உண்மையான தமிழன், இந்தியன், மனிதன் ஆண்டவன், அசத்தல்.
Printable View
கே.ஆர்.ராம்சிங், கம்பீர தோற்றம் கொண்டவர். "புயலுக்குப்பின்'' என்ற நாடகத்தில், ஒற்றைக்கால் சர்வாதிகாரியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.
பின்னர், "திருமழிசை ஆழ்வார்'' பக்தி நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் சென்னையில் தொடர்ந்து 400 நாட்கள் நடந்தது.
நாடகத்தில் புகழ் பெற்று விளங்கிய ராம்சிங்குக்கு, சினிமா வாய்ப்பு தேடி வந்தது.
1947-ல் ஜகன்னாத் புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம், "விஸ்வாமித்ரா'' என்ற படத்தை தயாரித்தது. கதாநாயகியாக, அன்றைய "கனவுக்கன்னி'' டி.ஆர்.ராஜகுமாரியும், கதாநாயகனாக ராம்சிங்கும் நடித்தனர். இப்படத்திற்கு பம்மல் சம்பந்த முதலியார் ("மனோகரா'' கதையை எழுதியவர்) வசனம் எழுதினார்.
தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது. இந்தியிலும் ராம்சிங்தான் கதாநாயகன். இப்படம் வெற்றி பெறவில்லை. எனவே, ராம்சிங் மீண்டும் நாடக உலகுக்கே திரும்ப வேண்டியதாயிற்று. "ஜீவன்'', "பிலோமினாள்'', "எதிர்பாராதது'' உள்பட பல நாடகங்களில் நடித்தார்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு, திரைப்படத்துறை மீண்டும் அழைத்தது.
டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் தயாரித்த "மின்னல் வீரன்'' திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தில், ரஞ்சன் கதாநாயகனாகவும், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா கதாநாயகியாகவும் நடித்தனர். "புயல்'' என்ற படத்திலும் வில்லனாக ராம்சிங் நடித்தார்.
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த "கன்னியின் காதலி'' படத்தில் வில்லனாக நடித்தார். அஞ்சலிதேவி, மாதுரிதேவி, எஸ்.ஏ.நடராஜன் நடித்த இப்படத்தில்தான், கவிஞர் கண்ணதாசன் முதன் முதலாக பாடல் எழுதினார்.
கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்த "விஜயகுமாரி'' படத்தில் ஒற்றைக்கால் மந்திரவாதியாக வில்லன் வேடத்தில் பிரமாதமாக நடித்தார், ராம்சிங்,
பிரபல இயக்குனர் கே.ராம்நாத் டைரக்ட் செய்த படம் இது.
1958-ல் எம்.ஜி.ஆர். பிரமாண்டமாக தயாரித்த "நாடோடி மன்னன்'' படத்தில், பானுமதியின் தந்தையாக மீண்டும் ஒற்றைக்காலுடன் நடித்தார். இந்தப்படம் அவருக்கு புகழ் தேடித்தந்தது.
இதன்பின், எம்.ஜி.ஆர் - சாவித்திரி நடித்த "மகாதேவி'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். எம்.ஜி.ஆரின் கண்களை குருடாக்குவது போலவும், பிறகு அவரை காப்பாற்றுவது போலவும் ராம்சிங் நடித்தது, ரசிகர்களைக் கவர்ந்தது.
சிவாஜி - ஜமுனா இணைந்து நடித்த "மருதநாட்டு வீரன்'' படத்தில், பி.எஸ்.வீரப்பாவும், ராம்சிங்கும் வில்லன்களாக நடித்தனர்.
பிறகு "நாகநந்தினி'', "தோழன்'' ஆகிய படங்களில் ராம்சிங் நடித்தார். இதில் "தோழன்'' படத்தில் அவருக்கு மீண்டும் ஒற்றைக்கால் வேடம்!
இந்தி, தெலுங்கு முதலான மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள் தமிழில் "டப்'' செய்யப்பட்டபோது, முக்கிய நடிகர்களுக்கு குரல் கொடுத்தவர், ராம்சிங்.
ராஜ்கபூரின் "ஆ'' என்ற படம் தமிழில் "அவன்'' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டபோது, ராஜ்கபூரின் தந்தை பிருதிவிராஜ் கபூருக்கு ராம்சிங் குரல் கொடுத்தார்.
அவர் குரல் பிருதிவிராஜ் கபூரை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர் திலீப்குமார் - பிருதிவிராஜ்கபூர் நடித்த பிரமாண்டமான "மொகல் - ஏ - ஆஜாம்'' என்ற படம் தமிழில் "அக்பர்'' என்ற பெயரில் `டப்' செய்யப்பட்டபோது, தனக்கு குரல் கொடுக்கும்படி ராம்சிங்கிடம் பிருதிவிராஜ் கபூர் கேட்டுக்கொண்டார். அதன்படி அக்பராக நடித்த பிருதிவிராஜ் கபூருக்கு குரல் கொடுத்தார், ராம்சிங்.
இடையே "தாழம்பூ'', "ஆசை முகம்'', "அஞ்சல் பெட்டி 520'', "பாட்டொன்று கேட்டேன்'', "பாக்தாத் பேரழகி'', "அரசகட்டளை'', "ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது'', "துணிவே துணை'' முதலிய படங்களில் நடித்தார்.
பிறகு நடிப்பை குறைத்துக்கொண்டு, "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். நூற்றுக்கணக்கான "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுத்தார். விட்டலாச்சார்யா படங்களில், தெலுங்கு வில்லன் நடிகர் ராஜ்நளாவுக்கு பெரும்பாலும் குரல் கொடுத்தவர், ராம்சிங்தான்.
பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும், ஒற்றைக்கால் வில்லனாக, ஒரு காலை கயிற்றால் மடக்கிக் கட்டிக்கொண்டு நடித்ததால், அவரது இடது காலில் ரத்தம் உறைய ஆரம்பித்தது. சரியான சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல், தொழிலில் கவனமாக இருந்ததால், உடல் நலம்
குன்றியது.கோடம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் 1985 அக்டோபர் 18-ந்தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 70.
Courtesy malaimalar
Who Is Your Favorite Yesteryear Actor In Tamil Cinema?
Facebook Share on Google+
Result as per date 22-07-2014
M G R
49.32%
684 Votes
Sivaji Ganesan
39.22%
544 Votes
Gemini Ganesan
5.98%
83 Votes
Major Sundararajan
2.02%
28 Votes
Muthuraman
3.46%
48 Votes
Total Votes: 1,387
This Poll is Closed !
எம்.ஜி.ஆர். தான் சினிமாக்காரர்களுக்கு மரியாதை ஏற்படுத்திக்கொடுத்தார்! - கேயார் பேச்சு
எச்3 சினிமாஸ் என்ற புதிய படநிறுவனம் தயாரித்துள்ள படம் சாய்ந்தாடு சாய்ந்தாடு. ஆதர்ஷ், அனுகிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இந்த விழாவில் கேயார் பேசுகையில், இந்த படத்தின் பாடல்கள் ரொம்ப இனிமையாக உள்ளன. பாடலாசிரியரின் வரிகள்கூட சிறப்பாக உள்ளன.
மேலும், அந்த காலத்தில் சினிமா கலைஞர்களுக்கு குடிக்க தண்ணீர் தரகூட தயங்கினார்கள். அந்த அளவுக்கு சமுதாயத்தில் கலைஞர்களின் நிலை பரிதாபமாக இருந்தது. ஆனால், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சினிமாவில் பெரிய நடிகராகி முதலமைச்சர் ஆன பிறகு சினிமாக்காரர்களுக்கு சமுதாயத்தில் மரியாதை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் அனைவருக்குமே இந்த மரியாதை கிடைத்தது. அதன்பிறகே சமுதாயத்தில் கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து.
எம்.ஜி.ஆர் செய்த அந்த பெரிய காரியம் தான் இன்றைக்கும் சினிமாக்காரர்கள் மதிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால் சினிமாக்காரர்கள் என்றென்றைக்குமே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை மறக்கவே முடியாது என்றார்.
நடிகர் சிவகுமாரின் பதில் மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் மாண்புகள் பற்றி சிவகுமார் கூறிய கருத்துக்கள்
அத்தனையும் வைர வரிகள் . எம்ஜிஆர் ரசிகர்கள் ஏன் அவர் மீது இந்த அளவிற்கு பைத்தியமாக இருக்கிறார்கள்
என்பது உண்மை .
அருமையான பதிவை தந்த இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .
NICE VIDEO - EXCELLENT SPEECH ABOUT MGR.
http://youtu.be/DWJ2ZS3ST4o
http://i60.tinypic.com/2zoisue.jpg
MSG FROM MR.R.SARAVANAN, MADURAI
மிகவும் அருமையான பதிவு திரு திருப்பூர் இரவிச்சந்திரன் சார் நன்றி சார்
http://i59.tinypic.com/33biz48.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
எம்ஜிஆர் என்ற பெயர் சொன்னாலே எல்லோருக்கும் உற்சாக ஊற்று பெருக்கெடுக்கிறதே என்பது உண்மை .
காரணம் எம்ஜிஆர் என்ற சொல்லுக்கு மந்திர சக்தி உள்ளது .
எல்லோரையும் கவரும் சிரித்த முகம் .
மனித நேயம் .
தாய்ப்பாசம்
மக்களுக்கு வழங்கிய உற்சாக பாடல்கள் - அறிவுரைகள் - சமுதாய சீர் திருத்தங்கள் .
தன்னம்பிக்கை - தைரியம் - நேர்மறை சிந்தனைகள் மனதில் உருவாக்கி வைத்த எம்ஜிஆர் படங்கள் .
காலம் கடந்தாலும் இன்றைய தலை முறையினரும் எம்ஜிஆரை விரும்புவது ஒரு அதிசயமே .
ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
கூண்டுக்கிளி -1954
புதுமைபித்தன் -1957
நாடோடி மன்னன் -1958
நல்லவன் வாழ்வான் -1961
குடும்ப தலைவன் -1962
பாசம் - 1962
நீதிக்கு பின் பாசம் -1963
கலங்கரை விளக்கம் -1965
தாலி பாக்கியம் -1966
கணவன் -1968
தேடிவந்த மாப்பிள்ளை -1970
பட்டிக்காட்டு பொன்னையா -1973
இதயக்கனி -1975
மீனவ நண்பன் -1977.
உலக வரலாற்றில் பல சாதனைகள் நிகழ்த்திய நம் ''நாடோடி மன்னன் .'' திராவிட இயக்கத்தின் மன்னன் நம் அண்ணாவின் '' இதயக்கனி ''- மக்களுக்கு ''நல்லவன் வாழ்வான் '' என்று அறிவுரை கூறிய வள்ளல் எம்ஜிஆர
எழுதிய கதை ''கணவன் ''.. ''குடும்ப தலைவன் '' எல்லோரும் விரும்பும் மக்கள் திலகம் .
கோடிகணக்கான ரசிகர்களின் ''பாசம் '' பெற்ற தலைவன் . ''நீதிக்கு பின் பாசம் '' என்ற
படிப்பினை தந்த மக்கள் திலகம் .''கூண்டுக்கிளி''யாக இருந்தவர் பல பெண்களின் மனதில் இவர் நம் வீட்டுக்கு
''தேடி வந்த மாப்பிளை''யாக வருவாரா ''தாலி பாக்கியம் '' கிடைக்காதா என்று ஏங்கிய பெண்களின் மனதை கவர்ந்த உலக பேரழகன் .
''பட்டிக்காட்டு பொன்னையா '' படத்துடன் ஜோடி பிரிந்த ஜெயாவின் மான் சீக தலைவன் .
''புதுமை பித்தன் '' மீனவ சமுதாயத்தின் என்றுமே ''மீனவ நண்பன் ''
என்றென்றும் மனித நேய தலைவன் - மக்களின் ''கலங்கரை விளக்கம் '' எம்ஜிஆர் .
Today (01.08.2014) Dinamalar
http://i62.tinypic.com/292p9g7.jpg
இன்றைய தினமலர் -இதழில் வெளிவந்த திரு வந்தியதேவனின் ''சத்துணவு ''பற்றிய விரிவான
தகவல்கள் - எம்ஜிஆர் சத்துணவு திட்டம் என்ற பெயரே மிகவும் பொருத்தம் என்று பதிவிட்டிருப்பதுசரியான கட்டுரை .
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் அவர்களுக்கு நன்றி . சரியான நேரத்தில் பதிவிட்டீர்கள் .பாராட்டுக்கள் .
PROMINENT DMK LEADERS AND ARTISTS IN THIS SONG BOOK COVER.
http://i58.tinypic.com/32zrt4j.jpg
தங்கரத்தினம் திரைப்படத்தின் டிவிடியில் 1957ம் ஆண்டு நடைபெற்ற தி.மு.க். மாநாட்டுக் காட்சிகள் சில இடம் பெற்றுள்ளன என்று கேள்விப்படுகிறேன்
MAKKAL THILAGAM MGR IN PUTHUMAI PITHAN - 2.8.1957
58TH ANNIVERSARY BEGINS.....
M.G. Ramachandran, T.R. Rajakumari, B.S. Saroja, T.S. Balaiah, J.P. Chandra Babu, E.R. Sahadevan, R. Balasubramaniam, C.S. Pandian, K.S. Angamuthu, E.V. Saroja, C.V.V. Panthulu and P.S. Venkatachalam
Written by Mu. Karunanidhi, this story of kings, princes and ambitious courtiers was essentially a traditional cloak-and-dagger costume drama with interesting elements that contributed to sustaining the interest throughout, though, at times, plot twists and turns were somewhat predictable. Mu. Ka’s pungent dialogue with subtle political innuendoes was spoken with much punch by MGR with both then being on the same side of the fence!
The king (Panthulu) is imprisoned by his ambitious brother (Balaiah) who creates the impression that the king died during a hunt. The crown prince (MGR) is away on a sea journey, and returns to the king’s fake funeral! However, during the funeral he comes to know the truth, thanks to a secret message conveyed to him by a bearded messenger who is really the daughter (B.S. Saroja) — in disguise — of the palace doctor (Balasubramaniam). Expectedly, she falls in love with the prince! The king’s brother plans to get rid of the prince too, by giving him a drug (provided by the palace doctor) to drive him mad.
The prince, of course, does not drink it, but pretends to, and behaves like a madman to fool everybody. An attractive woman (Rajakumari) who runs a drama group helps the hero, and, of course, falls in love with him. But in the end sacrifices her life and love, and unites the hero and the doctor’s daughter. The king is saved and the villains are destroyed by the hero and his sidekick (Chandra Babu).
MGR plays the adventurous role in his characteristic style and verve. Well-known singer C.S. Jayaraman lends his voice for MGR — it was before T.M. Soundararajan came on the scene. B.S. Saroja as the heroine gives a good performance, including in the sword fighting sequence with the masked hero. Not many are aware that Saroja trained in a circus troupe before she entered films.
Balaiah as the greedy king’s brother impresses, as usual, with his own style of dialogue delivery while Sahadevan — a good actor not much remembered today — plays the villainous commander. Chandra Babu too was in his element, and even sang the song ‘Thillana….’, which became quite popular. His sequences with another underrated comedian C.S. Pandian (a regular member of the N.S. Krishnan’s famed team) raises laughter. E.V. Saroja as the palace maid also makes an impact.
Directed by Ramanna, Rajakumari’s brother, the film was produced under the banner of K. Muniratnam and his Sivakami Pictures. Music was composed by G. Ramanathan with lyrics by Thanjai Ramaiah Das and most of the tunes were of the ‘light music’ variety.
The film had good cinematography, especially the outdoor sequences, shot well by the talented G.K. Ramu. Despite an impressive cast and Mu.Ka’s writing, the film did not fare well as expected, mainly because of the predictable storyline.
Remembered for MGR’s screen presence and charisma, impressive performances by the cast, and Mu. Ka’s writing.
courtesy- the hindu
நீங்கள் சொல்லியது சரி திரு ராகவேந்திரன் சார் .
தங்கரத்தினம் பட காஸெட்டில் திமுக மாநாடு - காட்சிகள் இடம் பெற்று இருந்தது . நினைவு படுத்தியமைக்கு நன்றி .
SUPER SCENES
http://youtu.be/SKNXX5yZ0V0
FROM TODAY @ KOVAI - DELITE THEATER - DAILY 2-45PM & 6.00 PM
ALL TIME CLASSIC HIT "NADODI MANNAN"
https://www.youtube.com/watch?v=cSXr3f6Z3Ws
MEMORABLE SONGS !
https://www.youtube.com/watch?v=tUEB_61rhZI
https://www.youtube.com/watch?v=om8AncusULw