டியர் சுப்பு
உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் . முதலில் உங்களை தரமின்றி தாக்கிய பதிவிற்கு
ஆம் / இல்லை - பதில் போடவும் .
Printable View
டியர் சுப்பு
உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் . முதலில் உங்களை தரமின்றி தாக்கிய பதிவிற்கு
ஆம் / இல்லை - பதில் போடவும் .
வாங்க ஆதிராம்
எங்கள் திரியின் அன்பு ''ஒற்றன் ''
பிழைகளை கண்டு பிடிப்பதில் வல்லவர் .
தின இதழில் தவறான தகவல்கள் இடம் பெற்றதை அறிவோம் . அந்த பத்திரிகை ஆசிரியருக்கு
பல முறை அலை பேசி மூலமும் , இ மெயில் மூலமும் அவர்களின் தவறுகளை சொல்லிவிட்டோம் .
ஆதிராம்
எங்களுக்குநீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் . நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும் .
சாரதா
கார்த்திக்
கல்நாயக்
வனஜா
பரணி
ஸ்டெல்லா
இவர்கள் எல்லாம் ஒரே நபர் என்றும அதுவும் நீங்கள்தான் என்றும் கூறப்படுகிறதே .
உண்மையா ?
எல்லோருடய குழப்பத்தை நீங்கள்தான் தீர்க்க வேண்டும் .செய்வீர்களா ஆதிராம் ?
நண்பர் வரதகுமார் சுந்தர்ராமன் அவர்களுக்கு
முதலில் நன்றி, பத்திரிகையில் வந்த தவறான தகவலைக் களைய முயற்சி எடுத்து வருவதற்கு.
நீங்கள் கேட்ட இரண்டாவது விஷயம்,
என்னுடைய பதிவுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதபோது மற்றவர்கள் கையாளும் உபாயம்தான் 'பலபெயர்களில் பதிவிடுபவன்' என்ற குற்றச்சாட்டு. இது பலமுறை பலரால் சொல்லப்பட்டு இருக்கிறது. இதற்கு கல்நாயக் போன்ற சிலர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். பலர் மௌனம் காத்திருக்கிறார்கள். நான் மட்டும் தவறாமல் பதில் சொல்லி வருகிறேன்.
ஏன் இந்த சந்தேகம் வருகிறது என்று தெரியவில்லை. இந்த குற்றச்சாட்டு வந்த துவக்கத்திலேயே மாடரேட்டர்கள் தீர ஆராய்ந்து, புகாரில் உண்மையில்லை என்று கண்டறிந்து என்னை தொடர அனுமதித்துள்ளனர்.
முன்பு முத்துராமன் என்ற பெயரில் ஒருவர் இந்த சந்தேகத்தை கொளுத்திப்போட்டார். அதை உண்மையென்று நம்பி பலர் அதையே பிடித்துக் கொண்டனர். (தவறான தகவல்களால் என்ன விளையும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு).
வேறு பெயர்களில் பதிவிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சொல்லப்போனால் என் உண்மைப்பெயர் கூட ஆதிராம் இல்லை. அனந்தராமன். ரிஜிஸ்ட்டர் செய்தபோது ஹப்பில் ஏகப்பட்ட அனந்தராமன்கள் இருந்ததால் பதிவு கிடைக்கவில்லை. ஆகவே ஆதிராம் என்று ரிஜிஸ்ட்டர் செய்துள்ளேன்.
இனிமேலாவது பதிவில் உள்ள விஷயங்களுக்கு மட்டும் எல்லோரும் பதிலளித்தால் தேவலை. இந்த ஆராய்ச்சி இன்றோடு முடியட்டுமே.
சார்
நீங்கள் தின இதழ் பத்திரிகைக்கு தவறை சுட்டிக்காட்டி அவர்களை கண்டித்ததற்கு மிக்க நன்றி..
எனது பதிவிற்கு வேலை இல்லை. நீக்கிவிட்டேன் நீங்கள் ஆதிராம் அவர்களுக்கு பதில் அளித்தவுடன்.
தவறுகளை தின இதழுக்கும் பத்திரிகை மூலம் காழ்புணர்ச்சியில் பொய்யுரைத்த அனீஸ் அவர்களுக்கும் நீங்கள் தொடர்புகொண்டு உண்மையை வெளிபடுத்தியதருக்கு, சுட்டிகாட்டியதற்கு நன்றி !
Rks
நாதஸ்வரத்தில் உள்ள சீவாளி - சீவாளி வாசிக்க வாசிக்க அதன் பிசிர் தனியாக உதிரும் தன்மை கொண்டது...கச்சேரியில் ஏற்ற இறக்க ஸ்ருதிகள் தொடர்ந்து அமையும்போது அல்லது தொடர்ச்சியாக வாசிக்கும் கச்சேரிகளில் இப்படிப்பட்ட ஸ்ருதி வாசிக்கும்போது, சீவாளியின் பிசிர் தனித்து பிரியும்..
கச்சேரிகளில் நாம் பார்த்தால் அல்லது கல்யாணங்களில் வாசிப்பவர்களை பார்த்தால் அது நன்கு விளங்கும். சீவாளியை இரு விரல்களால் முதலில் ஒதுக்கி அதன் முகவை அழுத்தி வைத்து வாசிப்பது வழக்கம்.
வாசிக்கும்போது சிலசமயம் பிசிர் வாயில் தடைபட அதிக நீளத்தை கடித்து துப்பும் வழக்கம் நிலவில் உள்ளதே....அதற்காக செல்லுமிடமெல்லாம் கத்திரிகோல் எடுத்துகொண்டு செல்ல இயலுமா ?
சிக்கலார் வாசிக்கும்போது சீவாளி பிசிர் சிக்கினால் கடித்து துப்பாமல் விழுங்க முடியுமா என்ன ? சிக்கலான சீவாளி சிக்கலாரிடம் சிக்கினால் சிக்கல் சீவாளிக்குதானே தவிர சிக்கலாருக்கு அல்ல !
சிக்கலான விஷயம் தான் சார் !
Rks
திரு. ஆர்.கே.எஸ். திரு. ஆதிராம்,
எங்கள் திரிக்கு வருகை புரிந்து விளக்கம் அளித்ததற்கு நன்றி. நீங்கள் இருவரும் கூறியபடி, அந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியில், நிறைய பிழைகள் உள்ளன. உங்கள் மனம் புண்பட்டதற்கு வருந்துகிறோம்.
அதே நேரம், அந்த பத்திரிகையில் இந்த தொடர் வெளியான நாள் முதல் (அந்த பத்திரிகை என்று இல்லை. எந்த பத்திரிகையில் மக்கள் திலகம் பற்றிய செய்திகள் வந்தாலும் திரு.லோகநாதன் பதிவிடுவார்) அந்த தொடரை திரு.லோகநாதன் பதிவிட்டு வருகிறார் என்பதையும், எனவே, அவர் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே நாளிதழ் பதிவை வெளியிடவில்லை என்பதையும் அறிவீர்கள் என்று நம்புகிறோம். தங்கள் மனம் புண்பட்டதற்கு மீண்டும் வருந்துகிறோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.கோபால்,
ஏதோ, ‘திரு.சிவாஜி கணேசன் அவர்களின் புகழை குறைக்கும் முயற்சி வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று நண்பர்கள் கூறியதால் அடக்கி வாசிக்கிறேன்’ என்று கூறி நல்ல பிள்ளை போல நடிக்க வேண்டாம்.
பேராசிரியர் செல்வகுமார் அவர்களை கிண்டலும் கேலியும் செய்வதையும் நாங்கள் அனுமதிக்க முடியாது. உங்களுக்கே ஆங்கிலம் தெரியும்போது உங்களைவிட அதிகம் படித்தவர் பேராசிரியர் திரு.செல்வகுமார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மக்கள் திலகத்தின் புகழுக்கு மாசு ஏற்படுத்துவதும் கிண்டல் செய்வதும் புகழைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் நீங்கள்தான் என்பதையும் அதன் மூலமே பிரச்னைகள் உருவாகின்றன என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். ‘நவரத்தினம் படத்தில் வீணை தடவிக் கொடுக்கப்படும்’ என்று வீணாக வம்புக்கிழுக்கும் வகையில் நேற்று பதிவிட்டது நீங்கள்தான்.
ஒரு கலைஞனின் புகழை குறைக்க நாங்கள் ஏன் முயற்சிக்கப் போகிறோம்? அதற்கென்று நிறைய பேர் உள்ளனர். உதாரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி மதியம் 2.26 மணிக்கு போடப்பட்ட இந்தப் பதிவு பின்னர் தூக்கப்பட்டது. அந்த பதிவில் உள்ள வார்த்தைகள்....
//தோல்வியே கண்ட அரசியல்வாதியை எவன் கொண்டாடுவான்? அவர் பெரிய நிர்வாகியே அல்ல. அத்துடன், அரசியல் என்பது மேடு பள்ளங்கள்,சூட்சுமம் நிறைந்தது.
ஒரு தோல்வியோடு, பொருட்காட்சி சாலை கடை போல ,கடையை சுருட்டி ஓடியவரை பெரிய ஆபிரகான் லின்கன் ரேஞ்சிலா வைத்து பேசுவது.அவருக்கு அரசியல் லாயக்கு படவில்லை. அம்புடுதேன்//
திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி மேலே கூறியுள்ளவற்றை யார் கூறியது என்று சொல்ல முடியுமா கோபால்? முடியாவிட்டால் பரவாயில்லை. சரி போகட்டும். நீங்கள் கூறியபடி இனியாவது அடக்கி வாசியுங்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
.
யார் சார் அந்த வதந்தியை கொளுத்திபோட்டது ?
குணசித்திர வேடத்தில் சிறப்பாக நடித்தவரின் பெயர் கொண்டவரா கொளுத்திப்போட்டது ?
முத்துராமன் என்ற பெயரில் ஒருவரா ?
விந்தையாகவும் விநோதமாகவும் மர்மமாகவும் இருக்கிறதே..!
அந்த முத்துராமன் என்ற நண்பர் இப்போது திரியில் எழுதுகிறாரா ?
rks
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பதவி ஏற்பு நிழற்படங்கள் அத்தனையும் அருமை . விழாவை நேரில் [ 30.6.1977]
பார்த்து அனுபவித்த எங்களை போன்ற நண்பர்களுக்கு உங்கள் பதிவுகள் மீண்டும் அந்த நாட்களை நினைவு படுத்தியது மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கனவு நினைவாகிய நாள் . எடுத்த சபதம் நிறைவேறிய பொன்னான நாள் .