-
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*04/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------
திரைப்பட உலகில் ஒவ்வொரு நிமிடத்தையும் காசு வீணாக்கக்கூடாது என்பது கட்டாயமான ,சொல்லப்படாத, எழுதப்படாத விதி.* இப்படி இருக்கும்போது*வேட்டைக்காரன் படப்பிடிப்பில் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்து ,எம்.ஜி.ஆர். அவர்களிடம்*சொல்கிறார்* . நாம் தினமும் படப்பிடிப்புக்கு வரும்போது நல்லமேடு என்ற பகுதியில் வரும்போது தமிழகத்தை சார்ந்தவர்கள் அணைக்கட்டு பகுதிக்கு வேலைக்கு வந்திருக்கிறார்கள் .* வேலை முடிந்து செல்லும்போது கூலி வாங்கிய கையோடு தங்களை பார்த்துவிட்டு செல்ல அவர்கள் விருப்பப்படுகிறார்கள்.அவர்கள் சுமார் 300 பேர். பலமுறை என்னிடம் வேண்டுகோள் வைத்தார்கள் எப்படியாவது ஒரு முறையாவது தங்களை பார்த்துவிட வேண்டும் என்று .* ஒருவேளை இன்று* முடியாவிட்டால் நாளையாவது கூலி வாங்கியபின் தங்களை பார்க்க முடிவு செய்துள்ளார்கள் என்றேன் ..* சரி, பரவாயில்லை சற்று அமைதியாக இருங்கள் என்று கூறி ,படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ,தேவரின் பிளைமவுத் காரில் ,மாரிமுத்து மற்றும் தன்* உதவியாளரை அழைத்து கொண்டு நேராக அணைக்கட்டுபகுதியில் வேலை செய்யும் தொழைலாளர்களை சந்திக்க செல்கிறார் . அவர்கள் வேலையை முடித்துவிட்டு தங்கள் ஊருக்கு மூட்டை முடிச்சுகளுடன் புறப்படும் நேரம் .* எம்.ஜி.ஆர்.அவர்களை கண்டதும் அவர்கள்* வியந்து புல்லரித்து போகிறார்கள் .* தங்கள் கையில் உள்ள பலாப்பழம், வாழைப்பழம்,* கொய்யாப்பழம் போன்றவற்றை கொடுத்து எம்.ஜி.ஆர். அவர்களை சாப்பிட சொல்லி மகிழ்ச்சி அடைகிறார்கள் நீங்கள் மட்டும் இன்று வராமல் போயிருந்தால் நாங்கள் நாளைக்கு காத்திருந்துதான் உங்களை பார்க்கவேண்டி இருந்திருக்கும் .* அவர்கள் தினக்கூலியாக ரூ.5/- ரூ.10/-* என்று வாங்கிக்கொண்டு இருந்தார்கள். அந்த தினக்கூலியை கூட தியாகம் செய்துவிட்டு எம்.ஜி.ஆரை பார்க்க அவர்கள் சித்தமாக இருந்தார்கள் என்பதுதான் வேடிக்கை .* தொழிலாளர்களை அப்படி காக்க வைப்பது தவறு என்று கருதியது மட்டுமல்லாமல் நேரில் சென்று சந்தித்தது மட்டுமின்றி அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக ,காரில் உள்ள பணப்பெட்டியை கொண்டுவர சொல்லி, அனைவருக்கும் பணக்கட்டுகளை பிரித்து ,ரூ.5/-, ரூ.10/- நோட்டுகளை கட்டுக்கட்டாக பிரித்து அந்த 300 பேருக்கும்*கொடுத்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் .* பின்னர் அனைவரையும் ஊருக்கு அனுப்பிவைத்த பின்னர் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டாராம் .*படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர்., மாரிமுத்து, உள்பட சிலர் பங்கேற்கவில்லை என்று தெரிந்து தேவர் அனைவர்மீதும் கோபம் கொண்டு கடிந்து கொண்டாராம் .*
மறுநாள் காலையில் காபி அருந்த எழுந்த பட தயாரிப்பாளர் தேவர் ,படப்பிடிப்பில் அனைவரும் அதிகாலையிலேயே ஆஜரான விஷயம்* அறிந்து அதிர்ந்து போனாராம். எல்லாம் எம்.ஜி.ஆரின் ஏற்பாடு .* முதல் நாள் மாலையில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சொல்லி கொள்ளாமலேயே தேவரின் காரை எடுத்து கொண்டு, உதவி இயக்குனர் மாரிமுத்து, தன்* உதவியாளருடன்*ரசிகர்களை, தொழிலாளர்களை சந்தித்து அவர்களை மகிழ்விக்கும்பொருட்டு*சென்றதை அறிந்த தேவர் ,அனைவரையும் கடிந்து கொண்டதை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ,தேவரை திருப்திப்படுத்த இந்த யுக்தியை பயன்படுத்தினார்*மறுநாள் காலை 5.30 மணிக்கெல்லாம் தன் யூனிட் ஆட்களை திரட்டி கொண்டு படப்பிடிப்பிற்கு எம்.ஜி.ஆர். வருகை தந்ததை பார்த்த தேவர் உண்மையில் திகைத்து போனார் .* விஷயம் அறிந்து பதறி போன தேவர், என்ன முருகா ,இப்படி அதிகாலையில் கடுங்குளிரில் வந்துவிட்டீர்களே என்று அதிர்ந்துவிட்டாராம் .**கொஞ்சம் தாமதமாக வந்திருக்கலாமே என்றதற்கு, இல்லை,முதலாளி, நேற்று உங்களிடம் சொல்லி கொள்ளாமலேயே, படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தொழிலாளர்களை சந்திக்க சென்றுவிட்டேன்.* அந்த நேரத்தை சரிசெய்து , படப்பிடிப்பை முடித்து கொடுத்து ,கோபம் கொண்ட உங்களையும் சாந்திபடுத்துவதற்காக*.எடுத்த முயற்சி இது என்று* அவரை திருப்திபடுத்தினாராம் .* அப்படி உழைப்பை கூட தயங்காமல், மற்றவர்கள் மனம் நோகாமல் நேரத்தோடு சரிசெய்து தந்து அவர்களை திருப்தி அடைய செய்வதில்*எம்.ஜி.ஆர். வல்லவராக இருந்தார் .**
ஒருவர் ஆட்சியில், அதிகாரத்தில், பதவியில் இருக்கும்போது அவரது பெயர்*எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.* ஆனால் ஆட்சி, அதிகாரம், பதவி எல்லாம் போனபிறகு அவரை யாருக்கும் தெரியாமல் போகும் வாய்ப்பு ஏற்படும் அப்போது அவரை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்பார்கள் .எம்.ஜி.ஆர். அவர்கள்* இன்றைக்கு ஆட்சியில் , அதிகாரத்தில், பதவியில் இல்லை. அவரே* மறைந்து போனாலும், அவரது பெயர் நிலைத்து நிற்கிறது* என்று சொன்னால் அவர் மழைக்கான காளான் அல்ல ஒரு ஆலமரம் போன்றவர் .*
திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* *புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்*தன்னுடைய எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் , தனக்கு நேர்ந்த, தனக்கு ஏற்பட்ட எண்ணத்தின் விளைவாக, ஒரு மிருகபலத்தோடு இருந்த ஒரு மாபெரும் அரசாங்கத்தின் ஆட்சியை எதிர்த்து, கூக்குரல் இட்டு, அதை வெற்றிகரமாக ஆக்கி காட்டிய அந்த தலைவருக்கு பின்னால் எத்தனையோ உப தலைவர்கள் இருந்தார்கள் . அந்த தலைவர்களின் வரிசையில் காளிமுத்து போன்ற மிகுந்த பேச்சாற்றல் மிக்கவர்கள், வலம்புரி ஜான் போன்றவர்கள் , கவியரசு முத்துராமலிங்கம், நா.காமராசன் , முத்துலிங்கம், என்னை போன்றவர்கள் ,கோவைத்தம்பி, திருப்பூர் மணிமாறன் ,பொள்ளாச்சி ஜெயராமன்*போன்றவர்கள்இப்படி எண்ணற்ற தோழர்களெல்லாம் அன்றைக்கு படைக்களங்களாக ,போர்க்குரல் கொடுத்து , ஒவ்வொரு ஊரிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தி, கொள்கை விளக்கங்கள் அளித்து , அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எத்தனையோ தலைவர்கள் உருவானார்கள் .* மாணவரணி தலைவராக இருந்த வெள்ளைச்சாமி, சட்ட கல்லூரி**மாணவர்களை வெளியே அழைத்து வந்து, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை நீக்கிய நேரத்தில் மாபெரும் ஊர்வலம் நடத்தி, மறியல் போராட்டம் செய்ததால்* அவர் போட்டியிட* கேட்ட தொகுதி ஒன்று. ஆனால் தலைவர் அவருக்கு ஒதுக்கிய தொகுதி ஆத்தூர்..* ஆத்தூரில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகிறார். ஆனால் முதல் கட்ட அறிவிப்பில் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. 2ம் கட்ட அமைச்சரவை பட்டியலை எம்.ஜி.ஆர். அவர்கள் உருவாக்குகிறார் .* சட்டமன்றத்தில் வெள்ளைச்சாமி பங்கேற்கிறார். அப்போதெல்லாம் தொலைபேசியில் தலைவரிடம், அதிகம் பேசும் வாய்ப்பு பெற்றவர் .* அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் நான் உடுமலையில் இருந்தேன். வெள்ளைச்சாமி அவர்கள் மடத்துபுரத்தில்* இருந்து நான்கு நாட்களுக்கு ஒருமுறை தலைவரிடம் பேசுவார் .* அதாவது இந்த ஊரில் இந்த நிகழ்ச்சி, அந்த ஊரில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்று குறிப்பிட்டு பேசுவார் .* என்னென்ன முக்கிய செய்திகள் தலைவருக்கு அனுப்ப வேண்டுமோ அதை செய்வதில் கெட்டிக்காரர், தலைவருடன் நெருக்கமாக பேச கூடியவர் . நான் வெள்ளைச்சாமி பேசுகிறேன் என்று சொன்னாலே போதும், உடனடியாக* தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார் . நானும் என் பங்கிற்கு சில நிகழ்வுகளை எல்லாம் குறிப்பிட்டு தலைவரிடம் சொன்னேன்.***
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 2வது* கட்ட அமைச்சரவை பட்டியலில் , கட்சியில் புதிதாக சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் என்பவருக்கு மந்திரி பதவி அளிக்கிறார் . முதல் சுற்றில் பி.டி.சரஸ்வதி என்பவர் அமைச்சர் ஆக்கப்பட்டார் .சுப்புலட்சுமி ஜெகதீசனை அமைச்சராக்கியது வெள்ளைச்சாமிக்கு பிடிக்காததால்*தலைவரை தி.நகர் அலுவலகத்தில் தொடர்பு கொள்கிறார் . அப்போது* அந்த அலுவலகத்தில் உதவியாளர் முத்து , ஆடை அலங்கார நிபுணர் முத்து*,உதவியாளர் மகாலிங்கம் போன்றவர்கள் அங்கு இருப்பார்கள் .* வெள்ளைச்சாமி போனில் உதவியாளர் முத்துவிடம் , நான் தலைவரிடம் பேச வேண்டும் என்கிறார் .* தலைவரிடம் பேசும்போது, நீங்கள் புதியதாக ஒருவரை கட்சியில் சேர்ந்தவருக்கு மந்திரி பதவி அளித்துள்ளீர்கள் .என்று கடும் கோபமாக பேசுகிறார். எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை . எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார் .* உணவு ஜீரணம் ஆகவில்லை என்றால் நான் ஒரு மருந்தை சொல்கிறேன். மருந்தகத்தில்* சென்று கேட்டு வாங்கி பயன்படுத்து .எல்லாம் சரியாகி விடும் என்று கிண்டல் அடிக்கிறார் தலைவர் ..* ஏனென்றால் வெள்ளைச்சாமியிடம்* தலைவர் மிகவும் நெருங்கி பழகுபவர், நேசித்தவர் .அதனால் கோபப்படவில்லை . சில நாட்கள் கழித்து வெள்ளைச்சாமியை, கல்வித்துறையின் துணை அமைச்சராக நியமிக்கிறார் .* 2 வது* சுற்றில் சிலருக்கு மந்திரி பதவி அளித்த பிறகு, 3 வது* சுற்றில் சிலருக்கு பதவிகள் அளிக்க நான் தவறிவிட்டேன் போலிருக்கிறது என்று சொல்லி* வெள்ளைச்சாமி, ஐசரிவேலன்*(இவர் தி.மு.க. கோட்டையாய் இருந்த சென்னையில்* ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளராக திகழ்ந்ததால் ) எஸ்.எம்.துரைராஜ் ( முதல்வருக்கே பாராளுமன்ற செயலாளராக இருந்தவர் )கோவையை சார்ந்த கிட்டு என்பவர் (போக்குவரத்து துறையின் துணை அமைச்சர்) காட்பாடியை சார்ந்த ஒருவரை சட்டத்துறை துணை அமைச்சராக நியமிக்கிறார் . ஐசரிவேலனை அறநிலைய துறை, துணை அமைச்சராகவும், நியமித்தார் .* வெள்ளைச்சாமியின் கோபம் நியாயமானதே என்று சொல்லி அதை தணிப்பதற்கு சிலருக்கு பதவிகள் அளித்தார். மகளிர் அணியில் சிலருக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்கிற எண்ணத்தில் புதியவர்கள் சிலருக்கு பதவிகள் தரப்பட்டது .ஆனால் பழைய தியாகிகளை அது பாதிப்பதாக இருந்தால் அப்படியே விடக்கூடாது,என்று வெள்ளைச்சாமிக்கு பதவி கொடுத்தார். ஆனால் அழகு திருநாவுக்கரசு, தஞ்சை சாமிநாதன் போன்றவர்களுக்கு அவர்கள் தேர்தலில் தோல்வியுற்றதால் பதவி அளிக்கவில்லை .* எனக்கு கம்பம் தொகுதியில் போட்டியிட எம்.ஜி.ஆர். அவர்கள் வாய்ப்பு அளித்தார். அதற்கு சிலர் உள்ளூரில் எதிர்ப்பு தெரிவித்ததால் வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டாம் என்று கூறினார் .மாநிலம் முழுவதும் மாணவர்களை உருவாக்கி, தயார் செய்து தேர்தலில் போட்டியிட* அனுமதித்தார் .*
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் , தொண்டர்கள், உப தலைவர்கள் யார் எந்த கருத்தை சொன்னாலும்,கடுமையாக விமர்சித்தாலும்* பொறுமையாக கேட்டு ,கோபப்படாமல் நடவடிக்கை எடுத்து வந்தார் . அவர்கள் சொன்னது நியாயம்தான் .நான்தான் ஏதோ தவறு செய்துவிட்டேன் போலுள்ளது என்பார் .* வீட்டு வசதி வாரிய துறை அமைச்சராகவும், பின்னர் பொதுப்பணி துறை அமைச்சராகவும் திரு.எஸ்.ஆர்.ராதா இருந்தார் .* அவர் சொல்வதை கேட்டால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள் .* எனக்கு தெரிந்து மிகவும் சிக்கனத்தை கடைபிடித்த அமைச்சர் எஸ்.ஆர்.ராதாதான் .* இவரும் , கலைமணி என்கிற அமைச்சரும் பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருந்தார்கள் .* இரண்டு அமைச்சர்களும் ஒரே காரில் பயணித்து,கோட்டைக்கு சென்று பணியாற்றிவிட்டு, இருவரும் ஒன்றாக ஒரே காரில் வீட்டுக்கு திரும்பும் வழக்கம் உடையவர்கள் .* காரணம் பணத்தை வீணாக்க கூடாது என்பதில் இருவரும் ஒருமித்த கருத்து உடையவர்கள் .*அரசு பணத்தை வீணாக செலவு செய்ய விரும்ப மாட்டார் எஸ்.ஆர்.ராதா. அப்படிப்பட்டவர் மீது யாரோ சிலர் புகார் சொல்லியோ, ஏதோ ஒரு காரணத்தால்*பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் .* அன்று மாலையே ஒரு ஸ்கூட்டரில் அவர் வெளியே கிளம்பிவிட்டார் . அவரிடம் அமைச்சராக இருந்தாலும்* கார் கிடையாது .மயிலையில் ஒரு மருந்தகம் அருகில் நண்பர்களுடன் அளவளாவி கொண்டிருப்பார் .* மூன்று மாதம் கழித்து தலைவர் என்னிடம் எஸ்.ஆர்.ராதா அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டபோது , அவர்* ஸ்கூட்டரை எடுத்து கொண்டு வெளியே சென்று நண்பர்களுடன் பேசி கொண்டிருப்பார் என்று சொன்னேன் .* உடனே ஒன்றும் சொல்லாமல் டிக் எனும் நிறுவனமாகிய தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வாரிய தலைவராக தலைவர் அவரை நியமித்தார்* *இவ்வாறு திரு. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .***
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர்.- நடிகர் பீலிசிவம் உரையாடல்* - உழைக்கும் கரங்கள்*
2.திருமணமாம், திருமணமாம் - குடும்ப தலைவன்*
3.உழைக்கும் கைகளே ,உருவாக்கும் கைகளே - தனிப்பிறவி*
4.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்* - தெய்வத்தாய்*
5.திரு. கா. லியாகத் அலிகான் பேட்டி*
*.**
-
சினிமாதுறையில் நெடுங்காலமாக
முடிசூடா மன்னனாக இருந்த புரட்சி நடிகர் காலத்தில் அவருக்கு அடுத்த ஸ்தானம் அதாவது 2வது 3வது இடத்தில் யாரும் இல்லாமல் காலியாகவே இருந்தது. 4வது இடத்துக்குதான் பலத்த போட்டி.
காட்டு யானை கோபமாக வரும் போது மற்ற மிருகங்கள் எதுவும் அருகில் வராமல் ஒதுங்கிக் கொள்ளும். யானை சாப்பிடும்போது
சிந்துகின்ற உணவு லட்சக்கணக்கான உயிரினங்களுக்கு உணவாக அமைவது போல எம்ஜிஆர் நடிக்க முடியாத படங்கள்தான் மற்றவர்களுக்கு கிடைத்தது என்று கூட சொல்லலாம்.
எம்ஜிஆர் மட்டும் அதிக படங்களில் நடித்திருந்தால் மற்ற நடிகர்களுக்கு இத்தனை படங்கள் கிடைத்திருக்காது. ஆனாலும் இந்த கைபுள்ளைங்க சாதாரண தகரத்தை வைத்து கொண்டு இதுதான் தங்கம் என்று சாதிப்பதில் வல்லவர்கள்.
தலைவர் கைபுள்ளைங்களின் செயல்களை வைத்து
'பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவரெல்லாம் போனாங்க' என்று பாடினாலும் இன்று வரை கைபிள்ளைகளின் பிராடுத்தனம் குறைந்தபாடில்லை. பொய் சொல்லி பித்தலாட்டம் செய்துதான் படத்தை ஓட்டுகிறார்கள்.
எம்ஜிஆரோ எட்டாத தூரத்தில் இருக்கும் போது யாருக்காக படத்தை ஐயனின் கைபுள்ளைங்க ஓட்டுறாங்கன்னு தெரியலை. குற்றம் செய்பவன் அடுத்தவருக்கு தெரியக்கூடாது என்று நினைத்துதான் செய்வான்.
ஆனா நம்ம கைபிள்ளைங்க ஊரறிய உலகமறிய எந்தவித வெட்கமும் இல்லாமல் படத்தை ஓட்டுவார்கள்.
உதாரணத்திற்கு தூத்துக்குடியில் எப்படி 100 நாட்கள் ஓட்டினார்கள் என்பதை பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன்.
இப்போது வசூல் விபரங்கள் கொடுத்திருக்கிறார்கள் அதை பாருங்கள் உண்மை தெரியும்.
தூத்துக்குடியில் "சிவந்தமண்" 50 நாட்கள் வசூல் 91808.53 என்று கொடுத்திருக்கிறார்கள். 101 நாட்கள் வசூல் ரூ 107531.91 அப்படியானால் மீதி 51 நாட்கள் வசூல் ரூ 15723.38
இது என்ன கொடுமை கைபிள்ளைகளே. ஒரு நாளைக்கு 300ரூக்கு ஓட்டுவதாயிருந்தால் எம்ஜிஆர் படம் எல்லாமே தூத்துக்குடியில் வெள்ளிவிழாதான்.மேலும் முதல் வார வசூல் ரூ 18000 என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஹவுஸ்புல் காட்சி ஒன்றிற்கு சுமார் ரூ 800 தாண்டி வரும். முதல் வாரத்தில் சுமார் 24 காட்சிகளுக்கு(ஞாயிறு 5 காட்சிகள்) ரூ 20000 க்கு மேல் வசூலாக வேண்டும். ஆனால் வந்ததோ ரூ 18000 .
முதல் வாரத்திலே வாயைப்பிளந்த ஒரு படத்தை எப்படியப்பா 101 நாட்கள் ஓட்டினீர்கள். இப்படி செத்த பிணங்களை ஸ்டெச்சரில் வைத்துக்
கொண்டு 100 நாட்கள் சுமப்பதால் கைபிள்ளைகளை "பிணம்தூக்கி"
என்ற புது பெயரில் அழைக்கலாம்.
ஒவ்வொரு பிணத்தையும் 100 நாட்கள் 175 நாட்கள் என்று தூக்கி திரியும் கைபுள்ளைங்க நிச்சயம் ஐயனுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
வாரத்துக்கு மினிமம் வசூல் "சிவந்த மண்" காலகட்டத்தில் ரூ 2900. அந்த மினிமம் வசூல் கூட வராமல் வெளிநாட்டில் எடுத்த படத்தை எப்படி ஓட்டினீர்கள் என்று சற்று விளக்கமுடியுமா?
பிறகு ஏன் ஸ்ரீதர் கடனில் மூழ்க மாட்டார். அதாவது இரண்டாவது பகுதி 51 நாட்கள் ஓட்டுவதற்கு சுமார் 6000 ரூ எக்ஸ்டிரா செலுத்தி ஓட்டினீர்களா? இது ஒரு பொழப்பா? இவர் ஒரு நடிகன்?அதற்கு கைபுள்ளைங்க ரசிகனுங்க. வெட்கமாயில்லை.
இவ்வளவு கேவலமாக 101 நாட்கள் ஓட்டி விட்டு "உரிமைக்குரல்" வெறும் 68 நாட்கள்தான் ஓடியதாம். அந்த 68 நாட்கள் வசூல் தெரியுமா? உங்களுக்கு கைபிள்ளைகளே. "உரிமைக்குரல்" 68 நாட்கள் வசூல் ரூ 168092.90. "உரிமைக்குரல்" 68 நாட்களில் பெற்ற வசூலை 101 நாட்கள் ஓட்டியும் அதில் 65 சதமானம் கூட பெறமுடியவில்லை.
"உரிமைக்குரல்" 100 நாட்கள் ஓடியிருந்தால் நிச்சயம் 2 லட்சத்தை தாண்டியிருக்கும். அது மட்டுமா? "தங்கப்பதக்கத்தை" 50 நாட்கள் கூட ஓட்ட முடியாத நீங்கள் "சிவந்த மண்ணை" 4 வாரத்தில் பிணமான படத்தை 101 நாட்கள் தூக்கி சுமந்தது சாதாரண காரியமல்ல.
தூத்துக்குடியில் 6 வாரத்தில் ரூ60000 வசூல் செய்த "பட்டிக்காடா பட்டணமா" 50 நாளில்
எடுக்கப்பட்டு விட்டது. அப்படியானால் "சிவந்த மண்" மொத்த வசூல் ரூ 45000 தான் வந்திருக்க வேண்டும். 100 நாட்கள் பிணம் சுமந்த கூலி சேர்த்தாலும் 65000 க்கு மேல் வர வாய்ப்பே இல்லை. மதுரையில் மட்டும் "ப.பட்டணமா"(561000) "சிவந்தமண்ணை" (337000)விட கூடுதல் எப்படி பெற்றிருக்க முடியும். மதுரையில் "ப.பட்டணமா" ரூ 300000 க்குள் வசூல் வந்திருந்தால் சிவந்தமண் 101 நாட்கள் வசூலை நாம் ஏற்றுக் கொள்ளலாம். தூத்துக்குடியில் பிணம் சற்று கனமாக இருந்ததால் கூலி அதிகம் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஆமா, தலைவர் கூடவே அதிகமாக போட்டி போடுகிறீர்களே? அவருடைய வருமானமும் உங்க ஐயனின் வருமானமும் என்ன அருகிலா இருக்கிறது. உங்க ஐயன் வருடத்துக்கு 8 படங்கள் நடிக்கின்ற வருமானத்தை விட தலைவர் ஒரு படத்துக்கு அதிகம் வாங்குவது தெரியுமா? தெரியாதா? இதோ தலைவரின் வருமானவரி காலத்தில் செலுத்தியது போக வரிபாக்கியை செலுத்திய விபரங்கள் தருகிறோம். உங்க ஐயனின் வருமானவரி செலுத்திய விபரங்களை தரமுடியுமானால் தெரிந்து கொள்ளலாம் ஐயனின் வருமானத்தை.
ஒரு நாலாந்தர நடிகனின் வருமானத்தை வைத்துக் கொண்டு முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதை போல புலம்புகினற உங்களை பார்த்து அழுவதா? சிரிப்பதா? ஒண்ணும் புரியவில்லை.
தியேட்டரை இடித்த இடிபாட்டுக்குள் வசூலை தேடி போட தெரிகிறது. ஐயனின் வருமானவரி கிடைக்காமலா போய் விடும்..போய் தேடுங்கள் இல்லை அதற்கும் பட்டறை வரியை ரெடி பண்ணி தாருங்கள் பார்ப்போம். அதுவரை கப்ஸா விடுவதை நிறுத்தி கொள்ளுங்கள்..........ksr...
-
தனியார் தொலைக்காட்சிகளில் பொன்மன செம்மல்*எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*பட்டியல் (01/11/20 முதல் 06/11/20 வரை)
----------------------------------------------------------------------------------------------------------------------
01/11/20 -வசந்த் டிவி - காலை 9.30* மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * * *முரசு டிவி _மதியம் 12மணி /இரவு 7மணி -அலிபாபாவும் 40 திருடர்களும்*
* * * * * * * *ஜெயா டிவி* - பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * * மீனாட்சி டிவி - இரவு 8.30 மணி - விவசாயி*
02/11/20- சன் லைப் - காலை 11 மணி - நம் நாடு*
* * * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - கன்னித்தாய்*
03/11/20 -மெகா டிவி-அதிகாலை 1 மணி - சக்கரவர்த்தி திருமகள்*
* * * * * * * *சன் லைப்* - காலை 11 மணி -* காவல்காரன்*
* * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - தர்மம் தலை காக்கும்*
04/11/20* -சன் லைப் - காலை 11 மணி - நல்ல நேரம்*
* * * * * * * * *முரசு டிவி - மதியம் 12 மண/-இரவு 7மணி -தாயின் மடியில்*
* * * * * * * * மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * * மெகா 24 -பிற்பகல் 2.30மணி* - தாய்க்கு பின் தாரம்*
* * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி - நீரும் நெருப்பும்*
05/11/20 - வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - தொழிலாளி*
* * * * * * * *வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி - தனிப்பிறவி*
* * * * * * * *முரசு டிவி - பிற்பகல் 3.30 மணி - கொடுத்து வைத்தவள்*
* * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - நீரும் நெருப்பும்*
06/11/20 -மெகா டிவி -அதிகாலை 1 மணி - தொழிலாளி*
* * * * * * * * சன் லைப் -காலை 11 மணி - நவரத்தினம்*
* * * * * * * *மெகா டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * *சன் லைப் -மாலை 4 மணி-நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி - சங்கே முழங்கு*
* * * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி -சிரித்து வாழ வேண்டும்*
* * * * * * * *
-
1961 ல் கடல் கடந்த இலங்கை நாட்டில்...
மாபெரும் வெற்றி முழகத்தை நிலை நாட்டிய காவியங்கள் இரண்டு மட்டுமே!
இரண்டும் 100 நாட்களை
கடந்து சாதனைகள் .....
+++++++++++++++++++++++++++
நடிகப்பேரரசு...
வசூல் பேரரசு...
புரட்சிப்பேரரசு...
மக்கள் திலகத்தின்
திருடாதே
திரைக்காவியம்
தாய் சொல்லைத்தட்டாதே திரைக்காவியம்.
+++++++++++++++++++++++++++++
மக்கள் திலகத்தின்
திருடாதே
கொழும்பு...யாழ்நகர்
100 நாட்களும்...
புரட்சி நடிகரின்
தாய் சொல்லைத்தட்டாதே
கொழும்பு
கிங்ஸ்லி 126 நாட்களும்...
வெள்ளவத்தை
பிளாசா 53 நாட்களும்
ஒடி முதல் சென்டரில்
179 நாட்கள் ஒடி சாதனை....
அடுத்து...
யாழ்நகர்
வெலிங்டன் 105 நாட்களும்...
மனோகரா 47 நாட்களும்...
மட்டகளப்பு விஜயா 38 நாட்களும்..
மொத்தம் 190 நாட்களும் ஒடி சாதனை.
+++++++++++++++++++++++++++++++
1961 ல் இரண்டு காவியங்கள் போல் எந்த படமும் இந்த அளவுக்கு ஒடியதில்லை.............bsr...
-
நவம்பர் 7 ம்தேதி...
தீபாவளி திருநாளில் ...
வெளியாகி மாபெரும்
வெற்றிகளை குவித்த
நடிகப்பேரரசின்
மூன்று வரலாற்றுக் காவியங்களின் சாதனைகள்...
++++++++++++++++++++++++++++++++
........07.11.1961 - 07.11.2020.....
60 வது ஆண்டு பவளவிழாவை
சந்திக்கும்..........
மக்கள் திலகத்தின்
" தாய் சொல்லைத் தட்டாதே"
++++++++++++++++++++++++++++
1961 ம் ஆண்டு தீபஒளி நாளில் வெளியாகி புதிய சாதனையை ஏற்படுத்திய முதல் துப்பறியும் காவியம்.
++++++++++++++++++++++++++++++
சென்னை
பிளாசா...பாரத்...மகாலட்சுமி
மதுரை....திருச்சி...சேலம்....
கோவை....
இலங்கை
கொழும்பு....யாழ்நகர்...
என 9 திரையில் 100 நாளை கடந்து
வெற்றி முழக்கம்....
++++++++++++++++++++++++++++
38 திரையில் 50 நாட்கள் கடந்து வெற்றி.
++++++++++++++++++++++++++++++++++
அடுத்து....
.......07.11.1969 - 07.11.2020.....
பொன்மனச்செம்மலின்
"நம் நாடு" காவியம்
தீபாவளி பரிசாக மகிழ்ச்சி
பொங்க வெளிவந்தது....
52 ம் ஆண்டின் தொடக்கவிழா...
++++++++++++++++++++++++++++++
சென்னை
சித்ரா...கிருஷ்ணா...சரவணா...105 நாள்
சீனிவாசா 77 நாள்.
மதுரை 133 நாள்
திருச்சி 119 நாள்
சேலம் 109 நாள்
கோவை 105 நாள்
குடந்தை 100 நாள்
இலங்கை கொழும்பு 160 நாள்
கெப்பிட்டல் - பிளாசா
இலங்கை யாழ்நகர் 105 நாள்..
வெலிங்டன்
+++++++++++++++++++++++++
52 அரங்கில் 50 நாளை கடந்து சாதனை.
++++++++++++++++++++++++++++++++++
அடுத்து....
.......07.11.1974 - 07.11.2020......
47 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
மகத்தான மகுடம் பதித்த காவியம்...
புரட்சித்தலைவரின்
" உரிமைக்குரல்"
++++++++++++++++++++++++++++++++
12 திரையில் 100 நாட்கள்...
சென்னை
ஒடியன்..மகாராணி...உமா
திருச்சி...சேலம்..தஞ்சை..
குடந்தை...பட்டுக்கோட்டை...
மதுரை 200 நாள்... நெல்லை 180 நாள்.
ஈரோடு 155 நாள்....கோவை 150 நாள்..
+++++++++++++++++++++++++++++++++
72 ஊர்களில் 50 நாளை கடந்து சாதனை.
++++++++++++++++++++++++++++++++++
07.11.2020 ம் தேதி அன்று.....
நடிகப்பேரரசின்
3 காவியங்கள்
வெளியான
வெற்றி தினம் ஆகும்...........ukr...
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் , . திரையுலகில் நடிகர்கள், நடிகைகள், கவிஞர்கள் பலரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். தனது படங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவார். அவரது படங்கள் மூலம் அறிமுகமான எல்லோருமே திறமை மிக்கவர்களாக விளங்கினர். அப்படி அறிமுகமான கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர், முறையாகத் தமிழ் கற்று, பல சிறந்த பாடல்களை எழுதியுள்ள புலவர் புலமைப்பித்தன்!
படிக்கும் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தின் தொண்டராக வாழ்க் கையைத் தொடங்கியவர் புலமைப் பித்தன். கோவையில் அரசியல் விரோ தத்தால் கொல்லப்பட்ட திமுக தொண்டர் ஒருவரின் குடும்பத்துக்கு நிதி வழங்க எம்.ஜி.ஆர். வந்தபோதுதான் புலமைப் பித்தன் அவரிடம் முதன்முதலில் பேசி னார். வசூலான தொகை போதாது என்று கருதிய எம்.ஜி.ஆர்., தனது சொந்தப் பணத்தில் இருந்து கணிசமான தொகையை இறந்தவரின் குடும்பத்துக்கு வழங் கியது புலமைப் பித்தனின் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது.
எம்.ஜி.ஆர். நடித்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ‘நான் யார், நான் யார், நீ யார்?... ’ என்ற கருத் தாழம் மிக்க அவரது முதல் பாடலே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘ஆயிரம் நிலவே வா...’, ‘இதயக்கனி’ படத்தில், ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற...’, ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில், ‘நாளை உலகை ஆளவேண்டும்...’ உட்பட பல பாடல்களை புலமைப்பித்தன் எழுதி இருக் கிறார்.
‘‘திரைத்துறையிலும் அரசியல் துறை யிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அள வுக்கு இமயமாய் எம்.ஜி.ஆர். உயர்ந்தது பொய்க் காலில் வந்த உயரமல்ல; புகழ்க் காலில் நிற்கும் உயரம். எவ்வளவோ பேருக்கு அவர் உதவிகள் செய்திருக்கிறார். அதை எல்லாம் பட்டியல் போடுவது முடியாத காரியம்’’ என்று கூறும் புலமைப்பித்தனுக்கு சொந்த அனுபவமே உண்டு.
கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் கிராமத்தில் புலமைப் பித்தனின் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டை அவரது தந்தையும் அண்ணன் கள் இருவரும் சேர்ந்து 1967-ம் ஆண்டு அடமானம் வைத்து பணம் வாங்கினர். அடுத்த ஆண்டே அவரது தந்தை இறந்து போனார். 1971-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதிக்குள் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தவறினால், கடன் கொடுத்தவருக்கே வீடு சொந்தமாகிவிடும்.
அப்போது, படங்களில் புலமைப் பித்தன் ஒருசில பாடல்கள் எழுதிக் கொண் டிருந்த காலம். பேர் இருந்த அளவுக்கு பணம் இல்லை. பல நாட்கள் தயக்கத் துக்குப் பின் ஒருநாள், வாஹினி ஸ்டுடி யோவில் படப்பிடிப்பு முடிந்து ஒப்பனை அறைக்குச் சென்ற எம்.ஜி.ஆருடன் கூடவே புலமைப்பித்தனும் சென்றார். அவர் ஏதோ சொல்ல நினைப்பதை குறிப்பால் உணர்ந்தார் எம்.ஜி.ஆர்.!
யாரையும், எதையும் உடனடியாக புரிந்து கொள்ளும் திறனும், கூர்ந்த கவ னிப்பும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த வரம். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட அவரது கூர்மைத் திறன் குறைய வில்லை. தனக்கு சிகிச்சை அளித்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் கானு என்பவருக்கு தங்கத்தில் சிறிய யானை சிலையை பரிசளிக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.
அதற்காக, சென்னையில் உள்ள நகைக் கடை ஒன்றில் தங்கத்தில் சிறிய யானை சிலை செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பார்வைக்கு அனுப்பப்பட் டது. அதை கவனித்துவிட்டு யானையின் தும்பிக்கையும் வாலும் ஏறக்குறைய ஒரே அளவில் இருப்பதாகவும் வாலை இன்னும் சற்று சன்னமாக மாற்றும் படியும் எம்.ஜி.ஆர். கூறினார். நகைக் கடையினர் ஆச்சரியத்தில் மூழ்கினர்! அந்த அளவுக்கு எதையும் கூர்மையாக, உடனே கிரகித்துவிடுவார்.
தன்னுடன் உள்ளே வந்த புலமைப் பித்தனைப் பார்த்து சிரித்தபடியே, ‘‘என்ன?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தனது வீடு அடமானத்தில் இருப்பதை யும் குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கொடுக் கத் தவறினால் பூர்விக வீடு கையை விட்டுப் போய்விடும் என்பதையும் ஒருவழியாக திக்கித் திணறிக் கூறினார் புலமைப்பித்தன்!
‘‘நான் பணம் தருகிறேன்’’ அடுத்த விநாடி பதில் வந்தது எம்.ஜி.ஆரிடம் இருந்து! ‘‘இல்லண்ணே, நீங்க எனக்கு பாட்டு மட்டும் கூடுதலாக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார் புலமைப் பித்தன். ‘‘பாட்டும் தரேன், பணமும் தரேன். ஏன் நான் பணம் தரக்கூடாதா? உங்கள் கடமையில் எனக்குப் பங்கில்லையா? என்னை ஏன் நீங்க வேறாக நினைக் கணும்?’’ என்று அன்புடன் கடிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.!
பின்னர், அவர் கொடுத்த பணத்தில் வீட்டை மீட்டு, அதற்கான பத்திரத்துடன் சென்னை திரும்பி படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை புலமைப்பித்தன் சந் தித்தார். பத்திரத்தை அவர் காலடியில் வைத்து வணங்கக் குனிந்த புலமைப்பித்த னின் தோள்களை ஆதர வாகப் பற்றி எம்.ஜி.ஆர். அணைத்துக் கொண் டார். தன் பெற்றோர் வாழ்ந்த நினைவுச் சின் னத்தையும், இழக்க இருந்த கவுரவத்தையும் மீட்ட நிம்மதியில் புலமைப்பித்தன் கண்கலங்க நின்றார்!
அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, ஆரம்ப காலத்தில் இருந்தே உடன் இருந்தவர்களில் புலமைப்பித்தனும் ஒருவர். எம்.ஜி.ஆர். முதல்வரான பின்னர், 1977-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சட்டமேலவை உறுப்பினராக புலமைப்பித்தனை நியமித்தார். பின்னர், சட்டமேலவை துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
‘‘தன்னைப் போற்றியவருக்கு மட்டு மல்ல; தூற்றுவோருக்கும் தயங்காமல் உதவி செய்யும் பொன்மனம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே சொந்தமானது’’ என்று நன்றியோடு நினைவுகூரும் புலமைப்பித்தனை, 1984-ம் ஆண்டு தமிழக அரசின் அரசவைக் கவிஞராக முதல்வர் எம்.ஜி.ஆர். நியமித்தார். பதவி யேற்பு நிகழ்ச்சியின்போது, புலமைப் பித்தன் பாடிய கவிதையில் எம்.ஜி.ஆரை வாழ்த்தி வரும் வரிகள் இவை...
‘‘குழந்தையின் பல் பட்ட இடத்தில்
பால் மட்டும் சுரக்கும்
அன்னை இதயம் அவனது இதயம்!’’
- தி இந்து.........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*05/11/20 அன்று அளித்த தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி இன்றைக்கு 150 வது* நாளை கடந்து தொடராக வெற்றிநடை போட்டு வருகிறது. தொடர்ந்து பேராதரவு அளித்து வரும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள்,ரசிகர்கள்,அபிமானிகள், விசுவாசிகள்*, அ.தி.மு.க.தொண்டர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை காணிக்கை ஆக்குகின்றோம்*
தேனியில் இருந்து பிரேமலதா, அவரது தாயார், அவரது மகன் என்று மூன்று தலைமுறை சார்ந்தவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களை இன்றைக்கும் வியந்து பேசி கொண்டு இருக்கிறார்கள் .* அப்படி வியந்து போவதற்கு பல்வேறு அபூர்வ சக்திகள் நிறைந்த மாமனிதராக எம்.ஜி.ஆர். விளங்கினார் என்பதுதான் வரலாறு*.*
குறிப்பாக* ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி*திரு.லோகநாதன் ,சென்னையை சார்ந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளத்தில் பல்வேறு செய்திகள்,தகவல்கள்* ,புகைப்படங்களுடன், 27,400 பதிவுகள் பதிவிட்டதாகவும் ,இன்றைக்கும் தொடர்ந்து பதிவுகளை மேற்கொண்டு வருவதாகவும், மற்ற எம்.ஜி.ஆர். பக்தர்களும் அவருடன் இணைந்து 1,00,000 பதிவுகள் என்கிற சாதனை சிகரத்தை சமீபத்தில் அடைந்துள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன .* திரு.லோகநாதன் இன்றைக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளத்தில் மட்டுமின்றி, வாட்ஸ் அப்பிலும்சுமார் 30 க்கு மேற்பட்ட எம்.ஜி.ஆர்.பெயர் கொண்ட அமைப்புகளுக்கும்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகள், புகைப்படங்கள், அன்றாடம் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியாகும் படங்கள் பற்றிய விவரங்கள், தமிழகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாக உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் விவரம், பத்திரிகை செய்திகள், மற்றும் வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சி தொடரில் வெளிவரும் செய்திகள், பாடல்கள் விவரம், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை ,கொஞ்சம் கூட அர்த்தம் பிரண்டு விடாமல், அடி பிறழாமல் , அவ்வளவு நுட்பமாக எம்.ஜி.ஆர்.பக்தர்கள், ரசிகர்கள், அபிமானிகள், விசுவாசிகள், பொதுமக்களுக்கு எம்.ஜி.ஆர். இணையதளம், மற்றும் வாட்ஸ் அப் மூலம்*எடுத்து செல்வதற்கு அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பக்தர்கள் கூட்டம் என்பது எவ்வளவு பெரிய ஒரு லட்சிய கூட்டம் ,அவர் புகழ்ப்பாடும் கூட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் .
மோசஸ் என்பவர் நேரடியாக கடவுளிடம் பேசும்* சக்தியை பெற்றவர் .* அவர்* இறைவனிடம்அனுமதி* கேட்டார் உங்களோடு** ஒருநாள் இருக்கவேண்டும் என்று .பதிலுக்கு இறைவன் இந்த பூமியில் நான் பல நல்லவர்களை படைத்து இருக்கிறேன். அவர்களோடு இருந்தாலே, என்னோடு இருப்பதற்கு சமமாகும் என்றார் . நல்லவர்களை நான் எப்படி அடையாளம்* கண்டு கொள்வது என்று மோசஸ் கேட்கிறார் .* தான் சம்பாதித்ததை, தனக்கென்று உள்ளதை தனக்கே சொந்தம் கொண்டாடாமல் எப்போதும் பிறருக்காக விட்டு கொடுப்பவரே நல்லவர் என்கிறார் இறைவன் .* அப்படி ஒரு நல்லவரை எம்.ஜி.ஆர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டதால்தான் இன்றைக்கும் தங்களின் நெஞ்சங்களில் வைத்து பூஜிக்கிறார்கள் .**
திரு. கா. லியாகத் அலிகான் பேட்டி :* *தேனீ தொகுதியில் இடம் ஒதுக்கி, உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் எனக்கு சீட் மறுத்த பின்பு எனக்கு அளித்த* முதல்**பதவியாக* பால்வள ஒன்றியத்தின் உறுப்பினர்* ஆக்கினார் .**கோவை மருதாசலத்தை தலைவராகவும், சின்னராஜு, மேட்டுப்பாளையம் பழனிசாமி, பேரூர் சண்முகசுந்தரம் கோவை, அண்ணாநம்பி,போன்றவர்களையும், என்னையும் உறுப்பினராக நியமித்தார் . தலைவர் 1977 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும் இந்த பதவிகளை எங்களுக்கு அளித்தார் .* இந்த வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கோவை மருதாச்சலம் எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக இருந்தவர் .* எம்.ஜி.ஆர். அவர்களுக்காக எதையும் தியாகம் செய்பவர் என்பதற்கு மாற்று கருத்து இல்லாதவர் . ஒருமுறை நாஞ்சில் மனோகரன் , கோவை மாவட்டத்திற்கு கண்டிப்பாக மாற்றம் தேவை என்று குறிப்பிட்டபோது, மிகுந்த கனத்த இதயத்தோடு எம்.ஜி.ஆர். அவர்கள் அவரை பதவியில் இருந்து* மாற்றிவிடுகிறார் .விவரம் அறிந்து மருதாச்சலம் எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்து புலம்புகிறார் .அண்ணே , நான் தவறு செய்யாத பட்சத்தில் என்னை தண்டித்து விட்டீர்களே*என்றபோது, சில நிர்பந்தம் காரணமாக செய்ய வேண்டியதாயிற்று. கவலைப்படாதே. நீ என்றும் என் இதயத்தில் இருக்கின்றாய். உன்னை கைவிட மாட்டேன் என்று சொல்லிய 10 நாட்களுக்கு பிறகு தலைவர் ரஷ்யாவிற்கு புறப்பட்டார் .* 1974-75 கால கட்டத்தில் தலைவர்* ரஷ்யாவில் இருந்து முக்கிய நபர்களுக்கு, மருதாச்சலம் உட்பட தனித்தனி கடிதம் எழுதுகிறார் .* கடிதம் கண்ட**மருதாச்சலம் மிகுந்த ஆறுதல் அடைந்தார் .* அழகு திருநாவுக்கரசு, எஸ்.டி.எஸ்., கே.ஏ.கே., அரங்கநாயகம் இப்படி பல்வேறு உப தலைவர்ளுக்கு கடிதம் எழுதி, நலம் விசாரித்து, நான் ரஷ்யாவில் இருந்து**தொடர்பு கொள்கிறேன் என்கிறார். தனக்காக உழைத்தவர்கள்,கட்சிக்காக பாடுபட்டவர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருக்கு வெளிநாடு சென்றும் நினைத்து பார்த்து, நன்றியை மறவாத*ஒரு மாபெரும் தலைவராக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திகழ்ந்தார் . ரஷ்யாவிற்கு சென்றும்,தான் ஒரு சிறிய தவறு செய்து, கோவை மருதாசலத்தை*தண்டித்துவிட்டோம் என்று அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் கடிதம் எழுதுகிறார் .* 20 நாட்கள் கழித்து தலைவர் சென்னை திரும்புகிறார் . சென்னை விமான நிலையத்தில் இப்போது உள்ளதுபோல் பாதுகாப்பு சோதனைகள், கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லாத நேரம் .* விமான நிலைய நுழைவு கட்டணமும் மிக குறைவு. விமான நிலையத்தில் சுமார் 10,000பேர் இருப்பார்கள் .* கோவை மருதாச்சலம் அந்த கூட்டத்தில்மாலையுடன் நின்று* இருக்கிறார். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறுகிறது .* எம்.ஜி.ஆர். அவர்கள் விமானத்தை விட்டு வெளியே வந்து வேனில் நின்றபடி மக்களை,*முக்கியஸ்தர்களை பார்க்கிறார். பலர் அவர் மீது மாலைகள் வீசுகிறார்கள். அதில் ஒரு மாலையை அப்படியே சுழற்றி வீசுகிறார் . அது மிக சரியாக கோவை மருதாச்சலம் கழுத்தில் மாலையாக விழுகிறது .* தன் கையில் உள்ள மாலையை விட்டுவிட்டு ,கழுத்தில் விழுந்த மாலையை கைகளில் பிடித்தபடி,*மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார் .*
சென்னை வந்தடைந்ததும், முதல் வேலையாக , கோவை மருதாசலத்தை ,சமுதாய பிரிவின் செயலாளராக புரட்சி தலைவர் நியமனம் செய்தார் .* இப்படித்தான் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு,சென்னைக்கு* வரும்போது ,பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மிக பிரம்மாண்ட வரவேற்பு அளித்த* நேரத்தில் மாணவ மாணவியர் மீது நேரு மிகவும் அன்பு கொண்டவர் .* வரவேற்பின்போது மாணவ,மாணவியர் களின் பரேடு , நடனம் ,போட்டிகள் ஆகியவற்றை யார் மிக சரியாக செய்து அவரது கவனத்தை* கவருகிறார்களோ*அவர்கள் மீது தனக்கு அணிவித்த மாலைகளை வீசும்போது மிக சரியாக அந்த*மாணவ மாணவியர் மீது விழும் என்று அந்த காலத்தில் சொல்வார்களாம் .* அந்த வகையில்தான் ஒருவருக்கு நாம் தவறு இழைத்துவிட்டோம் அதற்கு பரிகாரமாக அவரை மகிழ்ச்சியுற செய்யும் வகையில் கோவை மருதாச்சலம் கழுத்தில் விழும்படி, மாலையை வீசி,பின்னர் அடுத்த நாளே, சமுதாய பிரிவின் செயலாளராக நியமனம் செய்து, நாஞ்சில் மனோகரனிடம் நெடுநாள் ஒரு தொண்டரை தண்டித்து வைத்திருக்க* முடியாது என்று சொல்லி அவரையும் சமாதானப்படுத்திய* பக்குவமிக்க, லட்சியமிக்க மிக உறுதியான ஒப்பற்ற எண்ணங்களிலே தன்னை உண்டாக்கி கொண்ட தலைவர்தான் புரட்சி தலைவர்*பேரறிஞர்* அண்ணா விற்கு* பிறகு,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போல* தொண்டர்களை நேசிக்க கூடிய* ஒரு அற்புதமான தலைவரை, வாக்கு வங்கி கொண்டவரை நான் இன்றுவரை கண்டதில்லை . அந்த அளவிற்கு பேரறிஞர் அண்ணாவிடம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பற்றி* தவறாக ,அண்ணா பார்த்தீர்களா, பெருந்தலைவர் காமராஜர் என் தலைவர், பேரறிஞர் அண்ணா என்* வழிகாட்டி என்று எம்.ஜி.ஆர். சொல்கிறார் .*என்றபோது, பதிலுக்கு அண்ணா அவர்கள், என் தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள் இதயத்தில் இருந்து வெளியான வார்த்தைகள் அவை. அவர் உண்மையைத்தான் பேசியுள்ளார் .* எந்த விளைவுகள் பற்றியும் கவலைப்படாமல் தம்பி பேசியுள்ளார் .* அதற்காக அவரை தண்டிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அது முடியாத காரியம் .* தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த இயக்கத்திற்கும், எனக்கும் முக்கியமானவர். தேவையானவர் .* அவரை இந்த இயக்கமோ, நானோ இழப்பது என்பது இயலாத காரியம் .என்று கூறி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மீது அன்பு காட்டிய பேரறிஞர் அண்ணா போல ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். யாரையாவது தெரிந்தோ, தெரியாமலோ தண்டித்துவிட்டால் அதை நெடுநாள் நீடித்து வைத்திருக்க அவரால் முடியாது .
அவரது கார் ஓட்டுநர் தவறு செய்துவிட்டால், கோபத்தில் வீட்டுக்கு செல் என்று அனுப்பிவிடுவார் . அவருடைய குடும்பம் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதி,* மாதாமாதம் அவருக்கு சம்பள தொகையை தவறாமல் வீட்டுக்கு அனுப்பி விட கூடிய ஒரு மனிதாபிமானமிக்க தலைவர் என்னுடைய இதயத்தில், தமிழகம், இந்தியா, உலகம் என்று எடுத்து கொண்டால் மனிதாபிமானம் அதிகம் கொண்ட தலைவர்களில் முதன்மையானவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .தனக்காக உழைக்கிறவன் பசியோடு இருக்க கூடாது .அவன் மட்டுமல்ல யாருமே பசியோடு இருக்க கூடாது என்று வடலூர் வள்ளலார் போல தனது வாழ்விலே , இல்லத்திலே ,*.எந்த நேரத்திலும் அரிசி பொங்கி கொண்டிருக்க கூடிய அற்புதமான ஒரு அன்னதான பிரபுவாகத்தான் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் இருந்தார்கள்.* அதை தான் நடிகரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான சோ குறிப்பிட்டு சொல்லும்போது, ஒருவர் வீட்டிலே உலையை வைத்துவிட்டு அரிசிக்காக செல்வதாக இருந்தால் அது எம்.ஜி.ஆர் அவர்களின் வீடாகத்தான் இருக்கும் . என்று தலைவரை கடுமையாக விமர்சித்து வந்த நடிகர் சோ* அவர்களே சொல்ல கூடிய அளவிற்கு, தன் வாழ்நாளிலே, தர்மகர்தாவாக*தர்ம சிந்தனை உடையவராக வாழ்ந்தவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*
ஒரு விஷயத்தில் இரண்டு பேர்களை ஒற்றுமைப்படுத்தி சொல்ல முடியாதுஒருவர் மகாத்மா காந்தியடிகள் . இன்னொருவர் மா சே துங் அவர்கள் .* மா சே துங் கம்யூனிச சித்தாந்தத்தில் ஊறி திளைத்தவர் .* மகாத்மா காந்தி அகிம்சையை கடைபிடித்தவர். ஜனநாயக பற்று மிக்கவர்* இருவருக்கும் ஒருமித்த கருத்து ஒன்றிலே ஏற்படுகிறது என்றால் அது சேமிப்பில்தான்* அதைத்தான் மகாத்மா காந்தி* தன வாழ்க்கை வரலாறில்*குறிப்பிடுகிறார் . ஒவ்வொருவரும் வாழ்வில் தர்மகர்தாவாக இருந்து* பழக*வேண்டும் .தான் பயன்படுத்துகிற**அளவில்* தான் உபயோகப்படுத்துகிற எந்த பொருளையும் வீணாக்க கூடாது . ஆடம்பரமாக வாழக்கூடாது . பொதுவாக இருக்க கூடிய ஒரு பொருளை நீங்கள் ஒவ்வொரு சல்லி காசுக்கும் நீங்கள் கணக்கு காட்ட வேண்டும் . மாறுபட்ட கருத்து உடைய மா சே துங் ஒவ்வொரு செப்பு காசுக்கும் நீ கணக்கு வைத்திருக்க வேண்டும் என்கிறார் .* மாறுபட்ட சிந்தனை, கருத்துக்கள் உடையவர்கள் ஒன்றிலே, அதுவும் சேமிப்பில் ஒன்றுபடுகிறார்கள் .* நீங்கள் தர்மகர்தாவாகவும், கணக்கு* காட்டுபவராகவும் இருக்க வேண்டும் என்று இருவரும் சொன்னதை வைத்துதான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கணக்கு விஷயத்தில் கராறாகவும், கேள்வி கேட்பவராகவும் இருந்தார் .* அவர் அண்ணா ஆட்சி காலத்தில் சிறுசேமிப்பு துறையில் துணை தலைவராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே .அரசு பணியாளர்கள், அரசு பணி குறித்து தவிர, தன் சொந்த உபயோகத்திற்கு தொலைபேசியை பயன்படுத்தினால்**அது தவறு என்று சொன்னவர் தலைவர் எம்.ஜி.ஆர். அவரே யாருக்காவது போனில்* தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டால் காசு போட்டுத்தான் பேசுவார் என்கிற ஒரு உயரிய பண்பை, சேமிப்பு குணத்தை கொண்டவர்தான் தலைவர் அவர்கள் .* தலைவர் அவர்கள் வாழ்ந்த காலத்தில்*., 35 ஆண்டுகளுக்கு முன்பு** ,ஒரு பெரிய சினிமா நடிகர், ஒரு முதல்வர் என்ற வகையில் ஆடம்பரம் ,இல்லாமல்,மிக எளிய முறையில் தன்*வீட்டை பராமரித்து வந்துள்ளார் .* முதல்வராக பத்தாண்டுகள் இருந்தபோது அவர் நினைத்திருந்தால் மாட மாளிகைகள் போல தன்* இல்லத்தை உருவாக்கி இருக்க முடியும் .ஆனால் அப்படி செய்ய அவர் மனம் இடமளிக்கவில்லை .மாறாக ,மிக எளிய முறையில் அழகுபடுத்தியதோடு, ஒரு தர்மகர்தாவாக, அன்னதான பிரபுவாக இருந்ததால்தான், இன்றைக்கும் அவர் மக்களால் போற்றப்படுகிறார். மக்களின் இதயங்களில் வாழ்கின்றார் .* அவருடைய சிந்தனை வழியில் நாம் செயல்பட்டோமேயானால் .இன்றைய கால கட்டத்தில் நிலைமைகள் வேறு விதமாக மாறியிருக்கும் .* இவ்வாறு திரு. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .***
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.என்னை பாட வைத்தவன் ஒருவன் - அரச கட்டளை*
2.நினைத்தேன் வந்தாய் 100 வயது -* காவல்காரன்*
3.கடவுள் இருக்கின்றார் - ஆனந்த ஜோதி*
4.திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி*
-
புரட்சிப்பேரரசின் மகத்தான வெற்றிக்காவியம்...
" குலேபகாவலி "
+++++++++++++++++++++++++++++
1955 ல் வெளியாகி தனி சாம்ராஜ்யம் படைத்த மாபெரும் காவியம்...
அரபு நாட்டுகதையில் நடிக்கமாட்டேன் என்று சொன்னவர்கள் மத்தியில்
புதுமையான கதையில் புரட்சிநடிகர்
பல்வேறு வேடங்களில் அசத்திய காவியம்...
அதற்கு முன் எவரும் போட்டிகளை துணைகொண்டு நடித்தவர்கள் கிடையாது....
ஆனால் கலைப்பேரரசு குலேபகாவலீ திரைப்படம் மூலம் பவனி வந்து
போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றிக்கொடியை பறக்கவிட்டார்...
66 ஆண்டுகாலம் ஒரு திரைக்காவியம் தொடர்ச்சீயாக திரையில் வந்து இன்று வரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்றால் அது புரட்சித்தலைவர் திரைப்படங்கள் மட்டும் தான்....
1955 ல் வெளியான எவர் படமும் நமக்கு
ஞாபகம் வருவதில்லை...
குலேபகாவலி திரைப்படம் மட்டுமே
மனதில் நிற்கிறது....
பல வெளியீடுகளை சந்தித்து...
பல வசூலை படைத்துள்ளது.......இனியும் படைக்கும்...
-
"உரிமைக்குரல் " காவியம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் , லதா,
வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உரிமைக்குரல் (திரைப்படம்)
இயக்கம் ஸ்ரீதர்
தயாரிப்பு கண்ணைய்யா
சித்ரயுகா
இசை எம். எஸ். விஸ்வநாதன்
நடிப்பு எம். ஜி. ஆர்
லதா
வெளியீடு நவம்பர் 7 , 1974
இன்றுடன் ( 07 . 11 . 2020 ) மக்கள் திலகம் நடித்த " உரிமைக்குரல்" காவியம் , திரைப்படம் வெளிவந்து 46 வருடங்கள் ஆகிவிட்டது. 7 .11 .1974 ல் தீபாவளி வெளியீடாக வந்த வெற்றி காவியம் உரிமைக்குரல். இயக்குநர் ஸ்ரீதருக்கு புதுவாழ்வு மக்கள் திலகத்தால் கிடைத்தது. மெல்லிசை மன்னரின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட படம் இது . 57 வயதில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு பாடல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் நம்மை பிரம்மிக்க வைக்கும் . வெள்ளி விழா திரைப்படமான இது சின்ன சின்ன ஊர்களிலும் 50 நாட்களை கடந்தது சிறப்பு செய்தி நேத்து பூத்தாளே பாடலில் தியேட்டரில் ஆண்களின் ஆட்டம் ஒவ்வொரு காட்சியிலும் களை கட்டியதால் சில் ஊர்களில் பெண்களுக்கென்று தனியாக காட்சிகள் திரையிட்டது கூடுதல் சிறப்பு. என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க ஆனால் இந்த நிலத்தாய் எனக்கு சோறு ஊட்டி வளர்த்தாங்க என்று மக்கள் திலகம் பேசும் க்ளைமேக்ஸ் வசனத்தின் போது இன்றும் தியேட்டரில் விசில் தூள் பறக்கும். .. ... .. Thanks .........
-
தலைவரின் வரலாற்று படம் "அடிமைப்பெண் " பற்றி இன்னும் சொல்லி எழுதி முடியாது....
ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பு என்று முடிவாகி அனைவரும் அங்கே சென்று இருந்த நேரத்தில் கடும் வறட்சி அங்கே....தண்ணீர் தட்டுப்பாடு...பட குழுவினருக்கு கோக் வண்டி வரவழைத்து தாகம் தீர்த்தார் தலைவர்....இது தெரிந்த செய்தி.
ஆனால் அப்போது அங்கே முதல்வர் மோகன்லால் சுகாதியா என்பவர்...வறட்சி தெரிந்து திடீர் என்று ஒருநாள் 50000 ரூபாய் பணத்துடன் அவரை சந்திக்க புறப்பட்டு வறட்சி நிவாரணம் கொடுக்கிறார் தலைவர்.
முதல்வர் சுகாதியா வியந்து போகிறார்.வந்தோமா படம் எடுத்தோமா என்று இல்லாமல் அப்போது மிக பெரிய தொகை இது....இதை தேடி கொண்டு நம்மிடம் தருகிறார் என்று உச்சி மகிழ்கிறார் அவர்.
தலைவர் படத்துக்கு வழி காட்டும் குழு ஒன்று இந்த பாலைவனத்தில் கடும் வெப்பம் வறட்சி போது மண்ணுக்கு கீழே இருக்கும் கொடிய சிறிய விஷ நாகங்கள் வெளிப்பட்டு மேல வந்து கடித்து விடும்.
அடுத்த சில நொடிகளில் மரணம் நிச்சியம் என்று சொல்ல உடனே காலணி வல்லுநர்களை வரவழைத்து படத்தில் நடித்த அவ்வளவு ஊழியர்களுக்கும் சிறப்பு கால் ஷூக்களை தயார் செய்து அதை அனைவரும் அணிந்து கொண்ட பின்பே படப்பிடிப்பை தொடர்கிறார் தலைவர்.
பெரிய பெரிய போர்வைகள் மீது நின்று கொண்டே காட்சிகள் படம் ஆக்க படுகின்றன...என்ன ஒரு கரிசனம் சக ஊழியர்கள் மீது அது தான் அவரின் பொன்மனம்.
படம் வரலாற்று வெற்றியை பெற தமிழகமெங்கும் 100 நாட்கள் தாண்டி படம் ஓடி சரித்திர சாதனை புரிய ஒரு அதிசய நிகழ்வு.
மதுரை தலைவர் ரசிகர்கள் எப்போதும் இப்போதும் வேறு வகை....அங்கு சிந்தாமணி திரை அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் படத்தின் வெற்றி விழா நடைபெற மதுரை நகரம் மீண்டும் அன்று விழாக்கோலம் கண்டது.
அப்போதைய அந்த விழாவின் அபூர்வ படங்கள் முதன் முதல் ஆக நம் குழுவினரின் பார்வைக்கு சமர்ப்பணம்...
படங்களில் யார் யார் என்பதை பார்த்து கொள்ளவும் நன்றி.
வாழ்க தலைவர் புகழ்
நன்றி...தொடரும்
உங்களின் குரலாக உங்களில் ஒருவன் நெல்லை மணி....
சரித்திரங்கள் தொடரும்
தலைவரின் சாதனைகள் இடை விடாமல் மலரும். நன்றி.......nm...
-
தென்னகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் சிவாஜியிடம் பட்ட பாட்டை பார்க்கலாம். பாகவதர் கதாநாயகனாக நடித்த "சிந்தாமணி" "அம்பிகாபதி" ஆகிய படங்கள் 1937 ல் வெளியாகி மகத்தான வெற்றி பெற்று பாகவதரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்று கொடுத்தது. அப்படி சூப்பர் ஸ்டாரான பாகவதரை சிவாஜியை வைத்து ஏஎல்எஸ் தயாரித்த "அம்பிகாபதி"யில் சிவாஜிக்கு அப்பாவாக நடிக்க கேட்டதற்கு பாகவதர் நடிக்க மறுத்து விட்டார்.
சிவாஜியை விட அதிகமாக ரு10000 வரை அதிக சம்பளம் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காட்டியும் பாகவதர் நடிக்க மறுத்து விட்டார். அவர் காலத்தில் அவர் பார்க்காத பணமா? புகழா?. புது பணக்காரன்தான் பவுசோடு அலைவான். அவர் மவுசோடு வாழ்ந்தவர். ஏற்கனவே சிவாஜியின் ராசியை அறிந்துதான் அவர் இந்த முடிவெடுத்தார் என்று சொல்பவர்களும் உண்டு. அவர் அதற்கு சொன்ன காரணம் சிவாஜிக்கு தந்தையாக நடிக்கிறேன்.
ஆனால் "அம்பிகாபதி"க்கு தந்தையாக
என்னால் நடிக்க முடியாது என்று.
அவரை "அம்பிகாபதி"யாக பார்த்த அவரது ரசிகர்கள் எப்படி அவரது தந்தையாக பார்ப்பார்கள் என்ற ரசிகர்களின் உணர்ச்சியை மையமாக வைத்துதான் மறுத்தார். அவரில்லாமல் வெளியான "அம்பிகாபதி" படத்தில் பாகவதரின் நடிப்பில் இருந்த திருப்தி கணேசனின் நடிப்பில் இல்லாமல் படம் எடுபடாமல் போனதோடு மிகுந்த அறுவை படமாகவும் அமைந்ததால் படம் படுதோல்வி அடைந்தது.
அதன்பிறகு சிவாஜிக்கு தந்தையாக நடிக்க தயார் என்பதை காட்ட சிவாஜியை வைத்து "பாக்ய சக்கரம்" என்ற ஒரு படத்தை ஆரம்பித்தார் பாகவதர். ஆனால் சிவாஜி "அம்பிகாபதி"யில் பாகவதர் நடிக்க மறுத்ததை மனதில் வைத்துக் கொண்டு "பாக்ய சக்கரத்தி"ற்கு கால்ஷீட் தராமலே இழுத்தடித்தார். அதனால் பாகவதர் தனது கைபொருளையும் இழந்து,
அதிர்ச்சியில் கண்பார்வையும் இழந்து, முடிவில் வறுமையையும், மரணத்தையும் ஒருசேர தழுவிக் கொண்டது அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால் எம்ஜிஆர் அவர்களோ திருm.k. ராதாவை தன் குருவாக ஏற்றுக்கொண்டு அவர் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்ட உயர்பண்பை பெற்றவர்.
அது மட்டுமல்ல கண்ணாம்பாவுக்கு பணம் பெற்றுக் கொள்ளாமலே "தாலி பாக்கிய"த்தை முடித்துக் கொடுத்தார்.
ஒரு சமயத்தில் அவர்கள் இழந்த பணத்தை அவர்களுக்கு கொடுத்து படத்தை முடிக்க உதவி செய்தார். கே.பி.எஸ் போன்ற சீனியர்களை மதித்து அவர்களுக்கு உதவி செய்தார். இன்னும் எண்ணிலா உதவிகள் செய்து பலரை இன்னலிலிருந்து மீட்டார்.
இதைதான் அன்றே சொன்னேன் பாராண்ட மன்னனும் கணேசனுடன் கைகோர்த்தால் முடிவில் பிடி சாம்பலாவார் என்று. இதையெல்லாம் கணேசன் ரசிகர்கள் பேச மாட்டார்கள், சந்திரபாபு என்ன ஆனான்? என்று கேள்வியெழுப்புவார்கள். ஆனானப்பட்ட முதல் சூப்பர் ஸ்டாரையே இல்லாமல் செய்து விட்ட கணேசனின் ராசி பல தயாரிப்பாளர்களை சிதைத்து வதைத்தது ஒன்றும் பெரிய கதை இல்லை என்கிறார்களா? கைபிள்ளைங்க.
நன்றி: திரு சைலேஷ் பாசு.........ksr.........
-
எம்ஜிஆர் வெறும் நடிகராக மட்டுமல்ல.அனைவரது கஷ்டத்தையும் உணர்ந்து தன்னால் ஆன உதவியை தயங்காமல் செய்பவர்.இதெல்லாம் நாடகம் என பொய்புரட்டிகள் சொல்வார்கள்.அப்படியானால் அவர்கள் செய்த நற்காரியம் சொல்லுங்க டா என சொல்ல சொன்னால் கால் பிடரியில் அடிக்க ஓடிருவானுக. பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு கஷ்டம் நஷ்டம் வந்த போதெல்லாம் இவர் படங்கள் தான் அவர்களை காப்பாற்றி உள்ளது. அதனால் தான் அவர் பொன்மனச் செம்மல்...ssk...சந்திர பாபு அழிந்தது குடி கூத்தியாள் சகவாசத்தால் தான் எம்ஜியார் எல்லாவாற்றையும் மறந்து தன் அடிமை பெண்ணில் வாய்ப்பு கொடுத்தார். அதன் பின்னரும் எம்ஜியாரை பத்தி வசை பாடினான் நன்றி இல்லாமல் .......சந்திர பாபு கடைசியாக நடிச்ச படம் கனேசனின் அவன்தான் மனிதன் தான்.........ap....
-
புரட்சித் தலைவர் பெயரில் வெளிவந்த
ஏடுகள் :
திரையுலகம் - திரைச் செய்தி- புரட்சி ஏடு
மக்கள் திலகம் - புரட்சியார் ரசிகன் -
ஜேம்ஸ்பாண்டு - கலைப் பூங்கா - சத்திய
புதல்வன் - இதயக்கனி - உதய சூரியன்
உரிமைக்குரல் - உழைக்கும் கரங்கள்
நாடோடி மன்னன் - மன்றம்.
தினசரி பத்திரிகைகள் :
தென்னகம் - மன்றமுரசு - மக்கள் குரல்
போர் முரசு - திரையுலகம் - அலைஓசை
நீரோட்டம் - தினத்தூது - அண்ணா
பொன்மனம்.
அது மட்டுமல்ல அன்றிலிருந்து இன்றுவரை அவர் பெயரில் வெளிவந்த மாத இதழ்கள்
கணக்கிலடங்காதவை.அவரைப் பற்றி எழுதிய தனி நபர் வரலாற்று நூல்களும்
எண்ணிலடங்காதவை.மேலும் அவருடைய தாக்கங்கள் இல்லாத செய்தித்தாள்கள் இன்றுவரை இல்லை.அப்பேர்ப்பட்ட வரலாறு
வாழும் வரலாறு என்பது இவர் ஒருவருக்கே பொருந்தும்.
வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜிஆர் புகழ்!!!.........
-
அரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய "நாடோடி மன்னன்" காவிய படத்தில் எல்லாவற்றிற்கு மேலாக தன் தனித்தன்மையை ஒரே வசனத்தின் மூலம் நிலைநிறுத்தி தியேட்டரையே அதிரவைத்தவர் எம்ஜிஆர்..
‘’என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர என்னை நம்பிக்கெட்டவர்கள் இன்று வரை இல்லை’’ ,சாகா வரம் பெற்றது அவரின் இந்த வசனம்..
நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர் என்ற மூவரையும் தாண்டி, நாடோடி மன்னனில் படு கில்லாடி எம்ஜிஆர் ஒருவர் வெளியே தெரியாமல் இருந்தார். இந்த கில்லாடி எம்ஜிஆர், அரசியல் தலைவர் எம்ஜிஆருக்குள்ளும் விஸ்வரூபம் எடுத்தததால்தான் அவரை அரசியலில் திமுக தலைவர் கலைஞராலேயே கடைசிவரை சமாளிக்க முடியவில்லை..
எதற்காக இவ்வளவு பேசவேண்டியுள்ளது என்றால், நாடோடி மன்னன் படத்தில்தான் எம்ஜிஆருக்கு எதிர்கால திட்டமிடல் என்கிற யோசனை தோன்றியிருக்கவேண்டும். சினிமாவில் மற்றவர்களின் ஆளுமைகளோடு தன் ஆளுமை சமமாகவோ, கீழாகவோ போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்..
ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற படங்கள் கலைஞரின் வசனத்தால் காவியமாகின.. அது மறுக்கமுடியாத உண்மையும்கூட. சிவாஜியின் பராசக்தி, மனோகரா போன்ற படங்களைக்கூட கலைஞர் அவருடைய வசனங்களால், கலைஞரின் பராசக்தி, கலைஞரின் மனோகரா என்றே திரைஉலகில் பேசவைத்தார் இரு பெரும் நடிகர் திலகங்களுக்கு ஆரம்பகாலத்தில் வசனங்களால் வெற்றி சிம்மாசனம் அமைத்து தந்ததில் கலைஞருக்கு பெரும் பங்குண்டு.
1953லேயே கலைஞரை வைத்து சொந்தப்படம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கினார் எம்ஜிஆர், கதை வசனத்திற்கு கலைஞர் தயாராக நின்றார். ஆனால் படத்தயாரிப்பு கைகூட வில்லை. பிறகு மலைக்கள்ளன், மனோகரா போன்ற வற்றின் வெற்றிகளால் கலைஞரின் மார்கெட் தாறுமாறாய் எகிறிப்போனது..
அதேவேளையில் மலைக்கள்ளன், குலேபகாவலி, தாய்க்குப்பின்தாரம் மதுரைவீரன், அலிபாபாவும் 40 திருடர்க ளும் போன்ற தொடர் வெற்றிகளால் எம்ஜிஆர் வசூல் சக்ரவர்த்தியாக மாறி, திமுகவில் முக்கியஸ்தராகவும் உருவெடுத்துவிட்டார்.
இங்குதான் நின்று விளையாடுகிறது கில்லாடி எம்ஜிஆரின் சாமர்த்தியம். இரண்டாம் முறையாக சொந்தப்படம் நினைப்புவந்தபோது எம்ஜிஆரின் காய் நகர்த்தல்கள் முற்றிலும் விநோதமாக இருந்தன. வசனகர்த்தா ஜாம்பவான் கலைஞர் நாடோடிமன்னனில் இடம் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் தயாராகும் தனது கனவுப் படத்திற்கு கலைஞரை வசனம் எழுதவிட்டால், அவர் அதை அவரின் டிரேட்மார்க் படமாக கடத்திச் சென்று விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வு..
படத்தில் மன்னன்போல ஆட்சிக்கு வந்து ஒரு நாடோடி அறிவிக்கும் புரட்சிகரமான பட்ஜெட் காட்சிகள் முழுக்க முழுக்க தன் சிந்தனைகளாகவே தெரியவேண்டும் என்பதில் எம்ஜிஆர் தீர்மானமாக இருந்தார். அவை கலைஞரின் சிந்தனைகள் என்று பேச்சுவந்துவிடக்கூடாது என்பதே அவரின் மனஓட்டம்..
கலைஞருக்கு பதில் கண்ணதாசனை வசனம் எழுத அழைத்தார். மிகமிக முக்கியமான பதினைந்து காட்சிகளுக்கு மட்டுமே கண்ணதாசன் எழுதினார். மற்ற வசனங்களை எழுதியவர், எம்ஜிஆர் பிக்சர்சை சேர்ந்த ரவீந்தர்.தமிழ் திரை உலகின் நெம்பர் என் வசனகர்த்தாவான இளங்கோவனிடம் உதவியாளராக இருந்தவர். அதாவது நாடோடி மன்னன் படம் வசனம் என்றால் டைட்டிலில் கண்ணதாசன்- ரவீந்தர் என்றே வரும்.
இன்னொரு வியப்பான விஷயம். படத்தில் கண்ணதாசன் பாட்டெழுதவில்லை. வேறு எட்டு பேர் எழுதினார்கள். எல்லாம் ஹிட் பாடல்கள். ஆனாலும் ஒற்றை ஆளாய் பாடலாசிரியர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் மட்டுமே பேசப்பட்டார்..
நாடோடி வீராங்கன், மன்னன் மார்த்தாண்டன், ராஜகுரு தளபதி பிங்களன், அரசியல் ஆலோசகர் கார்மேகம் அமைச்சர்கள், புரட்சிகூட்டத்தினர் என் நிறைய பாத்திரங்கள் உண்டு. ஆனால் இவை எதையும் திராவிட இயக்க நடிகர்களான எஸ்எஸ்ஆர், கேஆர் ராமசாமி எம்ஆர் ராதா, சகஸ்ஹர நமம் போன்றவர்களுக்குக்கூட கொடுக்கவில்லை. ..
நாடோடிமன்னன் படம் என்றாலே எங்கும் எம்ஜிஆர் எதிலும் எம்ஜிஆர் என்ற பெயர் மட்டுமே பேசும்படி பார்த்துக்கொண்டார்.. அதுதான் வெளியில் தெரியாத கில்லாடி எம்ஜிஆர்.
திமுகவின் கொள்கைகளை எம்ஜிஆர் தன் படத்தில் தனி ஆளாய் திறம்பட பேசியிருக்கிறார் என்று அறிஞர் அண்ணாவே நினைக்கும் அளவுக்கு கட்டமைத்தார் எம்ஜிஆர்.
நாடோடி மன்னன் தயாரான போது பல படங்களுக்கு ஒப்பந்தமாகி அவ்வப்போது அவற்றிலும் நடித்துக்கொண்டிருந்தார். படம் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்து.
புரட்சித் தலைவரின் திரை துறை அரசியல் வெற்றிக்கு காரணம் அவரின் தனிப்பட்ட அறிவு திரன் உழைப்பு மட்டுமே இதில் வேறு யாருக்கும் பங்கில்லை.
புரட்சித் தலைவர் புகழ் ஓங்குக..........kn...
-
1974 நவ 7 ம் தேதி திரைக்கு வந்த "உரிமைக்குரல்" "உலகம் சுற்றும் வாலிபனை" ஒரு சில இடங்களில் முந்தியது ஒரு ஆச்சரியமான ஆனந்தமான தகவல். அதிலும் திரைக்கு வந்து 23 நாட்களிலே ஆன நிலையில் புரட்சி தலைவரின் மற்றொரு படமான "சிரித்து வாழ வேண்டும்" படமும் வெளியாகி இரண்டும் 100 நாட்களை தாண்டினாலும் "உரிமைக்குரல்" யாரும் எட்ட முடியாத சாதனையாக வெள்ளிவிழா கண்டதுடன் வசூலில் புதிய புரட்சியை உண்டாக்கியது.
மதுரை,கோவை,நெல்லை. உள்ளிட்ட நகரங்களிலும் மேலும் பல ஊர்களிலும் உலகம் சுற்றும் வாலிபனை பிரேக் செய்து புதிய ரெக்கார்டு ஏற்படுத்தியது. மக்கள் திலகம் முதல்வர் ஆகும் வரை அந்த சாதனையை வேறு எந்த படங்களாலும் நெருங்க முடியவில்லை.
உதாரணமாக கோவையில் "உரிமைக்குரல்" 150 நாட்களில் கீதாலயாவில் சுமார்₹869000 வசூலாக பெற்றது. சென்னையை தவிர்த்து வேறு எந்த ஊரிலும் எந்த தியேட்டரிலும் எந்த நடிகரின் படமும் ஒரே திரையரங்கில் 8 லட்சத்தை தாண்டி இவ்வளவு பெரிய வசூலை ஈட்டியது கிடையாது. எட்டக்கூடிய வசூலாக இருந்தால் முயற்சி செய்து பார்ப்பார்கள். ஆனால் இது பல சொத்துக்களை விற்றாலும் எட்டாக்கனி என நினைத்து பிள்ளைகள் அடங்கி போய் விட்டனர்.
"உலகம் சுற்றும் வாலிபன்" 152 நாட்களில் . ₹ 701000 வசூலாக பெற்றது. ஆனால் "தங்கப் பதக்கம்" 100 நாட்களில் ₹ 496000 தான் வசூலாக பெற முடிந்தது. அரசியலிலும், சினிமாவிலும் நிரந்தர முதல்வராகவே இருந்தார். மக்கள் அன்பு என்ற நூலைக் கொண்டு ஏற்றிய பட்டம் அல்லவா? எப்போதும்
யாராலும் வீழ்த்த முடியாமல் வானில் வலம் வந்தது ஒரு அபூர்வமான நிகழ்வு என்றே சொல்லலாம் 7.11.1974 ல் உரிமைக்குரல் ரிலீஸ் ஆன நாள்...
-
#மக்கள்_திலகத்தின்_திரைபயணத்தில்
#மக்கள்_என்_பக்கம்...
எவ்வளவோ தயாரிப்பாளர்களுக்கு ((சத்யா மூவீஸ், தேவர் பிலிம்ஸ், தன் சொந்த எம்.ஜி.ஆர் புரொடக்ஷன்ஸ், விஜயா புரொடக்ஷன்ஸ்)) படம் நடித்து கொடுத்த மக்கள் திலகத்திற்கு, "முழுக்க முழுக்க தன் ரசிகர்களுக்காக மட்டுமே ஒரு படம் செய்ய வேண்டும், அதில் வரக்கூடிய வசூல் நலிவடைந்த தன் ரசிகர்களை சென்றடைய வேண்டும்" என்று இந்தியாவில் யாருமே செய்யாத ஒரு முயற்சியை தொடங்கினார் மக்கள் திலகம். தன் அகில இந்திய ரசிகர் மன்ற தலைவரும், தன் முரட்டு பக்தருமான முசிறிப்புத்தன் தயாரிப்பில் இப்படம் துவக்கப்பட்டது.
சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவன், தமிழக மக்களின் உதவியோடு உயர்ந்த இடத்தை அடைவது போன்ற கதையமைப்பில் படம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த படம் தயாராகி வெளிவந்திருந்தால், நவரத்தினம் படத்திற்கு அடுத்து வெளிவந்திருக்கவேண்டும். ஆனால் மக்கள் திலகத்தின் அரசியல் பணிகள் குறுக்கிட்ட படியாலும், அன்றைய அரசியல் சூழ்நிலைகளினாலும் இப்படம் சில அடிகள் படப்பிடிப்போடு நிறுத்தப்பட்டது.
பின்னாளில் சத்யராஜ், அம்பிகா நடிக்க, கே.பாலாஜி தயாரிப்பில் இதே பெயரில் படம் வெளியானது. ஆனால் அது மக்கள் திலகத்துக்காக உருவாக்கப்பட்ட கதையா? என்பது தெரியவில்லை.
இந்த படம் வெளிவராவிட்டாலும் கூட இன்று வரை மக்கள்-மக்கள் திலகத்தின் பக்கம்தானே இருக்கிறார்கள்...........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*06/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------
மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்தாலும் , சிறந்த*நடிகர்*என்று பரிசு பெற்று பலரால்*பாராட்டப்பட்டாலும், தன்னை*எம்.ஜி.ஆர். என்று அழைப்பதையே தான் அவர் பெரிதும் விரும்பினார் .* அதனால்தான் சொந்த*படம் தயாரிக்கும்போது அந்த நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் என்று பெயரிட்டார் .கண்ணனை எப்படி, கோபிகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் என்று அழைத்தார்களோ, அப்படி பலர் பலவாறு எம்.ஜி.ஆரை* அழைத்தார்கள்.* சின்னவர், தலைவர், ராமச்சந்திரன், புரட்சி தலைவர், மக்கள் தலைவர் என்று பல பேர்* அழைத்தாலும்* வாழ்நாள் முழுவதும்** எம்.ஜி.ஆர். என்று அழைப்பதையே* அவர் பெரிதும் விரும்பினார் .***
கவிதைநயமிக்க ஒப்பாரிகளில் மிக சிறந்தது*எதுவென்றால் கம்ப ராமாயணத்தில் வரும் ஒப்பாரியை சொல்வார்கள். ராவணன்* மாண்டுவிட்டான்* ராமனுடைய அம்பு துளைத்து , காயங்களால் உடம்பு புண்ணாகி*கிடக்கிறான்.* அப்போது மண்டோதரி சொன்னதாக கம்பன்*ராமாயணத்தில் சொல்கிறார்.* உன் இதயத்தில் என்னை வைத்திருப்பதாக* சொன்னாயே, ராமன்*பானத்தை*விட்டபோது, உன் இதயத்தை*துளைத்த*போது ,நான் அல்லவா இறந்து*கிட க்க வேண்டும்* அண்ணா*ஏன்* பொய் சொன்னாய். என்று சகோதரனை கட்டிப்பிடித்து அழுகிறாள் .அப்படி ஒப்பாரி* விடுவதற்கான துக்க*சம்பவம்*எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் நடந்தது . அதாவது பேரறிஞர் அண்ணா*நோய்வாய்ப்பட்டு இறந்து*போகிறார் .அவரது இறுதி ஊர்வலம் நடந்து , வங்க*கடலோரம், மெரினா*கடற்கரையில் அண்ணாவின் நினைவிடம் அமைகிறது .* எம்.ஜி.ஆர்.அவர்கள் சில*நாட்கள்*தனிமையில் வாடுகிறார் .* அப்போது உடன் இருந்த*உதவியாளர் ரவீந்தர்*, பேரறிஞர் அண்ணாவின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்புதான் என்கிறார் .* அப்போது எம்.ஜி.ஆர். சொல்கிறார். அண்ணா*அவர்கள் மேடையில்*பேசி கொண்டே* மூன்று பக்கமும்*பார்த்தபடி*வேட்டி கட்டி கொண்டு*நடக்கிற அழகை*பார்த்து கொண்டே இருக்கலாம் .* மேடைக்கு முன்னாள் லட்சோப*லட்சம் மக்கள் முன்னிலையில் யாருக்கும் தெரியாமல்* அவர் பொடி போடும் லாவகம் .என்னை*தம்பி என்று அழைக்கும்போது அடி வயிற்றில்*இருந்து எழுகின்ற உணர்ச்சி மிக்க* பாசம் , அன்பு,* இவற்றையெல்லாம் பற்றி நினைக்கும்போது துக்கம் நெஞ்சை அடைக்கிறது .*என் தந்தையார்*இறந்த விவரம் பற்றி எனக்கு*தெரியாது . என் தாயாரின்* மறைவு எனக்கு* மிக பெரிய துக்கம் .* என்னை*அளவற்ற*அன்புடன், பாசத்துடன் தம்பி என்று அழைத்து*வந்தாரே, அதை எப்படி என்னால்*மறக்க முடியும்**என்று வாய்விட்டு கதறி அழுகிறார் .* ராவணனின் மறைவுக்கு*எப்படி மண்டோதரி ஒப்பாரி வைத்தாரோ, அதற்கு*நிகராக* அண்ணாவின் மறைவிற்கு*எம்.ஜி.ஆர். அவர்களின்*ஒப்பாரியை ரவீந்தர்*அவர்கள் தன் நூலில்*எழுதியுள்ளார் .**
1968ல்* சென்னையில் உலக தமிழ் மாநாடு நடைபெறுவதையொட்டி, கடற்கரை சாலையில் வரலாற்று சிறப்பு* *வாய்ந்த தலைவர்களுக்கு 10 சிலைகள்*வைக்கப்படுகின்றன .* அதே*போல பேரறிஞர் அண்ணாவிற்கு அண்ணா சாலையில் தன் சொந்த*செலவில்*எம்.ஜி.ஆர். அவர்கள்* சிலை**வைக்க முற்படுகிறார் .* அப்போது அண்ணாவை*அமர செய்து அந்த சிலையை*அவர் முன் வடிவமைத்தார்கள் . அந்த சமயம்*அண்ணா* அவர்கள் தம்பி எம்.ஜி.ஆரின் அஸ்திவாரத்தில் நான் நிற்போது*போலுள்ளது இந்த சிலை என்று குறிப்பிட்டாராம் .தி.மு.க.வின் அஸ்திவாரமாக எம்.ஜி.ஆர். அவர்களை கருதித்தான் அன்றே*பேரறிஞர் அண்ணா சொன்னார். ஆனால் அவருக்கு*பின்னால் முதல்வரான கருணாநிதி அந்த அஸ்திவாரத்தையே தூக்கி எறிந்தார் . அதன் பலனாக*கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் வனவாசம் சென்றது போல*ஆட்சியை*அவரால்*எட்டி பிடிக்க இயலவில்லை .**
திரு. கா. லியாகத்*அலிகான் பேட்டி : பெருந்தலைவர் காமராஜார் ஆட்சி காலத்தில் தமிழக அரசு பட்ஜட்,அனைத்து துறைகளுக்கும் சேர்த்து** எடுத்து கொண்டால்*47 கோடி*ரூபாய்தான் .* பிறகு* பேரறிஞர் அண்ணா*காலத்தில் அதுவே*90 கோடி*ரூபாயாக*இருந்தது .* 1968 பிப்ரவரி மாதம் தமிழக அரசு பட்ஜட்* தாக்கல் செய்யும்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் அப்போது சட்ட மன்ற*உறுப்பினராக இருந்த*காங்கிரஸ் கட்சியை சார்ந்த*திரு.சி.சுப்பிரமணியம் அவர்களிடம் நான் சதம்* அடிக்க போகிறேன் . அதாவது 100 கோடி*ரூபாய்க்கு பட்ஜட்*தாக்கல் செய்கிறேன் என்று சொன்னாராம்*.* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து*பட்ஜட்* தாக்கல் செய்யும்போது ரூ2,000* கோடி*ருபாய், ரூ.3,000 கோடி*ருபாய் என்ற அளவில் இருந்தது*.* அப்போது அரசு அதிகாரிகளிடமும், என்.ஜி.ஓ .சங்க தலைவராக இருந்த சிவ*.இளங்கோவிடமும் நேரடியாகவும், பத்திரிகைகள் மூலமும் அறிக்கை* வெளியிட்டு கேட்டார். அதாவது வருகின்ற வருமானம் அரசுக்கு இவ்வளவுதான் .அதில் பாதிக்கு மேலாக அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சம்பளமாக*போய்விடுகிறது .* நான் மக்களுக்கு*எப்படி அரசு இயந்திரம் மூலம் பணியாற்றுவது . மக்களுக்கான நல திட்டங்களில் எப்படி முடிவெடுப்பது .தயவு செய்து நீங்களே*இதற்கு ஒரு முடிவு சொல்லுங்கள் என்று கேட்டார் எம்.ஜி.ஆர். அவர்கள் . 1980 [படஜெட்டுக்கு பிறகு பொருளாதார முன்னேற்றம்* மாநில அளவிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டு* வருமானங்கள் பெருகிய*காலத்தில் அதிகமாக நிதி ஒதுக்க முடியாத சூழலில்*, சத்துணவு திட்டத்தை அமுல் படுத்த முடிவெடுத்த நேரத்தில், இந்த திட்டத்தின்* மூலம் 60 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு தர வேண்டும் என்று சொல்கிறீர்கள், அது எப்படி சாத்தியம்**இது முடியாத காரியம் என்று அரசு அதிகாரிகள் மறுத்தபோது, என்ன ஆனாலும் சரி, இதை அமுல்படுத்தியே தீர வேண்டும்.* பெருந்தலைவர் காமராஜர் மதிய* உணவு திட்டத்தை கொண்டுவந்தார்* இது சத்துணவு திட்டமாக இருக்கட்டும்.அவர் வசூலித்தது போல* நான் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வசூல் செய்து குழந்தைகளின் படிப்பிற்காக*, உணவிற்காக ,கல்வி நிலையங்களுக்கு குழந்தைகள் வர முடியாத நிலையை மாற்றி எல்லோருக்கும் கல்வி தர வேண்டும். அவர்களுடைய வாழ்க்கை நிலை, பொருளாதார நிலை மேம்பட வேண்டும் என்று முடிவெடுத்த தலைவர் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*
நான் வீடு வீடாக பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தை* நிறைவேற்றுவேன் என்று சொன்னார். அதையே எதிர்க்கட்சியினர் இது பிச்சைக்கார திட்டம் என்று கிண்டலும் கேலியும் செய்தனர் . குறிப்பாக தி.மு.க. வினர் ஏளனம் செய்தனர் .*அதே தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தபோது, இந்த திட்டத்தை நிறுத்த முடியாமல்,மாற்ற முடியாமல்**மேற்கொண்டு சத்துணவுடன் முட்டை அளித்த சம்பவங்களும் நிகழ்ந்தன .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய சத்துணவு திட்டத்தை இன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மிக சிறப்பாக*நடத்தி வருகிறார் . 1982ல்* சத்துணவு திட்டத்தின் குழுவின் உறுப்பினராக செல்வி ஜெயலலிதா அவர்களை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நியமனம் செய்தார் .புரட்சி தலைவர்* உருவாக்கிய திட்டத்தை மேலும் மேம்படுத்தி, ஜெயலலிதா அவர்கள் முதல்வராக ஆட்சி புரிந்த காலத்தில் சிறப்பாக நடத்தி வந்தார் .* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, தமிழகம்* முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சர்களை முக்கிய நகரங்கள், கிராமங்களுக்கு அனுப்பி, பள்ளிகளில் இந்த திட்டம் சிறப்பாக நடத்துவதை கண்காணிக்க* வேண்டியும் அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார் .***புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த திட்டத்தை திருச்சி அருகில் உள்ள பாப்பாக்குறிச்சி யில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கி வைத்தார் என்பது வரலாறு.* *குழந்தைகள் இளம் பருவத்தில் பள்ளிக்கு*செல்லும் காலத்தில் பசியால் வாடக்கூடாதுஎன்று கருதி**.நானே*போட போறேன் சட்டம். .பொதுவில்*நன்மை புரிந்திடும் திட்டம், நாடு நலம் பெறும்*திட்டம்* .என்று நாடோடி மன்னன் படத்தில் பாடியது*போல , சட்டங்களை எல்லாம் கொண்டு வந்து இந்த மக்களுடைய மறுமலர்ச்சிக்காகத்தான் அவருடைய வாழ்க்கை இருந்தது,நடந்தது என்பதை*நாமும் நினைத்து பார்த்து நாமும்*எல்லோரும்***அமைச்சராக, முதல்வராக, அதிகாரியாக வேண்டும் என்று வாழ்க்கையின் வசந்தங்களை இழந்துவிடாமல் நாம்* எந்த இடத்தில*, எந்த நிலையில் இருக்கிறோமோ, எப்படி வாழ்கிறோமோ, அந்த வாழ்க்கை நெறிமுறையில்* யாருக்காவது ஒருவருக்கு*உதவி செய்ய முடியுமேயானால் ,அந்த உதவியை செய்வதற்கு நாம் உறுதி எடுத்து கொள்ள வேண்டும். சிறிய*உதவியாக கூட இருக்கலாம் .**
கர்ணன் என்பவர் மிக பெரிய கொடை வள்ளல், கொடுத்து கொடுத்து சிவந்த*கரம் உடையவர் .* அந்த* வாரி வழங்கிய**கர்ணன்*சொர்க்கத்திற்கு போகும்போது*அவருக்கு உரிய இடம் மறுக்கப்படுகிறது . ஏனென்றால் அவர் கொடைத்தன்மை*பெற்றிருந்தாரே ஒழிய வயிற்று பசியை*போக்கவில்லை .**போதிய அளவு அன்னதானம் செய்யவில்லை. எனவே சொர்க்கத்தில் இடம் மறுக்கிற*நிலை வரும்போது , அவருக்கு வேண்டியவர்கள் ஒரு உதவியை செய்கிறார்கள். கர்ணன் ஒரு உதவியை செய்திருக்கிறார் .* பசியோடு வந்த ஒரு முதியவர்*அன்னதானம் நடக்கும் இடம் எங்கே என்று கேட்டபோது ,தன் ஆள்காட்டி விரலால்*,அந்த இடத்தை காண்பித்து*நீங்கள் அங்கு சென்று உணவருந்துங்கள் என்று சொல்லி, வயிற்று பசியை போக்கியதால்*, நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்தில் இடம் தரவேண்டும் என்று சிபாரிசு*செய்தார்களாம்* இந்திரனுக்கு கர்ணன் மீது ஒரு கோபம் வந்தது .* கடவுளிடம் சென்று இந்திரன் முறையிடுகிறார் . நானும் வாரி வாரி கொடுக்கிறேன் .* கர்ணனும் வாரி வாரி கொடுக்கிறார் .* ஆனால் என்னை யாரும் வள்ளல் என்று அழைப்பதில்லை .இந்திரன் என்றுதான்*அழைக்கிறார்கள். கர்ணனை வள்ளல் என்று குறிப்பிடுகிற இதே* சமூகம் என்னை ஏன் அவ்வாறு அழைப்பதில்லை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும் பல நடிகர்கள் , தலைவர்கள் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்களை எல்லாம்* வள்ளல் என்று குறிப்பிடாமல்* ஏன்* எம்.ஜி.ஆர். அவர்களை மட்டும் வள்ளல் என்று குறிப்பிடுகிறார்கள் என்பதற்கு நான் கண்ட* உதாரணம் இதுதான்*.இந்திரனின் கேள்விகளை கேட்ட*கடவுள், பதிலுக்கு நான்* ஒன்றை**காட்டுகிறேன்* .கொஞ்சம் அமைதியாக இரு என்று சொல்லி*அவரை பக்கத்தில் இருக்கவைத்து, அருகில் உள்ள**மலையை பார்த்து கடவுள்* தன்* கையை காட்டுகிறார் .* உடனே அந்த மலை தங்கமாக மாறிவிடுகிறது .* உனக்கும், கர்ணனுக்கும் ஒரு போட்டி. நீ இந்த தங்கத்தை*இந்த காலை நேரத்தில் இருந்து , மாலை சூரியன்*அஸ்தமனம் ஆவதற்குள்* சிறு பகுதிகளாக* வெட்டியெடுத்து*மக்களுக்கு*, ஏழை எளியோருக்கு* கொடுத்துவிடு .*. உடனே இந்திரன்* என்ன செய்கிறார் என்றால் அதற்குரிய உபகரணங்கள் ஆகிய கோடாரி,கடப்பாரை, மண்வெட்டி போன்றவற்றை எடுத்து கொண்டு, அருகில் உள்ள ஊர் மக்களை அழைத்து, தங்கமலையை வெட்டி எடுத்து, வாரி, வாரி கொடுக்கிறார். மக்களும்* மகிழ்ச்சியோடு வாங்கி செல்கிறார்கள். அப்படி கொடுத்தும் கூட, மலையில் பாதிகூட* தீரவில்லை* அப்படியே இருக்கிறது .இந்திரனை சற்று தூரத்தில்* உட்காரவைத்துவிட்டு, கர்ணனை*அழைக்கிறார் கடவுள்*. கர்ணனுக்கு அருகில் உள்ள** மலையை காட்டி, தங்கமாக்கிவிட்டு*இன்று காலையில் இருந்து ,மாலை சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் இந்த மலையை முழுவதும் வெட்டி எடுத்து, ஊர் மக்களுக்கு , கிராமங்களுக்கு கொடுத்துவிடு என்கிறார் .* கர்ணன்*அந்த ஊரில்*போய் நிற்கிறார் . ஊரில்*இரண்டுபட்ட*போன மக்கள் இரு பிரிவுகளாக உள்ளார்கள். அவர்க ளுக்கு இரு தலைவர்கள் உள்ளார்கள். அந்த தலைவர்களை அழைத்து, நீங்கள் இந்த தங்க மலையை*வெட்டி உங்கள் ஊர் மக்கள் அனைவருக்கும்**சரிசமமாக, பாகுபாடு இல்லாமல். தாராளமாக, வேண்டிய அளவில் எடுத்து கொடுத்து விடுங்கள்*என்கிறார் .இன்று மாலைக்குள்*முழுவதையும் வெட்டி எடுத்துக்கொண்டு மலையே இல்லாத அளவிற்கு நிறைவு செய்துவிடுங்கள் என்கிறார் .* இரு தலைவர்களும் ஒன்று சேர்ந்து, ஊர் மக்களை வரவழைத்து,*அந்த மலையை*வெட்டி எடுத்து ,அன்று மாலைக்குள்*மலையே இல்லாத அளவிற்கு** செய்துவிடுகிறார்கள் .* இந்திரன் சற்று தூரத்தில் இருந்து இவற்றை எல்லாம் பார்த்து கொண்டே இருக்கிறார் .* பிறகு கர்ணனை*கடவுள் போகச்சொல்லிவிட்டு, இந்திரனை அழைத்து*சொல்லும்போது, கர்ணன்* தன்னுடைய ஆழ்மனதில் இந்த தங்க மலையானது*தனக்குரியது என்று கொஞ்சம் கூட*நினைக்கவில்லை.. ஆனால் நீ இந்த தங்க மலையானது*எனக்குரியது என்று உன் ஆழ்மனதில் நீ நினைத்தாய்.* அதன் காரணமாக அதை வெட்டி கொடுப்பதில் நீ பேதம் பார்த்திருக்கிறாய் .* அதனால்தான் அந்த தங்க மலையை முழுவதும் வெட்டி எடுத்து தீர்க்கமுடியவில்லை .உன்னுடைய எண்ணத்திற்கு மாறான எண்ணம் கர்ணன் கொண்டிருந்ததால் ,அந்த மலையை*மதியத்திற்குள்ளாகவே,ஏழை எளியோர்கள் தாங்களாகவே, வேண்டிய அளவு வெட்டி எடுத்து கொள்ளும்படி செய்துள்ளான்**எனவே தன் ஆழ்மனதில் எந்த பொருளையும் தனக்குரியது என்று எண்ணாத*கர்ணன்*கொடை வள்ளலாக வாழ்கிறான். நீ இந்திரனாக வாழ்கிறாய். இதுதான் உண்மை என்கிறார் கடவுள் .**
அதை போல தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆழ்மனதில் எந்த பொருளையும், பணத்தையும்*தனக்குரியது அல்ல, ஏழை எளியோருக்கானது, மக்களுக்கானது என்று நினைத்து* வாழ்ந்த*மாபெரும் கொடை வள்ளல், வற்றாத ஜீவநதி, ஏழைகளின் இதயவேந்தன் , புரட்சி தலைவர் எம்.ஜி..ஆர் ,கதையை,வாழ்க்கை வரலாறை*நாம் பேசி கொண்டே இருந்தால், நம் இதயமெல்லாம் சுத்திகரிக்கப்பட்டு* நம் இதயத்தில் இந்த பொருட்கள், பணம் எல்லாம் நமக்குரியது என்கிற* ஆசைகள் எல்லாம் குறைந்து, உழைத்தாக வேண்டும் ,ஊருக்கெல்லாம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிற எண்ணம் உற்பத்தி ஆகும்போது நமக்கெல்லாம் அவருடைய* வாழ்க்கை முறையானது, அடிப்படையாக*அமையும் என்பதை இந்த நல்ல நேரத்திலே*உணர்ந்து**,நம்முடைய எண்ணங்களை எல்லாம் எளிமையாக்கி கொண்டு, யார்மீதும் பகைமை பாராட்டாமல் , பொறாமைப்படாமல் ,நமக்கு உள்ள நிலையிலே*என்ன செய்து* முன்னேற**முடியும் என்பதை நினைத்து பார்த்து ,*மன ஆறுதலோடு, அமைதிப்படுத்தி கொண்டு*வாழ்க்கை முறையை*அமைத்து கொண்டோமேயானால், எம்.ஜி.ஆர். அவர்களுடைய நடைமுறையில் கொஞ்சமாவது பின்பற்றுவோமேயானால்,நிச்சயமாக*நாம் மனமகிழ்ச்சியோடு, மனநிறைவோடு வாழ முடியும் என்பதை*கடந்த காலங்களில் பலபேர் நிரூபித்து இருக்கிறார்கள் . அந்த எண்ணங்களை எல்லாம் நாம் மனதிலே கொண்டு*வாழவேண்டும் என்று இந்த நல்ல நேரத்திலே,வின் டிவியின் உரிமையாளர் திரு.தேவநாதன்*அவர்களுடைய அன்பால், ஒத்துழைப்பால் இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தமைக்காக நன்றி கூறி, உங்களுக்கும் நன்றியை*கூறி,இவற்றையெல்லாம் நாம் வாழ்விலே கடைபிடிக்க வேண்டும் என்று கூறி* பணிவோடு கேட்டு கொண்டு*,இந்த நிகழ்ச்சியில் யார் பெயராவது விடுபட்டு இருக்கும் என்றால், வேண்டுமென்றே நடந்திருக்காது சொல்வதற்கு வாய்ப்பில்லாமல் அல்லது மறதியின் காரணமாக*இருந்திருக்குமே தவிர, மற்றபடி அனைவரை பற்றியும்*சொல்லக்கூடிய வாய்ப்பு படிப்படியாக வரும்*என்பதை*தெரியப்படுத்தி, இந்த வாய்ப்புக்கு அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன் .நன்றி, வணக்கம்.* இவ்வாறு திரு.லியாகத் அலிகான்*பேட்டி அளித்தார் .**
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
-1. ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் - தாய் சொல்லை தட்டாதே*
2. பேரை சொல்லலாமா, கணவன் பேரை*-தாயை காத்த*தனயன்*
3.நான் செத்து பிழைச்சவன்டா* -எங்கள் தங்கம்*
4.திரு. கா. லியாகத் அலிகான் பேட்டி*
.*** **
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரை காவியங்கள் பல மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மறுவெளியீடு* ஆரம்பத்தில் புதிய சாதனை தொடர்கிறது*
-------------------------------------------------------------------------------------------------------------------------
கோவை சண்முகா - 11/11/20 முதல் -தர்மம் தலை காக்கும் -தினசரி 3காட்சிகள்*
கோவை சண்முகா -14/11/20 முதல் -காவல்காரன் -தினசரி 3 காட்சிகள்*
10/11/20* முதல் தஞ்சை* ஜி.வி.** திருவானை காவல் -வெங்கடேஸ்வரா***சீர்காழி - ஓ.எஸ்.எம்.
* திருவாரூர்* தைலம்மை* அரங்குகளில்*
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல்* வெளியீடு .
மதுரை -சென்ட்ரல் சினிமா -14/11/20* (தீபாவளி முதல் ) மக்கள் தலைவர்*
எம்.ஜி.ஆரின் தர்மம் தலை காக்கும் - தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
மற்ற நகரங்கள் பற்றிய தகவல்கள் தொடரும் ..............!!!!!!!
-
தேவாரம் கண்டிப்பான அதிகாரி தலைவர், எப்பவுமே 2 அடுக்கு பாதுகாப்பு போட்டுவருவார் அது ரொம்ப பேருக்கு தெரியாது முதல் அடுக்கு ஸ்டண்ட் குழுவினர்கள் 2வது அடுக்கு போலீஸ் பாதுகாப்பு இதை கவணித்த தேவாரம் அப்ப நாங்கள் எதற்கு என கேட்க அவர் புன்முறுவலுடன் நீங்கள் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அவர்கள் சம்பவமே வராமல் பார்த்துகொள்ளும் பிரதிபலன் எதிர்பார்க்காத என் உயிரை காக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் .......நான் நியமித்தவர்கள் அல்ல அவர்கள் 4 கோடி தமிழ் நாட்டுமக்களின் பாதுகாவலனாக எனை நினைக்கிறார்கள் ஒன்று செய்யுங்கள் முடிந்தால் நீங்களே அவர்களை அனுப்பிவிடுங்கள் என சொல்ல மறுநாள் தேவாரம் அப்படியே சொல்ல அவர்கள் சிரித்துக்கொன்டே ஐயா நாங்கள் அவ்வாறு செய்தால் எங்கள் அனைவரையும் தமிழ் நாட்டு மக்கள் கண்டிப்பதுடன் தலைவரை வீட்டிற்கு ஒருவராக பட்டியல் போட்டு பாதுகாப்பார்கள் அவர்கள் அப்போது தினமும் இதை சொல்லமுடியுமா என கேட்க தேவாரம் அவர்கள் தலைவரின் திருபுகழை நினைத்து பெருமைபட்டவுடன் ....இவரை பின்னாளில் தலைவருக்கு பாதுகாவல் அதிகாரியாக நியமிக்க சொன்னது அன்னை இந்திரா காந்தி என தெரிந்த உடன் மனிதர் ஆடிப்போனதுடன் இந்திரா மறைவிற்கு பிறகும் தலைவர் மறைவுநாள் வரை பாதுகாவல் படை பிரிவு அதிகாரியாக நியமித்தது ராஜீவ்காந்தி அவர்கள் என்னே கரிசனம் தலைவர்மீது இந்தபாக்கியம் என் தங்க தலைவனுக்கு தவிர வேறு எவருக்கும் கிடைக்கவில்லை...Vairam...
-
#தலைமுறையாய் #தொடரும் #பக்தி
#சோ, தன் துக்ளக் பத்திரிகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தை மிக வியப்புடன் குறிப்பிட்டிருப்பார்...
அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார்.
அவனை அழைத்து ` இப்ப என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `#எம்ஜிஆரை #கும்பிட்டால் #நல்லா #படிப்பு #வரும். #அதனால #கும்பிட்டுட்டுப் #போறேன்' என்றதும் சோ அதிர்ந்திருக்கிறார்...
இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதை சொல்லி பெருமிதம் கொள்வான்...
அவர்களும் `என் அப்பா தீவிர எம்ஜிஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படி எம்ஜிஆர் மீதான அன்பு, பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது...
எம்ஜிஆரைத் தவிர வேறு ஒருவரும் உலகில் இப்படி இருந்ததில்லை..
இருக்கப்போவதுமில்லை...
-
#நடிப்பு_என்றால்_என்ன?
ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரிடம் ஒரு நிருபர் ‘நீங்கள் நூறு வயது வரை வாழுங்கள் ஆனால் அதுவரை இப்படித்தான் இளைஞராக நடிப்பீர்களா? உங்கள் வயதுக்கேற்ற கதாபத்திரங்களை ஏற்று நடித்தால் என்ன?’ என்று அவரிடம் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர் ஒரு கடை இலாபமாக நடக்கும்போது யாராவது வியாபாரத்தை நிறுத்துவார்களா என்றார். தன் படம் வசூலை அள்ளிக்கொட்டும்போது தான் ஏன் இளைஞனாக நடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர் கூற விரும்பிய கருத்து. மேலும் அவர் நடிப்பு என்றால் என்ன? இருபது வயதுக்காரர் 80 வயது முதியவராக நடிப்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லவா? அது சிறப்பான நடிப்பு என்றால் அதைப்போல நான் இருபது வயது இளைஞனை போல நடிப்பதும் சிறப்பான நடிப்பு தானே என்று அவர்களுக்குப் புரியும்படி எடுத்துக்கூறினார்.
நடிப்பில் வயது வித்தியாசம் இருப்பது குறித்து விளக்க அப்போது மேலும் ஓர் உதாரணத்தையும் எடுத்துரைத்தார். நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் தன் முதிர்ந்த வயதில் மனோகரா நாடகத்தில் நடிக்கும்போது தர்பாருக்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரை இழுத்து வரும் காட்சியில் இந்தப் பதினாறு வயது பாலகனை என்று தன்னைக் குறிப்பிட்டபடி ஒரு நீண்ட வசனம் பேசுவார். அப்போது அந்நாடகத்தைப் பார்த்த அனைவருக்கும் அவர் வயது 60 என்பது தெரியும். இருந்தும் அந்நாடகம் வெற்றி பெற்றது. ஏன் தெரியுமா? பார்ப்போர் நடிப்பைப் பார்த்து ரசிக்கிறார்களே தவிர நடிப்பவரின் வயதைக் கருதுவதில்லை. அதனால்தான் இன்னும் என் படங்கள் நல்ல வசூலைப் பெறுகின்றன என்றார்.
முதியவர் வேடம் ஏன்?
எம்.ஜி.ஆர்
தமிழ் பாரம்பர்யத்தில் வள்ளி திருமணம் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. அதில் முருகனாக நடிப்பவர் வேலன் [இளைஞன்] விருத்தன் [முதியவர்] என்று இரு வேடம் போடுவார். யானையைக் கண்டு அஞ்சி ஓடும் வள்ளியை முதியவர் வேடத்தில் வந்து முருகன் காப்பாற்றி தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி சத்தியம் வாங்குவார். எனவே, மாறு வேடங்களில் முதியவர் வேடம் என்பது தமிழ் ரசிகர்கள் ஏற்கெனவே பார்த்து ரசித்து ஏற்றுக்கொண்ட ஒரு வேடம் ஆகும். முதியவராக வரும்போது ரசிகர்களிடையே ஒரு ‘சிம்பதி’ கிடைக்கும். எனவே எம்.ஜி.ஆர் பாரம்பர்ய வெற்றி ஃபார்முலாவான முதியவர் வேடத்தை தன் பல படங்களில் பயன்படுத்திக் கொண்டார்.
எம்.ஜி.ஆர் தன் படங்களில் ஆக்க்ஷன் ஹீரோவாகவே நடித்ததால் பிற வேடங்களில் நடிக்க வாய்ப்பில்லை. எனவே அவர் போலீஸாக வரும்போதும் அவர்மீது தவறாகக் குற்றம் சுமத்தப்பட்டு தப்பிக்கும் போதும் கதாநாயகியை வேற்றுருவில் வந்து காதலிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதும் மாறு வேடங்களைத் தெரிவு செய்தார். முதியவர் வேடத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் வெவ்வேறு வகையான முதியவர் வேடங்கள். அவற்றை இப்போது விரிவாகக் காண்போம்.
வேடப் பொருத்தம்
முதியவர் வேடத்துக்குரிய நரைத்த தலை, தளர்ந்த உடல், சுருங்கிய கண்கள், ஒளியிழந்த முகம், நடுங்கும் குரல் என மேக்கப், காஸ்டியூம், நடிப்பு என அனைத்திலும் எம்.ஜி.ஆர் கவனம் செலுத்தியிருப்பார். குலேபகாவலி, மலைக்கள்ளன், மகாதேவி, பாக்தாத் திருடன், படகோட்டி, தேடி வந்த மாப்பிள்ளை போன்ற சில படங்களில் முதியவராக மாறு வேடமிட்டு வந்து சில முக்கியக் காட்சிகளில் நடித்திருப்பார்.
குலேபகாவலியில் முதியவர் வேடத்தில் வந்து லக்பேஷ்வாக நடிக்கும் டி.ஆர் ராஜகுமாரியை பகடையில் ஜெயிக்கும் ரகசியத்தை அறிந்து அவரை வெல்வார். மலைக்கள்ளன் படத்தில் முதியவராக வந்து பி.பானுமதியைக் காப்பாற்றுவார் பின்னர் அவரை ரகசியமாகச் சந்திக்க இரவில் வந்த போது கூட முதியவரைப் போல நடுங்கும் குரலில் பேசி தன்னை வெளிப்படுத்துவார்
சக்கரவர்த்தி திருமகள் படத்தில் சாக்ரட்டீஸ் போன்ற தோற்றத்தில் ஒரு முதியவர் வேடத்தில் வந்து அவர் பாடிய மனுசன் பொறக்கும்போது பொறந்த புத்தி போகபோக மாறுது என்ற பாடலில் வரும் ‘கணக்குத் தெரியாம சிலது கம்பையும் கொம்பையும் ஆட்டுது. ஆனால் காதோரம் நரைச்ச முடி கதை முடிவைக் காட்டுது’ என்ற வரிகள் எம்.ஜி.ஆருக்குப் பிடித்தவை ஆகும். இந்தப் பாட்டு வரிகள் சிலர் தம் செல்வாக்கு நிரந்தரமானது என நினைத்து ஆடும் ஆட்டங்களின் நிலையாமையை விளக்குவதால் அவருக்கு மிகவும் பிடித்தன. அவர் மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருந்த இடம் தெரியாமல் போனதை நேரில் கண்டவர் என்பதால் நிலையாமை தத்துவத்தை நன்கு புரிந்து வைத்திருந்தார். இந்தப்படம் திமுகவின் முதல் வெற்றி வாய்ப்புக்கு வழிகோலிய படமும் ஆகும்
எம்.ஜி.ஆர்
உதய சூரியன் என்ற பெயரில் சக்கரவர்த்தி திருமகள் படத்தில் நடித்த எம்.ஜி.ஆர் திமுகவின் முதல் தேர்தல் பிரவேசத்தை முன்னிட்டு சாக்ரட்டீஸ் முதியவர் வேடத்தில் வந்து பாட்டிலேயே பகுத்தறிவு பிரசாரமும் செய்தார். ‘உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் -- அதை ஒப்புக்கொள்ளும் வீரருக்கு முன்னால -- நாம் கத்தி என்ன கதறி என்ன -- ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா’ என்று பாடுவார்.
பாக்தாத் திருடனில் வைஜயந்திமாலாவை ஏலத்தில் வாங்கும் அருவருப்பான முதியவராக வருவார். அவருக்குக் கூரிய ஒட்டு மூக்கும் பெரிய தொந்தியும் இருப்பதால ஆள் அடையாளமே தெரியாது. அவரிடமிருந்து தப்பிக்க நினைக்கும் வைஜெயந்திமாலாவின் காலில் சுருக்குப் போட்டு ‘’சூத்திரக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு – உன் பாச்சா ஒன்னும் பலிக்காது இங்கே செல்லு ‘’ என்று அவரை மீண்டும் குகைக்குள்ளே அனுப்பிவிடுவார். இந்த வேஷத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.
படகோட்டியில் இரண்டு குப்பத்தையும் ஒற்றுமைப்படுத்த முதியவர் வேஷம் போட்டிருப்பார். சரோஜாதேவியைக் குழந்தே குழந்தே என்று கூப்பிடுவார். அதற்கு அவர் ‘’சதா குழந்தே குழந்தேன்னுட்டு விலைக்கு வாங்குன சனியன் மாதிரி’’ என்று திட்டுவார். ‘’நானொரு குழந்தை நீயொரு குழந்தை – ஒருவர் மடியிலே ஒருவரடி’’ என்ற பாட்டு இந்தத் தாத்தா வேடத்துடன் தொடங்கும் பிறகு அந்த வேடம் கலைந்து மாணிக்கமாக காட்சியளிப்பார்.
தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் ஜெயலலிதாவுக்கு இங்கிலீஷ் மியூசிக் கற்றுத்தரும் வாத்தியாராக வருவார். இவரது தோற்றம் தலையில் தொப்பியும் செம்பட்டை தாடியும் வட்டக் கறுப்புக் கண்ணாடியும் பார்க்க சற்று அருவருப்பாக இருக்கும். ஆனால் ஆறுமுகம் இது யாரு முகம் – தாடியை வச்சா வேறு முகம் -- தாடியை எடுத்தா தங்க முகம்’’ என்ற பாட்டு தாத்தா வேடத்துடன் தொடங்கும்.
எம்.ஜி.ஆர்
தாய் சொல்லை தட்டாதே படத்தில் சந்தையில் சுற்றித் திரியும் ஒரு நாடோடி முதியவராக மாறு வேடம் போட்டு வழக்கம் போல குற்றவாளிகளைப் பிடிக்க வருவார். அதில் வேடம் போட்டவர் எம்.ஜி.ஆர் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தோற்றம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். உச்சியில் வழுக்கை நரைத்த முடி மீசை தாடி, கிழிந்து ஒட்டுப் போட்ட பழைய நைந்த கோட், தோளில் ஒரு பச்சைக்கிளி கை மடக்கில் உட்கார்ந்திருக்கும் ஒரு குரங்கு, கக்கத்தில் இடுக்கிய ஒரு குடை, கையில் ஒரு தடியோடு தளர்ந்து தடுமாறும் நடை, சில சமயம் அந்தக் குரங்கு சங்கிலியைப் பிடித்த படியும் நடப்பார், கூடவே அந்தக் குரங்கு ஓடி வரும். சந்தையில் பிக்பாக்கெட் அடித்தல், பெண்களை, ஃபாலோ செய்தல், அவர்களோடு நடந்து வந்தபடி விசிலடித்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் வகையில் நாக்கை துருத்தி முறைத்துப் பார்த்து குற்றவாளிகளை அதட்டுவார். கூடவே ‘’போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியைப் படைத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே’’ என்று பாட்டும் பாடுவதாக அக்காட்சி அமைந்திருக்கும். காவல் நிலையத்துக்கு வந்து வேடத்தைக் கலைக்கும்போது எம்.ஜி.ஆர் என்பது தெரிய வரும். முதல் முறை இப்படம் பார்ப்போருக்கு எம்.ஜி.ஆர் என்று தெரியாது.
ஆசைமுகம் படம் தமிழில் அந்த முதல் ப்லாஸ்டிக் சர்ஜரி பற்றிய படம் ஆகும். எம்.ஜி.ஆர் வஜ்ரவேல் என்ற ராம்தாஸ் தன்னைப் போல முகத்தை ப்லாஸ்டிக் சர்ஜரி செய்து தன் வீட்டில் புகுந்துவிட்டதை அறிந்து தன் அப்பாவின் சித்தப்பாவைப் போல ஒரு கோட் சூட் போட்ட வெளிநாட்டு முதியவர் போல மாறு வேடத்துடன் வந்து தன் வீட்டிலேயே தங்குவார். அப்போது ராம்தாசை கேலி செய்து பாடுவதாக ஒரு பாடலை எம்.ஜி.ஆர் பாடுவார் அதுதான் 'எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு' என்ற பாடல். இப்பாடல் காட்சியில் நாகேஷும் சரோஜாதேவியும் மாறு வேடமிட்ட எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடுவார்கள் ராம்தாசுக்கு இது கோபத்தை ஏற்படுத்தும். இந்த வேடத்தில் எம்.ஜி.ஆர் ஒரு காலை சாய்த்து சாய்த்து ஒரு கைத்தடியை ஆதரவாகக் கொண்டு நடப்பார். இதில் தலைமுடி கறுப்பும் வெளுப்புமாகக் காணப்படும் தாடி இருக்கும் கண்ணில் கூலிங்க் கிளாஸ் போட்டிருப்பார். ஒரு ஸ்டைலான கோட் சூட் போட்ட தாத்தாவாக வெளிநாட்டிலிருந்து வந்தவராகத் தோன்றுவார். இந்த மேக்கப் காஸ்டியூம் அனைத்தும் நவீன காலத்து தாத்தா போல இருக்கும்.
எம்.ஜி.ஆர் முதியவர் வேடத்தில் தோற்றம் உடை, குரல் மற்றும் வசனம் நடிப்பு முக பாவனை கை கால் அசைவு என அனைத்திலும் கவனம் செலுத்தியதோடு அந்த வேடத்திலேயே பல படங்களில் சமூக சிந்தனையுள்ள பாட்டும் பாடியிருக்கிறார்....nsm...
-
‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன' என்பது இறைவனுக்கு மட்டுமல்ல #எம்_ஜி_ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. #எம்_ஜி_ஆர் திரையுலகில் இருந்த போதும் முதல்வரான பிறகும் தன்னை வளர்த்துவிட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்குக் கஷ்டம் என்றாலும் நஷ்டம் என்றாலும் அத்தகவல் இவர் கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து மீட்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாகத் தெரிகிறது.
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆரை நம்பினோர் கைவிடப்படார்
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக்கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி ‘எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா’ என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கும் இருந்திருக்கிறது.
நடிகை என்கிற ஒரே காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகையரிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டார் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே, அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.
உடம்பை பார்த்துக்கொள்
சாவித்திரி சொந்தப்படம் எடுத்து தன் சொத்தை எல்லாம் இழந்தார். சென்னை ஹபிபுல்லா ரோட்டில் இருந்த பெரிய மாளிகையும் ஏலத்தில் போய்விட்டது. இந்நிலையில் ஒரு நாள் அவர் எம்.ஜி.ஆரின் மாம்பலம் ஆஃபிஸுக்கு வந்து அவரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர் அவரிடம் ஒரு குட்டிச்சாக்கில் ஒரு லட்சம் ரூபாயைப் போட்டுக் கொடுத்தார். அத்துடன் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார். உடம்பை கவனித்துக் கொள்ளம்மா என்று கூறி அனுப்பிவைத்தார். இந்த ஒரு லட்சம் ரூபாயை வைத்து சாவித்திரி முன்னேறிவிடப் போவதில்லை. அவர் எப்படிச் செலவழிப்பார் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கும் எனினும் ஒரு மாபெரும் நடிகை உதவி என்று கேட்கும்போது அவருக்கு உதவுவதே மனுஷத்தனம் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கை.
திருமணம் செய்துகொள்
ஒரு முறை லட்சுமி வந்து எம்.ஜி.ஆரை பார்த்தார். அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமையில் இருந்த லட்சுமிக்குத் தொல்லைகள் ஏராளம் சூழ்ந்தன. எம்.ஜி.ஆரிடம் வந்து தன் பிரச்னையைக் கூறினார். எம்.ஜி.ஆர், நீ பொது வாழ்க்கைக்கு வா அல்லது குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள். அதுதான் உனக்குப் பாதுகாப்பு என்று ஆலோசனை தெரிவித்தார். லட்சுமியிடம் அரசியலுக்கு வருகிறாயா என்று கேட்டார். ‘அது தன்னால் முடியாது’ என்றார் லட்சுமி. ‘எந்தச் சாமி எந்தப் பட்டணம் போனாலும் நான் பத்து மணிக்கு தூங்கப் போய்விடுவேன். எனவே பொதுக்கூட்டங்களில் பேசுவது இயலாத காரியம்’ என்றார் லட்சுமி. ‘அப்படியென்றால் திரும்பவும் திருமணம் செய்துகொள். ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்து வா. உனக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். பாதுகாப்பாகவும் உணர்வாய்’ என்றார் எம்.ஜி.ஆர். அப்படியே செய்தார் லட்சுமி. இன்றைக்குக் கணவர் குழந்தை என லட்சுமி நிம்மதியாக வாழ்கிறார்.
தெலுங்கு கத்துக்கலாம்
‘கொக்கு சைவ கொக்கு’ பாட்டில் ரஜினியுடனும் ‘கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா வர்றியா’ என்ற பாட்டில் விக்ரமுடனும் ஆடிய ஜோதிலட்சுமி ஆடல் பாடல் கலைகளில் கை தேர்ந்தவர். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அவர் பாட்டி தமயந்தியும் அம்மா தனலட்சுமியும் நடிகையராய் இருந்தவர்கள். எம்.ஜி.ஆருக்கு இவர்கள் நல்ல பரிச்சயம் ஆனவர்கள்.
ஒரு நாள் ஜோதிலட்சுமியின் தாயார் எம்.ஜி.ஆரிடம் பேசும்போது ‘இப்போது தமிழில் ஜோதிக்கு அதிக வாய்ப்பில்லை. தெலுங்கில் அழைப்பு வருகிறது, ஆனால் இவள் நடிக்க மறுக்கிறாள்’ என்று குறைபட்டுக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர் ஜோதிலட்சுமியிடம் ‘ஏன் உனக்குத் தெலுங்கில் நடிச்சா கசக்குதா’ எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோதிலட்சுமி ‘இல்லண்ணே தெலுங்கு பாஷை தெரியாது. என்ன பேசுறாங்கன்னே எனக்குப் புரியாது’ என்றார். ‘அதெல்லாம் புரியும் புரியும். போய் நடி அப்படியே தெலுங்கு கத்துக்கலாம்’ என்று தைரியம் கொடுத்தார். அதன்பிறகு சண்டை காட்சி நிறைந்த படங்களில் ஜோதிலட்சுமி ஒரு ரவுண்ட் வந்தார். ‘நடிகைக்கு ஃபீல்டில் இருந்தால்தான் மதிப்பு. ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டால் யாரும் அவரை தேடப் போவதில்லை’ என்பதால் கிடைக்கும் வாய்ப்பை தவற விடக் கூடாது என்று எம்.ஜி.ஆர் கூறிய அறிவுரையைக் கேட்டதால் அவர் சாகும்வரை நடித்தார். விவேக்குடன் நகைச்சுவை பாத்திரத்திலும் நடித்து பேர் வாங்கினார்.
நடிகையும் குடும்பப் பெண்தான்
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது மாதந்தோறும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். நடிகர் சங்க பொறுப்பாளர்கள் பத்திரிகையாளரின் கேள்விகளுக்குப் பதில் கூறினர். ஒரு நிருபர் எம்.என்.ராஜத்திடம் ஏன் குடும்பப்பெண்கள் நடிக்க வருவதில்லை என்றார். இதற்கு பதிலளிக்க ராஜம் தடுமாறினார். உடனே எம்.ஜி.ஆர் எழுந்து ‘ஏன் வருவதில்லை. இப்போது ராஜம் வந்திருக்கிறாரே. இவரும் குடும்பப் பெண்தானே. இவருக்கும் குடும்பம் இருக்கிறது. கணவர் குழந்தைகள் இருக்கின்றனர்’ என்றார்.
நடிகை எப்படி இருக்க வேண்டும்?
நடிப்பு என்பது நடிகையருக்கு வாழ்வாதாரம் தரும் ஒரு தொழில் என்பதை எம்.ஜி.ஆர் அடிக்கடி மற்றவர்களுக்கு நினைவுபடுத்தினார். நாடக நடிகையர் நாடகம் முடிந்ததும் மறுநாள் ஊரைச் சுற்றிப் பார்க்க போகக் கூடாது. ஜவுளி எடுக்க வேண்டும் என்றால். வீட்டுக்கு கொண்டுவரச் சொல்லி சேலை துணிமணிகளை எடுக்க வேண்டும். அனாவசியமாக வெளியே போய் ரசிகர்களின் மத்தியில் தொல்லைக்கு ஆளாகக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்ததை ஜி.சகுந்தலாவின் பேட்டி வாயிலாக அறிகிறோம்.
வீண் அரட்டை கூடாது
சினிமாவிலும் தன் செட்டில் இருக்கும் நடிகையரும் பெண்ணின் பெருமை காப்பவராக இருக்கவேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் கவனமாகவும் இருந்தார். பெண்கள் யாரோடும் பேசி சிரித்து அரட்டை அடிப்பது எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காது. நடிக்க வந்தால், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். நடிகையரிடம் யாரும் கதையளந்தால் அவருக்கு அடி விழும்; நடிகையருக்கும் திட்டு விழும்.
இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ்க
எம்.ஜி.ஆர்
நடிகையர் ஆண்களை வெட்டி அதிகாரம் செய்வது தகாது என்றும் எம்.ஜி.ஆர் கருதினார். ஒரு முறை சரோஜாதேவி ஷாட் முடிந்ததும் ‘ஏ ஃபேனை போடுப்பா’ என்று ஆயாசமாக வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். உடனே எம்.ஜி.ஆர், ‘உன்னால் செய்யக்கூடிய வேலையை ஏன் அடுத்தவருக்கு ஏவுகிறாய்’ என்று கடிந்து கொண்டார். லட்சுமி ஒரு நாள் மதிய இடைவேளையின் போது உறங்கிக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் என்ன உறக்கம் என்று எழுப்பிக் கேட்டதற்கு, ‘நேற்று வீட்டில் கரன்ட் இல்லை ஃபேன் ஓடவில்லை’ என்றார். ‘அப்படிச் சொல்லாதே வீட்டில் இருக்கும் வசதியைக் கொண்டு இருக்க பழகிகொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். ஒருமுறை ஏ.வி.எம் சரவணனிடமும் இது போன்ற ஓர் அறிவுரையைக் கூறினார். ‘வசதியாக வாழலாம் ஆனால் ஆடம்பரம் கூடாது’ என்பார். எனவே நடிகைகள் கண்ணியமாக வாழ வேண்டும். மற்றவர்களும் அவர்களை மதிக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கையாக இருந்தது.
குடும்ப உறவை மதித்த எம்.ஜி.ஆர்
நடிகையும் குடும்பப் பெண்தான் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்ட எம்.ஜி.ஆர் திருமணமான பெண்களுடன் ஜோடி சேர்வதை தவிர்த்தார். ஈ.வி.சரோஜாவின் சொந்தத் தயாரிப்பான கொடுத்து வைத்தவளில் நடித்தபோது காதல் காட்சிகளை மட்டும் ப.நீலகண்டன் இயக்கட்டும். சரோஜாவின் கணவர் இயக்க வேண்டாம். அது சரோஜாவுக்கு அசௌகரியமாக இருக்கும் என்று ராமண்ணாவை தவிர்த்துவிட்டார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் திருமண உறவை மதித்தார்.
முழங்காலுக்கு மேல் ஏறிய பாவாடை
சர்வாதிகாரி படப்பிடிப்பில் அஞ்சலிதேவி ஒரு சுற்று சுற்றி கீழே விழும் காட்சியில் நடித்தபோது எம்.ஜி.ஆர் ரீடேக் எடுக்கும்படி கூறினார். இயக்குனரும் அஞ்சலி தேவியும் ஏன் சரியாகத்தானே இருந்தது என்றனர். எம்.ஜி.ஆர் இயக்குனரிடம் அஞ்சலி சுற்றி வந்து கீழே விழுந்தபோது அவர் பாவாடை முட்டிக்கு மேலேறிவிட்டது என்றார். சட்டென்று அதிர்ந்து போனார் அஞ்சலிதேவி. தனது மானத்தை காப்பாற்றிய எம் ஜி ஆருக்கு நன்றி கூறினார்.
முற்காலத்தில் உயர் குடிப்பெண்கள் மட்டுமே முட்டியை மறைத்து உடை அணியும் அதிகாரம் பெற்றிருந்தனர். சினிமாவில் கதாநாயகிகளும் முழங்காலை மறைத்து தான் உடை அணிவர். எனவே முட்டி தெரிவது ஆபாசம் என்பதால் எம் ஜி ஆரை ஆபத்பாந்தவனாக அஞ்சலி கருதினார். உடனே ரீடேக் எடுக்கப்பட்டது. கதாநாயகியின் நடை உடையில் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும் என்பதை எம் ஜி ஆர் விரும்பினார். நடிகை என்றாலும் அவளும் பெண் தானே? அவருக்கும் மானம் மரியாதை உண்டல்லவா? என்று எம் ஜி ஆர் கருதியதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறார் அஞ்சலிதேவி.
அவர் குணச்சித்திர நடிகை
பணம் படைத்தவன் படத்திற்காக ‘’கண் போன போக்கிலே கால் போகலாமா’’ என்ற பாட்டுக்கான படப்பிடிப்பு நடந்த போது அந்தப் பாட்டு ஒரு கிளப் டான்ஸ் என்பதால் சௌகார் ஜானகிக்கு கால்கள் தெரியும்படியான குட்டை பாவாடை தரப்பட்டது. செட்டுக்கு வந்த எம் ஜி ஆர் சௌகார் ஜானகியின் உடையை பார்த்துவிட்டு காஸ்டியூமரை அழைத்தார். ‘’அவர் கவர்ச்சி நடிகை அல்ல. குணச்சித்திர நடிகை. அவருக்கு பெண் குழந்தைகள் உண்டு. இந்த டிரஸ் வேண்டாம் உடம்பை மூடியிருக்கும் உடை கொடுங்கள்’’ என்றார். பின்பு கணுக்கால் வரை தொங்கும் நீண்ட பாவாடையும் மேல் சட்டையும் அணிந்து சௌகார் ஜானகி நடித்தார். பாட்டு இன்றும் எம் ஜி ஆரின் புகழுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
என் மகன் விவரம் தெரிந்தவன்
திருமணமான நடிகைகளின் திருமண வாழ்க்கை மற்ற பெண்களை போல சிறப்பாக இருக்க வேண்டும் அவர்களுக்கு குடும்பங்களில் கணவர் பிள்ளைகள் போன்றவரால் எந்த நெருக்கடியும் ஏற்பட தான் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் எம் ஜி ஆர் கவனமாக இருந்தார். நாடோடி மன்னன் படத்தில் கத்திகுத்து பட்டு தண்ணீரில் விழுந்துகிடக்கும் பானுமதியை எம் ஜி ஆர் தூக்கிக்கொண்டு வரும் காட்சியில் நடிக்க பானுமதி மறுத்துவிட்டார். என் மகன் பரணி விவரம் தெரிந்தவன் அவன் என்னை ஒரு ஆண் தூக்கிக்கொண்டு போவதை விரும்பமாட்டான் என்று கூறிவிட்டார். ஏற்கெனவே அவர்களுக்குள் சற்று உரசல் இருந்து வந்ததால்ல் எம் ஜி ஆர் முழு பணத்துக்கான காசோலையைக் கொடுத்து இனி தன் படத்தில் நடிக்க வேண்டாம் என்று தகவல் அனுப்பினார். பானுமதியோ ஜானகி எம் ஜி ஆருக்கு ஒரு கடிதம் எழுதி அந்த செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்.
திருமணமான நடிகைகளுக்கு இருக்கும் நெருக்கடியை புரிந்துகொண்ட எம் ஜி ஆர் அதன்பிறகு திருமணமான நடிகைகளோடு நடிப்பதை பெரிதும் தவிர்த்துவிட்டார். அதே படத்தில் சரோஜாதேவியை அறிமுகப்படுத்தினார். அவர் திருமணம் செய்துகொண்ட பின்பு ஜெயலலிதா அதன் பிறகு லதா என தன் கதாநாயகிகளை அவர் தெரிவு செய்தார்.
தம்பி மனைவியோடு டூயட்டா?
அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி என்று சாமான்ய மக்களே சொல்லி வந்த காலத்தில் திரையுலகில் இருந்த எம் ஜி ஆர் தன் தம்பி மனைவியாக கருதிய விஜயகுமாரியுடன் ஜோடி சேர மறுத்தார். திமுகவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ் எஸ் ஆர் எனப்படும் எஸ் எஸ் ராஜேந்திரன் எம் ஜி ஆரை அண்ணன் என்று தான் அழைப்பார். அவருடன் விஜயகுமாரி தாலி கட்டிய மனைவியாக வாழாவிட்டாலும் அக்காலத்தில் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பல படங்களிலும் நாடகங்களிலும் ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருந்தனர். அப்போது ஒரு படத்தில் எம் ஜி ஆருக்கு விஜயகுமாரியை ஜோடியாக போடலாமா என்று கேட்டபோது அவர் தம்பி மனைவியுடன் ஜோடியா? என்று மறுத்துவிட்டார். நிஜ வாழ்விலும் அவர் சகோதரன் மனைவியை தாயாகவே மதித்தார். எனவே விஜயகுமாரி கணவன், காஞ்சித் தலைவன் போன்ற படங்களில் எம் ஜி ஆரின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பை மட்டுமே பெற்றார். [எஸ் எஸ் ஆரோடு ஒரு மோதிரமோ மாலையோ கூட மாற்றிக்கொள்ளாமல் சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த விஜயகுமாரி அவர் தன் சினிமா வாய்ப்புகளை கெடுப்பதைக் கண்டு மனம் வெதும்பி பிரிந்துவிட்டார். பின்பு பராசக்தி படத்தை தயாரித்த பெருமாள் முதலியாரை முறையாகத் திருமணம் செய்துகொண்டார்]
வெளியூர்களில் நடிகையர்களுக்கு பாதுகாப்பு
நாடகத்தில் நடிக்க நடிகையரை வெளி ஊர்களுக்கு அழைத்துச் செல்லும்போது எம் ஜி ஆர் மிகவும் கவனமாக இருப்பார். அவர்கள் வெளியில் வரக் கூடாது ரசிகர்களால் தொந்தரவு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக் இருப்பார். எம் ஜி ஆர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் தன் பெயரில் நாடக மன்றம் ஒன்றை தொடங்கினார். அதில் அவருக்கு ஜோடியாக ஜி சகுந்தலா நடிப்பார். அப்போது நடிகையர் கோவிலுக்கு போகவோ ஷாப்பிங் போகவோ எம் ஜி ஆர் அனுமதிக்க மாட்டார்.. அவர்களை காரில் ஏற்றி அனுப்பிய பிறகே எம் ஜி ஆர் தன் காரை எடுக்க சொல்வார்.
சினிமாவிலும் வெளிப்புற படப்பிடிப்புக்கு போகும் போது யாராவது தன் குழுவில் உள்ள பெண்களை கேலி செய்தால் அடித்து உதைத்து அந்த இட்த்தை விட்டு அவர்களை அப்புறப்படுத்திவிடுவார். நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்பதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
காஷ்மீரில்
எம்.ஜி.ஆர் லட்சுமி மஞ்சுளாவுடன் காஷ்மீர் நகர் வீதியில் இதயவீணைக்காகப் படப்பிடிப்பு நடத்தியபோது பொதுமக்கள் படப்பிடிப்புக்குப் பகுதிக்குள் வராமல் இருக்க கயிறு கட்டியிருந்தனர். அதையும் மீறி சில இளைஞர்கள் உள்ளே புகுந்து பெண்களிடம் சில்மிஷம் செய்தனர். எம்.ஜி.ஆர் உடனே நடிகைகளை அருகில் இருந்த கடைக்குள் தள்ளி விட்டு ஷட்டரை இழுத்துவிட்டார். அவர்கள் உள்ளே இருந்த ஒரு கண்ணாடி வழியாக வெளியே பார்த்தனர். அங்கே எம்.ஜி.ஆர் அந்தக் காலிப் பசங்களோடு மூர்க்கமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். ‘எம்.ஜி.ஆர் படத்தில் வருவதைப் போலவே இந்த நிஜ சண்டை இருந்தது’ என்கிறார் லட்சுமி.
மைசூரில்
கங்கா கெளரி படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்தபோது சிலர் அங்கிருந்த ஜெயலலிதாவிடம் வந்து நீங்கள் கர்நாடகாவில் தானே பிறந்தீர்கள் அதனால் ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று சொல்லுங்கள் என்று வற்புறுத்தினர். ஜெயலலிதா தமிழ் ஒழிக என்று சொல்ல மறுத்துவிட்டார். கூட இருந்த படப்பிடிப்புக் குழுவினர் வற்புறுத்தியும் ஜெயலலிதா சொல்லவில்லை. கன்னடர்கள் படப்பிடிப்பு நடத்தவிடமாட்டோம் என்று கலாட்டா செய்தனர். இந்த விஷயம் தெரிந்து அருகில் வேறு ஊரில் ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆர் அங்கு வந்துவிட்டார். இப்போது படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உணர்ந்தனர். எம்.ஜி.ஆர் இங்குதான் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்று நம்பினர். ஜெயலலிதாவிடம் பேசி ஆறுதல் கூறினார். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
எம்.ஜி.ஆர்
ஒரு சமயம் மைசூரில் எம்.ஜி.ஆரும் லதாவும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டது. எம்.ஜி.ஆர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார். அதை கவனிக்காத சில வாலிபர்கள் லதாவையும் மற்ற நடிகைகளையும் பார்த்து ஆபாசமாக பேசி சிரித்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர் விரைந்து வந்து அவர்களை அடித்து உதைத்தார். அநியாயம் நடக்கும்போது ஸ்டன்ட் நடிகர்களை அழைத்து அடிக்கச் சொல்வோம் என்று எம்.ஜி.ஆர் காத்திருக்க மாட்டார். எதிரிகள்மீது விழும் முதல் அடி அவர் அடியாகத்தான் இருக்கும். அவர்கள் தம் வாழ்நாளில் திரும்பவும் அந்தத் தப்பை செய்ய நினைக்காத அளவுக்குப் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்.
ஜப்பானில்
வெளியூர் வெளிமாநிலம் என்றில்லை வெளி நாடாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் நடிகையரிடம் சில்மிஷம் செய்பவர்களை அடித்து உதைக்க தயங்கியதே இல்லை. ஜப்பானில் எஃஸ்போ 70-ல் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு நடந்த போது அங்கு ஒருவர் சந்திரகலாவை கேலி செய்தார். ‘அவரை தன் கறுப்புக் கண்ணாடி வழியாக தூரத்திலிருந்து கவனித்துவந்த எம்.ஜி.ஆர் அருகில் வந்து பட்டென்று அடித்தார். அடி வாங்கியவர் அங்கிருந்து ஓடிப் போய்விட்டார். இது வெளிநாடாயிற்றே, சட்டம் ஒழுங்குப் பிரச்னை வருமோ என்றெல்லாம் யோசித்துப் பார்க்காமல் அநியாயத்தைக் கண்டவுடன் வழக்கம் போல எம்.ஜி.ஆர் பொங்கிவிட்டார். அவர் நல்ல குணத்துக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை மாறாக அடி வாங்கியவர் தன் தவறை உணர்ந்து திரும்பி வந்து மன்னிப்புக் கேட்டார். இதனால்தான் எம்.ஜி.ஆருடன் நடிக்கும்போது நாங்கள் பயமின்றி பாதுகாப்பாக உணர்வோம்’ என்கிறார் ஜி.சகுந்தலா.
யாராக இருந்தாலும் கண்டித்தார்
நடிகைகளுக்குத் துன்பம் கொடுப்பவர் யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கண்டிக்க தயங்கியதே இல்லை. ஓர் அமைச்சரால் தனக்குத் தொல்லை என்று முறையிட்ட ஓர் இளம் நடிகைக்கு ஆதரவாக அந்த அமைச்சரை அழைத்துக் கண்டித்தார்.
நடிகைகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர், நடிகர்கள் பெண்களிடம் தவறு செய்த போது அதைக் கண்டிக்கத் தயங்கவில்லை. ‘கல்லூரிப் பெண்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நடிகர் சுமன்’ மீது உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை கிடைக்கச் செய்தார். சுமனும் நடிகர்தானே என்று எம்.ஜி.ஆர் அவருக்கு இரக்கம் காட்டவில்லை வாழ்க்கை வீணாகப் போன இளம் பெண்களுக்காக எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார்.. நடிகன் என்றால் இளம் பெண்களை மயக்கி அவர்கள் வாழ்வைச் சீரழிக்கலாம் என்பதை எம்.ஜி.ஆர் ஏற்கவில்லை. நடிகருக்குக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
ஆயிரம் ரூபாய் பந்தயம்
ஒரு பட தயாரிப்பு நிறுவனம் எம்.ஜி.ஆரை, தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்தபோது மூத்த தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீனிவாசன் ஒரு தகவலை தெரிவித்தார். ‘இந்த நிறுவனம் அழகான சாகசமான பெண்களைக் காட்டி கதாநாயக நடிகர்களைக் கவிழ்த்துவிடும். உங்களையும் கவிழ்த்துவிட திட்டமிடுவார்கள்’ என்றார். அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர், ‘என்னை யாரும் அப்படிக் கவிழ்க்க முடியாது. எவ்வளவு பந்தயம்’ என்றார். முக்தாவும் ‘ஆயிரம் ரூபாய்’ என்றார். இது நடந்து பல வருடங்கள் கழித்து ஒரு மேடையில் முக்தா இந்தச் சம்பவத்தைச் சொல்லி, ‘எம்.ஜி.ஆர் மிகுந்த கட்டுப்பாடு உடையவர் அவரை யாரும் கவிழ்க்க முடியாது’ என்றார். எம்.ஜி.ஆர் உடனே அவரை ஆழமாக பார்த்தார். முக்தா, ‘என்னண்ணே’ என்றார். ‘அந்த ஆயிரம் ரூபாய் எங்கே’ என்றார் எம்.ஜி.ஆர். கூட்டம் வெடித்துச் சிரித்தது.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
எம்.ஜி.ஆர் தான் சார்ந்திருந்த திரையுலகில் நடிகையரின் கண்ணியத்தைக் காப்பதை தன் கடமையாகக் கருதினார். அவர்களுக்கு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றை தன்னால் முடிந்தவரை தீர்த்துவைத்தார். இவ்வாறு எம்.ஜி.ஆர் படத்திலும் நிஜ வாழ்விலும் பெண்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டதால் பெண்களை அவர் தாய்க்குலம் என்று அழைத்தபோது மக்கள் அதை நம்பி ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசுப் பணியாளர் முதல் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் வரை பெண்களைத் தாய்க்குலம் என்றே அழைத்தனர், மதித்தனர். காவல் நிலையத்திலும் பெண்கள் அளிக்கும் புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டன. நடிகையருக்கும் சரி சாதாரணப் பெண்களுக்கும் சரி எங்கெங்கு அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கே நான் வந்து இரட்சிப்பேன் என்று கூறிய கண்ண பரமாத்மாவாக எம்.ஜி.ஆரைக் கருதியதில் வியப்பொன்றும் இல்லை..........ns...
-
#மக்கள்_திலகத்தின்-ப்ளாக்பஸ்டர்
"ரிக்க்ஷாக்காரன்"
#மக்கள்_திலகம்
மஞ்சுளா, பத்மினி, மேஜர் சுந்தர்ராஜன், அசோகன், தேங்காய் சீனிவாசன், ராம்தாஸ், சோ, ஜி.சகுந்தலா மற்றும் பலர்
படம் வெளியான ஆண்டு:1971
இயக்குநர் : எம்.கிருஷ்ணன்
தயாரிப்பு: இராம.வீரப்பன்
இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்..
ஒரு ரிக்க்ஷாகாரரான செல்வம் (மக்கள் திலகம்) பெரிய மனிதர்கள் போலிருந்து பெண் கடத்தல், கொலை ஆகிய கொடுஞ்செயல்களை புரியும் இரு கொடுங்கோலர்களான, தர்மராஜ், கைலாசம் (மேஜர் சுந்தர்ராஜன், அசோகன்) ஆகியோர்களை சமூகத்தில் அம்பலப்படுத்துவது ஒரு பகுதியாகவும்...
தன் காதலியான உமா (மஞ்சுளா)வின் வாழ்வில் இருக்கும் ரகசியம் என்ன? பார்வதியை (பத்மினி) அவள் குடிசைக்கே சென்று பார்க்கவேண்டிய அவசியம் என்ன? அவளுடைய தகப்பனார் யார்? தர்மராஜ், உமாவின் தகப்பனாரா? .ஏன் பார்வதி மறைந்து ஒரு சேரியில் அனாதை போல் வாழ வேண்டிய அவசியமென்ன? தான் உமாவின் மானத்தையும், கற்பையும் காப்பாற்றும் பொருட்டு, போலீசில் எதிரிகளின் பொய்வழக்கில் சிக்கும்போதெல்லாம், தன்னை காப்பாற்றாமல், நீதிமன்றத்தில் மெளனம் சாதிக்கவேண்டிய அவசியமென்ன? பார்வதி, கார்மேகத்தின் (மனோகர்) விடுதலையை கவலையோடு எதிர் நோக்குகிறாளே? அவன் யார்?போன்ற இந்த புதிர்களுக்கும் விடை தேடுகிறார் மக்கள் திலகம். இந்த கதையில் வழக்கம் போல் இனிமையான பாடல்கள், விறு விறுப்பான ரிக்ஷா ரேஸ், சண்டை, நகைச்சுவை ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு.
மக்கள் திலகதிற்கு மக்கள் மனதில் சிம்மாசனம் அமைத்து உட்கார வைத்த படங்களில் இது முக்கியமானது முதன்மையானது. இந்த படத்தின் மூலம் தான் அடித்தட்டு மக்களின் வாழ்வில்
அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியானார்.
மஞ்சுளாவுடனான காதல் காட்சிகளில், பத்மினியுடனான சென்டிமென்ட் காட்சிகளில், மேஜர் சுந்தர்ராஜனை அவர் வீட்டுக்கே சென்று தவறை உணர வைக்கின்ற காட்சிகளில் மக்கள் திலகம் வேற லெவல். அதிலும் அந்த ரிக் ஷா ரேசில் மக்கள் திலகம் வென்ற உடன் அவரை அனைத்து ரிக் ஷா காரர்களும் தலைக்குமேல் தூக்கி ஆரவாரம் செய்யும் போது அந்த உற்சாகம் பார்ப்பவரையும் தொற்றிக்கொள்கிறது.
மஞ்சுளா, பத்மினி, மேஜர், அசோகன், மனோகர், சோ ஆகியோர் தங்கள் பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.
மெல்லிசை மன்னருக்கு மக்கள் திலகத்தின் படங்கள் என்றாலே தனி உற்சாகம் பிறந்துவிடுமே : "கடலோரம் வாங்கிய காற்று...; அழகிய தமிழ்மகள் இவள்..; அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனந்த சிரிப்பு ; பம்பை உடுக்கை கட்டி ; பொன்னழகுப் பெண்மை கொஞ்சும் .." என்று அத்தனை பாடல்களும் இன்றுவரை லைம்லைட்டில் உள்ளது.
இந்த படத்திற்காக மக்கள் திலகம், 1971ம் ஆண்டுக்கான இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான #பாரத் விருது பெற்றார். இந்த விருதை பெரும் முதல் தென்னிந்திய நடிகர் மக்கள் திலகமே...இது தமிழகமெங்கும் மாநாடு போல் கொண்டாட பட்டது.
இந்த படம் சென்னை தேவி பாரடைசில் வெள்ளி விழாவும், தமிழகமெங்கும் பனிரெண்டுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையிலும், தனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததற்காகவும் சென்னை முழுவதுமுள்ள 6000 க்கும் மேற்பட்ட ரிக் ஷா தொழிலாளர்களுக்கு ரயின்கோட், ஸ்வெட்டர்கள் வழங்கி சிறப்பித்தார் மக்கள் திலகம்...
"ரிக்க்ஷாக்காரன்" - மக்கள் திலகத்தின் மைல் கல்.
Source :https://en.m.wikipedia.org/wiki/Rickshawkaran....... Sridhar Babu...
-
அரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய நாடோடி மன்னன் படத்தில் எல்லாவற்றிற்கு மேலாக தன் தனித்தன்மையை ஒரே வசனத்தின் மூலம் நிலைநிறுத்தி தியேட்டரையே அதிரவைத்தவர் எம்ஜிஆர்..
‘’என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர என்னை நம்பிக்கெட்டவர்கள் இன்று வரை இல்லை’’ ,சாகா வரம் பெற்றது அவரின் இந்த வசனம்..
நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர் என்ற மூவரையும் தாண்டி, நாடோடி மன்னனில் படு கில்லாடி எம்ஜிஆர் ஒருவர் வெளியே தெரியாமல் இருந்தார். இந்த கில்லாடி எம்ஜிஆர், அரசியல் தலைவர் எம்ஜிஆருக்குள்ளும் விஸ்வரூபம் எடுத்தததால்தான் அவரை அரசியலில் திமுக தலைவர் கலைஞராலேயே கடைசிவரை சமாளிக்க முடியவில்லை..
எதற்காக இவ்வளவு பேசவேண்டியுள்ளது என்றால், நாடோடி மன்னன் படத்தில்தான் எம்ஜிஆருக்கு எதிர்கால திட்டமிடல் என்கிற யோசனை தோன்றியிருக்கவேண்டும். சினிமாவில் மற்றவர்களின் ஆளுமைகளோடு தன் ஆளுமை சமமாகவோ, கீழாகவோ போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்..
ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற படங்கள் கலைஞரின் வசனத்தால் காவியமாகின.. அது மறுக்கமுடியாத உண்மையும்கூட. சிவாஜியின் பராசக்தி, மனோகரா போன்ற படங்களைக்கூட கலைஞர் அவருடைய வசனங்களால், கலைஞரின் பராசக்தி, கலைஞரின் மனோகரா என்றே திரைஉலகில் பேசவைத்தார் இரு பெரும் நடிகர் திலகங்களுக்கு ஆரம்பகாலத்தில் வசனங்களால் வெற்றி சிம்மாசனம் அமைத்து தந்ததில் கலைஞருக்கு பெரும் பங்குண்டு.
1953லேயே கலைஞரை வைத்து சொந்தப்படம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கினார் எம்ஜிஆர், கதை வசனத்திற்கு கலைஞர் தயாராக நின்றார். ஆனால் படத்தயாரிப்பு கைகூட வில்லை. பிறகு மலைக்கள்ளன், மனோகரா போன்ற வற்றின் வெற்றிகளால் கலைஞரின் மார்கெட் தாறுமாறாய் எகிறிப்போனது..
அதேவேளையில் மலைக்கள்ளன், குலேபகாவலி, தாய்க்குப்பின்தாரம் மதுரைவீரன், அலிபாபாவும் 40 திருடர்க ளும் போன்ற தொடர் வெற்றிகளால் எம்ஜிஆர் வசூல் சக்ரவர்த்தியாக மாறி, திமுகவில் முக்கியஸ்தராகவும் உருவெடுத்துவிட்டார்.
இங்குதான் நின்று விளையாடுகிறது கில்லாடி எம்ஜிஆரின் சாமர்த்தியம். இரண்டாம் முறையாக சொந்தப்படம் நினைப்புவந்தபோது எம்ஜிஆரின் காய் நகர்த்தல்கள் முற்றிலும் விநோதமாக இருந்தன. வசனகர்த்தா ஜாம்பவான் கலைஞர் நாடோடிமன்னனில் இடம் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் தயாராகும் தனது கனவுப் படத்திற்கு கலைஞரை வசனம் எழுதவிட்டால், அவர் அதை அவரின் டிரேட்மார்க் படமாக கடத்திச் சென்று விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வு..
படத்தில் மன்னன்போல ஆட்சிக்கு வந்து ஒரு நாடோடி அறிவிக்கும் புரட்சிகரமான பட்ஜெட் காட்சிகள் முழுக்க முழுக்க தன் சிந்தனைகளாகவே தெரியவேண்டும் என்பதில் எம்ஜிஆர் தீர்மானமாக இருந்தார். அவை கலைஞரின் சிந்தனைகள் என்று பேச்சுவந்துவிடக்கூடாது என்பதே அவரின் மனஓட்டம்..
கலைஞருக்கு பதில் கண்ணதாசனை வசனம் எழுத அழைத்தார். மிகமிக முக்கியமான பதினைந்து காட்சிகளுக்கு மட்டுமே கண்ணதாசன் எழுதினார். மற்ற வசனங்களை எழுதியவர், எம்ஜிஆர் பிக்சர்சை சேர்ந்த ரவீந்தர்.தமிழ் திரை உலகின் நெம்பர் என் வசனகர்த்தாவான இளங்கோவனிடம் உதவியாளராக இருந்தவர். அதாவது நாடோடி மன்னன் படம் வசனம் என்றால் டைட்டிலில் கண்ணதாசன்- ரவீந்தர் என்றே வரும்.
இன்னொரு வியப்பான விஷயம். படத்தில் கண்ணதாசன் பாட்டெழுதவில்லை. வேறு எட்டு பேர் எழுதினார்கள். எல்லாம் ஹிட் பாடல்கள். ஆனாலும் ஒற்றை ஆளாய் பாடலாசிரியர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் மட்டுமே பேசப்பட்டார்..
நாடோடி வீராங்கன், மன்னன் மார்த்தாண்டன், ராஜகுரு தளபதி பிங்களன், அரசியல் ஆலோசகர் கார்மேகம் அமைச்சர்கள், புரட்சிகூட்டத்தினர் என் நிறைய பாத்திரங்கள் உண்டு. ஆனால் இவை எதையும் திராவிட இயக்க நடிகர்களான எஸ்எஸ்ஆர், கேஆர் ராமசாமி எம்ஆர் ராதா, சகஸ்ஹர நமம் போன்றவர்களுக்குக்கூட கொடுக்கவில்லை. ..
நாடோடிமன்னன் படம் என்றாலே எங்கும் எம்ஜிஆர் எதிலும் எம்ஜிஆர் என்ற பெயர் மட்டுமே பேசும்படி பார்த்துக்கொண்டார்.. அதுதான் வெளியில் தெரியாத கில்லாடி எம்ஜிஆர்.
திமுகவின் கொள்கைகளை எம்ஜிஆர் தன் படத்தில் தனி ஆளாய் திறம்பட பேசியிருக்கிறார் என்று அறிஞர் அண்ணாவே நினைக்கும் அளவுக்கு கட்டமைத்தார் எம்ஜிஆர்.
நாடோடி மன்னன் தயாரான போது பல படங்களுக்கு ஒப்பந்தமாகி அவ்வப்போது அவற்றிலும் நடித்துக்கொண்டிருந்தார். படம் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்து.
புரட்சித் தலைவரின் திரை துறை அரசியல் வெற்றிக்கு காரணம் அவரின் தனிப்பட்ட அறிவு திரன் உழைப்பு மட்டுமே இதில் வேறு யாருக்கும் பங்கில்லை.
புரட்சித் தலைவர் புகழ் ஓங்குக.......sbb...
-
ஒருநாள் இரவு சற்றே பட படப்புடன் தலைவர் தோட்டம் வந்து அன்னை ஜானகி அவர்களை எல்லோரும் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்.
சத்தம் இன்றி என் பின்னால் வா என்று அழைத்து கையில் பதிவில் படத்தில் இருக்கும் ஒரு டைமேர் வாட்ச் எடுத்து கொண்டு அழைக்க.
தலைவன் பின்னால் நடக்கிறார் அன்னை ஜானகி அவர்கள்..தன் வீட்டில் இருந்த நீச்சல் குளம் வந்த பின் ஜானு நான் இப்போது உள்ளே இறங்கும் போது எழும் அலைகள் ஓய்ந்த பின் நீ இந்த டைமேரை ஆன் செய்து நான் மேலே வந்த உடன் அதை ஆப் செய்யவேண்டும் என்று சொல்ல.
அவரும் திகைத்து அவர் சொன்னபடி செய்ய தலைவன் கீழே தண்ணீருக்குள் போய் அலைகள் ஓய்ந்து வினாடிகள் என்ன பட்டு மேலே அவர் வர தாமதம் ஆக ஜானு அம்மா பதற சிரித்து கொண்டே மேலே வந்த தலைவர் எத்தனை வினாடிகள் ஜானு.
என்று ஆர்வமுடன் கேட்க அலைகள் தவிர்த்து நீங்கள் உள்ளே இருந்தது 18 வினாடிகள் தாண்டி மொத்தம் அதிகம் என்று சொல்ல சரி வா என்று போய் அதற்கு பின் சாப்பிட்டு தூங்கி விட...
மறுநாள் அதிகாலை விழித்து தன் தொழில் சார்ந்த பட படப்பிடிப்புக்கு செல்ல அங்கே தயாரிப்பாளர் தாமஸ் அவர்கள் அன்று எடுக்க வேண்டிய காட்சிக்கு ஒரு டூப் நடிகர் உடன் தயார் ஆக இருக்க..
வேண்டாம் இதில் என்ன ரிஸ்க்....அப்போ அவருக்கும் அதே ரிஸ்க் தானே நானே பண்ணுகிறேன் என்று சொல்ல....அந்த நீச்சல் குளத்தில் கண்ணாடி பொறுத்த பட்ட அடி பாகத்தில் இருந்து அந்த காட்சி படம் ஆக்க பட்டது.
தலைவர் தண்ணீருக்கு அடியில் யோகா நிலையில் தியானம் செய்வது போன்ற ஒரு காட்சி....தலைவன் படத்தில் வருமே அதே காட்சி....நீரலைகள் ஓய்ந்து தலைவர் உள்ளே இறங்கி காட்சி எடுக்க பட்ட பின் பல அடிகள் கீழே இருந்த தலைவர் மேலே வர.
என்ன எப்படி என்று ஆர்வமுடன் கேட்க சூப்பர் சார் என்னால் நம்ப முடியவில்லை காட்சியில் 35 வினாடிகள் மொத்தம் அதை தாண்டி நீங்கள் அந்த யோகா அமைப்பில் உள்ளே அமர்ந்து இருந்தீர்கள் அற்புதம் என்று பாராட்ட...
அவர் தான் தலைவன் அன்னை சத்தியாவின் புதல்வர்....
சித்த வைத்தியத்தின் மகிமை சொல்லும் படம் அது...1999 இல் தாமஸ் அவர்கள் மதுரையில் இந்த நிகழ்வை பற்றி சொல்லி தலைவர் நினைவில் மூழ்குகிறார்.
1984 இல் தாமஸ் அவர்களை ஒரு நிகழ்ச்சியின் போது சந்தித்த தலைவர் அவரை அழைத்து எனக்கு பல சண்டை முறைகள் உடல் பயிற்சி முறைகள் தெரிந்து இருந்தாலும் யோகா மூச்சு பயிற்சி முறை தலைவன் படம் மூலம் அறிமுகம் ஆக அதை நான் தொடர்ந்து செய்து வந்தேன்.
மிக்க நன்றி உங்களுக்கு அதுவே அமெரிக்க மருத்துவ மனையில் நான் சிகிச்சை பெற்ற போது மிகவும் உதவியது என்று சொல்லி கண் கலங்குகிறார் நம் இதயதெய்வம் எம்ஜிஆர்....
என்றும் அவர் புகழ் காப்போம்....நன்றி.
தலைவனின் ரசிகர்களின் ஒருவன் குரலாக உங்களில் ஒருவன்...
நன்றி தொடரும்............
-
சாதனைகள் படைத்த "உலகம் சுற்றும் வாலிபன்"
எம்.ஜி .ஆர் . நடித்து 1973 _ ல் வெளிவந்த "உலகம் சுற்றும் வாலிபன்" , பல சாதனைகளைப் படைத்தது . திரை உலகில் எம். ஜி . ஆர். நடித்த படங்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள போதிலும் , சாதனைகளின் சிகரமாகத் திகழ்வது "உலகம் சுற்றும் வாலிபன்" .
*
ஜப்பான் நாட்டில், உலகப் பொருட்காட்சி (" எக்ஸ்போ 70 ") நடைபெற்றது. அதைப் பயன்படுத்தி , கண்ணுக்கு இனிய காட்சிகளுடன் உலகம் சுற்றும் வாலிபனை பிரமாண்டமாகத் தயாரிக்க எம். ஜி . ஆர். திட்டமிட்டார். அதற்கேற்றபடி , எம் .ஜி . ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவினர் கதையை உருவாக்கினர் . வசனத்தை சொர்ணம் எழுதினார் .
*
பாடல்களை கண்ணதாசன் , வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுத , எம் . எஸ் . விஸ்வநாதன் இசை அமைத்தார் . இதில் எம். ஜி .ஆருக்கு இரட்டை வேடம். அவருடன் மஞ்சுளா, சந்திரகலா , லதா, தாய்லாந்து நடிகை மெட்டா ருங்ரட்டா, எம். என். நம்பியார் , அசோகன், மனோகர் , நாகேஷ் , வி .கோபால கிருஷ்ணன் , ஜஸ்டின் ஆகியோர் நடித்தனர் . லதாவுக்கு இதுதான் முதல் படம் . விஞ்ஞானி முருகனாகவும் , அவன் தம்பி ராஜ× வாகவும் எம்.ஜி .ஆர் . நடித்தார் .
*
விஞ்ஞானி முருகன், மின்னலின் சக்தியை மனித குலத்தின் நன்மைக்குப் பயன்படுத்தலாம் என்ற ரகசியத்தை ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடிக்கிறான் . அந்த ரகசியத்தைப் பெற்று வெளிநாட்டுக்கு விற்க , பைரவன் (அசோகன் ) எண்ணுகிறான் .
*
இதற்கு முருகன் சம்மதிக்கவில்லை. ரகசியத்தை ஒரே இடத்தில் வைக்காமல் , பல்வேறு நாடுகளில் , பல நபர்களிடம் கொடுத்து வைக்கிறான் . இதனால் முருகனுக்கும், பைரவனுக்கும் மோதல் ஏற்படுகிறது. முருகனை பைரவன் சுடுகிறான் . அதனால் முருகன் நினைவு இழந்து , மயக்க நிலையை அடைகிறான் .
*
இந்நிலையில் தன் அண்ணனைக் காப்பாற்ற அவன் தம்பியான புலனாய்வுத்துறை அதிகாரி ராஜ× வருகிறான் . எதிர்பாராத திருப்பங்களுடன் கதை செல்கிறது. கடைசியில் விஞ்ஞானி முருகன் காப்பாற்றப்படுகிறான் . ஜப்பானில் நடந்த உலகப் பொருட்காட்சியில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன .
அத்துடன், ஜப்பானில் உள்ள நாரா என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான புத்தர் சிலை முன்பாகவும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன . மற்றும் டோக்கியோ டவர் , மாபெரும் கடை வீதியான "கின்சா " , பிïஜி எரிமலை முதலான இடங்களில் படப்பிடிப்பு நடந்தது .
*
அத்துடன் மலேசியா, சிங்கப்பூர் , தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது . ஏறத்தாழ படம் முழுவதும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டதால் "நாம் பார்ப்பது தமிழ்ப்படமா, ஹாலிவுட் படமா " என்ற உணர்வை உலகம் சுற்றும் வாலிபன் உண்டாக்கியது. சண்டைக்காட்சிகள் புதுமையாக இருந்தன .
*
கண்ணதாசன் எழுதிய " அவள் ஒரு நவரச நாடகம்" , "லில்லி மலருக்குக் கொண்டாட்டம், "உலகம் . .. உலகம் " ஆகிய பாடல்களும் , வாலி எழுதிய "பச்சைக்கிளி முத்துச்சரம்" , "தங்க தோணியிலே தவழும் பெண்ணழகே", "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ ", "பன்சாயி .. ." ஆகிய பாடல்களும் , புலமைப்பித்தன் எழுதிய "சிரித்து வாழவேண்டும் , பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" பாடலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன . " நமது வெற்றியே நாளைய சரித்திரம்" என்று தொடங்கும் "டைட்டில்" பாடலை , சீர்காழி கோகாவிந்தராஜன் பாடினார் . இதை எழுதியவர் புலவர் வேதா . 11 -05 -1973 _ல் இப்படம் திரையிடப்பட்டது .
*
சென்னையில், சினிமா போஸ்டர்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், போஸ்டர்களே ஒட்டப்படவில்லை. 9 -ந்தேதி முன்பதிவு தொடங்கியது. இரண்டே நாட்களில் , ஒரு மாதத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன . சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் தொடர்ந்து 227 காட்சிகள் " ஹவுஸ் புல் " ஆயின .
*
இந்த தியேட்டரில், "மெக்கனாஸ் கோல்டு " என்ற ஆங்கிலப் படம் மொத்தம் 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வசூலித்து " இந்தியாவிலேயே ஒரே தியேட்டரில் அதிக வசூல் பெற்ற படம் " என்று சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை , " உலகம் சுற்றும் வாலிபன்" முறியடித்தது . 182 நாட்களில் , ரூ .13 லட்சத்து 63 ஆயிரம் வசூலித்தது.
*
சென்னையில் தேவிபாரடைஸ் தியேட்டரில் இப்படம் 182 நாட்களும் , அகஸ்தியாவில் 175 நாட்களும் , உமாவில் 112 நாட்களும் ஓடியது. மதுரை மீனாட்சியில் 217 நாட்கள், திருச்சி பேலசில் 203 நாட்கள் ஓடியது. தமிழ்நாட்டில் 20 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. பெங்களூரில் மூன்று தியேட்டர்கள் 100 _வது நாளைக் கண்டன.
*
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் , 47 நாட்கள் ஓடி சாதனை படைத்தது . அந்தக் காலக்கட்டத்தில் , மலேசியாவில் நீண்ட காலம் ஓடிய இந்தியப்படம் "உலகம் சுற்றும் வாலிபன்" தான்
இந்த படத்தின் முக்கிய அம்சமே ஜப்பானின்
ஒசாகா நகரில் நடந்த expo 70 தான்.
படத்திலே கதை என்று எதுவும் கிடையாது,ஆனாலும்
இதை படமாக்க எம்ஜிஆர் குறைவான பண கையிருப்புடன்
தான் சென்றாராம். இதயம் பேசுகிறது மணியன் செய்த
ஏற்பாட்டின்படி எம்ஜிஆர் ஜப்பான் வந்தார். ஜப்பான்
வரும்போது அவர் கூடசிலரே வந்தார்கள்.
புறப்படும் முன்னர்
எம்ஜிஆர் மெட்ராஸில் பட்ட கஸ்டங்கள் அதிகம்.
கடைசியாக எம்ஜி ஆர் ஜப்பானில் வந்து தங்கிவேலையை தோடங்கினார்.
அவரது கார் , கார் பார்கிங்கில் தடை செய்யபட்டதும் ஒரு செய்தி.
தனது தோளிலேயே காமிராவை தூக்கிகொண்டு அந்த expo பூராவும்
சலிக்காது ஓய்வே இல்லாது நடந்தே அத்தனை இடத்தையும் தானே
படமாக்கினார் திரு எம்ஜி ஆர். என்ற மாமனிதன் அப்போது அவரது
வயது 53. தேவையான மற்றும் ரசிக்ககூடிய இடங்களையும் கண்டு
கொண்டு அடுத்த நாளே உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பாடலை
படமாக்கினார் எம்ஜி ஆர்.இந்த பாட்டு மட்டும் 200 shot ஆயின.
அப்படத்தின் எடிட்டர் திகைப்போடுதான்
இந்த பாடலை எடிட் செய்தார். ஓரு தமிழ் பாட்டுக்கு இந்தனை
shotவைத்தது இதுதான் முதல்.
இந்த பாட்டிலேயே முக்கியமான இடங்களை படமாக்கியது ஒரு சாதனையாகும்
expo 70 யை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த படமே ஆரம்பிக்கப்பட்டதாம்….
ஓடிக்கொண்டே இருக்கும் எம் ஜி ஆரோடு ஒடமுடியாத சந்திரகலா……
எழுபதுகளில் இப்படி ஒரு உலகம் இருந்ததை நம்பத்தானே வேண்டும்.........gdr...
-
காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களை பார்த்தால் பக்தி தன்னால் ஊற்றெடுக்கும். பய பக்தியுடன் அவரை தரிசித்து விட்டு வந்தால் மனம் நிம்மதியடையும். நம் துன்பத்துக்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கும் என்ற எண்ணம் மேலோங்கி நமக்கு தன்னம்பிக்கை உண்டாகும்.
அப்பேர்ப்பட்ட சங்கராச்சாரியார் ஆரம்பத்தில் பாதரட்சை எனப்படும் மரக்கட்டையில் செய்த மர காலணியை அணிந்திருந்தார். அதன்பின் காலணி அணிவதை விட்டு விட்டு வெற்று காலாகத்தான் நடப்பார். அத்தகைய மகானை மனதில் வைத்து "திருவருட்செல்வரி"ல் அப்பர் வேடத்தில் தோன்றிய சிவாஜி அவரை இமிடேட் செய்யும் போது அவர் அணிந்திருக்கும் காலணியை பார்த்திருக்க வேண்டாமா?
அம்பாள், எந்தக்காலத்திலடா பேசினாள்? அறிவுகெட்டவனே!
என்பது காசுக்காக கணேசன் பேசிய வசனம் "பராசக்தி"யில். அதையே சற்று மாற்றி அப்பர் எந்தக்காலத்தில் பேட்டா செருப்பு மாட்டி நடந்தார் கணேசா? என்று கேட்க வேண்டும் போல இருந்தது. அதுமட்டுமல்லாமல் வெயிலின் தாக்கம் காரணமாக அவர் நிற்கும் இடத்தில் தண்ணீரை ஊற்றி வைத்திருப்பதையும் பார்க்கலாம்.
இதுதான் நமது கணேசன் அவர்கள் பந்தா இல்லாமல் இயல்பாக நடிக்கும் முறை. அவரது கைபுள்ளைங்க அவரை பற்றி மிகவும் பெருமையாக கப்ஸா விடுவதில் கைதேர்ந்தவர்கள். சிவாஜி நடிக்கும் போது பத்து நாட்களுக்குமேல் அந்த கதாபாத்திரம் போலவே வாழ்ந்து விட்டுதான் நடிப்பார் என்பார்கள்.
இப்படித்தான் போலியாக 555 சிகரெட்டை புகைத்துக் கொண்டு காலில் செருப்பு மற்றும் இத்யாதிகளுடன் அவர் வாழ்ந்து விட்டுதான் நடிக்கப் போவார் போல.
ஆனால் புரட்சி நடிகரை பாருங்கள்.
கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ செய்யும் தொழிலில் மிகவும் கவனமாக இருப்பார். காலில் செருப்பு அணியாமல் முருகன் வேடமேற்று நடிக்கும் போது ஆகா!
என்ன ஒரு கருணை பார்வை! அருள் வீசும் முகப் பொலிவு. யாருக்கு வரும் இந்த ஆன்மீக தெளிவு.
இதை உணர்ந்து கொண்ட வாரியார் சுவாமிகள் தலைவருக்கு 'பொன்மனச்செம்மல்' என்ற பட்டத்தை கொடுத்து மனமார வாழ்த்தியதை நினைவு கூறலாம். ஆன்மீகவாதியான கணேசனை தேடிப் போகாத வாரியார் தலைவரை தேடி போக காரணம், முன்னவரிடம் டொனேஷன் என்று போனால் அவர் திடீரென்று நாஸ்திகனாக மாறி வாரியாரை பகைத்து விடுவார் என்ற பயத்தின் காரணமாக இருக்கலாம்.
"புதிய பறவை"யில் ஒரு கண்ணில் சோகமும் ஒரு கண்ணில் அதிர்ச்சி யும் காட்டி நடித்தாராம் கணேசன் என்று புதிய கப்ஸா ஒன்றை கிளப்பி விட்டார்கள் கைபுள்ளைங்க. அது வரைந்த படம். படத்தின் வலது பக்க ஓரத்தில் வரைந்தவரின் பெயரை குறிப்பிட்டிருப்பதை நாம் பார்க்கலாம். இந்த மோடி மஸ்தான் பில்ட்அப் கொடுப்பதை போல கணேசனை பற்றி அவர்களே பில்ட்அப் கொடுத்து சிலாகித்து பேசுவதில் வல்லவர்கள் இந்த கைபிள்ளைங்க. ஏய்த்து பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க!
"பாக்ய சக்கரத்தா"ல் வாழ்விழந்து, பார்வை இழந்து, வறுமையில் வாடி மறைந்த ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் குடும்பத்துக்கு1981 காந்தி ஜெயந்தி அன்று தலைவர் திருச்சி கலையரங்கத்தில் வைத்து தனது மந்திரி சகாக்களுடன் விழா ஏற்பாடு செய்து ரூ 1 லட்சம் நிதி உதவியளித்து அவரின் குடும்பத்தை வறுமையின் கோரப்பிடியில் இருந்த காப்பாற்றியதுடன் அவர் நினைவை போற்றும் வகையில் அந்த அரங்குக்கு 'தியாகராஜ மன்றம்' என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
'வாழ்ந்தவர் கோடி(கணேசன் உட்பட) மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர், மானம் காப்போர்(எம்ஜிஆர்)
சரித்திரம் தனிலே நிற்கின்றார்' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் புரட்சித் தலைவர்.
நன்றி: திரு சைலேஷ் பாசு..............ksr.........
-
#கனடா நியூ மன்னாரன் கம்பெனி டுபாக்கூர் + தமிழக லொள்ளு சபா மனோகர், போண்டா மணி இணைந்து வழங்கும் இடை விடாத சிரிப்புடன் கூடிய காமெடித் திருவிழா #
இந்த இரண்டு குரூப்புகளும் சேர்ந்து அவர்களின் பதிவுகளை படிக்கும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்காமல் ஓய மாட்டார்கள் போல் இருக்கிறது ( என்ன செய்ய நாமளும் வாழ்த்து சொல்லித் தொலைப்போம் வேற வழி? )
2020 மார்ச்சில் ஆரம்பித்த லாக் டவுன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு இப்போது நவம்பர் மாதம்தான் இன்று முதல் 50 சதவிகிதம் ஆட்கள் நிரப்பிக் கொள்ளலாம் என்னும் நிபந்தனையுடன் திரை அரங்குகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது,
உடனடியாக மடை திறந்த வெள்ளம் போல் தலைவர் படங்களை திரையிட ஆரம்பித்து விட்டார்கள் திரை அரங்க நிர்வாகங்கள்
தஞ்சை, கரூர், திருவானைக் காவல், சீர்காழி, திருவாரூர் இங்குள்ள அரங்குகளில் தலைவரின் அகிலமே சொல்லும் "ஆயிரத்தில் ஒருவன் " இன்று முதல் திரையிடப் பட்டுள்ளது,
இது தவிர மதுரை சென்ட்ரல் அரங்கில் தீபாவளித் திருநாள் முதல் தலைவரின் " தர்மம் தலை காக்கும் " திரையிட உள்ளதாக தகவல்,
மேலும் கோவை ஷண்முகா அரங்கில் நாளை முதல் " தர்மம் தலை காக்கும் " திரைக் காவியமும், தீபாவளித் திருநாள் முதல் தமிழக மக்களின் " காவல் காரனு"ம் திரையிடப் பட உள்ளது
மற்ற நகரங்களில் தலைவரின் திரை விபரங்கள் அடுத்தடுத்த
பதிவுகளில் பதிவிடப்படும்
இதை நான் இங்கே குறிப்பிடக் காரணம்
இந்த கொரோனா பேரிடர் மட்டும் வராதிருந்தால் இதற்கு முன் மறு வெளியீடு படங்களில் தலைவரின் டிஜிட்டல் செய்து வெளியிடப்பட்ட படங்கள் அனைத்தும் ஒரு மிகப்பெரிய record brake செய்திருக்கும்
இப்படி தலைவரின் விண்முட்டும் சாதனைகளைப் பார்த்து நாமெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருக்க மேலே நான் குறிப்பிட்ட இரண்டு குரூப்புகளும் பழைய கீறல் விழுந்த ரெகார்டைப் போல திரும்பத் திரும்ப " செத்த மண்" படம் திரையிட்ட அரங்குகளில் எல்லாம் 50 நாளைக் கண்டது என்றும், 9 அரங்கில் 100 நாள் கண்ட மாபெரும் வெற்றிப்படம் என்றும் அம்புலிமாமா கதையில் விக்கிரமாதித்தன் மனம் தளராமல் முருங்கை மரத்திலிருந்து வேதாளத்தை மீண்டும் மீண்டும் வெட்டி தோளில் சுமப்பது மாதிரி பதிவு போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்,
நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இப்படி பதிவு போட்டு யாருக்கு எதை நிரூபிக்கப் போகிறீர்கள்? நமக்குப் புரியவில்லை
இதுல ஒரு சிறப்பான சம்பவம் என்னவென்றால் இவர்கள் 50 நாட்கள் ஓடியதாக குறிப்பிடும் சித்ராலயா சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரமே ஒரு பச்சைப் புளுகல் காரணம் அதில் நிறைய அரங்குகள் 3 வாரங்கள் நான்கு வாரங்கள் கழித்து திரையிடப் பட்ட அரங்குகள் ஆனால் 50 நாள் விளம்பரம் வெளியிடப்பட்ட போது நைசாக அதையும் சேர்த்து வெளியிட்டது சித்ராலயா நிறுவனம்
இந்த மோசடியை அப்போதே தலைவர் ஆதரவுப் பத்திரிக்கைகள் கண்டம் செய்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம் ( ஆனால் போண்டா மணிக்கும், லொள்ளு சபா மனோகருக்கும், டுபாக்கூர் தங்கவேலுவுக்கு மட்டும் நினைவிருக்காது காரணம் ஒரு வேளை ஜெயலலிதா அடிக்கடி குறிப்பிடுவது மாதிரி செலக்டிவ் அம்னீஷியாவாகக் கூட இருக்கலாம், )
அப்புறம் 9 அரங்கில் 100 நாளாம் சரி இருந்துட்டுப் போகட்டும்
இந்த அரங்கில் தூத்துக்குடியும் ஒன்று
அங்கு ஏற்கனவே அந்த படம் எப்படி ஓட்டப்பட்டது என்பதை சங்கர் சார் அக்கு வேறு ஆணி வேறு லெவலில் கிழித்து காயப்போட்டிருந்தார்
அதாவது 50 நாளில் 91 ஆயிரம் வசூலும் 100 நாளில் 105, 000 வசூலும் வந்திருக்கிறது
அதாவது 50 நாளைக்குப் பிறகு ஒரு ஷோவுக்கு 100 ரூபாய் கூட வசூல் வரவில்லை (சனி, ஞாயிறு ஷோ கூட உண்டுல்ல )
இதுதான் 100 நாள் ஓடிய லட்சணம் , இதுவும் சாதனை பட்டியல் அப்படித்தானே?
அதே தூத்துக்குடி சிவாஜி ரசிகர்கள் அடித்த மலரில் இந்த படத்தை நஷ்டம் என்று ஸ்ரீதர் சொன்னதாக கண்டனமும் தெரிவித்திருக்கிறார்கள், இதிலிருந்து ஸ்ரீதர் நஷ்டம் என்று சொன்னதும் ஊர்ஜிதமாகி விட்டது,
ஒரு அழகான சூத்திரம் ஒன்று கடைபிடிப்பார்கள்
அதாவது எங்கேயாவது நாள் கூடினால் அங்கே வசூலை தெரிவிக்க மாட்டார்கள், அதே மாதிரி வசூல் கூடினால் நாளை விட்டு விடுவது
உதாரணம் சென்னை நகர வசூலை ஒப்பிடுவது
உதாரணம் உரிமைக்குரல் படத்தை ஒப்பிட்டு உள்ளீர்கள் ரொம்ப சரிதான்
அன்றைய ஆளும்கட்சியின் மிரட்டல்களின் காரணமாக மிகவும் சிறிய அரங்குகளான ஒடியன், நூர்ஜஹான், உமா முதலான அரங்குகளில் உரிமைக் குரல் திரையிடப் பட்டு இவ்வளவு வசூலை எடுத்தது,
நான் ரொம்பவும் அன்பாகத்தான் கேட்கிறேன் இப்படி ஏதாவது ஒரு கணேசன் படம் இந்த மாதிரியான அரங்குகளில் அந்த நேரத்தில் திரையிடப் பட்டு இதில் பாதியாவது
வசூல் செய்யுமா? என்ற
கேள்வியை போண்டா மணி குழுவினரிடம் முன் வைக்கிறேன் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்,
இவர்கள் இப்படி மல்லுக் கட்டுவது எப்படி இருக்கிறது என்றால்
1968ஆம் ஆண்டு அமெரிக்கா வியட்நாம் மீது நடத்திய "பியன்தியன்பு " குன்றுத் தாக்குதல் மற்றும் உலக சரித்திரத்தில் ரத்தத்தால் எழுதப்பட்ட
"டெட் தாக்குதல் " பற்றியும் படித்திருப்பீர்கள்
அந்த தாக்குதலில் 25 லட்சம் அப்பாவி வியட்நாம் அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்
அதே நேரம் பெரிய ஆயுத பலம் இல்லாத வியட்நாம் ராணுவம் மிகப்பெரிய மாவீரன் ஜெனரல் " வோ குயன் கியாப் தலைமையில் சர்வ வல்லமை படைத்த அமெரிக்க ராணுவத்தை எதிர்த்து "சயான் " நகர அமெரிக்க தூதரகம் உட்பட 57 இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி 58000 அமெரிக்க ஆக்கிரமிப்பு
ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள்,
இறுதியில் பட்டது போதும் என்று அமெரிக்கா தன் படைகளை வாபஸ் பெற்று முகம் முழுவதும்
கரி பூசிக் கொண்டது
இந்த நிகழ்வு அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய அவமானம்
என்று உலக சரித்திரம் பறை சாற்றுகிறது,
ஆனால் இன்று வரை அமெரிக்கா அதை தோல்வி என்று ஒப்புக்கொள்ளவே இல்லை
அதே குணம்தான் இந்த போண்டா மணி குரூப்புக்கும் இறுதி வரை தோல்வியை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்
அப்போது ஜெனரல் வோ குயன் கியாப் அவர்கள் சொன்னார்கள்
" வெற்றியை தீர்மானிப்பது ஆயுதங்கள் அல்ல
" மக்கள் " அவர்கள் தான் வெற்றியை தீர்மானிக்கிறார்கள் "
அது போல தலைவரின் வெற்றி மக்களால் அவருக்கு சூட்டப்பட்ட கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட மகுடம்
அதைப் பார்த்து இப்போதும் இப்படிப்பட்ட
அரை வேக்காடுகள் வறட்டு இருமலுடன் ஊளையிடுவது என்பது ஏற்கக் கூடிய ஒன்றா?
வாலை ஒட்ட நறுக்கி விடுவோம் ஜாக்கிரதை
அடுத்தது " அண்ணன் ஒரு கோயில் " படம் சென்னை நகர வசூல் 19 லட்சத்து 95 ஆயிரமாம்
ஏண்டா போண்டா சாந்தி தியேட்டர் மற்றும் குத்தகை அரங்கங்களின் DAILY COLLECTION REPORT உங்கள் கையில்
அப்படியிருக்க இப்படி ஒரு வசூல் கணக்கை வெளியிட உனக்கு வெட்கம் இல்லை?
உனக்கு துணிவிருந்தால் தமிழகம் முழுக்க வசூலை வெளியிடு பார்ப்போம் ( இப்படி கேட்டால் சங்கர் சார் சொல்லுவது மாதிரி பட்டறை வசூலாவது வெளி வரும் என்று நம்புவோம் )
கடைசியா ஒன்று
எங்க அய்யன் எப்புடி நடிச்சிருக்கார் தெரியுமா என்று கதை வசனத்துடன் செத்த மண் பட விமர்சனம் வேற
இந்த புண்ணாக்கை விட்டால் எழுதுவதற்கு ஒரு மண்ணும் கிடையாது காஞ்சனாவை அப்படி இழுத்தார், இப்படி முத்தம் கொடுத்தார்
இதெல்லாம் ஒரு ரசிப்பு,
கணேசன் மூக்கைக் கூட விட்டு வைக்க வில்லை
போங்கடா நீங்களும் உங்க ரசனையும் !
தலைவரின் பக்தன் ...
ஜே.ஜேம்ஸ் வாட்.....(J.JamesWatt)...
-
நவீன விஞ்ஞானம் இன்று உலகில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்திய சித்தர்கள், முனிவர்கள் பல அரிய உண்மைகளை அற்புதங்களை மக்களின் அறிவுக்கு விருந்தாக படைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றுதான் ஹிட யோகசித்தி கைவரப்பெற்றவர். நீரிலே நடக்கலாம் , நெருப்பிலே படுக்கலாம் உடலை பஞ்சைப் போல் லேசாக்கி கொண்டு காற்றில் பறக்கலாம் என்ற கண்டுபிடிப்பாகும். பதஞ்சலி முனிவர் அருளிய யோக சித்தாந்தங்கள் என்ற நூலில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன இந்நூலை சுவாமி விவேகானந்தர் மொழிபெயர்த்திருக்கிறார்.
இவற்றை அடிப்படையாக வைத்து நவீன ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தயாரான படம் தான் தலைவன். புரட்சித் தலைவராக அரசியலில் அடையாளம் காணப்பட்ட எம்ஜிஆர் அதற்கு முன்னரே திரையுலகில் தலைவன் ஆகிவிட்டார்.அதற்கமைய இப்படத்திற்கு தலைவன் என்று பெயரிடப்பட்டது. சில ஆண்டுகள் தயாரிப்பில் இழுபடட இப்படம் 1970 ஆண்டுதான் திரைக்கு வந்தது.
ஜமீன்தாரை சுட்டுக் கொன்றுவிடும் சங்கிலி அப்பழியை ஜமீன்தாரிணி மீது போட்டு விடுகிறான். ஜமீன்தாரணியோ தலைமறைவாகிவிட்ட அவளின் குழந்தை சித்த மருத்துவரிடம் வளர்ந்து துப்பறியும் நிபுணராக ஆகிறது. சங்கிலியை கண்டுபிடிப்பதுதான் அவனின் கடமையாகிறது, வழக்கம்போல் ஒரு பெண்ணின் காதலும் குறுக்கிடுகிறது. இப்படி அமைக்கப்பட்ட கதையில் சித்த வைத்தியத்தின் மகிமை அட யோக சித்தியின் மகான்மியம் காட்டு பெண்ணின் களங்கம் இல்லாத காதல், துப்புரவு பணியாளர்களின் பெருமை, என்று பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் சமாளிக்கத்தான் தலைவன் எம்ஜிஆர் இருக்கிறாரே.
எம்ஜிஆருக்கு ஜோடியாக இதில் நடித்தவர் வாணிஸ்ரீ , சங்கிலியாக நம்பியார் நடிக்க, துப்புரவு பணியாளராக நாகேஷ் நடித்தார். அவருக்கு ஜோடி மனோரமா இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த கடைசி படம் இதுவாக இருக்கலாம். இவர்களுடன் அசோகன், ஜோதிலட்சுமி, ஜெயபாரதி, ஓ ஏ கே தேவர் ஆகியோரும் நடித்தனர் படத்தின் கதையை அப்துல் முத்தலிப் எழுத, ஆர் கே சண்முகம் வசனங்களை எழுதியிருந்தார். வாலியின் பாடல்களுக்கு இசையமைத்தவர் எஸ் சுப்பையா நாயுடு, நீராழி மண்டபத்தில் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் சுசிலா உடன் இணைந்து பாடினார் . எம்ஜிஆருக்கு இவர் பாடிய இரண்டாவது பாடல் இது வாகும். அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு, ஓடையிலே ஒரு தாமரை பூ , ஆகிய பாடல்களும் இதமாக இருந்தன.
பி தோமஸ் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார், அவருடன் இணைந்து படத்தை இயக்கியவர் கே சிங்கமுத்து, படத்தின் டைட்டிலில் புதுமையாக மனித எலும்புக் கூடுகளில் இருந்து எழுத்துக்கள் வருவதுபோல அமைக்கப்பட்டிருந்தன.
கலர் படங்களில் எம் ஜி ஆர் தொடர்ந்து நடிக்க தொடங்கியபின் மீதமிருந்த 3 கருப்பு வெள்ளை படங்களில் ஒன்றான தலைவன் வசூல் ரீதியாக சுமாரான வெற்றியையே பெற்றது. ஆனால் "யானை படுத்தாலும் குதிரை மட்டம்" எனும் சொல் வழக்குபடி மற்ற, மாற்று நடிகர்கள் படங்களின் வசூலை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டது என்பதனையும் கூறவும் வேணுமோ?!...sbb...
-
மனம் எம் ஜி ஆருக்கு பொன்...
நடிகர் நாகேஷ் சிலகாலம் எம் ஜி ஆர் ரிடம் இருந்து விலகி எதிர் அணிகளிடம் நெருக்கமானவராக வாழ்ந்தார் தன் பணம் முழுவதும் சிலவு செய்து தியேட்டர் நாகேஷ் என்ற அரங்கை கட்டுகிறார் முடிவில் பள்ளியின் அருகில் தியேட்டர் இருப்பதால் திறக்க முடியாமல் தவிக்கிறார் எங்கெல்லாமோ எவரை எல்லாம் சந்தித்தும் ஒன்றும் முடியவில்லை கடைசியில் எல்லாவல்ல எம் ஜி ஆர் ஒருவரால் தான் தன்னை காப்பாற்ற முடியும் என்று எம் ஜி ஆர் தோட்டம் வருகிறார் அங்குள்ள மெய்காவலர்கள் இவரை எம் ஜி ஆர் காண அனுமதிக்காமல் விரட்டுகிறார் பல நாள் வந்தார் ஒருநாள் இந்த செய்தி எம் ஜி ஆரை அடைய எம் ஜிஆர் மெய்காவலர்கள் கண்டித்து எவர் என்றாலும் கஷ்டபடும் போது உதவணும் என்று கூறி இனி வந்தால் என்னிடம் அனுப்புங்கள் என கூற நாகேஷ் அடுத்த நாள் வர எம் ஜி ஆரை கண்டு என்னுடைய அத்தனை பணமும் முடங்கி விட்டது நீங்கள் உதவினால் மட்டுமே நான் வாழமுடியும் என தன் விவரங்களை கூறுகிறார் நாகேஷ்
எம் ஜி ஆர் அவரிடம் சரி நான் பார்த்து கொள்கிறேன் என கூறி அனுப்பினார் பின் அந்தபள்ளி நிர்வாகத்திடம் அதன் நுழைவாயிலை பின் புறமாக மாற்ற வேண்டுகிறார் எம் ஜி ஆர் நிர்வாகமும் சம்மதித்து மாற்றுகிறது இப்போது சட்ட சிக்கல் மாறி தியேட்டர் திறக்கிறார் நாகேஷ்
உதவி என்று எவர்வந்தாலும் உதவும் தெய்வ குணம் கோண்டவராக வாழ்ந்தவர் எம் ஜி ஆர்
நன்றி யுடியூப்...
வாழ்க எம் ஜி ஆர் புகழ்............
-
நவீன விஞ்ஞானம் இன்று உலகில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்திய சித்தர்கள், முனிவர்கள் பல அரிய உண்மைகளை அற்புதங்களை மக்களின் அறிவுக்கு விருந்தாக படைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றுதான் ஹிட யோகசித்தி கைவரப்பெற்றவர். நீரிலே நடக்கலாம் , நெருப்பிலே படுக்கலாம் உடலை பஞ்சைப் போல் லேசாக்கி கொண்டு காற்றில் பறக்கலாம் என்ற கண்டுபிடிப்பாகும். பதஞ்சலி முனிவர் அருளிய யோக சித்தாந்தங்கள் என்ற நூலில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன இந்நூலை சுவாமி விவேகானந்தர் மொழிபெயர்த்திருக்கிறார்.
இவற்றை அடிப்படையாக வைத்து நவீன ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தயாரான படம் தான் தலைவன். புரட்சித் தலைவராக அரசியலில் அடையாளம் காணப்பட்ட எம்ஜிஆர் அதற்கு முன்னரே திரையுலகில் தலைவன் ஆகிவிட்டார்.அதற்கமைய இப்படத்திற்கு தலைவன் என்று பெயரிடப்பட்டது. சில ஆண்டுகள் தயாரிப்பில் இழுபடட இப்படம் 1970 ஆண்டுதான் திரைக்கு வந்தது.
ஜமீன்தாரை சுட்டுக் கொன்றுவிடும் சங்கிலி அப்பழியை ஜமீன்தாரிணி மீது போட்டு விடுகிறான். ஜமீன்தாரணியோ தலைமறைவாகிவிட்ட அவளின் குழந்தை சித்த மருத்துவரிடம் வளர்ந்து துப்பறியும் நிபுணராக ஆகிறது. சங்கிலியை கண்டுபிடிப்பதுதான் அவனின் கடமையாகிறது, வழக்கம்போல் ஒரு பெண்ணின் காதலும் குறுக்கிடுகிறது. இப்படி அமைக்கப்பட்ட கதையில் சித்த வைத்தியத்தின் மகிமை அட யோக சித்தியின் மகான்மியம் காட்டு பெண்ணின் களங்கம் இல்லாத காதல், துப்புரவு பணியாளர்களின் பெருமை, என்று பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் சமாளிக்கத்தான் தலைவன் எம்ஜிஆர் இருக்கிறாரே.
எம்ஜிஆருக்கு ஜோடியாக இதில் நடித்தவர் வாணிஸ்ரீ , சங்கிலியாக நம்பியார் நடிக்க, துப்புரவு பணியாளராக நாகேஷ் நடித்தார். அவருக்கு ஜோடி மனோரமா இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த கடைசி படம் இதுவாக இருக்கலாம். இவர்களுடன் அசோகன், ஜோதிலட்சுமி, ஜெயபாரதி, ஓ ஏ கே தேவர் ஆகியோரும் நடித்தனர் படத்தின் கதையை அப்துல் முத்தலிப் எழுத, ஆர் கே சண்முகம் வசனங்களை எழுதியிருந்தார். வாலியின் பாடல்களுக்கு இசையமைத்தவர் எஸ் சுப்பையா நாயுடு, நீராழி மண்டபத்தில் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் சுசிலா உடன் இணைந்து பாடினார் . எம்ஜிஆருக்கு இவர் பாடிய இரண்டாவது பாடல் இது வாகும். அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு, ஓடையிலே ஒரு தாமரை பூ , ஆகிய பாடல்களும் இதமாக இருந்தன.
பி தோமஸ் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார், அவருடன் இணைந்து படத்தை இயக்கியவர் கே சிங்கமுத்து, படத்தின் டைட்டிலில் புதுமையாக மனித எலும்புக் கூடுகளில் இருந்து எழுத்துக்கள் வருவதுபோல அமைக்கப்பட்டிருந்தன.
கலர் படங்களில் எம் ஜி ஆர் தொடர்ந்து நடிக்க தொடங்கியபின் மீதமிருந்த 3 கருப்பு வெள்ளை படங்களில் ஒன்றான தலைவன் வசூல் ரீதியாக சுமாரான வெற்றியையே பெற்றது.......sbb...
-
கைபிள்ளைங்க "சிவந்த மண்" சென்னையில் "உரிமைக்குரல்" வசூலை முந்தி விட்டதாம். அப்பப்பா!
என்ன சந்தோஷம். இது நாள் வரையில் சாந்தி தியேட்டரை காரணம் காட்டியே ஏமாற்றி வந்தவர்கள் இப்போது "சிவந்த மண்ணு"க்கு வந்திருக்கிறார்கள்.
சாந்தி தியேட்டர் ஹவுஸ்புல் வசூல் மற்ற திரையரங்கை விட அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இருப்பினும் சாந்தியை வைத்தே வசூலில் சாதனை என்பார்கள். அதே போல் "சிவந்தமண்" திரையிட்ட குளோப், அகஸ்தியா, மேகலா, நூர்ஜகான் திரையரங்குகள் "உரிமைக்குரல்" திரையிட்ட அரங்குகளை விட மிகப்பெரியது. அதனால் வசூல் சற்று அதிகம் வந்ததில் வியப்பில்லை. அப்படி கம்பேர் செய்பவர்கள் தமிழகம் முழுவதும் வசூலை கம்பேர் செய்ய வேண்டும். மற்ற இடங்களிலெல்லாம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அது ஏன்? புரியவில்லையா கைபிள்ளைகளுக்கு?. "சிவந்தமண்தா"ன் ஸ்ரீதரையே சீரழித்த மண்ணாயிற்றே.
அதேபோல் "உரிமைக்குரல்" வசூலை தருகிறேன் வேறு எங்காவது ஒரு திரையரங்கில் "சிவந்தமண்" முந்தியிருந்தால் பதிவிடவும். தியேட்டர் வசூல் அதிகமிருந்தால் முதல் வாரத்தில் தெரிந்து விடும். இது கூட தெரியாதா கைபிள்ளைகளுக்கு. இப்போது "சிவந்தமண்" ஒரு வார வசூலை வெளியிட்டிருக்கிறார்கள். இதைவிட வசூல் அதிகம் வந்தால் "சிவந்தமண்" படுதோல்விப்படம் என்பதை ஒத்துக்கொள்வீர்களா?
நான் தலைவரின் 69க்குப்பின் வந்த புதிய படங்களை பற்றி சொல்லவில்லை. 1965 ல் சபையரில். வெளிவந்த
"கன்னித்தாய்" முதல் வார வசூலை எடுத்துக் கொள்வோம். "சிவந்தமண்ணி"ன் 4 திரையரங்குகளில் ஏதாவது ஒரு அரங்கிலாவது "கன்னித்தாய்" வசூலை முந்த முடிந்ததா?
அப்படியானால் "கன்னித்தாய்" காலடியில் "சிவந்த மண்" என்று சொல்லலாமா? சொல்லுங்க கைபிள்ளைகளே.
தமிழ்நாடு முழுவதும் சிவாஜி படங்களில் "தங்கப்பதக்கம்தா"ன் அதிகம் வசூலான படம் என்று கைபுள்ளைங்க சொல்கிறார்கள். ஆனால் தூத்துக்குடியில் மட்டும் "தங்கப்பதக்க"த்தை காட்டிலும் "சிவந்தமண்தா"ன் அதிகம் வசூல் பெற்ற படம் என்றால் சிரிப்பு வருகிறதா?. அந்த அளவுக்கு "சிவந்த மண்"ணை செத்துப் போன பிணத்தை வெறித்தனமா தூக்கிக் கொண்டு 101 நாட்கள் ஓடியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தூத்துக்குடியில் "தங்கப்பதக்கம்" பெற்ற மொத்த வசூலே ரு105000 தான். ஆனால் "சிவந்தமண்" வசூலோ ரூ 107000 . இது என்ன கொடுமை sp சவுத்ரி. சினிமாவில்தான் யோக்கியமான போலீஸ் அதிகாரி.
ஆனால் வெளியே சகல மோசடிகளையும் கைபிள்ளைகள் அரங்கேற்றும் போது பார்த்துக் கொண்டு அதற்கு உடந்தையாகவும் இருக்கும் போலி சவுத்ரி.
சவுத்ரி மாமா!
ஊருக்கு ஒரு பிரச்னைனா போலீஸ் கிட்ட சொல்வாங்க! போலீஸூக்கு ஒரு பிரச்னைனா sp சவுத்ரி கிட்ட சொல்லுவாங்க. சவுத்ரியோட கைபிள்ளைகளே மோசடி செய்தால் யாருகிட்ட போய் முறையிடுவாங்க.
சொல்லுங்க சவுத்ரி மாமா! சொல்லுங்க!
அது மட்டுமா? "சிவந்த மண்" 101 நாட்கள் ஓட்டினார்களாம்.
ஆனால் "உரிமைக்குரலோ" 68 நாட்கள் தான் ஓடியதாம். இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் "சிவந்தமண்ணை" என்னா ஓட்டு ஓட்டினார்கள் என்று. "சிவந்த மண்" 50 நாட்கள் வசூல் ரூ 91000. "உரிமைக்குரல்" 50 நாட்கள் வசூல் ரு 145000/ இதில் எது அதிகம். நம்ம செந்தில் சொன்ன ஜோக் ஞாபகத்துக்கு வருதா? நீங்க 10 ம் கிளாஸ் பெயில் நான் 8ம் கிளாஸ் பாஸ். பாஸ் பெரிசா?பெயில் பெரிசா? சொல்லுங்கண்ணே.
"சிவந்த மண்" பிற்பகுதி 51 நாட்கள் வசூல் வெறும் ரூ 15000 தான். ஆனால் "உரிமைக்குரல்" பிற்பகுதி 18 நாட்களில் பெற்ற வசூல் ரூ23000.
ஆனாலும் படத்தை 100 நாட்கள் ஓட்டவில்லை. "சிவந்த மண்" பிற்பகுதி 51 நாட்களில்
1 நாள் சராசரி வசூல் சுமார் ரூ300 தான். ஆனால் "உரிமைக்குரல்" பிற்பகுதி 18 நாளில் 1 நாள் சராசரி வசூல் சுமார் ரூ1300 .
சொல்லுங்க, கைபிள்ளைகளே 300 பெரிசா?1300 பெரிசா? இதில் வெற்றி வெளியீடு என்ற கேள்விக்குறி வேறு.
மேலும் கோவை ராயலில் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட "சிவந்த மண்" 50 நாட்களில் பெற்ற வசூல் ரூ255000 .இன்னொரு பதிவில் 259000 என்று கொடுத்திருக்கிறீர்கள். பொய் சொன்னாலும் ஒரே மாதிரி சொல்லுங்கள் கைபிள்ளைகளே.
பல கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற புரட்சி தலைவரின் "உரிமைக்குரல்" கோவை கீதாலயாவில் 50 நாட்களில் பெற்ற வசூல் ரூ 426000/ போதுமா ஆதாரம்?.
மதுரையை எடுத்துக் கொண்டால் "சிவந்தமண்" சென்ட்ரலில் 50 நாட்களில் பெற்ற வசூல் ரூ 227530.50. ஆனால் "உரிமைக்குரல்" சினிப்பிரியாவில் 50 நாட்களில் பெற்ற வசூல் ரூ 350728.40. மதுரையில் ஓடிமுடிய "சிவந்தமண்" மொத்தமே ரு337000 தான். "உரிமைக்குரலோ" ஓடி முடிய ரு701000/ . என்ன கண்கட்டுதா? இல்லை தலை சுற்றுதா? ஸ்ரீதர் ஏன் "சிவந்தமண்ணா"ல் சீரழிந்தார் என்று தெரிந்திருக்குமே. பிணந்தூக்கி பிழைத்தவன் வேறு தொழிலுக்கு போக மாட்டான் என்பது திண்ணம்.
ஊழலின் ஊற்றுக்கண்ணான உங்களை நாடாள விட்டால் தீயசக்திக்கு சற்றும் குறைந்தவனில்லை என்பதை நிரூபித்திருப்பீர்கள் என்பதால் அறிவார்ந்த தமிழக மக்கள் உங்களை முளையிலே கிள்ளி எறிந்து தமிழகத்தை காப்பாற்றினார்கள் என்றே சொல்லலாம்.........ksr.........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*09/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
நாடோடி மன்னன்,மன்னாதி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, உங்க வீட்டு பிள்ளை யாக இன்றைக்கும் நமது இல்லங்களில் எல்லாம் தெய்வமாக திகழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறை*தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் .* அவர் காலத்தை வென்று காவியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இன்றைக்கும் சாட்சியாக எத்தனை* ஆயிரம் பேர், லட்சம் பேர், கோடி க்கணக்கானவர்கள்* வின் டிவி*தொலைபேசியை தேடி தேடி* பொழிச்சலூர் மகாலட்சுமி , ஆண்டிபட்டி வசந்தி, தேனீ பிரேமலதா, திருச்சி*அப்துல் மஜீத், மும்பை*தாராவி*ராமச்சந்திரன் ,போன்றவர்கள் தொடர்பில்*இருந்து பேராதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் .*சென்னையில் உள்ள* லோகநாதன் என்பவர் தினசரி நமக்கு*தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படங்கள்* ஒளிபரப்பாகும் விவரங்கள், தமிழகம் முழுவதும் திரை அரங்குகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்* எந்தெந்த நகரங்களில் வெளியாகின்றன ,மற்றும் பத்திரிகை செய்திகள் பலவற்றையும் நமக்கு*ஆர்வமாக*பகிர்ந்து கொண்டு தகவல்கள் தெரிவித்து கொண்டிருக்கிறார் .* தங்களுடைய வாழ்க்கையை புடம் போட்ட தங்கமாக*மாற்றி கொள்வதற்காக, எம்.ஜி.ஆர். அவர்களின்*செய்திகள், தகவல்களை*மக்களோடு*மக்களாக*மக்களுக்கு எடுத்து சொல்லி கொண்டிருக்கிறார்கள் .அப்படி ஒரு மகோன்னதமான வாழ்க்கையை*அவர் வாழ்ந்து காட்டினார்**என்பதற்காகத்தான் இந்த சகாப்தம் நிகழ்ச்சி இவ்வளவு பெரிய சரித்திரம் படைத்திருக்கிறது* *இந்த தொடர் 150 நாட்களை கடந்து இப்படி ஒரு பெரிய வரவேற்பைமக்கள் மத்தியில்* பெற்றிருக்கிறது என்றால் அந்த மாமனிதரின் ஆன்மா நமக்கு அளித்த ஆசிர்வாதம்தான் .**
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்போதும்*வினோதமான பின்னணி*உடைய திரைக்கதை அமைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்*.* அதனால்தான் அவர் அந்த காலத்திலேயே அரேபிய இரவுகள்*கதைகளான அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி, பாக்தாத் திருடன் போன்ற திரைப்படங்களில் மிகுந்த ஆர்வத்துடன் நடித்தார் .* அவர் அந்த காலத்தில் நிறைய ஆங்கில படங்களை*பார்த்ததுண்டு*.* பென்* ஹர்*போன்ற பிரம்மாண்ட*படங்களை பார்த்து*விட்டு, அவரது சொந்த படங்களில் அந்த பிரம்மாண்டங்களை புகுத்தியதுண்டு .**அடிமைப்பெண் படத்தில்*வரும் ஆயிரம் நிலவே வா பாடலை* நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் மிகவும் ரசித்து, தான் விரும்பிய*பாடலாக*அடிக்கடி* கேட்டதாக* ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் .* அது மட்டுமல்ல . அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் மிகவும் ரிஸ்க் எடுத்து இந்த படத்தை*மிக சிறப்பாக**எடுத்துள்ளார் . எந்த ஒரு தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும் இப்படி ஒரு ரிஸ்க்*எடுக்கும்*துணிச்சல், திறமை போன்றவை*வருமா என்பது*சந்தேகம்*என்று கூறி இருக்கிறார். அடிமைப்பெண் படம் மும்பையில்*பிலிம்*பேர் பரிசு பெற்ற படம் .* 1969ம் ஆண்டின்*ஈடு இணையற்ற வசூல் சாதனை புரிந்து வெள்ளிவிழா கண்ட*படம் .* தமிழக அரசால்*சிறந்த படம் என*தேர்வான படம்*இந்த படத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின்*வித்தியாசமான தோற்றங்கள், உடைகள்,*சிங்கத்துடன் போடும் சண்டை,* எழில்மிகு*ஒகேனக்கல் அருவி காட்சிகள்,*ஜெய்ப்பூர் அரண்மனை காட்சிகள், ஜோத்பூர் கோட்டை கள், ராஜஸ்தானில் தார் பாலைவன காட்சிகள் , ஜெயலலிதாவிற்கு இரட்டை வேடம், திரை இசை திலகம் கே.வி. மகாதேவனின்* இனிமையான பாடல்கள், பின்னணி இசை , ஜெயலலிதாராணியாக*அறிமுகம் செய்யும் காட்சி, அரங்க அமைப்புகள், திரைக்கதை அமைப்பு, கம்பீரமான சண்டை*காட்சிகள் , தொழில்நுட்பம் எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்கு ஒரு விஷன்*,அதாவது சொந்த படத்தை, பிரமாண்டமாக,*இதைவிட* வேறு**யாரும்*தயாரித்து வெளியிட முடியாத வகையில்*இருக்க நினைப்பது*என்று சொல்லிக்கொண்டே போகலாம் .**
திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி ;* *ஒருமுறை அமைச்சர் காளிமுத்து அவர்கள் அனுப்பிய ஒரு கோப்பிலே*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டு எழுதுகிறார் .அக்ரோ*வாரியத்தின் தலைவராக*உள்ள திரு. லியாகத் அலிகான்*குறிப்பிட்டு இருக்கக்கூடிய ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஹாங்காங், சிங்கப்பூர் ,,மலேசியா ,தாய்லாந்து*போன்ற நாடுகளில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள இன்னும் பிற நாடுகளில்* எந்த நாட்டிற்கு அவர் செல்ல*விரும்புகிறாரோ, அந்த நாட்டிற்கு சென்று* அந்த நாட்டின்* முக்கிய*வேளாண்*பணிகளை அறிந்து வர நான் அனுமதிக்கறேன் என்று அந்த கோப்பிலே*எழுதிய போது, அரசு அதிகாரிகள் ,*ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் எல்லாம் மிரண்டு போய் விட்டார்கள் என்று சொல்லலாம் .* உங்கள் மீது இந்த அளவிற்கு*அன்பு வைத்து, உலகத்தின் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் லியாகத் அலிகான் சென்று வர நான் அனுமதிக்கிறேன் என்று கோப்பில்*எழுதி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.அவர்கள் .* வேறு ஏதாவது நாட்டிற்கு*செல்லுகிறீர்களா என்று கேட்ட நேரத்தில் இல்லை, குறிப்பிட்ட இந்த நாடுகளுக்கு மட்டும் சென்றுவிட்டு வருகிறேன் என்று கூறி சென்றுவிட்டு வந்த நினைவுகள் எல்லாம் என் நெஞ்சை*துளைத்துக் கொண்டிருக்கின்றன . அடுத்த முறையாக* எம்.ஜி.ஆர். அவர்கள் குறிப்பிட்ட அமேரிக்கா*, ரஷ்யா , இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற நாடுகளுக்கு நான் சென்றுவர, ஓராண்டு இடைவெளியில்*தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எனக்கு*நல்லதொரு வாய்ப்பை*வழங்கி அதே போன்று இன்னொரு குழுவின் மூலம் சென்று வரும் வாய்ப்பை பெற்றேன் .* இப்படிப்பட்ட சாமான்ய*மனிதன் லியாகத்*அலிகான், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் இயக்கத்திற்கு உழைத்தேன்* ஆனால் உரிய அளவிற்கு*உழைத்தேனா என்றால் எனக்கு திருப்தி இல்லை . தலைவருக்காக இன்னும் உழைத்திருக்கலாம் ,உழைத்திருக்க வேண்டும் என்கிற மன உளைச்சல் என்றுமே எனக்கு இருக்கிறது. காரணம் என்னை போன்று பன்மடங்கு உழைத்தவர்கள் எங்களை போன்று**பதவிகள் எதுவம்*பெறாமல்*சாதாரண தொண்டர்களாகவே இருந்து மறைந்தும்*போய்விட்டார்கள்* பலபேர் . அப்படி இருக்கின்ற சிலர்* மிகவும் கடினமான, கஷ்டமான சூழ்நிலையில் இருக்கின்றபோது அவர்களை எல்லாம்* பார்த்து* நான்**குறிப்பிட்டு* கொள்வதெல்லாம் என்னிடத்திலே வின் டிவி*மூலம் தொலைக்காட்சியில் நான் பேசும்போது*கணிசமான நபர்களின் தொலைபேசி அழைப்புகள் எனக்கு*வந்துவிடும் . நான் அதை உரிய நேரத்தில் பேசுவதை பார்த்தால் , பல பேர் மிக அருமையாக*பேசினீர்கள் என்று* பாராட்டியதோடு, தலைவர் எம்.ஜி.ஆருடன் உள்ள தங்களின் தொடர்புகளை பற்றி பேசும்போது எங்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கிடைத்தது*போலுள்ளது என்கிறபோது, நான் மனதார பூரிப்பு அடைவதோடு* என் கண்கள் எல்லாம் குளமாகி விடுகின்றன .* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்மீது*இவ்வளவு, அன்பு ,பாசம் வைத்திருக்கும் நீங்கள் என்ன தொழில், வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் எல்லாம் சிரமத்தில் உள்ளது போல் இருக்கிறார்கள். எனக்கு அவர்கள் நிலையறிந்து வேதனைப்பட்டு*சொல்வேன், ஜெயலலிதா*அவர்களுக்கு பிறகு, எடப்பாடி*பழனிசாமி*அவர்கள், ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அ.தி.மு.க. தலைமை நிலையத்திற்கு அடிக்கொரு தடவை வருகிறார்கள் .* நீங்கள் உங்கள் குறைகளை,கஷ்டங்களை விவரித்து*அவர்களுக்கு கிடைக்கும் வகையில்*தலைமை நிலையத்திற்கு எழுதுங்கள் .நிச்சயம் உங்களுக்கு ஆதரவான*பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் .*இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.போயும் போயும்*மனிதனுக்கு இந்த - தாய் சொல்லை தட்டாதே*
2.ஒன்றே சொல்வான் , நன்றே செய்வான்*-சிரித்து வாழ வேண்டும்*
3.ஆயிரம் நிலவே வா* - அடிமைப்பெண்*
4.திரு.லியாகத் அலிகான் பேட்டி .
-
துக்ளக்*வார இதழ் - 11/11/20
-------------------------------------------
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு*
கேள்வி*:* எம்.ஜி.ஆர். படத்தை*அ. தி.மு.க. வினரை தவிர மற்றவர்கள் பயன்படுத்த கூடாது*என்று அ. தி.மு.க. வினர்*கூறுவது பற்றி ?
பதில் : கம்யூனிஸ்ட்களின் நாயகனான* காரல்*மார்க்சின்*படம் இப்போது பா.ம.க.வுக்கும் , வி.சி.க.வுக்கும் சொந்தம்*.* தி. மு.க. கூட சமயத்தில் அதற்கு*சொந்தம் கொண்டாடுகிறது .* டாக்டர் அம்பேத்கார் துவக்கிய குடியரசு கட்சியின்* அவரது பிம்பம், இன்று திருமாவளவன்* கட்சியின்*பிராண்ட்*அம்பாசிடர்*காரல்*மார்க்ஸ், அம்பேத்கார்* படங்கள் திராவிட*, ஜாதி கட்சிகளின் மேடைகளை*அலங்கரிக்கின்றன .
* எம்.ஜி.ஆர். படத்திற்கு*வருவோம் . கருணாநிதி காலத்திலேயே எம்.ஜி.ஆர். படத்தை*போட்டது*தி.மு.க.* *அது தி.மு.க.விற்கு தலைகுனிவே*தவிர, எம்.ஜி.ஆருக்கும் , அ . தி.மு.க.விற்கும் பெருமையே .* டீ கடை துவங்கி, மளிகை கடைவரையில்*எங்கும்,எதிலும்*பிள்ளையார் படம் போல மிக பிரபலமான எம்.ஜி.ஆர்.. படத்தை*யார் வேண்டுமானாலும் போடலாம் .* எம்.ஜி.ஆர். படத்தை போட்டு பொன்மன செம்மலின் அம்சமாக*மோடியை*கண்டோமே, என்று பா.ஜ.க.பாடுவது ,அவர்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ , எம்.ஜி.ஆருக்கும்*அ .தி.மு.க.விற்கும்*பெருமையே.**
-
மறு வெளியீடு சக்கரவர்த்தி எங்கள் தங்கம் எம்ஜிஆர்.. 10-11-20 முதல் தஞ்சாவூர் ஜி.வி, திருவானக்காவல் வெங்கடேசுவரா, கரூர் அமுதா, சீர்காழி ஓ எச் எம் தெயேட்டர், திருவாரூர் தைலம்மை ஆகிய தியேட்டர்களில் புரட்சித் தலைவர் டிஜிட்டலில் மினுங்கும் ஆயிரத்தில் ஒருவர். திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கத்துக்கு ஆயிரத்தில் ஒருவர் இன்னும் அள்ளிக் கொடுக்கின்றார்.வேறு எந்த நடிகர் பழைய படமும் இந்த மாதிரி மறுவெளியீடு சாதனை செய்யமுடியாது....மறு வெளியீடு சக்கரவர்த்தி எங்கள் தங்கம் எம்ஜிஆர்.. திருச்சி பேலசில்.. 10-11-2020 முதல் உரிமைக்குரல்.. வேறு எந்த நடிகர் பழைய படமும் இந்த மாதிரி மறுவெளியீடு சாதனை செய்யமுடியாது.......மறு வெளியீடு சக்கரவர்த்தி எங்கள் தங்கம் எம்ஜிஆர்.. மதுரை செண்ட்ரல் 14 -11-2020 தீபாவளி முதல் தர்மம் தலைகாக்கும்..வேறு எந்த நடிகர் பழைய படமும் இந்த மாதிரி மறுவெளியீடு சாதனை செய்யமுடியாது........மறு வெளியீடு சக்கரவர்த்தி எங்கள் தங்கம் எம்ஜிஆர்.. திருச்சி முருகன் தியேட்டர் 14 -11-2020 தீபாவாளி முதல் ரிக்*ஷாக்காரன்..வேறு எந்த நடிகர் பழைய படமும் இந்த மாதிரி மறுவெளியீடு சாதனை செய்யமுடியாது......rrn.........
-
#இனிய_நினைவுகளில்...
#"உலகம்_சுற்றும்_வாலிபன்"...
மக்கள் திலகம் (இரு வேடங்களில்),அசோகன், நம்பியார்(சிறப்பு தோற்றம்), மனோகர், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், மஞ்சுளா, லதா, சந்திரகலா, மீட்டாருங்ராட்....
இயக்கம்: மக்கள் திலகம்
வெளியான வருடம்:1973
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
இடியின் முழுச்சக்தியையும் ஒரு மாத்திரை வடிவத்தில் அடக்கி சாதனை புரிகிறார் விஞ்ஞானி முருகன் (மக்கள் திலகம்) அதை ஹாங்காக் விஞ்ஞானிகள் மாநாட்டில் சோதித்தும் காட்டுகிறார். அதனை உலக மார்க்கெட்டில் விட்டால் கோடிக்கணககில் பணம் பார்க்கலாம் என்றும், தானே அந்த விஞ்ஞான பார்முலாவை பல மில்லியன் டாலர் கொடுத்து வாங்க தயாராக இருப்பதாக பைரவன் (அசோகன்) கூறுகிறார்.
விஞ்ஞானிமுருகன், இந்த அணு ஆயுதத்தை போன்ற அழிவு சக்தியை வெளிவிட்டால் அது மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்து, அழிவுக்கு காரணமாகும் என்று கூறி அந்த ஃபார்முலாவை அங்கேயே எரித்து அழித்து விடுகிறார்.
பின்னர் தன் காதலி விமலா (மஞ்சுளா)வுடன் சுற்றுப்பயணம் செல்லும்போது, உண்மையில் தான் அந்த ஃபார்முலாவை அழிக்கவில்லை என்றும், அதனை நான்கு பகுதிகளாக பிரித்து உலகின் நான்கு மூலையில் உள்ள நல்லவர்களிடம் ஒப்படைத்திருப்பதாகவும், நேரம் வரும் போது பயன்படுத்திக்கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.
இதனை ஒட்டுக்கேட்ட பைரவன் ஒரு புதுவித துப்பாக்கியால் முருகனை சுட்டு மனச்சிதைவு ஏற்படுத்தி அவரையும், விமலாவையும் ஃபார்முலா இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள பணயக்கைதி போல் வைத்திருக்கிறார்.
இப்போது அண்ணன் முருகனை தேடி வருகிறார் சி.ஐடி.ராஜீ (மக்கள் திலகம்) அவர் லில்லி(லதா) ரத்னா(சந்திரகலா) மார்க்கண்டேயன் (நாகேஷ்) உதவியுடன் இந்த ஃபார்முலாவையும் கண்டுபிடித்து அண்ணன் முருகனையும் மீட்கிறார்.
மக்கள் திலகத்தின் வழக்கமான படங்களிலிீருந்து இது மிகவும் மாறுபட்டது...தாய்ப்பாசம், ஏழைகளின் பங்காளன், தொழிலாளர்களின் போராளி என்ற வழக்கமான தனது களத்திலிருந்து மாறி..ஒரு விஞ்ஞான காரணியை கையிலெடுத்து, ஒரு Treasure hunt போல தெரிக்க விட்டிருக்கிறார் மக்கள் திலகம்.
அந்த கப் அண்ட் சாசர் பாட்டு; எக்ஸ் போ 70யில் லட்சக்கணக்கானவர் முன்னிலையில்ஆடல் பாடல் ; அவள் ஒரு நவரச நாடகம் பாடலில் வித்தியாசமாக தண்ணீருக்கடியில் படமாக்கியிருக்கும் விதம்,; மீட்டா ருங்ராட் என்ற தாய்லாந்து பெண்ணை "பச்சைக்கிளி " பாடலுக்கு வாயசைத்து நடனமாட விட்டிருக்கும் விதம்; குறுகலான நீரோடையில் போட் சேசிங்; டால்பின் ஷோ; இறுதியில் சுழன்றடிக்கும் காமிராவுடன் பொறிபறக்கும் அந்த ஸ்கேட்டிங் ஸ்டன்ட் ; என்ற இந்த விஷயமெல்லாம் 70 களிலே, தொழில் நுட்ப வசதி அறவே இல்லாத காலத்தில் மக்கள் திலகத்துக்கு மட்டும் எப்படி சாத்தியமானது என்பது அதிசயத்திலும் அதிசயம்.
இந்த படம் வெளியான போது ஏற்பட்ட அரசியல் சூழலை சமாளித்து போஸ்டரே ஒட்டாமல் படத்தை வெளியிட்டது; படத்தை ரஷ் போட்டு பார்த்தபோது பல இடங்களில் நிழல் படிந்து இருந்ததை கண்டு தளராமல் சத்யா ஸ்டூடியோவில் அச்சு அசலாக செட்டுபோட்டு, நிஜமா, நிழலா என தெரியாமல் படம் எடுத்த சாமர்த்தியம்; இவையெல்லாம் மக்கள் திலகத்தின் தன்னம்பிக்கைக்கும், பாதகத்தை சாதகமாக்க தன்னால் முடியும் என்பதற்கு சிறந்த உதாரணங்கள்.
மற்ற அத்தனை பேரும், நம்பியார் தவிர மக்கள் திலகத்தின் விஸ்வரூபத்தின் முன் காணாமல் போகிறார்கள்.
" பாட்சா" படத்தில் ரஜினியை பார்த்து , போலீஸ்காரரான அவர் தம்பி சொல்வார் " நாடி நரம்பெல்லாம் ரத்தவெறி உள்ளவனால்தான் இந்த அடி அடிக்கமுடியும்" என்பார். இந்த வரிகள் இந்த படத்தை பொருத்த வரை மக்கள் திலகத்துக்கு அப்படியே பொருந்தும்...வெறும் நடிப்போடு தன்னை நிறுத்திக்கொள்ளாமல், தாயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கதை-திரைக்கதை என அத்தனை துறைகளிலும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமானால் சினிமாவை அவர் நாடி நரம்பிலிருந்து எவ்வளவு நேசித்திருக்கவேண்டும்..???
இந்த படத்தின் பாடல்களை பொருத்த வரை இசை மெல்லிசை மன்னராக இருந்தாலும்...அத்தனை பாடல் ட்யூன்களையும் சிறப்பாக வரும் வரை விடாமல் தெரிவு செய்தவர் மக்கள் திலகம். மெல்லிசை மன்னர் இதை பற்றி பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
இந்த படம் உலகெங்கும் வசூல் மழை பொழிந்தது...ப்ளாக் பஸ்டர், சூப்பர் ஹிட் எல்லாம் இந்த படத்தை பொருத்தவரை மிக சாதாரண வார்த்தைகள். இந்த படம் நிகழ்த்திய வசூல் சாதனை 90 கள் வரை முறியடிக்கபடாமலே இருந்தது.
உ.சு.வா...என்றென்றும் வாலிபன்.....Sr.Bu...
-
குழுவினர் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்...
படத்தில் பதிவில் தன் குடும்பத்துடன் இருப்பவர் மறைந்த மலேசிய நாட்டின் புகழ் பெற்ற நடிகர் பி.ரெம்லி அவர்கள்....
என்ன அதற்கு என்று கேட்டால் அங்கேயே பதிவு ஆரம்பம்...அந்த நாட்டின் புகழ் பெற்ற நடிகர் ஆக விளங்கிய ரெம்லி அவர்கள் நம் இதயதெய்வத்தின் தீவிர ரசிகர்..
நம் தலைவரின் நடிப்பில் வெளிவந்த "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" படத்தை அப்பிடியே உள்வாங்கி அந்த நாட்டு மொழியில் அப்போதே நடித்து அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது...
ஒரு சாதாரண தலைவர் ரசிகர் போல அங்கே வெளியாகும் தலைவர் படங்களை முதல் காட்சி பார்த்து விட்டு தலைவரிடம் படத்தை பற்றி பகிர்ந்து கொள்பவர் இந்த ரெம்லி.....
தலைவர் பாரத் பட்டம் வென்ற படம் "ரிக்க்ஷாக்காரன்" படத்தை அப்பிடியே எடுத்து அந்த படம் வரலாறு காணாத வெற்றியை அந்த நாட்டில் பெற்றது.
ஒரு மாபெரும் நடிகருக்கு ஒரு மாபெரும் நடிகர் ரசிகர் ஆக இருந்த செய்தி புதுமையானதே...
பி.ரெம்லி அவர்கள் மறைந்த உடன் அந்த நாட்டு அரசு அவருக்கு மிக பெரிய நினைவு இல்லம் அமைத்தது..
திரு ரெம்லி அவர்களை தன் உ.சு.வா...படத்தில் நடிக்க தலைவர் ஒப்பந்தம் செய்த செய்தி அதிசயம் ஆனது...அவரும் மகிழ்வுடன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு தலைவர் மலேசியா சென்று காட்சிகள் எடுக்க வேண்டிய இடங்கள் கூட முடிவாகி அப்போது இங்கே ஆட்சியில் இருந்த ஒரு சக்தி அந்த நாட்டு அரசாங்கத்தை தொடர்பு கொண்டு மிரட்ட அந்த தலைவரின் எண்ணம் கை விட பட்டது.
அந்த நடிகர் ரெம்லி அவர்கள் நலன் கருதி தலைவர் தன் முடிவை மாற்றிக்கொண்டார்.
படத்தின் காட்சி அமைப்பு சம்பந்தம் ஆக அந்த நாட்டில் தலைவர் அவருடன் மற்றும் உ.சு.வா...நடிகைகள் உடன் எடுத்து கொண்ட அபூர்வ படம் பதிவில் இணைக்க பட்டு உள்ளது...
மறைந்த ரெம்லி அவர்கள் நினைவில்லத்தில் தலைவருடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் வரவேற்பு அறையில் இன்றும் ஜொலிக்கிறது.
நினைவில்லம் வாசலில் ரெம்லி அவர்கள் பயன்படுத்திய காரும் அவர் தலைவர் படத்தை தழுவி எடுத்த படத்தில் இடம் பெற்ற ரிஃசாவும்
அங்கே இன்னும் இடம் பெற்று இருப்பது அதிசியமே....
புரட்சிநடிகர்..... தலைவர் புகழ் என்பது நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான்கள் போல அல்ல... அவை காவியம் ஆனவை...காலத்தை வென்றவை.
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்..
உங்களில் குரல் ஆக உங்களில் ஒருவன் நெல்லை மணி.
சந்திப்போம் சாதிப்போம் அடுத்த பதிவில் நன்றி நன்றி.......
-
#மக்கள்_திலகத்தின்_வெற்றிப்படங்கள்...
#உழைக்கும்_கரங்கள்...!!!
கோவை செழியன் தயாரிப்பு- கே.சங்கரின் இயக்கம்-நாஞ்சில்.கி.மனோகரனின் வசனம்-மெல்லிசை மன்னரின் இசை ஆகியவற்றோடு 1976 ம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப்படம்.
மக்கள் திலகம் தனி இயக்கம் கண்டு, 1977 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரங்கன் என்ற கதாபாத்திரத்தில் ஏழைப்பங்களனாய் வருகிறார்.அசத்துகிறார்.
ஊரை அடித்து ஊழல் செய்யும் சேர்மேன் நாகலிங்கத்தையும் (தங்கவேலு) அவரது கலப்பட தொழிலையும் மக்களிடம் அம்பலப்படுத்துகிறார்.
நாகலிங்கத்தின் விதவை தங்கை கெளரி ((குமாரி பத்மினி)) ஒரு போலிச்சாமியார் கபாலியிடம் ((தேங்காய் சீனிவாசன்))தன்னை இழக்கும் போது, அவனுக்கே அவளை மணமுடித்து தன் தாய் போல மதிக்கும் அன்னம்மாளின் ((பண்டரிபாய்))குடும்ப மானத்தை காக்கிறார்
தன்னை காதலிக்கும் கிராமத்து முத்தம்மா ((லதா)) விற்கு வாழ்வளிக்கிறார்.
பக்தி வேண்டியதுதான்..ஆனால் பக்தி என்ற போர்வையில் போலிச்சாமியார்களுக்கு ((தேங்காய்-நாகேஷ்)) இடமளிக்கவே கூடாது என சொல்கிறார்.
தன்னை ஒரு தலையாய் காதலித்த பெண்ணை பங்கஜம்.. ((பவானி)) இசையரசியாய் வாழ வைக்கிறார்.
விவசாயமே நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை படம் முழவதும் கிராமத்து விவசாயியாய் வாழ்ந்து காட்டுகிறார்.
இந்த படத்தில் அன்றும்-இன்றும்-என்றும் பேசப்பட்டது கோவில் திருவிழாவில் நடக்கும் அந்த மான் கொம்பு சண்டை, மக்கள் திலகத்தின் வேகத்தில், காமிராவே திணறுகிறது. அதே போல வைக்கோல் போரில் ஜஸ்டினுடன் போடும் சண்டையும ரசிகர்களால் பெரிதும் சிலாகித்து பேசப்பட்டது.அப்போது மக்கள் திலகத்திற்கு 59 வயது, இந்த வயதிலும் மான் கொம்பு, சிலம்பாட்டம் என்று பட்டையை கிளப்பினார் மக்கள் திலகம்.
"நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே" இந்த பாடலாக மட்டுமின்றி ஒரு பாடமாகவும் இன்று வரை ஒலிக்கிறது. இதை தவிர "வாரேன்...வழி காத்திருப்பேன்", "கந்தனுக்கு மாலையிட்டாள்" பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.
அருமையான கதை, நடிப்பு,பாடல்கள், வசனங்களை கொண்ட இப்படம் நூறு நாட்களை கடந்து சூப்பர் ஹிட்டானது..!!!
Source :https://en.m.wikipedia.org/wiki/Uzhaikkum_Karangal Sr.babu
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறுவெளியீடு*தொடர்ச்சி ...............
------------------------------------------------------------------------------------------------------------------------
திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் -* தினசரி இரவு 8 மண் காட்சி மட்டும்*
10/11/20,11/11/20, 12/11/20* நாட்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்*
நீதிக்கு தலை வணங்கு .
கரிக்கலாம்பாக்கம்* திவ்யாவில்* இன்று முதல் (12/11/20) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
*இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் நினைத்ததை முடிப்பவன்*
தினசரி 3 காட்சிகள் .
-
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*07/11/20 முதல் 12/11/20 வரை ஒளிபரப்பான*பட்டியல்*
------------------------------------------------------------------------------------------------------------------------
07/11/20* முரசு டிவி - மதியம் 12 மணி/இரவு 7 மணி - நல்ல நேரம்*
* * * * * * * *ராஜ் டிஜிட்டல் -பிற்பகல் 12.30 மணி - மாட்டுக்கார வேலன்*
* * * * * * *சன் லைப்* - மாலை 4 மணி - மன்னாதி மன்னன்*
08/11/20 -மெகா 24- பிற்பகல் 2.30 மணி - குடும்ப தலைவன்*
* * * * * * * ராஜ் டிஜிட்டல் - இரவு 10 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - ஒரு தாய் மக்கள்*
09/11/20 - சன் லைப் - காலை 11 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * * * வசந்த் டிவி -பிற்பகல் 1.30மணி - சங்கே முழங்கு*
* * * * * * * *பாலிமர் டிவி- இரவு 11 மணி - நவரத்தினம்*
10/11/20* வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி - தாயை காத்த தனயன்*
* * * * * * * சன் லைப் - மாலை 4 மணி - எங்கள் தங்கம்*
* * * * * * *புது யுகம் -இரவு 7 மணி - நீதிக்கு தலைவணங்கு*
* * * * * * *ராஜ்*டிஜிட்டல் - இரவு 7 மணி - பறக்கும் பாவை*
** * * * * * மீனாட்சி*டிவி*-இரவு* 10.30 மணி - வேட்டைக்காரன்*
11/11/20- சன் லைப்*- காலை*11 மணி - நினைத்ததை முடிப்பவன்*
* * * * * * * சித்திரம் டிவி*-காலை*11 மணி/மாலை 6மணி -அபிமன்யு*
* * * * * * * மெகா டிவி*- மதியம் 12 மணி - தாயின் மடியில்*
* * * * * * *மூன்*டிவி* - பிற்பகல் 12.30 மணி - தாய்க்கு பின் தாரம்*
* * * * * * வசந்த் டிவி*- பிற்பகல் 1.30 மணி - ராமன்*தேடிய சீதை*
* * * * * * வெளிச்சம் டிவி*- பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*
* * * * * * *பாலிமர் டிவி*-இரவு 11 மணி* -* ராமன் தேடிய சீதை*
12/11/20 சன்* லைப்*-* *மாலை 4 மணி -* திருடாதே*
* * * * * * *