-
வரும் 20.09.2019 வெள்ளிக்கிழமை முதல் தினசரி.4.காட்சிகளாக மதுரை சென்ட்ரல் சினிமா DTS., பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் இருவேடத்தில் தூள்கிளப்பிய "நினைத்ததை முடிப்பவன் " வெற்றிப்பவனி வருகின்றார் ...... மகிழ்ச்சியில் ரசிகர்கள் நன்றி... மதுரை.எஸ் குமார்............ Thanks.........
-
#கள்வர்களுக்கு #அருளிய #நன்னெஞ்சே
1964 ஆம் ஆண்டு வாத்தியார், ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க காரில் மதுரைக்குச் சென்று கொண்டிருக்கிறார்...உடன் நடிகர் திருப்பதிசாமி, புத்தூர் நடராசன், கட்டரத்தினம், எம்ஜிஆர் அண்ணன் மகன் சுரேந்திரன் மற்றும் டிரைவர் சாகுல் அமீது...இரவு நேரம்...கார் விரைவாகச் சென்று கொண்டிருக்கையில், ஒரு சாலையின் நடுவே ஒரு கூஜா...கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் பார்க்கையில் அது 'வெள்ளிக்கூஜா' என்று தெரிந்தது...
பாவம் ...! நமக்கு முன்னர் வந்த யாரோ ஒருவர் இந்த கூஜாவைத் தவறவிட்டிருக்கவேண்டும், போய் அதை எடுத்து வா...! அதை வரும்வழியிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிடலாம்...!!! என டிரைவரிடம் கூறித் தானும் இறங்குகிறார்...நல்ல கும்மிருட்டு ஒருவர் முகம் மற்றொருவருக்குத் தெரியாத அளவிற்கு...
அப்போது திடீரென 10 பேர் கம்புகளுடன் சூழ்ந்துகொண்டு, 'மரியாதையா கார்ல உள்ள பொருட்களை எடுத்து எங்ககிட்ட கொடுத்துட்டு கெளம்பிடுங்க...! உங்கள ஒன்றும் செய்யமாட்டோம் என்று கூறினர்...
அவர்கள் திருடர்கள் என அறிந்த வாத்தியார், 'இப்ப தரமுடியாதுன்னா என்ன பண்ணுவீங்க' அப்படின்னதும் கூட்டத்திலிருந்த ஒருவன், 'உங்க எல்லாரையும் அடிச்சுப்போட்டுட்டு எடுத்துட்டுப்போவோம்' ன்னு சொன்னான்..
அதைக்கேட்ட வாத்தியார் தனது டிரைவரிடம், 'சாகுல், கார்ல இருக்கிற கம்பை எடு' ன்னு சொல்லி கம்பை கையில் வாங்குகிறார்...
'நா எந்தப்பொருளையும் தரமாதிரி இல்ல...சண்டைக்கு நா ரெடி...ஒவ்வொருவரா வர்றீஙகளா அல்லது மொத்தமா வர்றீங்களான்னு' கேட்டு தனது கையிலுள்ள கம்பைச் சுழற்றி தாக்குதலை ஆரம்பிக்க...
அதிர்ச்சியடைந்த திருடர்கள், 'இத்தனை தைரியசாலி யாருடா, அந்த ஆள் முகத்தைப் பாக்கணும்னு' சொல்லி ஒருவன் தீக்குச்சியைக் கொளுத்தி முகத்தைப் பார்க்க, அதிர்ச்சியுற்று டேய்! நம்ம வாத்தியாருடா'ன்னு சொல்ல, அனைவரும் உற்சாகமடைந்தனர்...
'எங்கள மன்னிச்சுடுங்க வாத்தியாரே!' எனக் கோரஸாக அனைவரும் மன்னிப்பு கேட்டனர்...
'ஏம்பா! உங்களுக்கெல்லாம் உடம்பு நல்லாத்தானே இருக்கு...இப்படி திருடறீங்களே, உங்களுக்கே கேவலாமல்ல...இந்த ரோட்ல எத்தனை பேர் அவசர வேலையா வருவாங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள், இப்படி...அவங்களெல்லாம் உங்களால எந்தளவு பாதிக்கப்படுவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? எத்தகைய பாவச்செயல் நீங்க செய்யறது? அப்படீன்னு வாத்தியார் சொல்ல...
அனைவரும் "இனிமே நாங்க திருடவே மாட்டோம்னு" சொல்ல..
'நீங்களனைவரும் சத்தியம் செஞ்சாதான் நம்புவேன்னு' வாத்தியார் சொல்ல...அவரின் கையில் அடித்து சத்தியம் செய்தனர்...
வாத்தியார், அந்த பத்து பேருக்கும் தலா ரூ.1000/- வழங்க (1964 ம் வருடம் 1000 ரூபாய் என்பது இன்றைய தேதியில் குறைந்தது ஒரு லட்சம்) அதை அவர்கள் வாங்க மறுத்தனர்...உடனே வாத்தியார், ' இந்தப் பணம் நீங்க உழைச்சுப் பிழைப்பதற்காக, ஏதாவது கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள்...'ன்னு சொன்னபிறகு அவர்கள் வாங்கிக்கொண்டு சென்றனர்...
இப்படி வாத்தியாரின் வாழ்வில் வரும் ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு திருவிளையாடல் தான்... முகநூலில் பாலு சார்.......... Thanks.........
-
தமிழக மன்னன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, இன்று டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையமும் என்னுடைய NCWDC & MNDMK அமைப்பும் இணைந்து மனநலம் குன்றிய பெண்களுக்கு சென்னையில் உள்ள அன்பகம் காப்பகத்தில் அன்னதானம் வழங்க உள்ளது. இந்த சிறப்பு நிகழ்வினை புரட்சி தலைவரை மகானாக வழிபாடும் நமது புரட்சி மைந்தன் சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் நடைபெறும். இதற்க்கு முக்கிய ஆதரவாக டாக்டர் எம் ஜி ஆர் உலக ஆராய்ச்சி மையம்
உறுப்பினர்களான துணை தலைவி எம்.ஜி.ஆர் கலைமகள் டாக்டர் பூங்கொடி, பொன்மன செல்வர் டாக்டர் ராமன், நல்ல நேரம் மாத இதழ் பத்திரிக்கை நிறுவனர் அய்யா தேவராஜ் ஆண்ட்ருஸ் ஆதரவில் இந்த சிறப்பு அன்னதானம் நிகழ்வுபெற உள்ளது என்பதனை பெரும் மகிழ்வுடன் தெருவித்து கொள்கின்றோம்!
Dr.AYAN HARI NCWDC NATIONAL
SECRETARY & MNDMK
TAMILNADU CHENNAI........... Thanks.........
-
ஒரு சாதாரண கடைக்கோடி எம்ஜியார் ரசிகனின் அடிமைப்பெண் அதிசியங்கள்.
1..உன்னை பார்த்து இந்த உலகம் பாடல் மனித இனத்தின் உணர்வை தூண்டும் பாடல்.
2.. அம்மா என்றால் அன்பு பாடலில் தலைவன் குழந்தை போல கால்களை அசைக்கும் நிகழ்வு அட
3...ஆயிரம் நிலவே பாடல் உண்மையான மன்னர்கள் எப்படி இருப்பார்கள் என்று நம் கண்ணின் முன்னே நிறுத்திய விதம்.
4....ஒக்கேணிக்கல் நீர் வீழ்ச்சியில் இது வரை எவரும் காட்ட முடியாத அற்புத பட பிடிப்பு.
5... தாயில்லாமல் நான் இல்லை பாடலில் 4 கேமராக்கள் கொண்டு படம் பிடித்த விதம்.....அதில் அந்த பறவைகள் கூட்டில்...என்ன ஒரு அற்புதம்...பின் வரும் விதம் விதமான எம்ஜியார்.
5...உதகயில். வேங்கையன் ஜீவா வில்லன்களால் துரத்த படும் காட்சிகள் ஆங்கில படங்களுக்கு அன்றே சவால்.....சிகப்பு நிற ஆடைகளும், பச்சை நிற புல்வெளிகளும், நீல நிற ஆகாயமும் வெள்ளை நிற மேகங்கள் சூழ்ந்து நிற்கும் அழகு அந்த காலத்தில் முதல் முதலாக ஹெலிகாப்டர் மேல் இருந்து படம் எடுக்க பட்ட வரலாறு.
6....ராஜஸ்தான் அரண்மனைகள்... வனப்பு மிகு காடுகளில் ஓடும் வீரர்கள் அட
7... கொளுத்தும் வெயிலில் பாலை வனத்தில் கூடாரங்கள் அடிக்க பட்டு மேலே இருந்து எடுக்க பட்ட காட்சிகள்....வேங்கையனை பிரிந்த ஜீவா மணலில் நடக்கும் கால் தடங்கள்.... அணிவகுக்கும் ஒட்டகங்கள். இந்திய திரை உலக வரலாற்றில் எவரும் எடுக்க முடியாத காட்சிகள்.
8....கட்டிய வலையில் கீழே தொங்கும் ஈட்டிகள் மத்தியில் ஒத்தை காலை கட்டிக்கொண்டு வாத்தியாரே உமக்கு நிகர் நீர் தான்..உம்மை சமன் செய்ய ஒருவனும் பிறக்கவில்லை இந்த இந்திய திரையுலகில்
9 மகுடப்பதியின் வாள் உங்களை தாக்கும் போது நீங்கள் கேடயம் கொண்டு தடுக்கும் போது நெஞ்சங்கள் பதறியது உண்மையோ உண்மை..
10...செங்கோடன் சிறையில் இருந்து அந்த நீரிவீழ்ச்சியில் நீங்கள் குதித்து தப்பிக்கும் காட்சி
11 அந்த ராஜா சிங்கத்துடன் உண்மையாக மோதிய வேங்கையன்... ரத்தம் சொட்ட சொட்ட....உங்கள் தாயை கட்டி தொங்க விட்டு அவரை காப்பாற்ற....நீங்கள் மட்டும் வெளிநாட்டில் பிறந்து இருந்தால்...
என்னவென்று சொல்வது வேங்கையா.. நீங்கள் ஒரு தனிப்பிறவி...தனி நடிகர்....தனி காப்பியம்...
உலக எம்ஜியார் ரசிகர்கள் சார்பாக எங்கள் உண்மை ரசிகர்கள்...வாழ்க எம்ஜியார் புகழ் தொடரும் .
✌........... Thanks..........
-
இனிய காலை வ*ணக்கம்
‘நாடோடி மன்னன்’ படம் ப*ட*ப்பிடிப்பு முடிந்து தணிக்கைக் குழுவிற்கு அனுப்பப் ப*ட்ட*து.
அப்போதிருந்த தணிக்கைக்குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண்டிப்புக்குப் பெயர் போனவர். விதிமுறைகளைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காதவர்.
அவர் எவ்வளவு கண்டிப்பானவர், அவரைக் கண்டால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எப்படிப் பயப்படுவார்கள் என்பதற்கு, பின்னாளில் சத்யா மூவிஸ் என்ற தன்னுடைய சொந்தப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எடுத்த முதல் படமான “தெய்வத் தாய்” படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை ஆர்.எம்.வீரப்பன் இங்கே நினைவு கூர்கிறார்.
“நான் தயாரித்த முதல் படமான ‘தெய்வத்தாய்’ படத்தில் கவிஞர் வாலி எழுதிய ‘வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ’ என்ற பாடலில் ‘அத்திபழக் கன்னத்திலே முத்தமிடவா?’ என்று ஒரு வரி வரும்.
அதைப் படமாக்குவதற்கு எனக்குப் பயம். பின்னால் சென்ஸாரின் போது சாஸ்திரி ஏதாவது வெட்டுவாரா என்ற பயம்.
எனவே படமாக்குவதற்கு முன்பாகவே அந்தப் பாடலை எழுதிக் கொண்டு அவரிடம் போய்க்காட்டினேன்.
“இதை ஏன் என்னிடம் காட்டுகிறீர்கள்?” என்று கேட்டார் சாஸ்திரி.
“இல்லை.. இது என் முதல் படத்துக்காக எழுதப்பட்ட பாடல். ஏதாவது அப்ஜெக்ஷன் இருக்குமான்னு இப்பவே கேட்டுடலாம்னு…”
“உங்களுக்கு என்ன சந்தேகம்?”
“ஒரு இடத்தில் கன்னத்தில் முத்தமிடவா என்று வருகிறது. அதான்…”
“அதில் என்ன?”
“இல்லை.. முத்தமிடவா என்ற வார்த்தை இருக்கலாமா என்ற சந்தேகம்”
“எப்போது உங்களுக்கே அந்தச் சந்தேகம் வந்துவிட்டதோ, அப்புறமென்ன, அந்த வார்த்தையை எடுத்துவிட வேண்டியது தானே?” என்றார் சாஸ்திரி. பின்ன*ர் அத்திப்ப*ழ*க் க*ன்ன*த்திலே கிள்ளிவிட*வா..என்று மாற்ற*ப்ப*ட்ட*து.
அது தான் சாஸ்திரி!
அப்படிப்பட்ட கண்டிப்புக்கார அதிகாரியான சாஸ்திரிக்கு, ‘நாடோடி மன்னன்’ பற்றிப் பல புகார்களை பலர் முன்னதாகவே எழுதியிருந்தார்கள்.
ஒவ்வொரு கட்டத்திலும் தணிக்கை விதிகளை மனதில் கொண்டு ஆர்.எம்.வீ அணுகியதால், சென்ஸார் போர்டு அதிகாரி சாஸ்திரி படத்தைப் பார்த்ததும் வெளியே வந்து சொன்ன இரண்டு வார்த்தைகள்: “நோ கமெண்ட்ஸ்”.
பொதுவாக அப்படி ஒரு சென்ஸார் ஆபீஸர் சொன்னால் அதற்குப் பொருள்:
“நோ கட்ஸ்” இதுதான் மக்கள் திலகத்தின் நாடோடி மன்ன*ன் ப*ட*த்தின் த*ணிக்கையின் பரிசு.......... Thanks..........
-
வருகின்ற 20-09-2019 வெள்ளிக்கிழமை முதல் மகத்தான ஆரம்பம்... கோவை - Delite dts., திரையுலக ஏக சக்கரவர்த்தி மக்கள் திலகம் காவியம் "சிரித்து வாழ வேண்டும்" வெற்றி பவனி வரவிருப்பதாக நண்பர்கள் தகவல்...
-
திரைப்பட விநியோகஸ்தர்கள் நண்பர்கள் வழியே கேள்விப்பட்ட சிறப்பு தகவல்... மக்கள் திலகம் Evergreen காவியங்களில் ஒன்றான " படகோட்டி" காவியமானது ஏரியா விநியோக உரிமைகளுக்கு 5 வருடங்களுக்கு ஐம்பது லட்சங்கள் பேசப்பட்டு வருகிறதாம்... மேலும் சில ஆண்டுகளுக்கு எனில்
சில கோடி ரூபாய்கள் தாண்டுமாம்... பலர் முயற்சி செய்வதாக தகவல்கள்...
-
புரட்சித்தலைவர் ஆட்சியில் தூத்துக்குடியில் இரண்டுஜாதிகளுக்கிடையே பெரியகலவரம் நடந்தது,உடனே முதல்வர்எம்.ஜி.ஆர் சம்பவ இடம்செல்லபுறப்பட்டார், காவல்துறை உயர்அதிகாரிகள் இப்போது அங்குநீங்கள்செல்லக்கூடாது விபரீதம் நடக்கும் பாதுகாப்புக் கொடுக்கமுடியாமல் போய்விடும்என்றனர்,தலைவரோ அங்கு துப்பாக்கிச்சூடுநடந்துள்ளது நான்சென்றேதீருவேன் என்று புறப்பட்டார் அநேகமாக வாகைக்குளம் என்று நினைவு அங்கேபோர்க்களம்போல் இரண்டுஜாதியினரும்,எதிர்எதிரேகொந்தளிப்போடுஇருந்தனர் , முதல்வர்எம்.ஜி.ஆர்இரண்டுதரப்பிற்கும்இடையில் காரில் இருந்து இறங்கினார் ,அப்ப்ப்பா அங்குநடந்த அதிசயத்தை இப்போதுசொன்னால் கதைஎன்பர் ஆம் அந்தத் தங்கமேனியைக்கண்டதும் அங்கே ஓரே கோஷம் தான்கேட்டது இரண்டுதரப்பினருமே எம்.ஜி.ஆர் வாழ்க எங்கள் முதல்வர் வாழ்க கோஷம்தான்அது, தங்கள்பகைமறந்தனர் தலைவரின் பூமுகம்கண்டதும், ஆம்5நிமிடத்தில்அத்தனையும்விட்டு ஒன்றுபட்டனர்,இதைபதிவிடும்போது என்கண்கள் கண்ணீர்சொறிகிறது,எப்படிப்பட்ட காட்சியைக்காணும் பாக்கியம் கிடைத்தது, தலைவன்என்றால் நீமட்டுமே சம்பவம்நடந்த உடனேஅந்த இடத்திற்கு தைரியமாகச்சென்றதுஏன் தெரியுமா, தன்நாட்டுமக்கள்மீதுதலைவருக்கு இருந்த நம்பிக்கை,அதனால்தான் இந்தமக்களும் தலைவர்மறையும்வரை,ஏன் இன்றுவரைதலைவரை உயிராய் நினைக்கிறார்கள்........... Thanks...
-
-
எம்ஜிஆரை புகழ்ந்து தள்ளிய ஹிந்தி நடிகர்..!!
சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த
பிரபல ஹிந்தி நடிகர் தர்மேந்திரா அவர்களை
சினிமா பொக்கிஷம் டாட் காம் சார்பில் சந்தித்தோம்.அப்போது அவரிடம் ” நீரும் நெருப்பும்’ படப்பிடிப்பின் போது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை தர்மேந்திரா சந்தித்த போது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும்,தர்மேந்திராவின் மனைவி பிரபல நடிகை ஹேமமாலினியும் எம்ஜிஆர் அவர்களோடு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் மிகப் பெரிய சைசில் பிரிண்ட் செய்து அவைகளை லேமினேஷன் செய்து அவரிடம்”சினிமா பொக்கிஷம். டாட்காம்”
சார்பில் அன்பளிப்பாக வழங்கினோம்.மனிதர் பிரமித்துப் போய்விட்டார்
இந்தப் படம் அவரிடம் இல்லவேயில்லையாம்.உடனே அவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார்.அவர் பேசிய வீடியோ பதிவு மிக விரைவில் வெளியிடப் படும்........... Thanks.........
-
வரும் 20-09-2019 கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் பிரம்மாண்ட தயாரிப்பு..."அடிமைப்பெண்" டிஜிட்டல்... படைப்பு திருநெல்வேலி - ரத்னா dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை காண வருகை .........
-
https://youtu.be/enB_120dnPc. Highest Grossing Tamil Movies from 1947 to 1980... Thanks...
-
கடந்த சில வாரங்களாக வெளியாகி* வெற்றிநடை போட்ட* மக்கள் தலைவர்*எம்.ஜி.ஆர்.அவர்களின் திரைப்படங்களின் பட்டியல் .---------------------------------------------------------------------------------------------------------------------------02/08/19* -பழனிநகரம் சாமி தியேட்டர் - ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * திண்டுக்கல் என்.வி.ஜி.பி.- ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * கோவை டிலைட் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * *திருச்சி முருகன் - ரிக்ஷாக்காரன்* - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * சேலம் சரஸ்வதி -ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள் -இணைந்த** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *2 வது வாரம்*
09/08/19* * -சென்னை பாலாஜி - காவல்காரன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * சேத்தூர் -வி.பி.எஸ்.தியேட்டர் -எங்க வீட்டு பிள்ளை -4 காட்சிகள்*** * * * * * * * * * கோவை சண்முகா - குடியிருந்த கோயில் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * **
16/08/19* * * சென்னை அகஸ்தியா* -நல்ல நேரம் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * ரெட்ஹில்ஸ் நடராஜா -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4காட்சிகள்*15/08/19* * * *ஸ்ரீ வில்லிப்புத்தூர் ரேவதி - ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4 காட்சிகள்*16/08/19* * * திண்டுக்கல் என்.வி.ஜி.பி.- தேடி வந்த மாப்பிள்ளை -* 4* காட்சிகள்** * * * * * * * * * கோவை சண்முகா - குடும்ப தலைவன்- தினசரி 4 காட்சிகள்*18/08/19- போடிநாயக்கனூர் -ஓ.ஆர். சினிமாஸ் -எங்க வீட்டு பிள்ளை -4 காட்சிகள்*** * * * * * * * * * * திருப்பரங்குன்றம் லட்சுமி -அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*
23/08/19* * * *சென்னை பாலாஜி - பல்லாண்டு வாழ்க - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * *மதுரை பழனிஆறுமுகா -ரிக்ஷாக்காரன் - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * *கோவை சண்முகா -நீதிக்கு தலை வணங்கு - தினசரி 4 காட்சிகள்*27/08/19* * * *திருப்பரங்குன்றம் லட்சுமி - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*
30/08/19* * * * மதுரை ராம் தியேட்டர் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * கோவை டிலைட் -ஊருக்கு உழைப்பவன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * * *திருச்சி கெயிட்டி -ராமன் தேடிய சீதை - தினசரி 4 காட்சிகள்*31/08/19* * * * *நத்தம் சென்ட்ரல் - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*
06/09/19* * * *சென்னை பாலாஜி -விக்கிரமாதித்தன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * *திண்டுக்கல் என்.வி.ஜி.பி.-ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * *பண்ணைபுரம் (தேனீ) தியாகராஜா -ஆயிரத்தில் ஒருவன்** * * * * * * * * * *கோவை நாஸ் -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * *திருப்பூர் மணீஸ் - நாடோடி மன்னன் -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * *திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜா -ரிக்ஷாக்காரன்-தினசரி 3 காட்சிகள்*
13/09/19* * *மதுரை திருமங்கலம் ஆனந்தா -ஆயிரத்தில் ஒருவன் -4 காட்சிகள்*
20/09/19* * *சென்னை அகஸ்தியா -குடியிருந்த கோயில் _தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * *நெல்லை ரத்னா - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *மதுரை சென்ட்ரல் - நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *கோவை டிலைட் -சிரித்து வாழ வேண்டும் -தினசரி 2 காட்சிகள்*
பட்டியல் தொடரும் !!!!!!!!!!!* * * * * * * * *** * * * * * * * * * *
-
இந்தியா சுதந்திரம் வாங்கி 15 , வது ஆண்டு 15- 08- 1962, அன்று "குடும்பத்தலைவன் " படம் வெளிவந்தது. .
பொதுவா வாத்தியார் படத்தில்தான் போட்டிகள் பல இடம்பெற்றிருக்கும். உதாரணமாக சில படங்கள் குறிப்பிடுகிறேன்.
குலேபகாவலி அறிவு போட்டி. . வாள்சண்டை போட்டி புலி அடக்குவது
சக்கரவர்த்தி திருமகள். ..பாட்டு போட்டி. நடன போட்டி மல்யுத்தம் போட்டி
ராஜா தேசிங்கு. ...குதிரை அடக்குவது
மன்னாதி மன்னன். ..காட்டெருமை அடக்குவது நடனம் போட்டி
விக்ரமாதித்தன். .நடனம். அறிவு. வாள்சண்டை. பல போட்டிகள்
கலையரசி. ..பல போட்டிகள்
தாயைக் காத்த தனயன். ..பெரிய இடத்துப்பெண். ..சிலம்பாட்டம் போட்டி
காஞ்சித்தலைவன். ...மல்யுத்தம் போட்டி
பணக்காரக்குடும்பம். ..சடுகுடு போட்டி
தாயின் மடியில். .குதிரை ரேஸ். .போட்டி
அன்பே வா. ..மல்யுத்தம். .போட்டி
பறக்கும் பாவை. .சர்க்கஸ் போட்டி
படகோட்டி. ...படகு போட்டி
காவல் காரன். ...பாக்ஸின் போட்டி
அடிமைப்பெண். .. ஈட்டி சண்டை. போட்டி
நம்நாடு. ..தேர்தல் போட்டி
பணம் படைத்தவன். .. ஒட்டபந்தயம். ..குண்டு எறிதல். ..நீளம் தாண்டுதல் ஈட்டி எறிதல் பல போட்டிகள்
ரிக்க்ஷாக்காரன். ..ரிக்க்ஷா போட்டி
குமரிக்கோட்டம். ...மாறுவேடம் போட்டி. .
நல்ல நேரம். ..யானை போட்டி. ...
பட்டிக்காட்டு பொன்னையா. ...பாக்ஸின் மல்யுத்தம் போட்டி
நினைத்ததை முடிப்பவன். ...நடனம் வாள் சண்டை . ஆள்மாறாட்டம் போட்டி
பல்லாண்டு வாழ்க. ...முதலை அடக்குவது
நீதிக்கு தலை வணங்கு. ....பைக் ரேஸ் போட்டி
மீனவநண்பன். ...வாள் சண்டை போட்டி
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். ..பாட்டு போட்டி .........
இப்படி அதிக படங்களில் போட்டி வைத்து சினிமா உலகில் சாதனை படைத்தார்
அந்த வகையில் குடும்பத்தலைவன் படத்தில் இடம் பெற்ற ரேக்ளா பந்தயம்
சடுகுடு விளையாட்டு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
தந்தையே மகன் திருத்தும் காட்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்
மாறாதய்யா மாறாது பாடல் காட்சி கருத்துக்கள் இன்றைய தலைமுறையினரை சுண்டி இழுக்கும். ...
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன் என்ற பாடல் வாத்தியார் முருகர் கடவுள் இனைத்து எழுதப்பட்ட அற்புதமான வரிகள் இப்படி குடும்பத்தலைவன் படத்தின் சிறப்பு சொல்லிக்கொண்டே போகலாம் இதைவிட இன்னொரு சிறப்பு இப்படத்தில் உண்டு அது என்ன. ?.?..?தொடரும். ....தொட.ரும் ..தொடரும். ............ Thanks............
-
தமிழகம் யாருக்கெல்லாம் பெருமைகள் சேர்த்ததோ அதை பற்றி எந்த பெருமையும் கிடைக்காத விரக்தியில் தரம் தாழ்ந்து கேவலமான எழுத்தில் பதிவிட்டு திருச்சி ரசிகன் என்பவனும் ஒரு மன நோயாளி என்பதை உணர்த்தியுள்ளார் .மன நோயாளிகள் கருத்து மிகவும் பரிதாபம் . எந்த ஜென்மத்திலும் ஆன்மா சாந்தி அடையாது, அமைதி காணாது, நிம்மதியோ ஒரு துளியும் உணர இயலாது.......... Thanks...
-
மதுரையில் fuse பீஸ் போனதா சொல்லி ரொம்ப வருத்த பட்டாங்களே... உண்மையா தோழர்களே?!
-
நீண்ட பதிவு
கொஞ்சம்
பொறுமையாக
முழுவதும்
படித்து பாருங்கள்
இதை
இன்றைய
இளைய தலைமுறைக்கு
எடுத்து சொல்லுங்க
தலைவரின் புகழை மட்டும்
பரப்புவது மட்டும்
நோக்கம் அல்ல
தலைவர்
பின்பற்றிய
நல்ல வழியில்
அடுத்த தலைமுறையும்
நல்வழியில்
நடைபோட
இந்த பதிவு
ஆயிரத்தில் ஒருவன்.. வரலாறு எழுதிய வரலாறு!!
எம்.ஜி.ஆர் என்பது ஒரு சிலருக்கு, பலரைப்போல் அவரும் நடிக்க வந்த ஒரு நடிகர்! கதாநாயகனாக உலா வந்த ஒருவர்! பல வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார் என்கிற பார்வை இருக்கலாம்! ஆனால்.. நண்பர்களே.. தமிழகத்தில் அவரை நேசித்த நெஞ்சங்கள்.. இன்னும் அளவிடற்கரியது! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.. ஒரு தலைவனாக அவரை ஏற்று அவரைப் பின் தொடர்ந்த கூட்டமது! அவரின் திரைப்படம் ஒன்று வருகிறதென்றால்.. ரசிகனுக்கு அன்றுதான் திருவிழா!!
திரையில் அவர் மற்ற கதாநாயகர்கள் போல வந்து போனவரல்ல.. அத்துறையை முழுக்க முழுக்க.. தன்வசப்படுத்தி.. நல்ல கருத்து விதைகளை கதையில், வசனத்தில், பாடல்களில் புகுத்தி இந்த சமுதாயம் பயன்பட.. அடுத்தடுத்தத் தலைமுறைகள் பயனுற.. ஒரு கருவிதான் இந்த ஊடகம் என்பதை முழுமையாக உணர்ந்து அதனை தக்கவாறு கையாண்டார்! அதனால்தான் அவரை வாத்தியார் என்று அழைக்கிறோம்! தாயின் மீது தனயன் கொள்ள வேண்டிய அன்பு .. யாவருக்கும் தெரிந்ததுதான்.. ஆனால் எம்.ஜி.ஆர் சொன்னபின்பு அல்லவா அது பன்மடங்காகி.. பெருகி தனி மனிதன் தன்னை உணர, தாயை வணங்க, தாயின் பெருமை அறிய, தாயைப் பாதுகாக்கத் தூண்டியது என்றால் இதைவிட ஒரு சேவையை இனி இந்த உலகில் எவர் வந்து செய்துவிட முடியும்?
உடலை நல்ல முறையில் வைத்திருக்க உடற்பயிற்சி தேவை என்பதை அவர் ஒவ்வொரு நேர்முகத்திலும் வலியுறுத்தியவர்.. அவரின் வாழ்க்கையில் நடைமுறையில் அவர் அதை முழுக்க முழுக்கக் கடைப்பிடித்தார். இன்னும் சொல்லப்போனால், அரசியலில் முழுமையாக ஈடுபட்டு நள்ளிரவு வரை தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்ட பயண நாட்களிலும்கூட, அதிகாலை எழுந்து அவர் உடற்பயிற்சி செய்தவர் என்பது தமிழகம் அறிந்ததே! அதனால்தான் சராசரி வயதைத் தாண்டியபின்னே கதாநாயகனாக.. உயர்ந்தபோதும்.. தன் கடைசி நாட்கள் வரை அந்த நிலையில் அவரால் நிலைத்து நிற்க முடிந்தது!
கவியரசு கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துக்கூத்தன், கவிஞர் முத்துலிங்கம் என பல்வேறு கவிஞர் பெருமக்களின் கற்பனையில் முகிழ்த்த பல நூறு பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் காற்றில் பரவிக்கொண்டிருப்பதை மறக்க முடியுமா?
மக்கள் திலகம்
கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்
பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்
கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்
மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்
என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்
அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். என்பது ஏழை மக்களைப் பொறுத்தவரை.. எங்களின் தலைவன் மட்டுமல்ல.. இன்றைக்கும் அவர்தம் இதயங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர்! மக்கள்.. மக்கள் என்று தன் வாழ்க்கை முழுவதும் மக்களோடு பயணித்தவர்! இவரின் பன்முகங்கள்.. இவரின் செயல்பாடுகள்.. இவரின் ஆற்றல் எல்லாம் மக்களை நோக்கியே.. மக்களுக்காகவே.. எனவேதான்.. தமிழகத்தின் அரசியலில் தவிர்க்க முடியாத வகையில் தலைவரானார்! பதினோறு ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராய் திகழ்ந்தார்! எந்த நிலையிலும் ஏழைமக்களின் வாழ்வு துலங்க.. திட்டங்களை அணிவகுத்தார்! கர்மவீரர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தி.. சத்துணவுத்திட்டம் என்கிற பெயரில் அவர் திருச்சியில் தொடக்கி வைத்தபோது ஆற்றிய உரையில் ஒரு வைரவரி.. இதோ.. “சிறுவயதில் எங்களுக்கு ஒரு கவளம் சோறு கொடுக்க முடியாமல் என் தாய் பட்ட வேதனை தமிழ்நாட்டில் எந்த தாய்க்கும் வந்துவிடக்கூடாது என்றுதான் இந்தத் திட்டத்தை மேற்கொள்கிறேன்” என்றார். அவருக்கு நிகர் அவர்தான்!
வாள்வீச்சு, கத்திச் சண்டை, சிலம்பாட்டம், குத்துச் சண்டை போன்ற பல்வேறு கலைகளை சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் அவர்களிடம் கோவையில் பயின்றவர்! அதனால்தான் அவர்தம் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் பிரபலமாகின! எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு என்பது அன்றைய நாளில் ஊரெல்லாம் பேச்சாக இருந்தது.. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் அதற்கான களமானது! அவர் கடைசியாக நடித்திருந்த ஒரு சில படங்களில் மீனவ நண்பன் – இதிலும் எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு இடம்பெற்றது! ரசிகர்களின் ..மக்களின் நாடித்துடிப்பை அறிந்து வைத்திருந்த கலைஞன் எம்.ஜி.ஆர்!
அதனால்தான் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது! எந்தெந்த விஷயங்கள் மக்களுக்குத் தேவை.. எந்த அளவில் என்பதை எம்.ஜி.ஆர் வரையறுத்து வைத்திருந்தார்! அது அவரின் பார்முலா என்று பேசப்பட்டது! காதல் காட்சிகளில் மட்டும் என்ன குறையா வைத்துவிட்டார்? மனித வாழ்வின் பூரணம் காதலில் இருப்பதை அறிந்தவர் என்பதால்.. தனது படங்களில் இடம்பெறும் காட்சிகளிலும் பாடல்களிலும் கவனம்செலுத்தி பல்சுவை தந்திருக்கிறார். கதையின் நாயகிகளை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களுடன் நடித்து வெற்றியைக் குவிக்கின்ற வரை ஓயாமல் உழைத்திருந்தார்! எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்து 32ஆண்டுகள் ஆகின்றன.. எனினும் அவர் இறந்துவிட்டார் என்கிற சேதியை நம்பாதவர்கள் உண்டு! அவரைப் போற்றியவர்கள்.. புகழ்ந்தவர்கள்.. வாழ்ந்ததாக சரித்திரம் உண்டு.. தாழ்ந்ததாக இல்லவே இல்லை! அவரை பின்பற்றிய ரசிகர்களில் பல லட்சம்பேர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை.. நன்னடத்தையால்.. பலருக்கும் உதவி செய்கின்ற பாங்கால்.. இந்தச் சமுதாயம் விரும்புகிற மனிதர்களாய் வாழ்கிறோம் என்றால்.. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் என்கிற மந்திரச் சொல்லின் மகிமை என்பதைப் பெருமையோடு எந்த சபையிலும்.. எந்த அவையிலும் பகிர்ந்துகொள்வோம்!
எம்.ஜி.ஆர்.. ரசிகன் ஒருவரை அழைத்து எம்.ஜி.ஆர் படங்களில் உங்களுக்குப் பிடித்த முதல் 10 அல்லது 20 படங்களைப் பட்டியலிடுங்கள் என்றால்.. அதில் அன்பே வா.. படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், இதயக்கனி என்று இடம்பெறும் படங்கள் பெரும்பாலும் ஒருசேரவே இருக்கும்! ஆனால் இதில் எந்தப் படத்தை நீங்கள் முதன்மை வகிக்கும் படமாகக் கருதுவீர்கள் என்று கேட்டால் பதில் சொல்வது மிகச் சிரமமாக இருக்கும்! காரணம்.. இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் பாடங்களாக.. மறக்க முடியாதவைகளாக.. பலமுறை பார்த்து ரசித்தவையாக இருப்பதால், ரசிகன் அந்த விடை சொல்லத் திணறுவான்!
ஆனால்.. இந்தக் கேள்விக்கான விடையை.. நமக்காக வழங்கியிருக்கிறார்.. அமீரக மண்ணில் சுவையின் சூப்பர் ஸ்டார் என்கிற பெயரோடு உலா வரும் லெ.கோவிந்தராஜு அவர்கள்! ஆம்! உழைப்பாளர் தினமான 01.05.2014 அன்று மாலை .. துபாயின் மையப்பகுதியில் உள்ள கிராண்ட் சினிமா என்னும் திரையரங்கில் அன்று மாலை புதிதாக வெளியான திரு.மம்முட்டி அவர்கள் படத்தைக்கூட ஒரு காட்சி எங்களுக்காக என்று வாதாடி.. பிரத்யேக காட்சியாக.. முதன் முறையாக அயல்நாட்டில்.. அதுவும் அமீரகத்தில்.. ஆயிரத்தில் ஒருவன் வெளியீடு செய்தார். அதுமட்டுமல்லாமல் அவர்தம் நண்பர்கள்.. உறவினர்கள்.. வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் இலவசமாய் அனுமதிச்சீட்டு வழங்கி.. அசத்திவிட்டார்!
அட.. அந்தப் படத்தில் என்ன இருக்கிறது சார்? அதுதான் நீங்கள் பலமுறை வேறு பார்த்துவிட்டேன் என்று கூறுகிறீர்களே என்கிற குரல்கள் எழாமல் இல்லை! புரட்சி.. முழக்கம், உரிமையின் குரல்கள்.. சமுதாய அவலங்களைத் தட்டிக்கேட்கும் துணிவு, விவேகம், கடமை, அன்பு, இவையெல்லாம் நாங்கள் படித்த பயிலகம் எம்.ஜி.ஆர் படங்கள் அல்லவா? தனது ஒரு திரைப்படத்திலும்கூட எம்.ஜி.ஆர் மது அருந்தியவராக நடித்ததே இல்லையே.. இது எப்படி சாத்தியமானது? அப்படி ஒரு சில காட்சிகளில் நடிக்க வேண்டிவந்தபோதும்.. அதில் புதுமைகள் புகுத்தி.. மதுவின் கொடுமைகளை மக்கள் அறியச் செய்த மகோன்னத மனிதரன்றோ? அவர்தந்த பாதையில்.. நடைபோடும் என்னைப்போன்ற இலட்சக்கணக்கான ரசிகர்கள்.. இன்றும் மதுவின்பக்கம் சென்றதில்லை.. இந்தப் பெருமைக்கெல்லாம் அவர் ஒருவரே காரணம்!! புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் அவர் இதே பட்டியலில் வைத்து எங்களையெல்லாம் அந்த அவசியமற்ற பழக்கத்திலிருந்தும் காப்பாற்றிய பெருமையும் எம்.ஜி. ஆர் ஒருவருக்கே!!
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் என்று நினைக்கும்போதே தேனினும் இனிய அந்தப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன! இசையமைப்பாளர்களின் கைவண்ணமும் கவிஞர்களின் கற்பனைகளும் கலந்த கலவைதான் பாடல்! அது கதைக்கு முற்றிலும் பொருந்திப்போக.. பாடிய குரல்கள் அதை இன்னும் மெருகேற்றிவழங்க.. நாம் வாழ்கின்ற இந்த காலக்கட்டத்தில் நம் காதுகளை கெளரவித்த.. நெஞ்சங்களை நிறைத்த இனிய பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் ஏழுபாடல்களும் அமோகமாக கொடிகட்டிப் பறக்கின்றன! பொதுவாகப் படத்திற்கு இசையமைப்பாளர் அல்லது இசையமைப்பாளர்கள் இசை அமைப்பார்கள் என்று சொல்வார்கள்.. என்னைப் பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகிய இருவரும் இசை வேட்டை நடத்தியிருக்கிறார்கள் என்றே சொல்லுவேன். இந்தப் படம்தான் இருவரும் இசையமைத்த கடைசிப்படம் என்பதும் வரலாற்றுப் பதிவாகிவிட்டது காலத்தின் நிர்ணயம்.
பாடல்கள் எழுதிய விதம்.. வரிகளின் ஆட்சி.. இசையின் மேன்மை.. பாடிய குரல்கள்.. நடித்த இரண்டு தங்கங்கள்.. என்று சொல்லிக் கொண்டே போகலாம்.. இயக்குனர் வரையிலான இந்தப் பெருமைக்குரிய பட்டியலில் ஒளிப்பதிவாளர் முதல் ஒலிப்பதிவாளர் வரை அனைவருக்கும் பங்குண்டு! காட்சிப்படைப்புவகையில் அந்தக் காலத்தில் விளைந்த இந்த அற்புதவிளைச்சல் இன்றைக்கும் திரைத்துறை சார்ந்தோருக்கு வியப்பின் எல்லைதான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை!
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ......... Thanks.........
-
குமுதம் வார இதழ் -25/09/19
திரைத்துறையில் இன்னொரு எம்.ஜி.ஆர். உருவாகாதது எங்களை போன்றவர்களுக்கு மிகவும் ஏக்கமாக உள்ளது. இந்த ஏக்கம் எப்போது தீரும்.- ஜே. லூர்து, மதுரை.*
எம்.ஜி.ஆர். திரைப்பட துறையை பொறுத்தவரை உண்மையிலேயே புரட்சி தலைவர்தான் .* அவர் ரசிகர்களுக்கு " தாயை வணங்க வேண்டும்.* புகை , மது கூடாது. பெண்களிடம் கண்ணியம் .இதெல்லாம் ஒவ்வொரு படத்திலேயும்* *இடைவிடாது சொன்னார் . எந்த படத்திலும் சட்டத்தை மீற மாட்டார் . அந்த வழியில் வில்லனை அழிக்க மாட்டார் .அவர் நினைக்க நினைக்க ஆச்சர்யம் .
-
அதைச் செய்தான், இதைச்செய்தான் என்று சொல்ல வேண்டாம்!
நம் வள்ளல் முதல்வராக ஆட்சியில் இருந்தபோது, மலேசியாவில் இருந்து குறைந்த விலையில் பாமாயில் இறக்கமதி செய்து, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் பத்து கிலோ பாமாயில் கிடைக்குமாறு செய்திருந்தார். சாதாரண ஏழை, எளிய மக்கள் பத்து கிலோ பாமாயிலை வாங்கி என்ன செய்ய முடியும். எனவே இரண்டு கிலோ பாமாயிலை தன் வீட்டு சமையலுக்கு வைத்துக்கண்டு, மீதமுள்ள எட்டு கிலோ பாமாயிலை ரேஷன் கடை வாசலிலேயே வியாபாரிகளிடம் நாற்பது ரூபாய்க்கு விற்று விடுவார்கள். அந்த பணத்தை வைத்து இருபது கிலோ அரிசியை வாங்கிச் சென்றனர். கிட்டதட்ட இது மாதா மாதம் ஏழை மக்களுக்கு இலவச அரிசியாகவே கிடைத்துக கொண்டிருந்தது.
இப்படி ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் அரசு கொடுக்கும் பாமாயிலை விற்று, அரிசி வாங்கிச்செல்வதை புகாராக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நம் வள்ளலைச் சந்தித்து சொல்கின்றனர்.
அதற்கு வள்ளல், “இது, ஏற்கனவே எனக்குத் தெரியும். ஆனாலும் அதை தடுக்க வேண்டாம். பாமாயிலை குறைக்கவும் வேண்டாம். கப்பல் கப்பலாக நமக்கு குறைந்த விலையில் பாமாயில் நமக்கு இறக்குமதியாகிறது. அதைத்தான் இந்த ஏழை மக்களுக்கு விநியோகம் செய்கிறோம். இருபது கிலோ பாமாயிலை விற்கும்பொழுது, எட்டு கிலோ அரிசி கிடைக்கிறதல்லவா? அதனால் அவர்களின் வயிறு நிற்கிறதல்லவா? அதுபோதும். இந்த ராமச்சந்திரன் ஆட்சியில், அதைச் செய்தான், இதைச் செய்தான் என்ற பாராட்டுக்களெல்லாம் வேண்டாம். ஏழை மக்களின் பசியைப் போக்கியவன் என்ற புண்ணியம் கிடைத்தால் போதும்” என்று அன்றைய கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டிங் தனி அலுவலர் தெய்வச் சிலையிடம் கண்கலங்கச் கூறுகிறார். நம் வள்ளல்.
அதேபோல்தான் கலைத்துறையில் ஒப்பில்லா ஸ்டாராக திகழ்ந்த போதுகூட, ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே துணை நின்றிருக்கிறார். நம் வள்ளல். தான் நடிக்கும் சண்டைக்காட்சியோ, பாடல் காட்சியோ அது தரமாக வந்து தயாரிப்பாளர் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதாலும் , படப்பிடிப்பு நாட்களை கொஞ்சம் நீட்டிப்பார். அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் கிடையாது. காரணம்…. நம் வள்ளல் நடித்த திரைப்படத்தில் தானே தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் ஒன்றுக்கு பத்தாக சம்பாதிப்பார்கள்.
ஒரு சமயம் வள்ளலின் நாடகக் குழுவில் நடித்துக் கொண்டிருந்த எம்.கே. முஸ்தபா விலகிச் சென்று விட்டார். உடனே நம் வள்ளலுடன் தந்தை வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ். நாராயணன் மூலம், தேவி நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்த நாகர்கோயிலைச் சேர்ந்த பசுபதியை, எம்.கே. முஸ்தபா நடித்த கேரக்டருக்கு சிபாரிசு செய்கிறார். வள்ளலுக்கு பசுபதியின் அழகிய தோற்றமும், கம்பீரமும் பிடித்துப் போகவே, உடனே சேர்த்துக் கொண்டார். ‘இன்பக் கனவு’ ‘அட்வகேட் அமரன்’ ‘பகைவனின் காதலி’ ஆகிய நாடகங்களில் பசுபதி தொடர்ந்து நடித்து மிகவும் பாப்புலராகி உயர்ந்த நிலைக்கு வந்து கொண்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் வள்ளலுக்கும், பசுபதிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, பசுபதியை நம் வள்ளல் தன்னுடைய நாடகக் குழுவில் இருந்து நீக்கிவிட்டார்.
வேலையில்லாமல் கஷ்டப்பட்ட பசுபதி, ‘திரௌபதி நாடகக் குழு’ வில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். வள்ளலை விட்டு பிரிந்த சில ஆண்டுகளில் பசுபதிக்கு திருமணம் நிச்சயமாயிற்று, ‘முதன் முதலாக சென்னையில் தனக்கு வாழ்வளித்த நம் வள்ளலுக்கு திருமணப் பத்திரிக்கை வைப்பதா? வேண்டாமா? அப்படியே பத்திரிகை வைத்தாலும், வள்ளல் வாங்கிக் கொள்வாரா? மாட்டாரா? என்கிற குழப்பம் பசுபதிக்கு, கடைசியில் பத்திரிக்கை கொடுத்து விடுவது என்று தீர்மானித்து, பழத்தட்டுடன் செல்கிறார் பசுபதி. பசுபதி சென்ற நேரம் வள்ளல் வராந்தா வாசலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். பசுபதி தட்டை நீட்டுகிறார். வள்ளல் பத்திரிகையை மட்டும் எடுத்துக்கொண்டு ‘பழத்தை நீ எடுத்துக்கொண்டு போ’ என்று கை சைகையால் தெரிவிக்கிறார். பிறகு பசுபதி அங்கிருந்து செல்கிறார்.
பத்திரிகையை வள்ளல் எடுத்துக் கொண்டாலும், ‘திருமணத்துக்கு வருவாரா? மாட்டாரா? தன் மீது உள்ள கோபம் தீர்ந்ததா? இல்லையா? என்கிற சந்தேகம் பசுபதிக்கு, திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும், ‘பசுபதி பணக் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்பதை வள்ளல் தெரிந்துகொள்கிறார். பசுபதி, ‘கல்யாண மண்டம்ப், வாழை மர தோரணம், பந்தல், மேளக்கச்சேரி, மைக் சேட், சாப்பாடு இற்றிற்கெல்லாம் பேசி ஒரு அட்வான்ஸாவது கொடுத்துவிட்டு வர்ரலாம்’, என்று முதலில் கல்யாண மண்டம் செல்கிறார். ஆனால் அங்கு மொத்தப் பணமும் கட்டப்பட்டு, பணம கட்டிய ரசீதையே, பசுபதியிடம் தருகிறார், மண்டப மேனேஜர்.
பசுபதிக்கு ஆச்சரியம். ‘நமக்காக யார் கட்டியது?’ அப்பொழுதுதான் தெரிந்தது. நம் வள்ளலின் தோட்டத்தில் மேனேஜராக பணிபுரியும் பத்மனாபன்தான் வள்ளல் சொன்னபடி பணம் கட்டியிருக்கிறார், என்று அதோடு உடன் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சீதாராமன் போன்ற வள்ளலின் ஆட்கள், ஆளுக்கொரு வேலையை செய்திருக்கின்றனர்.
கல்யாண மண்டபத்துக்கு மட்டுமல்லாமல், பந்தல் வாடகையில் இருந்து, மைக் செட்வரை பணம் கட்டச்சொல்லியிருக்கறார், நம் வள்ளல்.
திருமண நாள் வருகிறது. முகூர்த்தத்திற்கு இருபது நிமிடத்திற்கு முன்பே நடிப்பிசைப் புலவர் கே.ஆர் . ராமசாமி, சகஸ்ர நாம்ம் ஆகியோருடன் நம் வள்ளலும் வந்து திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்த காட்சி பசுபதி குடும்பத்தினருக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பத்திரிகையை வாங்கிக் கொள்வாரா? மாட்டாரா? வாங்கிக் கொண்ட பிறகு கூட வள்ளல் வருவாரா? மாட்டாரா? என்கிற மனப்போராட்டத்தில் இருந்த பசுபதிக்கு ‘ஒரு தாய் தந்தை ஸ்தானத்திலிருந்து அனைத்து செலவையும், தானே ஏற்றுக்கொண்டு கட்டில், பீரோ, பண்டம், பாத்திரம் அனைத்து சீர் வரிசைகளோடு வந்த வள்ளலை எப்படி மறக்க முடியும். அந்த மனித தெய்வத்தைப்போல் இப்பொழுது மட்டுமல்ல, இனி எப்பொழுது காணப் போகிறேன்?’ என்று பசுபதி பச்சைக் குழந்தையாய் தேம்புகிறார்.
பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா-சில
பாவிகள் ஆணவம் பஞ்சையின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா!
மாறினால் மாறட்டும், இல்லையேல் மாற்றுவோம்.............. Thanks.........
-
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
இம் மூன்று தலைவர்களை உண்மையாக அறியாத எந்த ஒரு அரசியல் தலைவர்கள் எவரும் மக்களின் மனதில் நிற்பவர் இல்லை?
அதற்கு மரியாதைக்குரிய திரு.கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் இந்த விளக்கமே சாட்சி...
" பெரியார் இல்லையென்றால் மைல் கற்கள் எல்லாம் சிவலிங்கங்களாக ஆகியிருக்கும். பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற்றம் காண்பதற்கு அவரே காரணம். மனிதனை மனிதனாக வாழச் செய்தவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனித சமுதாயத் தலைவர் இவர்தான்.
பெரியாரின் சிந்தனைகளில் சிலவற்றை செயல்படுத்தியவர் அண்ணா. அரசியல் ரீதியாகத் தமிழுணர்வை ஊட்டியவர் அவர். சுருக்கமாகச் சொன்னால் பக்குவமான- பண்படுத்தப்பட்ட நஞ்சை நிலம் போன்றவர். இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும்- அவர் சாதனையை எடுத்துக்காட்ட!
எம்.ஜி.ஆரைப்போல் மக்களைக் கவர்ந்த மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எவரும் இலர். இரும்பை காந்தம் கவர் வதைப்போல இந்த நாட்டு மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். இவருடைய
திருப்புகழை எவரும் அழிக்க முடியாது. இவர் ஆகாய நீலத்தைப்
போன்றவர். ஆகாய நீல நிறத்தை யாரும் அழிக்க முடியுமா? "
- கவிஞர் முத்துலிங்கம் ........... Thanks...
-
கடந்த மாதத்தில் தென்காசியில் 2 வாரங்கள் வெற்றி நடை போட்டு, பின்பு செங்கோட்டையில் ஒரு வாரம் வசூல் மழை பொழிந்து... இப்பொழுது நெல்லையில் ரசிகர்களையும், பொது மக்களையும் குதூகலிக்க வைக்க நாளை வருகை தரும் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் "அடிமைப்பெண்" காவியத்தை காண வரும் நல்லிதயங்களை மனமார வரவேற்கிறோம்...........
-
குமுதம் வார இதழ் -25/9/19-------------------------------------------என்னுடைய சத்யா மூவிஸ் தயாரிப்பான "காவல்காரன் " படத்தில் மக்கள் திலகம்* எம் .ஜி.ஆர். நடித்து வந்தார் .அப்போது (67ம் ஆண்டு ) பொது தேர்தல் வந்தது .ஆனால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு மருத்துவமனையில் மரணப்படுக்கையில் மாதக் கணக்கிலே இருந்தார்* உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்தார்* ஆனால் சரியாக பேச முடியாமல் திண்டாடினார்.* அந்த துயரத்தை வார்த்தைகளாலே வர்ணிக்க இயலாது .நேரிலே பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.* நல்லவேளையாக "காவல்காரன் " திரைப்படத்தில் நீண்ட உரையாடல் உள்ள காட்சிகளை எல்லாம் விபத்திற்கு முன்னாலேயே எடுக்கப்பட்டுவிட்டன .* அதற்குப் பின்னாலே எடுத்த காட்சிகளை அவர் பேசமுடியாமல் கஷ்டப்படுகின்ற* அந்தச் சூழ்நிலையில் சிறிய சிறிய வார்த்தைகளை துண்டு துண்டு உரையாடல்களாக மாற்றி அதை பதிவு செய்கிற பகீரத முயற்சியிலே ஈடுபட்டோம்.* அவருக்கு சரியாக பேசமுடியாது . கஷ்டப்படுகிறார் என்பது வெளி உலகிற்கு தெரிந்து வீடாக கூடாதே என்பதால் வழக்கமாக ஸ்டுடியோக்களில் பதிவு செய்ய வேண்டிய உரையாடல்களை எல்லாம் அங்கே பதிவு செய்யாமல் புதிதாக எந்திரங்களை அமைத்து சத்யா*ஸ்டுடியோவிற்கு உள்ளேயே வெளியில் யாருக்கும் தெரியாமல்* அந்த வார்த்தைகளை திரும்ப திரும்பப் பேசவைத்து அவர்களை பயிற்சி எடுத்துக் கொள்ள வைத்து தேய்ந்து போய்ப் பேசப்படுகின்ற அந்த வார்த்தைகளை ஓரளவிற்கு முழுமையான வார்த்தைகளாக மாற்றுகின்ற முயற்சியில் பல மாதங்கள் ஈடுபட்டு அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றோம் .
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு கட்டுரையில் .
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜானகி பதிவு திருமணம் 14.06.1962ல் முக்கியமான குடும்ப நண்பர்கள் முன்னிலையில்
நடந்தது . பிரபல பாரத நாட்டிய புகழ் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தையும் பிரபல இயக்குனருமான திரு சுப்பிரமணியம் அவர்கள் திருமண பதிவில் சாட்சி
கையொப்பம் இட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
.
பிரபல தயாரிப்பாளரும் , மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பருமான திரு சின்னப்பா தேவர் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மக்கள் திலகத்தின் திருமண நாளில் நேரில் வந்து வாழ்த்துக்கள் தெரிவிப்பார் .
மக்கள் திலகம் அவர்கள் எல்லா திருமணம் , மற்றும் குடும்ப நண்பர்கள் இல்ல விழாக்களுக்கும் ,இசை கச்சேரிகளுக்கும் தன்னுடைய துணைவியார் திருமதி ஜானகி அவர்களை அழைத்து சென்று சிறப்பு செய்தார் .
மக்கள் திலகத்தின் அரசியல் - திரை உலகம் - சம்பந்தபட்ட எல்லா துறையிலும் திருமதி ஜானகி அவர்கள் முழு
ஒத்துழைப்பை தந்து மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்த்தார் .
மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் பிளவு பட்ட அதிமுகவின் இயக்கத்தை மீண்டும் இணைத்து இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இழந்த சின்னத்தை மீட்டு மீண்டும் புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னம்
அதிமுக என்ற இயக்கத்தை இயங்கிட வாய்த்த பெருமை திருமதி ஜானகி அம்மையாரே சேரும் .
இந்திய அரசாங்கத்தின் மிக உயரிய விருதான ''பாரத ரத்னா '' பட்டம் மக்கள் திலகத்திற்குகிடைத்த போது அவரது சார்பாக திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார் .
சிறந்த திருமண தம்பதிகள் பட்டியலில் மக்கள் திலகம் - திருமதி ஜானகி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள் .......... Thanks.........
-
ஜெமினி யின் முதல் வண்ணப் படம். எம்.ஜி.ஆர்., அவர்களின் 100 வது படம் "ஒளிவிளக்கு" வெளியான 20-09-1968 நாள் நாளை !... Thanks..
-
சென்னை மிட்லண்ட் 70 நாள் நூர்ஜஹான் 70 நாள் மகாலட்சுமி 77 நாள் வட சென்னை இரண்டு திரையரங்கம் பிராட்வே 98 நாள் அகஸ்தியா 36 நாள் ஓடியது !........... Thanks...
-
மக்கள் குரல் -13/9/19--------------------------------
புதுவை 100 அடி சாலையின்*
எம்.ஜி.ஆர். பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு :* அண்ணா தி.மு .க.ஆர்ப்பாட்டம் .
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் தலைமையில் நடந்தது .----------------------------------------------------------------------------------------------------------------------------
புதுவை சாலைக்கு தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயரை சூட்டவில்லை என்றால் முதல்வர் நாராயணசாமி வீட்டின் முன்னால் எனது உயிரை தியாகம் செய்வேன் என்று அ. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தெரிவித்தார் .
புதுவை 100 அடி சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டிருந்தது . அப்பெயரை*காங்கிரஸ் அரசு மாற்றி கருணாநிதி பெயரை சூட்டப்போவதாக அறிவித்து உள்ளது .அதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள சாரம் பாலம் அருகே இன்று நடந்தது.* அதில் அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.ஓம்சக்தி சேகர் தலைமையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் .**
அப்போது ஓம் சக்திசேகர் பேசியதாவது :
புதுவையில் தி.மு.க* ஆட்சி நடந்தபோது ஜானகிராமன் முதல்வராக இருந்தார் .அவர் புதிய பேருந்து நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். சிலை திறந்து வைத்து*100 அடி சாலைக்கு எம். ஜி.ஆர்.சாலை என்று பெயர் சூட்டினார் .* ஆனால் இந்த ஆட்சியாளர்கள் அந்த பெயரை மாற்றுகிறார்கள் .
1986ல் எம்.ஜி.ஆர். ஆதரவோடுதான் இன்றைய முதல்வர் நாராயணசாமி எம்.பி. ஆக்கப்பட்டார் .* பலமுறை புதுவையில் காங்கிரஸ் ஆட்சி உருவாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உறுதுணையாக இருந்தார்கள் .* ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறார்கள் . இது அரசியல் அநாகரிகம்* நாட்டில் பல மக்கள் பிரச்னை இருக்கும்போது இந்த பெயர் மாற்றம் செய்வது சரியா என்று கவர்னரிடம் நாங்கள் கோரிக்கை மனு அளித்துள்ளோம் .
இந்த செயலை எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் ஏற்கமாட்டார்கள் .* இந்த பெயரை மாற்ற முற்பட்டால் முதல்வர் நாராயணசாமி வீட்டின் முன்பு எனது உயிரை தியாகம் செய்வேன் .**
இவ்வாறு அவர் பேசினார் .
-
மதுரை மீனாட்சி 147 நாள் திருச்சி ராஜா 112 நாள் குடந்தை விஜயலட்சுமி 100 நாள் ஓடியது........ Thanks...
-
ஒளி விளக்கு 1969 ஜனவரி 14 பொங்கலன்று முதல் முறையாக இலங்கையில் திரையிடப்பட்டது. முதல் வெளியீட்டில் Zainstan Colombo , ராஜா யாழ் நகர் ஆகிய திரைகளில் 162 நாட்கள் ஓடி மிக பெரிய வெற்றியை பெற்றது.
1969ம் ஆண்டின் நம்பர் one வெற்றி படம். 1979 மீண்டும் ராஜாவில் திரையிடப்பட்டு 100 நாட்டகள் ஓடியது.......... Thanks...
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.
யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.
அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.......... Thanks...
-
1984 - நவம்பர் மாதம் பெங்களுர் நகரில் 7 அரங்கில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது "ஒளி விளக்கு"...
தேவி - 21 நாட்கள்
சிவாஜி - 14 நாட்கள்
நாகா - 14 நாட்கள்
ஜெயஸ்ரீ - 7 நாட்கள்
பாலாஜி - 7 நாட்கள்
கோபால் -7 நாட்கள்
மாருதி - 7 நாட்கள் - ஓடி வசூலில் வரலாற்று சாதனை புரிந்தது......... Thanks...
-
"ஒளிவிளக்கு" முதல் வெளியீட்டில் ... தஞ்சை - ஸ்ரீ கிருஷ்ணா 99 நாட்கள்... மன்னார்குடி - செண்பகா 99 நாட்கள்...( இரண்டாம் வெளியீட்டில்) 100 நாட்கள் போனஸ் முறையை தவிர்ப்பதற்காக 99 நாட்களில் நிறுத்தப்பட்டது... தகவல்கள்... திரு.சந்திரசேகர்... தஞ்சாவூர்........... Thanks...
-
தினமணி -25/12/1987- வெள்ளிக்கிழமை*-------------------------------------------------------------
எம்.ஜி.ஆர்.
நாடோடிமன்னன், புரட்சி தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் ,எந்த அடைமொழியும் எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தியையும், பெருமையையும் வெளிப்படுத்த முடியாது .
அரை நூற்றாண்டு காலமாக தமிழக மக்களை சினிமா, அரசியல், இரண்டு வகையிலும் கட்டி போட்டு வைத்த* இந்த பெயர் தமிழக* சரித்திரத்தின்* ஏடுகளில் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது .
இன்று சென்னையை பொறுத்தவரை இது எம்.ஜி.ஆரின் திருநாளாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது .* மருத்துவ பல்கலை கழகத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டு அதை குடியரசு தலைவர் திறந்து வைக்கும் வைபவம் நிகழ இருந்தது .லட்சக்கணக்கான எம்.ஜி.ஆர். ரசிகர்களும், அவரது கட்சி தொண்டர்களும் இவ்வைபவத்தைக் காண தொலை* தூரங்களில் இருந்து வந்து குழுமிக் கொண்டிருந்தனர் .
அவர்கள் காண கொடுத்து வைத்தது எம்.ஜி.ஆரின் பூத உடலைத்தான் .இறுதி யாத்திரையில் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்த முடிந்ததே என்று ஆறுதல் பெற வேண்டும் .
சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, எம்.ஜி.ஆரின் சாதனைகள் நிகரற்றவை .சினிமாவுக்கு ஒரு புதிய அர்த்தத்தையும், கொள்கையையும் வகுத்து கொடுத்தவர் .நல்லவனுக்கு நல்லவனாக ,பொல்லாதவனுக்கு பொல்லாதவனாக ,ஏழை பங்காளனாக , வீரதீர சாகச புருஷனாக , திரைவானில் வெற்றிக்குமேல், வெற்றியாகக் குவித்தார் .* அதுவே, அவரை மக்களின் இதயக்கனியாக்கியது .* *வாரிவாரி வழங்கினார் .* உண்மையிலேயே கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் அவருடையது .
திராவிட இயக்கம் அவரை வளர்த்தது. அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது .அண்ணாவின் உண்மைத் தொண்டனாக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். கடைசி வரை அண்ணாவின் கொள்கை வழியே நடக்க முயன்று வந்தார் .
மதிய உணவு திட்டமும், ஏழைகளுக்கான பல இலவச திட்டங்களும் அவரது ஆட்சியின் தனி சிறப்பான அம்சங்கள்.* கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு நிலையான ஆட்சியை அவரால் தரமுடிந்தது .* அதுவே ஒரு பெரிய சாதனை .
அவருடைய தற்காப்பு உணர்வு வியக்கத்தக்கது .* தில்லி ஆட்சியை எதிர்த்துக் கொண்டு நிலை பெறமுடியாது என்பதை அவர் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டு தனது வெற்றிகளை பிரதமர்களின் வெற்றிகளோடு இணைத்துக் கொண்டார் . தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகளைக்*குறைத்து மதிப்பிடுவதற்கு இல்லை .* இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பிற்கும் உரிமைகளுக்கும் உண்மையிலேயே அவரால் முடிந்தவரை பாடுபட்டார் .அவை பலனளிக்காமல் போனது எம்.ஜி.ஆரின் குற்றமல்ல .
தமிழ்நாட்டில் தமிழை அரியாசனத்தில் ஏற்றி வைத்து தமிழ் மொழி தொடர்பான அனைத்து முயற்சிகளுக்குமே ஆதரவும் ஊக்கமும் தந்து வந்தார் .
மூன்றாண்டு காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு காலனுடன் போராடி வந்தார் .ஆனால் வியக்கத்தக்க மனத்திட்பத்துடன் கடைசி மூச்சுவரை சோராது செயல்பட்டார் . நேருவின் சிலை திறப்பு விழாவில் பிரதமருடன் அவர் காட்சி கொடுத்ததும் பேசியதும் மனதைவிட்டு நீங்குமுன்பே அவர் மூச்சு அடங்கிவிட்டது . தமிழக வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது .
சினிமாவிலும், அரசியலிலும் சாதனை படைத்த சரித்திர நாயகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூரூம் தலையங்கம் .
-
மறு வெளியீடுகளிலும் சக்கை போடு போட்ட இணையில்லா வெற்றி காவியம் "ஒளி விளக்கு"... திரும்ப, திரும்ப, மீண்டும், மீண்டும்... திரையிட்டாலும் இப்படி சாதனை வசூல் பிரம்மாண்ட வெற்றியை காண இயலுமா?! என (மற்ற) எல்லோரையும் ஏங்கி தவிக்க வைத்த வெற்றி காவியம்... Thanks...
-
-
-
-
-
-
-