https://www.youtube.com/watch?v=iM4hXOpYAcM
https://www.youtube.com/watch?v=JZyw5iFgTYs
https://www.youtube.com/watch?v=Qveg840rPDY
Printable View
ஹீரோயினி அறிமுக பாடல்கள் எத்தனையோ இன்று வரை வந்து கொண்டிருக்கிறது. அந்த பாடல்களை யார் அமைத்திருந்தாலும், ராஜா சார் மட்டும் தான் கதையில் அந்த ஹீரோயினிக்கு கொடுக்கபட்டிருக்கும் பாத்திரத்துக்கும், கதை களத்துக்கும் ஏற்றவாறு இன்ட்ரொடுக்க்ஷன் சாங் கொடுத்து அசத்த முடியும் . (பவதாரிணி பாடி கெடுத்த பாடல்களை விட்டுவிடுவோம்)
அறுவடை நாள் படத்தில் வந்த இந்த பாடலை யாராவது மறக்க முடியுமா? படத்தில், இந்த விளையாட்டு பெண் வளர்ந்து, ஆளாகி, ஆங்காங்கே சந்திக்க போகும் துரதிர்ஷ்ட வசமான நிகழ்ச்சிகளை பாடலும், பாடலில் வரும் சத்தங்களும் நம்மை தயார் செய்து விடும். நான் அதிகமுறை கேட்டு ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
https://www.youtube.com/watch?v=DRQJnp1v4UY
பாடல்: வானத்துல வெள்ளி ரதம் படம்: எங்க ஊரு மாப்பிள்ளை (1989)
பாடியவர்கள்: மனோ, சித்ரா
எழுதியவர்: வாலி
பழுத்த பழம் காத்திருக்க
அணில் கடிக்கும் வேளை இது.
நதியில் எழும் நீர் அலை போல்
நினைவில் எழும் நாயகி நான்..
ஆஹா.....
ராமராஜன் பாடல் என்று பாடலை கேட்காமல் விட்டு விடாதீர்கள்.. ராஜா சாரின் டிபிகல் விண்டேஜ் பாடல், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இந்த பாடலை மறந்து போனவர்கள் மீண்டும் ஒரு முறை கேட்டால் மகிழ்வீர்கள்.
சமீபத்தில் நளினியின் மகன் திருமண பதிவை பார்த்த போது ராமராஜனின் நிலையை பார்த்து மிகவும் பரிதாப பட்டேன். பாவம்.
https://www.youtube.com/watch?v=InGis3MPuso
இதே நாளில் 1882 வருடம் பிறந்த மகாகவி சுப்ரமணிய பாரதியாரை பற்றி படமெடுக்க பலர் முயன்றனர்.பாலச்சந்தர் ,கமலஹாசன் மற்றும் பலர் ..ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்காமல் 2000 ஆம் ஆண்டு தான் அது சாத்திய மாயிற்று ..இந்த திரை படத்தை நானும் எனது நண்பனும் இது திரை இடப்பட்ட ,தேவி பாலா திரைஅரங்கில், நூறாவது நாளில் தான் சென்று பார்த்தோம் .பெயர் போட ஆரம்பித்ததுமே ஒரு கிளாசிகல் முகப்பு இசை ..ஒரு அமைதியான மெலடி இல் ஆரம்பித்து ஒரு பெருந்துயரத்தில் முடிந்தது .
பிராமண குடும்பத்தில் பிறந்த ஒருவன் எப்படி இந்த ஜாதி ,மதம் ,பந்தபாசம் ,பணம்,சடங்குகள் ,இப்படிதான் இருக்க வேண்டும் என்று சமூகம் உருவாக்கி வைத்த நியதிகள் போன்ற அற்ப விசயங்களில் இருந்து விடுபட்டு ஒரு மஹா மனிதனாக ,இயற்கையை இரசிப்பவனாக,கலகக்காரனாக ,ஒரு மகாகவியாக மாறுகின்றான் என்பதையும் பிறகு எல்லாவற்றையும் வெறுத்து ,சமூகத்தால் புறகணிக்க பட்டு,சொந்த குடும்பத்தால் கூட புரிந்து கொள்ள படாமல் தன் காலத்திற்கு முன்னரே மரணத்தை தழுவுகின்ற சோகத்தை முடிந்த வரையில் நேர்மையாகவும் ,சுவாரசியமாகவும் ,உணர்ச்சிமயமாகவும் பதிவு செய்தது இந்த திரைப்படம் .
"Amadeus " திரைபடத்தின் இறுதி காட்சியில் மொசார்ட் இறந்ததும் அவரது கடைசி இசை குறிப்பான "lacrimosa " பின்னணியில் ஒலிக்க அவரது இறுதி சடங்கு நடைபெறும,கண்ணீர் மல்கும் தருணம் அது. ..
அதே போல இந்த படத்தில் பாரதி இறந்ததும் அவரின் இறுதி சடங்கு ஆரம்பிக்கும் போது "நல்லதோர் வீணை ..பாடல் அந்த மொத்த சோகத்தையும் இசைக்க ...அதுவரையில் திரைஅரங்கில் ஒரு விதமான தயக்கத்துடனும் ,சலசலப்புடனும் இருந்த கூட்டத்தினுள் ..ஒரு ஆழ்ந்த நிசப்தம் உருவாகியது..எல்லோர் கண்களும் நீரால் நிரம்பியது .பல பெண்கள் அழ ஆரம்பித்து விட்டனர்.ஆனால் நாங்களோ 'ச்சே ஆண்கள் கண்ணீர் சிந்துவதா ' என்று எங்களை கட்டுபடுத்தி கொண்டு இருக்க ..மேஸ்ட்ரோ இளையராஜா "வல்லமை தாராயோ என்று ஆரம்பிக்க எங்களையும் மீறி கண்ணீர் வந்துவிட்டது ..எனது நண்பன் என்னை பார்த்து "That ,My Friend, is Music "என்று சொன்னது இன்னும் கூட என்னால் மறக்க முடியவில்லை ..மொசார்ட்டின் 'lacrimosa 'இசைக்கு சற்றும் குறைவில்லா ஒரு இசை ..
இதுவும் ஒரு 'period' பிலிம் தான்.இது மாத்ரி திரைப்படங்களுக்கு எப்படி பின்னணி இசை இருக்க வேண்டும் என்று இந்த திரைபடத்தின் பின்னணி இசையை கேட்டால் உங்களுக்கே புரியும் .முகப்பு இசை ,காசியில் பாரதி இருக்கும் போது வரும் சம்ஸ்கிருத பாடல்.பாரதி இதுதான் எனது அடையாளம் என்று முடிவு செய்யும் போது வரும் இசை ,ஆரம்பத்தில் கர்நாடிக் வடிவில் இருக்கும் பின்னணி இசை .பாரதி, ஷெல்லியின் கவிதையை வாசிக்கும் போது வெஸ்டேர்ன் க்லஸ்ஸிகல் இசையாக மாறி ஒலிப்பது என்று படம் முழுவதும் பின்னணி இசையில் பின்னி இருப்பார் ..
மயில் போல பாடலை பாடிய பவதாரிணிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது ..ஆனால் அந்த பாடலுக்கும்,படத்தின் மற்ற மறக்க முடியா பாடல்களுக்கும் ,இந்த பின்னணி இசை கோர்வைகளுக்கு இசைஅமைத்த மேஸ்ட்ரோ விற்கு தேசிய விருது கிடைக்காதது எப்படி என்று தான் தெரியவில்லை ..படத்தின் முழு பின்னணி இசை தொகுப்பு..
https://soundcloud.com/navinmozart/i...complete-score
பாடல்: புதிய பறவை பறந்ததே..
படம்: தென்றல் வரும் தெரு (1994)
பாடியவர்: சொர்ணலதா
எழுதியவர்: மு. மேத்தா
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் குரலை வருத்தி பாடும் கோரஸ் குயில்களும், உடல் வலிக்க குழுவாக ஆடும் நடன மங்கைகளுமே என் நினைவில் வருவார்கள். இரு பிரிவினருக்குமே அங்கீகாரம் அதிகம் கிடைப்பதில்லை. ஊதியமும் அதிகம் தருவார்களா என தெரியவில்லை.
ரொம்ப நல்ல பாடல். நல்ல சுத்தமான ஒலியில் பாடலை கேட்க கேட்க சுகமான வலி வரும். பாடலில் வரும் மஞ்சள் மற்றும் சிவப்பு கஸ்தூரி பறவை போலவே இருப்பார்கள்.. படம் வெளிவந்து 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. நேற்று பார்த்தது போலவே நினைவு.
https://www.youtube.com/watch?v=aEJrAr1otBc
Raga's steaming audio of this song: http://play.raaga.com/tamil/song/alb...Paravai-266300
Short and sweet speech from the Pithamagan of Carnatic music Shri Semmangudi Srinivasa Iyer on Shri. Ilayaraja.
செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் பூஜை அறையில் ராஜாவின் படம் உண்டு என்று இரு வேறு நபர்கள் இரு வேறு இடங்களில் எழுதி படித்து உள்ளேன். இதை யாரவது confirm பண்ண முடியுமா ? Thanks in advance. :)
https://www.youtube.com/watch?v=UOSN...ature=youtu.be
Ilayaraja is not a musician , He is a Music Lesson:
https://www.youtube.com/watch?v=biX7...ature=youtu.be
"மாமியார் வீடு" பாடல்களின் தரம் சார்பாக இங்கே எழுதியிருக்கிறேன்.. வாய்ப்பு கொடுத்த தோழருக்கு நன்றி.
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1191581
"மாமியார் வீடு" பாடல்கள் இங்கே.. இத்தளம் www.ilayaraja.in மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது... ரசிகர்களுக்கு வரம்.
http://www.ilayaraja.in/tamil-songs/...mamiyaar-veedu
இந்த முறை: "அம்மையப்பா அடிவாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதைவாங்கியே இளைத்தேன்" - எனக்கு நானே நீதிபதி என்ற படத்திலிருந்து மலேசியாவாசுதேவன் குரலில் அமைந்த பாடல்.
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1191806
http://ilayaraja.in/tamil-songs/play...ne-neethipathi
வாய்ப்பு கொடுத்த தோழருக்கு மீண்டும் நன்றி.