வருடங்கள் போனாலும் வாழும் கவிதை
பருவத் திளமையாய்ப் பார்
புதுவருட நல் வாழ்த்துக்கள்.. டோண்ட் பிஎம் மின்னா ஒங்கள ப்ரைம் மினிஸ்டரா ஆக்கக் கூடாதா..ஏஏஏன்..(தி.மோ மனோரமா போல)
Printable View
வருடங்கள் போனாலும் வாழும் கவிதை
பருவத் திளமையாய்ப் பார்
புதுவருட நல் வாழ்த்துக்கள்.. டோண்ட் பிஎம் மின்னா ஒங்கள ப்ரைம் மினிஸ்டரா ஆக்கக் கூடாதா..ஏஏஏன்..(தி.மோ மனோரமா போல)
மனோரமாவுக்கு கம்ப்யூட்டர் பத்தி தெரியுமான்னு தெரியாது..ஆனா மனோரமாவைத் தெரியும்...
சிக்கலில் வந்த நண்பர்
..ஷண்முகம் நாய னத்தை
மிக்கவே ஆவல் நெஞ்சில்
..மேவியே தானெ டுத்து
திக்கியே இசைக்கப் பார்த்து
..திகுவெனச் சிரிக்க வைத்து
மக்களைப் பக்கம் ஈர்த்த
...மனோரமா ஆச்சி தானே
வல்ல நடிப்பால் அனைவரையும்
வளைத்துப் போட்டு வைத்திருக்கும்
வெல்ல மொழியால் மனங்கவரும்
வீழாக் கலையின் நிறைகுடமாம்
நலல இரம்மிய ரமாவினை
நாடிப் புகழ்ந்த நும்கவிதை
சொல்ல இனிக்கும் விதமாகச்
சூடும் மலராய் அமைந்ததுவே.
மலேசிய நாடன்றி வேறு --- உண்டோ
மயங்காமல் நீயுண்மை கூறு
எதிர்நிற்கும் கட்சியென் றாலும் --அதை
யார்நின்று இயக்கிய போதும் --யார்க்கும்
மதிமுற்றி மாண்புற்ற நீதி -- அரசர்
மாறா முறைகூறும் நாடு.
மலேசிய நாடன்றி வேறு --- உண்டோ
மயங்காமல் நீயுண்மை கூறு!
அன்பின் சிவமாலா பாராட்டியமைக்கு நன்றி...
இந்தக் கவிதை சமீபத்திய நிகழ்வினால் எழுத்ப் பட்டதா.
ஆம், சி-க அவர்களே! அண்மைய ஒரு நிகழ்வு பற்றியதுதான்.
இங்கே சென்று சில கருத்துரைகளைக் காணலாம்:
http://www.nst.com.my/local/politics...erdict-1.30657
அரசியலே அழுக்கென்பார் அறிந்த மாந்தர்
அரசியலில் நாகரிகம் விழைவா ருள்ளார்.
உரசியதும் எரிகின்ற நெருப்புக் குச்சி
ஒத்தபலர் உலவிடுமோர் மேடை அஃதாம்,
வருசினத்திற் கடிமையென வளைந்து கையால்
வாய்வீச்சால் வம்புசெய்த வழியோர் பல்லோர்,
முரசறைந்து செயல்திட்டம் முளைப்பித்துப் பின்
முனைந்தொருகாய் பழம்படுத்தா தணைந்தோர் கோடி!.
பக்கெனத்தான் இருக்குதயயா நெஞ்சத் துள்ளே
..பாரினிலே அரசியலின் தன்மை கண்டு...
திக்குகளில் எங்கெங்கும் நோக்கும் நேரம்...
..தெரிகிறதே சுயநலந்தான் செயலில் எல்லாம்..
மக்கெனத்தான் மக்களையும் நினைத்து அந்த
..மாண்புமிகு மாந்தரவர் சேர்க்கும் காசு
தக்கப்டி தங்கிடுமோ அவர்கள் கூட..
..தயங்காமல் தெரிந்திடுமே காலப் போக்கில்....
முனைந்தொருகாய் பழம் படுத்தாது அணைந்தார் கோடி..என்றால்.கோடிகளை கொய்கிறார்கள் என அர்த்தமா..
நன்றாக இருக்கிறது உங்கள் எண் சீர்...
தழுவல்கள்
ஜிஞ்சும்மா பட்டும்மா செல்லப் பாப்பு
...சில்லென்றே சிரிக்கின்ற ரோஜா ஈர்ப்பு
ப்ஞ்சுகொண்ட் மென்மையிலே ஆன கன்னம்
...பார்க்கும்விழி இரண்டிலுமே கவிதை மின்னும்
துஞ்சுவது தான்விழித்தால் தாவிக் கையில்
..தூக்கியதை எடுத்திடுவாள் தோளில் கொஞ்சம்
நெஞ்சகத்தின் அமுதத்தை ஈயும் தாயின்...
..நெகிழ்வான அணைப்புமொரு தழுவல் அன்றோ..
**
பள்ளியிலே படிக்கின்ற காலம் தொட்டு
...பக்குவமாய்க் கல்லூரி முடித்த பின்னே
கல்லுக்குள் நாரெடுக்கும் கடின மான
..களமான வாழ்க்கையிலே வெற்றி தேடி
நல்லபடி மனம்நினைத்த வேலை பெற்றே
...நல்வார்த்தை தந்தையிடம் சொல்லும் நேரம்
உள்ளத்தில் பெருமிதத்தால் கைகள் நீண்டு
...உடலுடனே அணைத்திடுவார் அதற்கீ டேது...
*
சிறப்பான காலமெது வாழ்க்கை தன்னில்..
...சில்லென்றே கனவுகளும் மலரும் காலம்
உரமான உடலினுள்ளே ஊடிச் சென்று
..உணர்வுகளால் ஆட்கொள்ளும் இளமைக் காலம
கரந்தொட்டு கண்ணுக்குள் நுழைந்து விட்ட
..காதலமலர்ப் பெண்மகளை எண்ணுங் காலம்
தரமான ஆசையுடன் வெட்கம் விட்டே
...தழுவுமவள் செய்கையுந்தான் தவறா என்ன..
**
சிவந்துவிட்ட கண்களிலே சீற்றம் காட்டி
...சினத்துடனே பாஞசாலி சொன்னாள் அன்று
கவர்ந்துசென்ற என்மானம் நிலைக்கும் வண்ணம்
..கவ்ர்ந்திடுவீர் கெளரவரின் உயிரைப் பின்னே
துவங்கிடுமே என்வாழ்வும் துன்பம் நீங்கி
...துயர்மறந்த் விழிகளிலே மகிழ்ச்சி பொங்க
உவ்ந்தேநான் அணைத்திடுவேன் அழுத்தி நெஞ்சில்
..உள்ளத்தின் மகிழ்ச்சியது தெரியும் வ்ண்ணம்
ப்டபட வென்ற பேச்சை..
..பாஞ்சாலி சொல்லக் கேட்டு
கடகட வென்றே சென்ற
..காலத்தில் போரில் நன்றாய்
மடமட் வென்றே வென்று
..மறவரைக் கொன்றே செல்ல
தடந்தோளகள் ந்சுங்கும் வண்ணம்
..தயங்காமல் அணைத்துக் கொண்டாள்..
**
நேற்றுதான் தென்றலாய் தீண்டிச் சென்ற
..நயமான சுகவுணர்வு நெஞ்சில் நன்றாய்
ஊற்றுப்போல் உற்சாகம் பெருகி ஓடி
உணர்வுடனே நின்றிருந்த மரங்கள் எல்லாம்
சீற்றமுடன் முகமாற்றி சுழன்று வந்தே
..செல்லமென இருக்காமல் அடித்தே கொண்ட்
காற்ற்துவும் புயலாகக் கொண்ட தோற்றம்..
..கண்டும்னம் தாளாமல் வீழ்ந்த தங்கே...
**
நழுவாமல் நேரத்தைத் தேக்கி வைக்க
..நயமுடனே வேற்றுமொழிக் கதைகள் தன்னை
ப்ழுதாக்கிக் கொள்ளாம்ல் ச்ற்றே மாற்றி
..ப்க்குவமாய் எடுத்திடுவார் திரையின் முன்னே
வழுவாத வசனங்கள் எல்லாம் கொண்டு
..வஞ்சியரை நடிகர்களை வைத்துக் கொண்டு
தழுவித்தான் தீந்தமிழில் எடுத்த வற்றைத்
...தழுவ்லென அலட்சியமாய்ச் சொல்ல லாமா...
*****
அன்பின் சிவமாலா..
உங்கள் எழுத்துக்க்ளில் முதிர்ச்சி தெரிந்தாலும் என்னை போல் நீரும் இளமை என் நினைத்து ஒன்று சொல்லட்டுமா...
நேற்றுப் பார்த்த ஒரு திரைப்படம் நண்பன்.. ஹிந்தியில் வந்த படத்தின் கதையைத் தமிழில் ஆரத் தழுவி எடுத்திருக்கிறார்கள்.(ஆரத் தழுவி என்றால் காட்சிக்குக் காட்சி அப்படியே – நடிகர்க்ள்,மொழி மட்டும் வேறு...கொஞ்ச்ம் விற்பனைக்காக பாடல்கள் சில கூட்டி... நன்றாய்த் தான் இருந்தது..இருந்தும், என்ன் இருந்தும் நமது ஒரிஜினல்..சுயகற்பனை இல்லையே என்பது கொஞ்சம் நிரடிய்து...
அப்படியே சிந்தித்தபடி எனது தாரத்தையும் தமிழையும் தழுவியிருந்ததில் எழுந்த் எண்ணம் இது...! கவிதையா இல்லையா எனத் தெரியாது...
**