it would be awesome to get hold of IR's stand-in tracks like this one for yathe... some of the NEPV tracks and the sandhams he sang in the videos GVM played in the audio release were incredible.
Printable View
it would be awesome to get hold of IR's stand-in tracks like this one for yathe... some of the NEPV tracks and the sandhams he sang in the videos GVM played in the audio release were incredible.
பூங்கோதை மௌனம் தான் பரிபாஷையோ
புரியாத ஜாடை என்ன மரியாதையோ
துடிப்பிலே பிள்ளைதானோ
தோகையின் பாவமோ !!
ஜெயச்சந்திரனின் அருமையான இனிமையான குரல். ராஜாவின் இசை ....ராஜா கையை வச்ச பின்னே wronga போகுமா ??:)
http://www.youtube.com/watch?v=8h5LAUySlk8
2011-ல் சென்னையில் நடந்த ராஜாயிசைக் கச்சேரியில் இடம்பெற்ற, பாடல் தேர்வில் என்னை இன்னமும் பிரமிப்பை ஆழ்த்தும் ஒரு பாடல்.. 'ஒரு ராகம் பாடலோடு' - ஆனந்த ராகம் படத்திலிருந்து. சிங்கம் (தாசண்ணா) வயதாகிவிட்டாலும் பாடலின் மெட்டமைப்பில் ராஜா பொதித்து வைத்திருக்கும் ஸ்விங்-தனத்தை எதிர்பார்ப்பிற்கும் மேலேயே நன்றாகவே செய்தார். தனது இளமைக் காலத்தில் எப்படியெல்லாம் வீறு கொண்டு நடந்த சிங்கம் அது. வியப்பு இன்றுவரை அடங்கவில்லை. மீண்டும் மீண்டும் நான் இப்போது பார்த்து கண்டுகளிக்கும் 2011- சென்னைக் கச்சேரி பாடல்களில் அது ஒன்று.
https://www.youtube.com/watch?v=lcd9RqPHE3s
இதுபோன்ற ஒருபாடலை வைத்தே ராஜாவை எந்தக் கோபுரத்தின் உச்சத்தில் வைத்தும் பாராட்டலாம். ஒரு மெட்டையே டூயட் வடிவத்தில் காதல் ரசத்திற்கும், சோலோவாக சோக ரசத்திற்கும் விருந்து படைத்திருந்தார். தன் ஆக்கத்தின் மீது ஒரு படைப்பாளிக்கு இருக்கும் நம்பிக்கையைத்தான் அது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஒரே மெட்டு இரண்டு விதமான எதிரெதிர் உணர்வுகளை கொண்டு செல்லப் பயன்படனும் என்பது எவ்வளவு கடினமான வேலை. ஜானகி, தாசர் போன்ற ஆளுமைகள் இருந்தால் கவலைப்படாமல் ராஜா துணிச்சலாகவே இறங்குவார் இதுபோன்ற முயற்சிகளில். தனிப் பாடலைக் கூட தாசருக்கு ஒன்று.. ஜானகிக்கு ஒன்று என சமமாக பிரித்துக் கொடுத்திருக்கிறார். பின்னணி இசை வெவ்வேறு நிறங்களில்.
டூயட் பாடலுக்கு.. தாசரும், ஜானகியும்.. என்பதே அழகான தேர்வு! இருவரும் ஒவ்வொரு சொல்லையும் உச்சரிக்கும் தொனியிருக்கிறதெ! அந்த வித்தைக்கு சொத்தையே எழுதி வைக்கலாம். தனித்தனியே பார்த்தால் பல்லவியும் சரணமும் இரண்டு வெவ்வேறு தளத்தில் இயங்குவதாக தெரியும். ஆனால் ராகதேவன் இரண்டுக்கும் மிக அற்புதமாக பாலம் கட்டியிருப்பார். அப்பப்பா! பூமாலை அலங்கரிப்பதில் ராஜாவும் அவரே. கோரஸ்ஸை எவ்வளவு நேர்த்தியாக கட்டமைத்திருக்கிறார். நாம் இப்பாடலின் பல்லவியை தனியாக ஹம் செய்தாலும் கோரஸ்ஸையும் கூடவே ஹம் செய்ய மனம் விழையும். பல்லவி ஒரு ஊஞ்சலாகவே நம்மைச் சுமந்து இன்பத்தில் ஆழ்த்துகிறது. "ஒ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது!" என்ற வரிக்கு பிறகு ஊஞ்சலின் வேகம் குறைந்து சமநிலைக்கு வரத் தொடங்கும். காவியப் பாடல்.
https://www.youtube.com/watch?v=GGekCjufNWY
சரி.. டூயட் பாடல் இப்படி என்றால்.. தாசரும் ஜானகியும் தனித்தனியே பாடியது சோகரசப் பாடல்களின் விஸ்வரூபம் எனலாம். சரணத்தை அவர்களின் குரல் கையாளும் விதம் இருக்கிறதே.. என்னவென்று சொல்வது! சாஸ்டாங்கமாக விழுந்துவிடலாம். ஒரு இடத்தில் கூட சோகத்தை வலியக்க திணிக்காமல்.. ஒரு கயிறு மேல் நடப்பது போல சரணத்தை குரல் கடந்து சென்று சோகத்தை நம்மீது ஊற்றிவிடுகிறது.
https://www.youtube.com/watch?v=spOC5b7hg1s
https://www.youtube.com/watch?v=57W890fBvME
:notworthy:
பட்டாச சுத்தி சுத்தி போடட்டுமா!
http://www.youtube.com/watch?v=FwVNR2AanW4
அன்பர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் !
A very unheard song from Telugu... https://www.youtube.com/watch?v=g4qB9p_ix5A
Another one....
https://www.youtube.com/watch?v=yt_4XWGOiy8
ராஜாவின் இசையில் ஜானகியின் ஹம்மிங் இடம்பெற்ற பாடல்கள்...ஒரு தொகுப்பு!
https://www.youtube.com/watch?v=zEqGFjUgnoI
இது உலகெங்கும் பரவியிருக்கும் ராஜா - ஜானகி ரசிகர்களுக்கு ஒரு விருந்துதான்.
சிறப்பானதொரு சேவை. நன்றிகள் கோடி Venkateswaran Ganesan!
ILAIYARAJA -JOHNY FULL BGM
http://www.youtube.com/watch?v=XWRIu...ature=youtu.be
பாடல்: ஆனந்த மாலை
படம்: தூரத்து பச்சை (1987)
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: ஜானகி, கிருஷ்ணசந்தர்
500 தடவைக்கு மேல் நான் கேட்டு ரசித்த பாடல்களை கூட எப்போது கேட்டாலும், பாடலுக்கு இடையில் ஏதாவது ஒரு புது சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது. வெறும் மிட்டாய் கிடங்கு அல்ல அவர்.. அட்ச்சய பாத்திரம்.
இந்த பாடலுக்கான யூடியூப் கருத்துக்கள் பகுதியில் போகன் R என்பவர் இப்படி எழுதி இருக்கிறார். "இளையராஜாவைத் தோண்டினால் இன்னமும் இது மாதிரி அற்புதங்கள் கிடைக்கின்றன என்பது வியப்பாய் இருக்கிறது.தீரவே தீராதோ இந்த மிட்டாய்க் கிடங்கு?"
https://www.youtube.com/watch?v=3RlKPvr8crk
படம்: இல்லம் (1987)
பாடல்: நந்தவனம் பூத்திருக்குது
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: பாலசுப்ரமணியம்
ஏற்கனவே இந்த பாடலை பற்றி பேசியாகி விட்டது. என்னால் இதை விட முடியவில்லை. மறுபடியும் கேளுங்களேன். பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் தபேலா மற்றும் ட்ரம்ஸ் மாற்றம் (ட்ரான்சிஷன்) எவ்வளவு அருமையாக இருக்கிறது தெரியுமா? தடதடவென ட்ரம்ஸ் வரும் இடமெல்லாம் உங்கள் இதயம் குதுகூளித்தால், உங்களை போன்றே நானும் அதை அனுபவித்தேன் என்று எடுத்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/watch?v=m5VdNnsIELE