It is true, I agree that Kamal-Rajni's next gneration "rivalry" is Ajith-Vijay! Surya and Vikram fall in somewhat different category!
Printable View
It is true, I agree that Kamal-Rajni's next gneration "rivalry" is Ajith-Vijay! Surya and Vikram fall in somewhat different category!
Vedalam which released in All-Time record number of 105 screens in Malaysia has taken a historical opening in Malaysia. The movie has collected 6,571,533 MYR [$1,497,137 Rs 9.89 Cr]. It's the highest opening weekend gross for a Tamil Movie in Malaysia. The movie has already emerged as Thala's highest grossing movie in the country in just 6 days, not just that but Vedalam is already the 4th highest grossing movie of All-Time next to Endhiran, Sivaji & I.
List of Top 5 Grosser of All-Time in Malaysia
1-Endhiran 9,547,411 MYR
2-Sivaji 8,389,146 MYR
3-I 7,404,000 MYR
4-Vedalam 6,571,533 MYR (6 Days only)
5-Kaththi 6,430,110 MYR
TamilBoxOffice1.com @TamilBoxOffice1 12m
Whoa! Vedalam All Time Best opening in Malaysia :clap: :clap: :clap:
Quote:
1. Vedalam - 6,571,533 MYR
2. Kaththi - 4,129,270 MYR
3. Thuppakki - 4,009,001 MYR
4. Enthiran - 3,377,796 MYR
5. Lingaa - 3,317,410 MYR
With that best opening Vedalam straight away at no. 4 all time top grossers in Malaysia :2thumbsup:
Quote:
1. Enthiran - 9,547,411 MYR
2. Sivaji - 8,389,146 MYR
3. I - 7,404,000 MYR
4. Vedalam - 6,571,533 MYR
5. Kaththi - 6,430,110 MYR
Yes, VJ's main fan base in UK are of "Eezha diaspora", many of them are guys aged 30 and under, they try to associate them with his "guy next door look", and the fact he is married to Lankan Tamil girl make his fans rather sentimental over here. Rajni has the 2nd best fan base in UK , mostly aged 30+ Family audience with a combination of Eezha diaspora + IT crowd from TN/AP, I have seen loads of Telugu guys watch Rajni movies in Cinema, next is Ajith/Surya mainly aged under 35 with family audience , then it is Kamal whose main fans are from TN/AP followed by Dhanush/Shimbu ....etc
USல Distributor ரிப்போர்ட் கொடுக்குறான். அதுதான் உண்மை நிலவரம் வெளிவருது. மற்ற ஊர்ல எல்லாம் எவன் எவனோ ரிப்போர்ட் கொடுக்குறான். உதாரணத்திற்கு tamilboxoffice1 காரன் தூங்காவனம் மதுரை மாவட்டத்தில் தீபாவளியன்று 60 லட்சம் வசூல் செய்ததுன்னு சொன்னான். ஆனால் உண்மையில் மதுரையில் மட்டுமே கிட்டத்தட்ட 50 லட்சம் வசூல் செய்தது. போன சனிகிழமை கூட மதுரையில் தூங்காவனம் full ஆனது. ஆனால் வேதாளத்திற்கு டிக்கட் இருந்தது.
6 மாதத்தில் 3 படங்கள் ரிலீஸ் செய்தும் படம் இப்படி ஓடுவதே மிகப்பெரிய சாதனை.
For those who believes ABO.
http://andhraboxoffice.com/uploads/f...nd-wwcolls.jpg
Courtesy: Tamil Hindu
வசூல் மழையில் 'வேதாளம்': மகிழ்ச்சியில் விநியோகஸ்தர்கள்
தற்போதே நல்ல லாபத்தில் இருப்பதால், 'வேதாளம்' படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'வேதாளம்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.
தீபாவளி அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வசூலில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனையை 'வேதாளம்' நிகழ்த்தியிருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
இப்படம் குறைந்த விலையில் விநியோகஸ்தர்களுக்கு அளிக்கப்பட்டு இருப்பதும், 'யு' சான்றிதழ் இருப்பதால் வரிச்சலுகை பெற்றிருப்பதும் 'வேதாளம்' படத்துக்குக் கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
இப்படம், முதல் நாள் 15.3 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ச்சியாக மழை பெய்து வந்தாலும் வசூல் பெரியளவில் குறையவில்லை. இதனால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இப்படத்தை வாங்கிய பல விநியோகஸ்தர்கள் தற்போதே லாபம் அடைந்திருக்கிறார்கள்.
தற்போது இப்படத்தின் வசூல் நன்றாக இருப்பதால், இன்னும் இரண்டு வாரங்களில் கண்டிப்பாக 'எந்திரன்' படத்தின் தமிழக மொத்த வசூல் சாதனை முறியடிக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் கணித்திருக்கிறார்கள்.
https://www.spicinemas.in/chennai/sh...1-2015?seats=2
Vedalam is continued in big Sathyam screen next week as well!
Agreed! 100 crore ellam unmaiyanu therila! But film has done very well!which is very good!
Article from Vikatan, I see a little bit of bias towards Vijay. But anyway......
Pallu irukaravan pakoda saapidalaam, thamizh padikka therinjavan, padichi purinjikko!
Quote:
உங்களுக்கு இந்தத் தீபாவளி தலை தீபாவளியாக இருக்கலாம். ஆனால், அதை இணையத்தில் எங்கும் சொல்லிவிடாதீர்கள். சொன்னால், அடுத்த இரண்டு நாட்கள் உங்கள் வாழ்நாளின் உச்சபட்ச மன உளைச்சலைச் சந்திக்க நேரிடும்; உங்கள் ஃபேஸ்புக் பக்கம் வசை மழைகளால் நிரம்பக்கூடும். ட்விட்டரில் நிறையப் பேர் உங்களை ரவுண்டு கட்டிவிடுவார்கள்.
சும்மா சொல்லவில்லை, உதாரணத்தோடுதான் சொல்கிறோம்... சில வாரங்களுக்கு முன் நடிகர் மாதவன், ஆவணி அவிட்டம் அன்று தனது மகனுடனான புகைப்படத்தை 'தல ஆவணி அவிட்டம்’ என ட்விட்டரில் அப்லோடினார். பாய்ந்து ஓடிவந்த அஜித் ரசிகர் ஒருவர் ''தல’ன்ற வார்த்தையை அஜித்தைத் தவிர வேற யாருக்கும் எதற்கும் பயன்படுத்தாதீர்கள்’ என்றார். இதைக் கண்ட சின்மயி, அதை 'ஓ... மை காட்!’ என சிரித்துக்கொண்டே ட்விட்டரில் ஷேர்செய்ய, அந்த ஒரு அஜித் ரசிகர், நூறு அஜித் ரசிகர்கள் ஆனார்கள். நூறு பேர் ஆயிரமாகப் பெருகினார்கள். அனைவரும் சின்மயியை வறுத்தெடுக்க, அதில் சிலரிடம் சின்மயி சற்று கோபமாகப் பதில் அளிக்க... ஆரம்பமானது போர். அடுத்த சில நாட்கள் பல ஐ.டி-க்களில் வந்து சின்மயியைக் கலவரப்படுத்தினார்கள். அதில் 99 சதவிகிதம் பேர், அஜித் புகைப்படத்தை டிஸ்ப்ளே படமாக வைத்திருந்தனர். அவர்களின் நிஜப் பெயர் என்ன, எந்த ஊர் எதுவும் தெரியாது. அங்கே அவர்களின் அடையாளம் அஜித் ரசிகர்... அவ்வளவுதான்.
இது அஜித் ரசிகர்களின் செயல்பாடு மட்டுமல்ல... இணையத்தில் விஜய் ரசிகர்களும் இப்படித்தான் செயல்படுகின்றனர். மற்ற மொழிகளிலும் இதுபோன்ற நீயா... நானா போட்டிகள் இருந்தாலும், விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல்போல இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடப்பது இல்லை. சமீபத்தில் வெளியான 'புலி’ பட ரிலீஸ் அன்று விஜயையும், 'புலி’ படத்தையும் வரைமுறை இல்லாமல் கலாய்த்து மீம்கள் முளைத்தன. பதிலுக்கு விஜய் ரசிகர்கள், அஜித்தைக் கலாய்த்து மீம்கள் போட்டாலும் வந்தவர்கள் போனவர்கள் எல்லோரும் இறங்கி அடிக்கும் அளவுக்கு 'புலி’ இரையானது.
'புலி’ படத்தைப் பற்றி இத்தனை நெகட்டிவ் விமர்சனங்கள் பரவியதற்கு மிக முக்கியமான காரணம், அஜித் ரசிகர்களும் அவர்கள் உருவாக்கிய மீம்களும்தான் என்பது விஜய் ரசிகர்களின் கோபம். அதனால் 'புலி’ படத்தைக் கலாய்த்த ட்விட்டர் ஐ.டி-க்களை முடக்க, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கே சென்று புகார் கொடுத்தார்கள். விஜயைக் கலாய்க்கும் ட்விட்டர் ஐ.டி-க்களில் முதல் இடம் 'கொக்கி குமார்’ என்ற ஐ.டி-தான். இவர்கள்தான் 'விழுப்புரம் ரன்’ என்ற பெயரில் மொபைல் கேம் எல்லாம் உருவாக்கியவர்கள். இவர்களை, விஜய் தரப்பு புகார் கொடுத்து பிளாக் செய்தது. ஆனால், புதுப்புது ஐ.டி-க்களில் கொக்கி குமார் ஐ.டி-க்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. விஜய் தரப்போ, 'அஜித்துக்கு நெருக்கமானவர், கொக்கி குமாருக்கு காசு கொடுத்து விஜயை அவமானப்படுத்தி எழுதவைக்கிறார்’ என்கிறது.
கொக்கி குமாரை ஃபேஸ்புக் சாட்டில் பிடித்தோம். 'நாங்க ஒருத்தர் இல்லை. ஆறு பேர் இருக்கிறோம். இன்ஜினீயரிங் படிக்கிறோம். ஆரம்பத்துல ஆன்லைன்ல அஜித்தை ஓவரா கலாய்ச்சாங்க. அது பொறுக்க முடியாமத்தான் நாங்க உள்ளே வந்தோம். 'விழுப்புரம் ரன்’ கேமுக்கு புரோகிராம் எழுதினது எங்க குரூப்ல இருக்கிற ஒரு பொண்ணுதான். இந்த கேமை உருவாக்க எங்களுக்கு 2,000 ரூபாய் செலவாச்சு. இது எங்களோட அப்பா-அம்மா கொடுத்த பாக்கெட் மணி. யாரும் எங்களுக்கு காசு தரலை. ஒவ்வொரு மாசமும் நெட் பேக்குக்கு மட்டும் 1,000 ரூபாய் செலவுசெய்றோம். 'அஜித்தைக் கலாய்ப்பதை நிறுத்தினால்தான் நாங்கள் விஜயைக் கலாய்ப்பதை நிறுத்துவோம். இல்லை என்றால், வேறு வேறு பெயர்களில் வந்துகொண்டே இருப்போம்’ என சாட்டில் மெசேஜ் சொன்னது கொக்கி குமார் ஐ.டி.
விஜய்-அஜித் இணையச் சண்டை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் பேசியபோது, ''சமூக வலைதளங்கள்ல நடக்கிற இதுபோன்ற செயல்பாடுகள், ஆரோக்கியமற்ற சூழ்நிலையைத்தான் உருவாக்கும். ஒரு படம் வெளியான அன்றே கண்டபடி மீம்ஸ் போட்டு அந்தப் படத்தைக் காலிபண்ணும் வேலையைச் சிலர் செய்கிறார்கள். இது ரொம்ப ரொம்பத் தப்பான விஷயம். வெளிநாடுகள்ல பிராட் பிட் படம் ரிலீஸ் ஆகும்போது, டாம் குரூஸ் ரசிகர்கள் இப்படிப் பண்றதில்லை. ஜாக்கி சான் படம் ரிலீஸ் ஆகும்போது ஜெட்லி ஃபேன்ஸ் இப்படிப் பண்றதில்லை. தமிழ்நாடு மட்டும்தான் சமூக வலைதளங்கள்ல ரொம்ப மோசமா போய்க்கிட்டிருக்கு. மற்ற மாநிலங்களில் இருக்கும் ரசிகர்கள், எந்த ஒரு ஹீரோவையும் தனிப்பட்ட முறையில் சோஷியல் மீடியாக்களில் கிண்டல் செய்வதில்லை. முன்பெல்லாம் இந்த மாதிரி ட்ரெண்டு கிடையாது. பட விமர்சனத்தோடு முடிஞ்சுபோயிடும். நாள் முழுக்க உட்கார்ந்து, தாறுமாறாக எழுதி, படம் பார்க்க வர்றவங்களை பயமுறுத்தி, தியேட்டருக்கு வரவிடாமப் பண்றதுக் கான வேலை இது. இதைச் செய்ய தனியா ஒரு குரூப்பே செயல்படுது. இதனால இண்டஸ்ட்ரியோட பொருளாதாரம் ரொம்பவே பாதிக்குது. ஒரு படத்தோட ஒட்டுமொத்த உழைப்பும் இதனால் வீணாகுது.
படம் ரிலீஸ் ஆகும்போது, முதல் மூன்று நாட்களுக்கு ஃபேன்ஸ் கூட்டம்தான் அதிகமா இருக்கும். அப்புறம்தான் குடும்பம் சகிதமா வருவாங்க. இந்த கமென்ட்டுகளைப் பார்க்கிறவங்களுக்கு, படத்தைப் பற்றி தப்பான இமேஜ்தான் வரும். இதைக் கட்டுப்படுத்தவும் முடியாது. அஜித், விஜய் வந்து சொன்னாலும் இவங்க திருந்த மாட்டாங்க. ஒருகட்டத்தில், பெரிய ஸ்டார்கள் எல்லாம், 'நம்ம வேலையைப் பார்ப்போம். யாரோ என்னமோ பண்ணிட்டுப் போகட்டும்’னு கண்டுக்கிறதே இல்லை. நாகரிகமே இல்லாத அளவுக்கு இந்த ட்ரெண்டு போயிட்டு இருக்கு. இதுக்கு என்னதான் தீர்வுனு எவ்வளவு யோசிச்சாலும் புரியலை!' என்கிறார் நொந்துபோய்.
ட்விட்டரில் இன்னும் ஒரு படி அதிகம். தமிழின் ஆக மோசமான கெட்ட வார்த்தையுடன்தான் ஆரம்பிப்பார்கள். பிளாக் செய்யும் வசதி இருந்தாலும், புற்றீசல்போல புதிய புதிய ஐ.டி-க்களில் வருவார்கள். மேலும், பிளாக் செய்வது என்பது, அவர்களைப் பொறுத்தவரை இன்சல்ட். இன்னும் வேகமாக, இன்னும் வீரியமாகத் தாக்குவார்கள். இப்படியெல்லாம் செய்வது, ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் அல்ல; நம்முடன் அலுவலகத்திலும் கல்லூரியிலும் உடன் இருப்பவர்கள்தான். அங்கே இயல்பாக இருக்கும் இவர்கள், இணையத்துக்கு வந்துவிட்டால் மட்டும் 'ஏழு எட்டு தலைமுறையைத் தோண்டி எடுத்து’த் திட்டுவார்கள்.
சமூக வலைதளங்கள் உருவாக்கி இருக்கும் மெய்நிகர் மாய உலகம் சுவாரஸ்யமானது. மனித இனம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வந்த சமூக மதிப்பீடுகள், வரையறைகள் எதுவுமே அங்கே செல்லுபடி ஆகாது. மனதின் ஆழ்மன ஆசைகள், வக்கிரங்கள் உள்ளன உள்ளபடியே வெளிப்படும் இடம் அது. நம் முகத்தை வைத்துக்கொண்டு அவற்றைச் செய்ய முடியாதபோது முகமூடிகளைச் சூடிக்கொள்கின்றனர்.
எப்போதும் பிஸியாகவே இருக்கிறார்கள் இளைஞர்கள். ஆனால், 'நிஜத்தில் 40 சதவிகித இளைஞர்களை வாட்டும் விஷயம் தனிமைதான்’ என்கின்றன பல சர்வேக்கள். இதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள பெரும்பாலானோர் கையில் எடுப்பது மொபைல். அதில் இருக்கும் இணையம் உருவாக்கித் தரும் இன்னோர் உலகை தங்கள் ஆழ்மன ஆசைப்படி பல வகைகளில் வடிவமைத்துக்கொள்கிறார்கள். இவர்கள் விஜய், அஜித்துக்கு என அதை டெடிகேட் செய்கிறார்கள். அந்த உலகில் விஜயும் அஜித்தும் அவர்களின் கடவுள். அதை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் போர்தான்.
இந்த நிலைமைக்கு, ஒருவகையில் இரண்டு நடிகர்களுமே காரணம்தான். சினிமாவில் ஒருவரை ஒருவர் பல காலமாகவே சீண்டிவருகிறார்கள். 'அட்டகாசம்’ படத்தில் 'ஹிட்லராக வாழ்வது கொடிது. புத்தனாக வாழ்வது கடிது. ஹிட்லர், புத்தர் இருவருமாய் நான் இருந்தால் உனக்கென்ன?’ என அஜித், விஜயைச் சீண்டினார். பதிலுக்கு, விஜய் 'ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம். புத்தன் வாழ்க்கையும் வேண்டாம். உன்னை என்னைப்போல் வாழ்ந்தால் போதும் உலகம் ரொம்ப அழகு’ என்றார். (இவர்களின் சீண்டலை கொம்பு சீவிவிடும் வார்த்தைகளைப் போட்டு பாடல் எழுதித் தரும் நம் கவிஞர்களுக்கும் இதில் பங்கு உண்டு). விஜய் படத்தில் வில்லன்களை 'தல’ என அழைத்தது உண்டு. இப்படி ஆரம்பகாலத்தில் தெரிந்தோ தெரியாமலோ தொடங்கிவைத்ததுதான் இப்போது இந்த அளவுக்கு அசுர வடிவம் எடுத்து நிற்கிறது. இருவரும் இணைந்து முயற்சி செய்தால்தான் இதைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்கான சமூகப் பொறுப்பு விஜய், அஜித் இருவருக்குமே உண்டு. ஏனென்றால், அவர்கள் தொடங்கிவைத்ததை அவர்கள்தான் முடித்துவைக்க வேண்டும்!
ஃபேஸ்புக்கில் மீம்ஸ், ட்விட்டரில் ஹேஷ்டேக் என்பதுபோல, யூடியூபிலும் இவர்கள் அட்டகாசம் நடக்கிறது. அஜித்தின் டீஸரோ டிரெய்லரோ வெளியானால், அதை விஜய் ரசிகர்கள் டிஸ்லைக் செய்வார்கள். அதேபோல அஜித் ரசிகர்களும் செய்வார்கள். 'வேதாளம்’ டீஸர் வெளியான ஒரே மணி நேரத்தில் 25,000 லைக்குகளும், 12,000 டிஸ்லைக்குகளும் விழுந்தன. தவிர, அதிக முறை பார்க்கப்பட்ட டிரெய்லர் யாருடையது என்ற ரெக்கார்டுக்காக மீண்டும் மீண்டும் பார்க்கவும் செய்கிறார்கள்.
விஜய், அஜித் மோதலில் பெரிய காமெடியே ஹேஷ்டேக்தான். ட்விட்டரில் மொத்தமே 140 எழுத்துக்கள்தான் எழுத முடியும். இவர்கள் எழுதும் ஹேஷ்டேகே அனுமார் வால்போல 30, 40 எழுத்துக்கள் நீளும். அதையும் நிறைய ட்வீட்டுகள் எழுத வேண்டும் என்பதற்காக 1, 2 என எண்களை மட்டுமேகூட ட்வீட்டுவார்கள். உதாரணத்துக்காக விஜய், அஜித் ரசிகர்கள் உருவாக்கிய ஹேஷ்டேக் சில:
#VijayThecurseofTamilCinema
#GetwellSoonMentalAjithFans
#twoyearsofBlockbusterArrambam
#OneyearofKathisupermacy
#VedalamAlbumWithAnirudhBdayBash
#ArrestAjith4AntiSocialActivity
#Veeram_thecheckmatefromSunTv
#MakeWayToTrollVedalam
இந்த ஆபாச அர்ச்சனையில் பெண்களுக்கும் பங்கு உண்டு. சென்ற வாரம் வெளியான வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று விஜய் ரசிகர்களின் பிபி-யை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டது. 'நான் தல ரசிகைடா’ என ஆரம்பிக்கும் அந்த ஆடியோவில், விஜயையும் அவர் ரசிகர்களையும் அர்ச்சிக்கும் வார்த்தைகள் ஆபாசத்தின் உச்சம். அது வெளியான ஓரிரு நாட்களிலே பேசியவரின் ஃபேஸ்புக் பக்கம் கிடைக்க, விஜய் ரசிகர்கள் புலனாய்வில் அவரின் மொபைல் எண்ணும் கிடைத்துவிட்டது. தன் அடையாளம் தெரியாது என்ற தைரியத்தில் இப்படிச் செய்ததாகச் சொல்லி, அந்தப் பெண் மன்னிப்பு கேட்டதால் விஷயம் முடிவுக்கு வந்தது என்கிறார்கள்.
AM Ratnam doesn't know but .....
http://www.newshunt.com/india/tamil-...cat-cinemaNews
Neenga mudhal la unga joke a kurainga Adhukaaga thaan source kuduthurukken. Unarchivasa padaama linka click pannu.
Freedom its rip from Wikipedia is the point. If you still want to believe it, its ur wish.
Freedom Nice DP :thumbsup:
"பேசவே வேண்டாம்னு அடக்கி அடக்கி பாத்தேன் ஆனா என்னால முடியல அதனால பேசுறேன், பேசவேண்டிய சூழ்நிலை உருவாகிடுச்சி"
Tirupur subramaniyam about Theaters and fake BO Trackers spreading false numbers and increasing salary of heros and directors
http://www.newtamilcinema.com/irrita...r-subramanian/
direct link - http://www.newtamilcinema.com/wp-con...bramaniyan.mp3
Read first 2 paragraph of his comment and also about vedalam
Exactly the points. He asks for basic common sense and also speaks about rain effect
தமிழ்ச்செல்வன்
November 19, 2015 at 1:00 pm
ஆரம்பம் படம் மூன்றே நாளில் ரூ 100 கோடி வசூல் என சில ஆர்வக் கோளாறுகள் அடித்துவிட, அடுத்த நாளே தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டது வருமான வரித்துறை. உண்மையில் அந்தப் படம் மொத்தமே ரூ 50 கோடியைக் கூடத் தாண்டவில்லை. ஏஎம் ரத்னத்தின் கடன்கள் முழுமையாக அடையாத நிலையில்தான், அடுத்த படமான என்னை அறிந்தாலுக்கு கால்ஷீட் தந்தார் அஜீத். அந்தப் படத்தின் வசூல் நிலவரம் அனைவருக்கும் தெரிந்ததே. அவ்வளவு ஏன், என்னை அறிந்தாலுக்கு முந்தைய படமான வீரம், அதன் தயாரிப்பாளர் விஜயா புரொடக்ஷன்ஸுக்கு மொத்தமாக ரூ 8 கோடி கடனை ஏற்படுத்தியதாகவும், ஆனால் அஜீத் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட தன்னிடம் விசாரிக்கவில்லையே என்றும் அதன் உரிமையாளர் வெங்கட்ராம ரெட்டி புலம்பியிருந்தார். இந்த விவரங்களையெல்லாம் நாம் இதுவரை எங்கும் எழுதியதில்லை. ஆனால் பக்குவமற்ற அஜீத் ரசிகர்கள் எழுத வைத்துவிட்டார்கள். அவர்கள் ஆத்திரத்தை மறந்து, அறிவோடு சிந்திக்க வேண்டிய நேரம் இது.
இப்போது வெளியாகியுள்ள வேதாளம் படம் நன்றாக ஓடுகிறது.. அஜீத் கேரியரில் பெரிய வெற்றி என்றெல்லாம் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சந்தோஷம். தாராளமாக ஜெயிக்கட்டும். ரஜினியின் தாசனாக தன்னை மாற்றிக் கொண்ட அஜீத்துக்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவும் கணிசமாக உள்ளது. ஆனால் உடனே இவர்தான் அடுத்த ரஜினி என இணையத்தில் பினாத்த ஆரம்பித்துவிடுகிறார்கள் சில ரசிகர்கள். அதற்கு இவர்களே ஒரு காரணத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். தமிழ் திரையுலகில் எந்திரனுக்கு அடுத்து அதிக வசூல் குவித்த படம் என்று வேதாளத்தைக் குறிப்பிட்டு, பொய்யான புள்ளி விவரங்களை வேறு துணைக்கு அழைக்கிறார்கள்.
இது தெரியாமல் நடக்கும் தவறு அல்ல.. தப்பு. தெரிந்தே செய்யும் தப்பு. அதை அனுமதிக்கக் கூடாது, முடியாது!
குறைந்தபட்ச அடிப்படை அறிவு கூட இல்லாமல் வேதாளத்தை எந்திரனோடு ஒப்பிடுவது எத்தனை பெரிய முட்டாள்தனம்.
முதலில் தியேட்டர் கணக்காவது தெரியுமா இவர்களுக்கு?
எந்திரன் வெளியானது 2885 அரங்குகளில். தமிழகத்தில் மட்டும் 600 அரங்குகள். முதல் மூன்று தினங்களில் 720 அரங்குகள். தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் மொத்த வசூல் ரூ 23 கோடி (செபியில் சமர்ப்பிக்கப்பட்ட வசூல் விபரம் இது.) ஆந்திராவில் மொத்தம் ரூ 50 கோடி. உலகளாவிய முதல் நாள் வசூல் ரூ 33.8 கோடி.
ஆனால் இந்த புள்ளி விவரங்களெல்லாம் எவருக்கும் நினைவில் இல்லை போலிருக்கிறது. அஜீத்தின் வேதாளம் ரூ 15.4 கோடியை வசூலித்து எந்திரனைத் தாண்டியது என்று பொய்யாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள். வேதாளம் வெளியானதே மொத்தம் 850 அரங்குகள். தமிழகத்தில் இல்லை, உலகளவில்.
2885 அரங்குகளில் வெளியான எந்திரன் வசூலை – அன்றைக்கு இருந்த அதே டிக்கெட் விலை – வெறும் 850 அரங்குகளில் வெளியான வேதாளம் முறியடிக்க வாய்ப்பிருக்கிறதா.. அதுவும் பேய் மழையால் ரசிகர்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த கடந்த 8 நாட்களில்?
உண்மையில் வேதாளத்தின் வசூல் நிலவரம் என்ன?
படம் வெளியாகி 8 நாட்களில் இந்தப் படம் தமிழ் நாட்டில் ரூ 40 கோடியைத் தாண்டவில்லை. இதை எங்கு வேண்டுமானாலும் என்னால் சொல்ல முடியும். மற்ற மாநிலங்கள், நாடுகள் அனைத்திலும் சேர்த்து ரூ 57 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளது. இனி மிஞ்சிப் போனால் 8 முதல் 10 கோடி தேற வாய்ப்புள்ளது. இதுதான் வேதாளம் பாக்ஸ் ஆபீஸ். 99 சதவீதம் அதிகாரப்பூர்வ கணக்கு இது. இந்தப் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் அஜீத்தான் என்பது கூடுதல் தகவல். ஏஎம் ரத்தினத்திடம் இன்று போனில் விசாரித்தபோது, பெரிய கும்பிடு போட்டு, ‘எல்லாம் பொய்த் தகவல் என்று மட்டும் போடுங்கள்’ என்று வேண்டினார்.
தூங்காவனத்தின் நிலை என்ன என்று சிலர் கேட்கக் கூடும். வெந்த புண்ணில் உப்புக் காகிதம் வைத்து தேய்ப்பதற்கு சமம் அது. இதுவரை ரூ 20 கோடியைத் தாண்டவில்லை அந்தப் படம். அமெரிக்காவில் மட்டும் ரூ 3 கோடியை வசூலித்துள்ளது.
Pongal release pathi pesuna sila pala paer [emoji38]
BO wise, PN > UV >> TV.
For me, personally, UV>>>PN, TV is a timepass movie.
Not sure why kamal movies are not well received in BO with VR and PN being exception recently. Audience are still looking for old formula mass masala movies? Or issue with wide release?
I am not really sure, Kamal cares about BO collection anymore. He wants to do as many movies as possible executing whatever ideas he has through some in the name of "chota directors". :cool:
Everybody knows who is the real director! :lol:
Yes. TV for sure would have collected more than UV. It's had good run at least for opening weekend
What is this guy trying to prove...No body can get to a pin point BO number!!! How does he know about the WW collections he is a local distributor confined to Tirupur area...Not even Coimbatore
Vedalam released in 6 theaters considering a average seating capacity of 200 per show and a average ticket price of 100 for the first 5 days and 5 shows for the first day and 4 shows after..It is 1 Lakh per theater times 6 - So approximately 30 Lakhs in 5 Days...This is a very conservative figure.
This is becoming a trend claiming the movie has not done well and fake publicity...By no means I am endorsing the movie entered the 100 C club in 8 days, But also this guy looks fishy, why is he concerned abt enthiran collections and comparing Endhiran to VDM...He should only be concerned abt vedalam IMO
Another Singaravelan in the Making...Every thing is a loss, then they need to move away from distributing Movies, Another Tidbit here for those who are not aware, Some Distributors are directly involved in making Pirated copies and make a butt load of money!!!
Ada anga Bogikae valiyilla
..pongL pathi pesalaaama ...😂
Kamal and Ajit padam Mattam nalla mattam tatraapla.... Endiran Tn modhaa naaal 24 Kodi nu ethividraaar.....Linga vishyathila Rajini oda Urudhunaiyya irundhaaar.... Its open for all to say his Bias .
Seri Oscar Ravichandran ta 15 kodia Vangitti odiponavaaar Kanakkum solirkalaaaam naaanga nadunila vaadhiyaaa nambi yirupoom paaawam vivaram pathala pola 😐😐
If he is close to rajini he has to speak bad about ajith ? Wow