வாசு சார் - உங்கள் மாதவன் பதிப்பு :
புதியது புதியது உங்கள் வர்ணனை
இனியது இனியது உங்கள் வரிகள்
அருமை இந்த பதிவு
வாழ்வில் இப்படி எழுதவிரும்பவது என் கனவு
:):smokesmile:
Printable View
வாசு சார் - உங்கள் மாதவன் பதிப்பு :
புதியது புதியது உங்கள் வர்ணனை
இனியது இனியது உங்கள் வரிகள்
அருமை இந்த பதிவு
வாழ்வில் இப்படி எழுதவிரும்பவது என் கனவு
:):smokesmile:
நன்றி g94127302 உடனே ராஜா ராணி பார்த்து விட்டேன் , கோபால் சார் பழியில் இருந்து தப்பி விட்டேன் என்று சந்தோஷம்.
நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர் ( 6 )
‘ஐஸ்கிரீம்’ ஸ்னேகலதா (என் மகன்)
ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பாலிவுட் ஐட்டம் நடிகையை தன் படங்களுக்கு இறக்குமதி செய்வது என்ற வழக்கத்தை தயாரிப்பாளர் பாலாஜி தனது ராஜா படத்தில் துவக்கினார். அப்படத்தில் நடித்திருந்த பத்மாகன்னாதான் நமது தொடரின் பிள்ளையார் சுழி. தொடர்ந்து என்மகன் படத்தில் ஸ்னேகலதாவையும், உனக்காக நான் படத்தில் லீனாதாஸையும் இறக்குமதி செய்து தமிழக ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார். (இடையில் நீதி படத்தில் ஒரு ஆணுக்கு பெண்வேடம் போட்டு ஐட்டம் பிகர் என்று பாலாஜி ஏமாற்றியதை மறப்போம்)
இப்போது போல மும்பையில் கல்லூரி பட்டம் பெற்றதும் சென்னைக்கு விமான / ரயில் டிக்கட் எடுக்கும் நடிகையர் கூட்டம் அப்போது கிடையாது. எப்போதாவது ஒருமுறை ஹெலனைக்கொண்டு வந்து காட்டுவார்கள். அவ்வளவுதான். இந்நிலையில் ‘என் மகன்’ படத்துக்காக 'பே-இமான்' படத்தின் கதையை வாங்கிய கையோடு ஸ்னேகலதாவையும் புக் பண்ணிக்கொண்டு வந்துவிட்டார். ராஜாவில் ரந்தாவா நடித்ததுபோல இப்படத்தில் ஷெட்டி நடிப்பதாக இருந்தது. என்ன காரணமோ கைகூடவில்லை. அதிரடிப்புயல் வரவில்லை. ‘கவர்ச்சித்தென்றல்’ மட்டுமே மும்பையில் இருந்து கரைகடந்து தமிழகத்தில் வீசிப்போனது.
எந்தப்பூட்டையும் திறக்கும் சாமர்த்தியமான பூட்டு ரிப்பேர் தொழிலாளி ராஜாவுக்கு (நடிகர்திலகம்) தொழிலதிபர் ஜெகன்நாத் (மேஜர்) மகள் ராதா(மஞ்சுளா)வுடன் காதல். ராஜாவை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் மகள் தன்னை வெறுத்து விடுவாளோ என்ற எண்ணத்தில் மகளைப் பெண்பார்க்க ராஜாவை வரச்சொல்வதுபோல வரச்சொல்லிவிட்டு, மறுபக்கம் ராஜாவை வரவிடாமல் செய்ய தன் கையாட்கள் மூலம் ராஜாவை ஒரு கொலைப்பழியில் சிக்க வைக்கிறார் ஜெகன்நாத். அப்படி கொலை செய்யப்படுவள்தான் ஸ்னேகலதா.
அவசரமாக பாம்பே போகவேண்டும் என்றும் அதற்கான டாக்குமென்ட்டுகள் பீரோவுக்குள் இருப்பதாகவும் கெஞ்சும் மனோகரின் பேச்சை நம்பி பீரோவை சிரமப்பட்டு ராஜா திறக்க போராடிக்கொண்டிருக்கும் சமயம் மனோகர் உள்ளே செல்ல, மறுகதவைத் திறந்து கொண்டு, (தன்னையும் முடிந்தவரை திறந்து வைத்துக் கொண்டு) ஐந்தரை அடி ஐஸ்கிரீமாக வெளிவந்து ராஜாவை பின்பக்கமாக வந்து கட்டிக்கொள்ளும் அழகுச்சிலையாக ஸ்னேகலதா. உள்ளாடையைவிட சற்றே சற்று கூடுதலான உடையணிந்து வர, கால்களிரண்டும் கிட்டத்தட்ட 'வெட்டவெளியாக'.
ஆனால் பெண்பார்க்கப்போகும் அவசரத்திலும், அதற்குள் பீரோவைத் திறக்க வேண்டுமென்ற அவசரத்திலும் இருக்கும் ராஜாவுக்கு ஏற்கெனவே திறந்திருக்கும் எதையும் பார்த்து ரசிக்கும் ஆர்வமில்லை. நமக்குத்தான் எந்த அவசரமும் இல்லையே. அதனால் ஒரு இடம் விடாமல் கண்களை மேய விட நினைத்தால் அதற்குள் உள்ளிருந்து மனோகரின் அழைக்கும் குரல். (மனோகர் ராஜாவுக்கு மட்டும் வில்லன் அல்ல நமக்கும்தான்). அழைப்பைக்கேட்டு ஐஸ்கிரீம் உள்ளே நகர்கிறது.
உள்ளேயிருந்து ஹாலுக்கு வரும் மனோகர் "திறக்க முடியலைன்னா உடைச்சிடுங்க" என்று அனுமதி கொடுக்க, ராஜா பீரோவை உடைத்து கதவைத்திறக்க, உள்ளேயிருந்து பிணமாக சரிந்து விழுகிறாள் ஐஸ்கிரீம் ஸ்னேகலதா. முதுகில் சொருகியிருக்கும் கத்தியை ராஜா எடுக்க (வழக்கம்போல) வில்லன் கூட்டம் ராஜா, கையில் கத்தி, கீழே ரத்த வெள்ளத்தில் பெண்ணின் பிணம் அனைத்தையும் ஒருசேர கச்சிதமாக photo எடுக்கிறது.
ஒருபக்கம் நம்ம ஆள் இக்கட்டில் மாட்டிக்கிட்டாரே என்ற வருத்தம். இன்னொரு பக்கம் சரியாகக்கூட பார்க்காத ஸ்னேகலதாவை இப்படி திடீர்னு கொன்னுட்டாங்களே (இந்த பாலாஜி சரியான கொலைகாரப் பாவியாக இருப்பார் போலிருக்கே. ஒவ்வொரு பம்பாய் ஐட்டமாக அழைத்து வந்து கொன்று தள்ளுகிறாரே) என்ற ஆத்திரம். 'என்ன இது, இத்துனூண்டு சீனுக்காகவா இந்த ஐட்டத்தை பம்பாயிலிருந்து கொண்டு வந்தார்?' என்று குழப்பம். (பே-இமான் பார்க்கலை இல்லையா, அதான்). “ராதாவை விட்டு ஏன் விலகிப்போகிறீர்கள் அண்ணா?” என்று கேட்கும் தங்கை ரோஜாரமணியிடம் சொல்லும் பிளாஷ்பேக்கில் வருகிறது இத்தனையும்.
ஆச்சு, படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐட்டத்தை மறந்து (ஹி.. ஹி.. மறக்கவில்லை, மனதில் ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு) படத்தில் லயிக்கிறோம். நமது தலைவர் இரட்டை வேடங்களில் பிளந்து கட்டிக்கொண்டிருக்கிறார். தங்கையின் திருமணத்துக்காக பேங்கர் ஜெகன்நாத் வீட்டிலேயே திருடி, மாட்டிக்கொண்டு சிறைக்குப்போக.....
பிரேம் நகர் (இந்தி வசந்த மாளிகை) படத்துக்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட். அதில் பேங்கர் ஜெகன்நாத் (மேஜர்), ஜெகதீஷ் (பாலாஜி) இவர்கள் முன் ஒருபெண்ணை மனோகர் முக்காடிட்டு அழைத்துவர, "உன்னை அடையாளம் காட்டக்கூடியவன் இப்போ ஜெயில்ல இருக்கான்,ஸோ, இந்த முக்காடு இனிமே உனக்குத் தேவையில்லை" என்று சொன்னவாறு மேஜர் முக்காட்டை அகற்ற, "அட, ஐஸ்கிரீம் ஸ்னேகா, குழந்தை இருக்கிறாளா?. அவசரப்பட்டு பாலாஜிக்கு கொலைகாரர் பட்டமெல்லாம் கொடுத்திட்டோமே' என்றிருந்தது. (அதாவது நிஜமாக கொலை நடக்காமல் தான் கொலை செய்துவிட்டதுபோல ராஜாவை நம்ப வைத்து அந்த போட்டோவைக்காட்டியே தங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொண்ட கொள்ளைக்கூட்டம்).
மெல்லிசை மன்னர் அதிரடியாக இசைமுழங்க, ஈஸ்வரியின் துள்ளும் குரலில் "சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று" பாடலுக்கு ஸ்னேகலதா ஆட, தேவிபேரடைஸ் தியேட்டர் குளிரில்கூட நம் உடம்பு சூடாகும் அனுபவம் ஆகா. இதே உணர்வு ஒளிப்பதிவாளர் மஸ்தானுக்கும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் கேமராவில் புகுந்து விளையாடி இருப்பார். குறிப்பாக லோ ஆங்கிளில் எடுத்திருக்கும் அந்த ஷாட். இப்போ சாதாரணமாக தெரியலாம். அப்போ அதெல்லாம் புதுமை. இரண்டு வித்தியாச உடைகளில் ஸ்னேகலதாவின் ஆட்டம்னா செம்மையான ஆட்டம். இதற்கிடையே அவள் ஆட்டத்தின்போது ஜெகதீஷுடன் நெருக்கமாகவும், ஜெகன்னாத்தின் முதுகில் உப்புமூட்டை ஏறியபடியும் இருக்கும் காட்சிகளை போட்டோ எடுத்து இருவரையும் பிற்பாடு மோத விடுகிறார் மனோகர்.
ராஜா ஜெயிலில் இருக்கிறான் என்ற தைரியத்தில் வெளியே நடமாடும் ஸ்னேகலதாவை, தங்கையின் திருமணத்துக்காக கண்டிஷன் பெயிலில் வளர்ப்புத்தந்தை சப்-இன்ஸ்பெக்டர் ராமையாவுடன் (இன்னொரு நடிகர்திலகம்) வந்துகொண்டிருக்கும் ராஜா பார்த்துவிட, அவள் காரில் ஏறித்தப்பிக்கிறாள். இருந்தாலும் காரை அடையாளம் கண்டு இடத்தைக்கண்டுபிடித்து, மாறுவேடத்தில் 'சோன்பப்படி' பாட்டெல்லாம் பாடி, அவளால் ஏற்பாடு செய்யப்பட அடியாட்களுடன் சண்டையிட்டு அவளைப்பிடிக்க...... அதோடு கதையில் ஸ்னேகலதாவின் பார்ட் முடிகிறது.
"சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று" என்று சொன்னாலும், பாம்பே ஐஸ்கிரீம் ஸ்னேகலதா வரும் காட்சிகளில் அவரால் அடையும் பரவசத்தை சொல்லாமல் இருக்க முடியுமா?. அதனால்தான் ஊரார்க்கு மட்டுமல்ல உலகத்தாருக்கே சொல்லி விட்டேன்.....
பல விஷயங்கள் , நம் முன்னோர்கள் சொன்னதை இன்றும் உண்மையாக இருப்பதை பார்க்கிறோம் - இன்று சயின்ஸ் என்பது எவளவோ வருடங்களுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிவித்த உண்மைகள் - காலபோக்கில் நாமும் அதை பெரிதும் பொருட்படுத்துவதில்லை . இந்த உதாரணத்தை கொஞ்சம் பார்ப்போமா ??
In Hanuman Chalisa , It is said :
"Yug sahastra yojan per bhanu !
Leeyo taahi madhu phal janu !!"
1 Yug = 12000 years
1 Sahastra = 1000
1 Yojan = 8 miles
Yug * Sahastra * Yojan = par Bhanu
12000 * 1000 * 8miles
1 mile = 96000000 miles = 960000000 * 1.6kms = 153,60,00,000 kms to Sun
NASA has said that , it is the exact distance between Earth and Sun (bhanu) , which proves Hanuman ji did jump to planet sun , thinking it as a sweet fruit ( Madhu phal--)
It is really interesting how accurate and meaningful our ancient scriptures are -- unfortunately barely it is recognized , interpreted accurately or realized by any in today's time ----
Same thing happened in NT's case also - it is amazing to see his talents , achievements , glory when the same getting unfolded by many stalwarts including many hubbers in this thread - but when he was alive though all facts of his glory of acting talents were known , they were misinterpreted , not realized by many
and due recognitions were not conferred by Indian Govt. Like NASA , the truth would be revealed one day that a great actor was born in Tamil nadu - that was the day the nation would feel ashamed of itself for not recognizing accurately about NT and his talents - that day is not very far from reach !!
:):smokesmile:
//ஆனால் பெண்பார்க்கப்போகும் அவசரத்திலும், அதற்குள் பீரோவைத் திறக்க வேண்டுமென்ற அவசரத்திலும் இருக்கும் ராஜாவுக்கு ஏற்கெனவே திறந்திருக்கும் எதையும் பார்த்து ரசிக்கும் ஆர்வமில்லை. // ஹிஹி..:) ரொம்ப காலததுக்கு முன்னால் பார்த்த படம்..ஸ்னேகலதா ஃபோட்டோ போடுமேன்... நன்று கார்த்திக் சார்..
ஆனா அந்தப் படத்தில மஞ்சுளா தான் கிட்டத் தட்ட அந்த் ரேஞ்ச்ல இருப்பாரில்லை.. ரெண்டு பாட்டுல :)
சிநேகலதா மட்டுமல்ல சி.ஐ.டி பாதி பாதியை தவிர அவரின் ஹெலன் தொடங்கி சிலுக்கு முடிய அனைத்து ஐட்டமும் ஜோர்தான்.என்னுடைய தேர்வு
1)ஆலம்
2)ஹெலன்
3)விஜயஸ்ரீ
4)ஜெய் குமாரி
5)பத்மா கன்னா
6)சினேக லதா
7)வெண்ணிற ஆடை நிர்மலா
8)ராஜஸ்ரீ
9)vpkb காஞ்சனா
10)விஜய லலிதா
அது சரி, மேற்கொண்டு இரண்டு எழுதியாயிற்று.(பெண் வேடமிட்ட ஆணையும் சேர்த்து)ஆலத்தை பற்றி மட்டும் எழுதாமல் வெறுப்பேற்றி கொண்டிருந்தால் நியாயமா?
Dear Vasudevan Sir, CK Sir, Bharani Sir, Raghavendran Sir, Gopal Sir and other Sirs,
Thanks for your response and i feel very sorry that am unable to pass on my comment here immediately on the wonderful postings of Vasudevan sir, Raghavendran Sir, Gopal Sir etc.,
The issues is these days am on travel for quite a bit. I post few things from my tab and mobile in my free time. Post my Grandmother's demise 15 - 20 days back am not able to spend time in the night to post many things or write a comment.
Vasudevan sir,
Your posts are tremendous and one can easily asses the time and effort required for the same. All your posts carry extraordinary values. Equal to sculptures of those days. Superb sir ! Our God's wishes and blessings will always be with you !
Raghavendran Sir,
Your posts too are highly informative especially Nadigar Thilagam's Filmography. When any new person sees that, am sure, he / she will conclude that Nadigar Thilagam was SECOND to NONE interms of the Film's success or the release time collections. One Small suggestion. Please HIGHLIGHT and MENTION --> SEE THE THREAD ....Filmography..to see the Release, 100 Days, Silver Jubilee Advertisements of NAdigar Thilagam Films..." Because, our people ( General public) need bit of spoon feeding. that's why.
Once they see these and when they do not see the authentic ads of others, they will realise who is the real emperor of Cinema till date.
Gopal Sir,
What to say about your write up ? You may be henceforth called as "Mayyaththin Sandilyan ". This will be the ideal title for you...! All your writeup do carry the equal weightage of Class & Mass !!
All the hubbers are making it very interesting....My special enquiries to Mr,Karthik. .....Though, he comes out with something inbetween...it may be called as "Oru Vaasagam endraalum Thiruvaasagam " type. !
My special thanks to "The Gentleman of Thread" Esvee Sir for posting Nadigar Thilagam's article every now and then. !
Take Care
இயக்குனர் மாதவன் பற்றிய பதிவை ரசித்த சின்னக் கண்ணன் சார், வாசுதேவன் சார், சி.ராமச்சந்திரன் சார், ராகவேந்திரன் சார், சந்திர சேகரன் சார், பொன் ரவிச்சந்திரன் சார், கோபால் சார், கார்த்திக் சார், கல்நாயக் சார், ரவி சார், சரஸ்வதி லக்ஷ்மி மேடம் அனைவருக்கும் என் ஆழ்ந்த நன்றி!
கோபால் சார்,
'ராஜா ராணி' காதலை மட்டுமல்லாமல் படத்திற்கான குறு விமர்சனத்தையும் சுவையாகத் தந்தற்கு நன்றி! (என்னை மிக மிக கவர்ந்த படம். பின்னால் வருகிறேன்.)