Oops... what a mistake,sorry pammal sir.Thanks for the correction.
Printable View
பிறந்த நாள் வாழ்த்துக்களை திரியிலும், தொலைபேசியிலும் அளித்த என் இனிய நண்பர் பம்மலார் அவர்களுக்கும், திரு. பாலகிருஷ்ணன், திரு.பிரபு குமரேஷ், மற்றும் உங்களைப் போன்ற பல்லாயிரக்கான ரசிக இதயங்களின் நட்பை எனக்களித்த விண்ணிலிருந்து எனை வாழ்த்தும் கலை தெய்வம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்ப இவ்வுலகில் என்னைப் படைத்த இறைவனுக்கும் இந்த நேரத்தில் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
இந்த நேரத்தில் என்னுடைய சில உணர்வுகளை இத்திரியில் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.
சிறு வயது முதலே நடிகர்திலகத்தின் தீவிர ரசிகராக இருந்த எனக்கு, வேலையில் சேர சென்னை வந்தபோது நடிகர்திலகத்தை நேரில் சந்திப்பேன் என்றுகூட நினைத்தது கிடையாது. ஆனால் கடவுள் சித்தம் - அவரிடமே வேலைக்கு சேரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருடைய கட்சி அலுவலகப் பொறுப்பாளாராக பணியாற்றும்போதும், அவர் அரசியலைவிட்டு விலகிய பிறகு சிறிது காலம் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்தில் பணியாற்றியபோதும், அந்த மகானுடன் பழகியது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாகும்.
பொக்கிஷப் பதிவுகளை அள்ளி வழங்கும் ரசிக மாமணிகள் உள்ள இத்திரியில் - என்னுடைய வாழ்நாள் பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாத்து வரும் மூன்றை இணைப்பாக இங்கு அளித்துள்ளேன்.
1 ) 1985 ஆம் ஆண்டு அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் அட்டையை திரு. தளபதி சண்முகம் அவர்களிடம் இருந்து பெற்றது.
http://4.bp.blogspot.com/-s-hX7Rq-Eg...ber1983-84.jpg
2 ) நடிகர்திலகத்தின் விசிட்டிங் கார்டு (அவருக்கு விசிடிங் கார்டு தேவையா என்ற கேட்பது எனக்குத் தெரிகிறது) சந்தனத்திலானது. வெளிநாடு செல்லும்போது மட்டும் உபயோகப்படுத்துவது.
http://2.bp.blogspot.com/-KAq83Scyby...ngCardofNT.jpg
3 ) 25 - 08 - 1988 அன்று நாளை எனக்கு பிறந்த நாள் என்று சொன்னபோது, தன்னுடைய புகைப்படத்தில் கையெழுத்திட்டு, வாழ்த்து தெரிவித்து, எனக்கு அளித்த புகைப்படம் இது.
http://2.bp.blogspot.com/-kXLn4eObpD...க்
நட்பு கலந்த நன்றியுடன்,
Dear chandrashekaran sir,
wish you a very happy birthday.May god give you 100 years and help you to spread the name and fame of our NT all over the world
Dear sathish,
A warm welcome to the homeland.Hope you will watch sunday evening show with much alapparai.Eagerly waiting for the sunday gala photos.
அன்புள்ள திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்களது பதிவையும், அதனூடே பதிந்த இனிய நினைவுகளையும் பார்த்து அளவில்லா ஆனந்தம் அடைந்தேன்.
வாழ்த்துக்களுடன்,
இரா. பார்த்தசாரதி
Dear Mr. Sathish,
Welcoming you back to the home land. Early awaiting to get more info.
Wishing you a memorable trip,
Regards,
R. Parthasarathy
திரு.வாசுதேவன் சார், சாந்தி திரையரங்க நிழற் படங்களை என்னால் பார்க்க இயலவில்லை. இதற்கு முன் பதிந்த பல நிழற்படங்களும் எனக்கு display ஆகவில்லை.
.
X symbol மட்டும்தான் display ஆகிறது.
தவப் புதல்வனின் சாந்திதிரையரங்கின் நிழற்படங்கள் .
தவப்புதல்வன் திரைப் படத்தில் K.R.விஜயா அவர்கள் சாந்தி திரை அரங்கில் நடிகர் திலகத்தின் 'பாபு' திரைப் படத்தை காண வருவதாக ஒரு காட்சி. அப்போது நம் சாந்தி திரை அரங்கின் அற்புத வடிவம். தியட்டேரின் மேல் முகப்பில் நம் நாட்டு தேசியக் கோடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பாருங்கள்.
http://i1087.photobucket.com/albums/..._002062074.jpg
பாபு படத்தில் நடிகர் திலகமும், விஜயஸ்ரீ அவர்களும் தோன்றும் பேனர் மற்றும் படம் பார்க்க வந்த ரசிகர் கூட்டத்தைப் பாருங்கள்.
http://i1087.photobucket.com/albums/..._002066044.jpg
சாந்தி தியேட்டரின் உள்ளே நம் அன்பு தெய்வத்தின் 'பாபு' பட ஸ்டில்களை காணுங்கள். வயதான கெட்-அப்பில் நடிகர் திலகம் இருக்கும் ஸ்டில்லும், கைவண்டியை அழகாக பிடித்திருக்கும் ஸ்டில்லும் அப்படியே அள்ளுகின்றன.
( ஸ்டில் போர்டை கண்டதும் நம் அன்பு பம்மலார் தான் நினைவுக்கு வருகிறார்).
http://i1087.photobucket.com/albums/..._002078693.jpg
http://i1087.photobucket.com/albums/..._002076491.jpg
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
தவப்புதல்வன் நிழற் படங்கள்
ஸ்டைல் பாடகர் நிர்மல்.
http://i1087.photobucket.com/albums/..._000895749.jpg
http://i1087.photobucket.com/albums/..._002758075.jpg
தான்சேன் புலவரின் கம்பீரத் தோற்றம்.
http://i1087.photobucket.com/albums/..._002009318.jpg
http://i1087.photobucket.com/albums/..._001899331.jpg
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Message posted by our beloved Ramajayam Sir in another thread, and brought here.Quote:
dear raghavendran
Thank you very much for inviting my paricipation in the hub most of our friends pammalar murali vasudevan are contributing more inf apart from yours and hub going very good nowadays. however I will also soon take active participation.
recent editions are wonderful. my birthday greetings to sovaji peravai secretary; mr chandrasekaran.
hope SIVAJI's manimandapam plans will take a shape into reality in th coming days. LET US WORK HARD TO ACHIEVE THIS OBJECT IT SHOULD BE OUR GOAL.
WITH GREETINGS
RAMAJAYAM
Thank you Sir,
Raghavendran
Dear Vasudevan,
Your images of Thavapudhalvan are fantastic. Particularly the national flag flying on the mast of Shanti Theatre. I presume it might have been the Republic Day of 1972, and 101st Day of Babu (18.10.1971 date of release), the day of release of RAJA. Because those days national flag were hoisted only on Republic Day and Independence Day.
Thank you for the superb stills
Raghavendran
டியர் வாசுதேவன் சார்,
"தாயே உனக்காக" திரைக்காவியம் குறித்த கண்ணோட்டம், கிடைத்தற்கரிய பாடலின் வீடியோ மற்றும் நிழற்படம் அனைத்தும் மிக அருமை !
"பாபு" திரைக்காவியத்தை 'சாந்தி'யில் பார்க்க வந்தார் கே.ஆர்.விஜயா. 'பைலட்'டில் வெளியான "தவப்புதல்வன்" திரைக்காவியத்தை 'சாந்தி'யில் மறுவெளியீடு செய்து அனைவரையும் பார்க்கவைத்துவிட்டீர்கள் நீங்கள் !
"தவப்புதல்வன்" ஆல்பம் பிரமாதம் !
பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! நன்றிகள் !!!
அன்புடன்,
பம்மலார்.
டியர் பாலா சார்,
தாங்கள் அளித்துள்ள சுட்டிக்கும், பதிவுகளுக்கும் முத்தாய்ப்பான நனறிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
"சாணக்கிய சந்திரகுப்தா" Stills மற்றும் Facts எல்லாம் கிடைத்தற்கரியவை. நன்றி கலந்த பாராட்டுக்கள் !
Dear Ramajayam Sir,
My sincere thanks for your whole-hearted praise !
Eagerly looking forward to your posts !
அன்புடன்,
பம்மலார்.
டியர் சந்திரசேகரன் சார்,
Once again a Very Very Happy Birthday to You ! Many Many More Happy Returns !
பிறந்தநாள் வாழ்த்துக்களை இங்கே நாங்கள் உங்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்க, பதிலுக்கு தாங்கள் நன்றி தெரிவித்ததோடு தங்களிடம் மிகப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த ஈடு-இணையற்ற பொக்கிஷங்களை இங்கே எங்களுக்கு தங்களது பிறந்தநாள் அன்பளிப்புகளாக அளித்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்களே !
தங்களுக்கு நமது திரியின் சார்பில் பொன்னான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
தவப்புதல்வன்
[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி
அரிய நிழற்படங்கள்
பேசும் படம் : ஏப்ரல் மலர் 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4439a-1.jpg
ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் : பிலிமாலயா : 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4443a-1.jpg
அடுத்த பதிவில் நிறைகிறார்...
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
தவப்புதல்வன்
[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி
அரிய நிழற்படங்கள் : பேசும் படம் : மே 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4441a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4450a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
சாணக்கிய சந்தரகுப்தா(தெலுங்கு)
[மாமன்னன் அலெக்ஸாண்டராக கௌரவத் தோற்றம்]
[25.8.1977 - 25.8.2011] : 35வது ஆண்டின் தொடக்கம்
காவிய விளம்பரம் [மொழி மாற்றம்/Dubbing]
http://i1094.photobucket.com/albums/...EDC4451a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
என் மனமார்ந்த நன்றிகள்! தங்களின் சாணக்ய சந்திரகுப்தா பற்றிய நிழற் படங்கள் மற்றும் பட விவரப் பதிவுகள் அனைத்தும் அருமை. நன்றி.
அன்பு பம்மலார் சார்,
எங்கள் உளம் கனிந்த பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள். தவப் புதல்வனைப் பற்றிய ஆவணப் பதிவுகள், கிடைத்தற்கரிய நிழற் படங்கள், குறிப்பாக கண்ணதாசன்,c.v.r, பாலாஜி, முக்தா அவர்களுடன் நடிகர் திலகம் சர்வ சாதரணமாய் அமர்ந்துள்ள பிலிமாலயாவின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் கண்களிலேயே தங்கி நகர மறுக்கிறது, சூப்பர்.
டியர் சந்திரசேகரன் சார்,
அற்புதமான முக்கனிகளை எங்களுக்கு உங்கள் பிறந்த நாள் பரிசாக அளித்து விட்டீர்கள். தீஞ்சுவையாக இனித்தன. நடிகர் திலகத்தை நேரிலே சந்தித்த சந்தோஷத்தை அளித்தது அவர் தங்களுக்கு கையொப்பமிட்டு அளித்த அந்த அருமையான புகைப்படம். விசிட்டிங் கார்டும் அருமை. கிடைத்தற்கரிய பொக்கிஷம். (என்ன ஒரு ரசனை அவருக்கு!) நன்றி சார்!.
அன்பு பாலா சார்,
தாங்கள் அளித்துள்ள சுட்டியும், பதிவுகளும் மறக்க இயலாதவை. நன்றி!
மற்றும் அனைத்து நல் உள்ளங்களின் அருமைப் பதிவுகளுக்கும் என்னுடைய இதய பூர்வமான நன்றிகள்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
மருத நாட்டு வீரனின் மாறு பட்ட வேடங்கள்.
http://i1087.photobucket.com/albums/...rutha_naat.jpg
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
thank u pammalar sir
all the best to shekar
Raghavendra sir
can you please add Engamama ellorum nala vala song in you tube sir
pammalar sir thank u again
முத்தான முதல் வாழ்த்தை அளித்த திரு.ராகவேந்திரன் அவர்களுக்கும், வாழ்த்தை வழங்கி பாராட்டிய நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும், திரு. பம்மலார் அவர்களுக்கும் நன்றி.
தொடரும் தவப்புதல்வன் பதிவுகள் மற்றும் சந்திரகுப்த சாணக்கியா தகவல்களுக்கு பாராட்டுக்கள்.
உலகின் முதலிசை தமிழிசையே
உலகின் முதல்தர நடிகர் நம் தவப்புதல்வனே
நடிகர் திலகமும், அவரது இனிய நண்பரும் மலையாளத் திரைப்பட நடிகருமான திரு.திக்குரிசி சுகுமாரன் நாயர் அவர்களும் இணைந்து நடித்த அற்புதமான பாடல் காட்சி. காலத்தால் அழியாத கானம். அதற்கு உதட்டசைவுகளாலும், அங்க அசைவுகளாலும் உயிர் கொடுக்கும் நடிகர் திலகம். இதோ அந்த அற்புதமான பாடல் காட்சி....
http://www.youtube.com/watch?v=PGl6v...yer_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
அன்புள்ள சந்திரசேகர் சார்,
இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். (நேற்று இணையத்துக்கு வரவில்லை. அதனால்தான் தாமதம்). தாங்கள் அளித்த பொக்கிஷங்கள் மூன்றும் அரியவை. அவற்றை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கியமைக்கு நன்றிகள். எங்கெங்கோ பிறந்தவர்களை இங்கே ஒன்றாக்கிய நடிகர்திலகம் என்னும் அன்புக்கயிறு, திருத்துறைப்பூண்டியில் பிறந்த தங்களையும் எங்களோடு இணைத்து விட்டது. இனி நம் வாழ்நாள் முழுதும் நமக்குள் பிரிவில்லை.
சிவாஜி சமூக நலப்பேரவை மூலம் தாங்கள் ஆற்றிவரும் பணிகள் அளவிடற்கரியது. பாராட்டுக்குரியது. நடிகர்திலகத்தோடு நெருங்கிப்பழகும் பேறு பெற்ற நீங்கள் எங்களில் ஒரு பாக்கியசாலி.
நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணிக்காகவே தாங்கள் பல்லாண்டுகள் வாழ வேண்டும்.
அன்புள்ள பம்மலார் சார்,
'தவப்புதல்வன்' மேளா மிக மிக அருமை. கிடைத்தற்கரிய அரிய பொக்கிஷங்களை, பல்வேறு பத்திரிகைகளில் திரட்டிவற்றை அள்ளிக்குவித்து விட்டீர்கள். விளம்பரங்கள், ஸ்டில்கள், செய்தித்துணுக்குகள், விமர்சனங்கள் அனைத்தும் மிகப்பிரமாதம். அதிலும் அனைத்து கலைஞர்களுடனும் பாலாஜி, சி.வி.ஆர். ஆகிய வெளியாரும் இடம்பெற்றிருக்கும் அந்த புகைப்படம் கண்கொள்ளாக் காட்சி.
ஆனந்த விகடன் விமர்சனம் மனதை வருத்தப்படுத்தியது. படத்தில் எவ்வளவோ சிறப்புக்கள் இருந்தும் அவற்றைக் குறிப்பிடாமல், குறைகளை மட்டும் லென்ஸ் வைத்துத் தேடியெடுத்து சொல்லியிருக்கின்றனர். அவர்களின் முகத்தில் கரி பூசுவது போல படம் 100 நாட்களைக்கடந்து வெற்றி நடை போட்டது.
இரண்டு விமர்சனங்களிலும், அசத்தலான நான்கு பாடல்களை அமைத்துத் தந்த மெல்லிசை மாமன்னரைப்பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. அன்றைய காலகட்டத்தில் தமிழ்ப்படங்களில் ஆங்கிலப்பாடல்கள் இடம்பெறுவது அபூர்வம். அதிலும் வங்கத்திலிருந்து அஜீத்சிங் என்பவரைக்கொண்டு வந்து பாடச்செய்து படமாக்கப்பட்டது.
பிற்காலத்தில் வெறும் தாரை தப்பட்டை அடித்தவர்களையெல்லாம் தலையில் தூக்கி வைத்து ஆடிய பத்திரிகைகள், நல்ல இசையத்தந்த மெல்லிசை மன்னரைக் கண்டுகொள்ளவில்லை. நடிகர்திலகத்தைப் போலவே மீடியாக்களால் வஞ்சிக்கப்பட்ட இன்னொரு சாதனையாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
எழுபதுகளின் மத்தியிலிருந்து சுமார் 25 ஆண்டு காலம் முற்றிலுமாக இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தார். இப்போதுதான் சில டிவி சேனல்கள் அவரை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.
தவப்புதல்வன் வெளியீட்டு நாள், மற்றும் 100வது நாள் விளம்பரங்கள் அருமை. தினத்தந்தியில் 50-வது நாள் விளம்பரம், தமிழ்நாட்டிலுள்ள 14 தியேட்டர் பெயர்களுடன் வெளிவந்திருந்தது நினைவில் உள்ளது.
தங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள். தந்தவைக்கும் நன்றி... தர இருப்பவைக்கும் நன்றி...
டியர் சந்திரசேகர் சார்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், வேலை பளு காரணமாக இரு தினங்களாக இங்கு வர முடியவில்லை, தாங்கள் அளித்துள்ள அறிய பொக்கிஷங்களுக்கு நன்றி!
டியர் பம்மலார் சார், வாசுதேவன் சார்,
தாங்கள் அளித்துள்ள தவப்புதல்வன் நிழற்படங்கள் பிரமாதம், குறிப்பாக கண்ணதாசன், பாலாஜி, முக்தா அவர்களுடன் நடிகர் திலகம் உள்ள ஸ்டில் அறிய ஒன்று.
வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.
நன்றி திரு.ராதா அவர்களே
Just browsing thro' the older pages of NT thread.In the part-1 one mr.nilavupriyan's post read like this:
one of my favourites is navarathiri.
nowadays all the actors are so much emphasising on changing the body.but shivaji is amazing in that movie.
1)the drunken and killer shivaji are fat
2)the maapillai is lean
3)the farmer character is round
4)the police offiecr look to be tight muscled
5)the doctor shivaji looks perfectly as an aged one
excellent......................................... .....
many of the hubbers who were there in that thread like nerd,shakthiprabha,s.balaji,stranger,m_23_bayarea are missing now.What a superb posts by all of them.I kindly request them all to come here again and share their valuable posts on NT.
திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.
http://i1087.photobucket.com/albums/..._001634850.jpg
அன்பு நெஞ்சங்களே!
மனதில் மகிழ்ச்சியும், களிப்பும், உவகையும், சந்தோஷமும் (எல்லாம் ஒன்று தானே என்கிறீர்களா?) பூரணமாய் நிறைகிறது. எதனால்?... ஆம்.திலகத்தின் புகழை திக்கெட்டும் பரப்பும் நம் திரி 'தூள்' கிளப்பிக் கொண்டிருப்பதனால். ஏழாவது பாகம். பக்கங்களோ முன்னூறைத் தாண்டி. பீடுநடை போட்டு பிரமாதப் படுத்திக் கொண்டிருக்கிறது நம் திரி.
பணிக்கு பேருந்தில் சென்றால் கூட அருகில் அமர்ந்துள்ள நண்பர் இறங்குமிடம் வந்து விட்டது என்று நினைவு படுத்தும் அளவிற்கு திரியை பற்றிய சிந்தனையே எப்போதும் எனக்கு. இரவில் உறக்கத்திலும் கூட திரியின் கனவுதான். திலகத்தைப் பற்றிய நினைவுதான்.
ஜெட் வேகம், ராக்கெட் வேகம் என்பார்களே அவர்கள் நம் திரியின் வேகத்தையும், வளர்ச்சியையும் கண்டால் என்ன சொல்வார்களோ?.
அற்புதமான ஆய்வுகள். அனுபவசாலிகளின் அலசல்கள். ஆதார பூர்வமான தகவல்கள். ஆச்சர்யமான உண்மைகள். அற்புதம்..அபாரம்...
ராப்போதும் இமை சோராமல் திரியின் பழுத்த அனுபவசாலியாய் பற்பல ஆய்வுகளையும் ,ஆவணங்களையும்,சுட்டிகளையும், நிழற் படங்களையும் நமக்களித்து விந்தைகள் பல புரியும் வித்தகர் ரசிக வேந்தர் திரு.ராகவேந்திரன் சார்.....
ஆவணச் செம்மல், ஆதாரக் குவியல்களை அள்ளித் தரும் நம் அன்பு பம்மலார் சார்...
காவிய நாயகனின் அருமைகளையும், பெருமைகளையும் காலம் தவறாமல் கவின்மிகு கட்டுரைகளில் வழங்கும் அன்பு கார்த்திக் சார் ...
பார் போற்றும் பாசமலரின் புகழை பாங்காய் எடுத்துரைக்கும் பார்த்தசாரதி சார்...
சரளமான நடையில் சரித்திரம் படைக்கும் அன்பு சகோதரி சாரதா ....
முத்து முத்தாய் வார்த்தைகளைக் கோர்த்து முடிசூடா மன்னனின் புகழை முத்தாய்ப்பாய் வழங்கும் முரளி சார் ...
சரித்திர நாயகனின் சாகசங்களை சத்தாய் நமக்கு சமர்ப்பணம் செய்யும் சதீஷ் சார்...
பாசமும் நேசமும் கலந்து பராசக்தியின் மைந்தன் புகழ் பாடும் பாலா சார்,
குவலயத்தோர் போற்றும் எங்கள் குலவிளக்கைக் கொண்டாடும் குமரேசன் சார்...
சந்தடி இல்லாமல் சாகச வித்தைகள் புரியும் சந்திர சேகரன் சார் ...
திரியில் பங்கு கொண்டு திகட்டாத தேனமுது படைக்கும் இன்னும் பல பாச நெஞ்சங்கள்... பண்பட்ட உள்ளங்கள்.
'திரி'த்தேரின் வடம் பிடிக்கும் 'வரலாற்று நாயகனின்' வஞ்சமிலா நல்இதயங்கள்
உள்ள வரை...
நமது திரி...
அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி... வற்றாத நீரூற்று..தங்கச் சுரங்கம்...வைரப் பெட்டகம்..சாதனைக்கோர் சான்று. உண்மைக்கோர் உரை கல்.
நமது திரி சரித்திரப் புகழ் பெறப் போவது திண்ணம். அது ஒன்றே நமது எண்ணம்.
எனவே தான் சொல்கிறேன்.
திருஷ்டி சுற்றிப் போடுங்கள் நமது திரிக்கு...
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களது பாராட்டுக்களுக்கு எனது அன்பான நன்றிகள் !
வீரத்திலகத்தின் "மருதநாட்டு வீரன்" - 'மாறுபட்ட வேடங்கள்' ஆல்பம் அட்டகாசம் !
ஈரேழு பதினான்கு லோகங்களிலும் முதல்தர நடிகரான நம் தவப்புதல்வனின் உயிர்ப்பான கம்பீர நடிப்புக்கு கட்டியம் கூறும் பல சிறந்த பாடல்களில், முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழும் 'உலகின் முதலிசை தமிழிசையே' பாடலின் வீடியோவை பதிவிட்டதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் ஸ்பெஷல் நன்றிகள் !
Dear kumareshanprabhu Sir, Thanks !
டியர் சந்திரசேகரன் சார், நன்றி !
டியர் ஜேயார் சார், மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
பாராட்டுக்கு நன்றி !
"தவப்புதல்வன்" விகடன் விமர்சனம் குறித்த தங்களது வருத்தம் நியாயமானது. 1970களுக்குமுன் விகடன் திரைப்பட விமர்சனங்கள் பெருமளவுக்கு neutralஆக இருந்தன. எழுபதுகளின் தொடக்கத்திலிருந்தே அந்த நடுநிலையிலிருந்து தடம் புரண்டு பெருமளவுக்கு ஒருதலைப்பட்சமான படவிமர்சனங்கள் வரத்தொடங்கி விட்டன. இதை என்னைவிட தாங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். 1970களின் தொடக்கத்தில் வெளிவந்த விகடன் விமர்சனங்களின் பின்னணி பற்றி முன்னணி எழுத்தாளர் நமது முரளி சார் ஒரு சிறப்புப் பதிவு அளிப்பார். அதில் பல்வேறு தகவல்கள் தெரியவரும்.
"தவப்புதல்வன்" விமர்சனத்துக்கு, மக்கள் விகடனுக்கு கரி பூசினர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள், உண்மை. "வசந்த மாளிகை" விமர்சனத்துக்கு சர்வதேச அளவில் சரியான சாட்டையடியே கொடுத்தார்கள் என்பது தங்களுக்கு நினைவிருக்கும். இந்தியாவில் 200 நாட்களும், இலங்கையில் பொன்விழாவும் [நேரடியாக 41 வாரங்கள் / ஷிஃப்டிங்கில் 50 வாரங்களுக்கும் மேல்] கொண்டாடிய "வசந்த மாளிகை", எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட விண்ணை முட்டும் வெற்றியையல்லவா பெற்றது.
மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி. பற்றிய தங்களது ஆதங்கமும் நியாயமான ஒன்றே. இசையமைப்பாளர்கள் என்றால் இரண்டாம்பட்சமாக நினைக்கும் எண்ணம் 1930களிலிருந்தே இருந்திருக்கிறது. தமிழ்த்திரை இசைக்கு முதல் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த திரை இசைச் சக்கரவர்த்தி ஜி.ராமநாதன் அவர்கள், 30களிலும், 40களின் தொடக்கத்திலும் இசையமைத்த படங்களில் சிலவற்றில், சங்கீத டைரக்டர்(இசையமைப்பாளர்) என்ற முறையில், அவரது பெயரை Title Cardல் காண்பிக்காமல் இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள். இதை அவரே குறிப்பிட்டு வருத்தப்பட்டிருக்கிறாராம்.
"தவப்புதல்வன்" 50வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் அவசியம் பதிவிடுகிறன்.
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
நமது திரிக்கு தாங்கள் திருஷ்டி சுற்றி போடச் சொன்னது மிகச் சரியே !
தங்களது பதிவு பிரமாதம் !
நமது திரியில் நடிகர் திலகத்தின் காவியங்கள் குறித்த பற்பல கண்ணோட்டங்கள், திறனாய்வுகள் இதுவரை பதிவிடப்பட்டிருக்கின்றன. தற்பொழுது தாங்கள் நமது திரி என்னும் காவியக்களஞ்சியத்தை-கலைப்பெட்டகத்தை-தகவல்சுரங்கத்தை-ஆவணக்காப்பகத்தை குறித்து திறனாய்வு-கண்ணோட்டம் அளித்து 'அசத்தோ அசத்து' என்று அசத்திவிட்டீர்கள் !
பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
கிருஷ்ணன் வந்தான்
[28.8.1987 - 28.8.2011] : வெள்ளிவிழா ஆண்டின் தொடக்கம்
அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/...EDC4456a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
ஜல்லிக்கட்டு
[28.8.1987 - 28.8.2011] : வெள்ளிவிழா ஆண்டின் தொடக்கம்
பொக்கிஷப் புதையல்
காவியக்காட்சிகள் : பொம்மை : 16-31 ஆகஸ்ட் 1987
http://i1094.photobucket.com/albums/...EDC4459a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4460a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/...EDC4457a-1.jpg
100வது நாள் விழா : பொம்மை : ஜனவரி 1988
http://i1094.photobucket.com/albums/...EDC4453a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
வருகிறார்.....
http://i1094.photobucket.com/albums/...EDC4461a-1.jpg
அன்பு பம்மலார் சார்,
நன்றி சார்! கண்ணைக் கவரும் அந்த ஜல்லிக் கட்டு (பொம்மை இதழ்) காட்சி உண்மையிலயே தாங்கள் கூறியிருப்பது போல ஒரு காவியக் காட்சி தான். நமது அண்ணல், நடிப்பு வள்ளல் நிற்கும் ஸ்டைலைப் பாருங்கள். முதுமை ஒரு தடை அல்ல நம் முதல் தர நடிகருக்கு. அன்றும், இன்றும் ஸ்டைல் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் அவர் ஒருவரே. இந்த போஸுக்காகவே ஆயிரம் முறை தங்களைப் பாராட்டலாம்.
"முதல்வரின் இந்த வாழ்த்து இளைய தலைமுறையினர் உற்சாகத்துடன் தொடர்ந்து வழி நடத்த உதவும்" என்ற ஜல்லிக் கட்டு 1௦௦-ஆவது நாள் விழாவில் நம் அருமைத் திலகம் அவர்கள் பேசியிருப்பது இளம் தலைமுறையினர் மீது அவர் கொண்ட அன்பையும், பாசத்தையும், அவர்கள் வளர்ச்சியின் மேல் அவருக்கிருந்த அக்கறையையும் பிரதிபலிக்கிறது. ஜல்லிக்கட்டு 100-ஆவது நாள் விழாப் பதிவுகள் மனதை விட்டு நீங்காப் பதிவுகள். ஜோராக இருந்தது,
எங்கள் ஆசை ராசாவைக் காணக் காத்திருக்கிறோம்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.