http://www.youtube.com/watch?v=K1SgziR_Zxs
Printable View
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக
http://www.youtube.com/watch?v=TBSWiFyGeVQ
தேசிய அளவில் 3-வது பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது:
முதல்வர் ஜெயலலிதா
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்....
பலமில்லாத மாடு , உழ முடியாத கலப்பை ,
அதிகாரமில்லாத பதவி , இவைகளை
நாங்கள் விரும்புவதேயில்லை !
http://i1170.photobucket.com/albums/...ps1cb433ad.jpg
புரட்சித் தலைவர் அவர்கள் அரசியலில் பெற்ற வெற்றியினை தொடர்ந்து, திரைக்கலைஞர்கள் பலருக்கும் "அரசியல் பிரவேசம்" எண்ணம் உதிர்த்தது. அவர் வழியில், ஆந்திர மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை தவிர வேறு மாற்றுக் கட்சி இல்லாத அப்போதைய சூழ்நிலையில், தனிக்கட்சி ஆரம்பித்து என்.டி. ராமாராவ் பெரும் வெற்றி கண்டார். ஆனால், இந்த வெற்றியை அவரால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
மக்கள் தலைவராம் நமது பொன்மனசெம்மலின் மறைவுக்கு பிறகு, அவர் கண்ட இயக்கமும், சின்னமும் இல்லாத காரணத்தால், தமிழகத்தில் தி. மு.க. வெற்றி பெற முடிந்தது. திரைக்கலைஞர்களாய் திகழ்ந்த ஜானகி அம்மையாரும், செல்வி. ஜெயலலிதாவும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தோல்வியைத்தான் சந்தித்தனர்.
தனிக்கட்சி கண்ட, பல வெற்றிப் படங்களிலும், புரணாப் படங்களிலும் நடித்த மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களும் தோல்வியைத்தான் சந்தித்தார். சொந்த தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியாமல் போனது.
நடிகர் திரு. பாக்கியராஜ் அவர்கள் புதுக்கட்சி துவங்கி பின்னர் அதனை கலைத்தும் விட்டார்.
தமிழ் திரையுலகில், வெற்றிப்படங்கள் பல தந்த, அஷ்டாவதானி என்றழைக்கப்பட்ட நடிகர் திரு.டி. ராஜேந்தர் தனிக்கட்சி தொடங்கி துவண்டு போனது தான் மிச்சம்.
வில்லன் நடிகர் மன்சூர் அலி கானும் அரசியலில் நுழைந்து ஒரு கலகலப்பான நகைச்சுவையான சூழ் நிலையைத் தான் உருவாக்க முடிந்தது.
தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட நடிகர் சிரஞ்சீவி யும் தனிக்கட்சி ஆரம்பித்து பின் சோபிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சியில் சங்கமித்து விட்டார்.
நடிகர்கள் கார்த்திக்கும், சரத்குமரும் மத ரீதியான கட்சி ஆரம்பித்து பிற கட்சியினை சார்ந்து தான் இருக்கின்றனர்.
இவர்களை தொடர்ந்து, பிரபலமான கட்சிகளை சார்ந்துதான் திரைக்கலைஞர்கள் பலரும் இருந்தனர்.
1996ல் அப்போது நிலவிய சூழ்நிலையில், சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களும் தி. மு. க. மற்றும் த மா. க. ஆகிய கட்சிகளுக்காக "வாய்ஸ்" கொடுத்தார். அந்த சமயத்தில் அதற்கு பலன் இருந்தாலும், தொடர்ந்து வந்த தேர்தல்களில் அவர் "வாய்ஸ்" கொடுத்ததற்கு மக்கள் பெரிய அளவில் REACTION செய்யவில்லை.
தமிழக மற்றும் அந்திரா மாநிலங்களில், திரைக்கலைஞர்களின் அரசியல் ஈடுபாட்டின் தார்க்கம், மெதுவாக வட மாநில திரைக்கலைஞர்களையும் தொற்றிக்கொண்டது. வட மாநில சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட, இந்திப் பட உலகில் வெற்றிப்பட நாயகன் என்று கருதப்பட்ட, ஏராளமான ரசிகர்களையும் பெற்றிருந்த "ராஜேஷ் கன்னா" தனிக்கட்சி தோற்றுவிக்க தைரியம் இல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துதான் பதவியை பெற முடிந்தது. இந்த "அரசியல் ஈடுபாடு " தார்க்கம், முகம்மது அசாருதீன், நவ்ஜோத் சிங்க் சித்து போன்ற விளையாட்டு கலைஞர்களையும் விட்டு வைக்க வில்லை. .
மற்றொரு இந்திப்பட பிரபல நடிகர் வினோத் கன்னா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தே பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார். நடிகர் சத்ருகன் சின்ஹாவும் நிலையும் அவ்வாறே !
இந்திப்பட உலகில் இரண்டாம் கட்ட பிரபல நடிகராய் திகழ்ந்த ராஜ்பாப்பரும் அவ்வாறே. இவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்திருந்தார். இன்னொரு இந்திப்பட நடிகர் சுனில்தத்தும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றார்.
இந்தியத் திரைப்பட உலகின் கனவுக்கன்னி என்று வர்ணிக்கப்பட்ட நடிகை ஹேமமாலினியின் அரசியல் வாழ்க்கையும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததன் மூலம் துவங்கியதே !
மக்களின் முன் எவ்வளவு தான் பிரபலமாக இருந்தாலும், அவர்கள் அரசியலில் சோபிக்க முடியாது என்பதற்கு கீழ்கண்டவர்களின் தோல்வி ஒரு சிறந்த உதாரணம் :
1. நடிகர் ராஜ்பாப்பர்
2. நடிகை நக்மா
3. நடிகை விஜயசாந்தி
4. நடிகை ஜெயசுதா
5. நடிகை குத்து ரம்யா
6. நடிகை ராக்கி சாவந்த்
7. முகம்மது அசாருதீன்
தமிழக மக்களிடையே, மறைந்து 27 வருடங்கள் ஆகியும் புரட்சி தலைவருக்கு நிலவி வரும் செல்வாக்கினை மட்டுமே நம்பி, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் துணிந்து 40 இடங்களில் தனித்து நின்று, 37 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம், மக்கள் திலகத்தின் மகத்தான சக்தியை நாட்டுக்கு நிரூபித்துள்ளார்.
மக்கள் திலகம் காலத்து அரசியலில், தமிழகத்தில் அவரது ஆதரவு அலையினால் மட்டுமே அவர் மகத்தான வெற்றியை தொடர்ந்து பெற்று வந்தார்.
ஆனால், தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், மோடி அலை நாடு முழவதும் வீசியிருந்தாலும், தமிழகத்தில், புரட்சித் தலைவரின் VOTE BANK உடன் கூடிய எழுச்சி அலையுடன், காங்கிரஸ் மற்றும் அதன் ஆட்சியில் பங்கு பெற்ற தி. மு. க. வின் எதிர்ப்பு அலையும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய சுனாமியாக உருவெடுத்தது தான் நிதர்சனமான உண்மை. மேலும், தமிழக முதல்வரின் கடந்த 3 வருட ஆட்சிக் காலத்தில் மக்களுக்கும் பெரிய அளவில் அதிருப்தி இல்லை.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில், நடைபெற்ற ஊழல்களையும், சோனியா காந்தி, தனது தனிப்பட்ட குரோத மனப்பான்மையில், இலங்கை தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்க்ஷே அரசுக்கு ஆதரவாக இருந்த நிலையினையும், அதற்கு துணை போன தி. மு. க. வினையும்., ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் துர்ப்பாக்கிய நிலையினை கண்டும் காணாமல் இருந்த மன்மோகன் சிங் அரசின் மெத்தன போக்கையும், மக்கள் மறக்கவும், மன்னிக்கவும் தயாராக இல்லை.
எது எப்படியோ புரட்சித் தலைவர் காலத்து அரசியல் சூழ்நிலை தற்போது இல்லையென்றாலும், அவரையும், அவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா தி. மு. க. வினையும், இரட்டை இலை சின்னத்தையும் தமிழக மக்கள் மறக்க வில்லை என்பதனேயே சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளன..
http://i61.tinypic.com/rhvazl.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
.
THANK YOU M/s. VINOTH, RAVICHANDRAN and LOGANATHAN, JAI SHANKAR & YUKESH BABU for your VALUABLE POSTINGS on the splendid victory by AIADMK started by our beloved God M.G.R.
http://i57.tinypic.com/b9fynl.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i61.tinypic.com/10s52qv.jpg
VERY NICE POSTING. THANKS SELVAKUMAR SIR
FROM TO DAY
MADURAI - TIRUPPARANGUNDRAM - LAKSHMI
MAKKAL THILAGAM MGR IN ''NEERUM NERUPPUM ''
http://i61.tinypic.com/15eagav.jpg
Yukesh Babu Sir,
மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், BJP தேர்தல் வெற்றி என்பது ஒரு இயக்கத்தின் செயல்பாட்டை அங்கீகரிப்பது ஆகாது..
அப்படியெனில் இன்றைக்கு தோற்று உள்ள கட்சிகள் Congress [I] கடந்த காலத்தில குற்றசாட்டுகளுக்கு ஆளாகி அதன் பின் வென்றவையே... அப்படியெனில் அவைகளின் கடந்த கால செயல்கள் நியாயம் ஆகிவிட்டது எனப் பொருள் ஆகுமா..?.
Nevertheless, Tamil Nadu is Saved. Please have given [AIADMK] one more opportunity to serve them from the Centre which should be PROPERLY utilised. Thanks to people proving it is MGR wave & LADY wave only in Tamil Nadu.
http://www.youtube.com/watch?v=_t5e7...ature=youtu.be
Whoever AS A WHOLE who does not think so are showing their grudge towards AIADMK and people's mandate. So we need to ignore that as usual.
மக்கள் திலகத்துடன் பத்மினி நடித்த படங்கள் 10. 1. மோகினி படத்தில் நடனம் மட்டும் ஆடுவார்.மருதநாட்டு இளவரசி படத்திலும் நடனக் காட்சியில் மட்டும் தோன்றுவார்.1956இல் வெளியான மதுரை வீரன் படத்தில் தான் முதல் முதலாக ஜோடி சேர்ந்தார். 1957இல் ராஜராஜன் .1960இல் ராஜா தேசிங்கு.1960 ம் ஆண்டு மன்னாதி மன்னன் ,1961இல் அரசிளங்குமரி படத்தில் தங்கையாக நடித்தார்.1962இல் ராணி சம்யுக்தா.1962ம் ஆண்டு விக்ரமாதித்தன் திரைப்படம்.ஏறத்தாழ 9 வருடங்கள் கழித்து மீண்டும் ரிக்க்ஷாகாரன் படத்தில் மஞ்சுளாவின் பாதுகாவலராகவும் நடித்தார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ,சக்கரபாணி,பி.எஸ்.வீரப்பா ,காசிலிங்கம் மு.கருணாநிதி ஆகிய ஐவரும் இணைந்து1953இல் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் மேகலா பிக்சர்ஸ்.மேகலா பிக்சர்ஸ் தயாரித்த முதல் படம் மக்கள் திலகம் நடித்த நாம் திரைப்படம்.மக்கள் திலகமும் சக்கரபாணியும் நாம் படம் வெளியானவுடன் மேகலா பிக்சர்சை விட்டு விலகினார்கள்.தொடர்ந்து சில வருடங்களில் பி.எஸ்.வீரப்பாவும் காசிலிங்கமும்விலகிவிட மேகலா பிக்சர்ஸ் மு.கருணாநிதியின் தயாரிப்பு நிறுவனமானது.இந்த நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் 1970ம் ஆண்டு மக்கள் திலகமும், கலைச்செல்வி ஜெயலலிதாவும் இணைந்து நடித்த எங்கள் தங்கம் திரைப்படம்.சுலைமான் சேட் என்பவரிடம் கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு அடமானத்தில் இருந்த போது இவர்கள் இருவரும் இலவசமாக நடித்துக் கொடுத்து எங்கள் தங்கம் படத்தின் மூலம் அடமானத்தில் இருந்த வீட்டை மீட்டுக் கொடுத்தனர்
கவிஞர் வாலி அவர்கள் மக்கள் திலகத்துக்கு எழுதிய முதல் பாடல் சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் 1961இல் வெளியான நல்லவன் வாழ்வான் படத்தில் இடம் பெற்ற பாடல் இது.நல்லவன் வாழ்வான் படத்தில் தொடங்கி மீனவ நண்பன் வரை 51படங்களில் ஏறத்தாழ 185 பாடல்கள் மக்கள் திலகத்துக்காக வாலி எழுதியுள்ளார்.
courtesy net
Election victory article.
http://mgrroop.blogspot.in/2014/05/guardian-angel.html
THANKS ROOP SIR
http://i58.tinypic.com/246rmex.jpg
கோட்டைகட்டி கொண்டாட்டம்
போட்ட கூட்டங்கள் என்னானது ?
சில ஓட்டை வந்து தண்ணீரில்
மூழ்கும் ஓடங்கள் போலானது!
Meenava Nanban.
போடும் பொய் திரையை கிழித்துவிடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை.
நினைத்ததை முடிப்பவன்
இருந்தாலும் மறைந்தாலும்
பேர்சொல்ல வேண்டும்.
இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்.
--- மறைந்தும் எங்கள் தெய்வம் சரித்திரம் படைக்கிறது. வாழ்க எம்ஜிஆர் புகழ்.
MGR Devotee Muthain in Facebook.
சென்னை, மே. 19–
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வரலாற்று சாதனை படைத்தது. 39 தொகுதியில் தனித்து போட்டியிட்ட அந்த கட்சி 37 இடங்களில் அமோக வெற்றி பெற்று புதிய சகாப்தம் படைத்தது.
39 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு 1 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 733 ஓட்டுகள் கிடைத்துள்ளன.இது பதிவான வாக்குகளில் 44.3 சதவீதமாகும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலை விட தற்போது அ.தி.மு.க.வுக்கு 21.3 சதவீத ஓட்டு அதிகரித்து உள்ளது. 2009 தேர்தலில் அந்த கட்சிக்கு 23 சதவீதம் ஓட்டு கிடைந்திருந்தது.
34 தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அந்த கட்சிக்கு 92 லட்சத்து 56 ஆயிரத்து 923 வாக்குகள் கிடைத்தன. ஓட்டு சதவீதம் 23.4 ஆகும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு 25.09 சதவீத ஓட்டுகள் கிடைத்திருந்தன.
கடந்த தேர்தலில் இரட்டை இலக்க எண்களில் ஓட்டு சதவீதத்தை பெற்ற கட்சிகள் தற்போது ஒற்றை இலக்குக்கு மாறியுள்ளன.
குறிப்பாக கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 10.11 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் தற்போது பா.ஜனதா கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி 5.1 சதவீத வாக்குகள் என்ற ஒற்றை இலக்கத்துக்கு மாறியது. அந்த கட்சிக்கு 20 லட்சத்து 19 ஆயிரத்து 796 ஓட்டுகள் கிடைத்தது.
கடந்த தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 15.03 சதவீத வாக்கை பெற்று இருந்தது. தற்போது அந்த கட்சி தனித்து போட்டியிட்டு 4.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அந்த கட்சிக்கு 17 லட்சத்து 8 ஆயிரத்து 433 ஓட்டுகள் கிடைத்தது.
கடந்த தேர்தலில் 5.71 சதவீத வாக்குகளை பெற்ற பா.ம.க. தற்போது 4.5 சதவீதமே பெற்றுள்ளது. அந்த கட்சி 8 தொகுதிகளில் ஒன்றில் வெற்றி பெற்றது.
பாரதீய ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளது. 9 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி ஒரு இடத்தை பெற்றுள்ளது. 21லட்சத்து 44 ஆயிரத்து 558 வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்தன. ஓட்டு சதவீதம் 5.4 ஆகும். கடந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 2.3 சதவீதமே கிடைத்தது.
ம.தி.மு.க. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டது. அந்த கட்சிக்கு 3.6 சதவீத வாக்கு கிடைத்தன.
கம்யூனிஸ்டு கட்சிகளின் வாக்கு சதவீதமும் கணிசமாக குறைந்துள்ளது.
இப்போது வெளிவரும் படங்களில் பெரும்பாலான காட்சிகளை டாஸ்மாக்கை மையமாக வைத்துதான் எடுக்கிறார்கள். மது அருந்திக் கொண்டேதான் வசனம் பேசுகிறார்கள். மது அருந்திக் கொண்டுதான் பாட்டு பாடுகிறார்கள். இது படம் பார்க்கிற இளைஞர்களின் மனதை பாதிக்கும்.
இந்த விஷயத்தில், இப்போதுள்ள நடிகர்கள் எம்ஜிஆரை பின்பற்ற வேண்டும். அவர் ஒரு படத்தில் கூட புகை பிடிக்க மாட்டார், மது அருந்த மாட்டார். அதனால் அவரைப்போலவே இன்றைய நடிகர்களுககும் சமுதாயத்தின் மீது அக்கறையும், பொறுப்பும் இருக்க வேண்டும். அதேபோல் டைரக்டர்களும் சமுதாய நலன் கருதி கதை மற்றும் காட்சிகளை அமைக்க வேண்டும்"
- ' யான் ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில்
கவிஞர் தாமரை .
சென்னை , தி.நகர் , ஆர்கட் முதலி தெருவில் உள்ள " Dr MGR நினைவு இல்லம் " 1990 ஆம் ஆண்டு மே மாதம் 17 அன்று மரியாதைக்குரிய திருமதி ஜானகி எம் .ஜி .ஆர் அவர்களால் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது.
Booking status for evening show.
http://i125.photobucket.com/albums/p...ps678a5e7f.jpg
AIADMK FOUNDER & TELUGU DESAM FOUNDER WALKING WITH PROUDLY KNOWING THE TAMIL NADU AND SEEMANDHRA ELECTION RESULTS
http://i60.tinypic.com/2vczygo.jpg
BANGALORE MAKKAL THILAGAM MGR FANS AND CHENNAI MAKKAL THILAGAM MGR FANS.
http://i58.tinypic.com/6qxpwz.jpg
TONIGHT -7PM
MAKKAL THILAGAM MGR IN PALLANDU VAZHGA @ SUN LIFE
http://i45.tinypic.com/10h688o.jpg
MEENDUM VARUMA ANTHA INIYA NAATGAL
http://i62.tinypic.com/2qlx24p.jpg
அன்புள்ள செல்வகுமார் சார்
முதற்க்கண் இப்போது MGR அவர்களின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் ! காரணம் இந்த வெற்றி அவருக்கு மட்டுமே சொந்தமான வெற்றி. அவரின் ஆன்மாவிற்கு தெரியும் பிரதம மந்திரி என்பது சாதாரண பதவி அல்ல என்று. ஆகையால் தான் தமிழகத்தில் பேரு வெற்றி பெறச்செய்து மத்தியில் யார் உதவியும் குறிப்பாக இப்போதைய தமிழக அரசியல்வாதிகள் உதவிகள் இல்லாமல் ஒரு தனி ஆட்சி மத்தியில் இருக்கும்படி பார்த்துகொண்டார்.
தாங்கள் குறிப்பிட்ட மற்ற நடிகர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. காரணம் அவர்களுக்கு எள்ளளவும் நேர்மையோ, கொள்கையோ இல்லை. ஆனால் நடிகர் திலகம் அவர்கள் அவர்களை போல அல்ல ! தாங்கள் நடிகர் திலகம் பற்றி நன்கு அறிந்தவர் என்று நினைகிறேன், நம்புகிறேன்.
1) திரு MGR அவர்கள் கட்சி ஆரம்பித்த சூழ்நிலை வேறு. நடிகர் திலகம் கட்சி ஆரம்பித்த சூழ்நிலை வேறு. திரு. MGR அவர்கள் சந்தித்ததைபோல ஒரு சூழ்நிலை சிவாஜி அவர்கள் சந்தித்திருந்தால் இது போல ஒரு பதிவை நாங்களும் போட்டிருப்போம் இன்று.
2) திரு.MGR அவர்கள் திமுக வில் மெம்பெர் மற்றும் 19 வருடம் அந்த கட்சியில் பொறுப்புள்ள பதவியில் இருந்தவர். மிகவும் பலமான ஒரு அஸ்திவாரம் கட்சி அளவில் 19 வருடம் பெற்றவர்.
ஆனால் நடிகர் திலகம் அவர்கள் பிரசாரங்களுக்கு மட்டுமே அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு நடிகர். எந்த பதவியோ பொறுப்போ எந்த கட்சியிலும் வகிக்காதவர். காமராஜர் அனுதாபி, காங்கிரஸ் அனுதாபி அவ்வளவுதான்.
தி மு க வில் சிவாஜியின் வளர்ச்சி கண்டு ஜீரணம் செய்து கொள்ள முடியாத திமுக வின் முக மற்றும் கோ. செய்த சதியால் அவரே வெளியில்வந்தார் ....அந்த நேரத்தில் திமுக விற்கு முற்றிலும் பரிச்சயம் அல்லாத காங்கிரஸ் அனுதாபியாக இருந்த மக்கள் திலகம் அவர்களை தி முக, சிவாஜிக்கு எதிராக கொண்டுவந்ததை நாடு நன்கு அறியும். MGR அவர்களும் 19 வருடம் திமுக வில் பொறுப்புள்ள பதவி வகித்தவர். 1970 களில் முக வுக்கும் MGR உக்கும் பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியபோது, தொடங்கப்பட்ட கட்சிதான் அதிமுக. இது வரலாறு !
3) திரு சிவாஜி கணேசன் அவர்கள் தோற்றதற்கு காரணம் திரு MGR அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக அப்போதைய, மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திரு MGR அவர்களின் மனைவியார் திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் கட்சியுடன், கூட்டணி வைத்ததால்தான் !
தோற்றது சிவாஜி அல்ல ...திரு MGR அவர்களுடைய legal heir தான் ! சந்தர்பவாத அரசியல் சிவாஜி கணேசன் அப்போது செய்திருந்தால், இப்போதைய கதையே வேறு !
4) மக்கள் செல்வாக்கு இல்லாமல் அவர் தோற்கவில்லை. காமராஜர் கூட தோற்றார் ..அதற்காக அவருக்கு செல்வாக்கில்லை என்றாகிவிடாது அல்லவா ? நம் தமிழ்மக்கள் குணம் நாம் அனைவரும் அறிந்ததே...! இந்த ஆட்டு மந்தைகள் அடுத்த தேர்தலில் திமுக வை ஜெயிக்கவைப்பார்கள் அதை நாம் பார்க்கதான் போகிறோம்.
RKS
http://i60.tinypic.com/10igfx3.jpg
இன்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்த கார்ட்டூன்கள்
---------------------------------------------
http://i62.tinypic.com/majfac.jpg