உரிமைக்குரல் நிறுவனம் எங்கள் தங்க ராஜா திரைப்படத்தை புதுப் பொலிவுடனும் முன் பதிப்பில் விடுபட்டுப் போன பாடலுடனும் சிறப்பாக மறு வெளியீடு செய்துள்ளார்கள்.
http://i872.photobucket.com/albums/a...overs/etr2.jpg
Printable View
உரிமைக்குரல் நிறுவனம் எங்கள் தங்க ராஜா திரைப்படத்தை புதுப் பொலிவுடனும் முன் பதிப்பில் விடுபட்டுப் போன பாடலுடனும் சிறப்பாக மறு வெளியீடு செய்துள்ளார்கள்.
http://i872.photobucket.com/albums/a...overs/etr2.jpg
நமது மய்யம் இணையதளத்தில் 2000 பதிவுகளை மிக வெற்றிகரமாக இடுகை செய்து பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் நமது ராகவேந்திரன் சாருக்கு பொன்னான பாராட்டுக்களுடன் கூடிய பசுமையான நன்றிகள்..!
இத்திருத்தொண்டு மென்மேலும் பொலிவுடன் தொடர அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..!
Thanks a lot for the extremely rare stills, Pradeep Sir. We expect a lot more from You.
"பொம்மை கல்யாணம்" பதிவுகளுக்கு வாசு சார் வழங்கிய பாராட்டு:
அன்பு பம்மலார் சார்,
'பொம்மை கல்யாணம்' சுதேசமித்ரன் விளம்பரம் எங்கு தேடினாலும் கிடைக்காது. அவ்வளவு அரிய விளம்பரம் அது. உங்களிடம் இல்லாமல் போனால்தான் ஆச்சர்யம். தலைவர் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை நுழைத்து சும்மா கெத்தாக நிற்பது சூப்பரோ சூப்பர். சிங்கப்பூர் மற்றும் சிலோன் விநியோகஸ்தர்கள் விவரமும் விளம்பரத்தில் குறிக்கப்பட்டுள்ளது அருமை. அரிய பதிவிற்கு அன்பு நன்றிகள்.
'பொம்மை கல்யாணம்' (விதி இதுவோ - ஜிக்கி, கல்யாணம் கல்யாணம் - ஜிக்கி, ஆசை வெச்சேன் ஆசை வெச்சேன்) முத்தான மூன்று வீடியோப் பாடல்களுக்காக அன்பு ராகவேந்திரன் சாருக்கு என்னுடைய சிறப்பு நன்றிகள். அவருடைய பாராட்டுதல்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
வாசுதேவன்.
தங்களுக்கு எனது அன்பான நன்றிகள், வாசுதேவன் சார்....!
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
நல்லதொரு குடும்பம்
[3.5.1979 - 3.5.2012] : 34வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5753-1.jpg
குறிப்பு:
சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல அரங்குகளில் 50 நாட்கள் முதல் 79 நாட்கள் வரை ஓடிய இக்காவியம் ஒரு நல்ல ஹிட்.
பக்தியுடன்,
பம்மலார்.
ராக(வேந்தரே),
இரண்டாயிரம் பதிவுக்கு எனது சிரம் தாழ்ந்த இரண்டாயிரம் வணக்கங்கள்.பத்தாயிரம் வணக்கங்கள் சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
பம்மலார் அவர்களே,
தங்கள் பதிவுளுக்கான பாராட்டுகளை எழுதி எழுதி எங்கள் கைகள் ஓய்ந்தன.கேட்டு கேட்டு உமது செவியும் சாய்ந்தன. ஆனால் உங்கள் மனம் திறந்து அடுத்தவரை பாராட்டும் பெருந்தன்மையை குறிக்கா விட்டால் நான் நன்றி மறந்தவன் ஆவேன்.அடுத்தவருக்கு உதாரணமான உயர்ந்த குணம்.நீங்கள் குடும்பம் கண்டு ஆல் போல் பெருகி தழைத்து வாழ தங்களை விட சிறிதே மூத்தவன் (வயதில்)என்ற வகையில் வாழ்த்துகிறேன்.
வாசு சார்,
ராமாயணத்தில்,கண்ணிலான் கண் பெற்று இழந்தது போல்,என்று குறிப்பார். நம் திரி கண்ணிருந்து ,அதை இழந்து,மீண்டும் பெற்றது போன்றது தங்கள் வருகை.பொன் மனமே,தொடரட்டும் உன் பணி.