-
#முதல்வரின் #சிலம்பாட்டம்
தூத்துக்குடிக்கு, முதல்வர் புரட்சித்தலைவர் வருகை தந்த போது அவர் பேசுவதற்காக "#தருவை" மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. தலைவர் வரார்னா கூட்டத்துக்கு சொல்லணுமா ??? செம கூட்டம்...
ஆண்களும், பெண்களுமென அலைமோதியது..
அதனால் நெரிசல் அதிகமாகியது...
வெளியில் நின்றிருந்த பல தாய்மார்கள் தலைவரின் மீதிருந்த பேரன்பின் காரணமாக, மைதானத்திற்குள் வருவதற்காக, காம்பவுண்டு சுவர் மீது ஏறிக்குதித்து போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி, உள்ளே நுழைந்தனர். இதனால் காவலர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக லத்திக்கம்பால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
இதை மேடையிலிருந்து கவனித்த எம்ஜிஆர் உடனே ஒலிப்பெருக்கியில், "#காவலர்கள் #தங்களிடமுள்ள #லத்திக்கம்புகளை #உடனே #மேடையில் #ஒப்படைக்கவும்" என அறிவிப்பு செய்தார். போலீசாரும் லத்திக்கம்புகளை மேடையில் ஒப்படைத்தனர்...
நிகழ்ச்சி முடியும் வரை வத்திக்கம்புகளை காவலர்கள் வசம் ஒப்படைக்கவில்லை..
நிகழ்ச்சி முடியும் போது #நம்ம #முதல்வர் என்ன செய்தார் தெரியுமா ?
கையில் ஒரு லத்திக்கம்பை எடுத்துக்கொண்டு, மேடையிலிருந்து தமக்கே உரிய பாணியில்... #வேட்டியை #மடித்துக் கட்டிக்கொண்டு, மக்கள் கடலின் நடுவே, "#சிலம்பம்" ஆடியவாறே மக்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறே தனது கார் வரை சென்று கையசைத்தவாறு விடைபெற்றார்...
இப்பேர்ப்பட்ட ஒரு காட்சியைக்கண்ட மக்களும், பணியில் இருந்த காவலர்களும் எழுப்பிய விசில் சத்தங்களிலும், கரவொலிகளிலும் விண்ணைக் கிழித்தனர்...
பின்னர் அனைத்து லத்திகளும் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.
#முதலமைச்சராக #இருந்தாலும், #நமக்கு #எப்பவுமே #நமக்கு #பாசமிகு #வாத்தியார் #தான்.........bsm...
-
#மக்கள்_திலகத்தின்_வெற்றிப்படங்கள்...
#உழைக்கும்_கரங்கள்...!!!
கோவை செழியன் தயாரிப்பு- கே.சங்கரின் இயக்கம்-நாஞ்சில்.கி.மனோகரனின் வசனம்-மெல்லிசை மன்னரின் இசை ஆகியவற்றோடு 1976 ம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப்படம்.
மக்கள் திலகம் தனி இயக்கம் கண்டு, 1977 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரங்கன் என்ற கதாபாத்திரத்தில் ஏழைப்பங்களனாய் வருகிறார்.அசத்துகிறார்.
ஊரை அடித்து ஊழல் செய்யும் சேர்மேன் நாகலிங்கத்தையும் (தங்கவேலு) அவரது கலப்பட தொழிலையும் மக்களிடம் அம்பலப்படுத்துகிறார்.
நாகலிங்கத்தின் விதவை தங்கை கெளரி ((குமாரி பத்மினி)) ஒரு போலிச்சாமியார் கபாலியிடம் ((தேங்காய் சீனிவாசன்))தன்னை இழக்கும் போது, அவனுக்கே அவளை மணமுடித்து தன் தாய் போல மதிக்கும் அன்னம்மாளின் ((பண்டரிபாய்))குடும்ப மானத்தை காக்கிறார்
தன்னை காதலிக்கும் கிராமத்து முத்தம்மா ((லதா)) விற்கு வாழ்வளிக்கிறார்.
பக்தி வேண்டியதுதான்..ஆனால் பக்தி என்ற போர்வையில் போலிச்சாமியார்களுக்கு ((தேங்காய்-நாகேஷ்)) இடமளிக்கவே கூடாது என சொல்கிறார்.
தன்னை ஒரு தலையாய் காதலித்த பெண்ணை பங்கஜம்.. ((பவானி)) இசையரசியாய் வாழ வைக்கிறார்.
விவசாயமே நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை படம் முழவதும் கிராமத்து விவசாயியாய் வாழ்ந்து காட்டுகிறார்.
இந்த படத்தில் அன்றும்-இன்றும்-என்றும் பேசப்பட்டது கோவில் திருவிழாவில் நடக்கும் அந்த மான் கொம்பு சண்டை, மக்கள் திலகத்தின் வேகத்தில், காமிராவே திணறுகிறது. அதே போல வைக்கோல் போரில் ஜஸ்டினுடன் போடும் சண்டையும ரசிகர்களால் பெரிதும் சிலாகித்து பேசப்பட்டது.அப்போது மக்கள் திலகத்திற்கு 59 வயது, இந்த வயதிலும் மான் கொம்பு, சிலம்பாட்டம் என்று பட்டையை கிளப்பினார் மக்கள் திலகம்.
"நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே" இந்த பாடலாக மட்டுமின்றி ஒரு பாடமாகவும் இன்று வரை ஒலிக்கிறது. இதை தவிர "வாரேன்...வழி காத்திருப்பேன்", "கந்தனுக்கு மாலையிட்டாள்" பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.
அருமையான கதை, நடிப்பு,பாடல்கள், வசனங்களை கொண்ட இப்படம் நூறு நாட்களை கடந்து சூப்பர் ஹிட்டானது..!!!
Source :https://en.m.wikipedia.org/wiki/Uzha...ngal...Sr.babu...
-
கடந்த 10.11.2020 முதல் பல ஊர்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலும் எம்ஜிஆர் படங்களே திரையிடப்பட்டுள்ளன. தீபாவளியையொட்டி வீட்டில் ஏராளமான வேலைகள் உண்டு. கடைவீதிகளுக்கு செல்ல வேண்டும். கனமழை பெய்யும் காலம் இது. கொரோனா பீதி ஒருபக்கம். இத்தனை மோசமான சூழலில் திரையரங்கை திறந்தாச்சு எப்படி மக்களை தியேட்டர்பக்கம் வரவழைப்பது என்ற யோசனையில் ஆழ்ந்த திரையரங்கினர் எம்ஜிஆர் படம் ஒன்றால்தான் இத்தனை மோசமான நிலையை சமாளிக்க முடியும் என நல்ல முடிவெடுத்து எம்ஜிஆர் படங்களை திரையிட்ட வண்ணம் உள்ளனர். வேற ஒரு நடிகர் படம் திரையிடுவது என்பது நினைத்தே பார்க்க முடியாது. எனவே 'எம்ஜிஆர் படங்களைப் போடு...மக்களை திரட்டு...பணத்தை அள்ளு' என வழக்கமான பாணியை கையிலெடுத்தனர். எண்ணம் சரிதான்.... ஆனால்....ஆனால்...ஊர் முழுக்க போஸ்டர் விளம்பரம் முன்பைவிட அதிகமாக செய்யணுமா, வேண்டாமா? டிக்கெட் விலையை குறைக்க வேணுமா வேண்டாமா? டிஜிட்டலில் வெளிவந்த தலைவர் படங்களை களமிறக்க வேணுமா வேண்டாமா? நாளிதழில் விளம்பரம் கொடுக்கணுமா வேண்டாமா? (சில ஊர்களில் தியேட்டர் வாசலில் மட்டும் போஸ்டர் வைத்துள்ளனர்.) 'என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு, நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை' என்ற தலைவரின் வாக்கை நினைத்துப் பார்க்க வேணுமா வேண்டாமா? இதை வாசிக்கும் நீங்கள் உங்க ஏரியா தியேட்டரில் எம்ஜிஆர் படம் போட வலியுறுத்த வேணுமா வேண்டாமா? இந்த செய்தியை share பண்ண வேணுமா வேண்டாமா????????????
இப்பொழுது தியேட்டர்களில் வெற்றி நடை போடுகிறது....திருச்சி- பேலஸ்-10.11.2020
முதல் - உரிமைக்குரல் - தினசரி 4 காட்சிகள்.
மதுரை வண்டியூர்
கல்லானையி ல்
11.11.2020 முதல்
நினைத்ததை முடிப்பவ ன்- தினசரி 3 காட்சிகள் கோவை சண்முகா 11.11.2020 முதல் தர்மம் தலைகாக்கும். 10.11.2020 திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷில் நீதிக்கு தலை வணங்கு. 10.11.2020 முதல் தஞ்சை GV , கரூர் அமுதா, திருவானை காவல் வெங்கடேஷ்வரா, சீர்காழி osm, திருவாரூர் தைலம்மை ஆகிய நவீன வசதிகள் கொண்ட தியேட்டர்களில் 10.11.2020 முதல் திருச்சி ஶ்ரீரங்கம் வெங்கடேஸ்வராவில் நவீன திரையரங்கில் 12.11.2020 முதல் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்பட்டுள்ளது. காலை 11, பிற்பகல் 3, மாலை 7 மணி என 3 காட்சிகள். (இன்னும் பல்வேறு ஊர் தியேட்டர்களில் தலைவர் படங்கள் திரையிடப்பட்டிருக்கலாம்.).......SML...
-
"தங்கப்பதக்கம்" சென்னையில் வசூல் மோசடி செய்த படம். ஒரு படம் வெளியான உடனே கைபிள்ளைங்க கணக்கு போட்டு விடுவார்கள். இந்தப்படத்துக்கு பிணந்தூக்க வேண்டியது வரும் என்று. உடனே சுறுசுறுப்பாக ஆக வேண்டிய காரியத்தை முன்னமே செய்து வைத்து விடுவார்கள். வடக்கயிறு, ஸ்டெச்சர் எல்லாம் ரெடியாக வைத்திருப்பார்கள்.
படம் பிணமாக விழுந்தவுடன் அவர்கள் கண்காணிப்பு மிக அதிகமாக இருக்கும். சில பிணங்களை 50 நாட்கள் தூக்கி சுமக்க வேண்டியதிருக்கும். சில பிணங்கள் 75 நாட்கள் வரை தூக்கி சுமப்பதால் செலவு அதிகம் பிடிக்கும். அதெல்லாம் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அப்படி தூக்கி செல்லும் பிணங்கள் சிலதுகள் தாங்களாகவே தற்கொலை செய்து கொள்வதுமுண்டு.
ஆனால் இந்த "தங்கப்பதக்கம்" பிணத்தை நெடுந்தூரம் தூக்கிசெல்ல வேண்டியிருந்ததால் ஸ்டெச்சர் உதவியுடன் தூக்கி செல்லும் வழியில் 23வது வாரத்தில் பிணம் தாங்கமுடியாத
துர்நாற்றம் வீசியதால் இதற்குமேல் முடியாது என்று கைவிட்டவுடன் பிணத்தை புதைக்க ஏற்பாடு செய்து 23 வது வாரம் கடைசி என்று பத்திரிகை தகவல் முதற்கொண்டு அறிவித்தபின் பிணத்தின் சொந்தக்காரர் தலையிட்டு பிணத்தை சுத்தம் செய்து புதிய கட்டுக்கள் போட்டு சானடைசர் மற்றும் சென்ட் உதவியுடன் மீண்டும் பாடையில் ஏற்றி மேளதாளத்துடன் 176 வது நாள் அடக்கம் செய்த கதை யாருக்கு புரிகிறதோ இல்லையோ கைபிள்ளைகளுக்கு நிச்சயம் புரியும்.
ஏன்னா பிணந்தூக்கியே அவர்கள்தானே. நான் சொன்னது சென்னையில் "தங்கப்பதக்கம்" ஓட்ட படாதபாடு பட்ட கதை. ஏற்கெனவே இழுத்து ஓட்டப்பட்டதால் வந்த வசூலோடு பிணத்தின் சொந்தக்காரர் போட்ட பணத்தையும் சேர்த்து வந்த பொய்வசூலை காட்டி ஊரை ஏமாற்றி பிழைக்கும் கைபிள்ளைகளே! உங்களுக்கு ஏற்ற ஐயன்தான் செளத்ரி பையனும். படத்திலே நேர்மையான போலீஸ் அதிகாரி. ஆனால் உண்மையில் கபட வேடதாரி.
சாந்தியில் "தங்கப்பதக்கம்"
168 நாளில் பெற்ற வசூல் ரூ 11,03,644.40 . 176 நாட்களில் பெற்ற வசூல் ரூ 11,65,185.50. அதாவது கடைசி 8 நாட்களின் வசூலான ரூ61,541.10 ஐ நடைபெற்ற 24 காட்சிகளையும் ஹவுஸ்புல்லாக்கி இந்த போலி சாதனையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கடைசி 24 காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடும் போது படத்தை ஏன் 176 நாளோடு தூக்க வேண்டும்.? இதுபோன்ற கேள்விகளை நீங்கள் கேட்க கூடாது. ஏன் தமிழ்நாடு முழுவதும் அதை செய்ய முடியவில்லை?. ஐயனின் பணம் தண்ணீராக செலவாகும் என்பதாலா? ஆனால் இதையெல்லாம் எம்ஜிஆர் கண்டு கொள்ளவே மாட்டார். ஆனால் மனசுக்குள்ளே தம்பி கணேசன் படும் பாட்டை எண்ணி சிரித்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்.
இப்படி ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட "உலகம் சுற்றும் வாலிபனி"ன் வெற்றியை பணநாயகத்தின் மூலம் விலைக்கு வாங்க நினைத்ததுதான் அரசியலில் சிவாஜி அடைந்த படுதோல்விக்கு அஸ்திவாரம் என்று கூட சொல்லலாம். சிவாஜி சினிமாவிலேயே இவ்வளவு தில்லுமுல்லு செய்து பணத்தால் வெற்றியை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று நினைத்த ஊழல்வாதிதான் என்பதை அவரே நிரூபித்து விட்டார். அதனால்தான் அவரை பற்றி நன்றாக தெரிந்து கொண்ட மக்கள் அவரை அரசியலை விட்டே விரட்டி அடித்தனர்..
நீங்கள் செய்யும் தவறு யாருக்கும் தெரியாது என்று நினைக்க வேண்டாம். சிவாஜி படங்களை பார்த்து விட்டு வருபவர்களிடம் நாங்கள் கேட்கும் முதல் கேள்வியே தியேட்டரில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதுதான். அவர்கள் சொல்லும் பதில் என்னையும் சேர்த்து ஒரு 20லிருந்து 25 பேர்கள்தான் இருந்தார்கள் என்றதும் புரிந்து விடும் இது பிணந்தூக்கிகளின் வேலை என்பது.
இப்படி ஜனநாயகத்தை மதிக்காமல் ஒவ்வொரு படத்துக்கும் பிணந்தூக்கி நீங்கள் பெற்ற போலி வெற்றி எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து விட்டது. ஆனால் மற்ற ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் இது போன்ற வெறுப்பு அடையாமல் போட்டி மனப்பான்மையுடன் மட்டும் இருக்கிறார்கள் என்பதற்கு காரணம் இப்போது தெளிவாகிறதா?
இதைப்போல் அரசியலிலும் கட்சி ஆரம்பித்து இந்த 'குல்மால்' வேலைகளை செய்து பதவிக்கு வந்து விடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட கணேசனை ஏமாற்றிய கைபுள்ளைங்க பிணந்தூக்கிகள் எஸ்கேப் ஆகி தீயசக்தியிடம் சரண்டர் ஆனதால் மானமிழந்த கணேசன் கைபிள்ளைகளை நம்பி ஏமாந்தேன் என்று அழுதது பழைய கதை. தப்பு செய்தவன் தண்டனை அடைவான் என்ற ஆண்டவன் கட்டளை இங்கு அரசியலில் வேலை செய்தது. 'யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க' என்று விரக்தியடைந்து எல்லாவற்றையும் துறந்து வீட்டிலேயே இருந்து ஓய்வு பெற்றார் கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது..........ksr.........
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறுவெளியீடு*தொடர்ச்சி ...........
--------------------------------------------------------------------------------------------------------------------
14/11/20-தீபாவளி முதல் சென்னை சரவணாவில் தேடி வந்த மாப்பிள்ளை*தினசரி 3 காட்சிகள்*
14/11/20-தீபாவளி முதல் கோவை டிலைட்டில் -தேடி வந்த மாப்பிள்ளை**தினசரி* 2 காட்சிகள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
14/11/20* தீபாவளி முதல் சேலம் அலங்காரில்* *நம் நாடு -தினசரி 4* காட்சிகள்*
*10/11/20 முதல் ஓமலூர் (சேலம் மாவட்டம் ) தங்கம் அரங்கில் -தினசரி 3 காட்சிகள்**ரகசிய போலீஸ் 115
10/11/20- முதல்* மேட்டூர் - (அரங்கின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் _**ராமன் தேடிய சீதை - தினசரி 3 காட்சிகள்* நடைபெறுகிறது*
11/11/20 முதல் சேலம் புறநகர் - ஜெயராம் (கொண்டலாம்பட்டி ) தர்மம் தலை காக்கும்* - தினசரி 3 காட்சிகள்* நடைபெறுகிறது .
(முதல் நாளன்று அரங்கு முறையாக சுத்தம் செய்யப்படாமல், கிருமிநாசினி தெளிக்கப்படாமல் இருந்ததால் சேலம் மாநகராட்சி பணியாளர்கள் அரங்கை திறக்க அனுமதிக்கவில்லை . என்பதே உண்மை செய்தி .ஆனால் சன் செய்திகளில் 10/11/20 அன்று குறைந்த* ஆட்கள் வந்ததால்* காட்சி ரத்து ஆனதாக செய்தி தவறாக* ஒளிபரப்பானது )
தகவல்கள் உதவி : திரு.சுப்பிரமணி, சேலம்*
12/11/20 முதல் தூத்துக்குடி சத்யாவில்* (கண்டிப்பாக 2 நாள் மட்டும் ) சிரித்து* வாழ வேண்டும் - தினசரி* 2 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை .*
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 10/11/20 அன்று* திரு.துரை பாரதி*அளித்த தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------
இன்றைக்கும் இவ்வளவு பேர்* அவரது ரசிகர்களாக ,அவருடைய ஒவ்வொரு அசைவிலும் ,ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் உற்று கவனிப்பவர்களாக இருக்கிறார்கள்* என்றால் அந்த மகோன்னதம் வேறு ஒரு மனிதருக்கு இருக்கிறது* என்று*சொல்வதற்கு இல்லை. ஏனென்றால் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதற்கு ரத்த சாட்சியாக நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து மறைந்த மனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் .* அந்த ரத்த சாட்சியை நமக்கு வைத்து விட்டு போன பண்பாடுகள் ஏராளம் ஏராளம் . எம்.ஜி.ஆர். அவர்கள் பிறரை உயர்வாக நினைப்பது, தன்னை தாழ்த்தி கொள்வது என்கிற பணிவான பண்பை கொண்டவர் .ஒரு சிறிய பொறுப்பு, பதவி வந்தாலே, மற்றவர்களை ஏளனமாக பார்ப்பது, அவர்களை அலட்சியப்படுத்துவது, ஒருமையில் அழைப்பது போன்ற பண்புகள் கொண்ட மனிதர்கள் அன்றாடம் வாழ்க்கையில் நாம் பார்த்து வருகிறோம் .சாதாரண கவுன்சிலர் பதவியை பெற்றாலே, தலைக்கனம் பிடித்து அலைபவர்கள் இருக்கிறார்கள் .* ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள்* எம்.எல்.சி.,யாக, எம்.எல்.ஏவாக, சிறு சேமிப்பு துறையின் துணை தலைவராக ஏன் முதல்வராகவே இருந்தார் .ஆனால் ஒரு போதும் அவர் கர்வம், தலைக்கனம் பிடித்தவராக நடந்து கொண்டதில்லை .* எல்லாமே தன்னால்தான் நடந்தது என்று தற்பெருமை பேசியதில்லை*
பெரும்புள்ளிகள் காரில் செல்லும்போது கார் கதவின்* கண்ணாடியை மூடியபடி,பின்னால் உட்கார்ந்து கொண்டு* ஏதாவது புத்தகம் படித்து கொண்டு அல்லது ஏதோ மோனையில் சிந்தித்தபடியோதான் போவது வழக்கம் .**ஏனென்றால் அவர்கள் காரில் செல்லும்போது சாலையில் செல்லும்* பழைய நண்பர்கள் யாராவது* இவர்களை பார்த்துவிட கூடாது**என்பதற்காக அப்படி நடந்து கொள்வார்கள்.* ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் பொறுத்தவரை**ராமாவரம் தோட்டத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு காரில் செல்லும்வரையில்*பின்னிருக்கையில் அமர்ந்தபடி, கார் கதவின் கண்ணாடியை இறக்கி விட்டு*சாலையில் செல்பவர்களை கவனித்தபடி பார்த்து புன்னகைத்துவிட்டு, தன்னை பார்த்து வணக்கம்*,சொல்வது போல கையை தூக்கி வணக்கம் சொல்லியபடி*செல்வதுதான் வழக்கம் .***அதனாலதான் அவர் மக்கள் திலகமாக கொண்டாடப்படுகிறார் .* ஏனென்றால் அவர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் மக்களை சந்திப்பது, நேசிப்பது, அவர்களுடன் உரையாடுவது, அவர்கள் குறைகளை தீர்க்க முற்படுவது* மக்கள் தன்னை பார்க்க வருவதை ஆவலோடு எதிர்பார்ப்பது என்று சில நடைமுறைகளை வாழ்க்கையில் கடைபிடித்தார் .அதனால்தான் மக்களால் நேசிக்கப்பட்ட மக்கள் தலைவரானார் .
திரு.கா. லியாகத் அலிகான் :* என்னை போல பல சகாக்கள், நண்பர்கள் பல பதவிகளை, பொறுப்புகளை அனுபவித்து உழைத்திருக்கிறோம் .* தலைவரின் பெருமைகள் பற்றி சொல்வதென்றால் ஒரு* நாளெல்லாம் சொல்லி கொண்டே இருக்கலாம் .* 1981ல் மதுரையில் உலக தமிழ் மாநாடு நடைபெற்ற நேரம்.*அப்போது மதுரை விமான நிலையத்திற்கு முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையார் வருகை தருகிறார்கள்.* *பல அமைச்சர்கள்* சென்று வரவேற்றார்கள்* *நானும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தேன்.**இந்திரா அம்மையார் விமானத்தில் வந்து இறங்கியதும்*.என்னை கவனித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அருகில் வர** சொல்லி சைகை செய்து, அமைச்சர்களின் வரவேற்பு முடிந்ததும், என்னையும்* பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்தார் .* அது மட்டுமல்ல. பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் அவர்கள் 1982ல் சென்னைக்கு வந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள் .* அப்போது பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவரையும் ஒருசேர கண்ட போது ,தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சார்லஸை விட மிகவும் அழகாக , காட்சியளித்தார் .என்பதை நான் உணர்ந்தேன். இதை* *நான் மிகை படுத்தி சொல்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த காட்சியை கண்ட பலர், அமைச்சர்கள் கூட பார்த்து ஆச்சர்யப்பட்டு போனார்கள்.** அந்த இடத்திலே, சிரித்த முகத்தோடு, சிவந்த நிறத்தோடு , கருத்த*முடியோடு, கருப்பு கண்ணாடியோடு கூர்ந்த கண்களோடு, காட்சியளித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் மென்மையான அணுகுமுறைகள்* அங்கு கூடியிருந்த அனைத்து கண்களையும், இதயங்களையும்* ஈர்த்தன என்பதுதான் உண்மை . தலைவரின் தோற்றம் எங்களை மட்டுமல்ல எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை கூட ஈர்த்தன என்று சொல்லலாம் . அந்த நேரத்தில் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.எதிர் கட்சி எம்.எல்.ஏக்கள் சிலரை**உதாரணத்திற்கு துரை முருகன், ரகுமான்கான் போன்றவர்களை இளவரசர் சார்லசிடம் அறிமுகம் செய்து வைத்ததை நானே நேரில் கண்டேன் .*தலைவர் அவர்கள் கட்சி பாகுபாடின்றி, பேதம் இன்றி, அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமின்றி, தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சிலரையும் அறிமுகப்படுத்தி, அனைவரையும் சமமாக பார்த்தார் . மேலும் சற்று தூரத்தில் இருந்த என்னையும் அழைத்து இளவரசர் சார்லசுக்கு அறிமுகப்படுத்திய பெருந்தன்மை மிக்க தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .* சாதாரண தொண்டனாக விளங்கிய என்னை மதித்து, மற்றவர்களை போல இவனும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அவனுடைய பெருமைகள் இந்த உலகிற்கு தெரியட்டும் என்கிற வகையில், என் உணர்வுகளை புரிந்து கொண்டு* என்னை இளவரசர் சார்லசுக்கு அறிமுகம்* செய்த பெருமை படைத்த தலைவர்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் .****
அதே போல ஏழை எளியோர்களிடத்தில்யாராக இருந்தாலும்* அன்பு காட்டுவதில், அவர்களை நேசிப்பதில், அவர்களின் குறைகளை தீர்ப்பதில் அவருக்கு இணையான ஒரு தலைவரை, ஒரு மகானை*, இனம் காணுவது* மிகவும் கடினமான காரியம் .* ராமாவரம் தோட்டத்தில் எடுத்து கொண்டால், அன்றாடம் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் எம்.ஜி.ஆர். அவர்களின் வருகைக்காக காத்திருப்பார்கள். நம்மைத்தான் தலைவர் முதலில் சந்திப்பார் என மனக்கோட்டை கட்டியபடி இருப்பார்கள் . ஆனால் மாடியில் இருந்து கீழே இறங்கி வரும் தலைவர் அவர்கள் நேரடியாக தொண்டர்கள் காத்திருக்கும் பகுதிக்கு முதலில் சென்று, அவர்களை சந்தித்து, அவர்களுடைய பிரச்னைகளை கேட்டறிந்து,ஏதாவது உதவி என்றால் அப்போதே செய்து முடித்து* , அவர்களின் குறைகளை தீர்க்கவல்ல பண்புமிக்க ஒரு தீர்க்கதரிசியாக திகழ்ந்தார் .* ஒருமுறை தற்போது அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ள தமிழ் மகன் உசேன்* அவர்கள் தலைவரால் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் .* விவரம் அறிந்த தமிழ் மகன் உசேன் ராமாவரம் தோட்டத்திற்கு வருகிறார் .*அன்றைக்கு மற்ற முக்கியஸ்தர்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் பலரை பார்த்தபின் தமிழ் மகன் உசேன் தலைவருக்கு வணக்கம் தெரிவிக்கிறார் .நான்தான் உன்னை பதவியில் இருந்து நீக்கிவிட்டேனே. இங்கு எதற்காக வந்தாய் என்று கேட்க, நான் முதல்வரை பார்க்க வரவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களை பார்க்க வந்துள்ளேன் என்று ஒரு நண்பரை போல மிகவும் சாதாரண முறையில் தலைவரிடம் பேசினார் .* மிகவும் தைரியத்துடன் தமிழ் மகன் உசேன் பேசியதை*கண்டு கோபப்படாமல் தலைவர் சிரித்தார்* *சரி, எம்.ஜி.ஆரிடம் என்ன சொல்ல போகிறாய் என்று வேடிக்கையாகவும், விநோதமாகவும் தலைவர் கேட்டார் .*தமிழ் மகன் உசேன் பேச்சை கனிவோடு கேட்ட தலைவர் , ஒரு தொண்டனின்*எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மீண்டும் அவரை பதவியில் அமர்த்திஅழகு பார்த்தார் தலைவர் .* தொடர்ந்து ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்திலும், இப்போதைய எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஆட்சி காலத்திலும் தமிழ் மகன் உசேன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக* பதவியில் நீடித்து வருகிறார் .** **
இன்றைக்கு சிறுபான்மை நல* பிரிவு துணை செயலாளராக நானும், செயலாளராக அன்பு ராஜாவும் பணியில் இருந்து வருகிறோம் .என்று சொன்னால் நாங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். அவர்களின் மூன்றெழுத்து மந்திரத்தால் ஆட்பட்டு, பல்வேறு தரப்பினர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை மானசீகமாக குருவாக ஏற்று கொண்டதோடு, தொடர்ந்து ஜெயலலிதா அவர்கள் தலைமையிலும் இந்த இயக்கத்தில் ஈடுபடுத்தி கொண்டு , இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஓ. பன்னீர்செல்வம் சமமாக பழகிய சகோதரர்களாக இருந்தாலும் கூட ,அவர்களுடைய தலைமையை ஏற்று, சொல்லுக்கு கட்டுப்பட்டு ,செயல்பட்டு, இந்த இயக்கம், தொடர்ந்து வளர்வதற்கு, வாழ்வதற்கு, ஆலமரமாக பெருகுவதற்கு நாங்கள் பாடுபடுவோம் என்று சொன்னால் இந்த இயக்கம் வளர்ந்தால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின், புகழும்,*வளரும் .ஏழை எளிய மக்கள் நலம் பெறுவார்கள், வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்கிற வகையில் நாங்களும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம், உழைத்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், புரட்சி* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் என் மீது காட்டிய அன்பை, பாசத்தை, பரிவை, கருணையை* எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை .* நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் . உங்கள் இளமைக்கு காரணம் என்ன என்று. என் இளமைக்கு காரணம் புரட்சி தலைவர்தான்.* அவருடைய அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றை பின்பற்றியதே அதற்கு காரணம் . உள்ளபடியே சொன்னால் என் வயதை சொல்ல கூடாது. நானும் அதை விரும்பவில்லை.பொதுவாக பெண்ணின் வயதை கேட்க கூடாது. ஆணின் வருமானத்தை கேட்க கூடாது என்று சொல்வார்கள் . ஆனால் இங்கு இளமையை குறிப்பிட்டு காட்டி* பேசுவதால் அதற்கும் காரணம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.தான் .என்று சொல்லுவேன் .* அக்ரோ வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட எனக்கு டைபாயிடு காய்ச்சல் வந்தபோது நான் உயிர் வாழ்வேனா அல்லது செத்து மடிவேனா என்று சொல்ல முடியாத ஒரு நிலையில்* இருந்த கால கட்டத்தில், சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நேரத்தில் ,சேலத்தில் போஸ் மைதானத்தில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாடு நடைபெறுகிறது .அந்த மாநாட்டில் எனக்கே தெரியாமல், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆலோசனையின் படி ,லியாகத் அலிகான் இந்த மாநாட்டில் பேசுவார் என்று துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள்,பத்திரிகை விளம்பரங்கள்* தயார் செய்யப்பட்டன .***அந்த சமயத்தில் டைபாய்டு காய்ச்சலுடன் ஜாண்டிஸ் எனப்படும் மலேரியாவும் சேர்ந்து தாக்கியதில் மிகவும் அவதிப்பட்டேன் .* மிகவும் கடுமையான நோய் தாக்கத்தில் இருந்தேன்.* நான் கண்டிப்பாக சில மாதங்கள் ஒய்வு பெற்றே ஆகவேண்டிய சூழ்நிலை இருந்தது .* ஓரளவு நோய் தோற்று குறைந்து, 75 % காய்ச்சலின் தாக்கம் தீர்ந்து குணமாகியதும் இரண்டொரு நாளில்*சேலத்தில் மாநாடு துவங்க இருப்பதை*அறிந்தேன்*. அப்போது மாநாட்டின் தலைவராக*திரு.முசிறிபுத்தன்* அவர்கள் இருந்தார்கள் . இந்த சூழ்நிலையில் என்னால் மருத்துவமனையில் படுத்திருக்க முடியாமல்* நேரடியாக என் மாமா முஸ்தபா* வீட்டிற்கு சென்று*, காய்ச்சல் எப்படி இருந்தாலும் நான் மாநாட்டிற்கு சென்றாக வேண்டும் என்று கூறி ,என் மனைவி, பெற்றோர்களை வரவழைத்து சேலத்தில்*ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி ,அங்கிருந்தபடியே முசிறிபுத்தன்* அவர்களை தொடர்பு கொண்டு*, அண்ணே*எனக்கு காய்ச்சல் முழுவதும் குணமாகவில்லை ,இருப்பினும் மாநாட்டில்*கலந்து கொள்ள வந்துவிட்டேன்.என்ன செய்யலாம் என்று கேட்டபோது, அவர் தலைவரிடம் ,லியாகத் அலிகான் சேலத்திற்கு வந்து தங்கியுள்ளார். காய்ச்சல் முழுவதும் தீரவில்லை. குரலிலும் பாதிப்பு தெரிகிறது*என்ன செய்யலாம் என்று கேட்க, தலைவர்* வேண்டாம் காய்ச்சலுடன் அவர் ஏன் மாநாட்டில் கலந்து கொள்ள வந்தார். முழுவதும் குணமாகும் வரையில் மருத்துவமனையில் இருந்து இருக்கலாமே*.பரவாயில்லை .ஒய்வு எடுக்க சொல்லுங்கள் என்று கூறினாராம் .அதன்படி நான் உடுமலைப்பேட்டை சென்று*இரண்டு மாத காலம் ஒய்வு எடுத்த பின்* உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது .உடல்நலம் பெற்ற பின் அகோர* பசியெடுத்து* தேவைக்கு அதிமாக*உணவு உண்பது, அதிக நேரம் ஒய்வு கொள்வது என்று இருந்ததால் உடல் பருத்துவிட்டது* *மூன்று மாதம் கழித்து தலைவர் அவர்கள் சேலத்திற்கு 3 நாட்கள்*தங்கி , நடிகர் பாக்யராஜ் அவர்களின்*பாராட்டு விழாவில்*கலந்து கொள்ள* வந்திருந்தார் . இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------------------
1.தொட்டுவிட தொட்டுவிட தொடரும்*- தர்மம் தலை காக்கும்*
2.தர்மம் தலை காக்கும் பாடல்* - தர்மம் தலை காக்கும்*
3.ஒருவன் மனது ஒன்பதடா*- தர்மம் தலை காக்கும்*
4.நான் உங்கள் வீட்டு பிள்ளை* - புதிய பூமி*
5.திரு. கா. லியாகத்*அலிகான் பேட்டி*
*
*
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதள பதிவாளர்கள், பார்வையாளர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
-
Happy "Deepavali" Greetings to All of You...
-
#என்றும்_எம்ஜிஆர் நினைவலைகள்.
எம்ஜிஆர் பிறர் அடைய முடியாத எட்டாத உயரத்துக்குச் சென்றபோதும் அவரது எண்ணம் எப்போதும் சமூகத்தின் கடைநிலையில் வாழும் சாதாரண மக்களைப் பற்றியே இருந்தது. அதனால்தான் சாதாரண மக்களின் மனங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
‘மும்பையில் மாதுங்கா, டெல்லியில் கரோல்பாக் போல கொல்கத்தா நகரில் லேக் ஏரியா என்ற இடம் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. 1982-ம் ஆண்டில் அங்கு கட்டப்பட்ட தமிழ்ச்சங்கக் கட்டிடத்தை நிர்வாகிகள் அழைப்பின்பேரில் அங்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். அந்தக் கட்டிடம் எழும்ப மூல காரணமாக இருந்தவரே எம்.ஜி.ஆர்.தான். கட்டிடம் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நன்கொடையாக அளித்தார்.
விமானம் மூலம் கொல்கத்தா சென்ற எம்.ஜி.ஆரை திரளான தமிழர்கள் வரவேற்றனர். மாலையில் தமிழ்ச்சங்க கட்டிடத் திறப்பு விழா நடந்தது. இரண்டு நாட்கள் அங்கு தங்கினார். அப்போது, மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை சந்தித்து பேசினார்.
எம்.ஜி.ஆர். அப்போது தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மேற்கு வங்க அரசின் விருந்தாளியாக வரவேற்கப்பட் டார். விமான நிலையத்தில் இருந்து அதி காரிகள் அவரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் இரண்டு நாட்களும் எம்.ஜி.ஆர். தங்குவ தாக ஏற்பாடு. பிரம்மாண்டமும் ஆடம் பரமுமான ஆளுநர் மாளிகைக்கு அழைத் துச் செல்லப்பட்ட எம்.ஜி.ஆர், தான் தங்க வேண்டிய இடத்தை சுற்றிப் பார்த்தார். 10 நிமிடங்களில் ‘‘இந்த இடம் நமக்கு சரிப்பட்டு வராது. ஓட்டலுக்குச் சென்று தங்கிவிடலாம்’’ என்று கூறி புறப்பட்டு விட்டார்.
மேற்குவங்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஒருபுறம்; வியப்பு மறுபுறம். ‘‘ராஜ் பவனில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. இங்கேயே தங்கலாமே’’ என்று கேட்டுக் கொண்டனர்.
எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடியே, ‘‘தங் களின் அன்புக்கு நன்றி. இங்கே எனக்கு வேண்டிய எல்லா சவுகரியங்களும் உள்ளன. ஆனால், நிறைய தமிழர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த ஆளுநர் மாளிகைக்குள் அவர்களால் நுழைய முடியாது. அவர்களுக்கு சவுகரியமான இடத்தில் நான் இருக்கணும்’’ என்று சொல்லிவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்பிவிட்டார்.
ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் ‘டல்ஹவுசி சதுக்கம்’ என்ற பகுதியிலேயே இருந்த ஒரு ஓட்டலில் தங்கினார். தன் னுடன் வந்த உதவியாளர்கள், தமிழக அரசு அதிகாரிகளையும் அதே ஓட்டலில் தங்க வைத்தார். அரசு சார்பில் ராஜ போகங்களுடன் இலவசமாக தங்கு வதற்கு வாய்ப்பு இருந்தும் தன்னைப் பார்க்க வரும் தமிழர்களின் வசதிக்காக சொந்த செலவில் ஓட்டலில் தங்கினார் எம்.ஜி.ஆர்.
அவர் வரும் தகவல் பற்றி பெரிய அளவில் கொல்கத்தாவில் விளம்பரம் செய்யப்படவில்லை. இருந்தாலும் தன் னைப் பார்க்க தமிழர்கள் வருவார்கள் என்ற எம்.ஜி.ஆரின் கணிப்பு தவற வில்லை. கொல்கத்தாவில் வாழும் தமிழர்களுக்கு விஷயம் தெரிந்து சில மணி நேரங்களில் எம்.ஜி.ஆரைப் பார்க்க ஓட்டலுக்கு கூட்டமாக வர ஆரம்பித்துவிட்டனர்.
அப்படி வந்தவர்களில் பெரும் பாலோர் சாதாரண மக்கள். எம்.ஜி.ஆரை விழிகளால் விழுங்கியபடியே அவரது கையை குலுக்கியும் காலில் விழுந்து வணங்கியும் மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தினர்
அவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சாதாரண மக்களின் கைகளில் எம்.ஜி.ஆர். ஏற்பாட்டின்படி அவரது உதவியாளர் மாணிக்கம் பணத்தை திணித்து அனுப்பினார். மக்கள் எம்.ஜி.ஆரை வாழ்த்திச் சென்றனர்.
- தி இந்து .மீள்/...nsm.........
-
1974 ஆம் ஆண்டில் ஒரு இரவு நேரம் மணி 9 தாண்டி தலைவர் ஓய்வு எடுக்க செல்லும் நேரம் ஒரு அழைப்பு வருகிறது டெலிபோனில் தலைவருக்கு...
எடுத்து பேசி விஷயம் அறிந்து கொண்ட மன்னவன் உடனே மாம்பலம் கட்சி அலுவலகத்தில் இருந்த ஐயா மகாலிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு...
எனது கட்சி அலுவலக ஓய்வறையில் பணம் இருக்கும் இடம் சொல்லி எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொண்டு போய் ஒருவர் பெயர் சொல்லி அவர் வீட்டுக்கு உடனே போங்க..
அவர் நெஞ்சுவலியால் துடித்து கொண்டு இருக்கிறேன் என்கிறார் என்னிடம் அவரை பிரபல இதய நோய் நிபுணர் மறைந்த திரு...ஆர்.எஸ். ராஜகோபால் அவரிடம் கூட்டி செல்லுங்கள் என்று சொல்ல மருத்துவருக்கு விவரம் சொல்லி விட்டு உங்களிடம் பேசுகிறேன் என்கிறார்.
தேனாம் பேட்டை எல்லை அம்மன் கோவில் அருகில் இருந்த அவர் வீட்டுக்கு பதறி பணத்துடன் சென்ற மகாலிங்கம் ஐயா அவரை அள்ளி போட்டு கொண்டு மருத்துவர் இல்லம் நோக்கி பறக்கிறார்.
அங்கே முழு சோதனைகள் செய்த ராஜகோபால் அவர்கள் இவருக்கு இருதயத்தில் எந்த குழப்பமும் இல்லை...பயந்து போய் சொல்லி இருக்கிறார் அது வயிற்று பிரச்னை என்று சொல்லி மருந்து மாத்திரைகள் கொடுத்து இருவரையும் திருப்பி அனுப்புகிறார்.
சம்பந்தப்பட்ட நபரை மீண்டும் அவர் இல்லத்தில் விட்டு விட்டு தலைவருக்கு நடு இரவில் தகவல் சொல்கிறார் மகாலிங்கம் அவர்கள்.
தலைவர் நிம்மதியுடன் உறங்க செல்கிறார்.
பாதிக்க பட்ட அந்த நபரிடம் ஏன் இப்படி அவருக்கு தொலை பேசியில் சொன்னீங்க எனக்கு சொன்னால் நான் வரமாட்டேன் என்று சொல்லுவேனா என்று தலைவர் உதவியாளர் அவரிடம் கேட்க.
அதற்கு அவர் சொல்கிறார்... நடு இரவில் கூட என்னை காப்பாற்றும் ஒரே மனித தெய்வம் அவர் என்றே என் மூளைக்கு எட்டியது....வேறு ஒன்றும் இல்லை என்கிறார் அவர்.
அவர் வேறு யாரும் இல்லை...பிறப்பில் இஸ்லாம் மதத்தில் பிறந்தவர்....தன் பெயரை ரவீந்தர் என்று மாற்றி கொண்டு தலைவரின் கதை இலாகாவில் முக்கிய பங்கு வகித்த அந்த நல்லவரே அவர்.
அவரை தெரியாத தலைவர் நெஞ்சங்கள் இருக்கமுடியாது.
தலைவர் நாடோடி மன்னன் படத்துக்கு பிறகு அவரை கதை எழுத சொல்லி ஒரு மாபெரும் படத்தை தயாரிக்க எண்ணி அருமையான கதை உடன் அந்த படம் உருவாக விளம்பரம் கூட வந்தது.
முழுக்க முழுக்க வெளி நாடுகளில் படம் ஆக்க திட்டமிட்ட அந்த படத்தின் பெயர் இணைந்த கைகள்.
ஈரான் நாட்டின் புகழ் பெற்ற கதாநாயகி தலைவருக்கு ஜோடி ஆக நடிக்க அவர் ஒப்பு கொண்டு அந்த அரசாங்கம் அங்கே அந்த நாட்டில் இந்த கதையை படம் ஆக்க மறுப்பு சொல்ல தலைவரும் கதை ஆசிரியர் ரவீந்தர் அவர்களும் மனம் கொஞ்சம் வருந்த..
அதன் பின்னே வேண்டாம் அந்த திசை என்று தலைவர் முடிவெடுத்து அங்கு இல்லாவிட்டால் என்ன உலகம் பெரியது என்று எண்ணி உருவான மாபெரும் வெற்றி படமே காலத்தால் அழிக்க முடியாத
உ.சு.வா...உருவானது.
தலைவர் தலைவரே என்றும்....
தீபாவளி சிறப்பு பதிவில் மேலும் ஒரு கொசுறு செய்தி.
தலைவர் படம் உ.சு வா. படத்துக்கு போதிய ஆடைகள் தைக்க இங்கே கால அவகாசம் இடம் கொடுக்காததால் தலைவரின் அட்டகாசம் ஆன உடைகள் அமைப்புடன் வந்த.
1972 இல் வெளிவந்த ஜெயந்தி பிலிம்ஸ் ராமன் தேடிய சீதை படத்தின் தயாரிப்பாளர் அவர்கள் செய்தி அறிந்து இந்த படத்தின் சூப்பர் உடைகள் இருக்கு அள்ளி கொண்டு செல்லுங்கள் என்று தலைவரிடம் சொல்ல..
அவரும் மிகவும் மனம் நெகிழ்ந்து அந்த உடைகள் உடன் வெளிநாடுகள் பறக்க உ..சு.வா...படத்தின் சில காட்சிகளில் தலைவர் அந்த படத்தின் உடைகளை பயன் படுத்தி இருப்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்..
வாழ்க தலைவர் புகழ்.
என்றும் தொடரும் உங்களில் ஒருவன்
நன்றி நன்றி நன்றி...
-
தமிழகமெங்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டும், தமிழக அரசின்*உத்தரவின் பேரில் திரை அரங்குகள் திறக்க அனுமதி கிடைத்ததும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறுவெளியீட்டில் புதிய சாதனை . வேறு எந்த நடிகரின்*பழைய படங்களும் இந்த அளவில் வெளியாகவில்லை*என்பது குறிப்பிடத்தக்கது .
---------------------------------------------------------------------------------------------------------------------------
கோவை மாநகரம்*
-----------------------------
11/11/20 முதல்* சண்முகா* - தர்மம் தலை காக்கும் -தினசரி 3 காட்சிகள்*
14/11/20* முதல்* -சண்முகா - காவல்காரன் - தினசரி 3 காட்சிகள்*
14/11/20* முதல்* டிலைட்* - தேடி வந்த மாப்பிள்ளை - தினசரி 2 காட்சிகள்*
மதுரை மாநகரம்*
------------------------------
14/11/20* முதல் சென்ட்ரல் சினிமா -தர்மம் தலை காக்கும்-தினசரி 3 காட்சிகள்*
14/11/20 - ஷா அரங்கு* -* எங்க வீட்டு பிள்ளை* - தினசரி 3 காட்சிகள்*
11/11/20 -வண்டியூர் -கல்லானை-நினைத்ததை முடிப்பவன்*தினசரி 3 காட்சிகள் - 3 நாட்கள் மட்டும் .
திருச்சி மாநகரம்*
----------------------------
10/11/20* முதல் பேலஸ்* -உரிமைக்குரல் - தினசரி 3 காட்சிகள்*
10/11/20* *முதல் திருவானைக்காவல் - வெங்கடேஸ்வரா ,** தஞ்சை - ஜி.வி., கரூர்- அமுதா,* சீர்காழி - ஓ.எஸ்.எம்.
* * * * * * * * *திருவாரூர் -தைலம்மை* அரங்குகளில்*
* * * * * * * * *ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள்*
14/11/20-* முருகன்* - ரகசிய போலீஸ் 115- தினசரி 3 காட்சிகள்*
14/11/20* - ஸ்ரீரங்கம் ரங்கராஜா* - நம் நாடு - தினசரி* 3 காட்சிகள்*
சேலம் மாநகரம்*
------------------------------
11/11/20* -சேலம் புறநகர் - ஜெயராம் (கொண்டலாம்பட்டி _*
* * * * * * * * *தர்மம் தலை காக்கும் -தினசரி 3 காட்சிகள் - 3 நாட்கள் மட்டும்*
14/11/20* -அலங்கார - நம் நாடு - தினசரி 3 காட்சிகள்*
10/11/20 முதல் ஓமலூர் -தங்கம் (சேலம் மாவட்டம் ) -ரகசிய போலீஸ் 115
* * * * * * * * * * * * * * தினசரி 3 காட்சிகள்*
சென்னை பெருநகரம்*
------------------------------------
13/11/20 முதல் சரவணா - தேடி வந்த மாப்பிள்ளை -தினசரி 3 காட்சிகள்*
திருப்பூர் நகரம்*
------------------------
10/11/20,11/11/20,12/11/20 - அனுப்பர்பாளையம் -கணேஷ்*
நீதிக்கு தலை வணங்கு - தினசரி இரவு 8 மணி காட்சி மட்டும்*
தூத்துக்குடி மாநகரம்*
---------------------------------
13/11/20* முதல் சத்யா - சிரித்து வாழ வேண்டும் - தினசரி 3 காட்சிகள்*
* * * * * * * * *கண்டிப்பாக 3 நாட்கள் மட்டும்*
----------------------------------------------------------------------------------------------------------------
கரிக்கலாம்பாளையம் - திவ்யா -12/11/20 முதல் தினசரி 3 காட்சிகள்*
நினைத்ததை முடிப்பவன் -
குறிப்பு : விவரங்கள் கிடைத்த வகையில் பதிவு செய்துள்ளேன்.* நமக்கு தெரியாமல் எத்தனையோ படங்கள் , விவரங்கள் கிடைக்காமல் தமிழகம் முழுவதும்* வெளியாகி உள்ளன என்று தெரிய வருகிறது . யாருக்காவது*நண்பர்கள் மூலம் தெரிந்தால் பகிரவும் .**
-
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது மாரப்பாடி திருவரம்பு தொகுதியில் ஒரு பாலம் கட்ட அரசிடம் முறையாக அனுமதி பெறப்பட்டிருந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து "இந்த இடத்தில் #ஐந்தடியில் #பாலம் கட்டினால் போதுமானது என்று கூற...
அந்த ஊர் மக்கள் கொதித்துப் போயினர்...
அப்போது எம்எல்ஏ வாக இருந்த நான்
(திருவட்டாறு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், கடந்த 24 வருடங்களில் நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடது சாரி சி.பி.எம் கட்சிக்காரருமான ஹேமச்சந்திரன்)
இந்தப் பிரச்சனையை உடனே முதல்வர் எம்ஜிஆரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதைப் பொறுமையாகக் கேட்ட முதல்வர், '#நானே #நேர்ல #வந்து #பாக்கறேன்' என்று சொல்லிவிட்டு அடுத்த நாளை அந்த ஊருக்குச் சென்று பாலம் கட்டப்போகும் இடத்தை சில நிமிடங்கள் பார்த்தார்...
"மழைக்காலத்துல ஜனங்க போய்வருவதற்கும், வாகனப் போக்குவரத்துக்கும் பெரிய பாலம் கட்டினால் தான் சரியா இருக்கும். ஐந்தடியில் கட்டினால் மாட்டுவண்டி கூடப் போகமுடியாதே ? அவங்க என்னத்த ஆய்வு செஞ்சாங்க..." அப்படின்னு சொல்லிட்டு அதே இடத்தில் #இருபத்தியோரு #அடி #பாலம் #கட்ட #உத்தரவிட்டு உடனே கட்டவும் ஏற்பாடு செய்தார்.
ஆளைப் பார்த்து, தொகுதியைப் பார்த்து நலத்திட்டங்கள் புரிந்தவரவல்ல...
மக்களின் தேவையை மட்டுமே மனதிற்கொண்டு நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் பொன்மனச்செம்மல்............cks...
-
எப்பொழுதும் போல் கொரான காலத்திலும் திரையரங்குகளை வாழ வைக்கும் திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் காவியங்களே சாட்சியாக நின்று நிலைத்திருக்கிறது என்பது நாமெல்லோருக்கும் பெருமையும், பெருமிதமும் அளிக்கின்ற நல்ல விடயமாகும்... தொடர்ந்து பல்வேறு இடங்களில் தலைவர் காவியங்கள் திரையிட பேச்சு வார்த்தைகள் நடைபெறும் தகவல்கள் மகிழ்ச்சியடைய செய்கிறது.........
-
#இனிய_தீபாவளி_வாழ்த்துக்கள்..!!!
#இனிய_நினைவுகளில்
#சக்ரவர்த்தித்_திருமகள்
மக்கள் திலகம், அஞ்சலிதேவி,S.வரலட்சுமி, பி.எஸ்.வீரப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்,மதுரம், தங்கவேலு, முத்துலட்சுமி
இயக்கம்: ப.நீலகண்டன்
எழுதியவர்: இளங்கோவன்
இசை: ஜி.ராமநாதன்
வெளியான ஆண்டு: 1957 ((ஜனவரி 18))
________________________________
இளவரசி கலாமாலினி ((அஞ்சலி தேவி)) யை மணக்கவேண்டும் என்றால்,இளவரசர்கள் கடுமையான போட்டிகளான பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, தளபதி பைரவனோடு (வீரப்பா)வாட்போர் ஆகிய அனைத்திலும் வெற்றி காணவேண்டும். இல்லையேல் சிறையிலடைக்கப்படுவர்.
அத்தகைய போட்டியில் கலந்து கொள்ள வருகிறார் இளவரசர் உதயசூரியன் (மக்கள் திலகம்), இளவரசி கலாமாலினியை போட்டிக்கு முன்பே ஆபத்துகளிலிருந்து காப்பாற்றி அவள் அன்புக்கு பாத்திரமாகிறார் உதயசூரியன்..அத்தனை போட்டிகளிலும் வெல்கிறார். முன்பே தனக்கு ஆண் வேடத்திலும், பின் இளவரசியின் தோழி என்றும் அறிமுகமான பெண்தான் இளவரசி கலாமாலினி என்று தெரியவர , இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்து இளவரசியை ஏற்றுக்கொள்ள தாயாராகிறார் உதயசூரியன்.
ஆனால், நாட்டின் தளபதியானா பைரவன் இளவரசி கலாமாலினி தனக்குத்தான் எனற கனவு உதயசூரியனால் கலைகிறது; ,இளாவரசி கலாமாலினியின் அந்தரங்க தோழியான துர்கா (எஸ்.வரலட்சுமி)வும் இளவரசன் உதயசூரியனை ஒரு தலையாய் விரும்புகிறாள். இதுவும் நடக்காத ஒன்றாகிவிடவே உதயசூரியன் இருவருக்கும் பொது எதிரியாகிவிடுகிறான். துர்காவின் திட்டப்படி இளவரசி காலிமாலினி,பைரவனால் கடத்தப்பட்டு சிறைவைக்கப்படுகிறாள். துர்கா இளவரசியின் இடத்தில் தன்னை மணந்துகொள்ள உதயசூரியனை கட்டாயப்படுத்துகிறாள். இந்த சூழ்ச்சியை உடைத்து இளவரசன் உதயசூரியன்,சக்கரவர்த்தி திருமகள் கலாமாலினியை மீட்டாரா? என்பது படத்தின் மீதிக்கதை..!!!
இளவரசன் உதயசூரியனாக, அசத்தியிருக்கிறார் மக்கள் திலகம். ஆரம்ப காலங்களில் வெறும் "வந்து-போன" திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவருக்கு ஐம்பதுகளில் திருப்புமுனை தந்து அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய படங்களில் இத்திரைப்படம் முக்கியமானது.
இப்படத்தில், இளவரசியை மணக்க வைக்கப்படும் போட்டிகளெல்லாம் மக்கள் திலகத்தின் திறமைகளை வெளிப்படுத்துவதாகவே ஆமைந்திருக்கின்றன. என்.எஸ்.கே யுடன் ஆட்டகாசமான பாட்டு; ஈ.வி.சரோஜா-சகுந்தலாவோடு அசத்தலான நடனம்; வீரப்பாவோடு மட்டுமல்ல, இப்படத்தின் பல இடங்களில் நடக்கும் வாட்போர் ஆகிய அனைத்திலுமே தூள் கிளப்பியுள்ளார் மக்கள் திலகம்.
குறும்பு+குழந்தைதனத்துடன் அஞ்சலி தேவி; நயவஞ்சகத்தோடு வரலட்சுமி; நகைச்சுவை வீரத்தோடு மதுரம், முத்துலட்சுமி; என படத்தின் பெண் கதாபாத்திரங்கள் படத்தின் கதையோட்டத்தோடு பொருந்துகின்றன.
அதே போன்று வீரம் கம்பீரத்துடன் மக்கள் திலகம்; கொடூர வில்லனாக வீரப்பா; நகைச்சுவைக்கு என்.எஸ்.கே.-தங்கவேலு என்று அனைத்து பாத்திரங்களும் சிறப்பாக படைக்கப்பட்டுள்ளன.
இயக்குநர் ப.நீலகண்டன். 1957 ல் வந்த படம் இப்போதும் விறுவிறுப்பாக இருக்கிறது. பின் நாளில் மக்கள் திலகத்தோடு இணைந்து பல வெற்றிப்படங்களை ப.நீலகண்டன் கொடுத்ததற்கு இந்த படத்தின் மாபெரும் வெற்றியும் காரணம்.
இசை ஜி.ராமநாதன். "சீர்மேவும் குருபாதம்" மக்கள் திலகம்-என்.எஸ்.கே போட்டிப்பாடல்; "வாங்க வாங்க அண்ணாத்தே"; "அத்தானும் நாந்தானே சட்ட பொத்தானும் நாந்தானே..;" "பொறக்கும் போது பொறந்த குணம்"; காதலென்னும் சோலையிலே ராதே ராதே"; ஆகிய பாடல்களில் அசத்தியிருக்கிறார்.
இப்படம் மக்கள் திலகத்தின் திரையுலக வாழ்வில் ஒரு மைல்கல். ப்ளாக்பஸ்டர்ஹிட்டாக தமிழகமெங்கும் எட்டு இடங்களில் நூறு நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது
Source :
https://en.m.wikipedia.org/wiki/Chak...hirumagal...NS...
-
சங்கம் வளர்த்த மதுரை புரட்சி நடிகரின் கோட்டை என்பது தமிழறிந்த நல்லுலகம் புரிந்து கொண்டிருந்தாலும் ஒரு சில புல்லுருவிகள் அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் புலம்பித் திரிவதை நாம் காணலாம். மதுரையில் முதன்முறையாக வெள்ளி விழா கொண்டாடிய படம் திரையுலகின் தலைமகனின்
'மதுரை வீரன்' என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். (வசூல் 180 நாட்களில் ரூ 367000)
அதனை முறியடிக்க "கட்ட பொம்மனை" மல்லுக்கட்டி இழுத்து வெள்ளி விழா ஓட்டினாலும் வசூலில் பல்லிளித்து விட்டதை நாம் அறியாவிட்டாலும் கணேசனின் கைபிள்ளைகள் நன்கு அறிவார்கள்.வீ.பா.க.பொம்மன் 181 நாட்களின் பட்டறை வசூல் வெறும் ரூ 287000. தான். அதற்கு அடுத்தாற்போல்
வெளிவந்த "பாகப்பிரிவினை"
ஓரளவு சுமாராக போனதால் படத்தை ஜவ்வு மிட்டாய் ரேஞ்சுக்கு இழுத்து 216 நாட்கள் ஓட்டி புளகாங்கிதமடைந்தனர் கைபுள்ளைங்க. பட்டறை வசூல் ரூ 336000.
அதன்பிறகு வந்த
"எங்க வீட்டு பிள்ளை" மதுரை சென்ட்ரலில் 176 நாட்கள் ஓடி சாதனை வசூலை பெற்றது.(385000) அதுவரை வெளியான அனைத்து படங்களையும் துவம்சம் செய்தாலும் 176 நாட்களில் தூக்கப்பட்டது. "மதுரைவீரனு"ம் சென்ட்ரலில் வெளியாகி "பாகப்பிரிவினை"யை காட்டிலும் அதிக வசூலை பெற்றாலும் 181 நாட்களில் தூக்கப்பட்டது. (வசூல் 357000)இரண்டுமே சிவாஜி படங்கள் ஓட்டக்கூடிய தியேட்டர்.
"நாடோடி மன்னன்" மிகக் குறுகிய காலத்தில் 133.நாட்களில் அதிக வசூல் பெற்ற படம்.(ரூ322000) இந்த மூன்று படங்களை காட்டிலும் மிகக் குறைந்த வசூலை பெற்ற "பாகப்பிரிவினை"யை மட்டும் எப்படி 216 நாட்கள் ஓட்டினார்கள் என்றால் அதுதான் கைபுள்ளைங்களின் சாமர்த்தியம்.அதன்பிறகு வெளிவந்த "அடிமைப்பெண்" "மாட்டுக்கார வேலன்" இரண்டுமே 4 லட்சத்தை தாண்டி வசூல் பெற்று வெள்ளி விழா கொண்டாடியது. ஆனாலும் 200 நாட்கள் கூட ஒட்டப்படவில்லை.
அதன்பின் வெளிவந்த "உலகம் சுற்றும் வாலிபன்" 217 நாட்கள் ஓடி ஒரு புது சாதனையை உருவாக்கியது. சரியாக 31 வாரங்களில் எடுக்கப்பட்டது. ஓட்ட வேண்டும் என்றால் வார நாட்களில் ஏதாவது ஒரு நாளில் ஓட்டி எடுக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. மேலும் படத்தின் கடைசி நாட்கள் வரை ஒரு நாள் வசூல் 500 க்கும் குறையவில்லை.
படம் மேலும் சில வாரங்கள் ஓடக்கூடிய தகுதிபெற்றும் படத்தை ஓட்டாமல் தூக்கி விட்டார்கள்.
படத்தை பார்த்த பார்வையாளர்கள் அடிப்படையில் பார்த்தால் "உலகம் சுற்றும் வாலிபனை" சுமார் 7.25 லட்சத்துக்கும் அதிகமான பேர் கண்டுகளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் "பாகப்பிரிவினை"யின் மொத்த பார்வையாளர்கள் 5.5 லட்சத்தை தாண்டவில்லை என்பதை கைபிள்ளைகள் உணர வேண்டும். இதன்பிறகு வந்த "உரிமைக்குரல்" 200 நாட்கள் ஓடி வசூல் ரூ 7 லட்சத்தையும் தாண்டி சாதனை படைத்தது.
இப்படி ஒரு படம் மட்டும் அவர்களுக்கு கிடைத்திருந்தால் 1 வருடம் ஓட்டி மகிழ்ந்திருப்பார்கள். என்ன செய்வது கைபிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே! கிடைக்க!வில்லையே! என்ன பார்க்கிறாய்! அந்த இழுவை மன்னன் யாரென்றா? அதோ அந்த கண்ணாடியை என் முகத்துக்கு நேரா திருப்பு. சாட்சாத் அந்த இழுவை மன்னன் நானேதான் என்கிறாரா கைபிள்ளை நாயகன்.........ksr.........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*11/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வீட்டில் எம்.ஜி.ஆர். பக்தரின் குடும்பத்தில் பல பட்டதாரிகள் உருவாகியுள்ளனர் என்பதற்கு உதாரணமாக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.சங்கரன் ,பி.எஸ்.சி.,எம்.ஏ.எம்..எட் .என்பவரை சொல்லலாம் .* அந்த குடும்பத்தின் சார்பில் சகாப்தம் நிகழ்ச்சியை பற்றி பாராட்டி, ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்று வந்துள்ளது .அதில் இந்த நிகழ்ச்சியின் தொடர்*தற்போது 150 நாளை கடந்து வெற்றிநடை போடுகிறது அதற்கு எங்களது நல்வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சி மேலும் 500, 1000 என்று தொடரவேண்டும் என்பது எங்கள் விருப்பம் .* என்று எழுதி இருக்கிறார்கள் . மற்ற பட்டதாரிகள் பற்றி நான் குறிப்பிட்டே ஆகவேண்டும் .* திரு.சங்கர் அவர்களின் மனைவி திருமதி சுமதி சங்கர் .மகள் எஸ்.ப்ரியா* பி.எஸ்.சி.,எம்.ஏ., பி.எட். , மருமகன் திரு.சந்திரமோகன் பி.எஸ்.சி., எம்.ஏ..பி.எட்.* அறிவியல் ஆசிரியர்**,பேத்தி டாக்டர்* மோனிகா, எம்..பி.பி.எஸ்.,* இளைய பேத்தி* ப்ரீத்திகா* எம்.பி.பி.எஸ்., இரண்டாம் வருடம் .கள்ளக்குறிச்சி உலகப்ப செட்டி தெருவில் வசிக்கும் இந்த குடும்பத்தினர் சகாப்தம் நிகழ்ச்சியின் 150 வது* தொடரை பார்த்து மகிழ்ந்ததாகவும், தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்து வருவதாகவும்* நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்கள் இப்படி குடும்பம் குடும்பமாக சகாப்தம் நிகழ்ச்சியை பார்த்து தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருப்பதே அந்த மகோன்னதமான மாமனிதரின் புகழ் மேலும் மெருகேறி வருகிறது என்பதற்கு சாட்சியாக உள்ளது .**
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் சிறு* *வேடங்கள்**, துணை வேடங்களில் நடித்து வந்தாலும், கதாநாயகன் ஆன பிறகு, பன்முக தன்மை வாய்ந்த கலைஞராக+உருவானார் .**அதாவது திரைக்கதை , வசனங்கள், பாடல்கள், இசை அமைப்பு, ஒளிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு , சண்டை*காட்சிகள்* என்று திரையுலகில் அனைத்து விஷயங்களையும் கற்றறிந்தவர் .* 1958ல் நாடோடி மன்னன் படத்தை*தயாரித்தபோது ,அந்த படத்தில்*உலக மக்களுக்கு*ஜனநாயகத்தை போதிப்பது,* மன்னராட்சிக்கு**எதிரான* தத்துவத்தை*எடுத்துரைப்பது , மக்களாட்சி மூலம்* என்னென்ன நல திட்டங்கள்*செய்ய முடியும்*என்று கதையமைப்பில் புதுமையை*புகுத்தி , அந்த காலத்தில் யாரும்*பேசாத, சொல்லாத கருத்துக்களை*மக்களுக்கு*அறிமுகம் செய்தார் .**இரட்டை வேடத்தில்*நடித்த* எம்.ஜி.ஆர். இரட்டையர்களை ஒன்றிணைக்கும் காட்சி*பற்றி முடிவெடுக்க*ஒரு நிபுணரை கலந்து ஆலோசித்தார் . காமிரா கோணங்கள், சண்டை காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக*அமைய*வேண்டி*பலவிதமான*அரங்கங்களை * அமைத்து*,இப்படி ஒவ்வொரு துறையிலும்*தன்*கனவுகளை விதைத்தார் .* அந்த கனவுகளை நனவாக்க, வேண்டிய பணம் திரட்டி*முதலீடு செய்தார் .* இந்த படம் வெளியானபோது, திரையுலகில் இருந்த*அத்தனை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இவரை*பார்த்து வணக்கம் சொல்லும்படி தகுதிகளை*வளர்த்து* கொண்ட*சிறந்த*இயக்குனர், தயாரிப்பாளர்*என்று பெயரெடுத்தவர் .* இந்த வெற்றிகளுக்கு காரணம்*அவருக்கு*24 மணி நேரமும் இருந்த*தொழிற்*சிந்தனையே .**
அடிமைப்பெண் படத்தை தயாரிக்கும்போது பல்வேறு, புதுவிதமான*உடை அமைப்புகளில் கவனம் செலுத்தினார். அதற்காக*பல ஆங்கில*படங்களான,பென்* ஹர்*, போன்ற, சாதனை*படைத்த**படங்களை*பார்த்தார் . தன்னுடைய உதவியாளர்களுடன் படங்களை*பார்த்து ஆலோசனை கேட்டு, காட்சிகளை அமைப்பது பற்றி முடிவெடுப்பார் .* இந்தி நடிகர்*ராஜ்கபூர்*தந்தை பிருத்விராஜ்கபூர் நடித்த*படத்தை*பார்த்துள்ளார். சில*படங்களில் உள்ள முக்கிய*காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள்* ஆகியவற்றை பார்த்து* அதன்படி சில*மாற்றங்கள் செய்து காட்சிகளை அமைக்க* உதவியாளர், இயக்குனருடன் ஆலோசிப்பார் .* அடிமை பெண் படத்தில்*பல காட்சிகளில் கழுத்தில்*காலர்*போல* *பல வண்ணங்களில் செய்த*ஒரு பிளாஸ்டிக் பட்டையை*அணிந்து நடித்தார். இதற்கு*யோசனை,**தூண்டுகோலாக இருந்தது என்னவென்றால் ,குண்டடிபட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது சில*மாதங்கள்*கழுத்தில்*மாவுக்கட்டுடன் இருந்தார். 1967 பொது தேர்தலில் கூட* இந்த மாவுக்கட்டுடன் காட்சி அளித்த*புகைப்படம்தான்*தமிழகம் எங்கும் சுவரொட்டியாக ஒட்டப்பட்டு* அன்றைய தி.மு.க. அமோக வெற்றி பெற்று ,பேரறிஞர் அண்ணா முதல்வராகுவதற்கு* பெரிதும் துணை புரிந்தது .* அடிமைப்பெண்ணில் எம்.ஜி.ஆர். அணிந்திருந்த உடைகள், அன்றைய கால கட்டத்தில், தமிழ் திரையுலகிற்கு புதுமையாக இருந்தது . அது மட்டுமல்ல*அந்த உடைகள் வேறு எந்த நடிகருக்காவது பொருந்துமா என்பது சந்தேகம். ஏனென்றால் எம்.ஜி.ஆர். அவர்கள்* தீவிர*உடற்பயிற்சி மூலம் தன் உடலை*கட்டுக்கோப்பாக வைத்திருந்ததுடன், எந்த உடை அணிந்தாலும், அது அவருக்கு*பொருத்தமாகவும், எடுப்பாகவும் இருந்தது என்பதே . இப்படி ஒவ்வொரு படத்திலும், புதுமையை புகுத்துவது, தன் திறமைகளை வளர்த்து* கொள்வது,* அதிகரித்து கொள்வது, மற்ற நடிகர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி கொள்வது, வித்தியாசமாக காட்டி கொள்வது , மக்களின் ரசனை அறிந்து*,அவர்கள் ரசிக்கும்படி ,காட்சிகள், பாடல்கள், திரைக்கதை அமைத்து வெற்றி படங்களாக*அளித்ததால்தான்* இன்றும்*மக்கள் திலகமாக*புகழப்படுகிறார் .**
திரு.கா*. லியாகத் அலிகான் பேட்டி* :* ஒருமுறை அமைச்சர் காளிமுத்து என் கையை*பிடித்து நன்றாக குலுக்கிவிட்டு மிகவும் நன்றி லியாகத்*என்று பாராட்டினார் .நான் அவரிடம்*சொன்னேன். இதில்*செய்வதற்கு ஒன்றுமில்லை*தலைவர் எம்.ஜி.ஆர். மந்திரிசபையில் அமைச்சராக உள்ள திரு.காளிமுத்து*அவர்கள் எனக்கு*நன்றி சொல்ல வேண்டியது இல்லை ..இருப்பினும் அவர் நன்றியை குறிப்பிட்டு பேசிய பிறகு, இன்னும் 3 நாட்களில்*பட்ஜெட்*தொடர் ஆரம்பமாக*உள்ளது .* அதற்குள்* சமூக*ஆய்வு நடத்தி 300 சனோலா எண்ணெய் பாட்டில்கள் கொடுத்துவிடும்படி சொன்னார்.*. அதன்படி* 234 எம்.எல்.ஏக்கள், சில*அதிகாரிகள்* என்று**கணக்கிட்டு 300 சனோலா*எண்ணெய் பாட்டில்களை கொண்டு*வந்து வைத்துவிட்டோம் .அதை முறைப்படி வேளாண்துறை அமைச்சர் காளிமுத்துவிடம் தெரிவித்துவிட்டேன்.* அவரும் பட்ஜெட்*தொடரின்போது* அனைவருக்கும் அக்ரோ*வாரியத்தின் மூலம்* சனோலா*எண்ணெய் பாட்டில் வழங்கப்படும் என்று அறிவித்தார் .அடுத்த 1 மணி நேரத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும்* சனோலா*எண்ணெய் பாட்டில் கொடுக்கப்பட்டது .* அப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவையில் இல்லை. மேலே தன்னுடைய அலுவலத்தில் இருந்துள்ளார் .* இந்த விஷயம் முதலில் அவருக்கு தெரியப்படுத்தவில்லை*. பின்பு தலைவர் அவர்கள் மாலையில்*காரில்*புறப்படும்போது நானும்*அண்ணன்* காளிமுத்துவும் இணைந்து*அனைவருக்கும் சனோலா*எண்ணெய் பாட்டில்கள் கொடுத்தோம்.*உங்களுக்கான சனோலா* 5 லிட்டர் எண்ணெய் பாட்டிலை வாங்கி கொள்ளுங்கள் என்றேன் . என்ன இது. இந்த வழக்கம் புதிதாக உள்ளது என்றார். அண்ணே, இது வழக்கமாக*கொடுப்பதுதான் என்றதற்கு,* கொடுப்பதற்கு முன்பு என்னிடம் அனுமதி வாங்கினீர்களா , யாரிடம்*அனுமதி பெற்றீர்கள்..இதற்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா*. உடனே கொடுப்பதை நிறுத்து என்றார் . நான் உடனே பதறிவிட்டேன். இருந்தாலும் தைரியத்தை*வரவழைத்து கொண்டு*,அண்ணே* உங்களுக்கு தெரியாமலே*எல்லோருக்கும் கொடுப்பதாக அறிவித்துவிட்டு ,கொடுத்துவிட்டோம். மன்னித்துவிடுங்கள் என்றேன் .***ஒரு நிமிடம் யோசித்தபடி என்னை முறைக்கிறார் . அவர் முறைக்கிறாரா அல்லது எச்சரிக்கை விடுக்கிறாரா என்று ஒரு கனம்*தெரியவில்லை .*நான் 5 லிட்டர்*சனோலா எண்ணெய் பாட்டிலை*நீட்டியபடி நின்று இருந்தேன். பிறகு இது என்ன, யாருக்கு*என்றார்.*அண்ணே ,இது உங்களுக்காகத்தான் என்றேன் . எனக்கெல்லாம் வேண்டாம் .நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்றார். இல்லை அண்ணே* ,நீங்கள் வாங்கினால்தான் நன்றாக இருக்கும் என்றேன் . வாங்காமல் இருந்தால் என் மனம் சங்கபடப்படும் என்று நினைத்து , தன்* உதவியாளரிடம் கொடுக்க*சொல்லி, வண்டியின்*பின்புறம் வைக்க சொன்னார் .* ஆனால் பணம் கொடுக்காமல் நான் வாங்க மாட்டேன்**இதன் விலை என்ன என்று கேட்டார். அண்ணே* இதன் விலை ரூ.90/-தான் என்றேன் .அந்த காலத்தில் சனோலா 5 லி.பாட்டில் விலை அவ்வளவுதான் .* உடனே பாக்கெட்டில் இருந்து ரூ.100/- எடுத்து கொடுத்து , மீதி 10 ரூபாயை*நீயே வைத்து கொள். இதற்கான பில்லை*கட்டிவிட்டு*தகவல் கொடு என்றார் . அரசு பணத்தை கூட*தவறாக உபயோகப்படுத்த கூடாது* என்று சொல்லிஇலவசமாக பெற்று கொள்ள மறுத்து*, தன் சொந்த பணத்தை*கொடுத்து, மீதி பணத்தை என்னையே வைத்து கொள்ள*வைத்து ,அதற்குரிய பில்லை*முறையாக கட்டிவிடு* என்று சொன்ன*முதல்வர் எம்.ஜி.ஆரின்*செயல்பாட்டை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். ஒரு முதல்வராக எப்படி நடந்து கொள்ளவேண்டும், என்பதற்கு*முன்னோடியாக, மற்றவர்களுக்கு படிப்பினையாக*, மறந்தும் தவறு செய்யாதவராக வாழ்ந்து காட்டினார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறுசேமிப்பு துறையின்*துணை தலைவராக இருந்தபோது பேரறிஞர் அண்ணா*முதல்வராக இருந்து அவருக்கு*தனியாக*ஒரு* தொலைபேசி எண்* கொடுத்திருந்தார் . அரசு,மற்றும் அலுவலக வேலை குறித்து பேசும்போது*தான் அந்த தொலைபேசியில் பேசுவார்*. தன் சொந்த*வேலைக்கு, விஷயத்திற்கு பேசுவதாக இருந்தால், அலுவலகத்தில் ஒரு பெட்டி இருக்கும். அதில் அன்றைக்கான கட்டணம்*25 பைசாவை*அந்த பெட்டியில் போட்டுவிட்டுத்தான் பேசுவது வழக்கம்.* இப்படி தலைவர் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை முறையை*நெறியோடு* நடத்தி, வாழ பழகிய*அந்த தலைவரிடத்தில்வாழ பழகிய*என்னை போன்ற தொண்டர்கள், தலைவர்கள் எல்லாம்**அதுபோன்ற அவருடைய சிந்தனைகளில்* வளர்ந்த*,வாழ்ந்த,காரணத்தினால்தான் அவருடைய நல்ல பழக்க வழக்கங்கள்,*உடற்பயிற்சி செய்து உடலை*கட்டு கோப்போடு வைத்து கொள்ளுதல்,தோற்ற பொலிவை* பேணி காப்பது*போன்ற விஷயங்களில் என்னை போன்றவர்க;ள்*முழு கவனம் செலுத்தி வந்தோம் . இஸ்லாமியர்கள் சொல்வார்கள், அதாவது*ஒருவன்* *வீட்டில்* உணவருந்துவதாக இருந்தால்***அது பிரியாணியா*அல்லது பழைய சோறா என்பது எவருக்கும் தெரியாது.* ஆனால் உன் முக பொலிவு தோற்ற பொலிவுடன் இருந்தால்*மட்டுமே உன்னை மதிப்பார்கள், அவர்களும் அதை* போல இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள் என்று நபிகள் நாயகம் குறிப்பிட்டுள்ளதாக சொல்வார்கள். அது போலத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்* அந்த கருத்தை*தன்னுடைய வாழ்க்கையில்* கடைபிடித்தார் .* நபிகள் நாயகம் ஏதாவது வாசனை திரவியங்கள் கிடைத்தால் பூசி கொள்வதில் அக்கறை காட்டுவார் . தன் சகாக்கள் எப்போதும் தோற்ற பொலிவுடன் இருக்கவேண்டும் என்பதில்*கவனம் செலுத்தி* வலியுறுத்தி பேசுவார். அதுபோல*தானும் இருக்க வேண்டும் என்று விரும்புவார் . அதுபோல*தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் லுங்கி* கட்டாத முஸ்லிமாக, சிலுவை அணியாத கிறிஸ்துவாக, நெற்றியில் பட்டை போடாத*இந்துவாக , மொட்டை போடாத**புத்தனாக*பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது போல தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எம்மதமும் சம்மதம் ,என்று சொல்லி எல்லா மதங்களிலும் உள்ள நல்ல பல கருத்துக்களை எல்லாம் உள்வாங்கி கொண்டு*, அதன்படி, தன்னை வழிநடத்தி, நாட்டில் மத கலவரங்கள், ஜாதி கலவரங்கள் என்கிற சண்டைகளே இல்லாத அளவில் ஆட்சி புரிந்த,அற்புத**முதல்வர்தான் நம் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த வகையில்*. அண்ணாவின் வழியில்**பின்பற்றிய தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் யாருக்கும்*சளைத்தவர் அல்ல ..**
எதிர்க்கட்சி தலைவராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.வெற்றி பெற்றதும்*,, பெருந்தலைவர் காமராஜுக்கு காஸ்மோபாலிடன் கிளப்பில்*சிலை*அமைத்து பெருமை சேர்த்தார்*என்பது வரலாறு . அரசியலில் பேரறிஞர் அண்ணாவும், காமராஜரும் எதிரெதிர் துருவங்களாக* இருந்தாலும் , ஒரு தமிழனாக இருந்து ,தமிழகத்திற்கு* நீங்கள் செய்த சேவைக்கு,பாராட்டி* உங்களுக்கு சிலை*வைக்கிறோம்*என்று அவர் சம்மதத்தை* கேட்டதோடு, அந்த சிலையை* முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவை*கொண்டு* திறந்து*வைக்க* ஏற்பாடு செய்யும் அரிய வாய்ப்பை*உருவாக்கி காட்டிய* பேரறிஞர் அண்ணா வழியில்**இரண்டாவது உலக தமிழ் மாநாடு நடைபெறும் நேரத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலையைதனது சொந்த செலவில்**திறந்து வைத்தவர்தான் நம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆளும்*கட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் எப்போதும்*,என்றைக்கும் ஒரே நிலையோடு, சமமான எண்ணத்தோடு ,அனைவரையும் சமநிலையில் நடத்தி அனைத்து தலைவர்களுக்கும் ஒரு பாடமாக, படிப்பினையாக வாழ்ந்து காட்டிய தலைவர்தான்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.* இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேசினார் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.உறவு சொல்ல ஒருவரின்று வாழ்பவன் - பாசம்*
2.அச்சம் என்பது மடமையடா*- மன்னாதி மன்னன்*
3.சின்னவளை , முகம் சிவந்தவளை - புதிய பூமி*
4.தாயில்லாமல் நானில்லை*- அடிமைப்பெண்*
5.திரு. கா.லியாகத் அலிகான் பேட்டி*
-
நம் இதயதெய்வத்தின் சென்டிமென்ட் 2020 இலும் தொடரும் அதிசயம்..
ஒரு காலத்தில் தமிழகத்தின் எந்த ஊரிலும் ஒரு திரையரங்கம் புதிதாக கட்டப்பட்டால் அங்கு திரை இட படும் முதல் படம் நம்ம வாத்தியார் படங்களே..
தீபாவளி வந்தால் போதும் தலைவர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.
1945இல்.....மீரா
1948 இல்...மோகினி
1960 இல் ....மன்னாதி மன்னன்
1961 இல்....தாய் சொல்லை தட்டாதே..
1962 இல் விக்கிரமாதித்தன்...
1963 இல்.....பரிசு..
1964 இல் படகோட்டி
1965 இல் ....தாழம்பூ
1966 இல்.....பறக்கும் பாவை.
1967 இல் ....விவசாயி
1968 இல் காதல் வாகனம்...
1969 இல்....நம்நாடு
1971 இல்....நீரும் நெருப்பும்..
1975 இல்....பல்லாண்டு வாழ்க.
இந்த படமே தலைவர் இருக்கும் போது தீபாவளி அன்று கடைசி படம்...
1990 இல்....அண்ணா நீ என் தெய்வம்....அவரச போலீஸ் ஆகி தலைவர் .........போது வந்த தீபாவளி படம்.
பல தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் துவங்க பட்ட போதும் அவற்றில் வந்த முதல் படம் தலைவர் படங்களே.
பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட முதல் படம் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன்.
இன்றும் கூட கொரோனோ தடை முடிந்து தமிழகம் எங்கும் இந்த தீபாவளிக்கு திரை இட பட்ட அரங்குகளில் 90 சதவிகிதம் தலைவர் படங்களே....
வரலாறு தலைமுறைகள் தாண்டி தலைவருக்கு தலைவருடன் மட்டுமே என்றும் தொடரும்.
நன்றி...வாழ்க தலைவர் புகழ்...
உங்களில் ஒருவன்...
இவை இப்படி நடக்க காரணம் ஏன் என்றால் உண்மையில் .....
அவர் ஒரு சரித்திரம்..........சகாப்தம்... அபூர்வ தோன்றல்...
-
# இருட்டிலிருந்து அலறும் ஆந்தைகளும், கோட்டான்களும் #
நேற்று தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்த நம் சொந்தங்களே மீண்டும் ஒரு முறை இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Corona virus dicease,
World Health Organization 2019 இல் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய வைரஸ் ஒன்றுக்கு covid 19 என்று பெயர் சூட்டினார்கள்,
இந்த வைரஸ் தாக்கம் நம் இந்தியாவை மட்டுமல்ல அனைத்து உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் பதம் பார்த்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை உண்ண வழியின்றி பெரும் துயரத்தில் தள்ளி விட்டது,
குறிப்பாக தினசரி கூலி வாங்கி பிழைத்த ஏழை மக்களை மட்டுமல்ல பெரிய உத்தியோகங்களில் இருந்தவர்களைக் கூட பஞ்சப் பராரிகளாக்கி விட்டது,
அந்த வகையில் இந்த வருட தீபாவளி மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் அமையவில்லை,
நம் இந்தியாவில் மட்டும் பத்து கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்,
லாக் டவுன் காலத்தில் மட்டும் இந்தியா முழுக்க சுமார் 14.5 டன் பழைய தங்கம் பொது மக்களால் வறுமையின் சுமையால் விற்கப்பட்டிருக்கிறது
இந்தியாவில் Economical Recession என்னும் பொருளாதார மந்த நிலை வந்து விட்டதாக உலக வங்கி சுட்டிக் காட்டியுள்ளது,
நான் இதையெல்லாம் சுட்டிக் காட்டுவதற்குக் காரணம் அடுத்து வரப்போகும் 2021 ஆம் ஆண்டாவது அனைத்து மக்களுக்கும் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரக்கூடிய ஆண்டாக அமைய வேண்டும்,
நம் தமிழகத்தை எடுத்துக் கொண்டோமானால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வறுமை காரணமாக சிவகாசியில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இன்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு " குட்டி ஜப்பான் " என்று சொல்லக்கூடிய அளவுக்கு லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதோடு பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணக்கூடிய அளவுக்கு உயர்ந்து நின்றது,
ஆனால் சமீப காலமாக சுற்றுப்புற சூழலை காரணம் காட்டி நிறைய மாநிலங்களில் பட்டாசை தடை செய்து விட்டார்கள்,
வருடம் முழுக்க எந்த கட்டுப்பாடும் இன்றி வாகனங்கள் அள்ளி உமிழும் கரும் புகையைப்பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை மாறாக எத்தனையோ பேரின் வாழ்வாதாரமாக விளங்கும் வருடத்தில் நான்கைந்து நாள்களே வெடிக்கப்படும் இந்த பட்டாசுகளால் சுற்றுச் சூழல் கெடுவதாக சொல்கிறார்கள்,
லாக் டவுன் காலத்தில் வாகனங்கள் ஓட தடை செய்யப் பட்ட போது ஆக்ராவின் தாஜ்மஹாலை தூரத்தில் இருந்து கூட தெளிவாக பார்க்க முடிந்தது,
ஆனால் பட்டாசை மட்டும் தடை செய்து இன்று சிவகாசி நகரமே இருளில் மூழ்கி விட்டது,
அடுத்த வருடமாவது இந்த துயரங்கள் அனைத்தும் நீங்கட்டும்,
அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் அணுகுண்டு வீசி
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் சின்னாபின்னமாக்கப்பட்ட போதும் ஜப்பான் மீண்டும் கடும் உழைப்பின் மூலம் உலக அரங்கில் விஸ்வரூபம் எடுத்தது
அதுபோல் இந்த கொரோனா உலகத்தையே முடக்கிப் போட்டாலும்
அடுத்த வருடத்துக்குள் பீ னிக்ஸ் பறவை போலநாம் அனைவரும் கடின உழைப்பின் மூலம் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்க வேண்டும், ...
சரி இனி விஷயத்துக்கு வருவோம்...
இந்த பேரிடர் காலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைத்த உடன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பெரிய நகரங்களிலும் விநியோகஸ்தர்கள் முண்டியடித்துக் கொண்டு தலைவர் படங்களை திரையிடத் தொடங்கி விட்டார்கள்,
எனக்குத் தெரிந்து மகா நகரங்களில் "தர்மம் தலை காக்கும், ரகசியப்போலீஸ் 115, நம்நாடு, தேடி வந்த மாப்பிள்ளை, எங்க வீட்டுப் பிள்ளை, சிரித்து வாழ வேண்டும், காவல் காரன், ஆயிரத்தில் ஒருவன், நினைத்ததை முடிப்பவன், உரிமைக்குரல், நீதிக்குத் தலை வணங்கு முதலான படங்கள் வெற்றி முரசு கொட்டி பவனி வருகிறது ( கிடைத்த தகவல் படி, இன்னும் பல படங்கள் திரையிட்டிருக்கப்பட்டிருக்கலாம் ) இப்படி நம் தலைவரின் மறு வெளியீட்டு சாதனைகள் மறுபடியும் தொடர்கிறது,
திரவுபதியின் மானம் காக்க ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா எப்படி துகில் தந்து காத்தாரோ அதே போல விநியோகஸ்தர்களின் மானம் காத்த கிருஷ்ண பகவான் நம் தலைவர் என்று சொன்னால் அது மிகையாகாது,
இதே போல் கணேசனுக்கு படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தது என்றால் இதற்கு முன் வலை தளங்கள் அனைத்தும் திணறி இருக்கும்,
பாருங்கையா பாருங்க எங்க அய்யனோட புகழ்
எப்பூடி என்று வானத்துக்கும் பூமிக்கும் கணேச குஞ்சுகள் குதித்திருக்கும்
ஆனால் நாம் நிறைகுடம் தளும்பாததைப்போல அமைதியுடன் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
ஆனால் இந்த கனடா மன்னாரன் கம்பெனி தங்க வேலு, போண்டா மணி க்ரூப்புகள் கொசுத் தொல்லை தாங்க முடியல ...
1964 இல் வெளியாகி முதல் முறையோடு மண்ணோடு மண்ணாய்ப் போன " "கொசு ராத்திரி, தேவிகா கட்டளை, கை கொடுக்காத தெய்வம், சிவப்பு விளக்கு, குறட்டை முத்து இன்னும் என்னவோ ஒண்ணு இந்த படங்களுக்கெல்லாம் நினைவு அஞ்சலி செலுத்தி பதிவு வேற போட்டிருக்கிறார்கள்,
தொடருங்கப்பா உங்க நினைவேந்தல் நிகழ்ச்சிய, காரணம் வெளியிட்ட கையோட அனைத்து தரப்புக்கும் பெரிய போர்வைய முக்காடா கொடுத்த படங்கள் அல்லவா,
அதனால் மறக்காம ஒவ்வொரு வருடமும் தொடருங்கள்,
அப்புறம் நூறு நாட்கள் ஓடியும் தயாரிப்பாளர்களின் தலையில் பெரிய குற்றாலம் துண்டு போட்ட படங்களைப் பற்றி பார்ப்போமா?
பழைய குப்பைகளை விட்டு விடுவோம்
கொஞ்சம் 1967 லிருந்து பாப்போம்
" ஊட்டி வரை உறவு "
அய்யோ பாவம் கோவை செழியன் அந்த படத்தை 100 நாள் ஓட்ட தான் பட்ட கஷ்டத்தை, படத்தினால் அடைந்த நஷ்டத்தை பின்னாளில் மூக்கை சீந்திக் கொண்டே பிலிமாலயா இதழில் பேட்டி கொடுத்ததை கணேசன் குஞ்சுகள் அறிவார்கள் ( கணேசனும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார் )
ஒரே ஒரு அரங்கில் ஓட்டப்பட்ட 100 நாள் படம்" ஞான ஒளி " அந்த படத்தை ஜேயார் மூவீஸ்
தென்காசி சங்கரன் ஆறுமுகம் சகோதரர்களிடம் பேசும் பட வாசகர்கள் வெற்றிப்படமா? என்று கேட்டபோது அதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம் என்று பதில் அளித்தார்கள்,
"தவப் புதல்வன் " படம் பற்றி திரு. முக்தா சீனிவாசன் அவர்கள் சொன்னது " படத்தில் மாலைக் கண் நோய் பாதித்தது சிவாஜிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சேர்த்துதான் ( 100 நாள் சாதனை பைலட் அரங்கம் என்று நினைக்கிறேன் )
" 1975 இல் வெளியான
" அவன்தான் மனிதனைப் பற்றி தினத்தந்தி காலச் சுவடுகள் பகுதியில் திரு. பஞ்சு அருணாச்சலம் அவர்கள் கவலையோடு குறிப்பிட்டது " அந்தப் படம் 100 நாட்கள் ஓடினாலும் எங்களுக்கு நஷ்டத்தையே கொடுத்தது,
அதே ஆண்டில் வெளி வந்த " மன்னவன் வந்தானடி " திரைப்படம் பற்றி சமீபத்தில் மறைந்த சிவாஜி ரசிகன் என்று பறை சாற்றிக் கொண்ட எழுத்தாளர் சுதாங்கன் அவர்கள் " தின மலர் " பல்சுவை மலரில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதிய " செலூலாயிட்சோழன் " தொடரில் மிகப்பெரிய தோல்விப்படம் என்று சொன்னாரோ இல்லையோ மய்யம் இணைய தளத்தில் கணேசன் குஞ்சுகள் துள்ளிக் குதித்தார்கள்
கூடவே அர்ச்சனையும் சேர்த்து திட்டித் தீர்த்தார் கள் " இவன் யாருடைய கையாளோ" என்று,
அதே தொடரில் சுதாங்கன் குறிப்பிட்ட இன்னொரு விஷயம்
" சில சிவாஜி ரசிகர்கள் என்னிடம் கேட்டார்கள்
எம்ஜிஆர் வருடத்துக்கு இரண்டோ, அல்லது மூன்று படம்தான் நடிக்கிறார், ஆனால் சிவாஜி வருடத்தில் நிறைய படங்கள் நடிக்கிறார் எனவே சிவாஜி படங்கள்தான் அதிக வசூல் வரவேண்டும் அப்படியானால் சிவாஜியும் வசூல் மன்னனாக ஏன் நாங்கள் நினைக்கக் கூடாது?
அதற்கு சுதாங்கன் குறிப்பிட்ட பதில் " அவர்களின் வாதம் அவர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் உண்மை நிலவரம் வேறு,
இந்த விஷயத்தில் எம்ஜிஆர் படங்களை ஒப்பிட முடியாது காரணம் அந்த படங்களின் வியாபாரமும், வசூலும் வேறு லெவல், பக்கத்தில் நெருங்கக் கூட வாய்ப்பில்லை,
இதையும் ஒரு சிவாஜி ரசிகனாக நான் சொல்லவில்லை, விநியோக வட்டாரங்கள்
சொல்வது " என்று குறிப்பிட்டிருந்தார்
இப்போது போண்டா மணி, "தில்லானா மோகனாம்பாள்" வைத்தி கோஷ்டிகள் புதிதாக ஒரு ட்ரெண்டை கடை பிடிக்கிறார்கள்
வேலை மெனக்கிட்டு "யூ ட்யூப் " பில் உட்கார்ந்து கொண்டு "சித்ராலயா " கோபு சொன்னார் என்று கதை சொல்லுவது,
படம் எடுத்த ஸ்ரீதருக்கு அல்லவா அதன் வலி தெரியும், சும்மா கூட உட்கார்ந்திருந்த அல்லக்கைகள் பேசினால் அது சபையில் எடுபடுமா வைத்தி? ( எலுமிச்சம் பழமும் வச்சிருந்தா நல்லா தலைக்கு தேச்சு குளி)
அடுத்ததா இவர்களின் சென்னை நகர வசூல் மொள்ளமாரித்தனம் பற்றி சங்கர் சார் ஏற்கனவே கிழித்து தொங்க விட்டு விட்டார்,
நாமும் நம் பங்குக்கு கொஞ்சம் தண்ணி தெளிச்சு வைப்போம் சரியா?
இவர்கள் அடிக்கடி சிலாகிப்பது 1972 படங்களைப் பற்றி,
ஆனால் பொத்தாம் பொதுவாக அளந்து விட்டு அமைதியாகி விடுவது,
சரி அதைப் பற்றி பார்ப்போம்
தர்மம் எங்கே? - சட்டியே உடைஞ்சி போச்சு,
தவப் புதல்வன் - பைலட்டில் மட்டும் முக்தாவினால் பாக்கெட்டை தடவித் தடவி ஓட்டிய ஓட்டைப்புதல்வன்,
ஞான ஒளி - சாரதாகிட்ட நெஞ்சில அடிச்சு காட்னதுதான் மிச்சம்,
சங்கரன் ஆறுமுகம் சகோதரர்கள் நெஞ்சுல அடிச்சு அழுததுதான் கடைசி க்ளைமாக்ஸ்
ராசா - சென்னையில் மட்டும் தேவி பாரடைஸ் அரங்கில் ஒரு ஐம்பது நாளைக்கு தில்லுமுல்லு பண்ணி ரிக் ஷாக்காரனை விட கூட வசூல் வந்ததா டமாரம் அடிச்சுட்டு அப்புறம் ராசா கூசா ஆயிட்டார் B &C சென்டர் களில் ராசா 4 வாரம் கூட நடக்க முடியாமல் கோமாவில் படுத்துட்டார்,
பட்டிக் காடா பட்டணமா - மதுரையிலும், சேலம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் 3 வாரத்தில் மூக்கையன் மூக்கு அறுபட்டதுதான் மிச்சம்,
வசந்த மாளிகை - எல்லா இடங்களிலும் ரிக் ஷாக்காரனை முந்த முடியாமல் வாணிஸ்ரீ சீலை புழியிறத பார்த்ததுதான் மிச்சம்
இப்படி ஆறு படத்துல இடிந்த மாளிகையும், பட்டணமும், ராசாவும் சேர்ந்து மூன்றும் ஓடி முடிய ரிக் ஷாக்காரன் காலடியில் மிதி பட்டு சேறாகிப் போன கதையை தலைவரின் ரசிகர்கள் சாந்தி தியேட்டர் வளாகத்தின் உள்ளேயே வந்து போஸ்டர் அடித்து ஒட்டிய
வரலாறு இந்த போண்டா மணிக்கு மறந்திருக்காது என்று நம்புவோம்,
அது எப்படிப்பா சென்னையில் மட்டும் தலைவர் படம் வசூல் செய்து முடித்தபிறகு ஏதாவது ஒரு படத்தை சாந்தி மற்றும் கிரவுன், புவனேஸ் வரியில் போட்டு தலைவர் வசூலை விட கூட காண்பிப்பது
உதாரணம் தலைவர் படம் 13 லட்சம் வசூல் செய்த பிறகு கணேசன் படத்தை அதே 13 லட்சத்தை விட கொஞ்சம் கூட காண்பித்து தம்பட்டம் அடிப்பது,
சரி போடுறத ஒரு 15 லட்சமா கணக்கு காட்ட வேண்டியதுதானே?
அதே மாதிரி தலைவர் படம் 23 லட்சம் வசூலா?
நைசா அதை விட 500 ரூபாய் கூட காட்டுவது
சரி ஒரு 30 லட்சமா காட்ட வேண்டியது தானே?
ஒரு இரண்டு நாளைக்கு முன்பு சங்கர் சார் காறித் துப்பாத குறையா எல்லா ஆதாரங்களையும் காட்டி தோலை உரித்திருந்தார்.
தலைவர் படம் வசூல் சாதனை செய்வதற்குப் பிறகு தான் கணக்கு வரும்,
அதையே தலைவர் படத்துக்கு முன்பு சாதனை செய்யத் தெரியாது,
த்தூ இதெல்லாம் ஒரு பொழப்பு?
அப்புறம் A சென்டர் ஒரு சில இடங்களில் சுமாரா ஓடிய" அண்ணன் ஒரு கோயில் வெற்றிப்படமா?
சென்னை வாந்தி பூந்தி வசூலை மட்டும் எடுத்துப் போட்டு விட்டு மற்ற இடங்களில் வசூலை பார்த்தால் காறி துப்பத் தோன்றும்
அதையே இன்னொரு அல்லக்கை கடலூரில் 40 நாள் ஓடினால் சென்னையில் 100 நாள் ஓடுவதற்கு சமம் என்று கதை வசனத்துடன் வாந்தி எடுத்துள்ளது
சரிதான் எத்தனையோ தலைவர் படங்கள் கடலூர் நகரில் 100, 75, 50 என்று ஓடியிருக்கிறது அப்போ அதெல்லாம் சென்னையில் 500 நாள், 1000 நாள் ஓடுவதற்கு சமமா என்ன?
" தங்கச் சுரங்கம் " படம் தற்போது கிடைத்த தகவல் படி 25 நாளில் 23 லட்சம் வசூலாம்?
அடப்பாவிங்களா இப்படி பச்சையாய் புளுகுகிறீர்களே கொஞ்சம் கூட உறுத்தவே இல்லையா?
ராமண்னா தன் மைத்துனர் ராஜன் பேனரில் இயக்கி படம் படு தோல்வி அடைந்தவுடன் அடுத்து விநாயகா பிக்சர்ஸ் பெயரில் சொர்க்கம் படத்தை எடுத்தார்
ஆனால் விநியோகஸ்தர்கள் ராமண்னாவை தொடர்ந்து தொந்தரவு செய்ததால் " என்னைப் போல் ஒருவன் " படம் முதலில் சென்னையில் வெளியிட முடியாமல் மற்ற மாவட்டங்களில் வெளியிட்ட வரலாற்றை
கொஞ்சம் போண்டா மணி புரட்டிப் பார்க்கட்டும்
அந்த படத்தைப்பற்றி சிவாஜியே " என்னைப் பிடித்து கிணற்றில் தள்ளி விட்டார்கள் " என்று பரிதாபமாக புலம்பிய செத்த கழுதை 23 லட்சம் வசூல் பண்ணுச்சாம்,
கடைசியா ஒரு தும்பா ஒரு அரசியல் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்
எல்லோரும் சொல்வதுதானே
"ஆமை புகுந்த வீடும்
சிவாஜி புகுந்த கட்சியும் உருப்படாது என்று,
அதை நிரூபிப்பது போலவே முன்பு காங்கிரஸ் பிறகு ஜானகி அம்மையார்
இவருடன் சேராமல் ஜானகி அம்மையார் தனித்து நின்றிருந்தால்
நிச்சயம் வெற்றி அடைந்திருப்பார்,
அவரது போறாத காலம்
இந்த அதிர்ஷ்டக் கட்டையுடன் சேர்ந்து அவரும் காணாமல் போனார்,
அடுத்து காமராஜருக்கு துரோகம் செய்யவே இல்லையாம் கணேசன்,
சரிங்க ஆபீசர் இந்திரா அம்மையார் அவசர நிலை கொண்டு வந்த போது காமராஜரை சிறையில் அடைக்கத் துடித்தார் என்பது வரலாறு,
அந்த நிகழ்வுகளினால் தான் காமராசர் மனம் உடைந்து மறைந்தார்,
அப்படி அவர் மறைந்தது ம் கணேசன் ஏன் இந்திரா அம்மையார் காலில் போய் விழுந்தார் என்று விளக்க முடியுமா ஆபீசர்? ( ஒரு ராஜ்ய சபா எம். பி பதவியும், சொத்து பத்துக்கெல்லாம் நல்லா பாதுகாப்பும் கிடைச்சுது சரிதானே ஆபீசர்? )
1953 இல் திருவாரூர் தி. மு. க கூட்டத்தில் அண்ணா, தலைவர், கருணாநிதி எல்லாம் இருந்த போதும் தி. மு க வினர் சிவாஜியை பேச ச் சொல்லி கூச்சல் போட்டார்களாம், இவர் பேசியவுடன் கூட்டம் கலைந்து விட்டதாம் ( தும்பா உனக்கு நல்லா காமெடி வருதடே பரவாயில்ல அப்படியே maintain பண்ணுங்கப்பு )
இந்த நாஞ்சில் தும்பு தான் தமிழக அரசியல் பத்திரிகையில் மனோகரா படம் ஒரே வாரத்தில் 84 லட்சம் வசூல் செய்தது என்று சொன்ன பராக்கிரம பூபதி ( என்னே காலக் கொடுமை? )
அடுத்து குமுதம் பத்திரிக்கை 1983 இல் ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டதாம் அதில் தலைவர் கணேசனை காட்டிலும் பின் தங்கி தான் இருந்தாராம்,
சரிங்கப்பு அதே குமுதம்
1980 இல் வெளியிட்ட கருத்து கணிப்பில் இனி எக்காலத்திலும் எம்ஜிஆர் ஆட்சிக்கே வர முடியாது என்று கணிப்பு சொன்னது ஆனால் என்ன நடந்தது?
கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் ஒரு 2000 பேரிடம் கருத்து கேட்டால் அதுதான் சரி அப்படித்தானே?
இப்போது சமீபத்தில் பீகார் மாநிலத்தில் தேர்தல் கருத்து கணிப்பு நடந்தது
அவர்கள் சொன்னது என்ன? நடந்தது என்ன ஆபீசர்?
அமெரிக்கா வில் டிரம்ப் ஜெயிப்பார் என்று நம் நாட்டு எண் கணித நிபுணர்கள் முதல் அமெரிக்க ஊடகங்கள் வரை அறுதியிட்டு உறுதியிட்டு கூறினர்
முடிவு ஜோ பிடன் பதவி ஏற்கப் போகிறார்
அதனால தும்பு இந்த மாதிரி பாப்பா கதையை வெளில சொல்லாதே மூஞ்சி யில் புளுக் என்று யாரும் துப்பிறாம! இன்னொரு மில்லியன் டாலர் கேள்வி???!!! இவ்வளவு தப்பாக முட்டு கொடுத்து, சப்பை கட்டு கட்டி, என்னத்த சாதிக்க போரானுங்க?!
தலைவரின் பக்தன்
ஜே.ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...
-
1968 லயே மக்கள் திலகம் "வசூல் சக்ரவர்த்தி" என்று விளம்பரம் செய்யப்பட்டு வந்த "ரகசிய போலீஸ் 115" விளம்பரம். அதை நிரூபிக்கிறா மாதிரி 10 நாளில் சென்னயில மட்டும் 2 லட்சத்து 37 ஆயிர ம் வசூல். வெறும் 10 நாளில். 1969 ல் வெளியான மாற்று முகாம் படம் ஒன்று விளம்பரம் பாத்தேன்.சென்னையில் 4 வாரம் (28 நாள் )ஓடியே 3 லட்ச்த்து 65 ஆயரம்தான் வசூல். ரகசிய போலீஸ் 4 வாரத்தில சென்னையில்் 4 லச்சத்தை தாண்டிவிட்டார். தமிழ்நாடு பூராம் 4 வாரத்தில் கணக்கு போட்டு பாருங்கள். விளம்பரத்தில் உள்ளபடி மக்கள் திலகம் வசூல் சக்கரவர்த்தி என்று புரியாதவங்களுக்கும் புரியும்..........rr...
-
செல்வராஜ் பெர்னாண்டஸ் என்று ஒருத்தர். அவர் எம்ஜிஆர மரியாதயாகத்தான் எழுதியிருக்கார். அதனால் நாம்பளும் அவரை அவர்,,, இவர் என்று மரியாதயா அழைப்போம். கணேசன்தான் வசூல் சக்கரவர்த்தியாம். செல்வராஜ் பெர்ணான்டாச் சொல்றாரு. எம்ஜிஆரை தேடி தயாரிப்பாளர்கள் போகாதது ஏன்? குறைச்சலான படங்களில் நடிச்சது ஏன்? என்று கேட்கின்றார்.
எம்ஜிஆரை நோக்கி தயாரிப்பாளர்கள் வரவில்லை என்று யார் சொன்னது? முதல்வராகும்போது பல படங்கள் அப்படியே நின்றது. அதில் அண்ணா என் தெய்வம் (2 பாட்டு மொத்தம் 15 நிமிடம்தான் வருவார்) அவசர போலீஸாவும், நல்லதை நாடு கேட்கும் (பாட்டு கிடயாது. மொத்தம் 5 நிமிடம் மட்டும் மக்கள் திலகம் வருவார்) இந்த 2 படமும் அவர் மறைஞ்ச பிறகு வந்தது. இன்னொன்று கணேசன் மாதிரி பணத்துக்காக கண்ட படங்களில் எல்லாம் எம்ஜிஆர் நடிக்க மாட்டார் . பெண்களை விபச்சாரிங்க சொல்ற மாதிரி இருக்குன்னு ராணி லலிதாங்கி கதையை மாத்தச் சொன்னார். முடியாதுன்னாங்க. படத்திலேருந்து விலகிவிட்டார். அதில் அப்புறம் கணேசன் நடிச்சார். காத்தவராயன் அப்படித்தான் கணேசன் நடிச்சார்.
ஜெமினிகணேசன், ஜெய்சங்கர் கூட 300 படம் நடிச்சாங்க. அதனால் அவங்க வசூல் சக்கரவர்த்தியா? தென்னக வசூல் சக்கரவர்த்தி யாரு? என்ற கேள்விக்கு பேசும்படம் 1971ல் எம்ஜிஆர் என்று பதில் சொன்னார்கள். (பேசும் படம், கலை, பொம்மை, பிலிமாலயா உட்பட எந்த பத்திரிகைகளும் எம்.ஜி.ஆர்., அவர்களை பாராட்டி போட்டாலும், இல்லை எதிர்த்து கருத்து இட்டாலும்
அவரை எதுவும் கட்டு படுத்தாது என்பது வேறு விடயம்) இது திமுகவினர் சொன்னதா? மார்க்கெட், வசூலுக்கு தகுந்தா மாதரிதான் சம்பளம் தருவாங்க. எம்ஜிஆர விட கணேசன் கம்மியாத்தான் சம்பளம் வாங்கினார். வசூல் சக்ரவர்த்தின்னா ஏன் எம்ஜிஆர விட கம்மியா கணேசனுக்கு சம்பளம் குடுத்தார்கள்? அன்பேவா படத்துக்கு 3 லட்சம் 25 ஆயிரம் எம்ஜிஆருக்கு சம்பளம் குடுத்த ஏவிஎம் உயர்ந்த மனிதனுக்கு கணேசனுக்கு ஒண்ணறை லட்சம் மேல சம்பளம் கிடயாது சொன்னது ஏன்? உங்கள் மார்க்கெட் அவ்வளவுதான் ராஜா. புரிஞ்சுக்கங்க. எம்ஜிஆர் வசூல் சக்கரவர்த்தி என்ற 100% உண்மை மாறவே மாறாது..........rrn...
-
பன்சாயி...
நேற்று இரவு வழக்கம் போல தொலைக்காட்சி சேனல்களை துழாவிக் கொண்டே சென்றேன். திடீரென இன்ப அதிர்ச்சி. டி.வியில் உலகம் சுற்றும் வாலிபன் படம். கண்டு களித்தேன். இதுதவிர, நேற்று பகல் 1.30 மணிக்கு ஜெயா டி.வியில் அரச கட்டளை. இரவு 7.30க்கு முரசு டி.வியில் தாயின் மடியில். இன்று காலை சன் லைப் டி.வியில் தாய் சொல்லை தட்டாதே. ‘எங்கெங்கு காணிணும் சக்தியடா....’ என்று பாடிய பாரதியார் இன்று இருந்திருந்தால் ‘எங்கெங்கு காணிணும் எம்ஜிஆரடா, தம்பி, ஏழு கடல் அவன் வண்ணமடா.... விண்டுரைக்க முடியாத விந்தையடா’ என்று பாடியிருப்பார்.
பாரதியார் என்றதும் நினைவுக்கு வருகிறது.பாரதியார் மறைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பின்னர் தலைவர் ஆட்சியின்போதுதான் அவரது குடும்பத்துக்கு தியாகிகள் பென்ஷன் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், முதல் மாத பென்ஷன் வந்த அன்று அதை வாங்கிக் கொள்ள பாரதியாரின் மனைவி செல்லம்மாள் இல்லை. அன்று காலையில்தான் அவர் இறந்திருந்தார். ஏன்? சுதந்திர வீரனின் வரலாற்றை விளக்கும் திரைப்படமான திரு.சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்துக்கு கூட தலைவர் முதல்வராக இருந்தபோதுதான் (1983 அல்லது 84 என்று நினைக்கிறேன்) வரிவிலக்கு தரப்பட்டது. இதை காங்கிரஸ் கட்சியையோ ,ஆட்சியையோ குறை கூறுவதற்காக சொல்லவில்லை. தியாகிகளுக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் உரிய மரியாதை அளிப்பவர் தலைவர் என்பதை, அதுவும் பாரதியார் பற்றி பேச்சு வந்ததால் குறிப்பிடுகிறேன்.
சரி.. உ.சு.வா.வுக்கு வருகிறேன். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். விரைவில் டிஜிட்டலில் பெரிய திரையிலும் காணப் போகிறோம். இந்த படத்தை பற்றி இதுவரை புத்தர் கோயில் மற்றும் ஹோட்டல் துசித் தானி ஆகியவை பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். எழுத நிறைய உள்ளது. ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும்போது எழுதுவேன். இப்போது, பன்சாயி பாடலை பார்ப்போம்.
அணுசக்தி குறிப்பின் அடுத்த பகுதி ‘ஜப்பானில் உள்ள புத்த பிட்சு வீட்டில் இருக்கிறது’ என்ற ரகசிய குறிப்பை சந்திரகலா படித்ததுமே உடனே நாகேஷ், ‘அண்ணே, ஜப்பானுக்கு போலாம்ணே’ என்றதும் அடுத்த காட்சியே இந்தப் பாடல். மெல்லிசை மன்னரின் அற்புதமான இசையமைப்பில். படத்தின் கதையும் ஜப்பானிலேயே முடியும். இரண்டாம் உலகப் போரின்போது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9ம் தேதிகளில் முறையே ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டுகள் வீசிய நாள். லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்த உலக வரலாற்றின் கறுப்பு நாள். அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டிலேயே, அழிவுக்கு காரணமான அணுசக்தி குறிப்பை எதிரிகளின் கைகளுக்கு கிடைக்காமல் தலைவர் கைப்பற்றி அணுஆயுத ஆபத்தில் இருந்து உலகை காப்பாற்றுவது போன்ற கதையமைப்பும், அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு ஏற்றார் போல அங்கு நடத்த எக்ஸ்போ 70 விழாவும், அதை காட்சிப்படுத்திய தலைவருக்கும், இப்போதும் கண்டுகளிக்கும் நமக்கும் இயற்கை அளித்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
பன்சாயி பாடலின் ஆரம்பத்தில் சந்திரகலா அணிந்து வரும் உடைதான் ஜப்பானின் தேசிய உடை. புத்த பிட்சு வீட்டில் குறிப்பு உள்ள சங்கேத வார்த்தைகளான தொஷிகா, கிமாகோ, மிகாயோ, கிமோனா என்று வருமே. அதில் கடைசியாக வரும் ‘கிமோனா’தான் சந்திரகலா அணிந்திருக்கும் உடை. தலைவர் செம ஸ்மார்ட் என்று திரும்ப திரும்ப நான் சொல்லப் போவதில்லை, தெரிந்ததுதானே.
பாடலை படமாக்க தலைவர் தேர்ந்தெடுத்துள்ள லொகேஷன்கள் அற்புதம். ‘தொட்டிலைப் போல நானும்... பிள்ளையைப் போல நீயும்..’ என்ற வரிகள் வரும்போது காட்டப்படும் இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசம் கண்களுக்கு விருந்து. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடத்தில் ஆறு. அந்த இடத்தில் அன்னபட்சி போன்ற பிரம்மாண்ட படகு போன்ற ஒரு கட்டமைப்பு. அந்த வரிகள் இடம் பெறும்போது மேலே ஓடும் மோனோ ரயில். அந்த இடத்தை தேர்வு செய்ததுடன் மோனோ ரயிலுக்காக காத்திருந்து, நேரத்தை கணக்கிட்டு அந்த நேரத்தில் அதற்குள் காட்சியை அழகாக எடுக்க எத்தனை திட்டமிடலும் டைமிங் சென்சும் வேண்டும்?
இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஜப்பானில் இந்தக் காட்சி 1970ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. அணுகுண்டு வீச்சுக்குப் பின் 25 ஆண்டுகளில் ஜப்பான் அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு எக்ஸ்போ 70யும் இந்தக் காட்சியில் காட்டப்படும் மோனோ ரயிலுமே சான்று. சிங்காரச் சென்னையிலே இன்னும் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த பாடில்லை. மோனோ ரயில் இன்னும் திட்ட வடிவிலேயே இருக்கிறது. இதற்கு மாநில அரசை குறை சொல்லி அர்த்தமில்லை. இரண்டரை ஆண்டுக்கு முன் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மோனோ ரயில் திட்டத்துக்கு மூன்று நாட்கள் முன்புதான் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதை உலகத் தமிழர்களுக்கு ‘மகிழ்ச்சியுடன்’ தெரிவிக்கிறோம்.
அந்தப் பாடலில் வரும் டால்பின் கண்காட்சி. இதற்கு முன் தமிழ் படங்களில் வந்ததில்லை. தலைவர் படம் எடுக்கும்போது சிறப்பானவற்றை எல்லாம் கேமராவுக்குள் அடக்கியுள்ளார். சரியான இடங்களில் அந்தக் காட்சிகளை இணைத்து நமது கண்களுக்கு விருந்தாக்கிய அவரது மேதைமையையும் தொழில்நுட்பத் திறனையும் என்னென்பது? மீன் கண்காட்சியின்போது தலையில் தொப்பியுடன் தடுப்பு கம்பியில் கைகளை ஊன்றியபடி தலைவர் கொடுக்கும் இரண்டு அட்டகாச போஸ்கள் அற்புதம்.
கடைசி பாராவின் போது ஜப்பானில் உள்ள புகழ் பெற்ற எரிமலையை காட்டியிருப்பார்கள். படகில் தலைவரும் சந்திரகலாவும் செல்லும் இந்த காட்சியை இன்னொரு படகில் இருந்து படமாக்கியிருப்பார்கள். கேமரா தலைவரையும் சந்திரகலாவையும் மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும். எரிமலையை காட்ட விட்டு விட்டால் மீண்டும் எடுக்க வேண்டியிருக்கும். கேமராக்காரருக்கு நினைவுபடுத்துவதுபோல எரிமலையை நோக்கி தலைவர் சிரித்தபடியே கை காட்டுவார். அவரது கையை தொடர்ந்து செல்லும் கேமரா எரிமலையை காட்டும். இந்த காட்சியை பாடலில் பார்க்க முடியும். இதயம் கவர்ந்த பாடல்களில் ஒன்று..
Courtesy
KALAIVENDHAN...........Vnd...
-
# கம்ப ராமாயணத்தில் கம்பர் தன்னுடைய கவித் திறமையால் படிப்பவர்கள் அனைவரையும் அந்த இதிகாச காவியத்தில் கரைந்து போய் விடும் அளவுக்கு உருகச் செய்யும் பகுதி ஒன்று உண்டு,
அதுதான் "சிறந்த சிவபக்தன் ராவணன்
ராமனால் வீழ்த்தப்பட்ட பிறகு அவனுடைய மனைவி
மண்டோதரி அவனைப் பிரிந்த துக்கத்தை அழுகையோடு கூடிய புலம்பலாக வெளிப்படுத்திய புலம்பல் காண்டம்,
இந்த புலம்பல்தான் கம்ப ராமாயணத்தில் மிகச் சிறந்த கவித் திறன் கொண்டதாக போற்றப்படுகிறது,
அதே மாதிரியான புலம்பல்கள் தான் இப்போது கணேசன் பிள்ளைகள் புலம்பும் புலம்பல்களும்,
தினமும் ஏதாவது ஒரு பெயரில் பதிவு என்ற பெயரில் தலைவரை தரமற்ற முறையில் திட்டுவது,
"டோப்பா"வாம் , பரவாயில்லை , மல்லாந்து படுத்துக் கொண்டு இப்போதா எச்சில் துப்புகிறீர்கள்?
காலம் காலமாக உங்களின் இயலாத் தன்மையை, கேவலமான தோல்வியை, அழுகையை, ஆற்றாமையை இப்படி ஏதாவது ஒரு பெயரை சூட்டி அர்ச்சனை செய்வதில் உங்களுக்கெல்லாம் ஒரு ஆத்ம திருப்தி,
ஆனால் தலைவரின் பக்தர்களாகிய நாங்கள் ஒருகாலமும்
கணேசனை "குடிகாரப்பய, கருங்குரங்கு, அண்டா வயிறன், டிக்கி தள்ளி என்றெல்லாம் ஒரு காலமும் சொல்வதில்லை அது உங்களுக்கே தெரியும்,
இந்த "படித்துறைபாண்டி " எங்குள்ள ராசாவோ தெரியவில்லை,
யாருக்கும் தெரியாத ரகசியம் இந்த அல்லக்கைக்கு தெரிந்திருக்கிறது,
தலைவர் "ஜென்டாவின் கைதி " என்ற ஒரு கதையின் பின்னணியில் நாடோடி மன்னனை இயக்கியதை அவரே பல தடவை வெளிப்படுத்திய ஒரு விஷயம் ( இந்த புண்ணாக்கு, ட்யூப்லைட் இப்போ வந்து கேணத் தனமா தகவல் சொல்றார்
அதுல இளிப்பு வேற,
சகிக்கல சுட்ட அப்பள கூமுட்டை )
"ஸ்லேவரி மதர் " நாவலை தழுவி " அடிமைப்பெண் "படம் எடுத்தாராம்,
இது யாருக்கும் தெரியாதா அண்டிப்பருப்பு?
இன்னொரு கதை வேற விட்டுருக்கான் சல்லிப்பய " நாடோடி மன்னன் " படத்தின் இறுதியில் எமது அடுத்த தயாரிப்பு " அடிமைப் பெண் " என்று டைட்டில் காட்டப்பட்டதாம்,
எனக்கு தெரிந்து " நான் ஆணையிட்டால் " படத்தில் நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் பாடலின் இடையில் அடிமைப்பெண் விளம்பரம் காட்டப்பட்டது,
ஆனால் இந்த புண்ணாக்கு, தவிட்டு மட்டை இப்படி சொல்றான் ( ராத்திரி போட்டது தெளியாம வந்து எழுதிருப்பான் போல)
சரி நீயா அந்த நாவல்களின்
authorized person?
இல்ல உனக்குத்தான்
Power of attorney தந்திருக்குதா என்ன?
அடுத்து இன்னொரு மரியாதை ராமன்
அவரே கேள்வியும் கேட்டு அவரே பதிலும் சொல்லியிருக்கிறார்.
கருப்பு வெள்ளை படங்களில் அதிக வசூல் பட்டிக்காடா பட்டணமா படத்துக்காம், கலர் படங்களில் திரிசூலம் படத்துக்கு அதிக வசூலாம்,
விக்கிபீடியா காரனே
திரிசூலம் படத்தின் வசூல் விபரம் என்ன என்பதை தெளிவாக கொடுத்து விட்டான்,
அப்புறம் 40 லட்சம் கூட வசூல் வராத பட்டணம் படம் அதிக வசூலாம்?
ஏற்கனவே 50 நாள் வசூல் விபரம் அருண் பிரசாத் மூவீஸ் சார்பில் பத்திரிக்கைகளில் கொடுக்கப்பட்ட விபரம் தெரிந்து கொண்டே இப்படி ஒரு பீலா,
மதுரை, சேலம் இந்த ஊர்களைத் தவிர எங்கேயாவது இந்த
படம் "ரிக் ஷாக்காரன் பக்கத்துல கூட வர முடிந்ததா? இதுக்கு இடையில் முழுப் பூசணிக் காயை இந்த ராசு சோத்துல அமுக்கியிருக்கிறார்
அது மட்டும் இல்லாமல் இவர் தலைவரை வசூல் சக்கரவர்த்தி என்று ஒத்துக் கொள்ள மாட்டாராம்,
ஆமா உன்னை யார் ஒத்துக்க சொன்னது?...
அகிலமே சொல்லும்,
இந்தியா முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் மட்டுமல்ல உலகம் முழுக்க எங்கெல்லாம் தமிழ் திரைப்படங்கள் விநியோகம் செய்கிறார்களோ அவர்கள் அனைவரும் இன்றும் உரத்த குரலில் சொல்கிறார்கள் யார் வசூல் சக்கரவர்த்தி என்று, அப்படியிருக்க வண்டு முருகன்களும், படித்துறை பாண்டிகளும், போண்டா மணி, லொள்ளு சபா மனோகர், கனடா மன்னாரன் கம்பெனி தங்கவேலு கூட்டத்தை யார் ஒத்துக்க சொன்னது?
நம் நண்பர் ஒருவர் சொன்ன தகவலில் விட்டுப் போன ஒரு விஷயம் " உயர்ந்த மனிதன் "படத்துக்கு மெய்யப்ப செட்டியார் கணேசனுக்கு கொடுத்த தொகை வெறும் ஒரு லட்சம் மட்டும்தான், அதற்கு மேல் 25000 தன் தம்பி சண்முகம் மூலம் கேட்டு அனுப்பிய போது செட்டியார் அவமானப்படுத்தி அனுப்பியது வரலாறு
அப்படியிருக்க வசூல் பற்றி பேச வந்திருக்கார் லபக்கு தாஸ்,
தலைவரின் சம்பளம் என்பது பெரும் பாலும் சென்னை நகர விநியோகம் போக பேசப்படும்,
அது போக படத்தில் வரும் லாபத்தில் ஷேர் கொடுக்கப்படுவது உண்டு
இதை எல்லாம் கணக்கில் எடுத்தால் எவ்வளவு சம்பளம் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்( இந்த தகவல்கள் எல்லாமே சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டம் கொடுத்த பேசும் படம் பத்திரிகையில் வந்த தகவல், இதை ஊர்ஜிதப்படுத்தி தான் கண்ணதாசன் கூட ராணி வார இதழில் 1974 இல் எழுதினார்
1968 இல் வெளி வந்த தலைவரின் "ஒளி விளக்கு " படத்துக்கு எஸ். எஸ் வாசன் எப்படி சம்பளம் கொடுத்தார் என்பதை மறைந்த எழுத்தாளர் மணியன் அவர்கள் தன் " இதயம் பேசுகிறது " இதழில் விரிவாக 1990 களின் துவக்கத்தில் எழுதினார், அந்த படத்துக்கு தலைவர் அது வரை வாங்கிய சம்பளம் இரு மடங்கு கொடுக்கப்பட்டது,
" பறக்கும் பாவை படத்துக்கு 1966 இல் ஏழு லட்சம் சம்பளம், 1965 இல் "பணம் படைத்தவன் " படத்துக்கு நான்கு லட்சம் சம்பளம் கொடுத்ததை ராமண்ணா "இதயக் கனி" விஜயனிடம் நேரடியாக சொன்னதை விஜயன் தன் " எம்ஜிஆர் கதை " புத்தகத்தில் எழுதியுள்ளார், சந்தேகம் இருப்பவர்கள் அவரிடமே கேட்டுக்கொள்ளட்டும்
( அவர் தலைவர் பெயரில் பத்திரிக்கை நடத்தினாலும் அவரும் ஒரு சிவாஜி ரசிகர்தான் )
ஒரு நடிகரின் வியாபாரத்தை வைத்தே அவரின் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்,
1991 ஆம் ஆண்டு வெளி வந்த " ராசாவின் மனசிலே " படத்தின் வெற்றிக்குப் பிறகு திரு. ராஜ்கிரண் அவர்களின் சம்பளம் எங்கேயோ போனது,
முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் அவர்தான், ஆனால் கால ஓட்டத்தில் அதே சம்பளம் அவரால் வாங்க முடிந்ததா? என்றால் இல்லை என்ற பதில்தான் வரும்,
" மாணிக்கம் " என்ற படத்தின் மூலம் தன் அனைத்து செல்வங்களையும் இழந்ததோடு தன் மார்க்கெட்டையும் இழந்தார் ( அதற்கு பல காரணங்கள் அது நமக்கு தேவையில்லை )
" மக்கள் நாயகன் " ராமராஜன் கரகாட்டக்காரன் படத்துக்குப் பிறகு அப்போது இருந்த நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறிப் போனார்,
தொடர்ந்து அவர் படங்கள் வசூல் குவிப்பதைப் பார்த்து
அவருடைய படங்களுக்கு அதி அற்புதமாக பாடல்கள் போட்டுக் கொடுத்த இளையராஜா அவர்களுக்கு கட்டுமரம் நெருக்கடி கொடுத்த சம்பவங்கள் எல்லாம் அப்போதைய பத்திரிக்கைகளில் பரபரப்பாக வந்த ஒன்று,
பின்னாளில் உடம்பு பெருத்து நட்சத்திர அந்தஸ்து இழந்தபோது அந்த சம்பளம் அவரால் வாங்க முடியவில்லை,
" வசந்த மாளிகை " படத்துக்குப் பிறகுதான் சிவாஜி இரண்டு லட்சம் வாங்கியதாக "தினத்தந்தி " பத்திரிக்கையில் செய்தியே வந்தது,
" மீனவ நண்பன் " படத்துக்கு சடையப்ப செட்டியார் எவ்வளவு சம்பளம் கொடுத்தார் என்பதை தலைவரின் மெய்க்காப்பாளர் திரு. K.P.ராமகிருஷ்ணன் பேட்டிகளில் சொன்னது இந்த சொளவ ராசுக்கு தெரியுமா?
சிவாஜியை வைத்து படம் எடுத்த முக்தா.வி. சீனிவாசன்தானே சொன்னார் " எம்ஜிஆரின் ஒரு படம் மற்ற நடிகர்களின் 25 படங்களுக்கு சமம்,
எம்ஜிஆர் சாதாரண படம் ஒன்று 50 லட்சம் வரி செலுத்துகிறது என்றால் அவரின் பெரிய படம் ஒரு கோடி ரூபாயை வரியாக செலுத்துகிறது,
எனவே சர்க்காரின் மிகச் சிறந்த நண்பராகவே எம்ஜிஆர் விளங்குகிறார் "
இந்த பேச்சு அடுத்த நாள் பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டது, குறிப்பாக" இந்து " பத்திரிக்கை இந்த செய்தியைப் பெரிய அளவில் வெளியிட்டது,
கணேசன் இந்த செய்தியைப் பார்த்து நிரம்பவும் வருத்தப் பட்டதாகவும் செய்திகள் வந்ததை இங்கே நினைவு கூறுகிறேன்,
சிவாஜி முகாம் எழுத்தாளர் என்று பேசப்படும் திரு. ஆரூர் தாஸ் அவர்கள் தினத்தந்தியில் சொன்ன விஷயம் 2015 கால கட்டத்தில் வெளி வந்தது
" எம்ஜிஆரின் தோல்விப்படம் என்று சொல்லப்படுபவைகள் கூட வசூலைப் பொறுத்தவரை " யானை படுத்தாலும் குதிரை மட்டம் " என்கிற கதைதான் என்று சொல்லியிருந்ததை கண்டிப்பாக அனைவரும் படித்திருக்கலாம்,
இந்த மாதிரி தலைவரை வசூல் மன்னன் என்று சொன்ன நடிகர் விவேக் நாயாம்,
சரி அண்மையில் நடந்த ஒரு விழாவில் நடிகர் ரஜினி காந்த் பேசியது இது ...
" சிவாஜியை விட மிகப்பெரிய மார்க்கெட்டை பிடித்து, சிவாஜியை விட மிகப்பெரிய சம்பளம் வாங்கி தமிழ் சினிமாவில் யாரும் பிடிக்க முடியாத உயரத்தில் எம்ஜிஆர் அவர்கள் இருந்தார்கள், அவரைப் பற்றி தெரியத் தெரிய நான் அவருடைய முழுமையான ரசிகனாகவே மாறி விட்டேன் "
சரி இவருக்கு என்ன பட்டம் கொடுப்பார்களோ தெரியவில்லை?!
எங்கள் தலைவரின் வானளாவிய செல்வாக்கு என்ன என்பதை கொரோனா
தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறந்த பிறகு தமிழகம் முழுவதும் தலைவரின் படங்கள் எப்படி கொடி கட்டிப் பறக்கிறது என்பதை சன் டி. வி செய்திகளிலும் மற்ற சமூக வலை தளங்களிலும் பார்த்திருப்பீர்கள் ...( ஏகப்பட்ட கணேசன் குஞ்சுகளுக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும்,
வயிறு அதிகமாக எரிந்தால் gelusil குடிப்பது நல்லது என்று சொல்லுகிறார்கள் )
ஓடிக்கொண்டிருக்கும் காரை சில சமயம் ஆக்ரோஷமாக சில தெரு நாய்கள் விரட்டு வதை பார்த்திருக்கலாம்
அதனால் காருக்கு என்ன நஷ்டம்?
தெரு நாய்தான் அடிபட்டு சாகும்,
எனவே ராசுகளே இந்த மாதிரி பாப்பா கதையை எங்கள்ட்ட ஓட்ட வேண்டாம்,
ஓரமா தள்ளிப் போய்
விளையாடுங்க சரியா?
தலைவரின் பக்தன் ...
ஜே.ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*12/11/20* அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------
நடிகர்கள் பாலாஜியும் ,நாகேஷும் காரில் பயணிக்கிறார்கள் .ஒரு ஊரில் காரை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த குடிசையில் தங்கியிருந்த* பெண்களிடம் குடிக்க தண்ணீர் கேட்கிறார்கள்.* ஒரு மூதாட்டி ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் . அதை குடித்த பின் நடிகர் பாலாஜி அந்த மூதாட்டியிடம் நன்றி தெரிவித்து ரூ.100/- தருகிறார் .* அதை பெற்று கொண்ட அந்த மூதாட்டி* ரொம்ப நன்றி, எம்.ஜி.ஆர். வாழ்க என்கிறார் .* நடிகர் நாகேஷ் அந்த மூதாட்டியை கேட்கிறார் .என்னம்மா பணம் கொடுத்தது நாங்கள். நீங்கள் எம்.ஜி.ஆர். வாழ்க என்றால் என்ன அர்த்தம் என்கிறார் . ஆமாம் ஐயா, அவர் இப்படி கொடுத்து பழகியதால்தான் நீங்கள் எல்லாம் கொடுக்கிறீர்கள். இல்லையென்றால் உங்களுக்கு மனம் வருமா என்று கூறி,மீண்டும் எம்.ஜி.ஆர். வாழ்க என்கிறார் .* நாகேஷ், பாலாஜியிடம் மீண்டும் காரில் பயணிக்கும்போது, ஒரு நடிகர்** நல்ல சிவப்பு நிறத்துடன் வந்து ஏழை எளியோருக்கு பணம் கொடுக்கிறார்* என்றால் அநேகமாக அவர் எம்.ஜி.ஆர். அல்லது அவரது உதவியாளராகத்தான் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இதை மாற்ற நம்மால் முடியாது என்றாராம் . அதே போல சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை எந்த ஊர், எந்த கிராமத்திற்கு சென்றாலும் மனமுவந்து ஏழை எளியோருக்கு ஒருவர் உதவி செய்கிறார் என்றால் அவர் நிச்சயம் எம்.ஜி.ஆராகத்தான்* இருப்பார் என்கிற விதையை மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு போன வற்றாத ஜீவநதி, அமுதசுரபி, எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். மறைந்தும் மறையாமல் இன்னும் மக்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த புதிதில், கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையுடன் கருப்பு சிவப்பு நிறம் கலந்து துண்டு ஒன்று தோள்களில் அணிந்து இருப்பது* ஒரு ட்ரேட் மார்க் ஆக இருந்தது . டீக்கடை தொழிலாளர்கள், ஓட்டலில் வேலை செய்பவர்கள், மூட்டை தூங்குபவர்கள் ,ரிக் ஷா ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் , தொழிலாளி வர்க்கத்தினர் அனைவரின் தோள்களிலும் அந்த துண்டுகள் காணப்பட்டன . அதனால்தான் ஒருமுறை எம்.ஜி.ஆர். அவர்கள் சென்னையில் இருந்து மதுரைக்கு பயணம் செய்தபோது, திருச்சிக்கு செல்வதற்கு* மட்டும் 12 மணி நேரம் தாமதம் ஆனது . . வழக்கமான பயண* நேரம் 5 மணி 30நிமிடம்* ஒவ்வொரு பெரிய ஊரிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் பயணித்த ரயில் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டு வழி நெடுக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வரவேற்பு கொடுத்ததால் இந்த நிலை ஏற்பட்டது .ரயில்வே வரலாற்றில்*ஒரு ரயில் திருச்சிக்கும், மதுரைக்கும் இவ்வளவு தாமதமாக சென்று சேர்ந்த வரலாறில்லை .*
ஒவ்வொரு ஊரிலும் அப்போதுதான் கட்சி தொடங்கி இருப்பார்கள் . அந்த ஆர்வத்தில் எம்.ஜி.ஆர். அவர்களை வரவேற்கும் பொருட்டு, தங்கள்* மார்பில், குண்டூசியால் குத்தி ரத்தம் வழிய அண்ணாவின் உருவத்தை ,மாரியம்மன் ,மற்றும் முருகன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது போல மக்கள்**கூட்டம் கூட்டமாக ரயில் நிலையங்களுக்கு படையெடுத்து தங்கள் தங்க தலைவருக்கு மகத்தான வரவேற்பு அளித்தார்கள் .* அப்படிதான் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார்* *இப்படி ஒவ்வொரு தொண்டனும் ரத்தம் சிந்தி ,கட்சியை வளர்த்தது மட்டுமின்றி தங்களின் அபரிமிதமான ஆதரவை ,அன்பை ,பாசத்தை, ,மழை போல் தங்கள் தலைவர்மீது பொழிந்தனர் .**எம்.ஜி.ஆர். அவர்களும் மக்கள் மீது மாறாத அன்பையும், பாசத்தையும், காட்டி*மக்கள் வெள்ளத்தில், கூட்டத்தில், மிதந்து, நீந்தி வந்தார் என்று செய்திகள்*தெரிவித்தன.**
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களுக்காக எந்த அளவிற்கு துன்பங்கள், சிரமங்கள், கஷ்டங்கள் தாங்க முடியுமோ, அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் எதையும் சாதிக்க துணிந்து கட்சியை ஆரம்பித்து மக்கள் ஆதரவை திரட்டினார்* *அதனால்தான் இன்றைக்கும் அவர் மக்கள் திலகமாக இருந்து மக்கள் தலைவராக உயர்ந்து நிற்கிறார் . தன்னம்பிக்கை,* மக்கள் மீது நம்பிக்கை* வைத்து , ஜெயிக்க முடியும்** என்பதில் நம்பிக்கை கொண்டவர் .ஏழ்மை, வறுமை, அவமானம், கிண்டல், கேலி, பரிகாசம் எல்லாவற்றையும் தாங்கியவர்**,அனைத்தையும் மீறி, ஒரு சாதாரண, சாமான்ய மனிதன், மிக பெரிய படிப்பில்லாமல் , எந்த ஒரு ஜாதி பாகுபாடில்லாமல்,**மிக பெரியவர்கள் ஆதரவில்லாமல், போதிய பணவசதி இல்லாமல்,**மிக பெரிய நிலை இல்லாமல்*இப்படி எதுவும் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால்* தன்னம்பிக்கை என்று ஒன்று இருந்தால் போதும், மக்கள் ஆதரவுடன், செல்வாக்குடன் நினைத்ததை சாதிக்கலாம், வெற்றி பெறலாம், ஏன் இந்த நாட்டையே பலர் அதிசயிக்கத்தக்க வகையில் பல ஆண்டுகள் ஆளலாம் .என்பதற்கு சாகாவரம் பெற்ற ஒரு மந்திரச்சொல்தான் எம்.ஜி.ஆர். .**
திரு.கா.லியாகத் அலிகான்*:* *சேலத்தில்*நடைபெற்ற எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில்*காய்ச்சல் காரணமாக நான் கலந்து கொண்டு*பேச முடியாமல் போனதை*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மனதில் நிலை நிறுத்தி, ஓராண்டுக்கு பிறகு கடலூரில் நடைபெற்ற* அ . தி.மு. க. மாநில மாநாட்டில்*பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கியபோது , எனக்கே தெரியாமல், லியாகத்*அலிகான் பேசுவார்*என்று தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிபாரிசு செய்துள்ளார் . அந்த மாநாட்டில்*பொது செயலாளராக இருந்த*ப.உ.சண்முகம் அவர்கள் ,மேடையில்*லியாகத் அலிகான் தற்போது ராஜேந்திரனின் படத்தை*திறந்து வைத்து பேசுவார்* என்று அறிவிப்பு செய்தார் . ஏனென்று இதை சொல்கிறேன் என்றால் ,சேலம் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில்*காய்ச்சல் காரணமாக ஒருவன் பேச முடியவில்லை,வாய்ப்பு கிடைக்கவில்லை*. அவனுக்கு இந்த கடலூர் மாநாட்டிலாவது பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று*மனதளவில் நினைத்து, ஓராண்டுக்கு பிறகு அந்த வாய்ப்பை அளித்ததோடு,சேலத்தில்*பேச முடியாமல் போனதால் அவனுடைய உள்ளம் வருத்தம் அடைந்திருக்கும். அந்த வருத்தம் தீரவேண்டும் என்றால் அவன் பேசியாக வேண்டும் என்று கருதி வாய்ப்பு அளித்தவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.* அந்த கடலூர் மாநாட்டில்*தான் செல்வி ஜெயலலிதா அவர்கள்*அ. தி.மு.க.விற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். ஜெயலலிதா அவர்கள் மாநாட்டில் பெண்ணின் பெருமை ,மற்றும் மகளிர் சிறப்பு*பற்றியும்*விவரித்து பேசினார்கள் . அந்த அம்மையார் பேசும்*அதே மேடையில் என்னையும் பேச வைத்து அழகு பார்த்ததோடு மட்டுமல்லாமல், என் பேச்சை கேட்டு 86 தடவைகள் பார்வையாளர்கள் கைதட்டியதை நேரில் கண்டு, நான் பேசி முடித்ததும் ,என்னை தேடி வந்து கன்னத்தில் ஒரு தட்டு தட்டியதோடு,**மாநாடு முடிந்ததும்* என் அருகில் வந்து என் கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்திய* தலைவரின் நெஞ்சத்தை**இன்று நினைத்தாலும் என். உள்ளமெல்லாம் பூரிக்கிறது, புல்லரிக்கிறது.*
இன்னொரு சம்பவம்*ஒன்றை சொல்கிறேன்.* அடிமைப்பெண் படத்தில்*இடம் பெற்ற ஆயிரம் நிலவே வா என்கிற பாடலை*பாடுவதற்கு*மறைந்த*திரு.எஸ்.பி.பாலசுப்ரம ணியம் அவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது .ஆனால் பாடல் பதிவிட இருந்த நேரத்தில் அவருக்கு*டைபாய்டு காய்ச்சல் வந்துவிடுகிறது .அவரால் பாட முடியவில்லை.**அவர் நல்ல முறையில் குணமாகி வந்தபின்*பாடல் பதிவை வைத்து கொள்ளலாம். படப்பிடிப்பையும் தள்ளி வைக்கலாம் என்று தலைவர் எம்.ஜி.ஆர். முடிவு செய்கிறார் .* இடையில் சிலர்*வேறு யாரையாவது வைத்தோ, அல்லது டி.எம்.எஸ்.அவர்களை வைத்தோ பாடல் பதிவு செய்யலாமே என்று யோசனை தெரிவிக்கிறார்கள்.* ஆனால் தலைவர் அவர்கள், நாம் ரிகர்சல் செய்து அறிமுகம் செய்துவிட்டதால் ,அவருடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், எம்.ஜி.ஆர்.படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதுபாடலை நன்றாக பாடியுள்ளேன். நன்றாக வந்திருக்கிறது* என்றுபெருமையாக* சொல்லியிருப்பார் .* வேறு யாரையாவது வைத்து பாடல் பதிவு செய்துவிடலாம்.* அது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. ஆனால்* எஸ்.பி.பி* ஒரு . இளைஞர். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய நம்மை போன்றவர்கள்தான் வழி காட்ட வேண்டும்.* அவரது முன்னேற்றத்திற்கு நாமே*இடையூறாக, தடையாக இருப்பது தவறு. கொஞ்ச காலம் பொறுத்திருப்பதில் தவறு ஒன்றுமில்லை. என்று கூறினார் . பின்னர் அவர் குணமாகியதும், மீண்டும் அழைத்து பாடல் பதிவில்*பாடியதும்*,அந்த பாடல் மூலம் எஸ்.பி.பி. அவர்கள் உலக புகழ் பெற்றார்*என்பது வரலாறு. அந்த பாடலை*பாடிய பின் எஸ்.பி.பி. அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பணிவாக சில கேள்விகள் கேட்டு திருப்தி அடைந்தார். அதாவது இந்த சிறிய வனுக்காக நான் குணமாகும்வரை*இத்தனை நாட்கள்*காத்திருந்து வாய்ப்பு அளித்துள்ளீர்கள்.**ஆனால் இடையில் நீங்கள் வேறு யாரையாவது வைத்து பாடல் பதிவை*முடித்து இருப்பீர்கள் என்றுதான் நினைத்தேன். எனக்காக படப்பிடிப்பையும் சில மாதம் தள்ளி வைத்தீர்கள் என்று கேள்விப்பட்டேன். உங்களுக்கு மிகவும் பெரிய மனது. உங்களுடைய பெருந்தன்மைக்கு நன்றி கூறி, இந்த இளைஞனின் எதிர்காலம் சிறப்பாக அமைய*தாங்கள் வழிகாட்டியதற்கு வணக்கம் தெரிவிக்கிறேன் என்று நெகிழ்வுடன் பேசியுள்ளார் .* சேலம் மாநாட்டில்*காய்ச்சல் காரணமாக**பேச முடியாத எனக்கு*கடலூர் மாநாட்டில் ஓராண்டுக்கு பிறகு ஞாபகத்தில் வைத்து கொண்டு மீண்டும் பேச வாய்ப்பு அளித்த*பெருந்தகைதான்*திரு.எஸ்.பி.பி.க்கு*1969 ல்* தன் சொந்த படத்தில் பாட வாய்ப்பளித்து, அவர் உலக புகழ் அடைய காரணகர்த்தாவாக திகழ்ந்த வற்றாத ஜீவநதி, எட்டாம் வள்ளல், காடம்பாறை நீரேற்று திட்டததை அமுல்படுத்திய கருணை கடல், ஓடும் பாம்பை மிதிக்கும் உள்ள துணிவு, வாழும் தொண்டனின் பரவச சிரிப்பாக வாழ்ந்த தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை நினைத்து பார்க்கின்றபோது, நான் மட்டுமல்ல, ஏழை எளியோர்கள், அற்புதமான தொண்டர்கள் என அனைவரும் எம்.ஜி.ஆர். அவர்களை நினைத்து இன்றைக்கு எங்களை நாங்கள் உற்சாகப்படுத்தி கொண்டு,*ஆசுவாசப்படுத்தி கொண்டு 2021ல் மீண்டும் புரட்சி தலைவர் எம்ஜி.ஆர். ஆட்சி அமைய இ .பி.எஸ்.அவர்கள், ஓ.பி.எஸ்.அவர்கள் இணைந்து பாடுபட வேண்டும் என்றும் அதற்கு தொண்டர்கள் பட்டாளம் தேனீக்கள் போல சுற்றி வந்து கட்சிக்காக பாடுபட தயாராக உள்ளார்கள் என்பதோடு, குற்றம் , குறைகள் சொல்வது ஜனநாயக ரீதியில் எதிர்க்கட்சிகளின் வேலை. அவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும் . நாம் நமது பணியினை செவ்வனே செய்வோம் என்று*கவிஞர் பாரதிதாசன் வார்த்தைகளான* போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்* என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எம்ஜி.ஆர்.அவர்களை மனதில் நினைத்து, நாம் எல்லோரும் பணியாற்றவேண்டும் என்று இந்த நல்ல நேரத்திலே உங்களுக்கு எடுத்து சொல்லி*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் முன்னாள் ஜனாதிபதி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுடன் உரையாடியதை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .*
முன்னாள் குடியரசு தலைவர் திரு.ராதா கிருஷ்ணன் அவர்கள் ஒருமுறை சென்னைக்கு விஜயம் செய்தபோது,மரியாதை நிமித்தம்* அவரை சந்திக்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் விருப்பம் தெரிவிக்கிறார். அதற்கு சம்மதம் கிடைத்தவுடன் சந்திக்கிறார் .* திரு.ராதா கிருஷ்ணன் அவர்கள் உலக விஷயங்கள் அறிந்த ஒரு தத்துவ மேதை .* அவர் அன்றைய கால கட்டத்தில்*ஹிட்லர் இருந்தபோது* ஹிட்லரின் தோள்மீது*தட்டியபடி, ஹலோ என்று* குரல் கொடுத்து*உரையாடி இருக்கிறார் என்று சொல்லுவார்கள் .* ஹிட்லரும் இவர் மீது பாசம் வைத்துள்ளதாக* நான் படித்திருக்கிறேன் . அப்படிப்பட்டவரை புரட்சி தலைவர் சந்திக்க செல்கிறார் .* அப்போது ஜனாதிபதி அவர்கள் தலைவருக்கு*தேனீர் அருந்தும்படி கேட்டு கொள்கிறார். தலைவர் அவர்கள் தேனீர்*காபி போன்ற பானங்கள் அருந்தமாட்டார் என்பது பொதுவாக அனைவரும் அறிந்தது .* தேனீர் வழங்கப்பட்ட போது தலைவர் அவர்கள் ஐயா* நான் தேனீர்*அருந்துவதில்லை .வேறு ஏதாவது பானங்கள் இருந்தால்*கொடுக்க சொல்லுங்கள் என்றார் .*பேரறிஞர் அண்ணாவின் தி.மு.க.வில் தலைவர் இருந்த சமயம் அது .அவருக்கு குடிக்க பால் தரப்படுகிறது . அதற்குள் இரண்டாவது முறை ஜனாதிபதி அவர்கள் தேனீர் அருந்துகிறார் . பின்பு தலைவர் அவர்கள் தான் சந்திக்க வந்த நோக்கம் ,மற்றும் பொதுவான விஷயங்கள்*பற்றி பேசுகிறார் .அப்படி பேசும்போது*மூன்றாவது முறை தேனீர்*அருந்துகிறார் .***அப்போது தலைவர் அவர்கள் ஐயா, நான் தவறாக கேட்பதாக தாங்கள் நினைக்க கூடாது*என்று தயங்கியபடி, குறுகிய நேரத்தில் இத்தனை தேனீர்* பல முறை அருந்துவது உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காதா என்று கேட்கிறார் .* தேனீர் பலமுறை அருந்துவது உடலுக்கு கெடுதல் என்று நீங்கள் கருத்து சொல்கிறீர்கள் .ஆனால் பல விஷயங்களுக்கு நமக்கு*டீ தேவைப்படுகிறது .* முதலில் ட்யூட்டி*நம் எல்லோருக்கும் அவசியம் . டிக்னிட்டி , பங்க்சுவாலிடி , எபிலிட்டி , எலிஜிபிலிட்டி**இவை எல்லாம் கூட நமக்கு தேவையானவை . இவற்றோடு நமக்கு*போதிய பப்ளீசிட்டி* கிடைத்தால் அதுவே*நமக்கு*பல நன்மைகளும், பதவிகளும், உதவிகளும், பல நேரங்களில்**கிடைப்பதற்கு ஏதுவாகும் .எனக்கு*மேற்கண்ட இந்த 5 டீக்களும் உள்ளது என்று நான் நம்புகிறேன்.* உங்களுக்கு இந்த 5 டீக்களுடன் முக்கியமானதொரு டீ இருக்கிறது என்று**தெரியுமா என்று கேட்கிறார் . எனக்கு தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் என்கிறார் தலைவர் .அதுதான்*உங்களுடைய பர்சனாலிட்டி . ஆனால் எனக்கு அது இல்லை. இந்த பர்சனாலிட்டி உள்ள உங்களை இந்த உலகமே போற்றும்*அளவில் ஒரு உயர்ந்த நிலையை*நீங்கள் அடைவீர்கள் என்று அன்றைக்கே*ஜனாதிபதி அவர்கள் ஆருடம் சொன்னார் .* இந்த செய்திகளை நான் ஒரு நூலில் படித்திருக்கிறேன்*
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் உரையாடிவிட்டு*விடை பெறுகிறார் .* திரு.ராதாகிருஷ்ணன் நினைவு தினத்தை ஆசிரியர் தினமாக*அனுஷ்டிக்கப்படுகிறது .* ஒரு சாதாரண ஆசிரியராக பணியில் சேர்ந்தவர் நாட்டின் உயரிய பதவியான*குடியரசு தலைவர் பதவிக்கு*உயர்ந்து*பெருமை சேர்த்தவர் .* ஜனாதிபதி அவர்களிடம் விடை பெற்று வணக்கம் தெரிவித்து காரில் பயணிக்கும்போது தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் உதவியாளரிடம் ஜனாதிபதி அவர்களுக்கு 5 டீக்கள் இருக்கின்றன என்று அவரே குறிப்பிட்டார் . எனக்கு*அந்த 5 டீக்களுடன் ஆறாவது*டீயான*பர்சனாலிட்டி இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அந்த ஆறாவது*டீ எனக்கு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அவருக்கு அந்த ஆறாவது*டீயான பெண்டாட்டீ* அமைந்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார் .*கலோக்கியலாக சகஜ நிலையில்*பேரறிஞர் அண்ணா பேசுவதை போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் அந்த பண்பு நிறையவே இருந்தது . அவருடைய நண்பர்களாக நேசித்தவர்கள் கூட,* பதவி வந்த உடனே, பயந்துபோய் அப்படியே ஒதுங்கி, ஒதுங்கி*நின்றவர்களை எல்லாம் அருகில் அழைத்து, உட்கார வைத்து* ஒரு நண்பனை போல் பேசக்கூடிய பண்பாளர்தான்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். இவ்வாறு, திரு.லியாகத் அலிகான் பேசினார் .*
1.
-
நண்பர் திரு.ஜேம்ஸ் வாட்*அவர்களுக்கு வணக்கம்.
மாற்று முகாம் நண்பர்களுக்கு தாங்கள் அளித்து வரும் சூடான, சுவையான,பதில்கள், கண்டு மகிழ்ச்சி.* தாங்கள் குறிப்பிட்ட படி இந்த அகிலமே*சொல்லும்*அவர் வசூல் சக்கரவர்த்தி.* என்று .* திரைப்பட*உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு தெரியாததா*. மீரான் சாஹிப் தெருவில்*சென்று*தலைவரின்*படங்களுக்கு உள்ள மார்க்கெட், மவுசு, இத்யாதிகள் பற்றி விசாரித்து*, இதர நடிகர்களுக்கு உள்ளவற்றோடு ஒப்பிட்டு*கொள்ளட்டும்.* அப்போதும்.அவர்கள் இதே*தேய்ந்து போன ரிகார்டைத்தான் போடுவார்கள்.* கொரோனா காலத்திற்கு பிறகு ,தமிழக அரசின்*அனுமதியின்படி அரங்குகள் திறக்கப்பட்டதும், தலைவரின்*படங்கள்தான் பெருநகரம், மாநகரம், துணை நகரம், கிராமங்கள் அனைத்தையும்*ஆக்கிரமித்து உள்ளன. எல்லாம் தெரிந்தும்*நாங்கள் அப்படித்தான் புலம்புவோம். தெரியாத மாதிரி நடிப்போம், தூங்குவது போல பாசாங்கு செய்வோம்*என்பவர்களை திருத்த நம்மால்*முடியாது .தொடரட்டும்*உங்களின்*தாக்குதல்கள் .நன்றி .* **
பாகப்பிரிவினை சாதனையை*ஒரு நாள்* அதிகமாக ஒட்டி உ.சு.வாலிபன் படத்தை*சாதனை*என்று புலம்புவதாக கூறும்*அய்யனின் பிள்ளைகளே , எங்க வீட்டு*பிள்ளை வெள்ளிவிழா* 7 அரங்குகளில் சாதனையை*1965ல்* நிகழ்த்தியது . 14 ஆண்டுகள்*கழித்து தலைவர் திரை உலகை விட்டு முதல்வரான பின்புதான்*ஒரு அரங்கு அதிகப்படுத்தி 8 அரங்குகளில் தெருசூலம்*படத்தின்*வெள்ளிவிழா சாதனையை*நிகழ்த்த முடிந்தது .வேலூரில்*வடக்கயிறு, ஸ்ட்ரெச்சர் எல்லாம் வைத்து இழுத்தார்களே அதை என்னவென்று சொல்வது .பைத்தியக்காரன்*பத்தும் சொல்வான்*போகட்டும் விட்டுவிடு .**
-
உலகம் சுற்றும் வாலிபன் !
---------------------------
இது ஓர் உலகச் சாதனை படம்
போஸ்டர் ஒட்டாமலே இமாலய வெற்றி தேவி பேரடைசில் 213 -ம் நாள் 80 சதவீத கூட்டம் ஏற்கனவே அமிதாப்பின் ஹீராபேரி படம் புக் ஆனதால் எடுக்கப்பட்டது
ஷிப்டிங்கில் பல திரையரங்குகளில் 50 நாட்களை கடந்த படம் .
அதிக திரையரங்குகள் பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய படம் .
ஆளும் கட்சியின் சூழ்ச்சிகளை தவிடு பொடியாக்கிய படம் .
ஒர் அரசாங்கத்தையே மாற்றிய படம் .
இயக்குனர் எம் ஜி ஆரால் காட்சிகள் செதுக்கப்பட்டன .
இப்படி சாதனைகளை சொல்லிக் கொண்டு போனால் வாரக்கணக்கு தாண்டி வருடகணக்காகிவிடும் .
படத்தின் வெளிப்பற படப்பிடிப்பால் வண்ணக் கனவுகளில் மிதந்தோம் .
கிள்ளை மொழி , வெள்ளை மனம் . கொஞசும் குமரியின் பிள்ளைத் தமிழ் கேட்டு பித்தனாகியோர் ஏராளம் .
ஆம் தாய்லாந்து நடிகை
மேத்தா ரூங்ரேட்டா இன்றும் நம் நினைவில்
இளமை மாறாமல் வலம்
வருகிறார் .
இப்பாடலின் துள்ளல் இசைக்கு மயங்காதவர்
இலர் .
பச்சைக்கிளி முத்துச்சரம் ..........Hd...
-
1968 லயே மக்கள் திலகம் வசூல் சக்ரவர்த்தி என்று விளம்பரம் செய்யப்பட்டு வந்த ரகசிய போலீஸ் விளம்பரம். அதை நிரூபிக்கிறா மாதிரி 10 நாளில் சென்னயில மட்டும் 2 லட்சத்து 37 ஆயிர ம் வசூல். வெறும் 10 நாளில். 1969 ல் வெளியான மாற்று முகாம் படம் ஒன்று விளம்பரம் பாத்தேன்.சென்னையில் 4 வாரம் (28 நாள் )ஓடியே 3 லட்ச்த்து 65 ஆயரம்தான் வசூல். ரகசிய போலீஸ் 4 வாரத்தில சென்னையில்் 4 லச்சத்தை தாண்டிவிட்டார். தமிழ்நாடு பூராம் 4 வாரத்தில் கணக்கு போட்டு பாருங்கள். விளம்பரத்தில் உள்ளபடி மக்கள் திலகம் வசூல் சக்கரவர்த்தி என்று புரியாதவங்களுக்கும் புரியும்.rrn...
-
தீபாவளிக்கு தியேட்டர்கள் திறப்பது உறுதியானதும் தலைவர் பக்தர்களிடையே மகிழ்ச்சி பெருவெள்ளம் பெருக்கெடுத்தது. விநியோகஸ்தர்கள், திரையரங்கத்தினர் தலைவர் படங்களில் எதை திரையிடுவது என பரபரப்பாகினர். ஒரு மாதம் முன்பே மதுரையிலிருந்து உறுதிபடுத்தினர் உலகுக்கு சத்தமாக! போஸ்டர் விளம்பரங்களை ஒட்டி அமர்க்களத்தை தொடங்கி வைத்தது மதுரை. அடுத்து கோவையில் இரண்டு தியேட்டர்களில் உறுதியானது. தலைவர் படங்கள் அனைத்தையும் டிஜிட்டலில் தயாரிக்க வேண்டும் என்ற நமது வேண்டுகோளை தினமலர் அறிவித்தது. அடுத்தடுத்து பல ஊர்களில் தலைவர் படங்கள் ஆரவாரமாக திரையிட தயார் என அறிவித்தனர் திரையரங்க நிர்வாகத்தினர். அந்த நாளும் விடிந்தது. பெருமழை வரும் முன் இடி இடிப்பது போல தீபாவளிக்கு முன் 10 ம்தேதி பல ஊர்களில் தலைவர் காவியங்களால் திரையுலகம் அதிர உலகமே தமிழகத்தை திரும்பி பார்த்தது.தினமும் நேரில் சென்று கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் கொரோனா விழிப்புணர்வை கடைபிடித்து தலைவரை தரிசித்து உலகுக்கே முன் உதாரணமாக நடந்து காட்டினர் புரட்சித் தலைவர் பக்தர்கள். எனக்கு இந்த தியேட்டருக்கு சென்று வீடியோ , புகைப்படம் வேண்டும் என்றவுடன் மூத்த அண்ணன்கள் மற்றும் 17 வயது தம்பிகள் வரை தங்கள் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு உடனே எடுத்து அனுப்பினர். படம் பார்க்க முதல் ஆளாக சென்று 100 ரூபாய் டிக்கெட்டுடன் தலைவர் முகம் பார்க்க நவீன திரையரங்கில் நுழைந்த மூதாட்டி நம்மை எல்லாம் பரவசப்படுத்திய நிகழ்வை மறக்க முடியுமா? மூத்த அண்ணன் ஒருவர் குடும்ப சகிதமாக சென்று நம்மை போல ஆர்வத்துடன் பலவித கோணங்களில் புகைப்படம் வீடியோ எடுத்து 2 நாட்களாக நம்மை ஆச்சரியப்பட வைத்ததை பதிவிடவா...கூலி தொழிலாளி ஒருவர் இரண்டு தியேட்டர்களில் பேனர் வைத்து பூஜை வழிபாடு நடத்தியதை பதிவிடவா...வெளியூர் சென்று தலைவர் படத்தை கண்டுகளித்த சகோதரர்களைப் பற்றி பதிவிடவா... எங்கு தலைவர் படம் திரையிடப்பட்டுள்ளது என்ற புள்ளி விபரங்களை உடனுக்குடன் தந்த, தந்து கொண்டிருக்கிற சகோதரர்களைப் பற்றி பதிவிடவா...சுவர் விளம்பரம் உள்பட தியேட்டரை சுழன்றடித்து தகவல் தந்த சகோதரர் பற்றி பதிவிடவா...தென்மாவட்டத்தில் எழுப்பிய வாழ்த்து கோஷம் தீபாவளி சத்தத்தை தோற்கடித்து இன்றும் நம் காதுகளில் அதிர்கிறதே அதற்கு காரணமான மதுரையை வணங்கி மகிழ்வதை பதிவிடவா...தங்கள் ஊரில் தரிசிக்க முடியாவிட்டால் என்ன முத்து நகரத்தில் தலைவரை தரிசிப்போம் என கடல் அலையென பொங்கி சென்ற நெல்லை அடலேறுகளின் உணர்ச்சியை விவரிக்கவா... சென்னையில் நடந்த வழிபாட்டால் தீயகிருமி விடைபெற்றதோ என நம்பிக்கை ஒளி ஏற்பட்டுள்ளதே...எதை விவரிப்பேன்...யாரைப் பாராட்டாமல் விட்டுவிட்டேன்...என எண்ணி எண்ணி வியந்தபடி இத்தொகுப்பை தற்காலிகமாக நிறைவு செய்கிறேன்...நன்றி வணக்கத்துடன் சாமுவேல்....
-
#மக்கள்_திலகத்தின்_திரையுலக_பயணம்
#ஊருக்கு_உழைப்பவன்...
ராஜா (மக்கள் திலகம்) பெரும் செல்வந்தர் ..கொள்ளைக்கூட்டத்தாரால் கடத்தப்படுகிறார். ஏற்கனவே அந்தக்கூட்டத்தினை பிடிக்க பெரும் முயற்சி காவல் துறையால் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பலனாக ராஜாவை போலவே தோற்றம் கொண்ட ரகசிய போலீஸ் அதிகாரி செல்வம் (மக்கள் திலகம்-இரு வேடத்தில்) வருகிறார். அவர் கொள்ளையர்களை பிடித்து ராஜாவை மீட்டாரா என்பதே படத்தின் கதை.
இந்த படத்தை வித்தியாசப்படுத்துவது மக்கள் திலகத்தின் அசத்தலான நடிப்பு . துப்பறியும் ஏஜண்ட் செல்வம், எதிர்பாராமல் மல்லிகாவை (வாணிஸ்ரீ) யை திருமணம் செய்கிறார். அதே சமயத்தில் எந்த அதிர்ச்சியையும் தாங்கமுடியாத செல்வந்தர் ராஜாவின் மனைவி காஞ்சனா (வெ.ஆ.நிர்மலா)விற்கும் கணவனாக நடிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். இதனால் ஏற்படும் குழப்பத்தில் தன் ஒரே மகனையும் இழக்க நேரிடுகிறது. இந்த காட்சிகளெல்லாம் அந்த காலத்தில் குடும்பத்தினரை குறிப்பாக பெண்களை கவர்ந்தது.
கொள்ளைக்கூட்டம்-சண்டடைக்காட்சிகள்-கொலை, கொள்ளை என காட்சியமைக்காமல்,படத்தின் பெரும்பகுதி மக்கள் திலகம்-வாணிஸ்ரீ-வெ.ஆ.நிர்மலா ஆகியோரிடையேயான குடும்ப நிகழ்வுகளை காட்சிகளாக அமைத்திருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.
படத்தில் க்ளைமேக்சில் வரும் ஹெலிகாப்டர் சேசிங் நன்றாக படமாக்கப்பட்டிருந்தது. மெல்லிசை மன்னரின் இசையில் முதல் முறையாக டி.எம்எஸ் இல்லாமல் பாடல்கள் முழுவதையும் மக்கள் திலகத்திற்கு ஏசுதாஸ் பாடினார். "இது தான் முதல் ராத்திரி" "இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்" "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" "அழகென்னும் ஓவியம் இங்கே" போன்ற பாடல்கள் இன்றைக்கும் கேட்க வைக்கின்றன.
மக்கள் திலகத்தோடு...வீரப்பா, தேங்காய் சீனிவாசன், குமாரி பத்மினி ஆகியோரும் நடித்திருந்தனர்.
உலகம் சுற்றும் வாலிபன்,, உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களைப்போல் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையாவிட்டாலும், வசூலில் வெற்றி பெற்ற படமானது "ஊருக்கு உழைப்பவன்".........Sr.babu...
-
என் மனதை கவர்ந்த நடிகர் -Makkal Thilagam MGR
எத்தனையோ பல மொழி திரைப்படங்களை பார்த்தாலும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்ஜிஆர் தான் என்பதை பெருமையுடன் கூறுகிறேன் . எம்ஜிஆரின் ஆரம்ப கால படங்களில் அவரின் வசீகர தோற்றம் ,வெண்கல குரல் ,
வீர தீர விளையாட்டுக்கள் நிறைந்த சாகசங்கள் ,என்று ராஜா -காலத்து கதைகளாக இருந்தது . ராஜகுமாரி - மருதநாட்டு இளவரசி -மந்திரிகுமாரி - சர்வதிகாரி - மர்மயோகி -குலேபகாவலி - அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரை வீரன்
புதுமை பித்தன் - மகாதேவி - சக்கரவர்த்தி திருமகள் - நாடோடி மன்னன் - மன்னாதி மன்னன் - அரசிளங்குமரி -விக்கிரமாதித்தன் - காஞ்சித்தலைவன் போன்ற படங்களில் எம்ஜிஆர் அவர்கள் அரச உடையில் ஒரு நிஜ மன்னராகவே
தோற்றமளித்தார் .
எம்ஜிஆர் ஒரு சிறந்த நடிகர் என்பதை எல்லா படங்களிலும் காணலாம் . எம்ஜிஆர் ஒரு சகலாகலாவல்லவர் என்பதை
நாடோடிமன்னன் - அடிமைப்பெண் - உலகம் சுற்றும் வாலிபன் படங்கள நிரூபித்தது .
என் தங்கை - மலைக்கள்ளன் - தாய்க்கு பின் தாரம் - நல்லவன் வாழ்வான் - பாசம் - பெற்றால்தான் பிள்ளையா படங்களில்
அவரின் சோக நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது .
பொழுது போக்கு படங்கள் என்று பார்த்தால் எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - குடியிருந்த கோயில் -மாட்டுக்காரவேலன் - ரிக்ஷாக்காரன் - உரிமைக்குரல் - இதயக்கனி போன்ற படங்களில் எம்ஜிஆரின் நடிப்பும் காட்சிகளும்
பாடல்களும் சிறப்பாக இருந்தது . சண்டை பிரியர்களுக்கு கேட்கவே வேண்டாம் .எல்லாவிதமான சண்டை காட்சிகளிலும் எம்ஜிஆரின் ஸ்டைல் தனி சிறப்பு இருந்தது.
எம்ஜிஆர் பட பாடல்கள் - தேனிசை விருந்து . காதல் பாடல் - அறிவுரை தத்துவ பாடல் - சோக பாடல் என்று இவரின் பாடல்கள் என்றுமே தோற்றதில்லை .எம்ஜிஆர் ஒரு புதுமை விரும்பி என்பதை அவரின் பல படங்களில்அணிந்திருந்த
உடைகளே சாட்சி .மாறு வேட காட்சிகளில் எம்ஜிஆரை போல் வேறு எந்த நடிகரும் இது வரை நடித்ததில்லை .
பெரும்பாலான படங்களில் எம்ஜிஆர் ஓடி வரும் அழகே தனி அழகு . சண்டை காட்சிகளில் அவர் அடிக்கும் டைவ்
எதிரிகளை பந்தாடும் பாங்கு ,சிரித்து கொண்டே சண்டை போடும் முக பாவம் இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .
காதல் காட்சிகளில் அவரின் புன்னகை தோற்றம் , காந்த விழிகள் , நம்மை மயக்கி விடும் . எம்ஜிஆரின் காதல் பாடல்கள்
எல்லாமே படு சூப்பர் . எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்தது 115 படங்கள் .குறைந்தது 100 படங்கள் இன்று பார்த்தாலும்
மனதிற்கு நிறைவாகவும் , தெம்பாகவும் , புத்துணர்ச்சியும் அளிக்கிறது .
இப்படி பல பெருமைகளை திரை உலகிற்கு வழங்கிய எம்ஜிஆரை நான் என் மானசீக குருவாக ஏற்று கொண்டது என் வாழ்வில் கிடைத்த மாபெரும் பாக்கியம் . Vnd.........
-
'Age cannot wither her', 'Her infinite variety of Cleopatra' என்று Antony &
Cleopatra வில் Shakespeare கிளியோபாட்ராவை வர்ணித்திருப்பார். தமிழில் சொன்னால் வயது 'அவளை வாட்டாது'. 'அவள் ஒரு நவரச நாடகம்'
என்று எங்கள் ஆங்கில கல்லூரி பேராசிரியர் பாடம் நடத்தியது என் ஞாபகத்துக்கு வருகிறது.
அவர், 'அவள் ஒரு நவரச நாடகம்' என்று சொல்லி நிறுத்தியவுடன் நாங்கள் அனைவரும் கோரஸாக 'ஆனந்த கவிதையின் ஆலயம்' என்று பாட ஆரம்பித்தவுடன் ஸ்டாப் ஸ்டாப் என்று 5 நிமிடம் நிறுத்தியவுடன்தான் மாணவர்கள் நிறுத்துவார்கள். பாடம் நடத்தும் ஒவ்வொரு முறையும் இதே மாதிரிதான் நடக்கும். மாணவர்கள் உற்சாகத்தின் விளிம்புக்கே சென்று விடுவார்கள்.
ஆம். காலங்கள் எத்தனை கடந்தாலும் கிளியோபாட்ராவின் அழகு குறையவில்லை என்பதை ஷேக்ஸ்பியர் மிக அருமையாக சொல்லியிருப்பார். இதையே கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சர்வர் சுந்தரம் படத்தில் 'சிலை எடுத்தான் ஒரு சின்னப்பெண்ணுக்கு' பாடலில் அற்புதமாக சொல்லியிருப்பார். 'அன்னமிவள் வயதோ பதினாறு ஆண்டுகள் போயின ஆறுநூறு.
இன்னும் இவள் முதுமை எய்தவில்லை, என்னதான் ரகசியம் தெரியவில்லை' என்ன ஒரு கற்பனை நயம். ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் சொன்ன அந்த வசனம் உலகபிரசித்தி பெற்றது. அதற்கு சற்றும் குறையாத வார்த்தை ஜாலம்.
காலங்கள் பல கடந்தாலும் சிலைவடிவில் நின்றிருக்கும் பெண்ணின் வனப்பு சற்றும் குறையவில்லையாம். அதேபோல் 'காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன'? என்று கவிஞர் பாடிய அத்தனையும் காலத்தை வென்று ஞாலத்தில் நிலைத்த உயிரோவியங்களின் வர்ணனை என்றே சொல்ல வேண்டும்.
அதைப்போல் காலங்கள் கடந்தும் நிலைபெற்றிருக்கும் காவியம் யாவும் புரட்சி தலைவரின் வண்ண ஓவியங்களான அவரது திரைப்படங்கள்தான். மற்ற திரைப்படங்கள் யாவும் காலத்தில் மறைந்து மலரும் நினைவுகளாக இருக்கும் வேளையிலே புரட்சி நடிகரின் வண்ணக் காவியங்கள்
யாவும் அழியா சிரஞ்சீவியாக இன்றும் மக்கள் விரும்பக்கூடிய திரைப்படங்களாக திரையில் வலம் வருவதை பார்க்கும் போது கவிஞர் பாடிய காலம்தான் நினைவில் நிழலாடுகிறது.
'பராசக்தி', 'மனேகரா'வின் காலங்கள் மங்கி விட்டன. 'கட்டபொம்மன்', கெட்ட கனவாகி விட்டான். 'பாகப்பிரிவினை', 'பாசமலர்' மக்களின் நேசம் இழந்து நிற்கிறது. 'திருவிளையாடல்', 'சரஸ்வதி சபதம்' யாவும் பக்தியின் பரிணாமத்தில் நவீனமாகி விட்டது.
'வசந்த மாளிகை', 'தங்கப்பதக்கம்', 'திரி சூலம்' யாவுமே நூலிழந்த பட்டம் போல எங்கோ சென்று மறைந்தது.
ஆனால் ஆண்டுகள் போயின 62. இன்னமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற "நாடோடி மன்னனை" மறக்க முடியுமா?
எத்தனை இளந்தளிர் வந்தாலுமே காலத்தால் மறையா என்றும் "எங்க வீட்டு பிள்ளை" யாய் திகழும் காவியத்தை மறக்க முடியுமா? "படகோட்டி" "ஆயிரத்தில் ஒருவன்" "அன்பே வா" "குடியிருந்த கோயில்" "ஒளிவிளக்கு" "அடிமைப்பெண்" "மாட்டுக்கார வேலன்" "ரிக்ஷாக்காரன்" "உலகம் சுற்றும் வாலிபன்" "உரிமைக்குரல்" "இதயக்கனி" போன்ற படங்கள் மக்கள் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்கிறது.
அதுபோல் இன்னும் பல கலர் காவியங்கள் மட்டுமல்ல கருப்பு வெள்ளை காவியங்களும் சேர்ந்து ரவிவர்மன் ஓவியமாய் இன்றும் மக்கள் மனதில் நிலை பெற்றிருக்கின்றன. கொரானாவை தாண்டி திரைக்கு வந்த படங்களில் மதுரை சென்ட்ரலில் வெளியான "தர்மம் தலைகாக்கும்" தீபாவளியன்று ரூ30 டிக்கெட்டில் 146 பேரும் ரூ40 டிக்கெட்டில் 90 பேரும் பார்த்து ரூ9000 ஒரு காட்சியின் மொத்த வசூலாக பெற்றது மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை வரவழைத்தாலும் எங்களுக்கு அது அதிசயமில்லை. அன்றைய தினத்தில் பல படங்களுக்கு 2,3 பேர் கூட இல்லாமல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதையும் கைபுள்ளைங்க கண்டிருப்பார்கள். கவிஞர் பாடியதைப்போல் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாய் வலம் வருவது உலக வரலாற்றில் காணமுடியாத விந்தை எனலாம்.
நமது கைபிள்ளைகளுக்கு ஒரு படமும் வெளியாகவில்லையா?
கொரானாவுக்கு பயப்படாதவன் கூட கணேசனின் படங்களுக்கு பயப்படாமல் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். கொரானா கொல்வதற்காக 15 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்கிறது. ஆனால் நம்ம கணேசன் படங்கள் அவ்வளவு கால அவகாசம் கொடுப்பதில்லை என்று கேள்வி..........KSR.........
-
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-* வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 13/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருநாள் காரில் பயணிக்கும்போது கார் கண்ணாடியை இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்தவண்ணம் வருகிறார் . தி.நகர் வாணி மகால் அருகில் உள்ள ஒரு வீட்டின் கேட்டின் மீது 3* வயது மிக்க குழந்தை ஏறிவிட்டது .இறங்குவதற்கு வழி தெரியாமல் கேட்டை பிடித்தபடி அழுது கொண்டு இருக்கிறது. வீட்டின் உரிமையாளர் யாரும் அருகில் இல்லை .* எம்.ஜி.ஆர். அவர்கள் ஓட்டுனரிடம் உடனே காரை நிறுத்த சொல்லி , அந்த குழந்தையை கேட்டில் இருந்து பாதுகாப்பாக இறக்கிவிட்டு ,வீட்டின் உள்ளே செல் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறார் .* படப்பிடிப்பிற்கு அவசரமாக செல்லும் வேளையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு, தாய்மை உணர்வோடு, வண்டியை நிறுத்த சொல்லி,ஓடி சென்று* குழந்தையை பாதுகாப்பாக இறக்கி வீட்டின் உள்ளே அனுப்பிய பண்பு இருக்கிறதே ,அது எல்லோருக்கும் எளிதில் வந்துவிடாது . இந்த மாதிரியான பண்புகள், குணங்கள்தான் மக்களால் ஆட்கொள்ளப்பட்டு மக்கள் தலைவரானார் எம்.ஜி.ஆர்.*
உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள், பல உயர்ந்த அந்தஸ்துகளை பெற்றவர்கள்*எல்லாம் ஒருபோதும் ,உனக்கு சமானம் நான் என்று எண்ணாமல், எனக்கு சமானம் நீ என்று* அழைத்து பேசுகிற, அன்போடு பழகுகிற ,அந்த பண்பாடுகளை எம்.ஜி.ஆர். அவர்கள் விட்டு சென்றார் என்பதற்கு உதாரணமாக* நாம் சொல்லப்போனால் இப்போது நமது சகாப்தம் தொடரில் பேட்டி அளித்து வரும் திரு.லியாகத் அலிகான் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.* அவர் மிக பெரிய பதவியில் இருந்தவர் .* அவர் வாழ்க்கையில் மாமன்னர்* எம்.ஜி.ஆரின் கரங்களை,தொட்டு பழகியவர் .அப்படிப்பட்டவரை சமமாக நடத்துகிறார் . வின் டிவியின் உரிமையாளர் திரு.தேவநாதன் அவர்கள் ஒருபோதும் ஒவ்வொருவரையும், உனக்கு சமானம் நான் என்று பேசியதில்லை .எனக்கு சமானம் நீ என்று ஒவ்வொருவரையும் மதித்து, பல்வேறு நிர்வாக விஷயங்களை பகிர்ந்து கொண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் விட்டு சென்ற பண்பாட்டு குணங்களை கடைபிடித்து வருகிறார் . அந்த பண்பாடு இன்றைய இளையதலைமுறைக்கு வரவேற்பு தொட்டிலாக, பதாகையாக மலரவேண்டும் என்பதற்காக சகாப்தம் நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது .**.***
,முதல்வர் எம்.ஜி.ஆர். ஒரு நாள் கோட்டைக்கு* காரில்**செல்லும்போது சென்னை பல்கலை கழக கட்டிடத்தில் உள்ள கடிகாரம் ஓடவில்லை என்பதை கவனிக்கிறார் .* கோட்டைக்கு சென்றுவிடுகிறார் .* மறுநாள் சாலையில் செல்லும்போது அந்த* கடிகாரம் சரிசெய்யப்படாமல் பழுதாகி நிற்கிறது .**மூன்றாவது நாள் அந்த கடிகாரத்தை பார்த்துவிட்டு ,ஓட்டுனரை சென்னை பல்கலை கழக வளாகத்தில் காரை* நிறுத்த சொல்கிறார் . அங்கிருந்த காவலாளியை அழைத்து, இந்த கடிகாரம் ஓடாமல் நிற்கிறது . இந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியாதா..நானும் கடந்த மூன்று நாட்களாக கவனித்து வருகிறேன். பழுது பார்க்கப்படாமல் இருக்கிறது என்றவுடன், ஐயா நான் அதிகாரிகளிடம் சொல்லி உடனே கவனிக்க சொல்கிறேன் .என்று காவலாளி சொன்னதும் எம்.ஜி.ஆர். புறப்பட்டு சென்றார் .இந்த விஷயம் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, அன்று மாலைக்குள் சரி செய்யப்படுகிறது .* கோட்டையில் இருந்து மாலையில் எம்.ஜி.ஆர். காரில் வரும்போது கடிகாரத்தை கவனிக்கிறார். அது ஓடி கொண்டிருந்தது .ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் .* அவர் நினைத்திருந்தால் தன் உதவியாளரை அனுப்பி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் இந்த தவறை சொல்லி பழுது பார்க்க செய்திருக்கலாம். அல்லது கோட்டையில் இருந்தவாறே, தொலைபேசியில் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து, உடனே பழுது பார்க்கும்படி உத்தரவு பிறப்பித்து இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில்தானே இறங்கி வந்து தகவல் தெரிவித்ததற்கு காரணம்* அவர் எடுத்து கொண்ட அக்கறை,**பல்வேறு சிறிய விஷயங்களில் அவர் காட்டுகிற அந்த நுட்பமான கவனிப்பு ஆகியவைதான் மக்களின் ஆழ்மனதில் அவர் குடிகொண்டுள்ளார் என்பதை பறை சாற்றுகிறது .
திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் பொதுக்குழுவில்*பேசும்போது*அமைச்சர்கள் சிலர்*தவறு செய்கிறார்கள் , அவர்களை என்ன செய்யலாம் என்று கேட்டபோது , பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர்*அந்த அமைச்சர்கள் பெயரை சொல்லி* அவர்கள்* எல்லாம் சரியாக*பணியாற்றவில்லை. மேலும் அவர்கள் மீது சில குற்றச்சாட்டுக்கள் தெரிவித்து எழுதி போடும்*நேரத்தில் ஒட்டு மொத்தமாக 10 அமைச்சர்களை தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதவியில் இருந்து நீக்கிவிடுகிறார்கள் . அந்த பட்டியலில்*அமைச்சர் அரங்கநாயகமும்* உள்ளார் . இது நடந்ததும்* மிகுந்த வருத்தம் அடைந்த*அமைச்சர் அரங்க*நாயகம் தலைவரை சந்திக்க வருகிறார் .அப்போது அங்கே மேலும் 6 அமைச்சர்கள் காத்திருக்கின்றனர் .* அவர்களை பார்க்க வந்த தலைவர் அமைச்சர் அரங்கநாயகத்தை மட்டும் தனியே உள்ளே அழைத்து செல்கிறார் .* தலைவர் அவர்கள் அமைச்சர் அரங்கநாயகத்தை பக்கத்தில் அமர வைத்து ,மாலை சிற்றுண்டியில் ஆளுக்கு இரண்டு*வெங்காய*பஜ்ஜிகளை***இருவர்*தட்டிலேயும் வைக்க சொல்லி*, இருவரும் சாப்பிடுகிறார்கள் .அதன்பின் பால் இருவருக்கும் தரப்படுகிறது .*தலைவர் சாப்பிட ஆரம்பித்தால் தட்டிலே*வைத்த அனைத்தும் காலியாகிவிடும் .ஆனால் அமைச்சர் அரங்கநாயகம் அரைகுறை மனதோடு*ஒன்றரை*பஜ்ஜியை*சாப்பிட்டுவிட்டு அரை பஜ்ஜியை*மீதம் வைக்கிறார் .* மேலும் இரண்டு பஜ்ஜிகளை பணியாளிடம் எடுத்து வர சொல்லிவிட்டு , அரங்கநாயகம் மீதம் வைத்திருந்த அரை பஜ்ஜியை*எடுத்து தன்* தட்டிலே*வைத்து சாப்பிட்டு விடுகிறார் . இந்த சம்பவத்தை என்னிடம் அரங்கநாயகம் அவர்கள் சொல்லும்போது ,தலைவர் அவர்கள் எப்படிப்பட்ட மாமனிதர். வெளியில் 6 அமைச்சர்களை அமரவைத்துவிட்டு, நான் வந்த*நோக்கத்தை அறிந்து*பேசாமல் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால்* ,என்னை*மட்டும் அழைத்து*சிற்றுண்டி தருகிறார் . நான் சாப்பிட்டு மீதம் வைத்திருந்த பஜ்ஜியை*எடுத்து சாப்பிடுகிறார் என்றால் எந்த அளவிற்கு*நம் மீது பாசமும், நேசமும் வைத்திருக்கிறார் பாருங்கள் என்று மிகவும் சிலாகித்து சொன்னார் .* தலைவர் அவர்கள் இந்த அமைச்சரை நீக்கிவிட்டோமே, அவர் மிகுந்த வருத்தத்தில்*இருப்பாரே என்று எண்ணி, அவருடைய வருத்தத்தை வேறு விதத்தில்*போக்கும் வகையில்*, அவரை*சமாதானம் செய்கிறார். .அப்படித்தான்** அமைச்சர் காளிமுத்துவை* நீக்கியபின்*தலைவர் மதுரைக்கு செல்கிறார் . அங்கு தலைவரோடு*சில அமைச்சர்கள் நின்று பேசி கொண்டிருக்கிறார்கள் .* பதவி நீக்கத்தால் மிகுந்த வருத்தம் அடைந்த*அமைச்சர் காளிமுத்து அங்கே வருகிறார் .* தலைவர் காரில்*அமர்ந்து புறப்படும்*நேரம் அது. மற்ற சில*அமைச்சர்கள் தலைவருடன் காரில் பயணிக்க தயாராக உள்ளனர் .* அந்த நேரத்திலே வந்த அமைச்சர் காளிமுத்துவை அழைத்து*,சில நிமிடங்கள் தலைவர் தனியே பேசுகிறார் .பின்னர் புறப்படும்போது தலைவருடன் சில*அமைச்சர்கள் பயணிக்க தயாராக இருந்த நிலையில்*சிலரை* இறங்க* சொல்லி, காளிமுத்துவை அழைத்து , காரில்*தன்* பக்கத்தில் அமரச்செய்து , அவரை*பதவி* நீக்கம் செய்துவிட்டோமே, அவர் மிகுந்த வருத்தத்தில் இருப்பாரே என்று எண்ணி, அந்த வருத்தத்தை*வேறு விதத்தில்*போக்கும் வகையில்*அவரை சமாதானப்படுத்தி பேசிய மாபெரும்*தலைவர்தான்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*
நான் எத்தனையோ இலக்கியங்களை படித்திருக்கிறேன் .* மிக பெரிய புராணங்களை எல்லாம் படித்து நாம் கேள்விப்பட்டு இருப்போம்.* அவர்கள் எல்லாம் தங்களுடைய செயலை நியாயப்படுத்தி , தண்டனையை*நியாயப்படுத்தினால் கூட*, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் அளித்த*தண்டனையை*வெகு நாட்கள்*ஜீரணித்து கொள்ள முடியாமல்*அவர்களை பக்கத்தில் அமரவைத்து*ஆசுவாசப்படுத்தி அன்பு, பாசம் காட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.* இப்படிப்பட்ட தலைவரோடு*நான் பழகும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்ததை*எண்ணி* பார்க்கின்றபோது ,* அவருடைய தலைமையிலேதான் என்னுடைய திருமண*வாழ்த்துக்கள்* பெற்று, அவருடைய வாழ்த்துரை*வழங்கப்பட்டது என்பதை*நினைத்து* பார்க்கின்றபோது உள்ளபடியே நான் பெரிதும் உவகையும், மகிழ்ச்சியும் அடைகிறேன் .* அதே தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்* தலைமையில், கோவையில்*மாணவர் மாநில*மாநாடு நடைபெறுகிறது .* அந்த மாநாட்டிற்கு வெள்ளோட்டமாக , ஒரு மாதத்திற்கு முன்னதாக அங்கே வந்து, அந்த மாநாட்டு*ஏற்பாடுகளை எல்லாம் சுமார்*ஒரு மணி நேரம் கலந்து ஆலோசிக்கிறார். அப்போது வந்தவர்கள், கோவைத்தம்பி, திருப்பூர் மணிமாறன், ராமசாமி, முனிரத்தினம், முன்னாள், இந்நாள் மாவட்ட செயலாளர்கள் ,போன்றவர்களுடன், மாணவர்களையும் அவர் அழைத்திருந்தார் .அப்போது திரு.வெள்ளைச்சாமியையும் கோவை*சர்க்யூட் ஹவுஸுக்கு வர செய்தார்* எங்களோடு, பொள்ளாச்சி*ஜெயராமன், வேலுச்சாமி,லிங்கராஜ் ,ராஜேந்திரன் போன்ற மாணவர்களுடன் நானும் செல்கிறேன் .* நான் பேண்ட்,சட்டை அணிந்து அந்த மாணவர்கள் கும்பலுடன் நிற்கின்றேன் .நான் வேட்டி அணிந்து சில கூட்டங்களில் கலந்து கொண்டதையும் தலைவர் பார்த்திருக்கிறார் . தலைவர் அவர்கள் பேசிக்கொண்டே, தொலைபேசியில் சென்னையில் உள்ள திரு.குழந்தைவேலுவுடன் பேசுகிறார் . . கோவையில் மாணவர் மாநில மாநாடு நடைபெறுகிறது அதுபற்றி தெரியுமா உனக்கு என்று சொல்லிவிட்டு வெள்ளைச்சாமியிடம் பேசுகிறார் .நானும் பக்கத்திலேயே நிற்கிறேன்.தலைவர் அவர்கள் என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்துரை வழங்கி இருக்கிறார். என்னுடைய பெயரை, பல குழந்தைகளுக்குதேர்தல் நேரத்தில்**பெயர் சூட்டி இருக்கிறார் .**
நான் பதினைந்து மாணவர்களுடன் கும்பலாக நிற்கிறபோது என்னை அடையாளம் கண்டு கொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை*வெள்ளைச்சாமியிடம் எங்கே லியாகத் அலிகானை காணவில்லை என்று கேட்கிறார் .* நான் பக்கத்திலேயே நிற்கிறேன். அண்ணே நான் தான் லியாகத் அலிகான் என்கிறேன் .நீ சும்மா இரு. உன்னை* *எனக்கு தெரியாதா , நான் விளையாட்டுக்காக வெள்ளைச்சாமியிடம் கேட்டேன் என்றார் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு என்னுடைய பெயர் எப்போதும் நன்றாக நினைவில் இருக்கும்.* சில நேரங்களில் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருக்கும்போது*என்னுடைய பெயர் சில சமயங்களில் அவருக்கு நினைவுக்கு வருவது கடினம்*ஏனென்றால் கம்பம் தொகுதியில்,என் பெயரை நினைவில் வைத்து* என்னை வேட்பாளராக அறிமுகம் செய்த தலைவரை சந்திப்பதற்கு* நான் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றேன். அப்போது அங்கு 2000 பேர் கூடியிருந்தனர் . தலைவர் முதல்வர் ஆன பின்பு* அவருக்கு** ஒரு சால்வை அணிவித்து, கையில் ஒரு எலுமிச்சம்பழம் கொடுத்தபோது, அவரது உதவியாளர்கள் என்னை பிடித்து அவர்கள் பக்கம் இழுக்கிறார்கள். நான் உடனே, அண்ணே* நான்தான் லியாகத் அலிகான் என்றவுடன், தலைவர் உதவியாளர்களிடம் அவனை விடுங்கள் என்று சொல்லி, தன்னருகே அழைத்து, என் தோளின்மீது கையை போட்டு, எப்போது வந்தாய், எங்கே தங்கி இருக்கிறாய்* என்று சில நிமிடங்கள் விசாரித்துவிட்டு, சரி, நீ கவலைப்படாதே, ஒரு வாரத்திற்கு இங்கேயே தங்கிவிடு. நான் உன்னை பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி, அந்த மாபெரும் கூட்டத்தினர் இடையே எனக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் .* கோவையில் நடைபெற்ற மாணவர் மாநில மாநாட்டில் என்னை வரவேற்பு குழு தலைவராக பரிந்துரை செய்கிறார் .**அப்போது வெறும் 26 வயது நிரம்பிய எனக்கு அந்த பொறுப்பை தந்தது சாதாரண விஷயமல்ல.* அப்படி நியமிக்கப்பட்ட நான், வெள்ளைச்சாமி, மற்றும் சில மாணவர்களுடன் பேசி கொண்டிருந்தபோது நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம். தலைவரே, மாநாடு நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக தாங்கள் வந்துவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவை இந்த நேரத்தில் கோவையில் நடத்தினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் யோசனை தெரிவித்தோம். அதற்கு ஆரம்பத்தில் பயம் இருந்தாலும், தைரியத்தை வரவழைத்து கொண்டு தலைவரிடம் துணிந்து சொன்னோம் .* ஏனென்றால் எங்கள் வயது அப்படி. எல்லோரும் இளைஞர்கள்..* அப்போது அங்கு வந்திருந்த அண்ணா பத்திரிகை ஆசிரியரிடம்* மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சென்னையில் நடைபெறுவதாக இருந்த அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் கோவையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடும்படி செய்தார் .* கோவையில் ப்ரெசிடென்சி ஓட்டலில் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உத்தரவின்படி செயற்குழு, பொதுக்குழு நடத்தப்பட்டது . அடுத்த நாள் கோவையில் மாணவர் மாநில மாநாடு நடைபெற்றது . வரவேற்பு குழு தலைவராகிய என் தலைமையில்* ஒரு நாள், வெள்ளைச்சாமி தலைமையில் ஒருநாள் ,ஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன், கம்பம் வரதன், பொள்ளாச்சி ஜெயராமன் போன்றவர்கள் எல்லாம் கலந்துகொண்டு உரையாற்றுகிறோம் என்று சொன்னால், இளைஞரகளை அவ்வளவு* உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு தனி பொறுப்பை கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். பயப்பட மாட்டார் .இவர்களால் இதை செய்ய முடியும் என்று நம்பிக்கை வைத்து* துணிந்து முடிவு எடுத்து எங்களை எல்லாம் வளர்த்துவிட்ட,உருவாக்கி விட்ட* தலைவர்***எம்.ஜி.ஆர். அவர்கள் .என்றைக்குமே மறக்கலாகாத தலைவராக*33ஆண்டுகள் ஆகியும் கூட இன்னும்* மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒப்பற்ற தலைவராக*,ஓய்வில்லாமால் உழைத்த காரணத்தால்தான் அவருடைய 70 வது* வயதிலேயே அவர் நம்மைவிட்டு பிரியும் ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது .* அவர் ஒருநாளும் சும்மா உட்கார்ந்ததில்லை. ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்*என்று வெறுமனே அவர் பாடவில்லை. அதன்படி நடந்து ஒரு வரலாறு*படைத்தார் .* இவ்வாறு திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்/காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் -குடியிருந்த கோயில்*
2.இன்பமே உந்தன் பேர் பெண்மையோ - இதயக்கனி*
3.துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்*
4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
-
12.11.1972- அன்று திரு.கருணாநிதி அரசு மீதான ஊழல் பட்டியலை குடியரசுத்தலைவர் கே.கே.ஷாவிடம் கொடுத்தார் #புரட்சித்தலைவர்..
புரட்சித்தலைவருடன் கே.ஏ.கே., எஸ்.டி.எஸ்., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி கல்யாண சுந்தரம் ஆகியோர் உடன் சென்றனர்.
'தமிழகத்தில் இயல்புக்கு மாறான நிலையும், பெருங் குழப்பமும்
நிலவுவதாக குற்றம் சாட்டி,
உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்'
- என்று அன்றைக்கு தமிழகத்திலுள்ள அனைத்து எதிர் கட்சிகளும் குரல் எழுப்பிய நிலையில் நவம்பர் 13-சட்டமன்ற மன்றம் கூடுவதாக அறிவிக்கபட்டது.
இந்த நிலையில் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொன்டது...
அப்போது சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 5...
திமுகவிலிருந்து மேலும் அதிமுகவிற்கு யாரும் செல்லாமல் இருக்கவும், சட்டமன்ற உறுப்பினர்களை கண்காணிக்கவும், திமுக மாவட்ட செயலாளர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்தார் திரு.கருணாநிதி.
திரு.கருணாநிதியின் ஆசை வார்த்தைகளுக்கும், பதவி சுகத்திற்கும் திமுகவின் சுயநலக் கூட்டம் அடி பணிந்தது.
ஆனால் #எம்ஜிஆர் என்கிற வார்த்தையை உயிர் மூச்சாய்க் கொண்ட லட்சோப லட்சம் தொண்டர்களை திரு.கருணாநிதியால் விலைக்கு வாங்க முடியவில்லை.
பரபரப்பான சூழ்நிலையில்தான்
சட்டமன்றம் கூடியது...
அதற்கு பின்னால் நடந்ததுதான் நம் அனைவருக்கும் தெரிந்ததுதானே...........vr...
-
கார்த்திகை மாதம் 1 திங்கள்கிழமை
உலக எம்ஜிஆர் ரசிகர்களே
இந்திய எம்ஜிஆர் ரசிகர்களே
தமிழக எம்ஜிஆர் ரசிகர்களே
உங்கள் அனைவருக்கும் கோடி நமஸ்காரங்கள்
நீங்கள் பார்க்கும் இந்த வீடியோவில் உங்கள் முன் அமர்ந்து வீடியோவில் பேசுகின்றவர்பெயர்
கலைஞானம் அவர்கள்
சிவாஜி அவர்களை வைத்து. மிருதங்க சக்கரவர்த்தி என்ற படத்தை தயாரித்தவர்
இவர் ரஜினிகாந்த் அவர்களை வைத்தும் படம் தயாரித்துள்ளார்
வேறு பல நடிகர்களை வைத்தும் படம் தயாரித்துள்ளார்
இவர் கதை வசனம் எழுதக்கூடியவர்
இவர் எம்ஜிஆர் அவர்களுக்காக. கொடுத்து சிவந்த கரம் என்ற ஒரு கதையை எழுதி வைத்திருந்தார் அந்தக் கதையை பெங்களூரில் இருந்த எம்ஜிஆர் அவர்களிடம் சொல்லி இருக்கிறார்
கதையைக் கேட்ட எம்ஜிஆர் அவர்கள் இந்த படத்தை நாம் தயாரிக்கலாம்
சென்னை சென்று ஆர் எம் வீரப்பன் இடம் மற்ற வேலைகளை ஆரம்பிக்க சொல்லுங்கள் என்று இவரை பெங்களூரிலிருந்து சென்னைக்கு எம்ஜிஆர் அனுப்பிவிட்டார்
பிறகு அரசியல் சூழ்நிலை காரணமாக அந்தப் படம் தயாரிக்கப்படவில்லை எம்ஜிஆர் முதலமைச்சராக வந்துவிட்டார்
இந்தத் தகவலை கலைஞானம் அவர்களே வீடியோவில் கூறியிருக்கிறார்
அந்த வீடியோவை நான் துளைவிக் கொண்டிருக்கிறேன் கிடைத்தவுடன் உங்களுக்கு பதிவு செய்கிறேன்
1955 ஆண்டில் பாடலாசிரியர் காமாட்சி அவர்கள் இறந்த பொழுதுநடந்த நிகழ்ச்சியை கலைஞானம் கூறுகிறார்
யார் வாயை திறந்தாலும் எம்ஜிஆர் பணம் கொடுத்தார் கொடுத்தார் என்றுதான் கூறுகிறார்கள்
எந்த நடிகையாவது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இப்படி மற்றவருக்கு உதவி செய்திருந்தால்
அதை பேப்பரில் படித்திருந்தால்
அல்லது டிவியில் கேட்டிருந்தாலும்
அந்த நடிகையின் ரசிகர்கள் முகநூலில்அந்த
அற்புத செய்தியை
ஆனந்த செய்தியை
அதிசிய செய்தியை
அடுத்தவர்கள் கேட்டு வாயைப் பிளக்கும் அந்த செய்தியை
அடுத்தவர்கள் கேட்டு ஆர்பரிக்கும்செய்தியை
அடுத்தவர்கள் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் அந்த செய்தியை
அந்த நடிகையின் பெயரில் ரசிகர் மன்றம் வைத்த அந்த ரசிகர்கள் முகநூலில் அதை வெளியிட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
. பதிவிட கேட்டுக்கொள்கிறேன்
தர்மம் செய்வதில் எம்ஜிஆருக்கு ஈடு இணை யாரும் கிடையாது
எம்ஜிஆர் கால் தூசுக்கு கூட அவர்கள் நிகராக மாட்டார்கள்.........vr...
-
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்
'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
போகும் போது வார்த்தை இல்லை...
போகும் முன்னே சொல்லி வைப்போம்..!
இந்த கடைசி இரு வரிகளை மட்டும் மாற்றிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அதைக் கண்ணதாசனிடமும் தெரிவித்தார்.
சரி... மாற்றித் தருகிறேன் என்று சொன்ன கவியரசர்
'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
வார்த்தை இன்றிப் போகும் போது...
மௌனத்தாலே நன்றி சொல்வோம்..!'
என்று மாற்றிக் கொடுத்தார். இதைப் பார்த்த பிறகுதான் எம்.ஜி.ஆருடைய முகத்தில் திருப்திப் புன்னகை பரவியது. காரணம் என்னவெனில் தனது பாடல்களில் வலிமை மிகு எதிர்மறையான வார்த்தைகள் இடம்பெறக் கூடாது என்பதில் மக்கள் திலகம் உறுதியாக இருந்ததுதான்.
கவிஞர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தான் எழுதியதை மாற்றமாட்டார்கள். ஆனால் அதை மாபெரும் கவியரசர் இயைந்து மாற்றினார் என்றால் அவரது பெருந்தன்மைக்கு அளவில்லை..!...
-
#மக்கள்_திலகம்...
#மீனவ_நண்பனாக..
உரிமைக்குரல் என்ற ப்ளாக்பஸ்டரை படத்தை 1974ம வருடத்தில் கொடுத்து,மக்கள் திலகம் +இயக்குநர் ஸ்ரீதர் கூட்டணி அசைக்க முடியாத வெற்றிக்கூட்டணி ஆனது.
அந்த வெற்றிக்கூட்டணியின் இரண்டாவது படைப்புதான் மீனவ நண்பன்.இந்த படத்தை துவக்கும்போது அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த மக்கள் திலகம் , படம் 1977 ம் ஆண்டு சுதந்திர தினம் அன்று வெளிவந்தபோது கோட்டையில் கொடியேற்றும் முதல்வராகிவிட்டார்.
திரைப்படத்தில் குமரன் என்ற மீனவ நண்பராய் வரும் மக்கள் திலகம், வி.கே.ராமசாமி-நம்பியார்-வீரப்பா கூட்டத்தினர் மீனவர்கள், அடிமாட்டு விலைக்கு மீன்களை தங்களிடம்தான் விற்க வேண்டும் என்ற ஏகாதிபதியத்தை எதிர்த்து போராடுகிறார். மோட்டார் போட்டில் மீன் பிடித்து மீனவர்கள் நல்ல விலைக்கு மீன்களை விற்க உதவுகிறார். எதிர்ப்பை மீறி கமலி ((லதா))யை மணக்கிறார். இறுதியில் தவறு செய்தவர்கள் மனம் திருந்துகின்றனர்.
இயக்குநர் ஸ்ரீதருக்கு முக்கோண காதல் கதைகள்தான் எடுக்க முடியும் என்பதை இரண்டாவது முறையாக இப்படத்தின் மூலம் உடைத்துக்காட்டினார் ஸ்ரீதர்.
"எங்கிட்ட நெருங்காதே..நெருங்கின சுட்ருவேன்" என நம்பியார் துப்பாக்கியுடன் எச்சரிக்கை விடுக்க..
மக்கள் திலகம் " சும்மா சுடு..எனக்கு துப்பாக்கியால் சுடப்பட்ட அனுபவம் ஏற்கனவே உண்டு" என சொல்லும் போது எழுந்த கைதட்டலும் ஆரவாரமும் இன்னும் காதில் ஒலிக்கிறது.
மக்கள் திலகத்தோடு ..லதா, வெ.ஆ.நிர்மலா, நம்பியார், வி.கே.ஆர், ,நாகேஷ் என பலர் நடித்திருந்தாலும் மக்கள் திலகமே கடைசி வரை படத்தை தனி மனிதனாக தூக்கி நிறுத்தியுள்ளார்.
வழக்கம்போல் மக்கள் திலகத்தின் பட பாடல்கள் மெல்லிசை மன்னர் இசையில் விருந்துபடைக்கின்றன. "பொங்கும் கடலோசை".."நேருக்கு நேராய் வரட்டும்".."தங்கத்தில் முகமெடுத்து".." கண்ணழகு சிங்காரிக்கு".."பட்டத்துராஜாவும் பட்டாள சிப்பாயும்".."நேரம் பெளர்னமி நேரம்" ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.
இந்த படம் தமிழகமெங்கும் நூறு நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்து சூப்பர் ஹிட்டானது. அறுபதுகளில் படகோட்டியாய் வென்றவர்..எழுபதுகளில் "மீனவ நண்பராயும்" வென்றார்.கோட்டையையும் பிடித்தார்.
தகவல் :https://en.m.wikipedia.org/wiki/Meenava_Nanban...Sr.bu...
-
# சூரிய குலத்தைச் சேர்ந்த மன்னன் திருயருனி,
அவனுடைய ஏக புத்திரன் சத்தியவிரதன்,
தந்தை சொல்லைக் கேட்காமல் சுற்றித் திரிந்தான்,
மன்னனும் அதைக் கண்டு மனம் வருந்தி மகரிஷி "வசிஷ்டரி டம் " அனுப்பி வைத்தான்,
அந்த மகானுடைய போதனையாவது தன் மகனை திருத்தி விடாதா என்று மன்னன் நினைத்துக் கொண்டிருக்க கடைசியில் அந்த மகன் மகரிஷி வசிஷ்டருக்கே அடங்கவில்லை, அதனால் மனம் வெதும்பிய மகான் தகப்பனுக்கு சொல்லி அனுப்பி விட்டு ஆசிரமத்தை விட்டே துரத்தி விட்டார், அதைத் தொடர்ந்து மன்னனும் இனி என் முகத்தில் விழிக்காதே என்று சொல்லி அரண்மனையை விட்டு வெளியே அனுப்பி விட்டார்,
ஆனால் சத்திய விரதனோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான்,
அந்த நேரத்தில் மகரிஷி "விஷ்வாமித்திரர் கடும் தவம் புரிய வேண்டி தன் மனைவி, பிள்ளைகளை காட்டில் தனியாக விட்டு விட்டு இன்னொரு காட்டுக்கு சென்று விட்டார்,
தனியே விடப்பட்ட முனிவரின் குடும்பத்துக்கு இந்த சத்தியவிரதன் உணவுக்கான தேவையை கவனித்துக் கொண்டான்,
அப்போது ஒரு சமயம் மழைப்பொழிவு இல்லாததால் காடு வறண்டு உணவுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டு விட்டது, அந்த நேரத்தில் நம் சத்தியவிரதன் வேறு வழி இல்லாமல் வசிஷ்டர் வளர்த்த பசுவைக் கொன்று அதன் இறைச்சியை தானும் உண்டு விஷ்வாமித்திரர் குடும்பத்துக்கும் கொடுத்து விட்டான்,
சம்பவத்தை அறிந்த வசிஷ்டர் கடும் கோபம் கொண்டு நீ மூன்று பாவங்களை செய்திருக்கிறாய்
" முதல் பாவம் தகப்பன் சொல் பேச்சு கேட்காதது, இரண்டாவது பாவம் பசுவைக் கொன்றது,
மூன்றாவது பாவம் பசு என்றும் பாராமல் அதன் இறைச்சியை உண்டது,
இந்த மூன்று பாவங்களை நீ செய்ததால் இன்று முதல் உன் பெயர் "திரி சங்கு " என்று அழைக்கப்படட்டும், அது மட்டும் அல்லாமல் உன் உருவமும் அருவருப்பாக மாறிப் போகட்டும் என்று சாபம் கொடுத்து விட்டார்,
இந்த நேரத்தில் கடும் தவம் முடிந்து வந்த விஷ்வாமித்திரர் நடந்த சம்பவங்களை எல்லாம் அறிந்து கொண்டார்,
ஆனால் அவருக்குள் ஒருவித இரக்கம் சத்தியவிரதன் மேல் ஏற்பட்டது, தன் குடும்பத்திற்காகத்தானே பசுவைக் கொன்றிருக்கிறான் எனவே அதை பாவமாக நான் கருத மாட்டேன் என்று சொல்லி திரி சங்குவைப் பார்த்து என் குடும்பத்துக்கு உதவியதால் நீ இந்த நிலையை அடைந்தாய் எனவே அதற்கு பரிகாரமாக உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்று சொல்லி விட்டார்,
யோசித்துப் பார்த்த திரி சங்குவும் பசுவை கொன்றதால் இந்த ஜென்மத்தில் நான் சொர்க்கம் போக முடியாது என்று வசிஷ்டர் சாபம் கொடுத்து விட்டார் எனவே இந்த உடலுதான் நான் சொர்க்கம் போக நீங்கள் அருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்,
உடனே விஷ்வாமித்ர முனிவரும் திரி சங்கு சொர்க்கம் போக வேண்டி அதற்க்கான வேள்வியை ஆரம்பித்தார்,
திரி சங்குவும் சொர்க்கத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்தான், அதை க் கண்ட இந்திரன் இந்த பூத உடலோடு நீ சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது என்று சொல்லி தடுத்தாலும் திரி சங்கு அதை பொருட்படுத்தாமல் மேலும் முன்னேறவும் இந்திரன் கோபத்தில் திரி சங்குவை எட்டி உதைக்கவும் திரி சங்கு கீழே விழ ஆரம்பித்தான்,
இதைப் பார்த்த விஷ்வாமித்ரர் சொர்க்கத்துக்கும், பூமிக்கும் இடையில் வந்து கொண்டிருந்த திரி சங்குவைப் பார்த்து திரி சங்குவே நில் என்று சொல்லி இடையிலேயே ஒரு சொர்க்கத்தை அவனுக்காக படைத்தார் என்று புராணம் சொல்லுகிறது,
அதைத்தான் நாமும் திரி சங்கு சொர்க்கம் என்று அழைக்கிறோம்,
சரி என்னடா இவன் எதற்காக இந்த கதையை சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்?
காரணம் இருக்கிறது
" தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஒரே குரலில் "பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி என்றால் அது மக்கள் திலகம் மட்டும்தான் அங்கே உனக்கு இடமில்லை என்று ஒரே உதையாக கணேசனை உதைத்தாலும் கணேசனின் பிள்ளைகள் இப்போது இவர்களே ஒரு இடைவசூல் சொர்க்கத்தை கணேசனுக்காக உருவாக்கி கணேசனை அங்கு குடியேற்றி வைத்திருக்கிறார்கள்,
பின்ன என்னங்க சண்டித் தனத்துக்கு ஒரு அளவில்லியா?
" பாவ மன்னிப்பு " படம் சென்னையில் முதன் முதலாக 10 லட்சம் வசூல் பண்ணுச்சாம்,
ஏண்டா கோக்கு மாக்கு கோமாளிப் பயலுவளா 10 லட்சம் என்பது 1961 இல் உங்களுக்கெல்லாம் நிசாரமாப் போச்சு இல்லே?
"சாந்தி " தியேட்டர் ஆரம்பித்து முதல் முதலாக திரையிட்ட படம் இந்த பாவ மன்னிப்பு, அது மட்டும் அல்லாமல் அந்த படத்தை 100 நாட்கள் அல்லது வெள்ளி விழா? (வெட்டி விழா )கொண்டாடுவதற்கு கணேசன் செய்த தில்லு முல்லுகள் அனைத்தையும் " கல்கண்டு " இதழில் அமரர் தமிழ் வாணன் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார் ( அப்போது தமிழ் வாணன் நடு நிலையாளராகத்தான் இருந்தார், அதன் பிறகுதான் தலைவரின் எதிர்ப்பாளராக மாறிப் போனார் )
பலூன் பறக்க விட்டது, எந்த பாடல், காட்சிகள் நன்றாக உள்ளது என்று பரிசுப் போட்டி( பாதி டிக்கெட் இணைத்து அனுப்ப வேண்டும், மற்றபடி ஜி. என். வேலுமணியின் " சரவணா பிலிம்ஸ் " அலுவலகம் மூலமாக ஆட்கள் பிடித்து தியேட்டருக்கு அனுப்பி வைத்தது என்று ஏகப்பட்ட டிங்கிரி, பிங்கிரி வேலைகளை எல்லாம் தமிழ் வாணன் அன்போடு வெளிப்படுத்தியிருந்தார் ( படத்தை தயாரித்தது ஏ. வி. எம் மற்றும் பீம் சிங்கின் புத்தா பிலிம்ஸ் பேனராக இருந்தாலும் இந்த மோசடிகளில் ஜி. என். வேலுமணிக்கும் பங்கு இருந்தது காரணம் அப்போது வேலுமணி சிவாஜியை வைத்து படம் தயாரித்ததுதான் )இது மட்டும் அல்லாமல் அதே வருடத்தில் தெலுங்கிலும் "பாப்பா பரிகாரம் " என்ற பெயரில் டப் செய்து அங்கேயும் பீப் பீ ஊதியது இந்த பாவ மன்னிப்பு ,
அப்படியிருக்க இந்த 10 லட்சம் எங்கேயிருந்து வந்தது என்று சொல்ல முடியுமா கோப்பால்? ( இந்த கோப்பால் என்னும் வார்த்தையை புதிய பறவையில் சரோஜா தேவி சொல்லுவது மாதிரி நினைத்துக் கொள்வது இன்னும் கொஞ்சம் காமெடியாக இருக்கும் )
சரி இதையெல்லாம் தாண்டி இதே வருடம் வெளி வந்த தலைவரின் " திருடாதே" படமும், தாய் சொல்லைத் தட்டாதே படமும் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் உலகையே புரட்டிப் போட்டது, அப்படியிருக்க பாவ மன்னிப்பு படம் எங்கேயும் மன்னிக்கப்பட்ட மாதிரி தெரியலையே
கோப்பால்?
சரி இதையெல்லாம் விடுவோம் " பேசும் படம் " சினிமா பத்திரிக்கை சிவாஜியின் ஊதுகுழலாக வெளி வந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான் ( நடிகர் திலகம்? பட்டம் கொடுத்ததும் அவர்கள்தானே )
அந்த பத்திரிக்கையில் வாசகர் ஒருவர் கேட்ட கேள்வி இது : "பாவ மன்னிப்பு, திருடாதே இரண்டில் எது சிறந்த படம்?
பேசும் படம் கொடுத்த பதில் : நடிப்புக்கு பாவ மன்னிப்பு, வசூலில் "திருடாதே "
பேசும் படத்தில் வந்த இந்த பதிலை நம் அன்பர்கள் "மய்யம் " இணைய தளத்திலும் ஆதார பூர்வமாக வெளியிட்டதை போண்டா மணி, வைத்தி, மன்னாரன் கம்பெனி தங்கவேலு மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோம்,
அடுத்தது " திருவிளையாடல் " படம் சென்னையில் 13. 80லட்சம் வசூல் செய்ததாக ஒரு அணுகுண்டை இந்த அல்லக்கைகள் குரூப் பதிவாக போட்டிருக்கிறது,
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் , 1969ஆம் ஆண்டு வெளிவந்து வசூலில் தென்னகத்தை மட்டுமல்லாது, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் ஜெய பேரிகை கொட்டிய "அடிமைப் பெண் " படம் சென்னையில் வெளியிட்ட நான்கு திரையரங்கிலும் 450 காட்சிக்கு மேல் அரங்கு நிறைந்தது,
அந்த விபரங்கள் எல்லாம் அதிகாரப் பூர்வமாக வெளி வந்தது, அப்படியிருந்தும் " அடிமைப் பெண் " சென்னை வசூல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது 13 லட்சத்து 60ஆயிரம்தான்,
அப்படியிருக்க சாந்தி மற்றும் குத்தகை அரங்குகள் கிரவுன், புவன்னேசுவரியில் மொத்தம் 100 காட்சிகள் கூட அரங்கு நிறையாத " திருவிளையாடல் " படம் எப்படி இவ்வளவு வசூல் செய்தது என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா? 1965 இல் வந்த படம் தெரு விளையாடல்,
இவ்வளவு வசூல் வருவதற்கு சாந்தி மற்றும் குத்தகை அரங்குகள் திருப்பதி உண்டியலா என்ன?
பொய் சொல்லுவதற்கும் ஒரு அளவு உள்ளது, இது உலக மகா பொய்யாக உங்களுக்கே தெரியவில்லையா போண்டா மணி குரூப்ஸ்?
சென்னையில் மட்டும் வசூல்? வெளியிட்டு மகிழ்ச்சி கொள்ளும் இந்த கூட்டத்திற்கு தெரியவில்லையா என்ன? சென்னை இவர்கள் அரங்குகள் தவிர தமிழ்நாடு முழுவதும் " எங்க வீட்டுப் பிள்ளை" செய்த வசூலில் நான்கில் ஒரு பங்கு கூட தெரு விளையாடல் செய்யவில்லை,
இந்த விபரம் பேசும் படத்தில் வெளி வந்த விபரம்தான்
சாந்தி தியேட்டர் சாதனை என்பது எப்படி என்பதற்கு ஒரு சிறிய விளக்கம் தருகிறேன்
1972 இல் வெளி வந்த " வசந்த மாளிகை " படம் 175 நாளில் வசூல் பண்ணிய தொகை 8.50 லட்சம் மட்டும்தான்,
ஆனால் அதே சாந்தியில் 1974 இல் வெளி வந்த " தங்கப்பதக்கம் "175 நாளில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
11 லட்சத்து 65000,
இப்படி கணக்கு வெளியிடுவதற்கு முன் யோசிக்க வேண்டாமா? இது சாத்தியம் ஆகுமா? கட்டணம் உயர்ந்தாலும் கூட இவ்வளவு வித்தியாசம் எப்படி வரும் என்பதை இந்த போண்டா மணி குழுவினர் யோசிக்கவே மாட்டார்கள் போல் தெரிகிறது,
இப்படி பொய் வசூல் கணக்கு கொடுக்க காரணம் " வாலிபனை " மிஞ்சி சென்னையில் மட்டுமாவது காட்ட வேண்டும் என்ற வெறி,
மற்ற இடங்களில் பார்க்கும் போது இந்த தகர கூஜா வாலிபன் செய்த வசூலில் பத்தில் ஒரு மடங்கு கூட செய்யவில்லை,
1965 முதல் 1977 வரை சிவாஜி படங்கள் சாந்தி தவிர வெளி தியேட்டர்களில் மொத்தம் 57 படங்கள் வெளியானது,
இதில் மொத்தமே 100 நாள் ஓடிய படங்கள் 9 மட்டுமே,
இந்த 9 படத்திலும்
ஒரு தியேட்டரில் மட்டும் 100 நாள் ஓடிய படங்கள்
இரு மலர்கள் : வெலிங்டன் மட்டும்
ஞான ஒளி : பிளாசா மட்டும்
குலமா குணமா :பிளாசா மட்டும்
தவப்புதல்வன் :பைலட் மட்டும்
சொர்க்கம் : தேவி பாரடைஸ் மட்டும்
இரண்டு தியேட்டர் 100 நாள் படங்கள்
ராஜா : தேவி பாரடைஸ், ராக்சி
கந்தன் கருணை : சித்ரா, சயானி
நான்கு தியேட்டர் 100 நாள் ஓடிய படம்
சிவந்த மண் மட்டும்
இதில் இந்த செத்த மண் படத்தைப் பற்றி பேசும் படம் பத்திரிக்கை போட்ட விமர்சனம் என்ன தெரியுமா?
போட்ட முதலை எடுப்பதற்கே இந்த படம் வெள்ளி விழா ஓடினாலும் சாத்தியம் மிகவும் குறைவு காரணம் 80 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்
அப்படியிருக்க 50 நாளைக்குப் பிறகு குளோப் அரங்கில் இப்படி ஆளில்லாமல் ஓட்டுகிறீர்களே என்று கேட்டதற்கு 84 பைசா டிக்கெட்டிற்கு மட்டும் கொஞ்சம் ஆள்கள் வருகிறது,
தியேட்டர் வாடகையும் வருகிறது என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்,
இந்த செய்தி அப்போதைய திரை உலக பத்திரிக்கையிலும் வெளி வந்தது, என்னிடமும் காப்பி உள்ளது,
1965 முதல் 77 வரை சாந்தி யில் வெளியான சிவாஜி படம் மொத்தம் 34 படங்கள்,
இதில் 100 நாள் ஓடிய படங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
21 படங்கள் 100 நாள்
இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் சாந்தி அரங்கம் எப்படிப்பட்டது??!!!
இவர்கள் காட்டும் வசூல் விபரங்கள் எப்படிப்பட்டது என்பதை ?!
தலைவரின் பக்தன்...
ஜே. ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...
-
விஜயா இன்டர்நேஷனலின் தயாரிப்பான "நம்நாடு"
தலைவர் நடித்த படங்களில் தனி இடத்தை பிடித்தது என்றே சொல்ல வேண்டும்.அதோடு மோதவந்த "சிவந்த மண்" அதன் தயாரிப்பாளர் உட்பட பலரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியது என்றால் அது மிகையாகாது. நம்நாட்டில் தொடங்கிய பருவகால (வசூல்) மழை சிவந்தமண்ணை சேறாக்கி சின்னாபின்னமாக ஆக்கிவிட்டது. எத்தனையோ பேர் ஸ்ரீதரிடம் எடுத்துச் சொல்லியும்
கேட்காமல் அவர் அந்தப் படத்துக்காக மெனக்கெட்டு கண்மூடித்தனமாக செலவு செய்து மிகுந்த பேராபத்தில் சிக்கி கொண்டார்.
படத்தை வெளியிட்ட முதல் வாரத்திலேயே படத்தின் முடிவு தூத்துக்குடியில் தெரிந்து விட்டது. "சிவந்தமண்" கூட வெளிவந்த "நம்நாடு" முதல் வாரத்திலேயே வெற்றிக்கொடியை பறக்க விட்டது. மிகவும் அதிகமான செலவில் எடுக்கப்பட்ட "சிவந்தமண்ணை" சிதறடித்து வெற்றி கொண்டது குறைந்த நாட்களில் சொற்ப செலவில் எடுக்கப்பட்ட "நம்நாடு". இருப்பினும் 100 நாட்கள் ஓடவே தடுமாறிய "சிவந்தமண்ணை" வெள்ளிவிழா ஓட்ட பயன்படுத்திய ஸ்டெச்சர், வடக்கயிறு எதுவுமே பலனளிக்காமல் நியூகுளாப் தியேட்டரில் குப்புற கவிழ்ந்து கைபிள்ளைகளின் சோகத்தை அதிகப் படுத்தியது.
ஈரமண்ணை "சிவந்தமண்ணா"க்கிய
கண்ணீர் கதை கைபிள்ளைகளுக்கு மிக்க அதிர்ச்சியை கொடுத்தாலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குற கைபிள்ளைகள்தானே, இதையும் தாங்கி கொண்டதில் வியப்பேதுமில்லை. இதிலிருந்தே 'சிவந்தமண்" ஒரு படு தோல்விப்படம் என்பது ஊர்ஜிதமாகிறது. 80 லட்சம் செலவில் தமிழில் தயாரான. சிவந்தமண்" தயாரிப்பாளர் தலையில் ஈரமண்ணை கொட்டி 20 லட்சம் கூட வசூலாகாமல் "நம்நாட்டி"ன் காலடியில் வீழ்ந்தது.
"அடிமைப்பெண்ணு"டன் வசூலை ஒப்பீடு செய்தால் ஏன் "நம்நாடு" என்னவாயிற்று என்றவர்களுக்காக "சிவந்தமண்ணை" "நம்நாடு" வசூலுடன் சேர்த்து பார்க்கலாம்.
"சிவந்தமண்" யூனிட்டின் விமானக்கட்டணம் கூட
திரும்பக் கிடைக்கவில்லை என்ற பேச்சு வெளிவந்தது நினைவிருக்கலாம். ஆனால் "நம்நாடு" வெளிநாடு செல்லாமல் உள்நாட்டிலேயே புரட்சி நடிகரின் நடிப்பாற்றலால் வெளிவந்து வெற்றிக்கொடியை உயர்த்தி பிடித்த காட்சியை பலரும் புருவங்களை உயர்த்தி பார்க்க வைத்தது என்றால் அது மிகையாகாது.
அந்த மூன்றெழுத்தில்(எம்ஜிஆர்) தமிழக மக்கள் மூச்சிருக்கும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய உன்னத திரைப்படம்தான் "நம்நாடு". நினைத்ததை 'நடத்தியே முடிப்பவன் நான் நான்' எனறு தலைவர் பாடும் பாடலின் உள்ளர்த்தம் யாருக்கு புரிகிறதோ இல்லையோ மாற்று முகாம் அணியினருக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும். முதல் வாரத்திலேயே "சிவந்தமண்" திரையிட்ட திரையரங்கு காற்று வாங்க ஆரம்பித்ததை பொருட்படுத்தாமல் வடக்கயிறு சகிதம் லட்சிய வேகத்துடன் அவர்கள் சென்றதை பார்க்கும் போது நாட்டை பேரழிவில் இருந்து காக்க செல்கிறார்களோ என்று நீங்கள் தவறாக நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
அதிலும் ஒரு கைபுள்ளை "சிவந்தமண்" ஒரு சிறந்த தேசபக்தி படம் என்று குறிப்பிட்டதை எண்ணி அழுவதா? சிரிப்பதா? ஒண்ணும் புரியவில்லை.தேசபக்தி என்று எதை சொல்கிறார்கள். "நாடோடி மன்னனி"ல் முதல் காட்சியிலேயே மக்கள் போராட்டத்தை மையமாக காட்டியிருப்பார்கள். "அடிமைப்பெண்ணி"லும் மக்கள் போராட்டத்தை தலைவர் காட்டியிருப்பார். ஆனால் "சிவந்தமண்ணி"ல் நண்பன் சிந்திய ரத்தத்திற்கும், "தர்மம் எங்கே"யில், குடும்பச்சண்டையையும், பதவிச்சண்டையையும் காண்பித்து விட்டு தேசபக்தி என்று சொல்வது வெகு காமெடியான ஒரு விஷயம்.
அதிலும் இன்னொரு கைபிள்ளை "சிவந்தமண்ணி"ற்கு பிறகுதான் எல்லோரும் வெளிநாட்டில் படமெடுக்கவே ஆரம்பித்தார்களாம். அண்டப்புளுகன் என்பார்களே? அது இதுதான். எப்படி 6 கஜம் போர்வையில் அய்யனின் அண்டாவயிறை மறைக்க முடியாதோ அது போலதான் இந்த அண்டப்புளுகும். "சிவந்தமண்ணி"ன் படுதோல்விக்குப்பின் 4 ஆண்டுகளாக எந்தப்படமும் வெளிநாட்டில் எடுக்கப்படவில்லை "வாலிபனை" தவிர. "வாலிபனி"ன் நிகரற்ற வெற்றிக்குப்பின்தான் வெளிநாட்டில் தமிழ்ப்படம் எடுக்க ஆரம்பித்தார்கள். தனக்கு "பாரத்" பட்டம் கிடைக்காது என்பதை முன்னமே அறிந்து கொண்ட அய்யன் தனது பெயரை 'பாரத்' என்று வைத்துக் கொண்டு செய்யும் வீரதீர சாகசச் செயல்கள் சொல்லி மாளாது.
"அந்நியன்" படையெடுத்தால் பதுங்கி திரியும் இவர்கள் அந்நிய மண்ணில் எடுத்த ஆபாச படத்துக்கு போர்க்கால அடிப்படையில் வடக்கயிறும் ஸ்டெச்சருமாக அலைந்தது அருவருப்பை தந்தாலும் அவர்கள் வேட்கையை எண்ணிப் பார்க்கையில் சற்று பரிதாபமாகத்தான் தோன்றியது. சச்சுவை வேறெந்த படத்திலும் இவ்வளவு கவர்ச்சியாக ஆடவிட்டது கிடையாது. ஒருவேளை சிவந்த தேசத்தை காப்பாற்றுவதற்காக சச்சு குனிந்து, நிமிர்ந்து, வளைந்து, நெளிந்து ஆடியதை தேசபக்தி டான்ஸ் என்று கைபுள்ளைங்க சொல்லியிருக்கலாம்.
சிவாஜியால் படத்தை காப்பாற்ற முடியாது என்பதை அறிந்த ஸ்ரீதர் சச்சுவுக்கு உடல் முழுவதும் மேக்கப் போட்டு கவர்ச்சி பாடல் காட்சியை வைத்து காப்பாற்றி விடலாம் என நினைத்ததில் வியப்பில்லை. அந்த பாடல் காட்சி முடிந்ததும் இருந்த ஒருசிலரும் தியேட்டரை விட்டு வெளியேறுவதை பார்த்ததும்தான் புரிந்தது. மற்றொரு காட்சியில் மேஜிக் ராதிகாவை கவர்ச்சி உடையில் ஆடவிட்டு, ஆனால் அதில் வரும் பின்னணி இசை அற்புதம், படத்தை ஒப்பேத்தி விடலாம் என்று நினைத்ததோடு நில்லாமல், கலர் கதாநாயகி காஞ்சனாவை படத்தின் கதைப்படி இளவரசியை, ஆபாசமாக ஜிகு ஜிகு டைட் பேண்ட்டில் ஆட வைத்த கொடுமையை சொல்லவோ?அது சுகமான கதையல்லவோ? இதுவும் படத்தை காப்பாற்றும் என்று நினைத்தார்கள்.
க்ளைமாக்ஸில் சிவாஜியின் கொடூரமான நடிப்பை பார்க்க தியேட்டரில் ஆளே இல்லை. இதில் பலூன் சண்டை வேறு. அதற்கு நம்பியாரை விரட்டிச்சென்று பலூனில் ஏறி பலூனை கிழித்த பின்தான் பலூன் கீழே இறங்குமாம். கீழே இருந்து ஒரு கத்தியை விட்டெறிந்தாலே பலூன் தன்னால் இறங்கி விடும். இந்த ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்து சொன்ன கதாசிரியர் வாழ்க! இதே போல ஒரு காட்சியை "லிங்கா"வில் வைத்து படத்துக்கு சங்கு ஊதினார் ரவிகுமார்.
இதுபோன்ற அறுவை காட்சிகள் படத்தின் தோல்விக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. எல்லோரும் இறுதி காட்சிவரை இருக்காமல் கைபிள்ளைங்க உட்பட தியேட்டரை காலி செய்து அடுத்த காட்சிக்கு டிக்கெட் கிழிக்கும் பணியில் துரிதகதியில் ஈடுபட்டதை பார்க்கும் போது புல்லரித்து போய்விடும் நமக்கு. கவர்ச்சிக்காக ஒரிரு வாரங்கள் ஓடியதும் படம் சண்டிமாடு படுத்ததை போல படுத்துக்கொண்டு அழிச்சாட்டியம் பண்ணியது.
அதன்பிறகு icu வில் இருந்த பேஷண்ட் போல தீவிர கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு பிறகு கோமா ஸ்டேஜிக்கு போய் ஸ்டெச்சரில் தூக்கி வைத்துக் கொண்டு "வசூல் ராஜா எம்பிபிஎஸ்ஸி"ல் வரும் கோமா நோயாளி போல கணேசன் ரசிகர்கள் தூக்கிக் கொண்டு அலைந்ததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் "மனதுக்குள் மத்தாப்பூ"
தோன்றி "புன்னகை பூ"க்க வைக்கிறது. 100 நாட்கள் ஸ்டெச்சர் தூக்கிய களைப்பில் கைபுள்ளைங்க வெகுநாளாக ஓய்வெடுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்..........ksr.........
-
19.11.2020இன்று...
முன்னாள் பிரதமர் அன்னை
"இந்திரா காந்தி" பிறந்தநாள்....
புரட்சி தலைவர் நிர்வாக திறமைக்கும், சாதுர்யத்திற்க்கும் மற்றுமொறு எடுத்துக்காட்டு.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தின் நினைவுகளை சுருக்கமாக பதிவு செய்கிறேன்...
ஆந்திரா மாநிலத்தில் புரட்சி தலைவரை
பின்பற்றி நாமும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது திரு.என்.டி.ஆர்
அவர்களின் லட்சியம்.
பிறகு எம். ஜி. ஆர் அவர்களிடம் ஆலோசனை பெற்று தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார் என்.டி.ஆர்
அவர்கள்.
பின்பு புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை பார்த்து நன்றி
தெரிவிக்க வேண்டும் என்று புரட்சி தலைவர் அவர்களை சந்தித்து பேசினார்
என்.டி.ஆர்.
பேச்சுவார்த்தையின் பொழுது நான் வெற்றி பெறுவதற்க்கு உங்களின் ஆலோசனை பெரிதும் முக்கிய உதவியாக இருந்தது
தங்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று
நினைக்கிறேன்.என்ன உதவி வேண்டும்
கேளுங்கள் என்று என்.டி.ஆர் கேட்க?
மக்களின் நலனை மட்டுமே நினைக்கும்
நமது புரட்சி தலைவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
எனக்கு என்ன உதவி தேவையிருக்கு?
எனது கடமையை செய்தாலே போதும்.
ஆனாலும் நீங்கள் கேட்பதால் மக்கள் பயன்பெறும் வகையில் எனக்கு ஒரு யோசனை உள்ளது.
சென்னைவாசி மக்களுக்கு தண்ணீர் பற்றாகுறை உள்ளது.
அதற்க்காக
தங்களின் மாநிலத்தில் தண்ணீர் தேவை தன்னிறைவு அடைந்துள்ளதை
நான் அறிவேன்.
ஆகையால் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதிநீர் தந்தால் தமிழக மக்கள் பயனடைவார்கள்
என்று கேட்டார்.
தலைவர் கேட்டால் மறுப்பு ஏது?
அப்பொழுது தோன்றியதுதான் "கிருஷ்ணா நதிநீர்" திட்டம்.
கிருஷ்ணா நதிநீர் தொடக்க நிகழ்ச்சியில்
பாரத பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டால் நன்மையாக இருக்கும்
என்பது புரட்சி தலைவரின் யோசனை.
தலைவர் என்.டி.ஆர் அவர்களிடம் கூற
மறுத்தார் என்.டி.ஆர் காரணம் ஆந்திராவில் காங்கிரஸை எதிர்த்துதான் என்.டி.ஆர் அவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு எம்ஜிஆர் அவர்கள் என்.டி.ஆர்
அவரிடம் தேர்தலில் போட்டி என்பது வேறு?
நம்மை மக்கள் முதல்வர்களாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
இப்பொழுது நாம் மக்களின் முதல்வர்கள்
மக்களுக்கான நல்ல செயல்கள்
நாம் செய்ய கடமை பட்டுள்ளோம்.
மக்களுக்கான நல்ல திட்டத்தை செயல்படுத்தும் பொழுது பிரதமர் தலைமையில் துவங்கினால் நன்மையாக இருக்கும் என்று தெளிவுபடுத்த ஏற்றுக்கொண்டார்
என்.டி.ஆர்.
அப்படி துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் இந்திரா காந்தி கையினால் "கிருஷ்ணா நதிநீர்" திட்டத்துக்கு முதல் தவணையாக ரூபாய் 30 கோடிக்கான காசோலையை வழங்கினார் நமது புரட்சி தலைவர்.
Remembering The IRON LADY , INDIRA GANDHI 103th Birth Anniversary
தியாகத்தலைவியை வாழ்த்துவோம்.........Ml.Jn...
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*16/11/20* அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றி யாராவது தவறாக பேசினாலோ, இழிவாக பழித்தாலோ, யாராவது தகுந்த காரணமின்றி விமர்சித்தால் அவரது பக்தர்கள், ரசிகர்கள், ஏன் பொதுமக்கள் கூட கோபம் அடைந்தார்கள் .* அதற்கு காரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறேன்.* 1968ல் வெளியான பணமா பாசமா இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று வெள்ளிவிழா கண்டது .* அதன் வெற்றி விழா ஆசியாவின் மிக பெரிய திரை அரங்கான மதுரை தங்கத்தில் நடைபெற்றது .* *கோபாலகிருஷ்ணன் விழாவை கொண்டாடுவதற்காக* புதிய கார் ஒன்றை வாங்கி ,சென்னையில் இருந்து மதுரைக்கு பயணித்தார் .* அந்த விழாவில் நடிகர் ஜெமினி கணேசன், நடிகை சரோஜாதேவி போன்றவர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கோபாலகிருஷ்ணன் எனது இயக்கத்தில் வெளிவந்த பணமா பாசமா படம் ,தமிழகத்தின் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டவர்களின் படங்களை* *வென்று புதிய சகாப்தம் படைத்தது .* என்னுடைய படத்தின் வெற்றிக்கு நிகர் வேறு யாருமில்லை நான்தான் என்று கனத்த குரலில் உணர்ச்சி போங்க பேசினார் .பலத்த கைதட்டல்கள், ஆரவாரங்கள். மெய்சிலிர்த்து போனார் கோபாலகிருஷ்ணன் .அப்படியே ஏகாந்தமாகிவிட்டார். தமிழ் திரையுலகமே தன்னுடைய காலடியில் கிடப்பதாக ஒரு நினைப்பு .* விழா முடிந்து அரங்கை விட்டு வெளியேறுகிறார் சென்னையில் இருந்து பயணித்து வந்த புதிய கார் நொறுங்கி போய் கிடக்கிறது உடனே அரங்க மேலாளரை சந்தித்து விசாரிக்கிறார் .* எங்கே எனது புதிய காரை காணவில்லை என்று கேட்க. மேலாளர் இதோ உங்கள் கார்தான்* நொறுங்கி கிடக்கிறது என்று காட்டுகிறார் .**
மன்னாதி மன்னன், வசூல் மன்னன் என்று பெயர் கொண்டவர்களின் படங்களை என்னுடைய படம் வென்றுள்ளது வசூலில் சாதனை புரிந்துள்ளது என்று சொன்ன வார்த்தைகள் மதுரைவாழ்* எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பக்தர்கள் உள்ளங்களை காய படுத்தி உள்ளது . அந்த வார்த்தைகளின் விளைவு, தான் விருப்பப்பட்டு, ஆசைப்பட்டு, வாங்கிய புதிய கார்* சின்னா பின்னமாக நொறுக்கப்பட்டுள்ளது .அதை கண்டு பதறி போன கோபாலகிருஷ்ணன் ,ஐயோ, நான் சொல்லக்கூடாததை சொல்லவில்லையே. நான் இயக்கிய*படம் வெற்றி அடைந்தது பற்றிதானே* பேசினேன் . அதனால்*யார் மனமோ*புண்பட்டுவிட்டதே என்று நினைத்து ஓடோடி வந்து அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவை*சந்தித்தார் .* என்னுடைய பணமா பாசமா*படத்தின் வெற்றிவிழாவில் மதுரை*தங்கம் அரங்கில்*நான் சில கருத்துக்களை வெளியிட்டேன்.* எம்.ஜி.ஆர். ரசிகர்கள் நான் தவறாக பேசிவிட்டதாக கருதி, என் காரை அடித்து சுக்கு*நூறாக*நொறுக்கிவிட்டார்கள் .என்று புகார் தெரிவித்தார்.*பேரறிஞர் அண்ணாவிற்கு எம்.ஜி.ஆர். வேண்டப்பட்டவர் என்பதால் ஒருவேளை இது குறித்து*முதல்வர் அண்ணா*நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவாரோ என்ற கவலையுடன் வீட்டுக்கு திரும்பினார் .*
சில நாட்கள் கழித்து வேறு ஒரு காரில்*இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்*குற்றாலம் சென்றார் . அங்கு அருவிகளில் குளிக்கும்போது யாரோ சிலர் தன்னை* கூர்ந்து**கவனித்து கொண்டிருப்பதை உணர்ந்தார் .* சில* முரட்டு ஆசாமிகள் இவர் லாட்ஜுக்கு , கோயிலுக்கு* ஓட்டலுக்கு எங்கு போனாலும்*தொடர்ந்து வந்து பின்பற்றி கண்காணித்து கொண்டிருந்தார்கள் .* இதுபற்றி முதல்வர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு*விசாரித்தபோது, முதல்வர் அண்ணாதான் பாதுகாப்பிற்காக சிலரை*அனுப்பி கண்காணிக்க சொன்னாராம் . அதாவது எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்ற போர்வையில்*விஷமிகள்*யாராவது*தொல்லை தராமல் இருக்க பேரறிஞர் அண்ணா*பாதுகாவலர்களை அனுப்பினாராம் .* இந்த விஷயங்கள் அறிந்ததும், கோபாலகிருஷ்ணன் ,அண்ணாவை*நேரில் சந்தித்து,* தங்களின் பாதுகாப்பு செயல்பாடுகள் என்னை மிகவும் நெகிழ செய்துவிட்டன. மிகவும் நன்றி ஐயா என்று குறிப்பிட்டாராம் .* தம்பி. எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. தெரிந்தாலும் அவர் கோபப்பட்டிருக்க மாட்டார். எதற்கும் நீங்கள் ஒன்று செய்யுங்கள். நீங்கள் தம்பி எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிடுங்கள். எல்லாம் சகஜ நிலைக்கு வந்துவிடும் என்று யோசனை தெரிவித்தாராம் .அதன்படி வந்த அறிவிப்புதான்* கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்குவதாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவாக இருந்த படம் தங்கத்திலே வைரம் .* விளம்பரம் வெளியானதோடு சரி. படம் வெளியாகவில்லை .**.
.திரு.கா. லியாகத் அலிகான்*:* தான் முதல்வராகிவிட்டோமே ,சரி,அதைப்பற்றி என்ன கவலை என அவர் நினைத்ததில்லை. வீட்டில்*ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைத்தால் ஓய்வெடுப்பார். ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய உடலை*ஆசுவாசப்படுத்தி, உற்சாகப்படுத்தி கொண்டால்*மீண்டும் உழைத்து ,உடல் களைப்பே*அடையாத வகையில்*உழைப்பார். அந்த உழைப்பு அனைத்துமே*இந்த நாட்டு மக்களுக்காக, தொண்டர்களுக்காக, ஏழை எளியவர்களுக்காக மட்டுமே இருக்குமே ஒழிய, வேறு யாருக்காகவும் இருக்காது .அப்படிப்பட்ட தலைவர்தான்*,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை*நடந்த*பின்னர் முறையாக ஒய்வு எடுத்திருக்க வேண்டும் . எப்படி பேரறிஞர் அண்ணா*அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்று திரும்பிய பின்னர் மருத்துவர்கள் அறிவுரைப்படி*முறையாக ஒய்வு*எடுக்காது ,தொடர்ந்து உழைத்த*காரணத்தால் அந்த நோயின் தாக்கம் தீவிரமடைந்து* அவர் நம்மைவிட்டு வெகு விரைவில் பிரிந்துவிட்டார் .* அவருடைய 60 வது*வயதிலேயே அவர் மறைய நேரிடும்*நிர்பந்தத்திற்கு உள்ளானார் .*அதே போல அமெரிக்க மருத்துவர்களும், ஜப்பான்*டாக்டர் கானு* போன்றவர்கள் எவ்வளவோ* .எடுத்து சொல்லியும்** நான் உழைப்பேன்*, உழைப்பேன் ,இந்த நாட்டு மக்களுக்காக நாள்தோறும் உழைத்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி தேனீயை போல் உழைத்தார் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். தலைமை கழகத்தில் அவர் நேரில் வந்து தொண்டர்களிடம், மனுதாரர்களிடம் விண்ணப்பம் வாங்க வேண்டிய* அவசியமே கிடையாது .ஆனால் வாங்கினார் ..* கோட்டைக்கு சென்றால்,அங்கு பிற்பகல் 1 மணி வரை பணியாற்றிவிட்டு, 1.30 மணியளவில் தலைமை கழகத்திற்கு தலைவர் நிச்சயம் வந்துவிடுவார் என்று ஏங்கி காத்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான தொண்டர்களை வரிசையாக நிறுத்தி ,*அந்த கூட்டத்திலே அனைவரையும் அழைத்து பேசுவார். நலம் விசாரிப்பார் .அந்த நேரத்தில் மதிய உணவை பற்றிக்கூட கவலைப்படாமல் பேசி கொண்டிருப்பார் .* அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான தொண்டர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும்* விஷயத்தில்தான் அதிகம் அக்கறை காட்டுவார். அதிலேதான் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படும் .* அன்றைய கால கட்டத்தில் இப்படிப்பட்ட கூட்டங்களில் செல்வி ஜெயலலிதா அவர்களும் கலந்து கொள்வார் . தலைவர் அவருக்கு யோசனைகள் சொல்லி தொண்டர்களின் குறைகள் நிறைவேறும் வகையில் உத்தரவுகள் பிறப்பித்து கொண்டிருப்பதை பல சமயங்களில் நானே நேரில் கண்டிருக்கிறேன் .**
*ஒருமுறை கடலூரை சார்ந்த நண்பர் ஒருவருக்கு எஸ்.ஐ.பதவி தேர்வில் குறைபாடு ஏற்படுகிறது .* தலைவரை பார்த்து, இந்த விஷயத்தில் இவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது அண்ணே என்று சொன்னபோது , உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு இந்த அநீதியின் தன்மையை பற்றி தெரிந்து கொண்டதோடு முடிவில் அந்த* நபருக்கு எஸ்.ஐ. பதவி தருவதற்கு தகுந்த உத்தரவு இடுகிறார்* தவறு இழைத்தவர் அதிகாரியாக இருந்தாலும் கூட அதை முறையாக விசாரித்து , கண்டித்து ,மீண்டும் தவறு நடக்கா வண்ணம் அறிவுரை சொல்லி, அந்த பதவி உரியவருக்கு அளிப்பதில்*முன்னுரிமை தரக்கூடிய பக்குவமிக்க தலைவர் எம்.ஜி.ஆர்* அவர்கள் .அந்த எஸ்.ஐ.அவர்கள், செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வளர்ந்து,எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார் .* அந்த அநீதியை அங்கேயே தடுத்து அவருக்கு உத்யோகம் தரப்படாமல் இருந்து இருந்தால் ,அவர் வாழ்க்கையில் இந்த அளவிற்கு உயர்ந்த நிலைக்கு வந்திருக்க மாட்டார் .அதற்கு நல்ல முடிவு எடுத்து பேருதவி புரிந்தவர் புரட்சி தலைவர் .இப்படி மக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில்தான் அவருக்கு உற்சாகமும், திருப்தியும் ஏற்படும்* இதனால் அவர்* உள்ளமெல்லாம் பூரித்து,உடலெல்லாம் களைப்பு அடையும் வகையில் உழைத்து* பசி வேளையில் அதை கூட மறந்து செயல்பட்ட பாங்கினை நாங்கள் எல்லாம் கண்டு வியப்பு அடைந்திருக்கிறோம் .* அவரோடு, பழகினோம். வாழ்ந்தோம் என்கிற வாய்ப்பு கிடைத்தது பற்றி மிகவும் பெருமை அடைகிறேன் .* பழகுகிறவன் என்று சொல்வதால் , நான் தலைவருடன் மிக சரிசமமாக பழகியதாக நீங்கள் யாரும் தவறாக எடுத்து கொள்ள கூடாது .* எங்களை பொறுத்தவரை தலைவருக்கு நாங்கள் எல்லாம் தொண்டர்கள்தான் .அந்த தொண்டர்களுக்கு தலைவர் மரியாதை செய்வார். மகத்துவம் கொடுப்பார் .* அநீதி இழைக்கப்பட்ட எஸ்.ஐக்கு*தலைவர் பதவி அளித்தார் என்று நான் குறிப்பிட்டேன் அல்லவா. அவர் பெயர் இப்போதுதான் ஞாபகம் வருகிறது அப்துல் கனி என்று .* அந்த அப்துல் கனியை அழைத்து கொண்டு வந்து, முருகுமணி என்பவர் என்னை கேட்டு கொண்ட காரணத்தால் புரட்சி தலைவரிடம் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி முறையிட்டேன் .* அன்றைக்கு அந்த அநீதியை தடுத்து அவருக்கு முறையான*பணி உத்தரவை பிறப்பித்த தலைவர்தான்ஏழை எளியோரின் இதயங்களில் மட்டுமின்றி* எல்லா இன மக்களின் நெஞ்சங்களில் மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .* தலைவரை பற்றி குற்றம் குறை சொல்லிவிட்டு யாரும்* சென்றுவிட முடியாது . அந்த அளவிற்கு மாற்று முகாம்***நண்பர்கள் கூட புரட்சி தலைவரை மதிக்கிறார்கள் என்று சொன்னால் அமரர் ஆகிவிட்டார் தலைவர் எம்.ஜி.ஆர். அமரர் ஆகிவிட்டார் ஜெயலலிதா, அமரர் ஆகிவிட்டார் கருணாநிதி ஆதலால், அ.தி.மு.க.வினர் கருணாநிதியின் மறைவிற்கு தி.மு.க. தலைவர் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார்கள் .அதே போல ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு தி.மு.க.வில் இருந்து தலைவர்கள் வந்து துக்கம் விசாரித்தார்கள் .* அதே போல தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் மறைந்தபோது, அதிகாலையில் கருணாநிதி ,ராமாவரம் தோட்டத்திற்கு சென்று அன்னை ஜானகி அம்மையாரிடம் துக்கம் விசாரித்தார் .இப்படி அமரர்கள் ஆகிவிட்ட தலைவர்களை பற்றி பெரிதாக* விமர்சனம் செய்யாத நாகரிகம் மிகுந்த இந்த கால கட்டத்தில் முரசொலியில்* இன்றைக்கு*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி மிகவும் கேவலமாக ,கிண்டல், கேலி செய்துமீண்டும்* விமர்சிக்கிறார்கள் என்று சொல்லும்போது எனக்கு அவர்கள்மீது வருத்தமாக இருந்தது . எனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.துரை பாரதி அவர்களிடம் சொல்லி இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கடந்த பேட்டியில்* நான் வருத்தப்பட்டு கொண்டேன் .* இதுபோன்ற நிகழ்வுகளை, மறைந்த தலைவர்களை, பெருந்தலைவர் காமராஜர் , பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி போன்றவர்களை விமர்சனம் செய்திருக்கிறார்கள் . பேரறிஞர் அண்ணாவே, காமராஜரை விமர்சனம் செய்திருக்கிறார் .* ராஜாஜி அவர்களை அண்ணா செய்திருக்கிறார் .* அவர்களும் திரும்பி பேரறிஞர் அண்ணா அவர்களை விமர்சித்து இருக்கிறார்கள் .* அனால் தலைவர்கள் மறைந்த பிறகு யாரும் விமர்சனம் செய்வதில்லை .* காமராஜர் அங்கிருந்தபோது அவருடைய செல்வாக்கு உயரும் வகையில் காங்கிரஸ் கட்சி பாடுபட்டால் தவறில்லை .அதை வரவேற்கலாம் .* ஆனால் தி.மு.க.வே* காமராஜர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பியதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா .குடியாத்தம் தொகுதியில் காமராஜர் நிற்கிறார். வென்று முதல்வரும் ஆகிவிட்டார் .* அரசியல் சட்டத்தில் முதல்வராக தேர்வு ஆகுவதற்கு 6 மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த வகையில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டபோது ,பேரறிஞர் அண்ணா அவருக்கு ஆதரவு தரும் வகையில் தி.மு க. அந்த தொகுதியில் போட்டியிடாது என்று அறிவித்தார் . அன்றைக்கு காமராஜர் வெற்றி பெற**பெரிதும் துணை புரிந்த பேரறிஞர் அண்ணாவின் நாகரிக செயலை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.*காமராஜருக்கு சிலை வைக்க செய்தவர் பேரறிஞர் அண்ணா என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் .* தந்தை பெரியாரை எடுத்து கொண்டால், காமராஜரை பச்சை தமிழன் என்றதோடு, அவர் ஆட்சியில் அமர்ந்ததால்தான் குழந்தைகள் பள்ளிக்கு தரவும், படிக்கவும் முடிந்தது .* அதே போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், காமராஜரின் மதிய உணவு திட்டம் இடையில் நிறுத்தப்பட்ட போது 1982ல் சத்துணவு திட்டம் என்று அமுல்படுத்தினார்*இந்த திட்டத்தை அமுல்படுத்த அரசிடம் பணமில்லை என்று தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அரசு அதிகாரிகள் சொன்னபோது , நான் பிச்சை எடுத்தாவது, வீடு வீடாக சென்றாவது, இந்த இளம் குழந்தைகள், பிஞ்சுகள் படித்து முன்னேற பாடுபடுவேன் . *அதற்கு பசி ஒரு தடையாக இருக்க கூடாது .* அந்த பசி கொடுமையால்தான் இந்த ராமச்சந்திரன் சிறு வயதில் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாமல் போனது . அந்த நேரத்தில் நானும், அண்ணன் சக்கரபாணி அவர்களும் படிப்பை தொடர முடியாமல், பசி கொடுமையால், நாடக துறையில் புகுந்து நடித்து குடும்பத்தை காக்க வேண்டிய* ஒரு சூழ்நிலை ஏற்பட்டது . அந்த நிலைமை இந்த நாட்டு மக்கள் எவருக்கும் வரக்கூடாது .**அதை நான் உருவாக்குவேன். எல்லோரையும் படிக்க வைப்பேன் என்று சொல்லி,*படித்த அனைத்து மாணவ மாணவியர் பொறியியல் கல்லூரிகளில் எளிதாக*மேற்கல்வி படிக்க ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளை செய்தவர் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். இவ்வாறு திரு. லியாகத் அலிகான் பேசினார் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.புத்தன் இயேசு, காந்தி பிறந்தது -* சந்திரோதயம்*
2.தூவானம் இது தூவானம் - தாழம்பூ*
3.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*
4..திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
**
-
20/11/20 முதல் திருச்சி அருணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தென்னக ஜேம்ஸ்பாண்டாக நடித்த"ரகசிய*போலீஸ் 115" தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .வெற்றிகரமான 2 வது* இணைந்த வாரம்*
தகவல் உதவி : மதுரை. திரு.எஸ்..குமார்.*