நன்றி
Printable View
நன்றி
இதைக் கவனியுங்கள்.
மொழி - அன்மொழி.
முறை > அன்முறை
இப்போது:
ஆதரவு > அனாதரவு
பின்: அனாதரவு > அனாத > அனாதை.
நாதி என்பதைப் பின் பார்க்கலாம்.
அன் - என்பது எதிர்மறை முன்னொட்டு.
கதை ஏதும் சொல்லாத தொல்காப்பியத்துக்கு எப்படிக் காப்பியம் என்று பெயர் வந்தது?
கதை சொல்லும் சிலம்பு, மணிமேகலை போன்ற காப்பியங்கள் வேறு. தொன்மை மரபு என இவற்றைக் காக்கப் புறப்பட்ட காப்பியமான தொல்காப்பியம் வேறு.
தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். கதைக் காப்பியமன்று.
தொல்+காப்பு+இயம் = தொன்மையைக் காக்கும் (இயம்) ஆயிற்று.
பாஷாணம்
பாசாணம் (பாஷாணம் ) என்ற சொல் எங்ஙனம் அமைந்தது.?
பசுமை + ஆணம் = ; பாசாணம் .> பாஷாணம்.
to save space here, only short details are posted. For more expln, see http://sivamaalaa.blogspot.com/2012/...g-post_23.html
பேச்சுத் தமிழுக்கும் எழுத்து நடைத் தமிழுக்குமிடையில் ஏற்படும் திரிபுகளை முழுவதும் ஆய்ந்து யாரும் கட்டுரை அல்லது நூல் வெளியிட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால்
இத்திரிபுகளிலிருந்து நாம் கற்றுக்க்கொள்ளத் தக்க நெறிமுறைகள் (principles) உள்ளன என்றே தெரிகிறது.
அவர்கள் என்பது :
அவக, அவுக, அவங்க, அவுங்க, அவைங்க,
எனப் பலவாறு திரிவதாகத் தெரிகிறது.
அவைங்க என்பது அவன்கள் என்பதன் திரிபாகத் தோன்றலாம். அவன்கள் என்பது இலக்கணப் புலவர் ஏற்றுக்கொண்ட வடிவமன்று. தவறு என்பர்.
ரகர ஒற்று மறைந்துபோவது பிறமொழியாளர் பேச்சிலும் காணக்கிடக்கின்றது.1
அவ(ர்)க(ள்) > அவக, இதில் ர் மற்றும் ள் என்னும் ஒற்றுக்கள் மறைந்தன.
-------------------------------------------------------
Footnote:
1 A research on "ESM"
The English of Singapore and Malaysia
Prof. Ray K. Tongue Eastern Universities Press, (1974)
இவற்றை ஊன்றிக் கவனிக்கவேண்டும்.
நேர் > நேர்மித்தல் > நேமித்தல்.
சேர் > சேர்மித்தல் > சேமித்தல்.
சார் > சார்தி > சாதி.
சார்தல் என்பது சேர்தல். எதைச் சார்ந்தவன், எதைச் சேர்ந்தவன்? எனவரும் வழக்குகளை நோக்குக.
(ஜா என்னும் பிறத்தல் வினையிலிருந்து தோன்றியது ஜாதி என்பது முன்னைய கருத்து)
ஒருவனின் பெயருக்கு நேராக அவன்றன் பதவியை அல்லது தகுதியைக் குறித்தல். அதுவே நேர்மித்தல்/ நேமித்தலாம்.
நியமித்தல் என்னும் வினை திரிந்து நேமித்தல் ஆயிற்று என்பது முன்னைய கருத்தாகும்.
காட்டிய சொற்களில் ரகர ஒற்று மறைந்தது.
We have 30 base letters in Tamil (12 vowels + 18 consonants). The remaining letters are combination of consonants & vowels notations (12*18 = 216). Total 30 + 216 = 246 + 1 (Ayutha Ezhuthu)
What is missing here is the sound notations or sound differentiators. For which loaning of worlds from other language started happening like Sri, Sha, Jha etc
நன்றி, நன்றி.
மேலே நம் இணைய அன்பர்களின் கருத்துரைகட்கு மாற்றுக்கருத்துகள் இல்லையென்றே கருதுகிறேன். அதனால் யாரும் பதிலெழுதாது வாளாயிருக்கின்றனரென்று எண்ணத்தோன்றுகிறது.
எழுத்துக்கள் எண்ணிக்கை சரியாகவே உரைக்கப்பட்டது. "வடவொலிகளும்" தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டவைதாம்.
ஜ, ஹ , ஸ, ஷ, க்ஷ,முதலாயினவற்றை ஏன் தமிழர் முன்னாளிலேயே மேற்கொள்ளவில்லை என்று தெரியவில்லை. இவற்றைப் புறம்பான ஒலிகள் என்றும் இவற்றை விலக்கியே சொல்லமைக்கவேண்டுமென்றும் ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டனர் போலும்.
இவ்வொலிகளை உலகுஅறியாமுன்பே தமிழ் தோன்றிவிட்டதென்றே தெரிகிறது. This inference should be considered as arising appropriately from the circumstances....