வாசு ஜி
வைர நெஞ்சம் மற்றும் திருடன் பாடல்கள் தூள்
Printable View
வாசு ஜி
வைர நெஞ்சம் மற்றும் திருடன் பாடல்கள் தூள்
வெங்க்கிராம்..
மஞ்சப்பொடி தேய்க்கையில என் நெஞ்ச தொட்டு தேய்ச்ச புள்ள
தண்ணி தொட்ட பாகம் எல்லாம் இந்த கண்ணன் தொடும் காலம் எப்போ
பாடல் முழுக்க்க் கேட்டேன்..பார்த்தேன்..அருமை..அதை விட அதை நீங்கள் ர்சித்த விதம் வெகு அழகு. //அந்த ரசிப்பூ தொடர்ந்து நான்கைந்து வருடங்களுக்கு மணம் வீசிக் கொண்டெ இருந்தது..// ட்ரூ… அந்த ரேகாம்மா முகத்தில் ஒரு வித ரஸ்ட் இருந்தது..கொஞ்சம் வித்யாச அழகு..
//இந்த இரண்டையும் இணைக்கும் ஒரு பாஸ் கிடாராக. முதல் இடையிசையில் வயலின் கற்றைகளால் அலங்கரிப்பு அருமை. குடையில்லாமல் திடீரென பெய்யும் மழையில் மாட்டிக்கொண்டு நனைந்துவிடுவோமே..அதுபோன்ற ஒரு பாடல் இது.. மழை வந்ததும் தெரியாது, நின்றதும் தெரியாது.// ஹையாங்.க்.. வெகு அழகாய் எழுதியிருக்கிறீர்கள்..அருமை..இன்னும் இன்னும் எழுதுங்கள்.. நன்றி..
வாசு சார்..
அது சரி.. வெண்ணுடை பத்துவும் வெண்ணுடை ந.தியும் ஹே ஹேயா.. நல்ல பாட்டு..பாவம் பத்து.. ஷீகர் காரணமாக சிறுவயதிலேயே (மேபி 45க்குள்) போய்விட்டார் அல்லவா..
//ஏதுக்கு?... அழைத்தாய் ஏதுக்கு
ஊதல் ஊதி ஜடை காட்டி
ஊமை போல வாயை மூடி
ஏதும் அறியாதவர் போல
பாசாங்கு செய்தே நீ
ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு// நான் கேட்டிராத பாடல் கேட்டுப்பார்த்து ரசித்தேன் தாங்க்ஸ்.. ஏதுக்கு நன்கு இழைந்து பாடியிருக்கிறார் இசைய்ரசி..
ராஜேஷ் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஜெய்குமாரி டான்ஸ் கொஞ்சம்பார்த்தேன்..ஸோ..ஸோ தான்..பக்திரசம் இனிமேல் தான் கேக்கணும். தாங்க்ஸ் ( நார்மலா நான் ராத்திரி தான் பக்திமானாக இருப்பேன்..)
எஸ்.வி..சார்.. வாங்க வாங்க.. ராஜா கண்ணு போகாதடிக்கு ஒரு தாங்க்ஸ்..
ராஜ்ராஜ் சார்.. நீங்க இண்ட்ரஸ்டிங்க் ப்ரொபஸர்னு தெரியும்..ச்சும்மா க் கேட்டே.ன்..
எழுதிக்கிட்டே இருக்கற்ச்சே நடையா இது நடையால்லாம்போட்டா நான் என்ன ஆகிறது..வெள்ளிக்கண்ணு மீனா வீதி வழி போனா..ம்ம் அப்புறம் வர்றேன்..
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 5
பணத்திமிர் பிடித்து திரியும் நாயகிக்கு ஏழை நாயகன் தங்கள் கிராமத்து மக்களுடன் சேர்ந்து கொடுக்கும் கேலிச் சூடு. சவால்களை சந்தித்து அவைகளை சமாளித்து சாதனைகளாய் மாற்றிக் காட்டிய மாணிக்கம். கருப்பங் கழிகளுடன் பாடி களிப்பு நடனம் புரிந்தபடியே
'ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ'
http://www.youtube.com/watch?v=pEMxV...yer_detailpage
வாசுஜி..
எனக்கும் ரொம்பப் பிடிக்கும்
http://youtu.be/m9wlwwfNZgw?list=UUt...YQWV3ZKF_XSlag
மதுரையில் வொர்க்ஷாப் ரோடுக்குக்கு இந்தப்பக்கம் தேவி தியேட்டர் தாண்டி மங்கையர்க்கரசி ஸ்கூலுக்கு வெகு முன்னால் ஒரு வீர காளியம்மன் கோவில் (குட்டிக் கோவில்) இருக்கிறது..அங்கு எந்த ஒரு விழாவிற்கும் போடப்பட்டும்பாடல் இந்த தாயே கருமாரி, அப்புறம் கற்பூர நாயகியே கனகவல்லி.. ம்ம் கறுப்பு நிலாவாட்டம் இருக்கும் பெரிய எல்.பி ரெகார்டரில் நிறைய ஒலிச்சித்திரமும் – பட வசனங்கள்போடுவார்கள்..சரஸ்வதி சபதம், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் என..ம்ம்.. மதுரை நகரில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ… தாங்க்ஸ் கிருஷ்ணா சார்..ஃபார் த ஸாங்க்..
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 6
காதல் மலர்க் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்.
இளம் கன்னி மான்கள் கூட்டத்தில் ஆண் சிங்கக் குட்டி புகுந்து ஒவ்வொரு மானாக 'லபக்'.'லபக்'. ஒரே ஒரு புள்ளி மான் துள்ளியபடி வாலாட்ட அதையும் ஒட்ட நறுக்கும் ஆண்சிங்கம்.
'வக்கீலாத்து வசந்தா
உன் மனதை எந்தன் வசந் தா'
நடையழகு மன்னன் நடிகர் திலகத்தின் நளின நடை. கோபிகைகளின் கண்ணனாக இந்த அழகு மன்மதன் விஜய்.
http://www.youtube.com/watch?v=BMEJ_fdxTU8&feature=player_detailpage
மதுஜி!
காலை வணக்கம். நன்றி!
உங்களைத்தான் எதிபார்த்தேன். சில நாட்களுக்கு முன் '4 வேலி நிலம்' படப் பாடல் ஒன்று கேட்டிருந்தீர்கள். எனக்கு ஞாபகம் இல்லை. இப்போது மீண்டும் தாங்கள் ஞாபகப்படுத்த இயலுமா? ப்ளீஸ்.
அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட – எல்.ஆர் ஈஸ்வரி பத்மப்ரியா ஆடும் வைர நெஞ்சப் பாடல். இப்பத்தான் ஹே ஹே ஸ்வீட்டிக்கு அப்புறம்பார்த்து முடித்தேன்...படத்தில் பார்த்ததாக நினைவில்லையே…சரி சரி ராஜேஷ்க்கு டெடிகேட் பண்ணி விட்டுறலாம்..:)