-
எண்ணங்கள்: இடைவேளை இல்லாத தமிழ் சினிமா சாத்தியமா?
சமீபத்தில் 91 நிமிடங்களே ஓடும் கிராவிட்டி என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 50 நிமிடங்கள் கடந்ததும் திடீரென இடைவேளை (படத்தில் இல்லாத) விடப்பட்டுப் படத்துடன் ஒன்றியிருந்த அனைவரையும் தொந்தரவு செய்தது. ஆனால் பார்வையாளர்களால் ஒன்றும் செய்ய முடியாது. திரையரங்குகளின் பொருளாதாரம் இடைவேளை இல்லாமல் படத்தை ஓட்டினால் தாங்காது. 91 நிமிடப் படங்களுக்கே இடைவேளை என்ற தடை இல்லாமல் ஓடக்கூடிய வாய்ப்பு இல்லாதபோது, குறைந்தது 125 முதல் 165 நிமிடம் ஓடும் நம் படங்களுக்கு இடைவேளை இல்லாமல் எடுக்க முடியாது.
இடைவேளை இல்லாமல் வரும் ஹாலிவுட் படங்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் இடைவேளை விடும் பழக்கம் உள்ள நம் ஊரில், தமிழ்ப் படங்களுக்குச் சரியான இடத்தில் இடைவேளை விட வேண்டியது அவசியமாகிறது. இந்த இடைவேளை வருவதால்தான் ஒரு படத்தை மொத்தமாகத் தொடர்ந்து பார்த்து அப்படத்தைப் பற்றிய முடிவெடுக்காமல், முதல் பாதி முடிந்தவுடன் ஒரு அபிப்பிராயம், இரண்டாம் பாதி முடிந்தவுடன் இன்னொரு அபிப்பிராயம் மற்றும் மொத்தப் படத்துக்குமான ஒரு அபிப்பிராயம் எனப் பார்வையாளர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் வழக்கம் இருந்துவருகிறது
படங்களின் வெற்றி இப்படிப் பிரித்துப் பார்க்கும் ‘மவுத் டாக்’ கருத்துகளுக்கு ஏற்ப, கீழே கண்டுள்ள அட்டவணையில் பார்வையாளர்களின் மதிப்பீடுகள் மாறுவதை நாம் தொடர்ந்து காணமுடியும்.
ஒவ்வொரு படத்துக்கும், இவ்வாறு இரண்டு பாதிகளின் முடிவில் ஒரு எண்ணம் பார்வையாளர்களுக்கு ஏற்பட்டு, படத்தைப் பற்றி ஒரு மொத்தக் கருத்தும், அதன் அடிப்படையில் வியாபாரக் கருத்தும் வெளிவந்து படத்தின் வெற்றி தோல்விகள் நிர்ணமாகின்றன.
இந்த அட்டவணையைக் கவனித்தால் ஒன்று புலப்படும். ஒரு படம் முதல் பாதியில் சொதப்பியிருந்தாலும், இரண்டாம் பாதி, பார்வையாளர்களைத் திருப்திபடுத்தினால் அந்தப் படத்திற்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
ஆனால் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்திற்கு, முதல் பாதியும், இரண்டாம் பாதியும் நன்றாக அமைவது அவசியமாகிறது. அது முடியாவிட்டால், குறைந்தது இரண்டாம் பாதியாவது சிறப்பாக வந்திருந்தால், அரங்கைவிட்டு வெளியே செல்லும் மக்கள் திருப்தியுடன் செல்வார்கள், படத்தைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்களும் ’ ‘மவுத் டாக்’காக வெளிவரும். சில படங்களைக் கடைசி 20 நிமிடம் அல்லது கிளைமாக்ஸ் காட்சிகள்கூடக் காப்பாற்றும். எனவே, எப்படி ஒரு படத்தை முடிக்கிறோம் என்பதைப் பொறுத்தும் படத்தின் தலையெழுத்து மாற வாய்ப்புள்ளது.
வழிகாட்டும் திரைக்கதை
இவ்வாறு, முதல் பாதி இரண்டாம் பாதி என இரண்டு விதமாக ஒரு படத்தை மக்கள் பிரித்துப் பார்த்துக் கருத்து சொல்லும் நம் நாட்டில், உலக வணிக சினிமாவின் பிதாமகன் ஸிட் ஃபீல்ட், ஒரு நல்ல, சுவாரசியமான திரைக்கதைக்கு இருக்க வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்
ஸிட் ஃபீல்டி-ன் திரைக்கதைக் கட்டமைப்பு 120 பக்கங்களுக்குள் அடங்கக்கூடிய, இடைவேளை இல்லாமல் சொல்லப்படும் 90 முதல் 110 நிமிட ஹாலிவுட் படங்களுக்கு ஏதுவானது. நம் படங்கள் இடைவேளையுடன் குறைந்தது 125 முதல் 165 நிமிடங்கள் ஓட வேண்டியவை. சிறப்பான கதையுடன், 4 அல்லது 5 பாடல் காட்சிகளும், 2 முதல் 4 சண்டை காட்சிகளும், போதுமான நகைச்சுவைக் காட்சிகளும், ஒரு ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியோ தரும் இடைவேளைக் காட்சிகளும் நம் வெகுஜனப் படங்களுக்குத் தேவை. எனவே ஸிட் ஃபீல்ட் வலியுறுத்தும் திரைக்கதை கட்டமைப்பை நமது தேவைக்கு ஏற்பக் கொஞ்சம் மாற்ற வேண்டியது அவசியமாகிறது.
முதல் பாதியில் , கதாபாத்திரங்களைச் சரியாக அறிமுகம் செய்து, கதைக் களத்தை முறைப்படி நிலைநாட்டி, ஒரு போராட்டத்தை முன்வைத்துக் காட்சிகளை நகர்த்திச் சரியான ஒரு எதிர்பார்புடன் இடைவேளை விட வேண்டியது இங்கே அவசியம். இடைவேளைக்குப் பின், அந்தப் போராட் டத்தின் அவசியத்தை உணர்த்தும் காட்சிகளும், அந்தப் போராட்டத்தினால் வரும் விளைவுகளைப் பற்றிய காட்சிகளையும் கொண்டு படத்தை ஒரு சிறப்பான முடிவை நோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும்.
மேலே சொன்ன தேவை களைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்படும் ஒரு திரைக்கதையின் கட்டமைப்பு மேலே உள்ள அட்டவணையில் காட்டப்படுவது போல், ஸிட் ஃபீல்ட்-ன் கட்டமைப்பில் இருந்து சிறிது மாறும்.
இது ஸிட் ஃபீல்ட் காட்டும் ஹாலிவுட்டின் மூன்று அங்கச் செயல்பாடுகள் கொண்ட திரைக்கதைகள் நம்மைத் திருப்திப்படுத்தாது. எனவே மேலே சொன்ன 6 செயல்பாடுகளை மனதில் வைத்துக் கதைகளைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
“மக்களுக்குத் தற்போது பத்து நிமிடங்களுக்கு ஒரு திருப்பமும், கிளைமாக்ஸ் போன்ற காட்சிகளும் திரைப்படங்களில் தேவைப்படுகிறது.” இது 1970-களில் ஒரு பேட்டியில், எம்.ஜி.ஆர். சொன்னது. 40 வருடங்களுக்குப் பிறகும், மக்களிடம் இந்த எதிர்பார்ப்பில் எந்த மாற்றமும் இல்லை.
மேலே சொன்ன 6 செயல் பாடுகளை மனதில் வைத்து, திரைக்கதையில் மாற்றங்கள் செய்து, படங்களைச் சிறப்பாக எடுத்தால், இரண்டு பாதியிலும் மக்களை மகிழ்விக்கும், வெற்றி பெரிதாகும்.
courtesy the hindu tamil
-
http://i58.tinypic.com/2i899mx.jpg
திரு.பி.எஸ். ராஜு திரு.சொக்கலிங்கம் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கும் காட்சி.
அருகில்: திருவாளர்கள்:செல்வகுமார், இளங்கோ, பாண்டியராஜ், யுகேஷ்பாபு , சுப்பிரமணி, சங்கர், பாண்டியன், ஹயாத், சங்கர் மற்றும் பலர்.
-
திரைப்பார்வை: முதல்வர் நாற்காலியின் நான்காவது கால்!
"என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எதுவென்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்" என்று முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். சொல்லும் அளவுக்கு அவரது பெரும்பாலான சமூக பாடல்கள் அமைந்திருந்தன.
http://i1170.photobucket.com/albums/...psdb0a0c8a.jpg
courtesy the hindu tamil
-
அதே நிறம்… அதே குணம்… அஜீத் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை
‘அதே நிறம்… அதே குணம்… அவரை போலவே வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகிறேன் ’
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அஜீத்தின் பிறந்த நாளன்று நாளிதழ் ஒன்றில் டைரக்டர் சரண் கொடுத்த விளம்பரம் இது. முன்பெல்லாம் எந்த நடிகரின் பிறந்த நாள் வந்தாலும் அவருக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து மகிழ்வித்த வழக்கமிருந்தது. இப்போதும் அதற்கு நிறைய பேர் ஆசைப்பட்டாலும், தயாரிப்பு செலவை குறைக்கும் விதத்தில் சங்கம் போட்ட கட்டுப்பாடு காரணமாக இந்த வழக்கம் ஒழிந்திருக்கிறது. ஒரு வேளை அது தொடர்ந்திருந்தால், அஜீத்தின் பிறந்த நாளான இன்று மட்டும் ஒவ்வொரு நாளிதழும் ஐந்து கிலோ எடையுள்ளதாக அமைந்திருக்கும்.
சரி… அவரைப்போலவே வெற்றியும் புகழும் அடையட்டும் என்று சரண் வாழ்த்தினாரே? அந்த ‘அவர் ’ யார்? சந்தேகமென்ன… புரட்சித்தலைவர் எம்ஜிஆர்தான். நிறத்திலும் சரி, குணத்திலும் புரட்சித் தலைவருக்கு நிகரானவராக இன்று திரையுலகத்தில் விளங்கும் ஒரே மனிதர் அஜீத் என்றால், அது கடைந்தெடுத்த ஜால்ராவும் அல்ல. கட்டுப்பாடுகள் மீறிய வார்த்தைகளும் அல்ல. தமிழ்சினிமாவோடு நெருங்கிய தொடர்பிலிருப்பவர்களுக்கு அதன் உண்மை புரியும்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பே கருணையுள்ளம் கொண்டவராக அவர் இருந்திருக்கிறார். அதனால்தான் லட்சக்கணக்கானோர் வாசிக்கக் கூடிய நாளிதழில் இப்படியொரு அழுத்தமான வார்த்தைகளுடன் மிக தைரியமாக விளம்பரம் கொடுக்க முடிந்தது சரணால். அப்போதே அப்படியென்றால், இப்போது எவ்வளவு பெரிய வள்ளல் என்ற நிலையை அவர் எட்டியிருப்பார்? அதற்கு ஏராளமான உதாரணங்கள் இங்கே இருந்தாலும், வெல்லம் இனிக்கும் என்பதை எத்தனை முறைதான் சொல்வது? அதனால் அஜீத் பற்றிய வேறு சில புதிய விஷயங்களுடன் அமைந்த கட்டுரை இது.
எதிராளியின் முகம் பார்த்தே அவர் எதற்காக நம்மை நாடி வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிற வழக்கம் புரட்சித்தலைவருக்கு உண்டு. அவர் கிளம்பும்போது, தேடி வந்தவரின் கையில் வேண்டியதை கொடுத்தனுப்புகிற ஸ்டைல் எம்ஜிஆருடையது.
அந்த பண்பு அஜீத்திடம் இயல்பாகவே அமைந்துவிட்டதாக கூறுகிறார்கள் அவரால் பயனடைந்தவர்கள். ஒன்றல்ல… இரண்டல்ல… ஓராயிரம் கதைகள் இருக்கின்றன அவரது உதவிய உள்ளம் பற்றி. அவரிடம் ஏதோ ஒரு வேலையாக பேசப் போயிருந்த நண்பர் ஒருவரின் அனுபவம் இது.
சில ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திக்க போயிருந்தேன். அப்போதுதான் புதிதாக ஒரு செல்போன் வாங்கியிருந்தார் அவர். அவரது கண்களை பார்த்து நான் பேசிக் கொண்டேயிருந்தேன். ஆனால் அதையும் மீறி என் கண்கள் அவரது செல்போனை அடிக்கடி நோட்டம் விட்டுக் கொண்டேயிருந்தது. எவ்வளவு அழகாயிருக்கு? எங்கே வாங்கினீங்க சார்? என்றேன். அவரும் ஏதோவொரு நாட்டில் வாங்கியதாக கூறிவிட்டு பேச்சை தொடர்ந்தார். அதற்கப்புறம் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசியிருப்போம்.
விடை பெறும் நேரம் வந்தது. ‘சார்… வர்றேன்’ என்று கூறிவிட்டு எழுந்தேன். ‘ஒரு நிமிஷம் இருங்க’ என்றார். படக்கென்று அந்த செல்போனிலிருந்த சிம் கார்ட்டை கழற்றினார். பிறகு அந்த போனை அப்படியே என் கையில் வைத்து, ‘எடுத்துட்டு போங்க’ என்றார். நான் ஒரு கணம் ஆடிப் போனேன். ம்ஹூம் என்று நான் மறுத்த போதும் அவர் விடவில்லை. அதுதான் அஜீத். கொடுக்கணும்னு நினைச்சுட்டா ஒரு நிமிஷம் கூட யோசிக்க மாட்டார் என்றார் அந்த நண்பர்.
செல்போன் கொடுக்கிற விஷயத்தில் மட்டுமல்ல, ஒரு டைரக்டருக்கு படம் கொடுக்கிற விஷயத்தில் கூட அவர் அப்படிதான். அவருக்கு கண், மூக்கு, வாய் எல்லாம் மனசு மட்டும்தான் அது சொல்வதை மட்டுமே கேட்பார் அஜீத்.
-ஆர்.எஸ்.அந்தணன்
courtesy - net
-
http://i1170.photobucket.com/albums/...psa360c0d2.jpg
IN SINGLE DAY FOUR MOVIES TELECASTED BY KARUNATHI FAMILY TV'S THANKS FOR MURASU AND SUNLIFE CHANNEL
-
INDRU PIRANTHA NAAL KONDADUM NAMTHU THIRI NANBAR THIRU BOOMINATHAN AANDAVAR AVARGALUKKU EN PIRANTHA NAAL VALTHUKKAL ENGAL KULATHEIVAM RAMAPURAM MAGAN AVARGALIN AASIYODU NEENGAL VALANUM PALLANDU
http://i1170.photobucket.com/albums/...ps9f15951b.jpg
-
-
-
சோர்ந்து போனவர்களை தட்டி எழுப்பி , மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாழ்க்கையில் நம்பிக்கையும் , விடா முயற்சியும் தனி மனிதனுக்கு தேவை என்று தன்னுடைய படங்கள் மூலம் பல காட்சிகளை
அமைத்து சமுதாயத்தில் பலர் முன்னேற மக்கள் திலகத்தின் படங்கள் இருந்தது என்று பல சமூக ஆவலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் .
இந்திய சினிமாவில் எம்ஜிஆரின் சமூக படைப்புகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது .எம்ஜிஆரின் பட பாடல்கள் மொழி மாற்றம் செய்து பல தனியார் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எம்ஜிஆரின் பாடல்களை திரையிட்டு அவர்களுக்கு மனதில் தெளிவும் , அமைதியும் ,ஏற்பட வழி செய்கிறார்கள் .அந்த அளவிற்கு எம்ஜிஆரின் நடிப்பும் பாடல்களும் இருந்ததை பாராட்டுகிறார்கள் .
மனதில் ஒருவித அச்சம் .
ஏமாற்றங்கள்
நினைத்து நடக்காமல் போனது
மற்றவர்கள் நிராகரிப்பு
பொறாமை
இயலாமை
ஏக்கம்
வரிந்து கொண்டு போர்ரடுவது
முன்னிலை படுத்தி போராட்டம்
வசவுகள் - ஏவுகணைகள் ]
ஆத்திரம்
நிர்பந்தம்
திணறல்
அடக்க முயற்சி
அடங்கி போதல்
என்ற குணங்கள் கொண்டோர் இன்றைய சமுதயாத்தில் தங்களை வருத்தி கொண்டு வாழும் அவல நிலைக்கு உள்ளதை
எண்ணித்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருடைய படங்களில் பாடல்களையும் , காட்சிகளையும் அமைத்து மக்கள்
திருந்திட வழி செய்தார் . பலரும் மக்கள் திலகத்தின் அறிவுரைகளை ஏற்று கொண்டார்கள் .
ஒரு சிலர் ...............
''இவர் திருந்தவில்லை ...மனம் வருந்தவில்லை ..அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ''
-
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் திருநாள் இன்று
37 ஆண்டுகள் நிறைவு நாள் .
தமிழக முதல்_அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்
14 பேர் கொண்ட மந்திரிசபை தமிழக முதல்_அமைச்சராக அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜுன் 30_ந்தேதி பதவி ஏற்றார். 1977 சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. அதைத்தொடர்ந்து, மந்திரிசபை அமைக்க எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பட்வாரி அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, கவர்னரை எம்.ஜி.ஆர். சந்தித்து, அமைச்சர்களின் பட்டியலை கொடுத்தார். அமைச்சர்களின் பெயர்களும், இலாகா விவரமும் வருமாறு:_
1. எம்.ஜி.ஆர் _ முதல்_அமைச்சர்.
2. நாஞ்சில் மனோகரன் _ நிதி.
3. நாராயணசாமி முதலியார் _ சட்டம்.
4. எட்மண்ட் _ உணவு
5. பண்ருட்டி ராமச்சந்திரன் _ பொதுப்பணி.
6. ஆர்.எம்.வீரப்பன் _ செய்தி, பொதுமக்கள் தொடர்பு
7. அரங்கநாயகம் _ கல்வி.
8. பெ.சவுந்தரபாண்டியன் _ அரிஜன நலம்.
9. காளிமுத்து _ ஊராட்சி.
10. ராகவானந்தம் _ தொழிலாளர் நலம்.
11. பொன்னையன் _ போக்குவரத்து.
12. பி.டி.சரசுவதி _ சமூக நலம்.
13. ஜி.குழந்தைவேலு _ விவசாயம்.
14. கே.ராஜா முகமது _ கைத்தறி.
(எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)
பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8_15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள். கூடியிருந்தவர்கள் "எம்.ஜி.ஆர். வாழ்க" என்று குரல் எழுப்பினர். 9_15 மணிக்கு கவர்னர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.
கவர்னர் வந்ததும், முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்ற மந்திரிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். கவர்னர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து கவர்னருக்கு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் கவர்னர் கை குலுக்கினார். காலை 9_15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.
கவர்னர் பட்வாரி, முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அந்த வாசகங்களை எம்.ஜி.ஆர். தமிழில் கூறி, பதவி ஏற்றார். அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி பத்திரங்களில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டார்.
பின்னர், அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், கவர்னர் பட்வாரி அமைச்சர்களுடன் "போட்டோ" படம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு கவர்னர் புறப்பட்டுச் சென்றார். பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் வந்திருந்தார். மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினரும் வந்திருந்தார்கள்.
ராஜாஜி மண்டபத்திலிருந்து திறந்த வேனில் அண்ணா சிலைக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மீது நின்று எம்.ஜி.ஆர். கைகூப்பி வணங்கினார். அப்போது, கூடியிருந்தவர்கள் "புரட்சித் தலைவர் வாழ்க" என்று குரல் எழுப்பினர். அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசினார்.
அவர் கூறியதாவது:_
அன்புக்குரிய தாய்மார்களே, மரியாதைக்குரிய பெரியவர்களே, ரத்தத்தின் ரத்தமான அன்புக்குரிய உடன் பிறப்புக்களே! நமது இதய தெய்வமான பேரறிஞர் அண்ணா மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். அங்கே நடந்தது அரசாங்க விழா. அது தவிர்க்க முடியாதது. இங்கு உங்களின் கட்டளையை எதிர்பார்த்து "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று அண்ணா சொன்னது போல் உங்கள் முன்பு நாங்கள் அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கிறோம்.
அமைச்சர்கள் சார்பாகவும், அண்ணா தி.மு.க. சார்பாகவும் தமிழ் மக்களுக்கும் பல நாடுகளில் பல மாநிலங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நான் இங்கு ஒரு செய்தியை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.
மக்களின் எண்ணத்தையும், விருப்பத்தையும் சட்டமாக்கவும், தேவையை நிறைவேற்றவும்தான் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகிறார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா உணர்த்தி இருக்கிறார். ஆகவே, லஞ்சமற்ற, ஊழலற்ற, நிர்வாக தலையீடு இல்லாத, நீதிமன்றத்தில் குறுக்கீடு இல்லாத "உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்" என்ற லட்சியங்களில் உயிரை கொடுத்தாலும், வசதியை இழந்தாகிலும், எதிர்ப்புகளை எதிர்த்து நின்று கடமைகளை நிறைவேற்றுவோம் என்பதை அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன்.
எங்களது பணி தொடர உங்கள் நல்லாசியை வழங்குங்கள். அண்ணா வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!
இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
பின்னர், அரசு தலைமைச் செயலகம் உள்ள கோட்டைக்கு எம்.ஜி.ஆர். காரில் சென்றார். 11_15 மணிக்கு, முதல்_அமைச்சருக்கான அறைக்குச் சென்றார். அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்றார். அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்ந்தார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள். அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.
எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும். ஜேப்பியார் "நெருக்கடி நிலை"யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது "மிசா"வில் கைது செய்யப்பட்டார். மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார்.
அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலையானபோது, அவரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது. 1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்.