'விடிவெள்ளி' விளம்பரம்
http://i812.photobucket.com/albums/z...ps6fc715de.jpg
Printable View
'விடிவெள்ளி' விளம்பரம்
http://i812.photobucket.com/albums/z...ps6fc715de.jpg
அபூர்வ நிழற்படம்
http://i812.photobucket.com/albums/z...ps0a7eb361.jpg
ராஜாவும், ராணியும்
http://i1.ytimg.com/vi/zz48wuiYr1M/maxresdefault.jpg
டியர் வாசுதேவன் சார்,
நீங்கள் புதிதாகத் துவங்கி அதகளம் செய்துவரும் 'நடிகர்திலகத்தை இயக்கிவர்கள்' (அதாவது நடிகர்திலகத்தால் இயங்கியவர்கள்) தொடர் படு சூப்பர். எப்படி இப்படியெல்லாம் யோசனைகளை வருகின்றன என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே ஜெட்வேகம். முதல் பதிவிலேயே ஏ.சி.டி. ராமண்ணா, கே.எஸ்.ஜி. என மூன்று இயக்குநர்களைப் பற்றி மிக அருமையாக அலசிவிட்டீர்கள். (ஏ.சி.டி. பற்றிய பதிவில் தாங்கள் அளித்திருக்கும் நிழற்படத்தில் அவர் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படமான அன்பே வா படத்தின் ஷீல்டுடன் அமர்ந்திருக்கிறார். அவரது எத்தனையோ நிழற்படங்கள் இருக்க, இந்த படத்தை நீங்கள் பதிவிட்டதும், அதிலும்கூட அன்பே வா ஷீல்டை கட் பண்ணாமல் அப்படியே படித்திருப்பதும் தங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது).
மூவரையும் பற்றிய பதிவைப்படித்து முடிப்பதற்குள் தடாலடியாக டார்லிங் சி.வி.ராஜேந்திரன் பற்றிய அற்புதப்பதிவு. அவர் நம் நடிகர்திலகத்தை மிக மிக அழகாகக் காட்டினார் என்பது மிகவும் உண்மையென்றாலும் அந்த நேரத்தில் நடிகர்திலகத்தின் உடல்வாகு அவரை அழகாக காண்பித்தே தீரவேண்டும் என்று எல்லா இயக்குனர்களையும் நிர்ப்பந்தத்துக்குள் தள்ளியது. டார்லிங்கை மட்டும் புகழ்ந்தால் மற்ற இயக்குனர்கள் சண்டைக்கு வருவார்கள். முக்தாசீனிவாசன் (நிறைகுடம்) பிரகாஷ்ராவ் (வசந்த மளிகை) ஏ.சி.டி, (தெய்வமகன் விஜயன், எங்க மாமா கோடீஸ்வரன்), மாதவன் (ரா.எ.ராமனடி நடிகர் விஜயகுமார்), ஸ்ரீதர் (வைரநெஞ்சம் ) ராஜேந்திரபிரசாத் (உத்தமன்) என்று பலர் சண்டைக்கு வரக்கூடும். அதுமட்டுமல்ல நடிகர்திலகத்தை அழகாகக் காட்டிய நம்ம டார்லிங்கே என்மகன், உனக்காக நான் படங்களில் காலை வாரிவிட்டாரே. மேக்கப்பும் விக்கும் சரியில்லை. சி.வி.ஆர். இயக்கிய படங்களைக் கொண்டே அவரைப்பற்றிய புகழுரைகளை அமைத்திருப்பது மிக அருமை.
பி. மாதவனைப்பற்றிய பதிவும் மிக நன்றாக உள்ளது. சொந்தப்படமாக இருந்தாலும் அடுத்தவர் படமாக இருந்தாலும் காசை இறுக்கிப் பிடிப்பதில் மகா '...............' பேர்வழி என்பது கோலிவுட்டில் மிகப்பிரசித்தம். நீங்கள் சொன்னதுபோல நடிகர்திலகம் என்ற பெரிய முதலீடு போதும் என்று நினைத்து செயல்பட்டவர். கோபால் அவர்கள் சொன்னதுபோல இவரது பெரும்பாலான படங்கள் பெரும் வெற்றி பெற்றவை. சித்ரா பௌர்ணமியைப் பற்றி சொல்வதென்றால் பல மைனஸ்கள். முதலில் சரியில்லாத கதை மற்றும் திரைக்கதை, எமர்ஜென்சி சமயமாதலால் சண்டைக்காட்சிகள் சென்சாரில் ரொம்ப அடிபட்டன. அத்துடன் பாட்டும் பரதமும் வெளியான நேரத்தில் (மாதவன் தயாரித்த படங்களிலேயே கொஞ்சம் அதிகம் செலவழித்த படம்) படத்தின் ரிப்போர்ட் சரியில்லாததால் நடிகர்திலகத்தின் அப்போதைய அரசியல் முடிவைப்பற்றி கொஞ்சம் காட்டமாக மாதவன் பேட்டியளிக்க, அதனால் நடிகர்திலகத்தின் சகோதரர் சண்முகத்துக்கும் இவருக்கும் கொஞ்சம் வாங்கல் ஏற்பட்டதால், மேற்கொண்டு இப்படத்தில் மாதவன் இயக்காமல் அவரது உதவியாளர்களான தேவராஜ் மோகன் இயக்கி படத்தை முடித்தனர். நடிகர்திலகம் - மாதவன் இணைந்து மிக மோசமாகப்போன படம் சித்ரா பௌர்ணமி மட்டுமே.
'நடிகர்திலகத்தின் திரை நாயகியர் தொடர்',
'சூப்பர் சண்டைக்காட்சிகள் தொடர்'
'ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடர்'
'நடிகர்திலகத்தின் இயக்குனர்கள் தொடர்'
இப்படி தொடராகவே (தொய்வடையாமல்) தொடர்ந்து கொண்டு இருக்கும் தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
தங்கள் பதிவுகளை மறவாமல் பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அத்தனையும் முத்துக்கள், வைரங்கள். (முரளி சாரின் 'பாடல்கள் பலவிதம்' தொடருக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து எனக்கு எப்போதும் அச்சம் உண்டு...)
டியர் கோபால் சார்,
ஐம்பதுகளில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றான 'ராஜாராணி' படத்தின் காதல் பற்றிய அலசல் அருமை. அப்போது வந்த படங்களில் இன்றைக்குப் பார்த்தாலும் செம டெம்போவோடு செல்லும் படங்களில் ராஜாராணியும் ஒன்று. அதை எடுத்துக்கொண்டு அன்றைய சிறந்த ஜோடியான நடிகர்திலகம் பத்மினி (1961 வரை மட்டுமே, அதன்பின் இவரைவிட பொருத்தமான ஜோடி வந்துவிட்டார்) காதல் காட்சிகளை அருமையாக விவரித்துள்ளீர்கள். இவர்களைவைத்து என்.எஸ்.கே. மதுரம் மீதும், மதுரம் என்.எஸ்.கே மீதும் சந்தேகப்படுவது வெகு ஜோர். மேடைப்பேச்சு சீட்டைத் தொலைத்துவிட்டு மேடையில் வந்து என்.எஸ்.கே. முழித்துக்கொண்டே வாய்க்கு வந்தபடி உளறுவது செம காமெடி.
காதல் காட்சிகளில் மேலும் கலக்குங்கள். (வாணிஸ்ரீ படங்கள் துவங்கியதும் சென்சார் போர்ட் தேவைப்படுமோ)...
சேரன் செங்குட்டுவனாக மற்றும் சாக்ரடீஸாக நடிகர் திலகம் முழங்குவதை ஆடியோவாக கேட்டு மகிழுங்கள்.
http://gaana.com/song/raja-rani-t/ch...dialouge-82206
வாசுதேவன் சார்,
உங்கள் அதகளம் அட்டகாசமாய் இருக்கிறது. நான் தொடர்களை பார்த்திருக்கிறேன். பல தொடர்களை துவங்கி , எந்த தொடரையும் நடுவில் தொங்க விடாமல் தொடர்ந்து கொண்டே புதிது புதிதாய் சிந்தித்து புது தொடரை தொடங்குவதையே தொடர்ந்து கொண்டு இருக்கும் உங்களை என்னவென்று சொல்லிப் பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை. (இங்கேயே தொடரத் தெரியாமல் முழிக்கிறேன்!!!)
சமீபத்திய தொடரான இயக்குனர்கள் தொடர் மிக நன்றாகவே வந்துகொண்டிருக்கிறது. இயக்குனர் p மாதவன் பற்றிய பதிவு (அவர் இயக்கிய ஞான ஒளி-யின் மேல் உங்களுக்கு இருக்கும் காதல் ஒரு காரணம்) மிக சிறப்பாக இருக்கிறது. கார்த்திக் சார் சொன்னது போல உங்கள் அனைத்துப் பதிவுகளையும் பத்திரப் படுத்தி வைத்திருங்கள் - பின்னாளில் நடிகர் திலகத்தின் தொலைகாட்சி நாடகத்திற்கு ஏற்பட்ட நிலை, இந்த பதிவுகளுக்கும் ஏற்படாமல் இருக்கவேண்டும்.
கோபால் சார்,
ராஜா ராணி காதல் பதிவு நன்றாக இருக்கிறது. எனக்கு சொல்லவே வெட்கமாக இருக்கிறது. நான் இன்னும் இந்த படத்தை பார்த்தது இல்லை. நான் திருவிளையாடல் தருமி போல ஒத்துக் கொள்கிறேன் - நீங்கள் தானையா புலவர். மன்னிக்கவும் நீங்கள் தானையா ரசிகர். இதற்கு மேல் நான் எதுவும் சொல்லப் போவதில்லை.
Kalnayak Sir
இந்த பதிவு உங்களுக்கும் மற்றும் கோபால் சார் இன் பழியிலுருந்து இந்த படத்தை இன்னும் பார்க்காதவர்கள் உடனே தப்பிபதர்க்காகவும்.
http://youtu.be/zz48wuiYr1M
:):smokesmile: