நாளை (04/09/2015) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.( புகழ் ) "பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறும்.
http://i59.tinypic.com/x3g5g0.jpg
தகவல் உதவி : திரு. பி.ஜி.சேகர்.
Printable View
நாளை (04/09/2015) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.( புகழ் ) "பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறும்.
http://i59.tinypic.com/x3g5g0.jpg
தகவல் உதவி : திரு. பி.ஜி.சேகர்.
அ.தி.மு.க. 'ஜா' அணி 'ஜெ' அணி எல்லாம் சரி. அப்படி நடிகர் திலகம் மேல் உண்மையான அன்பும், நட்பும், மரியாதையும் இருந்தால் தனது [தீ.மு. கழகம்] காட்சி சார்பாக "திருவையாறு" தொகுதில் வேட்பாளர் நிற்காமல் செய்திருக்கலாம்!
இனிய நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்.
ஆயிரத்தில் ஒருவனாக உருவெடுத்து , 1000 பதிவுகள் கடந்து பயணிக்கும்
தங்களுக்கு நல்வாழ்த்துக்கள் / பாராட்டுக்கள்.
http://i59.tinypic.com/16hmc5x.jpg
ஆர். லோகநாதன்.
1989-ல் "சம்மந்தமில்லாத யாரையோ முதல்வராக்குவதற்கு" இவர் கட்சி ஆரம்பித்தார்.
யாருக்கு யார் சொந்தம்? அப்படி பார்த்தால் நடிகர் திலகமும் இன்ற தமிழக முதல்வரும் சம்பந்திகள் தானே! தமிழக முதல்வர் தன சம்பந்திக்கு " மணிமண்டபம்" அமைக்கப்படும் என்ற அறிக்கை , "சம்பந்தி" சிலை இருந்த இடத்தில அகற்றுவது இரண்டும் சரி என்று சொல்லமுடியுமா அல்லது பாதி தான் சரியா?
தேவைற்ற சொற்களை தவிர்க்கவும்.
https://www.youtube.com/watch?v=aoMm2wQpdHs
இது எங்கள் ராமரை [எம்.ஜி. இராமச்சந்திரன்] பற்றிய பதிவு.
அன்றும் இன்றும் என்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் சொல் வீரர்கள் அல்ல . செயல் வீரர்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகில் மாபெரும் சக்தியாகவும் , திமுகவின் அசூர வளர்ச்சிக்கு உரமாகவும் தன்னை ஈடு படுத்திய நேரத்தில் அவருடைய பல்லாயிரம் எம்ஜிஆர் மன்றங்கள் லட்சக்கணக்கான உறுப்பினர்களை எம்ஜிஆர் காட்டிய வழியில் செயல் வீரர்களாக எழுச்சியுடன் திமுகவை வளர்த்தார்கள் .இது நாடறிந்த உண்மை . 1967 தேர்தல் வெற்றி மூலம் எம்ஜிஆர் அவர்களுக்கும் , அவருடைய மன்றதினர்களுக்கும் கிடைத்த வெற்றி - அண்ணாவின் தலைமையில் திமுக ஆட்சி
1972ல் எம்ஜிஆர் அதிமுக துவங்கிய நேரத்தில் எம்ஜிஆரை பற்றியும் , அவருடைய ரசிகர்களை பற்றியும் மிகவும் அநாகரீகமாக முறையில் அன்றைய கட்சிகளின் தலைவர்களும் ,சில நடிகர்களின் சிறு பட்டாளமும் வார்த்த ஜாலங்களில் கிண்டலடித்தார்கள் . 1973ல் திண்டுக்கல் தேர்தல் முடிவுகள் + உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி மூலம் எம்ஜிஆரின் அரசியல் வெற்றி மற்றும் திரை உலக வெற்றி அறிந்து உலகமே பாராட்டியது
எம்ஜிஆரின் ரசிகர்கள் கனவு கண்டார்கள் . கனவை நிறைவேற்றிட அல்லும் பகலும் கடுமையாக உழைத்தார்கள் .1977ல் கனவு நனவாகியது . எம்ஜிஆர் தமிழக முதல்வரானார் . மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றார்
1989ல் பிளவு பட்ட அதிமாக ஒன்று பட்டு மீண்டும் அதிமுக + இரட்டை இலை கிடைத்த போதும் தங்களுடைய தலைவரின் இயக்கம் மீண்டும் உதயமான நேரத்தில் பிரிந்து கிடந்த எம்ஜிஆர் ரசிகர்கள் ஒன்று பட்டு 1989 முதல் இன்று வரை தேர்தலில் எம்ஜிஆரின் அதிமுக விற்காக உண்மையாக உழைத்து எந்தவித புலம்பல்கள் இன்றி ,தங்கள் தலைவனுக்காக பாடு பட்டு வருகிறார்கள் .
இப்படி ஒரு ரசிகர்கள் கூட்டம் உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்க வாய்ப்பே இல்லை .எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் . எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் அவருக்காகவே வாழ்ந்தார்கள் . அவருக்கு பின்னரும் அதிமுகவை கட்டி காத்து வருகிறார்கள் . இந்த நிலை தொடரும் நிலையில் 2016 தமிழக தேர்தலில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி அமைவது திண்ணம் . ஏன் என்றால் எம்ஜிஆரின் விசுவாசிகள் எம்ஜிஆர் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள் .வாய் சொல் வீர்கள் அல்ல . செயல் வீரர்கள் . இது உலக வரலாற்றில் எந்த ஒரு நாட்டிலும் , எந்த ஒரு இயக்கத்திற்கும் ,ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை .
அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள்: 4-9-1978
http://mmimages.maalaimalar.com/Arti...d_S_secvpf.gifhttp://static.addtoany.com/buttons/s...ave_171_16.png
http://www.maalaimalar.com/Images/print.gif
அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978-ம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.
1978-ம் ஆண்டு, செப்டம்பர் 4-ல், சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
பின்னர் 1982-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து 'பேரறிஞர்' மற்றும் 'தொழில்நுட்ப' ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.
2001-ம் ஆண்டு: டிசம்பர் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின் சேர் பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.