http://s29.postimg.org/3s17emzyv/WP_...0218225302.jpg
Printable View
http://s28.postimg.org/w8r0rt2gt/bfff.jpg
திரு யுகேஷ் பாபு அவர்களுக்கு,
தாங்கள் பதிவிட்ட
மக்கள் திலகத்தின்
புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
நன்றி
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
நாளை முதல்
மதுரை சென்ட்ரல்
திரை அரங்கில்
மக்கள் திலகத்தின்
பெரிய இடத்துப்பெண்
தகவல் - திரு சரவணன் - மதுரை
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
தேவரின் நண்பனாகி சித்தர்களின் தலைவன் ஆகி
பொன்குணத்து ஒளியும் ஆகி, மூன்றுமுறை முதல்வர் ஆகி
மூஉலகில் உயர்ந்தோன் ஆகி, புகழ்முடிவுஇலா ஒருவன் ஆகி
ஆருயிர்உயிர்கள் தோறும் உயிரென உறைவோன் ஆகி
உனைநாடினர்தம்மை நாளும் நலம்பெறவிளம்பும் வள்ளல்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். பெருமானே.
திரு கலைவேந்தன் அவர்களுக்கு,
மக்கள் திலகத்தின் ஒவ்வொரு அசைவையும்
உற்று நோக்கி அதை படிப்பவர்
மகிழும் வண்ணம்
எழுத்தில் வடிக்கும்
தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
தொடரட்டும் தங்கள் பணி
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://i60.tinypic.com/vrpwsn.jpg
மூன்றடியில் மூஉலகம் அளந்த வாமணன் என வந்தாயோ
மூன்றாம் நிலைவரை மூலமுதல்வனாம் யானையடியில்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என பயின்றாயோ
மூன்றெழுத்து மந்திரமாக முழுவதும் நெஞ்சில் நிறைந்தவனே
மூன்றெழுத்து அண்ணாவின் இதயக்கனியே-பாட்டுடைத் தலைவனே
மூன்றுமுறை முதல்வராக மன்னாதிமன்னனாக இருந்தாயே
முப்பிறவி எடுத்து வந்த முழுநிலவே வாழ்கவே வாழ்கவே.
மதுரை சென்ட்ரலில் நாளை முதல் (20/02/2015) பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் 1963ல் வெளியான ஈடு இணையற்ற வசூல் சாதனை புரிந்த
"பெரிய இடத்துப் பெண் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .
அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு பதிவிட அனுப்பி உதவிய
மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி.
http://i62.tinypic.com/2nasj01.jpg
மாலை மலர் - 19/02/2015
http://i58.tinypic.com/2upem0w.jpg
தமிழ் இந்து -19/02/2015
http://i61.tinypic.com/4tuhdk.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூல் வெளியீட்டு விழா - தொடர்ச்சி ..
----------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் திரு. முத்துலிங்கம் : இன்று போல் என்றும் வாழ்க திரைப்படத்தில் ,
அன்புக்கு நான் அடிமை, இது நாட்டை காக்கும் கை ஆகிய பாடல்கள் எழுத
வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக "இது நாட்டை காக்கும் கை " என்கிற பாடலின்
இசைத்தட்டுக்களை அதிக அளவில் கல்கத்தாவில் இருந்து கொண்டுவர ஏற்பாடு
செய்திருந்தார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காரணம் அப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து அ.தி.மு.க , 1977 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.
மக்களின் நாடித்துடிப்பை துல்லியமாக அறிந்து செயல்பட்ட ஒரே தலைவர், புரட்சி தலைவர். ஒருமுறை நான் எம்.எல்.சி. ஆனவுடன் புரட்சி தலைவர் வீட்டிற்கு சென்று
காலையிலேயே மாலையிட சென்றேன். அப்போது நான் இன்னும் குளிக்கவில்லை.
பல அலுவல்கள் உள்ளன. கோட்டைக்கு செல்ல வேண்டும். நேரமாகிவிட்டது.
ஆகவே, என் தாய் சமாதியில் வைத்துவிட்டு போ என்றார். அதன்படி செய்தேன்.
இப்படி தாய்க்கு சிறப்பு செய்தும், மற்றவர்களுக்கு தாயின் பெருமையை திரைப்படங்களின் மூலம் திறம்பட உணர்த்தியவர் புரட்சி தலைவர் ஒருவரே.
இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு. பாலு மணிவண்ணன் அவர்கள் இயக்குனர்
விஜயனிடம் 12 படங்களுக்கு உதவியாக பணிபுரிந்தவர்.
மலைக்கள்ளன் திரைப்படத்தில் வரும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
என்கிற பாடல் , ஆரம்பத்தில் திரு. தஞ்சை ராமையாதாஸ் என்பவர் எழுதினார்
அவருக்கும், திரு பட்சிராஜா (மலைக்கள்ளன் தயாரிப்பாளர் ) அவர்களுக்கும்
ஏற்பட்ட தகராறு காரணமாக பாடல் எழுதுவதை பாதியில் விட்டுவிட்டார்.
படப்பிடிப்பில் யாரோ ஒருவர் இந்த பாடலை முணுமுணுக்க , அது எம்.ஜி.ஆர்.
அவர்கள் காதில் விழ, பாடல் நன்றாக இருக்கிறதே என எண்ணி, புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்கள், திரு. தஞ்சை ராமையாதாஸ் அவர்களை அணுகியபோது,
மேற்கொண்டு தன்னால் பாடல் எழுத முடியாது, மன்னித்து விடுங்கள், தயாரிப்பாளர் அணுகுமுறை எனக்கு பிடிக்கவில்லை, என்று கூறி ஒதுங்கிவிட்டார்.
பின்னர், கோவையில் திரு. அய்யா முத்து என்பவர் உதவியுடன் அந்த பாடல்
எழுதி முடிக்கப்பட்டு வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டு, பட்டி தொட்டி எல்லாம்
பிரபலம் ஆனது.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் , ஆரம்ப காலத்தில் , திரைபடத்தில் நுழைந்த
காலங்களில், தன்னிடம் ரூ.10/- இருந்தால் ரூ.2/- தர்மம் செய்வாராம்.
ரூ.100/- இருந்தால், ரூ. 10/ தர்மம் செய்வாராம்., ரூ.1000/- சம்பளம் வாங்கிய காலத்தில் ரூ.100/- தானம், தர்மம் செய்வாராம்.
உதவி என்று ஒருவன் வந்துவிட்டால், அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காதுகளில் விழுந்துவிட்டால், வந்தவன் வெறுங்கையோடு திரும்ப மாட்டான்.
கலியுலக கர்ணனுக்கு பிறகு, நாம் வாழ்ந்த/ வாழ்கின்ற காலத்தில் , கண்ட திரையுலக, அரசியல் உலக வரலாற்றின் ஒரே கர்ணன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மனிதாபிமானமும்,
மனிதநேயமும் மிக்க ஒரே தலைவர் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.தான்.
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படம் வளரும் சமயத்தில், எனது மனைவிக்கு
கருச்சிதைவு ஏற்பட்டது. அப்போது, சத்யா ஸ்டுடியோவில் புரட்சி தலைவரை
சந்திக்க சென்றேன். காரில் உட்கார்ந்து புறப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்கள், என்னைக்
கண்டதும், காரை நிறுத்தச் சொல்லி, விசாரித்தார். காரில் ஏறிவிட்டால், எந்த
காரணம் முன்னிட்டும் சாதாரணமாக காரை விட்டு இறங்கமாட்டார். ஆனால்
மனிதாபிமான செய்திகளுக்கு செவி சாய்க்கவும் தவறமாட்டார். எனது பிரச்னைகளை கேட்டதும், உடனடியாக ரூ.2000/- தந்து , என் மனைவியின் சிகிச்சைக்கு உதவினார். அப்போது ஒரு சவரன் விலை ரூ.300தான். இந்த மாதிரி
காரியங்கள், உதவிகள் பல பேருக்கு செய்ததனால்தான் மக்கள் மனதில் வாழ்ந்து
கொண்டு இருக்கிறார்.
வேலூர் நாராயணன், நடத்திய அலை ஓசை பத்திரிகையில் பணிபுரிந்து வந்தேன்.
1973ல் பொண்ணுக்கு தங்க மனசு என்கிற படத்தில் பாட்டு எழுத வாய்ப்பு கிடைத்தது. அலை ஓசை பத்திரிக்கை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு
எதிர்ப்பாக செயல்பட ஆரம்பித்ததும், அதிலிருந்து நான் விலகினேன். இந்த செய்தி
எப்படியோ எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தெரிந்து, ஆள் வைத்து, கூப்பிட்டு என்னை
விசாரித்தார். வேலை இல்லாமல் எவ்வளவு நாட்கள் இருப்பாய், வேலை கிடைக்கும்வரை பணம் தருகிறேன், வைத்துக்கொள் என்றார். நான் வாங்க
மறுத்துவிட்டேன். மீண்டும் வற்புறுத்தினார். மறுத்தேன். எனக்கு வேலை ஏதாவது
இருந்தால் கொடுங்கள் செய்கிறேன். பணம் வேண்டாம். என்றேன். வேலை வரும்போது தருகிறேன். பணம் வாங்கிக்கொள் என்றார். மீண்டும் மறுத்து வாதம்
செய்தேன். இவையெல்லாம் 1974ல் நடந்து முடிந்தது. பின்னர், சில திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு அளித்தார்.
1981- ல் கலைமாமணி பட்டம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கரங்களால் வாங்கும்போது, பணம் வாங்காமல் நான் வாதம் செய்து, வேலை கேட்டதை மனதில் வைத்து, உழைக்காமல் தான் பணம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக
இருந்து என் நெஞ்சை தொட்ட , திரு.முத்துலிங்கத்திற்கு இந்த கலைமாமணி
பட்டத்தை தராமல் வேறு யாருக்கு தருவது, என்று, மனிதாபிமானத்தோடு பேசி,
என்னை உயர்வாக பாராட்டி பேசினார்.
மீனவ நண்பன் படம் முடியும் தருவாயில், சத்யா ஸ்டுடியோவில் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க சென்றேன். இந்த படத்தில் உன் பாட்டு எது என்று கேட்டார். எதுவுமில்லை என்றேன். ஏனில்லை, படம் உருவாகும் சமயம் என்னிடம் சொல்லாமல் எங்கு சென்றாய் என்று கடிந்து கொண்டார். உண்மையில் தங்கையின் கல்யாணத்திற்காக ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த சமயத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க சென்றால்,
பணம் வாங்கத்தான் வந்திருக்கிறேன் என்று அவர் நினைக்கக்கூடும் என்று
தவிர்த்தேன். , பின்னர் இயக்குனர் ஸ்ரீதரை அழைத்தார். முத்துலிங்கத்திற்கு
இந்த படத்தில் பாட்டு எழுத வாய்ப்பு கொடுங்கள் என்றார். படம் முடியும் தருவாயில் உள்ளது என்று ஸ்ரீதர் அவர்கள் சொன்னார். ஏதாவது கனவுக்காட்சி
வருவதுபோல் காட்சிகள் அமைத்து ஏற்பாடு செய்யுங்கள் என்றார் புரட்சி தலைவர்.
அது எப்படி முடியும் என ஸ்ரீதர் கேட்க, ஏன் முடியாது, உரிமைக்குரல் படத்தில்
விழியே கதை எழுது, அன்பே வா படத்தில், ராஜாவின் பார்வை கனவுபாடல்கள்
எப்படி அமைந்தன, அந்த மாதிரி சிச்சுவேஷன் வருவது காட்சிகள் அமைத்து இவருக்கு பாடல் எழுத வாய்ப்பளித்து, பதிவு செய்து கொண்டு வாருங்கள் என்று,
உத்தரவிட்டு, சென்றுவிட்டார். அதாவது ஒருவர் தன்னிடம் ஏதாவது உதவிக்கு
என்று வந்துவிட்டாரானால் எப்படியாவது அவருக்கு உதவவேண்டும் என்பதே
அவருடைய நோக்கமாக இருந்து செயல்பட்டார் என்பதற்கு இது ஒரு சிறந்த
உதாரணம். அதன்படி உருவானதுதான், தங்கத்தில் முகமெடுத்து பாடல்.
தன்னை நம்பி ஒரு கூட்டம் இருக்கிறது, அவர்களுக்கு உதவ வேண்டும், இயன்ற உதவியை செய்ய வேண்டும் அவர்களை கைதூக்கி விடவேண்டும். என்று செயல்பட்டதனால்தான் இன்றும்கூட, வீடுகளில், மாடங்களில், தெருக்களில்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களை வைத்து பூஜை செய்கிறார்கள்.
கவிஞர் மருதகாசியின் வீடு ஏலத்திற்கு வந்தது. அதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள் அதை மீட்டெடுத்து, பத்திரங்களை ஒப்படைக்க மருதகாசியை அழைத்தபோது, அவர் வீடு, பத்திரங்கள் வாங்க மறுத்துவிட்டார். கவிஞர்
கண்ணதாசன் படத்தயாரிப்பில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்தது போல , தாங்கள்
எதுவும் செய்ய வேண்டாம், நான் வேண்டிய உதவிகள் செய்கிறேன், என்றார்
புரட்சி தலைவர். மருதகாசியின் வீட்டை மீட்டு கொடுத்தது புரட்சி தலைவரின்
பெருந்தன்மை . ஆனால் மருதகாசிக்கு என்ன பெருந்தன்மையோ கடைசிவரை
மறுத்து விட்டார்.
தஞ்சையில் தமிழ் பல்கலை கழகம் உருவாக்கிய உன்னத தலைவர் நமது
புரட்சி தலைவர்.எம்.ஜி.ஆர். அவர்கள்.
மலர்களில் சிறந்தது -12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி .
நதிகளில் சிறந்தது கங்கை நதி. மலைகளில் சிறந்தது இமய மலை.
மனிதர்களில் சிறந்தவர் எம்.ஜி.ஆர். என்கிற மகான்
தொடரும் !!!!!
dinathal 19/02/2015
http://i61.tinypic.com/iyq82b.jpg
கலைவேந்தன் சார்
விஜய் டிவி வழங்கிய மன்னாதி மன்னன் - எம்ஜிஆர் - உங்கள் கை வண்ணத்தில் சிறப்பான அலசல்கட்டுரைகள் அபாரம் .நீங்கள் விவரிக்கும் ஒவ்வொரு வரிகளும் நேரில் பார்த்த உணர்வை தந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு நீங்கள் ஒரு ''வர்ணனை வேந்தன் ''.வளர்க உங்கள் தொண்டு .
வேலை சுமை அதிகம் எனவே திரியில் அதிகமாக வர இயலாது நண்பர்களே இருப்பினும் உங்களின் பார்வைக்கு முகராசி வேலூர் records 96
http://i62.tinypic.com/29yqv14.jpg
]வேலூர் records 97
]http://i62.tinypic.com/2cpe0i0.jpg
வேலூர் records 98
http://i59.tinypic.com/2qnuuc3.jpg
வேலூர் records 99
http://i57.tinypic.com/2zth99u.jpg
http://i62.tinypic.com/nlsnlg.jpg
வேலூர் records 100
http://i62.tinypic.com/2v9p1dj.jpg
வேலூர் records 101
http://i62.tinypic.com/24kxpjc.jpg
நமது திரியில் அனைத்து நண்பர்களின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது.தொடர்ந்து பதிவு செய்யுங்கள் நேரம் கிடைக்கும் போது உங்களுடன் இணைகிறேன்
http://i60.tinypic.com/2m2gh2d.jpg
Dhina Ithazh 20/2/15
http://i61.tinypic.com/2u8gmlz.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் முகராசி படத்தின் இன்று முதல் விள்ம்பரம் - வேலூர் மன்ற நோட்டீஸ் - ஆங்கிலத்தில் வெளியான விருதுநகர் எம்ஜிஆர் -ஜெயலலிதா மன்ற நோட்டீஸ் - முகராசி 7 வது வார விளம்பரம் - முகராசி 100 வது நாள் விளம்பரம் - முகராசி திரையிடப்பட்ட தென்னிந்திய திரை அரங்கு பெயர்களுடன் விளம்பரம் - ஒரிஜினல் பதிவுகளை வழங்கிய இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி .
இது வரை யாருமே பார்க்காத ஆவணம் . 49 ஆண்டுகளாக பாது காத்து வைத்து நமக்கு வழங்கிய திரு பாஸ்கரன் அவர்களுக்கும் நன்றி .
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் தலைவர் நடித்த ‘முகராசி$ திரைப்படம் வெற்றிப்படம் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் என்பது நாமெல்லாம் அறிந்ததுதான். இருந்தாலும் அதன் 100 வது நாள் விளம்பரத்தை பதிவிடும்போது அது அதிகாரபூர்வமான ஆதாரமாக, ஆவணமாக அமைந்துவிடுகிறது. இதுபோன்ற ஆவணங்கள் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தலைவர் நடித்த திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதை பறைசாற்றிக் கொண்டேயிருக்கும்.
இப்போதே, விருதுநகர் மற்ற பகுதிகளைக் காட்டிலும் பெரிய வளர்ச்சி பெற்றுவிடவில்லை. 1966ம் ஆண்டில் விருதுநகர் எப்படி இருந்திருக்கும்? அங்கே 3 வாரம் ஓடிய விவரம் இடம் பெற்றுள்ளது. (இது நோட்டீஸ் அடிக்கும்போது இருந்த நிலை. இன்னும் கூட ஓடியிருக்கலாம்) மேலும், அந்த சிறிய ஊரில் அப்போதே தலைவரின் ரசிகர்கள் ஆங்கிலத்தில் நோட்டீஸ் அடித்து அசத்தியுள்ளனர்.
அதோடு, தமிழகம் முழுவதும் 43 சென்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்பட்டதும் தெரிகிறது. பெங்களூர், மங்களூரிலும் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பும் காணக்கிடைக்கிறது.
இதுவரை பார்த்திராத இந்த அரிய தகவல்களையும் , முகராசி திரைப்படத்தின் 100வது நாள் விளம்பரத்தையும் பதிவிட்டு ஆவணப்படுத்திய சகோதரர் திரு.வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கும் பொக்கிஷத்தை தந்து உதவிய திரு.பாஸ்கரன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
திரு.ராமமூர்த்தி சார், திரு.பாஸ்கரன் சார் ஆகியோருக்கு,
தாங்கள் வைத்துள்ள பொக்கிஷங்களை நேரம் கிடைக்கும்போது பதிவிடவும். இல்லாவிட்டால் இது குறித்து சிபிஐக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அன்போடு எச்சரிக்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மதுரை சென்ட்ரலில் பெரிய இடத்து பெண் இன்று முதல் வெளியிடப்படுகிறது என்ற தகவலை பதிவிட்ட திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
இதுபற்றிய தகவலையும் படங்களையும் அனுப்பிய மதுரை எஸ்.குமார் அவர்களுக்கும் பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கும் நன்றி. பெரிய இடத்துப் பெண் கலக்கல் கொண்டாட்டங்களையும் வசூல் விவரங்களையும் தெரியப்படுத்துமாறு திரு.குமார் அவர்களை அன்போடு கோருகிறேன்.
திரு.லோகநாதன் சார், தலைவர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி குறித்த உங்கள் தொகுப்பு அற்புதம்.
மன்னாதி மன்னன் டி.வி. நிகழ்ச்சி பற்றிய கட்டுரைக்கு பாராட்டு தெரிவித்த திரு.சைலேஷ் பாசு அவர்கள், பெங்களூர் திரு. குமார் அவர்கள் ஆகியோருக்கு நன்றி.
திரு. ரவிச்சந்திரன் சார் , அன்பே வா பட ஸ்டில்லுக்கு எனது குறிப்பை பாராட்டியமைக்கு நன்றி. பாத்திரத்துக்கேற்ப நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்துவதில் தலைவர் கில்லாடி. நான் பார்த்து ரசித்ததை சகோதரர்களான உங்களோடெல்லாம் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நேற்று, மன்னாதி மன்னன் நிகழ்ச்சி பற்றிய கட்டுரையில் தலைவரின் ஸ்டைல்கள் பற்றி கூறியிருந்தேன். அவை ஒவ்வொன்றைப் பற்றியுமே தனி கட்டுரை எழுதலாம். நேரம்தான் இடிக்கிறது. இருந்தாலும் முடிந்தபோதெல்லாம் நேரத்தை பதிலுக்கு இடித்து தொடர்வேன். நன்றி.
திரு.கலியபெருமாள் அவர்கள், திரு. ஜெய்சங்கர் அவர்கள், திரு.ரூப் குமார் அவர்கள் ஆகியோர் பங்களிக்க வேண்டும் என்று நேற்றைய தினம் திரு.குமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்ததை வழிமொழிகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
1960களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் முழு மூச்சுடன் சமூக படங்களில் நடித்த நேரத்தில் எம்ஜிஆரை பலபத்திரிகைகள் , வார இதழ்கள் கிண்டல் செய்தார்கள் . மேலும் எம்ஜிஆர் படங்களை அடித்தள மக்கள் மட்டும் தான்பார்க்கிறார்கள் என்று கூறினார்கள் . எம்ஜிஆர் படத்தை மேல்தட்டு மக்கள் பார்க்கமாட்டார்கள் என்றும் கூறினார்கள் .
1961 ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய திருடாதே படத்தின் மூலம் சமூக புரட்சி செய்து திரை உலகில் ஒரு மாபெரும் விழிப்புணர்ச்சியினை உருவாக்கினார் . அண்ணாவின் நல்லவன் வாழ்வான் மூலம் மாபெரும் அரசியல்புரட்சியினை தந்தார் .தேவரின் தாய் சொல்லை தட்டாதே - துப்பறியும் அதிகாரியாக தோன்றி ரசிகர்களின் மாபெரும்ஆதரவை பெற்றார் .
1962ல் தாயை காத்த தனயன் - குடும்பத்தலைவன் - பாசம் -விக்கிரமாதித்தன் -மாடப்புறா படங்கள் மூலம்எம்ஜிஆருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள் .
1963ல் மக்கள் திலகம் 9 படங்களில் நடித்து மாபெரும் நடிகப் பேரரசராக , வசூல் மன்னனாக வலம் வந்ததை அன்றைய ஏடுகள் ,இதழ்கள் எம்ஜிஆரின் சாதனைகளை பாராட்டினார்கள் .
1964 - எம்ஜிஆரின் வெற்றி மேல் வெற்றி பவனி ....
தொடரும் .....