nandri.
adhe varisiyal vennila nerathile venuganam(avasara kalyanam), velli nila vanathile vandhu pogudhada (kadhal paduthum paadu)
Printable View
கல்நாயக்,
நிலாப்பாடல்களின் தொகுப்பில் உங்கள் உழைப்பு தெரிகிறது. அருமை.
எனக்குத் தெரிந்த சில பாடல்கள். நீங்கள் நிறைய பாடல்கள் நிலா பற்றி போட்டு விட்டதால் நான் வழங்கும் பாடல்கள் அந்தத் தொகுப்பில் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. உங்கள் அனுமதியோடு சிலவற்றை பதிகிறேன். ஏற்கனவே நீங்கள் பதித்திருந்தால் பொறுத்தருள்க.
நிலவு வந்து வானத்தையே திருடிக்கொண்டது ---- திருடி (சொக்க வைக்கும் பாட்டு)
நிலவுக்குப் போவோம் இடமொன்று பார்ப்போம் ----- கண்ணன் வருவான்
நிலவோடு வான்முகில் விளையாடுதே----- ராஜராஜன்
நிலவோ அவள் இருளோ---- அருணகிரிநாதர்
நிலவு பிறந்த நேரத்திலே----அம்மா எங்கே (சுசீலாவின் அபூர்வ பாடல் வகை)
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்---- அவசர கல்யாணம்
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே---- இருவர் (உலக அழகியின் நடன அசைவுகள் நளினம்)
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்---- மன்னிப்பு
வெண்ணிலவுக்கு வானத்தை பிடிக்கலியா---- தாலாட்டு பாடவா (ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு. பார்த்திபன், குஷ்பூ, ரூபினி என்று நினைக்கிறேன்)
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு----- கண்ணுக்குள் நிலவு
நிலவும் மலரும் பாடுது--- தேன் நிலவு
வானிலவே வா நிலவே வழியில் ஒரு மேகம் இல்லை---- படம் பெயர் தெரியலையே
சர்க்கரை நிலவே சர்க்கரை நிலவே -- யூத்
தங்க நிலவே உன்னை உருக்கி தங்கச்சிக்கு---- தங்கைக்கோர் கீதம் தானே?
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா----சிநேகிதி (சௌந்தரராஜனும், நடிகை பாரதியும் கலக்கி எடுத்துவிடுவார்கள்)
நிலவுக்கும் நிழலுண்டு----ஆயிரம் ரூபாய்
இந்த நிலவை நான் பார்த்தால்----- பவானி
நிலவு ஒரு பெண்ணாகி-----உலகம் சுற்றும் வாலிபன்
நிலாவே வா செல்லாதே வா-----மௌன ராகம்
வெண்ணிலா ஓடுது---- நாளை உனது நாள்
நிலவு நேரம் இரவு காயும்----அன்னை ஒரு ஆலயம்
நிலவே நீதான் தூது செல்லாயோ---ஆத்மா சாந்தி (திருச்சி லோகநாதனும் லீலாவும் இணைந்த அற்புத பாடல். எனக்கு ரொம்ப பிடித்த அபூர்வ பாடல்)
நிலா காய்கிறது---இந்திரா (ரொம்ப பாப்புலரான பவர்புல் பாட்டு)
இன்னும் இருந்தால் யோசிக்கிறேன். மேற்கண்ட பாடல்களை எனக்காக டியூபிலிருந்து போடுவீர்கள் என்று நம்புகிறேன்.
இதெல்லாம் மண்டபத்திலே யாரும் சொல்லிக் கொடுக்கலீங்க. நானே மண்டையப் பிச்சுகிட்டு போட்டது. ஆனா நிச்சயமா கல்நாயக் அளவுக்கு இல்ல.
எல்லாத்துக்கும் மேலே எக்காலமும் போற்றும் நடிகனின்
யாரந்த நிலவு பாடலை போட்டே தீரணும். இது பட்டாக்க்கத்தியின் படா வேண்டுகோள்.
இப்போ ஜூட் வுட்டுக்கிறேன்.
பட்டினப் பிரவேசத்தைப் பற்றிக் கேட்டுவிட்டீர்களே கல் நாயக்..மதுரை கல்பனா தியேட்டரில் வந்தது என நினைக்கிறேன்..முதல் நேச்சுரல் கலர் படம் என நினைக்கிறேன்..
பாலச்சந்தர் என்ற எதிர்பார்ப்போடு போன படம்..படத்தின் நெகட்டிவ் தன்மையால் (பட்டணம் செல்பவர்கள் எல்லோரும் கெட்டுக் குட்டிச் சுவராகப் போய்விடுவார்கள் என்பது போல்) திரும்பும் போது சற்றே தலைவலி வந்து வீட்டுக்கு வந்தபின் கால்பால் போட்ட நினைவு..(மேட்னி ஷோ இன் மதுரை இன் சம்மர்)..அதன் பின் அந்தப் படத்தைப் பார்க்கவே இல்லை..பாடல் அவ்வப்போது கேட்டதுண்டு..
வான் நிலா நிலா அல்ல மனதில் தங்கிய பாடல் (போட்டதற்குத் தாங்க்ஸ்).. எம்.எஸ்.வி.டியூன்போடும் போது ந நன்னா ந நான நா எனப் போட கவிஞருக்கு மூடில்லையாம்..
என்னய்யா நன்ன்ன நன்னங்கற போ..
பாலச்சந்தர் எம் எஸ் வியிடம் நல்லா இருக்கு ட்யூன் எப்படியாவது வாங்கிடுங்க எனச் சொல்லிச் செல்ல எம் எஸ் வி லால லால லாலலா..எனப்பாட வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா என வார்த்தைகள் வந்து விழுந்ததாம்..
சிவரஞ்சனி இளமை.. அகலக் கண் என நன்றாக் இருந்த நினைவு..இன்னும் உங்கள் காணொளியைக் காண்கவில்லை! சிவசந்திரன் டெல்லி கணேஷ் என அறிமுகம் (அதே சிவரஞ்சனி ஊறியதயிர்வடை போல் சிந்துபைரவியில் காட்சியளித்தது சற்றே சோகம்....)
காத்தாடி ராமமூர்த்தி ரெளண்ட் அபெளட்டில் டாக்ஸியில் சுற்றிச் சுற்றி வர பின் இறங்க – சரிப்பா.. – யோவ் மீட்டரைப் பாருய்யா – பார்த்தேன் நல்லா இருக்கே…- எனச் சொல்லி த் திட்டுவாங்குவதற்கு சிரித்தது நினைவில்..
ஒரே இரவில் ஓபன் செய்யும் மளிகைக்கடை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸாக விரிவடைந்து லஞ்சம்கேட்பதற்கு ஒரு ஆள் வர எவ்வளவு வேண்டும் என டெல்லிகணேஷ் சந்தோஷமாய்க் கேட்க கொக்கரக்கோ என சத்தம் வரும்..அவ்வளவும் டெல்லிகணேஷின் கனவு..விழித்துவிடுவார்..
சிவசந்திரனுக்கு சித்தப்பிரமை பிடிக்க டெல்லி கணேஷ் அவரது கைவிரல்களின் மீது மைதடவி எதற்கோகை நாட்டு வைப்பது மட்டும் கொஞ்சம் நினைவில்..கதை சம்பவங்கள் சுத்தமாக மற்ந்துவிட்டது..
போதுமா..
*
தாங்க்ஸ் ராஜேஷ் ஃபார் த காணொளி..
அப்புறம் என்ன செய்ய..
வந்ததுக்கு ஒரு பாட் எழுதிப்பாகக்லாமா..
வேகமாகச் சத்தமிட்டு வருவதும்
..வெட்கமிலா ஓட்டநடை கொள்வதும்
விகற்பமுடன் முத்தமிட்டுச் செல்வதும்
விரைந்தபடி அமைதியாக வருவதும்
மறுபடியும் மறுபடியும் தொடர்ந்திடும்
.மாற்றமில்லா. நாடகந்தான் ஏனடி
வரமெனவே பெற்றுவிட்டாய் நீயடி
வாழ்க்கையிலே அலைமகளே இல்லையா.
ஸோ.. என்னது இந்தப்பாட்டு..அலை.. கடலோட அலை தொட்டுவருவதும் தொட்டு விடுவதும் மெல்லச் சிரிப்பதும் முறைத்துச் செல்வதும் நுரைத்துவருவதும் பின்னர் கலைவதும் பார்க்கப் பார்க்க சுவாரஸ்யம், இன்பம் தான் இல்லியோ..
ஆக இப்ப என்ன பண்ணலாம்னா…(அலைபத்தி ப் போடப்போறியா போட்டுத் தொலை..மன்ச்சு..ஏன் கோபம்) :)
https://youtu.be/ejzVeq4wLH4
ஹலோ பட்டாக்கத்தி,
நீங்கள் கொடுத்த நிலா வரிசை ஸூபர். இதில் பல பாடல்கள் ஏற்கனவே கொடுத்தாகி விட்டது. சில பாடல்களை கொடுக்க இருக்கிறேன். முடிந்தால் நீங்கள் கொடுத்திருக்கும் எல்லா பாடல்களையும் கொடுக்க முயற்சிக்கிறேன். நன்றி.
யாரந்த நிலவு பாடல் ஸ்பெஷல் ஆச்சே. நல்ல நேரமாகப் பார்த்து கொடுத்துவிடுகிறேன். நடிகர் திலகம் திரியிலும் இந்த பாடல் முரளி அவர்களால் அலசி ஆராய்ந்து எழுதப் பட்டுவிட்டது. இருந்தாலும் என் பாணியில் நானும் சொல்கிறேன்.
சி.க.,
பட்டினப் பிரவேசத்திற்கான உங்கள் திரை அரங்குப் பிரவேசம் உங்கள் நினைவுகளை கிளறிவிட்டது என்று நினைக்கிறேன். திரைப் படக் கதையை விட்டுத் தள்ளுங்கள். இன்னொருமுறை பார்த்தால் போச்சு. நான் இந்த படம் பார்த்ததில்லை. ஆனால் இந்தப் பாடல் பலமுறை கேட்டிருக்கிறேன். எனக்கும் மிகவே பிடித்த பாடல்.
நீங்கள் எழுதிய கவிதை அழகு. அத்துடன் நீங்கள் கொடுத்த ஜெயச்சந்திரன் பாடிய அலையே காதல் அலையே பாடலும் அழகு.
ராஜேஷ்,
நீங்கள் கொடுத்திருக்கும் நிலாப் பாடல்களையும், எனது நிலாப் பாடல் வரிசையில் சேர்த்துக் கொள்கிறேன். நன்றி.
நிலாப் பாடல் 63: "அமுதைப் பொழியும் நிலவே. நீ அருகில் வராததேனோ"
-------------------------------------------------------------------------------------------------------------
தலைப்பைப் படித்ததும் பலரும் சொல்வார்கள் "ஆஹா அருமையான, சுகமான, மதுரமான, அற்புதமான, அட்டகாசமான, அழகான, சூப்பரான,... பாடல் ஆச்சே இது" என்று. நீண்ட நாட்களாயிற்று நடிகர் திலகத்தின் திரைப் படப் பாடலொன்றை பற்றி எழுதி. அதனால் எழுத நினைத்தேன். ஆனால் இதில் நடிகர் திலகம் தோன்றினாலும், அவர் வாயசைக்காத திரைப் பாடல். பட்டாக்கத்தியும் கேட்டுவிட்டார் நடிகர் திலகத்தின் பாடலை. அவர் கேட்டதற்காக போடலாமென்றுதான் இது. நடிகை ஜமுனா பாடுவதாக வந்திருக்கும்*பாடல்.
இந்தப் பாடல் எத்தனை மொழிகளில் பிரபலம் என்று ராஜேஷ், ராஜ்ராஜ், சி.க., போன்றவர்கள்தான் சொல்லவேண்டும். எல்லா மொழிகளிலும் இசையரசி பி.சுசீலாவின் குரலே என்று நினைக்கிறேன். 1957ல் வெளிவந்த திரைப்படம். இசை: டி.ஜி. லிங்கப்பா.
பாடலை எழுதியவர் சில நாட்களுக்கு முன் சி.க. எழுதிய கு.மா. பாலசுப்ரமணியம். அருமையாக கருப்பு வெள்ளையில் கானகத்தில் படமாக்கியிருக்கிறார்கள். மோகன ராகத்தில் அமைந்த பாடல் நம்மையெல்லாம் மயக்குகிறதே. நிலவை கேள்வி கேட்டு பார்த்திருக்கிறோம். வானத்தில் இருக்கிறாய் என்று சொல்லிப் பாடியும் பார்த்திருக்கிறோம். அருகில் வாராய் என்று அழைத்தும் பார்த்திருக்கிறோம். இது அருகில் வரமாட்டாயா, ஏன் வரமாட்டாய் என்று கேட்டுப் பாடும் பாடல். இதுவும் காதலி காதலனை நிலவோடு ஒப்பிட்டு பாடும் வித்தியாசமான பாடல்தான். பாடல் வரிகள் கீழே. காணொளி அதற்கும் கீழே. ஆனால் பாடல் வரிகளும் காணொளியும் மேலானவைகள்தான்.
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ ஓ... அருகில் வராததேனோ ஓ...
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய் ஆ...ஆ..
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புதுமலர் வீணே வாடிவிடாமல்
புதுமலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா ஆ..ஆ..ஆ..ஆ..
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா
இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
https://www.youtube.com/watch?v=S1alh8By1Ss
தங்க மலை ரகசியம் போல இந்த பாடலைக் காக்க வேண்டியதாகப் போயிற்று எல்லோரிடமும் இருந்து. நல்லவேளை, யாரும் சொல்ல வில்லை இந்தப் பாட்டை.
கண்ணா,
பட்டணப் பிரவேசம் கல்பனாதான். ஆனால் சம்மரில் வரவில்லை. 1977 செப்டம்பர் 9 ரிலீஸ். செப் 2 அன்று புவனா ஒரு கேள்விக்குறி அலங்காரில் ரிலீஸ். அடுத்த வாரம் பட்டணப் பிரவேசம். செப் 15 அன்று 16 வயதினிலே சினிபிரியாவில் வெளியானது. செப் 30 சென்ட்ரலில் ஆடு புலி ஆட்டம். அக்டோபர் 7 அன்று மூன்று படங்கள் ரிலீஸ். சினிபிரியாவில் நாம் பிறந்த மண், தங்கத்தில் காயத்ரி, நியூசினிமாவில் ஓடி விளையாடு தாத்தா. நான் கல்லூரி முதல் வருடம். இரண்டு வருடங்கள் எமர்ஜென்சியில் அடங்கி ஒடுங்கி இருந்த கல்லூரி மாணவர்கள் தொட்டதற்க்கெல்லாம் ஸ்ட்ரைக் செய்ய ஏகப்பட்ட விடுமுறைகள். அவை அனைத்தும் படங்கள் பார்க்க உபயோகமானது.
சாரி, ஒரு சில nit pickings . பட்டணப் பிரவேசம் படத்தில் அறிமுகமானது சிவரஞ்சனி இல்லை. அது மீரா (நாக்கால் மூக்கை தொடும் மீரா). பின்னாட்களில் சிந்து பைரவியில் நீங்கள் குறிப்பிட்டது போல் Bloated figure ஆக வருவார்.நடிகர் திலகத்துடன் இமயம் படத்தில் வருவார். அது போல் வான் நிலா பாடலுக்கு சிவசந்திரனுடன் வருபவர் ஸ்வர்ணா. அவரும் அறிமுகம்தான். இதற்கு இரண்டு மாதங்கள் கழித்து வெளிவந்த நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் படத்திலும் ஒரு பாடல் காட்சிக்கு வருவார்.
டெல்லி கணேஷ் சிவசந்திரன் அறிமுகம் கரெக்ட். ஆனால் இன்னொரு முக்கியமான அறிமுக நபரை விட்டு விட்டீர்களே? அவர்தான் சரத்பாபு.
மற்றபடி தொடருங்கள். ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
கல்நாயக், உங்களுக்கும்தான், தொடருங்கள்.
அன்புடன் .
முரளீ.. வாங்க :)
எனக்குக் கொஞ்சம் டவுட்டு தான்..ஆனால் பார்த்தது ஒரு மேட்னி..(பாவம் கண்ணா..பத்தாம் க்ளாஸ்..அதுவும் போன நேரம்..! மறந்துட்டேன் ஷமிக்கணூம்).. சைக்கிள் கைக்கு வந்த மகிழ்ச்சியில் சனி யாவது ஞாயிறாவது இற்க்கை முளைத்து சுற்றிய காலம்.. குரு.. புவனா ஒரு கேள்விக்குறி எனக்கு சாந்தி தியேட்டரில் பார்த்த நினைவு..ஒருவேளை ரீரன்னாக இருக்கும் என நினைக்கிறேன்.. ஆ.பு.ஆ சென் ட்ரல் அப்புறம் 16 வயதினிலே பாக்கெட் மணி சேர்த்து மினிப்ப்ரியாவில்(அதிலும் போட்டிருந்த நினைவு) பார்த்தேன்.. ஓ.வி.தா வும் மாட்னி தான்..எதிரிபாராமல் பார்த்த ஓ.கே படம்..
மன்னிக்க கொஞ்சம் ஆர்வக் கோளாறில் சிவரஞ்சனி என்று தவறாக எழுதிவிட்டேன்.. (சிவரஞ்சனி என்பது மீராவின் பெயர் சிந்துபைரவியில் இல்லியோ) வான் நிலா பாட்டு இனிமேல் தான் கேட்கணும்..பார்க்கணும் என்னமோ வேலை வேலை என டைம் கிடைக்கவில்லை..அகெய்ன் ஸாரி..சிவரஞ்சனி நீல கண் தேவதையோன்னோ..உண்மையா ராஜேஷ், கல் நாயக்..:) கலைஞன்ல வந்து பொசுக்குன்னு குதிச்சு செத் போவாரே..
சரத்பாபு புகையாய் நினைவில்..பட் முரளி.. அவர் நிழல் நிஜமாகிறதில் அறிமுகம் என நினைத்துக் கொண்டிருந்தேன்..
வெரி நைஸ் முரளி..கொஞ்சம் அந்தக்காலத்துக்குப் போய்ட்டு வந்துட்டேன்.. நீங்க அமெரிக்கனா.மெஜூராவா . நான் ரெண்டு வருஷத்துக்கப்புறம் தான் கல்லூரி..தாங்க்ஸ்..
//எண்ணிலா ஆசைகள் பெண்ணிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா// பார்த்துட்டேன் ஃப்ரெஷ்ஷா.. பாருங்க மீரா மட்டும் தான் நினைவு..ஸ்வர்ணா ப்பாப்பா நினைவிலில்லை.. அந்த மூக்கும் நாக்கும் மட்டும் தான் :) அவர் தங்கையா வருவாரோ..
கல்ஸ்...! (ஓய் ஒம்மை செல்லமாக் கூப்பிட முடியலையே) அமுதைப்பொழியும் நிலவே நல்லபாட்டு..பிடிக்கும்னு சொல்லி நிறுத்த இயலாது..ஏன்னாக்க எப்ப ந.தி பேச ஆர்மபிச்சுக் கதை மூவ் ஆகும்னு இருக்கும்..பட் நலல் படம்..(சர்ரூ வோட ஐட்டம் ஸாங்க் இருக்கும்! :) பின்ன ஒருபாட்டுக்கு வந்து ஆடுவாங்க.. அழகு, யெளவனம் என ஆரம்பிக்கும் நு நினைக்கறேன்)
அம்மா எங்கே யில் வேறொரு நிலவுப்பாட்டு இருக்கே..ஆனா சொல்ல மாட்டேனே :)
//நீங்கள் எழுதிய கவிதை அழகு. அத்துடன் நீங்கள் கொடுத்த ஜெயச்சந்திரன் பாடிய அலையே காதல் அலையே பாடலும் அழகு.// நன்றி.. காதல் பாட்டுன்னா கடல் அலை கூட காதல் அலை ஆகிடுமா என்ன....:)