-
மாட்டுக்கார வேலன் (1970) எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம். செல்லி ஜெயலலிதா, லட்சுமி ஜோடியாக நடித்திருந்தார்கள். ப.நீலகண்டன் இயக்கத்தில் ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்தது. ஏ.எல். நாராயணன் வசனம் எழுதியிருந்தார். முதலில் இந்தப் படத்தை டி.ஆர். ராமண்ணா இயக்குவதாக இருந்தது பிறகு அவருக்கு அதிக வேலைகள் இருந்ததால், ப.நீலகண்டன் படத்தை இயக்கினார். இந்த டைரக்டர் படத்தை இயக்குவார் என்று சொல்லிவிட்டு வேறொரு டைரக்டரை வைத்துப் படத்தை எடுக்கும் போது படம் சரியாக வருமா, வெற்றி பெறுமா? என்று விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்கள் சந்தேகத்தை எழுப்பியதால் படத்திற்கு சிக்கல் வந்தது. ஆனால் எல்லா சிக்கலையும் மீறி இந்தப் படத்தை சிறப்பாக தயாரித்தார் தயாரிப்பாளர் கனகசபை. மக்களும் ஏற்றுக் கொண்டு 177 நாட்கள் ஒட வைத்தார்கள். வசூலிலும் சாதனைப் படைத்தது.
-
ரிக்ஷாக்காரன் (1971) எம்.ஜி.ஆர். ரிக்ஷா தொழிலாளியாக நடித்த படம் ‘ரிக்ஷாக்காரன்' ஆர். எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. எம்.கிருஷ்ணன் படத்தை இயக்கியிருந்தார். ஆர்.கே.சண்முகம் வசனத்தை எழுதியிருந்தார். புதுமுக நடிகையான மஞ்சுளா எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இந்தப் படம் எடுக்கும்போது சிலர் ஒடாது, வெற்றி பெறாது என்று ஆரூடம் சொன்னார்கள். ஆனால் படம் வெளிவந்து 167 நாட்கள் ஓடி வசூலில் மாபெரும் சாதனைப் புரிந்தது. ‘ரிக்ஷாக்காரன்' எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் விருதினைக் கொடுத்து கௌரவித்தது இந்திய அரசு. ரிக்ஷாவில் இருந்துக் கொண்டே எம்.ஜி.ஆர் சிலம்பு சண்டைப் பேட்டது அனைவராலும் பேசப்பட்டது, பாராட்டப்பட்டது.
-
உலகம் சுற்றும் வாலிபன் (1973) எம்.ஜி.ஆர். இரட்டை வேடமேற்று நடித்து தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய படம். ‘உலகம் சுற்றும் வாலிபன்'. லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை ரூங்ரேட்டா கதாநாயகிகளாக நடித்திருந்தார்கள். கே.சொர்ணம் வசனம் எழுதினார். இந்தப்படம் வெளிவருவதற்கு பல தடைகள் ஏற்பட்டன. அதை எல்லாம் முறியடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்றது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அதிக வசூலை அள்ளிக் குவித்து சாதனைப் புரிந்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்' அன்றைய காலகட்டத்தில் 3 கோடிக்கு ‘இன்றைய கால கட்டத்தில் (300 கோடி) மேல் வசூலை தந்து அரசாங்கத்திற்கு 1.25 கோடிக்கு வரியைக் கட்ட வைத்த முதல் தென்னகப் படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்'. (எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி இன்னும் சில கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகும்)
-
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா செய்திகளையும் , விழா படங்களையும் பார்க்கும் போது மலைப்பாகவும் வியப்பாகவும் உள்ளது . சில கருத்து குருடர்களின் அடி மனத்தில் கொந்தளித்து கொண்டிருக்கும் தீராத வெறுப்பு நோய் என்றுமே தீராது என்பதை அறிய முடிகிறது . நடக்காத , நடக்க முடியாத ஒன்றை நினைத்து 42 ஆண்டுகளாக ஏங்கி தவித்து என்ன பயன் ?
தான் ஏற்று கொண்ட அபிமான நடிகரின் சினிமா , அரசியல் வெற்றிக்கு உணமையாக உழைக்காதவர்கள் இன மொழி பேதத்தை ஒன்றை மட்டும் தோல்விக்கு காரணம் காட்டும் கோழைகளின் வீரம் கண்டு மெய் சிலிர்க்கிறது .
நாங்கள் உண்மையாக , விசுவாசியாக உழைத்தோம் . எங்கள் தலைவர் வாழ்ந்த காலத்தில் தொட்டதெல்லாம் வெற்றி . 1987க்கு பிறகு 30 ஆண்டுகளாக எங்கள் வெற்றி தொடர்கிறது .
நூற்றாண்டு விழா நாயகனை பாராட்ட மனமில்லை . உயர்குணமில்லை . ஆனாலும் நடிகர்திலகத்தின் வாரிசு பிரபு மக்கள் திலகத்தை புகழ்ந்து பாராட்டி பேசியதை பாராட்டப்பட வேண்டும் . அந்த நாகரீகம் இல்லாதவர்களை பற்றி என்ன சொல்வது ?
-
-
இன்று (19/01/2017) ராஜ் டிவியில் பிற்பகல் 1.30 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடது பெண் " ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/30tt4jm.jpg
-
-
-
-