எந்தப் பாட்டு ? நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்கு தெரியும் பாட்டா ? அல்லது ஆகாசப் பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும் ஆனாலும் நிலவு வந்தால் அல்லியைத்தான் பார்த்திருக்குமா ? இதெல்லாம் பௌர்ணமி மாதிரி பல்லவியிலேயே அந்த வார்த்தையைக் கொண்ட பாடல்கள். இன்னும் "தொட்டுப்பார்..தொடும்போது.... கண்ணில் வந்து கொஞ்சும் நிலா" என்றும் "பாடி வரும் நிலவோ வெண்பளிங்கான மேனியோ" என்று பிறைச்சந்திரன் போல மறைந்து வெளிப்படும் பாடல்களும் உண்டுங்கோ..
அம்மா எங்கேனு நிலாவைக் கேட்போம்..
கல் நாயக் சாருக்கு... உடல் நிலை காரணமாக நிலவுப் பாடல்கள் முழுவதும் படிக்க முடியவில்லை. ... இருப்பினும் இந்தப் பாடல்கள் இல்லாமல் இருந்தால் லிஸ்டில் சேர்த்துக்குங்க
சந்திரப் பிறை பார்த்தேன் - கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன
சந்திர குலத்தவன் சிந்தையில் கலந்திட - சிரி சிரி மாமா ( சந்திரனின் குலமும் சேர்த்திதானே ? )
வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ - ஹலோ பார்ட்னர்
நிலவுப் பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி - பால் மனம்
ஏற்கனவே சேர்க்கப்பட்டு இருந்தால் மன்னிக்கவும்.