-
சந்திரன் பாடல் 55: "ஒரு மாலை சந்திரன் மலரைத் தேடுது"
-------------------------------------------------------------------------------------
பார்த்திபன் காதல் சோகத்தில் பாடி ஆரம்பிக்க ஒரு நடனக் குழுவினர் காதல் மோகத்தைப் பற்றி பாடி அவரது பாடலுடன் கலக்குகின்றனர். இல்லை. இல்லை. ராஜாதான் கலக்குகிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியமும், மின்மினியும் பாடியுள்ள நல்ல பாடல்.
பாடல் வரிகள்:
----------------------
ஆண்: பால் நெலவு சூரியன்போால் சுட்டதென்ன நியாயம்
பச்சாக்கிளி தோளைக்கொத்தி வந்ததிந்த காயம்
ஓடிவந்த வைகை நதி காஞ்சதென்ன மாயம்
கூடவழி இல்லையென்றே ஆனது பெண் பாவம்
பெண்: ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே
இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே
புயல் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி
அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி
ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆஆஆ
ஆண்: வெண்ணிலவில் தேடுகின்றேன் கன்னி முகம் காணோம்
புன்னகையும் நானிழந்தேன் என் மனதில் சோகம்
சித்திரத்தைப் பார்க்க வந்தேன் கற்குவியல் கண்டேன்
செம்மலையைப் போலிருந்தேன் தென்னிலங்கையானேன்
செல்லக் குயில் கூவ மெல்ல வரும் நேரம்
சொல்லில் வரும் சோகம் கங்கை நதியாகும்
எங்கிருந்த போதிலும் நீ வந்துவிடு தேவி
பெண்: ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே
இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே
புயல் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி
அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி
ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆஆஆ
ஒரு மாலைசந்திரன்
காணொளி:
---------------------
https://www.youtube.com/watch?v=mHtRCyFFG1E
உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் என்று சொல்லி யாரும் இப்படி பாடக்கூடும். இனிமைதான், ஆனால் சோகமாயிற்றே!!!
-
சந்திரன் பாடல் 56: "பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்"
--------------------------------------------------------------------------------------------
சி.க. நீங்களே கேட்டிருந்தீர்கள் - குலமகள் ராதையின் இரண்டாம் சந்திரன் பாடல் எங்கே என்று. இதோ அது. நடிகர் திலகத்தை காட்டாமலே சோகத்தைப் பிழிந்து கன்னடத்துப் பைங்கிளி கொடுத்த பாடல். பாடியவர்: P. சுசீலா. இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன். இசை: K.V. மஹாதேவன்.
காதலனை காணாமல் அவன் எங்கே போனாலும் தேடி போவேன் என்று காதலி பாடும் பாடல். முதலில் சந்திரன் என்று குறிப்பிட்டவர், அடுத்த அடியில் காதலனை கரையேறிய மீன் என்கிறார். இப்படியே பாடல் முழுதும் காதலனை மாற்றி மாற்றி சொல்லி தேடுவதாக கவியரசர் எழுதி இருக்கிறார். சோகம் என்றாலும் இசையரசியின் குரலில் என்ன சுகமாக இருக்கிறது!!!
பாடல் வரிகள்:
----------------------
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன்
இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் - அவன்
எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
கடலிலே மீன் பிடிக்க நானும் போன் - மீன்
கரையேறிப் போனதாக ஒருததி சொன்னாள்
கடலிலே மீன் பிடிக்க நானும் போன் - மீன்
கரையேறிப் போனதாக ஒருததி சொன்னாள்
படகிலே மனதை ஏற்றிப் பார்க்கப் போனேன்
படகிலே மனதை ஏற்றிப் பார்க்கப் போனேன் - அதைப்
பாறையிலே மோதும்படி ஒருத்தி சொன்னாள்
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
ஆலயத்தில் ஆண்டவனைப் பார்க்கப் போனேன் - அவள்
அர்த்த ஜாமப் பூஜையிலே பார்க்கச் சொன்னாள்
ஆலயத்தில் ஆண்டவனைப் பார்க்கப் போனேன் - அவள்
அர்த்த ஜாமப் பூஜையிலே பார்க்கச் சொன்னாள்
மாலை ஒன்று கையில் கொண்டு நானும் போனேன்
மாலை ஒன்று கையில் கொண்டு நானும் போனேன் - அவள்
மலரை மட்டும் உதிர்த்து விட்டுப் போகச் சொன்னாள்
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
காணொளி:
------------------
https://www.youtube.com/watch?v=WQj73XR67m0
-
பல்லாண்டு வாழ்க!
மஸ்கட்டின் தங்க மார்க்கெட்டே (பிஸ்கட் சின்னதா இல்ல?)
தமிழின் பெருமையை விண்ணுக்கு ஏவும் ராக்கெட்டே,
எழுத வேண்டும் எங்களுக்காக நீ மெனக்கெட்டே,
என்றே வேண்டுகிறோம் நின் கரம் தொட்டே.
(அட! எனக்கும் கவித வருதுங்கோ. சாமானியனான எனக்கும் ஒங்கள மாதிரி எழுத ஆசை. மன்னிச்சுடுங்க)
பிறந்த நாள் வாழ்த்துக்கள், சின்னக் கண்ணன்.
தாமதத்துக்கு மன்னிக்கவும். இப்போதுதான் பார்த்தேன்.
உங்களுடைய ஒரு பதிவில் ஓரிருக்கை சென்றிருந்தபோது கன்றுக்குட்டி ஒன்று உங்களைப் பார்த்து மிரள விழித்ததாக கூறியிருந்தீர்கள். ஓரிருக்கை செல்கிறீர்கள் என்றால்....... நீங்கள் காஞ்சிப் பெரியவரின் பக்தராக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். (எங்களுக்கும் காஞ்சியில் ஒரு பெரியவர் உண்டு)
எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ? இல்லையோ? மற்றவர் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பவன் நான். அந்த வகையில், காஞ்சிப் பெரியவர், பரமாச்சாரியாரின் அருளாசி என்றென்றும் உங்களுக்கு கிடைத்து, நலமோடும், வளமோடும் பல்லாண்டு வாழ்க.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
கல்நாயக்,
நிலா பாடல்கள் தொகுப்பு விறுவிறுப்பாக செல்கிறது. கண்ணகி படத்தில் கம்பீரக் குரலோன் (தோற்றமும்தான்) பி.யு.சின்னப்பா அவர்கள் பாடிய ‘சந்த்ரோதயம் இதிலே....’ பாடலையும் சேர்க்கலாம். இந்த படத்தை சிறுவயதில் நான் பார்த்திருக்கிறேன் (மறுவெளியீட்டில் கல்நாயக்).
எம்.கே.டி.யுடன் புரட்சித் தலைவர் நடித்த அசோக்குமார் பார்த்திருக்கிறேன். பி.யு.சின்னப்பாவுடன் புரட்சித் தலைவர் நடித்த ரத்னகுமார் பார்க்க ஆசை. டிவிடி கிடைக்கிறதா என்று தெரியவில்லை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
oru malai chandiran malarai is a great number. regularly featured in ceylon radio at that time.
-
ஒரு மாலை சந்திரன் மலரைத் தேடுது"// கல் நாயக்..வெகு நல்ல பாடல்.. நான் இப்போது தான் கேட்டேன்.. பார்த்திபன் தான் கொஞ்சம் கஷ்டம்!
//சி.க. நீங்களே கேட்டிருந்தீர்கள் - குலமகள் ராதையின் இரண்டாம் சந்திரன் பாடல் எங்கே என்று. இதோ அது. நடிகர் திலகத்தை காட்டாமலே சோகத்தைப் பிழிந்து கன்னடத்துப் பைங்கிளி கொடுத்த பாடல். பாடியவர்: P. சுசீலா. இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன். இசை: K.v. மஹாதேவன்.// நல்ல பாட்டு.. தாங்க்ஸ் கல் நாயக்..
**
கலை வேந்தன்.. //மஸ்கட்டின் தங்க மார்க்கெட்டே (பிஸ்கட் சின்னதா இல்ல?)// மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு..தங்க மார்க்கெட்டா இது கொஞ்சம் ஓவராக இல்லை..:) ஆனால் தினசரி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் வலையில்.//.(அட! எனக்கும் கவித வருதுங்கோ. // நல்லாவே இருக்குங்கோவ்.. :)
ஓரிருக்கை சென்றதாக முக நூலில் எழுதிய நினைவு..இங்கும் எழுதினேனா என்ன..(ஆக்சுவலா இப்போ அதன் பெயர் ஓரிக்கை)
(எங்களுக்கும் காஞ்சியில் ஒரு பெரியவர் உண்டு) // :) அந்தப் பெரியவர் முதலமைச்சராவதற்கு முதல் வாரமோ என்னமோ - எழுத்தாளர் ரா.கி ரங்கராஜன் ஒரு நாவல் தொடராக குமுதத்தில் எழுத ஆரம்பித்தார்.. ஆரம்பத்தில்கதா நாயகனின் பெயரை பெரியவர் நினைவாக வைத்து பின் அப்படியே வைத்து முழு நாவலையும் எழுதிவிட்டார் (இது அவரே எழுதியிருந்த விஷயம்) .;.வெகு அருமையான சரித்திர நாவல். விறுவிறுப்பாகவும் இருக்கும்..பெயர் அடிமையின் காதல்.. கதானாயகனின் பெயரைச் சரியாகக்கண்டு பிடித்தால் மதுராவில் உண்ணும் போது உங்களுக்கு ஒரு ஃபலூடா..::)
-
kalnayak ..
with ur permission posting my fav chandamama raave in tamil
https://www.youtube.com/watch?v=x1gE4-lQySc
-
ஹாய் ராஜேஷ்..கல் நாயக் கோபால்
ராஜேஷ்.. தங்கவெண்ணிலா வாவா இப்ப தான் கேட்கிறேன்.. நைஸ் மெலடி.. நல்லா இருக்கு..என்ன படம்..குட்டிப்பெண் மீனா தானே..
-
ராஜேஷ்,
மிக அருமையான பாடல். இப்போதுதான் கேட்கிறேன் முதல் முறையாக என்று நினைக்கிறேன். நிச்சயமாக இந்த பாடல் என்னுடைய நிலாப் பாடல் வரிசையில் வந்திருக்காது.நீங்கள் போட்டதே நல்லது.
சி.க.,
அந்த குட்டிப் பெண் மீனாதான்.அதன் அக்காவாக நடித்திருப்பவர் நித்யா (நடிகர் திலகத்தின் மகளாக தீர்ப்பு படத்தில் நடித்திருப்பார்.)
-
கலைவேந்தன்,
நீங்கள் சொல்லும் 'சந்திரோதயம் இதிலே' பாடல் நான் கேட்டதில்லை. நீங்கள் p.u. சின்னப்பா படத்தை காட்டி யார் இது என்று கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது. அவரின் எந்த படமும் நான் பார்த்ததில்லை. ஏன் தியாகராஜா பாகவதரின் எந்த படமுமே நான் பார்த்தது கிடையாது. ஆனால் அடையாளம் தெரியும். அதனால் நான் எந்த குமாரின் (அதுதான் அசோக்குமார் மற்றும் ரத்னகுமார்) படங்களையும் நான் பார்த்ததில்லை.
கண்ணகி படத்தை மறு வெளியீட்டிலும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லும் போது படத்தின் செல்வாக்கு புரிகிறது. இந்த பாடல் பற்றிய விவரங்கள் கிடைக்கும்போது அதைப் பற்றி எழுதுகிறேன். நன்றி.