நிலாப் பாடல் 48: "ஓ வெண்ணிலா இரு வானிலா"
-------------------------------------------------------------------------
இதயம் படத்தில் சொல்லாத காதல் சொன்ன கதிர், நண்பர்களுக்குள் பிளவு ஏற்படுத்திய காதலை சொல்கிறார். ஓ வெண்ணிலா எனத் துவங்கும் கவியரசரின் பாடலை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இது வைரமுத்துவின் ஓ வெண்ணிலா பாடல் வரிகள், A. R. ரஹ்மான் இசையில், அப்பாஸ், வினீத் நடிக்க உன்னி கிருஷ்ணன் பாடி இருக்கிறார். காதல் சோகப் பாடலாயிற்றே.
சி.க., 'ஓ வெண்ணிலா இரு வானிலா' பொருள் சொல்லுங்களேன். இரு வானிலா என்றால் இருண்ட வானம் என்று பொருள் எடுத்துக் கொள்ள வேண்டுமா?
இதோ அந்த பாடல் வரிகள்:
-----------------------------------------------
ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..
கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா.....)
மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா.....)
இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
(ஓ வெண்ணிலா.....)
-------------------------------------------------------
காணொளி காட்சி:
https://www.youtube.com/watch?v=Xwb7VAE8ODA
காதல் தேசத்தில் இப்பாட்டு சர்வ சாதாரணம்!!!