-
60 ஆண்டுகளாக தமிழக அரசியலில் தொடர்ந்து எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் பெயரும் , அவருடைய அரசியல் பிரச்சாரங்களும் , இடம் பெறுவது அரசியல் வரலாற்றில் குறிப்பாக தேர்தல் களத்தில் முக்கியமாக கருதப்படுகிறது .
எம்ஜிஆர் உருவாக்கிய ஒட்டு வங்கி உதய சூரியன் மற்றும் இரட்டை இலை சின்னங்கள் மூலம் இன்று வரை தொடர்ந்து ஆட்சியினை பிடித்து வருகின்றது . 1957,1962, 1967,1971ல் நடந்த 4 பொது தேர்தல்களில் திமுகவிற்காக எம்ஜிஆர் உழைத்த உழைப்பு மறக்க முடியாதது .அண்ணாவையும் , கருணாநிதியையும் தமிழக முதல்வராக அமர்த்தி வெற்றி கண்டார்
எம்ஜிஆர் நிலை நிறுத்திய ஒட்டு வங்கியும் , அவருடைய பிம்பமும் தமிழக மக்கள் மனதில் நிலைத்து விட்டதால் தலைமுறைகள் மாறினாலும் எம்ஜிஆர் என்ற சக்தி இன்னமும் ஆட்சி செய்து வருவதுதான் உண்மை .எம்ஜிஆர் என்ற பலமான அஸ்திவாரம் கொண்ட கட்டிடத்தை ஜெயலலிதா கைப்பற்றி ஆட்சியில் இருக்கிறார் .
எம்ஜிஆரின் தீவிர ரசிகர்களும் , தொண்டர்களும் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் இயக்கம் சிதைவதை விரும்ப மாட்டார்கள் . ஜெயலலிதாவின் அணுகுமுறை , முற்றிலும் மாறுபட்டது . இருந்தாலும் எம்ஜிஆர் என்ற மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜெயலலிதாவின் வெற்றிக்கு உழைப்பார்கள் .
எம்ஜிஆரின் செல்வாக்கு , அரசியல் சாதுரியம் , மனிதநேயம் முன் ஜெயலலிதா எந்த விதத்திலும் ஈடாக மாட்டார் .
எம்ஜிஆர் என்ற அதிர்ஷ்ட காற்று உள்ளவரை ஜெயலிதாவிற்கு லாபமே. ஜெயலலிதாவின் பிம்பம் செல்வாக்கு
எல்லாம் ஒரு கால கட்டத்தில் மக்களால் மறக்கப்படுவார் .இது உண்மை. ஆனால் எம்ஜிஆர் என்ற பெயரும் அவருடைய புகழும் காலம் கடந்து தலைமுறைகள் கடந்து வாழும் .இது சத்தியம் .
courtesy - vinmeengal
-
-
-
மக்கள் திலகத்தின் அரசியல் பயணத்தில் இருந்து ....மலரும் நினைவுகள் .
http://i65.tinypic.com/11smov7.jpg
-
-
-
-
-
-