hello CiKa
Printable View
hello CiKa
vaanga rajesh.
ராஜேஷ்,
தங்களின் பண்பு மிகுந்த எதிர் வினைகளுக்கு நன்றி. எம்.எஸ்.வீ பற்றி எழுத பட்ட ஆய்வுகளை படித்து ,உங்கள் அபிப்ராயங்களை எழுதுங்கள்.இசை ஆர்வமும்,பாடலின் நுணுக்கமும் தெரிந்த தாங்கள் ,சற்று ஆழமாக எழுதலாமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே. மற்ற படி என் பதிவுகளில் உள்நோக்கங்கள் இல்லை.
புரிந்து கொண்டு ,நட்பை தொடர்வதற்கு மீண்டும் நன்றி.
ஹாய் ராஜேஷ் கோபால் அண்ட் வரப்போகும் கல் நாயக்..:)
நேத்திக்கு வீட் கம்ப் க்ராஷ் ஆகிடுச்சு.. இன்னிக்கு ஈவினிங்க் தான் போய்பார்க்கணும்..இல்லைன்னா லேப் டாப் தான் ..(அதுல டைப்ப கொஞ்சம் டிஃபிகல்ட் என்கு) எப்படியும் பா க பா நாளைக்கு த் தொடர்வேன்..
ராஜேஷ், கோபால் நீங்கள் இருவரும் சுமூகமாக உரையாடுவதை கண்டு எனக்கு மகிழ்ச்சி. இருவருக்கும் எனது நன்றிகள்.
சி.க.,
"ஆடை கட்டி வந்த நிலவோ" பாடலின் பின் இவ்வளவு அழகான உண்மைக் காதல் கதையே இருக்கும் என்று எனக்குத் தெரியாது. தவறை சுட்டிக் காட்டிய ராஜேஷுக்கும் உங்களுக்கும் எனது நன்றி. "யாரைத்தான் நம்புவதோ கல்நாயக் நெஞ்சம்" என்று வலைத் தளங்களில் எழுதுவோரை நினைத்து எனக்கு பாடத் தோன்றுகிறது.
வாழ்க்கைப் படகு படத்தின் பாடல்கள் அத்தனையும் அவ்வளவு அருமை. எல்லாப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். பாடல்களுக்காகத்த்தான் படத்தை பார்க்க விரும்பினேன். நிறைவேறவில்லை என்று சொல்லி இருந்தேன்.
நிலாப் பாடல் 44: "ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா, வண்ணப் பூச்சுடவா வெண்ணிலா"
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகமும், நாட்டியப் பேரொளியும் தோன்றும் நல்ல இனிமையான காதல் பாடல். பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா. இசை: திரை இசைத் திலகம் K.V. மகாதேவன். விகிபேடியா சொல்வதின் படி கவியரசர்தான் திரைக்கதை மற்றும் பாடல்கள். எனவே அவர்தான் இந்த பாடலும் எழுதி இருக்க வேண்டும். காதலியை காதலன் வெண்ணிலாவாக சொல்வதைத்தான் இதுகாறும் பார்த்திருக்கிறோம். இங்கேதான் காதலி பதிலுக்கு காதலனை மன்னவா என்று கூறுவதைப் பார்க்கிறோம். ஆனால் மன்னா, அரசே என்று காதல் பாடல்கள் தேடினால் எத்தனை தேறுமோ தெரியவில்லை. பாவம் ஆண்கள் நாம்.
பாடல் வரிகள் இங்கே. காணொளிக் காட்சி அதற்கு கீழே
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா
https://www.youtube.com/watch?v=PGvEySGEVqo
ராணி சம்யுக்தா என்பதினால்தான் காதலனை மன்னவா என்று சொன்னார் என எடுத்துக் கொள்வோம்.
From Kumudam
Miaw miaw poonaik kutti......
http://www.youtube.com/watch?v=gpDgoHre0u4
From Pooja ke phool
Miaw miaw meri Sakhi.........
http://www.youtube.com/watch?v=DnacDocV_Mo
...