சென்னை சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில்
வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்.
http://i68.tinypic.com/2qn0dpe.jpg
Printable View
சென்னை சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில்
வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்.
http://i68.tinypic.com/2qn0dpe.jpg
http://i67.tinypic.com/1zl7rq8.jpg
வெற்றி! வெற்றி! வெற்றி!
புரட்சித் தலைவருக்கு வெற்றி!
புரட்சித் தலைவிக்கு வெற்றி!
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு 19-ம் தேதி நடந்த தேர்தலில் இன்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. இப்போதைய நிலவரப்படி 3 தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இன்னும் 3 மணி நேரத்துக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.
அதிமுக 3 தொகுதிகளிலும் அமோக வெற்றி! உறுதி!
43 வருசத்துக்கு முன் ஒரு தனி மனிதர் தனது சொந்த செல்வாக்கையும் மக்களையும் மட்டுமே நம்பி ஆரம்பித்த கட்சி இன்றும், அந்த மனிதர் உடல் அளவில் மறைந்து 29 ஆண்டுகள் ஆகியும் அவரது கட்சி வெற்றிகளை குவித்து வருகிறது. அப்படி என்றால் மக்கள் தலைவர், மனிதர் குல மாணிக்கம் புரட்சித் தலைவரின் செல்வாக்கு எந்த அளவுக்கு மக்களிடம் நிலைத்து நிற்கிறது என்பதை மன மாச்சரியங்களை, வெறுப்பை, கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு இதைப் படிக்கும் எல்லாரும் நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள். புரட்சித் தலைவரின் செல்வாக்கும் புகழும் பிரமிப்பை ஏற்படுத்தும்.
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையின் திருப்பரங்குன்றத்திலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மதுரை என்றும் புரட்சித் தலைவரின் கோட்டை என்பதற்கு மறுபடியும் ஒரு உதாரணம்.
1984-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் புரட்சித் தலைவர் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு படுத்தபடியே இங்கு வெற்றி பெற்றார். கட்சியும் வெற்றி பெற்றது. அவர் வழியில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் சி்கிச்சை பெற்று வரும் புரட்சித் தலைவி அம்மாவும் பிரசாரத்துக்கு போகாமல் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே புரட்சித் தலைவர் ஆசியோடு 3 தொகுதியிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்துள்ளார்.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கூடிய சீக்கிரம் அம்மா அவர்கள் பூரண குணம்பெற்று திரும்பிவந்து பணியாற்ற வேண்டும். புரட்சித் தலைவர் அருள் புரிய வேண்டும்.
மனிதப் புனிதர் மங்காப்புகழ் மன்னவர் மக்கள் தலைவர் புரட்சித் தலைவர் அவர்கள் வாழ்க!
தென்னிந்தியாவின் ஜான்சி ராணி வீராங்கனை கட்சியின் காவல் தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நீடுழி வாழ்க!
http://i65.tinypic.com/2vmzh91.jpg
இன்று இசை மேதை மதிப்பிற்குரிய பாலமுரளி கிருஷ்ணா காலமானார்.
மக்கள் திலகம் நடித்த நவரத்தினம் என்ற படத்தில் குருவிக்கார மச்சானே என்ற ஒரு பாடல் மட்டுமே மக்கள் திலகத்திற்காக அவர் பாடியுள்ளார்.
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன்.
அருமை நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களே, தஞ்சை, அரவக்குறிச்சி ,
திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க அமோக . வெற்றி பற்றிய தங்களின்
கருத்துக்கள் /விமர்சனங்கள் மேலானவை.பாராட்டுக்கள்.
இனிய நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் கவனத்திற்கு,
மறைந்த இசை மேதை திரு. பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு. திரு. பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் , :நவரத்தினம் திரைப்படத்தில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக , குருவிக்கார மச்சானே பாடலுடன்
பன்மொழி பாடலையும் பாடியுள்ளார்(நடிகை ஒய். விஜயாவுடன் )என்பது கூடுதல் தகவல்.
ஆர். லோகநாதன்.
http://i67.tinypic.com/2yy7ckl.jpg
நாளை (23/11/2016) இரவு 7 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நீதிக்கு தலை வணங்கு " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .
தற்போது சென்னை பாட்சா (மினர்வா ) அரங்கில் தினசரி 3 காட்சிகள் நடைபெற்று வருகிறது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் படங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில் , சமீப காலமாக , சன் டி.வி. நிறுவனம் , தற்போது அரங்குகளில்
ஓடி கொண்டிருக்கும் படங்களை மட்டும் தேடி பிடித்து ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்னவோ ?
உதாரணத்திற்கு கடந்த ஞாயிறு அன்று இதயக்கனி காலை 11 மணிக்கும் (அகஸ்தியாவில் திரையிடப்பட்டள்ள படம் ), உரிமைக்குரல் இரவு 7 மணிக்கும்
(ஸ்ரீநிவாஸாவில் திரையிடப்பட்டுள்ள படம் ) சன் டி.வி. ஒளிப்பரப்பியது .
நன்றி - தினமணி
http://i66.tinypic.com/20kq9tl.jpg
http://www.dinamani.com/latest-news/...5-2603131.html
3 தொகுதிகளிலும் முத்தான வெற்றியைப் பெற்றது அதிமுக!
நன்றி - தினமணி
----------------------------------------------------------------------------------------------------------------
மற்ற இரண்டு தொகுதிகளை விட எங்கள் மதுரையம்பதியின் திருப்பரங்குன்றத்தில் வாக்கு வித்தியாசம் எங்கோ இருக்கிறது. அதிமுக வேட்பாளர் அண்ணன் ஏ.கே.போஸ் பெற்ற மொத்த வாக்குகள் 1,13,032. வாக்கு வித்தியாசம் 42,000-க்கும் மேல்.
எல்லாருக்குமே ஊர்ப் பாசம் இருக்கும். மதுரைக்காரர்களுக்கு கொஞ்சம் கூடவே உண்டு. எங்கள் ஊரில் உள்ள தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப சந்தோசமாகவும் பெருமையாகவும் உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு மகிழ்ச்சியில் உருண்டு புரண்டு நன்றி தெரிவிக்கிறோம்.
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டை மண் மணக்கும் எங்கள் மாமதுரை என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
http://i65.tinypic.com/1zn97ut.jpg
3தொகுதி தேர்தல் பற்றிய எனது கருத்துகளுக்கு பாராட்டு தெரிவித்த திரு. எஸ்.வி.அய்யா அவர்கள், நண்பர்கள் திரு. லோகநாதன் அவர்கள், திரு.ரவிச்சந்திரன் அவர்கள் ஆகியோருக்கு நன்றி. புரட்சித் தலைவரின் பெருமையை சொல்லுவதால் என் கருத்துக்கள் நன்றாக இருக்கிறது. என் பெருமை ஒன்றும் இல்லை.
எல்லாப் புகழும் பெருமையும் வெற்றித் தெய்வம் புரட்சித் தலைவருக்கே!
http://i66.tinypic.com/14jn69k.png
நண்பர் லோகநாதன் சார் ,
ரிக்க்ஷக்காரன் படம் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் நடந்த அதே நேரத்தில் ரிக்க்ஷாக்காரன் படத்தை சன் லைப் தொலைக்காட்சியில் திரையிட்டார்கள். படம் வருவதற்குள் மறுபடியும் இரண்டு முறை ஒளிபரப்பினார்கள்.
இது வேண்டுமென்றே நடக்கிறதா? யதேச்சையாக நடக்கிறதா? என்று தெரியவில்லை.
எதற்கும் நல்லதையே நினைப்போம். பார்ப்போம். தொடர்ந்தால் யோசிப்போம்.
உரிமைக்குரல் படத்தின் சென்னை சீனிவாசா தியேட்டர் கொண்டாட்ட படங்கள் அருமை. உங்களின் தொடர்ந்த அயராத பணிக்கு நன்றி.