சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், நாளை (26/11/2016) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடல்கள் மட்டும் இடம் பெறும் . அதன் விளம்பர பேனர்/சுவரொட்டிகளை காண்க .
http://i65.tinypic.com/33wmerd.jpg
Printable View
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், நாளை (26/11/2016) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடல்கள் மட்டும் இடம் பெறும் . அதன் விளம்பர பேனர்/சுவரொட்டிகளை காண்க .
http://i65.tinypic.com/33wmerd.jpg
http://i63.tinypic.com/wlvp1d.jpg
வண்ணத்திரை வார இதழ்
நடிகர் சிவகுமார் பேட்டி .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ,காவல்காரன், இதய வீணை ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளேன்.
ஏழு லட்சம் வாங்கும் மக்கள் திலகம் , ஏழாயிரம் வாங்கும் என்னை , அன்புடன்
வரவேற்று, உபசரித்து ,அருகில் அமர்ந்து அரவணைப்போடு பேசிய நாட்கள்
மறக்க முடியாதவை .
சினி சாரல் மாத இதழ் -நவம்பர் 2016
http://i67.tinypic.com/2zohtm0.jpg
http://i68.tinypic.com/20hvcyh.jpg
சினி சாரல் மாத இதழ் -நவம்பர் 2016
இயக்குனர் ப.நீலகண்டன் இயக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.படங்கள் பட்டியல்
1.சக்கரவர்த்தி திருமகள் -1957- இசை -ஜி.ராமநாதன்
2.திருடாதே -1961-இசை -எஸ்.எம்.சுப்பையா நாயுடு
3.நல்லவன் வாழ்வான் -1961- தயாரிப்பு / இயக்கம்.-இசை.டி.ஆர். பாப்பா
4.கொடுத்து வைத்தவள் - வசனம் /இயக்கம் -இசை.கே.வி.மகாதேவன்
5.காவல்காரன் -1967-இசை எம்.எஸ்.வி.
6.கணவன் -1968-இசை எம்.எஸ்.வி.
7.கண்ணன் என் காதலன் 1968-இசை எம்.எஸ்.வி.
8.என் அண்ணன் -1970-இசை கே.வி.மகாதேவன்
9.மாட்டுக்கார வேளாண் -1970-இசை கே.வி.மகாதேவன்
10.குமரிக்கோட்டம் -1971-இசை எம்.எஸ்.வி.
11.ஒரு தாய் மக்கள் -1971-இசை எம்.எஸ்.வி.
12.நீரும் நெருப்பும்-1971-இசை எம்.எஸ்.வி.
13.சங்கே முழங்கு -1972-இசை எம்.எஸ்.வி.
14.ராமன் தேடிய சீதை -1972-இசை எம்.எஸ்.வி.
15.நேற்று இன்று நாளை -1974-இசை எம்.எஸ்.வி.
16.நினைத்ததை முடிப்பவன் -1975-இசை எம்.எஸ்.வி.
17.நீதிக்கு தலை வணங்கு -1976-இசை எம்.எஸ்.வி.
சாதாரண நடிகையான சச்சு எங்கே? மக்கள் தலைவர் எங்கே?
சச்சுவின் பாட்டி, சச்சுவுக்கு புரட்சித் தலைவரிடம் ஹீரோயின் சான்ஸ் கேட்டதற்கு, ‘ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கு கொஞ்சம் போகட்டும்’ என்று மக்கள் திலகம் சொன்னதற்காக சச்சு கோபித்துக் கொண்டு போயிருக்கிறார். சச்சுவை சமாதானப்படுத்தும் வகையில் பல வருடங்கள் கழித்து அதை நினைவில் வைத்திருந்து ‘‘நான் அன்னிக்கு அப்படி சொன்னேன்னு கோபமா? கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாம்ல’’ என்று புரட்சித் தலைவர் கேட்கிறார்.
சச்சுவை சமாதானப்படுத்த வேண்டும் என்று அவருக்கு அவசியமே இல்லை. யாரையும் காயப்படுத்தாத பொன்மனச் செம்மல் மக்கள் திலகம். சச்சு கொஞ்ச காலம் காத்திருந்தால் நிச்சயம் அவருக்கு தனது படத்திலேயே ஹீரோயின் வேடத்தை தலைவர் கொடுத்திருப்பார். காமெடி நடிகையான பிறகு எப்படி அவரை தலைவர் தனது படத்தில் ஹீரோயினாகப் போட முடியும்? மனோரமா மக்கள் திலகத்துக்கு ஜோடியாக நடித்தால் எப்படி இருக்கும்? நாம் ரசிப்போமா?
சச்சுவை சொல்லியும் தவறில்லை. காத்திருக்கும் நிலையில் அவரது குடும்ப சூழல் இல்லை என்று அவரது பேட்டியில் இருந்து தெரிகிறது. அப்படியும், அவரை மட்டம் தட்டாமல் ‘காமெடி உனக்கு நன்றாக வருகிறது, அதுல பெரிய அளவுல வருவ’ என்று சொல்லி அப்போதும் அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார் நம் மனிதநேய மாமனிதர்!
சச்சுவின் அக்கா மாடி லட்சுமியி்ன் வாழ்வும் அஸ்தமித்துப் போகாமல் வாழ்வு கொடுத்திருக்கிறார் மக்கள் தலைவர். பின்னாளில் அதே மாடி லட்சுமி தலைவரை கடுமையாக தாக்கிப் பேசியிருக்கிறார். அதைப் பற்றி எல்லாம் தலைவர் கவலைப்பட்டதே இல்லை. அவரால் உயர்ந்த பலர் பின்னர் அவரையே தாக்கியிருக்கிறார்கள்.
‘‘என்னால்தான் உனக்கு இந்த வாழ்வு வந்தது, நான் உனக்கு ஒரு காலத்தில் எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறேன். நன்றி மறந்துவிட்டாயே’’ என்று யாரையும் புரட்சித் தலைவர் சொல்லிக் காட்டியதே இல்லை.
அரசியல், சினிமா என்று புரட்சித் தலைவர் கால்வைத்த துறை எல்லாம் வெற்றி. ஆனாலும் அவர் ஆணவம் கொண்டது இல்லை. தூற்றியவர்களுக்கும் உதவி செய்யத் தவறியது இல்லை. இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்று எதிர்கால உலகம் ஆச்சரியப்படும். அப்படிப்பட்ட மனிதர் குல மாணிக்கத்தின் ரசிகர்கள், தொண்டர்கள் என்பதில் நாம் கர்வம் கொள்ளலாம்.
புரட்சித் தலைவர் பற்றிய பத்திரிகை செய்திகளை தவறாமல் பதிவிடும் நண்பர் லோகநாதன் சார் அவர்களுக்கு நன்றி.