-
வறுமைக்கு வைத்தியம் செய்த வள்ளலே "என்றென்றும் எங்கள் அன்புக்கு அடிமைப்பட்ட அண்ணனே ,கைசிவக்க கொடுத்த கா்ணன்நீா் தமிழரை காதல் வயப்படுத்திய கண்ணன் நீா்,உமது சாதனைகள் வரலற்றில் தங்கத்தில் பொறிக்கும் தகுதி உள்ளளைதான்,ஆனால் என்ன செய்வேன் அதைப்போற்றும் தமிழுக்கு தங்கம் பெறும் தகுதி இல்லையே,ஆகவேதான் முதல்வா் உமக்கு மடல்வரைய இரண்டாவது உலோகமான வெள்ளியைத் தோ்ந்தெடுத்தேன்,இப்பிழையை மன்னிப்பீரா?மன்னிப்பீா்,நானறிவேன் பலபேரை மன்னித்துப் பழகியவராயிற்றே நீா்? பட்டம்பெற்ற உம்மைபோற்றும் தகுதி எனக்கில்லை என்றாலும் உமது புகுந்தவீட்டு சாதனைகலை பீறந்தவீட்டான் என்ற வகையில் பாராட்டுகிறேன்.டாக்டா் பட்டம் பெற்றதற்காக எம்ஜிஆருக்கு நடத்தப்பட்ட பாரட்டு விழாவிலிருந்து, அன்புத் தம்பி கமல்ஹாசன்.
-
http://i1170.photobucket.com/albums/...ps16318147.jpg
உன் நாயோட திறமையை, நான் பார்க்கிறேன். என்னோட திறமையை நீங்க பாருங்க" என்று சொல்லிவிட்டு தலைவர் டைவ் அடிப்பார்
-
நெப்டியூன் ஸ்டூடியோ
அடையாறு பகுதியில் ராமகிருஷ்ண மடம் சாலையும், கிரீன்வேஸ் சாலையும் சந்திக்கும் வட்டத்திற்கு எதிரே மேற்குமுக பிரதான வாசலைக்கொண்டது 'நெப்டியூன் ஸ்டூடியோ.'
இது பேசும் பட ஆரம்ப காலத்தில் 1933-1934-களில் 'மீனாட்சி சினி டோன்' என்ற பெயரில் சக்தி வாய்ந்த மின் விளக்குச் சாதனங்கள் எதுவும் இன்றி, சூரிய ஒளியில் படம் பிடிக்கும் வகையில் மேற்கூரை இல்லாத அரங்கங்களை அமைத்து அதில் படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு ஸ்டூடியோ!. (பின்நாளில் சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோ). இங்குதான் காரைக்குடி மானகிரியைச் சேர்ந்த 'லேனா' என்று அழைக்கப்பட்ட லெட்சுமணன் செட்டியார், அழ.ராம அழகப்ப செட்டியாருடன் எம்.கே.தியாகராஜ பாகவதர் முதன் முதலாக அறிமுகமாகி நடித்து கே.சுப்பிரமணியம் இயக்கிய 'பவளக்கொடி' படம் தயாரானது. அதன் பிறகு 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' என்னும் பேனரில் பி.யு.சின்னப்பா- டி.ஆர்.ராஜகுமாரி நடித்த 'கிருஷ்ணபக்தி', 'வனசுந்தரி' மற்றும் எம்.ஜி.ஆர்.- பானுமதி நடித்து மகத்தான வெற்றி பெற்ற 'மதுரை வீரன்', 'ராஜாதேசிங்கு', சிவாஜிகணேசன்- பத்மினி நடித்த 'காவேரி', என்.டி.ராமாராவ்- பத்மினி நடித்த 'மருமகள்' போன்ற பல நல்ல படங்கள் எடுக்கப்பட்டது.
பின்நாட்களில் கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர்ஸ் அதிபர்களான எம்.சோமசுந்தரம், எஸ்.கே.மொய்தீன் ஆகியோர் இந்த மீனாட்சி சினிடோன் ஸ்டூடியோவை வாங்கி 'நெப்டியூன்' என்று பெயரிட்டு, முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்துப் பிரபலமாயினர்.
நான் வசனம் எழுதி ஏ.பீம்சிங் இயக்கி சிவாஜி, ஜெமினிகணேசன், சாவித்திரி நடித்த 'பாசமலர்', 'படித்தால் மட்டும் போதுமா', சிவாஜியின் 'புதிய பறவை', எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த 'பெற்றால்தான் பிள்ளையா', சிவாஜி நடித்த 'அன்னை இல்லம்' மற்றும் 'அன்பளிப்பு' ஆகிய எனது 6 படங்களும் இந்த 'நெப்டியூன்' ஸ்டூடியோவில்தான் உருவாயின. இது எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மட்டும் அல்ல எனக்கும் மிக ராசியான ஸ்டூடியோ.
ஏற்கனவே இந்த ஸ்டூடியோவில் சில பங்குகளைப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். பிறகு முழு உரிமையும் பெற்று அதிபரானார். அதற்கு தம் அருமை அன்னையார் சத்தியபாமாவின் நினைவாக 'சத்தியா ஸ்டூடியோ' என்று பெயரிட்டு பல படங்களின் படப்பிடிப்பை இங்கு நடத்தி வந்தார். அவருடைய மறைவிற்குப் பின்னர், இப்பொழுது இங்கு 'எம்.ஜி.ஆர். ஜானகி' மகளிர் கல்லூரி இயங்குகிறது.
-
-
-
இனிய நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கு வணக்கம்.
3000 பதிவுகள் முடித்து தொடரும் தங்களின் மேலான பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் !!
பாராட்டுக்கள்.!!! தாமதமாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு பொறுத்தருளவும் .
கணிப்பொறி பழுது மற்றும் இணையதள இணைப்பு துண்டிப்பு ஆகியன காரணங்கள்.
தங்களின் வேண்டுகோளின்படி நீதிபதி திரு.கற்பக விநாயகம் அவர்களை பற்றிய
நூலின் முகப்பு தோற்றத்தை பதிவு செய்கிறேன்.
விழா பற்றிய புகைப்படங்கள்/செய்திகள் /நூலில் உள்ள புரட்சி தலைவர் பற்றிய
செய்திகள் விரைவில் நண்பர்களுக்காக பதிவிட உள்ளேன்.
http://i59.tinypic.com/mwqicw.jpg
ஆர். லோகநாதன்.
-
-
மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழவேண்டும்'' - 30.11.1974
http://i58.tinypic.com/v5zfba.jpg
7.11.1974 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' வேலூர் தாஜ் அரங்கில் 24 வது நாளை கடந்த நேரத்தில்
சிரித்து வாழ வேண்டும் - வேலூர் .கிரவுன் அரங்கில் வெளியானது . 30.11.1974 அன்று காலை 6 மணிக்கு வேலூர் நகர தலைமை எம்ஜிஆர் மன்றத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது . திரை அரங்கமே திருவிழாவாக காட்சி அளித்தது .கிரவுன் அரங்கில் மெயின் அரங்காக நீண்ட வருடங்களுக்கு பிறகு மக்கள் திலகத்தின் படம் வந்தது குறிப்பிடத்தக்கது . இந்த அரங்கில் முதல் வாரம் நடைபெற்ற மொத்தம் 33 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை படைத்தது .
சிறப்பு காட்சி துவங்கியதும் ரசிகர்களின் ஆராவராம்- டைட்டில் மற்றும் .மக்கள் திலகம் அறிமுக காட்சியில் கைதட்டல்கள் - விசில் தூள் பறந்தது .அப்துல் ரஹமான் அறிமுக பாடல் காட்சி ரசிகர்களை மேலும் பரவசமாக்கியது .சூதாட்ட விடுதியில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சி புதுமையாக இருந்தது .
நீ என்னை விட்டு போகாதே பாடல் காட்சியில் மக்கள் திலகம் போலீஸ் அதிகாரி மிடுக்குடன் நடந்து கொள்ளும் காட்சியிலும் , காஞ்சனா மக்கள் திலகத்தை தொடும்போது அவரை தட்டி விடும் காட்சியில் அவரது ஸ்டைல் அபாரம் .
லதா கனவு பாடலில் மக்கள் திலகத்தின் பல வண்ண உடைகள் - கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடல் - ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை .ஒரே கைதட்டல் மயமாக இருந்தது .
மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி மிகவும் புதுமையாக இருந்தது . சுவரில் மோதி ஜஸ்டினை புரட்டி எடுத்த இடத்தில ரசிகர்களின் ஆராவாரம் காதை பிளந்தது . மக்கள் திலகம் - வி.எஸ். ராகவன் தொலைபேசி உரையாடல் மற்றும் கல்லறையில் இருவரும் நேரில் உரையாடும் காட்சியிலும் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் ரசித்தார்கள் .
உலகமெனும் நாடகமேடையில் ..பாடல்காட்சி துவங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை பரப்பரப்பான காட்சிகள் - சண்டை காட்சிகள் - ரீரெக்கார்டிங் எல்லாமே ரசிகர்களை கட்டி போட வைத்தது . ஒரு பக்கம் உரிமைக்குரல் படத்தின் இமாலய வெற்றி - களிப்பில் இருந்த ரசிகர்களுக்கு சிரித்து வாழ வேண்டும் மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்தது .
1974ல் வேலூர் லஷ்மியில் நேற்று இன்று நாளை - வசூலில் சாதனை படைத்தது . வேலூர் தாஜில் உரிமைக்குரல் பிரமாண்ட வெற்றி பெற்றது . சிரித்து வாழ வேண்டும் வேலூர் -கிரவுனில் 7 வாரங்கள் ஓடி அந்த அரங்கில் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது
.
-
-