https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d9&oe=5ECF855A
Printable View
திரு. V.K. ராமசாமி அவர்கள்
நினைத்துப் பார்த்தால் சிவாஜியுடன் எனது நட்பு இறைவனின் அருள் தான் என்று தோன்றுகிறது.
அவரது முதல் படமான "பராசக்தி"யில் நானும் நடித்தேன். அப்போதிலிருந்தே எங்களுக்குள் பழக்கம் உண்டு.
வாழ்க்கையில் அவர் மாதிரி ஒரு கலை வெறியரை நான் பார்த்ததில்லை. தினம், தினம் இரண்டு படங்கள் அவருக்கு புக் ஆகிக் கொண்டே இருக்கும். இடைவிடாமல் நடித்துக் கொண்டே இருப்பார்.
சாதாரணமாக நடிகர்கள் படத்தை ஒப்புக் கொள்வதற்கு முன் பண விஷயத்தைத் தான் முதலில் பேசிக் கொள்வார்கள். ஆனால் பணத்தைப் பற்றி கவலையே கொள்ளாமல், நடிப்பில் மட்டுமே சிந்தனையை செலுத்தியவர் அவர் மட்டும் தான்.
என் ஆசை... ஒரு நாள் கூட நடிக்காமல் சும்மா இருக்கக் கூடாது என்பார். அது அவரது தனிப்பட்ட விஷயம் என்றாலும், அதனால் பயனடைந்தவர்கள் எத்தனைப் பேர் என்பதை எண்ணிப் பார்க்கின்றேன்.
இடைவிடாமல் அவர் நடித்துக் கொண்டே இருந்ததால் தொடர்ந்து பலருக்கு வேலை கிடைத்துக் கொண்டே இருந்தது.
மூன்றாம் மனிதர் அறியாமல் எத்தனையோ பேருக்கு அவர் வாரி வழங்கியிருக்கின்றார் என்பதை நான் அறிவேன்.காமராஜரை தலைவராக ஏற்றுக் கொண்ட கணம் முதல் காங்கிரஸ் கட்சிக்கும் அவர் நிறைய உதவியிருக்கிறார்.
வீடுகளில் எப்போதாவது யாருக்காவது விருந்து வைப்போம். ஆனால், தினசரி விருந்து நடக்கிற வீடு சிவாஜியுடையது தான்.! குறைந்தது ஐம்பது பேராவது தினம் அவர் வீட்டில் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள்!.
நான் எனது வீட்டில் சாப்பிட்டதை விட சிவாஜியுடன், அவர் வீட்டில் சாப்பிட்டது தான் அதிகம்!.
நல்ல கலைஞர்களுடன் நெருங்கி இருப்பதை அவர் மிக விரும்புவார். உலக சினிமாவின் சாதனைகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு விட வேண்டும் என்பதில் அவருக்குள்ள ஆர்வம் கொஞ்சநஞ்சமல்ல.
தனது தனித்துவம் வாய்ந்த நடிப்புத் திறனுக்காக அவர் எத்தனை தூரம் தன்னை வருத்தி்க் கொண்டு உழைப்பவர் என்பதை நான் அறிவேன்.ஆனால் ஒரு கட்டத்தில் எல்லோரையும் விட உயர்ந்த நடிப்புத்திறனை வெளிக்காட்டி தன்னிகரில்லாதவராக அவரால் ஒளிவீசிக் கொண்டு நிலைத்திருக்க முடிந்ததென்றால் அதற்கு காரணம் ஒன்று தான்
அவரது "தொழில் பக்தி".....
திரு. V.K.ராமசாமி அவர்கள், பத்திரிகை பேட்டியில்....
Thanks Vijaya Raj Kumar
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே, நடுநிலையாளர்களே, ஊடக நண்பர்களே,
ஏதாவது ஒரு படத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தால், சினிமாவில் வீர வசனம் பேசும் நடிகர்கள், அந்த...ர் பல்டி அடித்து,
உடனே... முதலமைச்சரையோ அல்லது அமைச்சரையோ சந்தித்து, சமாதானமாகி விடுகிறார்கள்.
எனக்கு தெரிந்து நடிகர்திலகம் நடித்த
தியாகி திரைப்படம் வெளியாவதில் அன்றைய அரசு பயங்கர எதிர்ப்பு தெரிவித்தது.
படம் வெளியாவதில் தாமதமும் ஏற்பட்டது.
அதில் வரும் பாடல் வரிகள்
வேட்டைக்காரன் கோட்டையிலே
வச்சது தான் சட்டமடி...
வேடிக்கையா வாடிக்கையா
போட்டது தான் திட்டமடி..
ஆனாலும், நடிகர்திலகம் அவர்கள் எவரையும் சந்திக்கவில்லை, யாரையும் தாஜா செய்யவில்லை.
சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும், தன்மானத்தோடு வாழ்ந்த ஒரே தலைவன் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் மட்டுமே.
(courtesy net)
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன் நன்றி : பம்மலார்.
கலைத்தெய்வம் இதழிலிருந்து)
பாவேந்தர் பாரதிதாசனின் குயில் பத்திரிகையிலிருந்து....
கேள்வி :
சிவாஜி கணேசனுக்கு திருச்சி நகரசபை வரவேற்பளித்தது பற்றி உங்கள் எண்ணம் என்ன?...
பதில் :
இலக்கம் இலக்கமாகக் கல்வி முதலியவற்றிற்கு வாரிக் கொடுத்த, கொடுத்துவரும் கணேசனுக்கு வரவேற்பளிக்காவிடில் திருச்சி நகரசபை இருந்தென்ன! தொலைந்தென்ன!