதி என்று போனால் சிறப்பு.
உதாரணம் முகத்தில் முகம் பார்க்கலாம், இந்த ஒரு வரி ,பிறகு இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம்,அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம் ,இது போதுமே?
வாலியின் தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை,என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்,இந்த ஒரு வரிதான் பாடலின் சிறப்பு.
உதாரணம் மட்டுமே. வெறும் விவரணை அடுக்குகளுக்கு விக்கி போதுமே?
அதனால்தான் ,இளைஞர்கள் கூரிய பார்வையின்றி ,மொக்கையாக ஜல்லியடித்து ,பீற்றி கொள்வதை விரும்பாதவன் நான். ஆனால் ,உங்களை சிறிது மாற்றி எழுத்தில் மெருகு கூட்டி ,பொறுப்புணர்வோடு எழுதினால் புளகாங்கிப்பவனும் நான்தான். பிரபுராம்,வெங்கி ராம் போன்றோர் சிறந்த உதாரணங்கள்.இவர்கள் கருத்துக்கள் சிலவற்றோடு நான் முரண் பட்டாலும் , எங்களுக்குள் விவாதங்கள் வந்தாலும் ,அது ரசனைக்குரியதே.இவர்கள் ,இளைய தலைமுறை எழுத வேண்டிய முறை,கூரிய பார்வை,பண்பட்ட எழுத்து திறனுக்கு சில உதாரணங்கள்.
திரியின் முக்கியத்துவமே புரியாமல் , வெறுமே பரஸ்பரம் ஆஹா ஓஹோ என்று ஒருவரையொருவர் சொரிந்து கொடுப்பதாக மாற்ற பட்டு விட்டது. (முக்கால்வாசி நேரம் படிக்காமலே).ராஜேஷ், நீங்கள் மற்றவர் பதிவுகளை படிப்பதேயில்லை. எப்படி உங்களுக்கு அறிவு விசாலமடையும்?
திரி என்பது பகிர்தல் ,விமரிசத்தல் என்பதை விட விவாத களம். விவாதிப்பதற்கு முதல் தேவை மற்றவர் எழுதியதை படித்தல்.இது ஒரு தார்மீக கடமை. நான் இந்த திரிகளின் 100% விஷயங்களை முழுவதும் படித்துள்ளேன். என் நேரத்தை செலவிட்டுள்ளேன். என் ஒரு மணி நேரம் என்பது உங்கள் இந்திய மதிப்பு 3000 ரூபாய்க்கு சமம். எழுத பட்ட விஷயம் உவப்பாக இல்லையென்றால் ,விமரிசிக்க, மேம்படுத்த உரிமையுண்டு. தாண்டி போவதுதானே என்று நீங்கள் கேட்கலாம். திரி என்பது ஹோட்டல் போன்றதல்ல. வெளியில் பொதுவில் வைக்க படும் நீர் மோர் பந்தல். இதில் ஏதாவது கேடு நேர்ந்தால் ,கொடுத்தவர் பொறுப்பெற்றே ஆக வேண்டும்.
திரியில் ,முக்கால்வாசி ஜென்மங்கள் படிக்காமலே ஜல்லியடித்து, மோசமான பதிவுகளையும் அளிக்கும் போது , என் திறம்,நேரம்,அறிவு,உழைப்பு செலவழித்து எழுதும் எனக்கு,எல்லா அபத்தங்களையும் படித்து தொலையும் எனக்கு ,சொல்லும் உரிமை கூடவா இல்லை?
ராஜேஷ், நீங்கள் எழுதும் திறன் கொண்டவர் இல்லை. நல்ல பதிவுகளை படித்து ,அதை பற்றி எழுதி பழகுங்கள்.
நான் உங்கள் முகநூல் எழுத்துக்களை முழுவதும் அன்றே சகித்து படித்தேன்.எனக்கு இது அவசியமே இல்லை. ஒரு வரி கூட புது தகவல் இல்லை.(கிடைத்த புது தகவல்கள் தவறானவை மட்டுமே). ஆனால் விஷயம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உங்கள் நீங்கள், எதையுமே படிக்காமல் , சுசிலாவின் மூன்றாந்தர ,அயல் மொழி பாடல்களை போட்டு எங்களை பிராண்டி எடுத்தீர்கள்.
தயவு செய்து,உங்களை மேம்படுத்தி கொண்டால் நலம்.எழுத்தாளர் முதலில் நினைக்க வேண்டியது,வாசகர்களை. எழுத்து என்பது மைதுனம் அல்லது வாந்தி போன்றதல்ல. நன்கு தேர்ந்து சமைக்க பட்டு பரிமாறும் உணவு போன்றது. சற்றே பொறுப்புடன் செயல் படவும்.
i did put an end right there but not sure why are you dragging .. why should i write the way you like or some one like
i've been reading posts and i write in a style. many of your posts also are very dragging and pointless so at times that happens. not everytime everybody is right. All i'm saying is remove your critic spectacle and try to encourage others/ budding writers rather than bashing them at once.. using harsh words doesnt help anything but counter argument.. so let's leave this topic right here. I did not post my link here for you read (you dont need to bear but close the FB link , problem would have ended right there). It was for Ci.Ka who asked the link. you didnt like it that's fine. When it's written in public many will like and many might not. that's fine..
Anyways i dont want to drag this anymore, I have a way of writing and and i'll try to improve .. but i write for my own and not to please anyone.
Cika here is a kannada song for you.
Kannada version of Thamarapoo kulathile
https://www.youtube.com/watch?v=5UZ9HtTG1Aw
மெகாஹிட் நிலாப் பாடல் 41: "அந்த நிலாவத்தானே நான் கையிலே பிடிச்சேன், என் ராசாவுக்காக"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரபல தமிழ் தொலைக்காட்சி நிலையத்தின் பாடகர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி. கேரளத்திலிருந்து ஒரு ஆண் தன் தங்கை மகளுடன் முதல் முறையாக தொலைபேசியில் இந்த நிகழ்ச்சிக்காக பேசுகிறார். உரையாடல் மலையாளத்தில்தான். அவர் தன் தங்கை மகளை 'நீ எனக்காக முதல் மரியாதை படத்திலிருந்து 'அந்த நிலாவைதானே கையிலே பிடிச்சேன்' பாடலை பாடுகிறாயா?" என்று கேட்கிறார். தமிழ் பேசத் தெரியாதவரை கூட இந்த பாடல் 25 மேல் கழித்தும் தன் வசம் வைத்திருந்தது என்பதுதான் இந்த பாடலின் சிறப்பு.இப்படித்தான் பலரிடமும் இந்த பாடல் நிறைந்திருக்கிறது.
இளையராஜா தன் இசையில் சித்ராவுடன் பாடியிருந்தார். ரஞ்சனி மற்றும் தீபக் என்ற நடிகர் நடித்திருந்தார். இன்னும் இந்த திரைபடம் மூலமாக இந்த பாடலில் இவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பாடலை எழுதியவர் வைரமுத்து.
பொதுவாக பாடல்களில் காதலன்தான் காதலியை நிலாவென்றோ, நிலவுடன் ஒப்பிட்டோ பாடுவதாக இருக்கும். பெண்களும் சில நேரம் நிலவை தூதாக அனுப்ப, இல்லை சாட்சியாக அனுப்பிவைக்க உபயோகித்து பாடுவார்கள். இங்கே சற்று வித்தியாசமாகத்த்தான் கவிஞர் யோசித்து ஆனால் சற்றும் வித்தியாசமில்லாமல் அதே காதலுக்குத்தான் பயன்படுத்தியிருக்கிறார்.
அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக (2)
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்(2)
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…
மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
முத்தழகி முத்தம் குடுக்க
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி
மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேணாம் ம்ம்..
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்(2)
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..
ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு….
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக (2)
இதோ காணொளிக் காட்சி.
https://www.youtube.com/watch?v=kKYGde-3zbQ