-
சென்னை பெரம்பூரில் உள்ள 'மஹாலக்ஷ்மி' திரையரங்கில், கடந்த 18.3.2011 வெள்ளி முதல், முற்பகல் 11:30 மணிக் காட்சியாக, கலையுலக ஆண்டவரின் "ஆண்டவன் கட்டளை" வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகின்றது.
இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்
-
மதுரையம்பதியின் 'சென்ட்ரல் சினிமா' திரையரங்கில்,1.4.2011 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்".
சாக்லெட் தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும், மதுரை நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கும் ஸ்வீட் நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
எத்தனை வசூலை அள்ளிக் குவிக்குது
மதுரை 'சென்ட்ரல் சினிமா' [தினசரி 4 காட்சிகள்]
சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்"
கலெக்ஷன் ரிப்போர்ட்
1.4.2011 : வெள்ளி : ரூ.10,082/-
2.4.2011 : சனி : ரூ.7,192/-
3.4.2011 : ஞாயிறு : ரூ.10,961/- [மாலைக் காட்சி வரை]
1.4.2011 முதல் இன்றைய [3.4.2011] மாலைக் காட்சி வரை "சிவகாமியின் செல்வன்" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் ரூ.28,235/-.
படத்தில் எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது; படமோ எத்தனை வசூலை வாரிக் குவிக்குது.
2011 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் இது போன்ற கலெக்ஷன் எல்லாம் சாதனைகளின் சிகரம்!
அதனால் தானே கூறுகிறோம்,
"சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே" என்று.
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
கர வருட தமிழ்ப் புத்தாண்டு தினம் மற்றும் சித்திரைத் திருநாளான 14.4.2011 வியாழன் முதல், சென்னை 'சாந்தி' காம்ப்ளெக்ஸில், கலையுலக மகானின் "திருவருட்செல்வர்" திரைக்காவியம் திரையிடப்பட உள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இவ்வார இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்த அருமையான செய்தியை அளித்த அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
சென்னை சாந்தி திரையரங்கில் வரும் 14.04.2011 முதல் திரையிடப் படவுள்ள திருவருட் செல்வர் திரைப்படத்தின் நிழற்படங்கள் திரையரங்கின் முகப்பில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. இதோ அவை நம் பார்வைக்கு
http://i872.photobucket.com/albums/a...tillShanti.jpg
அன்புடன்
raghavendra
-
அன்பு நண்பர் மோகன்,
நேற்று முற்பகல் முதல் மாலை சுமார் 4 மணி வரையிலும் நான் சாந்தி திரையரங்கில் தான் இருந்தேன். அங்கு நம் இணைய தளம் சார்பாக ஒரு சிறிய எளிய பதாகையினை வைத்து விட்டு, அவசர வேலை நிமித்தமாக உடனே வீடு திரும்பி விட்டேன். உங்களையெல்லாம் சந்திக்க முடியாதது வருத்தம் தான். என்றாலும் நாம் அனைவரும் ஞாயிறு மாலை சந்திப்போம் என்ற ஆவல் எனக்கு ஆறுதல். தாங்களும் பார்த்திருப்பீர்கள். நீங்கள் திரும்புகின்ற திசையெல்லாம் நடிகர் திலகத்தின் திருவுருவம் தான் காட்சி யளிக்கும் என்பது போல் சகோதரி கிரிஜா அவர்கள் அட்டகாசமாக அலங்கரித்துள்ளார். அவற்றையெல்லாம் என்னுடைய கீழ்க்காணும் வலைப்பதிவில் காணலாம்.
http://ntfilmschennai2011.blogspot.com/
அங்கே வைக்கப் பட்டிருக்கும் நம் இணைய தள பதாகை
http://2.bp.blogspot.com/-b-bOo9ECOl...idisplay08.jpg
அன்புடன்
raghavendra
-
என்னுடைய கீழ்க்காணும் வலைப்பதிவில் காணலாம்.
http://ntfilmschennai2011.blogspot.com/
raghavendra
சென்னை சாந்தியில் 03.06.2011 முதல் தினசரி 4 காட்சிகளாக நடிகர் திலகத்தின் 167வது திரைப்படமான ராஜபார்ட் ரங்கதுரை வெளியிடப்பட்டது. ஞாயிறு 05.06.2011 அன்று மாலைக் காட்சி ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்புடன் கொண்டாடப்பட்டது. அன்றைய காட்சிகளின் சில படங்கள் உங்கள் பார்வைக்கு.
http://i872.photobucket.com/albums/a...rgarlanded.jpg
பாரதமே என்னருமை தாயகமே என்று இறுதி வரை வாழ்ந்து காட்டிய தேசிய திலகம், விடுதலை வீரர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் போது நாமும் தேசீய உணர்வுடன் அல்லவா பொங்கி எழுகிறோம்.
http://i872.photobucket.com/albums/a...fansgala10.jpg
அம்மம்மா தம்பி என்று நம்பி அவர் நம்மை வளர்த்தார். தாயென்றும் தந்தையென்றும் அவர் நம்மை வளர்த்தார். அவர் நமக்காக வாழ்கின்ற உள்ளம் அல்லவோ என்று ரசிகர்கள் உள்ளம் உருகி உணர்ச்சிப் பெருக்குடன் ஆர்ப்பரிக்கும் காட்சி
http://i872.photobucket.com/albums/a...fansgala08.jpg
மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் - உதய காலம் வரை உத்தமர் சேவைகளாம் என்று ரசிகர்கள் அரங்கினுள் ஆர்ப்பரிக்கும் காட்சிகள்
http://i872.photobucket.com/albums/a...fansgala03.jpg
http://i872.photobucket.com/albums/a...fansgala04.jpg
http://i872.photobucket.com/albums/a...arations01.jpg
அலங்காரம் கலையாத மலர் மாலை இங்கே - அணிவிக்க அழைக்கின்றோம் அண்ணனை - எங்கே என்று கூறாமல் கூறும் மாலைகள் தயாராக...
http://i872.photobucket.com/albums/a...nigarlands.jpg
-
மக்கள் வெள்ளம்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3705.jpg
சென்னை மாநகரில் 03.06.2011 அன்று ஒரே நாளில் நடிகர் திலகத்தின் 3 திரைப்படங்கள் திரையிடப் பட்டுள்ளன. முன்னர் மினர்வா என்றழைக்கப்பட்டு, தற்போது பாட்சா என்ற பெயரில் இயங்கும் திரையரங்கில் முற்பகல் 11.30 மணி காட்சியில் பச்சை விளக்கு திரைக்காவியமும், மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாசா திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக புதிய பறவை திரைக்காவியமும், சாந்தி திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியமும், வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளன. அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் நமது நன்றிகளும் வாழ்த்துக்களும். அதே போன்று மூன்று திரைக்காவியங்களையும் வெற்றி பெற வைத்து விநியோகஸ்தர்களுக்கு மென்மேலும் நடிகர் திலகத்தின் திரைப்படங்களைத் திரையிட ஆர்வம் உண்டாக்கும் வகையில் திரளெனத் திரண்டு வந்து ஆதரிக்குமாறு ரசிகர்களிடமும் பொது மக்களிடமும் நமது வேண்டுகோளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://3.bp.blogspot.com/-AU28FQfGJd...osterRRD01.jpg
http://1.bp.blogspot.com/-CK0tFzLaAg...00/fcbnr01.jpg
http://3.bp.blogspot.com/-G8KopVsmNS...0/BnrFront.jpg
Posted by sivajifan at 6:04 PM
-
-