நேற்று 17.04.2011 ஞாயிறு மாலைக் காட்சியில் நம்முடைய மய்யம் நண்பர்கள் குழுவாக அமர்ந்து திருநாவுக்கரசரின் தரிசனம் கண்டோம். பாலா சார் தம்முடைய பல அலுவல்களுக்கிடையிலும் சனி யன்று மாலைக் காட்சிக்கு வந்திருந்தார். அன்று மாலையும் சிறப்பாக இருந்தது. ஒய்.ஜி.மகேந்திரா, நம் மய்ய உறுப்பினர் மோகன் ராமன் சார், கவிதாலயா கிருஷ்ணன் உட்பட பலர் வந்திருந்தனர். அனைவரையும் விட திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி அவர்கள் தம் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் காட்சிக்கு வந்திருந்தது சிறப்பாகும். மகேந்திரா அவர்களின் சகோதரர், திருமதி மதுவந்தி அருண் என்று அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் யாவரும் வந்திருந்தனர்.
வழக்கம் போல், ஞாயிறு மாலை அளப்பரை அட்டகாசம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். 67ல் நான் சாந்தியில் பார்த்ததற்கும் நேற்று பார்த்ததற்கும் எவ்வளவு வித்தியாசம்... அப்போது விசில் ஒலி கூட வராது. கைதட்டல் தான் விண்ணை அதிர வைக்கும். ஆனால் 44 ஆண்டுகளில் ரசிகர்களின் உற்சாகமும் ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே போவது மலைக்க வைக்கிறது, வியக்க வைக்கிறது. அருகாமையில் உள்ள ஒரு உணவு நிறுவன ஊழியர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் வாய் விட்டு சொல்லியும் விட்டனர். சிவாஜிக்கு இன்னும் ரசிகர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்பதே அவர்களின் ஆவல்..
நம்முடைய முரளிசாரின் கைங்கரியத்தில் அவருடைய புகைப்படக் கருவியின் உபயத்தில் இதோ சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.
நன்றி முரளி சார், உடனே அனுப்பி வைத்ததற்கு.
http://4.bp.blogspot.com/-3crcg7SNOo...0/TMSTVC01.jpg
http://1.bp.blogspot.com/-6xqrhMNMTU...0/TMSTVC02.jpg
http://1.bp.blogspot.com/-ij2i2CXqSv...0/TMSTVC03.jpg
http://1.bp.blogspot.com/-DDfNTF4guh...0/TMSTVC04.jpg
[IMG]http://2.bp.blogspot.com/-
அன்புடன்
raghavendra