http://i42.tinypic.com/xpt3k0.jpg
Printable View
First of all I like to wish Mr.Vinod on completing 5000 posts, I am thinking how much work he had done all these months how much time he should have spent in internet along with his usual work and family chores. Kudos to your work Sir.
One question to MGR Devotees here regarding Ulagam Sutrum Vaaliban how many scenes are shot in Hong Kong? One of MGR fan (a foreigner) is in Hong Kong now and he wants to gather information regarding this place with MGR.
திருவண்ணாமலை
தமிழகத்தின் கோயில் நகரங்களில் ஒன்றான பிரபலமான சிறு நகரம் .அன்றைய வட ஆற்காடு
http://i42.tinypic.com/2wpuffd.jpg
மாவட்டத்தில் இடம் பெற்றிருந்த திருவண்ணாமலை நகரில் எனக்கு ஏற்பட்ட ஒரு இனிய
திரைப்பட அனுபவங்கள்
திருவண்ணாமலை நகரில் இருந்த திரை அரங்குகள் நான்கு .
1.மீனாக்ஷி
2.பாலசுப்ரமணியம்
3.அன்பு
4.கிருஷ்ணா .
புது படங்கள் முதல் வெளியீட்டில் குறிப்பாக மக்கள் திலகம் - நடிகர் திலகம் படங்கள் வெளியாகும் நாட்களில் அரங்கம் முழுவதும் ஸ்டார் - தோரணங்கள் - அவரவர் கட்சிகளின் கொடி என்று
அமர்க்களப்படும் .
மக்களின் பொருளாதாரம் பொருத்த வரை அடிப்படை விவசாயம் . கோயில் நகரம் என்பதால்
விசேஷ நாட்களில் மட்டும் மக்கள் கூடுவார்கள் . எந்த வித தொழிற்சாலைகள் கிடையாது .
பணபுழுக்கம் இல்லாத சிறிய நகரம் . வேலூர் நகரம் 90 கி.மீ - விழுப்புரம் 70கி.மீ தொலைவிலும்
அமைந்திருந்தது .
பெரும்பாலான நிலக்கிழார்கள் - வணிகர்கள் - காங்கிரஸ் இயக்கத்தை சேந்தவர்கள் .நடிகர் திலகத்தின் ரசிகர்கள் .
அடிமட்ட உழைக்கும் வர்க்கம் - மிகவும் பிற்படுத்தபட்டோர் எல்லாம் அன்றைய திமுக கட்சியின்
மீதும் மக்கள் திலகத்தின் மீதும் அபிமானம் வைத்திருந்தாகள் .
4 திரைஅரங்கு உரிமையாளர்களும் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது . இந்த நகரை சுற்றி சுமார் 200 கிராமங்கள் மேல் சுற்று புறத்தில் அமைந்திருந்தது .
மக்களின் பொழுது போக்கு என்றால் திரைப்படம் பார்ப்பது ஒன்றே . கிராம மக்கள் மாட்டு வண்டி மூலமும் , சைக்கிள் வாகனம் மூலமும் வந்து செல்வார்கள் .
பக்தி படங்களுக்கு அதிக பெண்கள் கூட்டம் அலை மோதும் . எம்ஜிஆர் - சிவாஜி படங்களுக்கு
முதல் வாரத்தில் வரவேற்பு இருவருக்கும் இணையான வரவேற்பு கிடைக்கும் . பின்னர் படத்தின் வெற்றியின் படி அதிக நாட்கள் ஓடும் .
எனக்கு தெரிந்த வரை திருவண்ணாமலை நகரில் முதல் முறையாக 100 நாட்கள் மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன் '' படம் கிருஷ்ணா அரங்கில் இரண்டாம் வெளியீட்டில் 1960ல்
ஓடியது . பின்னர் மக்கள் திலகத்தின் '' மாட்டுக்கார வேலன் '' படம் பாலசுப்ரமணியம் அரங்கில்
1970ல் 100 நாட்கள் ஓடியது .
முதல் முறையாக நகரில் மூன்று அரங்கில் மீனாக்ஷி 2.பாலசுப்ரமணியம் .3.கிருஷ்ணா
''உலகம் சுற்றும் வாலிபன் '' படம் 1973ல் வந்து இணைந்த 100 நாட்கள் ஓடியது .
அடிமைபெண் - நம்நாடு - ஒளிவிளக்கு - குடியிருந்தகோயில் - காவல்காரன் -அன்பேவா
எங்கவீட்டு பிள்ளை -ரிக்ஷாக்காரன் - நல்லநேரம் - நேற்று இன்று நாளை - உரிமைக்குரல்
இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - மீனவ நண்பன் -திருடாதே - வேட்டைக்காரன் - போன்ற மக்கள் திலகத்தின் படங்கள் 50 நாட்கள் மேல் ஓடியது .
1967ல் தீபாவளி அன்று வந்த தேவரின் விவசாயி படம் ஒரே நாளில் 7 காட்சி நடை பெற்றது .
1969ல் நகரின் மைய பகுதியில் அண்ணாவின் சிலையை மக்கள் திலகம் திறந்து வைத்தார் .
தேடிவந்த மாப்பிள்ளை - குமரிகோட்டம் படங்களின் படபிடிப்பிற்காக மக்கள் திலகம் சாத்தனூர்
அணைக்கு வந்த நேரத்தில் திருவண்ணமலை நகரில் தங்கி சென்றார் .
திருவண்ணமலை நகரை சுற்றி சுமார் 20 கிராமங்களில் டூரிங் கொட்டகைகள் இருந்தது .
மக்கள் திலகத்தின் பழைய படங்கள் எல்லாம் திரையிடப்பட்டு வந்தன .கிராமபுரத்தில் இளம் வயது வாலிபர்கள் மக்கள் திலகத்தின் மீது தீராத பற்று வைத்திருந்தனர் . ஏழை மக்கள் எல்லோரும் அவரது படங்கள் மீதும் , தனிப்பட்ட எம்ஜிஆர் என்ற சக்திக்கு ஆளானார்கள் .
இன்றும் அவர் மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும் அவரது வோட்டு வங்கியும் , புகழும் நிலைத்திருப்பது திருவண்ணாமலை நகருக்கு பெருமையாகும் .
இன்று திருவண்ணாமலை நகரம் அடியோடு மாறி , வணிக நகரமாக , மக்கள் தொகை பெருகி
பல கல்லூரிகள் - கல்வி நிறுவனங்கள் என்று அடியோடு மாறிவிட்டது . கிராமங்களும் இன்றைய சாதனங்களுடன் நகருக்கு இணையாக மாறிவிட்டது
சாதாரண நகர அரசியல்வாதிகள் இன்றுபல கோடிகளுக்கு . அதிபதிகள் .
ஒரே அரங்கம் - பாலசுப்ரமணியம் இன்று வரை நிலைத்துள்ளது .
நினைவுகள் தொடரும் .......
Another request for uploading MGR images and ads please try to link the images to less resolution since many images that are uploaded are 1 MB to 1.5MB size.
Thanks for the information Sir.
Regarding Anna Statue I think this is the one.
http://i125.photobucket.com/albums/p...psf938f8fe.jpg
And the link about this Inscription Stone.
http://www.mgrroop.blogspot.in/2012/...ion-stone.html
Kalyaperumal Sir congrats on completing 1000 posts.
Forget to mention Vinod Sir, that one of MGR Devotees Yukesh Babu asked to convey regards and thanks on writing about our Thalaivar.