வெற்றுத் தலையொடு நீச்சல் அடித்தேனா!
கற்றார் பொறுத்தல் கடன்.
Printable View
கண்ணுக்குள் காதலி சென்றமர்தல் கற்பனையே
பெண்ணுக்குப் பேதலிப்பு ஏற்படுத்த -- மண்ணுலகில்
ஆடவர்செய் தந்திரம் அஃதென்றே நான்சொல்வேன்
ஓடுவளோ பெண்ணவர்கள் பின்.
கூடத்தில் தங்கிக் குளத்தில் குளித்துவிட்டு
மாடத்தில் நின்று மகிழாமல்----வீடகன்று
போராட்டம் ஏனோ? புகைவீச்சு துன்புறுத்தத்
தாலாட்டும் ஆழிபுக் கார்.
to scan
அரசினர் தந்தாலே ஆகாதோ பட்டம்!
உறுகுணம் உள்ளார்பின் யார்?
http://leftwrite.wordpress.com/2009/...-padma-awards/
Quite an interesting argument raised in that website...
தலைமைப் பொறுப்பில் தலைவலிதான் மிச்சம்
நிலைமை குளிராய் நெருப்பாய்க் ---குலைந்துவரும்
எத்தொடர்பும் இலலா எதற்கும் சுமைதாங்கி
கத்துகிற பேர்க்கும் இலக்கு.
மேற்கண்ட பாடலில் மிஞ்சு தனிச்சொல்லில்
பார்க்கும் "குலைந்துவரும்" என்பதனைச்-- சேர்க்காமல்,
பாடு "குலைவுறவே" என்று ; பயின்றிடவே
கூடும் சுவைதேன் குழைந்து.
வாரநாள் தன்னில் வந்ததீ பாவளிப்பெண்
கூர்ந்துநான் நோக்கக் குசும்பாகப் -- பேர்ந்தோடிக்
கண்ணிற் படாமல் கதவிடுக்கில் போய்மறைய
இன்னுமினி என்றென்றேன் நான்.
குசும்பு = குறும்பு.
"_________________________________________________ ____________
Don't try to figure out what other people want to hear from you; figure out what you have to say. It's the one and only thing you have to offer.
BARBARA KINGSOLVER "
தீபாவளிக்கு நண்பர் சின்னக்கண்ணன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அவருக்கு இந்த வெண்பா"
பெரியகண்ணன் பேர்புகழ்தீ பாவளி நாளில்
சிறியகண்ணன் சென்றவிடம் எங்கோ-- நறியதேன்
ஒத்த தமிழ்ப்பாடல் ஒன்றிவண் தந்தவரும்
மெத்தப் புகழ்ச்சிபெறல் விட்டு.
இருபொருள்:
தந்தவரும் -- தந்து+அவரும், தந்தவர் +உம்.
வெண்பா எழுதுவது எப்படி என்ற நூல்களில் சிறந்தவற்றை பகிரவும். வாசித்து, வெண்பா பழக ஆசை. நடந்து வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிக் கொள்கிறேன் . நன்றி